Followers

Saturday, June 04, 2022

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!

 

சாதி கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக போராடி சிறை சென்ற பின்பு, இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட நீல புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆகிய டி.எம் மணி என்கின்ற உமர் பாருக் அவர்களின் உருக்கமான உரை செந்தமிழ் நாட்டுச் சேரிகள் என்ற புத்தகத்திலிருந்து...

 

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டது. இப்போது என் பெயர் உமர் பாரூக். நான் ஒரு தீண்டத்தகாதவன் என்ற உணர்வு என்னை விட்டுப் போய்விட்டது. இதனால் எனது தலித் சேவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. இஸ்லாம் ஒரு உண்மையான சீர்திருத்த மார்க்கம். ஆகவே நீங்களும் நான் இந்து இல்லை என்று அறிவியுங்கள்.

 

அடுத்து உங்களை ஏற்றுக் கொள்ள இன்னொரு சமூகம் தேவைப்படுகிறது. தமிழக அளவில் இரண்டு சமூகங்கள் உங்களை வரவேற்க தயார் நிலையில் உள்ளது.

ஒன்று கிறிஸ்தவம், மற்றொன்று இஸ்லாம். கிறிஸ்தவம் உங்களை அன்புடன் அழைத்தாலும் தலித் என்ற கொடுமை அங்கே தொடர்கிறது ஆனாலும் இந்து பள்ளன் பறையன் ஐ விட ஒரு கிருஸ்துவ பள்ளர் பறையருக்கு ஒரு ஆறுதல் இருக்கின்றது.

 

தலித் கிருத்துவர்கள் கடும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிற பொழுது அந்த குருமார்கள் வந்து ஆறுதல் அளிப்பார் அவ்வளவுதான். ஆனால் இஸ்லாம் அப்படி அல்ல. நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட அடுத்த வினாடியே உங்களை தொடர்ந்த இழிவு நீங்கி விடுகிறது. நீங்கள் மனிதனாக மதிக்கப்படுவீர்கள். நீங்கள் இஸ்லாமியர் என்ற அடையாளத்துடன் இருந்தாலே அந்த சமூகம் ஆதரவு கரம் நீட்ட தொடங்கிவிடுகிறது. நெஞ்சோடு நெஞ்சாக ஆரத் தழுவிய அரவணைத்துக் கொள்கிறது, இடைவெளியில்லாமல் இணைத்துக் கொள்கிறது.

 

உங்களுடைய ஒருவேளை பசியையும் அவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. பள்ளிவாசல் என்பது ஒரு கருணை இல்லமாக இருக்கிறது. அல்லாஹ் உங்களை அன்போடு ஏற்றுக் கொள்கின்றான். ஏக இறைவன் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றான். கருணைக் கடலில் மிதக்க வைக்கின்றான். ஆம்!

 

உங்கள்மீது சுமத்தப்பட்ட தீண்டாமை என்னும் கரையை துடைத்தெடுத்து விடுகின்றான். அம்பேத்கர் வடித்த கண்ணீர் துடைக்க படுகிறது. அண்ணலின் லட்சியம் நிறைவேற்றப்படுகிறது. அடிமைப்பட்ட அவரின் மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக சமூக சம உரிமை பெற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள்.

அம்பேத்கரின் லட்சியம் நிறைவேற ஒவ்வொரு சிந்தனை பெற்ற மனிதனும் சேரியை விட்டு வெளியேறுங்கள். அதன்பின் உங்கள் உழைப்பின் உபரி உங்களின் சொந்தங்களுக்கு போய் சேரட்டும் . உங்கள் உள்ளமும் உணர்வும் நீங்கள் கடமைப்பட்டவர்களின் உயர்வில் இருக்கட்டும். இஸ்லாம் இதற்கு என்றென்றும் தடையாக இருக்காது. இஸ்லாமியரின் இந்த அடையாளமான தாடியை, தொப்பியை எவ்வித தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்.

 

அல்லாஹு அக்பர் ! அல்லாஹு அக்பர் !

 

என்று உரக்க கூவுங்கள்.

 

அந்த அற்புத முழக்கம் அந்த ஓர் ஏக இறைவனின் காதுகளில் உரக்க ஒலிக்கும்.

உங்களை 2000 ஆண்டுகள் அடிமைப்படுத்தி வைத்திருந்த உங்கள் எதிரிகள் காதுகளுக்கு அழைப்பு ஒலியாக இருக்கட்டும்.

 

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அஸ்ஸலாமு அலைக்கும் ...




 

1 comment:

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் அனைவரும் உயா் வருவாய் பிரிவினா்கள்.
வயலில் களை எடுக்கும் வேலையில்
உழவு செய்பவர்களில்
துப்புறவு தொழில் செய்பவர்களில்
சித்தாளாக. . .கட்டட தடியாளாக மேஸ்திரியாக
முஸ்லீம் ஆண்களையோ பெண்களையோ பார்க்க முடியாது.
அரேபியா்கள் துருக்கியா்கள் சுல்தான்கள் ஆட்சியில் முஸ்லீம்கள் பெரும்வலிமை அதிகாரம் பெற்று . .சொத்துக்களை வளைத்து வைத்திருந்தாா்கள். இந்துக்களை கொள்ளையடித்த வைத்திருந்தாா்கள். இன்றும் தங்கம் வியாபாரம் வைர வியாபாரம் செய்பவர்களில் முஸ்லீம்களைக் காணலாம். ஆகவேதான் முஸ்லீமாக மதம் மாறினால் பொருளாதாரம் உயா்ந்து விடும் என்று போலி பிம்பம் காட்டப்படுகிறது. அதை நம்பி சென்ற பல போ் மீண்டும் இந்துவாக மாறி விட்டனா். மீனாட்சிபுரத்தில் முஸ்லீமாக மதம்மாறிய இந்து குடும்பங்களில் திருமணம் செய்ய முடியாமல் கன்னியாக வாழ்ந்த பெண்கள் எத்தனை போ் என்பதை சுவனப்பிரியன் பதிவிடுவாரா?