சங்கிகள் சற்றே சிந்திப்பார்களாக!
நபிகள் நாயகத்தை இழிவு படுத்துவதை
பொறுக்காது உலகமெங்கும் கண்டனக் குரல் எழுப்பப்படுகிறது. நமது இந்து சகோதரர்களும் 'சங்கிகள் இவ்வாறு செய்யக் கூடாது' என்று அறிவுரை கூறினர். உடனே சங்கிகள் ராமன்,
கிருஷ்ணன் போன்ற மற்ற இந்து தெய்வங்களை திருமாவளவன்
, வீரமணி போன்றவர்கள் விமரிசிக்கிறார்களே?'
என்று கேட்கின்றனர்.
இந்து மதத்தின் வர்ணாசிரமக்
கொள்கையால் தினம் தினம் அவமானப்பட்டுக் கொண்டிருக்கும் திருமாவளவனும், வீரமணியும் அதனை விமரிசிப்பதை அவர்களின் ஆற்றாமை
என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பெரியார் இந்த அளவு விமரிசித்ததற்குப் பிறகுதான் இந்து
மதத்தில் பல சட்ட திருத்தங்களை கொண்டு வந்தனர். இனியும் கொண்டு வருவர்.
முன்பு தமிழர்கள் சிலை வணக்கம்
இல்லாமல் சுய மரியாதையோடு வாழ்ந்து வந்ததைத்தான்
கீழடி ஆய்வுகளில் கண்டோம். 2000 ஆண்டுகளுக்கு
முன்பு நமது நாட்டுக்கு ஆடு மாடுகளை ஓட்டி வந்த ஆரியர்களினால் நமது கலாசாரமே மாற்றப்பட்டது.
மாற்றப்பட்ட அந்த கலாசாரத்தை மீட்டெடுக்கவே வீரமணி, திருமாவளவன் போன்றவர்கள் முயற்சிக்கின்றனர். அது அவர்களுக்கு
அவசியமும் கூட..
ஆனால் நபிகள் நாயகத்தின் போதனையால்
இன்று உலக முஸ்லிம்கள் மிகச் சிறந்த வாழ்வு முறையை பெற்றுள்ளனர். நாடு, மொழி, இனம், நிறம் போன்ற எந்த பாகுபாடும்
இல்லாமல் இன்று ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று தங்கள் வழியில் சென்று வருகின்றனர்.
முஸ்லிம்களின் அழகிய வாழ்வியலை பார்க்கும் இந்துக்கள் தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை
ஏற்கின்றனர். இந்து மதத்தில் பார்பனன், சூத்திரன் என்ற பாகுபாட்டை புகுத்தி கோவிலிலும் அவர்களை நுழைய விடுவதில்லை. இதனால்
வெறுப்புற்று பல இந்துக்கள் இஸ்லாத்தை ஏற்கின்றனர். இதை தடுக்க வேண்டுமானால் மோடி வகையறாக்கள்
இந்து மதத்தில் உள்ள சாதி பாகுபாடுகளை களைய முற்பட வேண்டும். அதை விடுத்து இஸ்லாத்தின்
மேல் சேற்றை வாரி இறைப்பதால் எங்களுக்கு ஒரு நட்டமும் இல்லை. தற்போது உலக நாடுகள் கடும்
கண்டனங்களை இந்தியாவை நோக்கி வீசுகின்றன. ஏற்கெனவே பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ந்து
கிடக்கும் போது லட்சக்கணக்கான இந்தியர்களை வளைகுடா நாடுகள் திருப்பி அனுப்பினால் நமது
நாட்டால் தாங்க முடியுமா என்பதை சங்கிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்னும்
200 வருடங்கள் ஆனாலும் இன்னும் எத்தனை கொடுமைகளை
கட்டவிழ்த்து விட்டாலும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை விடப் போவதில்லை. சீனா, ரோஹிங்கியா,
ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளாலேயே இஸ்லாத்தை முஸ்லிம்களிடமிருந்து
பிரிக்க முடியாமல் தோற்று போயினர். மோடி, அமிதஷா வகையறாக்களால் மட்டும்
இது சாத்தியப்பட்டு விடுமா என்ன?
முடிவில் தோல்வியையே தழுவுவார்கள்.
இதனை வருங்கால வரலாறு உணர்த்தும்.
ஆக்கம்
சுவனப்பிரியன்
