Followers

Saturday, November 16, 2019

உயிரைப் பற்றி சில அதிசயத்தக்க செய்திகள்!

உயிரைப் பற்றி சில அதிசயத்தக்க செய்திகள்!
'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.'
-குர்ஆன் 17:85
குர்ஆன் கூறும் இந்த வசனம் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. குர்ஆனின் பல வசனங்கள் உலகில் உள்ள அனைத்து படைப்புகளைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறது. விண்வெளி பயணம் மனிதர்கள் ஆகிய நீங்கள் செய்ய முடியும். இன்னும் பல அறிவியல் முன்னேற்றங்களைக் கண்டாலும் உயிரைப் பற்றி உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாது என்று அடித்து சொல்கிறது குர்ஆன். 'மனிதனே நீ குறைவாகவே அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறாய். உயிரின் சூட்சுமத்தை உன்னால் அறிந்து கொள்ள முடியாது' என்று கூறுகிறது.
உயிரைப் பற்றி சில யூதர்கள் முகமது நபியிடம் கேட்டபோது என்ன நடந்தது என்பதை பின் வரும் புஹாரி ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.
பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார். அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை' என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, 'அபுல் காஸிம் அவர்களே! உயிர் என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி அவர்கள் மெளனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகும் வரை பொறுத்திருந்தேன்)) அவர்கள் தெளிவடைந்தபோது '(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப்படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!' (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
-ஸஹீஹூல் புகாரி 125
Volume :1 Book : 3
இந்த நபி மொழியை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். முகமது நபி ஏற்கெனவே தயார் செய்திருந்து திட்டமிட்டு சொன்ன பதிலும் கிடையாது. தனது தோழர்களோடு நடந்து செல்லும் பொது எதேச்சையாக யூதர்கள் எதிரில் தென்பட அவர்கள் முகமது நபியிடம் தங்களது சந்தேகத்தைக் கேட்கின்றனர். யூதர்கள் கேட்ட கேள்விக்கு அவர்களால் சுயமாக பதில் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் மௌனமாகிறார்கள். ஏனெனில் இது போன்ற அறிவு பூர்வமான விஷயங்களை அந்த அரபு மக்கள் அதிகம் விளங்கியிருக்கவில்லை. பிறகு இறைச் செய்தி வருகிறது. அந்த நேரத்தில் முகமது நபிக்குள் ஏற்படும் மாற்றத்தை நபித் தோழர் கவனிக்கிறார். அன்று இறங்கிய இந்த வசனம் இன்று வரை விஞ்ஞானிகளால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை.
-----------------------------------------------------------------------------------
உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?
நம் முன்னோர்களான சிவ வாக்கியர் கூட இந்த உயிரின் சூட்சுமத்தை விளங்காமல் அதனையே பாடலாக எழுதி வைத்து சென்றும் விட்டார்.
-----------------------------------------------------------------
கேள்வி: மனித வாழ்க்கையில் இன்னமும் புரியாத புதிராகத் தோன்றுவது எது?
சுஜாதாவின் பதில்: மரணத்துக்குப்பின் என்ன என்பதை அறிந்து கொள்ள மரணம் சம்பவிக்க வேண்டியிருக்கிறதே அதுதான்.
கேள்வி: எல்லாவற்றிற்கும் ஒரு Saturation point இருப்பது போல் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உண்டா?
சுஜாதாவின் பதில்:உண்டு. உயிரின் ரகசியமும் மரணத்துக்குப் பின் என்ன என்பதும் தெரியும் போது விஞ்ஞானம் முற்று பெறும்.
சுஜாதா விஞ்ஞானம் முற்று பெறும் என்று சொல்லி சென்று விட்டார்.ஆனால் முற்று பெறாது. உயிரின் உண்மையை அறிய அன்றும் நமது பேரன்களின் காலத்திலும் ஆராய்ச்சிகள் நடைபெறும். கடைசி வரையில் உயிரின் உண்மையை அறியாமலேயே பூமியில் வாழும் மனித குலமும் அழியத் தொடங்கும்.
-------------------------------------------------
உயிர் பற்றி டார்வின் என்ன சொல்கிறார்?
உயிர் என்பது ஒரு (ஆழமற்ற தண்ணீர்) குட்டையில் இருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும் என்று டார்வின் தனது ஆய்வில் அனுமானமாக கூறியுள்ளார். குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று உளறியது போல் இதுவும் ஒரு உளறல் என்று நாம் கடந்து போக வேண்டியதுதான். 😊
சமீபத்தில் லண்டன் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் உயிர் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்ற ஆய்வை வெளியிட்டுள்ளார்கள். 'Nature' இதழில் வெளியாகியுள்ள இவர்களுடைய ஆய்வுக்கட்டுரை, உயிர் என்பது டார்வின் கூறியது போல அல்லாமல், ஆழ்கடல் வெட்ப பிளவுகளின் காரணமாகவே உருவாகியிருக்க முடியும் என்று கூறுகிறது. ஆழ்கடல் பிளவுகளில் காணப்படும் அமிலத்தன்மை, உப்புத்தன்மை மற்றும் வெட்பம் உயிர் உருவாக காரணமாக இருந்திருக்கலாம் என்கிறது ஆய்வறிக்கை. இந்த ஆய்வும் ஆரம்ப கட்டம் தான் என்றாலும், உயிர் எப்படி தோன்றியிருக்கும் என்ற கேள்விக்கு டார்வினை விட தங்களுடைய ஆய்வு நம்பிக்கையான பதிலை தருவதாக தெரிவித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். (மொழி பெயர்ப்பு சகோ Aashiq Ahamed ஆஷிக் அஹ்மத்)
By creating protocells in hot, alkaline seawater, a UCL-led research team has added to evidence that the origin of life could have been in deep-sea hydrothermal vents rather than shallow pools.
Previous experiments had failed to foster the formation of protocells -- seen as a key stepping stone to the development of cell-based life -- in such environments, but the new study, published in Nature Ecology & Evolution, finds that heat and alkalinity might not just be acceptable, but necessary to get life started.

1 comment:

Dr.Anburaj said...

இன்று வரை விஞ்ஞானிகளால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை.

தீர்வுகாண வேண்டிய வினாக்களின் பட்டியல் மிக நீளமாக உள்ளது.ஆனால் ஏராளமான விஞ்ஞான உண்மைகளை வெளிக்கொண்ர்ந்ததை நினைத்து பிரமிக்க வேண்டியுள்ளதே. செலபோன் செய்யும் ஜாலங்கள் ??????அடேயப்பா என்ன பிரமாண்டம். தேடல் இல்லையேல் வாழ்க்கையில் சுவையின்றிப் போகும்.