Followers

Friday, August 30, 2019

இந்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இஸ்லாமிய பெண்!

இந்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இஸ்லாமிய பெண்!
'உபியின் கான்பூர் மாவட்டத்தில் இந்து பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. கணவன் தனது மனைவியை பிரசவத்திற்காக வாகனத்தில் ஏற்றி மருத்துவ மனை நோக்கி சென்று கொண்டிருந்தார். போகிற வழியில் வாகன நெரிசல். மொத்த வாகனங்களும் நகராமல் நின்று விட்டது. மனைவியோ வலியால் துடிக்கிறாள். இன்னும் சில நிமிடங்களில் ஏதாவது செய்யவில்லை என்றால் தாயும் சேயும் இறந்து விடுவர் என்ற நிலை. கணவன் செய்வதறியாது கீழே இறங்கி அங்கும் இங்கும் ஓடுகிறான். எவரும் உதவ முன் வரவில்லை. இதனை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இஸ்லாமிய குடும்பம் இவருக்கு உதவ முன் வருகிறது. அவரது மனைவியை தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்கின்றனர் அந்த இஸ்லாமிய தம்பதியினர். சில நிமிடங்களில் அந்த இந்து பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கிறது. நன்றிப் பெருக்கால் அந்த தந்தை ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தாயையும் சேயையும் காப்பாற்றிய அந்த இஸ்லாமிய குடும்பத்துக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின் ஞாபகார்த்தமாக பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத் தியாகி 'திப்பு சுல்தான்' பெயரை இட்டார் அந்த இந்து தந்தை.
முஸ்லிம்கள் என்றாலே விஷத்தைக் கக்கும் பலருக்கு இந்த செய்தி ஜீரணமாகாது. அவர்கள் பர்னால் தடவி தங்களின் குறையை சரி செய்து கொள்வார்களாக! ஜெய் ஹிந்த். ஆதாரத்துக்காக அந்த செய்தியையும் இந்த காணொளியில் இணைத்துள்ளேன்.' என்று முடிக்கிறார் அந்த இந்து துறவி.
------------------------------------------
நான் முன்பே பல முறை கூறி வந்துள்ளேன். இந்துக்கள் வேறு இந்துத்வா வேறு. இரண்டு பேரையும் நாம் பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டால் பல சிக்கல்களை இலகுவாக களையலாம்.
அன்று குஜராத்தில் ஒரு இந்துத்வா வெறியன் நிறை மாத கர்பிணியான முஸ்லிம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து கொன்று சிசுவை வெளியில் எடுத்து நெருப்பில் இட்டான்.
இன்று நிறை மாத கர்பிணி உபியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது ஒரு இஸ்லாமிய குடும்பம் பிரசவம் பார்த்து இரண்டு இந்து உயிர்களை காப்பாற்றியுள்ளது.
இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்து மோடிக்களும், அமீத்ஷாக்களும், யோகி ஆதித்யநாத்களும் வெட்கித் தலை குனிய வேண்டும். இஸ்லாமியர்களை இந்திய நாட்டில் இரண்டாந்தர குடி மக்களாக மாற்ற எப்படி எல்லாம் காய் நகர்த்துகிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள். சகோதரர்களாக பழகி வரும் சொந்த நாட்டு மக்களை பிரித்து எதனை சாதிக்கப் போகிறீர்கள்? இனியும் திருந்தவில்லை என்றால் இந்த நாட்டை உண்மையாக நேசிக்கும் இந்துக்களும் முஸ்லிம்களும் கிருத்தவர்களும், சீக்கியர்களும் தக்க பாடத்தை இந்துத்வாவாகிய உங்களுக்கு புகட்டுவார்கள்.
ஆக்கம் : சுவனப்பிரியன்!





No comments: