Followers

Tuesday, January 01, 2019

லுலு ஓனர் MA.யூசுப்அலி

கேரளாவில் கொடுங்கலூரின் அடுத்துள்ள திருப்பரையார் என்ற இடத்தில் இந்த #Lulu_Mall நேற்று முன் தினம் திறக்கபட்டது. இந்த மாலில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் ஏழைகள், அனாதைகள், பள்ளிவாசல் ,கோவில், சர்ச்கள் என தர்மம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும் என்று முறைப்படி வக்ஃப் செய்துவிட்டதாக லுலு ஓனர் MA.யூசுப்அலி இந்த மாலை திறந்து வைத்து கூறியுள்ளார்.
ஆதமின் மகனே! மற்றவர்களுக்காக செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன் என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 5352
நபி (ஸல்) அவர்கள், உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விட தமது வாரிசுகளின் செல்வம் விருப்பமுடையதாக இருக்குமா? என்று கேட்டார்கள். தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே எங்களின் செல்வம் தான் விருப்பமானதாகும் என்று பதிலளித்தார்கள். அவ்வாறாயின் ஒருவர் இறப்பதற்கு முன் அறவழியில் எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். இறக்கும் போது எதை விட்டுச் செல்கின்றாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல்: புகாரி 6442


No comments: