Followers

Monday, July 16, 2012

சகோ சம்சுதீன் காசிமியின் திடீர் மனமாற்றம்!

சகோ சம்சுதீன் காசிமியின் திடீர் மனமாற்றம்!

ஒரு காலத்தில் தவ்ஹீத் வாதிகளுக்கு மிகப் பெரும் சவாலாகவும் எதிர்ப்புகளையும் கொடுத்துக் கொண்டிருந்தவர் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுதீன் காசிமி! ஆனால் இறைவன் கிருபையால் 06-07-2012 வெள்ளிக் கிழமை ஜூம்ஆ பிரசங்கத்தில் தவ்ஹீத்வாதிகளை விட (வஹாபிகளை விட) மிக ஆணித்தரமாக தர்ஹா, சந்தனக் கூடு, மீலாது விழா, மூடப் பழக்கங்கள் போன்றவற்றை சகட்டு மேனிக்கு தாக்கி அவை அனைத்தும் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்று கூற ஆரம்பித்து விட்டார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தங்களுக்கு சார்பாக பேசி வந்தவர் திடீரென்று தவ்ஹீதை பேச ஆரம்பித்தவுடன் அதனால் பாதிப்படைந்த ஒரு சிலர் இமாமை பள்ளியில் தாக்க முயற்சித்து இருக்கின்றனர். குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வக்கற்றவர்கள் இமாமை தாக்க முயற்சித்தது மிக்க கண்டிக்கத்தக்கது. பாக்கரும், ஹைதர் அலியும் இமாமை சந்தித்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஆவண செய்து வருகின்றனர். பிரிந்திருந்த சில தவ்ஹீத்வாதிகள் இன்று ஒன்றாயிருப்பது பார்க்க சந்தோஷமாக இருந்தது. பி.ஜேயும் இது சம்பந்தமாக கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும். சட்டத்தை கையிலெடுக்கும் எவரையும் முளையிலேயே கிள்ளி எறிந்து வன்முறைக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

அடுத்த வாரம் இதை விட அதிகமான ஆதாரங்களை தந்து தான் பேசியது குர்ஆன் ஹதீஸூக்கு உட்பட்டுத்தான் என்பதை விளக்குவதாகவும் சொல்லியிருக்கிறார். எப்படி கிறித்தவத்தில் ஓரிறைக் கொள்கையை குழி தோண்டி புதைக்க செயின்ட் பாலை யூதர்கள் கொண்டு வந்தார்களோ அதே போல் இஸ்லாத்திலும் கொண்டு வர யூதர்களின் உதவியோடு அந்த காலத்திலிருந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நபித் தோழர்கள் காலத்திலும் இவ்வாறு யூதர்கள் செய்த சதிதான் ஷியா என்ற பிரிவு உருவாகவே காரணமாக அமைந்தது. இந்தியாவிலும் பரேலிகள், காதியானிகள் என்று பலரை யூதர்கள் வளைத்து போட்டு எப்படியும் இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை தகர்த்து விட பல முயற்சிகளை செய்து கொண்டே வருகின்றனர். சில மத்ரஸாக்களில் குர்ஆனுக்கு மாற்றமாக சில பாடங்கள் இன்றும் வைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் இஸ்லாத்துக்கு மாறுவதாக நடித்து நயவஞ்சமாக மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் சில ஆரியர்கள் உதவியோடு யூதர்கள் செய்த கைவரிசை என்பதையும் மறந்து விட முடியாது. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதால் இன்று வரை யூதர்களின் முயற்சி பலிக்கவில்லை. பிஜே போன்ற மார்க்க அறிஞர்களின் அயராத உழைப்பால் இன்று மற்ற மாநிலங்களை விட தவ்ஹீதின் வளர்ச்சி மிக சிறந்து விளங்குகிறது. தற்போது சம்சுதீன் காசிமியும் தவ்ஹீதை சொல்ல ஆரம்பித்துள்ளார்.

மதரஸா பாடம் படிக்காத நானோ நீங்களோ ஓரிறைக் கொள்கையின் பக்கம் வருவது ஆச்சரியம் இல்லை. ஆனால் ஏழு வருடம் மதரஸாவில் படித்து பட்டம் பெற்ற ஒரு ஆலிம் தவ்ஹீதுக்கு வருவது அவ்வளவு லேசான காரியம் அல்ல. ஏழு வருடம் நாம் படித்ததை இந்த சிறுவயதுக்காரர்கள் தவறு என்று சொல்வதை நாம் ஏற்பதா என்ற ஈகோ வந்து விடும். அதற்கெல்லாம் கவலைப்படாமல் புரோகிதத்தால் வரும் வருமானத்தையும் தூக்கி எறிந்து இன்று தவ்ஹீதின் பக்கம் வந்திருக்கும் சகோ சம்சுதீன் காசிமியை இன்முகத்தோடு வரவேற்போம்.




மக்கா மஸ்ஜித் சார்பாக வெளியிட்ட அறிக்கையையும் பார்த்து விடுவோம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

கப்ரு வணங்கிகளின் கொலைவெறி தாக்குதல்

சென்னை மக்கா மஸ்ஜித் மீதும், தலைமை இமாம் மீதும் கொலைவெறி தாக்குதல்
அஸ்ஸலாமு அலைக்கும் வ'ரஹ்மத்துல்லாஹ்,

கேரளாவில் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு மத்தியிலே கப்ரு வணக்கம், ஷிர்க், அனாச்சாரம், காலில் விழுவது, முரீத், காலை பாலால் கழுவி குடிப்பது போன்ற எல்லா ஷிர்கியத்தான சீரழிவுகளையும் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வரும் A.P. அபூபக்கர் முசலியார் என்பவர் தற்பொழுது தமிழகத்திலும் அதே போன்ற ஷிர்கியத்தான சீரழிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தில் களம் இறங்கி இதற்காக தமிழகத்தில் தனக்கு சில அடிவருடிகளை பிடித்து சூழ்ச்சி விதிகளை விதைக்க ஆரம்பித்துள்ளார்.
இதற்காக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி, அக்ரம் கான், மேலை நாசர், ஆமிர் கலிமீ, அத்தாவுர்ரசூல் போன்ற தீயவர்களின் கூட்டணியுடன் , மன்சூர் ஹாஜியார் என்ற செல்வந்தரை தூண்டிவிட்டு தமிழகத்திலே சுன்னத்வல் ஜமாஅத் என்ற பெயரிலே உண்மையான சுன்னத் ஜமாத்திற்கு மாறாக தர்கா வழிபாடு, உருஸ் கொண்டாட்டங்கள், முரீத், காலில் விழுவது, போன்ற ஷிர்க்கான காரியங்களுக்கு மக்களை வழிகெடுக்க ஆரம்பித்துள்ளார் .

இந்த சீரழிவுகளை கண்டித்து 6.7.2012 அன்று ஜும்மாவில் முஸ்லி யார்? என்ற தலைப்பில் உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மௌலானா ஷம்சுதீன் கசிமீ மீது கொலை வெறி தாக்குதல் முயற்சி செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை 13.7.2012 அன்று சுமார் 300 கூலிப்படை ரவுடிகளுக்கு பணம் கொடுத்து மேலை நாசர் மற்றும் அகரம் கான் ஆகியோர் தலைமையில் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மது அருந்திய ரவ்டிகள் ஜும்மா தொழுகையின் போது பள்ளிவாசலில் நுழைந்து அத்துமீறி தாக்க வந்தார்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளாலும், மக்கா பள்ளியின் தொழுகையாளிகளின் சமயோசித நடவடிக்கையாலும் சுமார் 1 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மவ்லான அவர்கள் பாதுகாப்பாக தங்கள் அறைக்கு அழைத்து வரப்பட்டார்கள். அதனால் மிகப்பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது, எல்லாப் புகழும் இறைவனுக்கே!

(இது பற்றி காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது).
கொலைவெறியோடு தாக்க வந்தவர்கள் அவர்களுடைய குருநாதர்களான அஹ்மது ரசா கான் பரேலவி பற்றியோ, அபு பக்கர் முஸ்லியாரை பற்றியோ, தர்காவில் நடக்கும் அனாச்சாரங்களை பற்றியோ பேசக்கூடாது என்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்கள். மேலும் அசிங்கமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க, சாதாரண மனிதர்களே சொல்வதற்கும் கேட்பதற்கும் நாகூசும் அளவுக்கு கேவலமான வார்த்தைகளால் மலக்குமார்கள் நிறைந்திருக்கும் அல்லாஹ்வின் இறையில்லத்தையும் அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

இந்த மிரட்டலுக்கு மௌலானா அவர்கள் "நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பேர்களையும் பற்றியும் அடுத்த ஜும்மாவில் (20.7.2012) இன்ஷா அல்லாஹ் இன்னும் தெளிவாக பேசுவேன்"என்று தொழுகயாளிகளுடைய இடி முழக்க தக்பீருடன் அறிவித்தார்கள்.
அதன்படி, இன்ஷா அல்லாஹ் அடுத்த வார ஜும்ஆவில் இன்றும் விரிவாக பித்அத் மற்றும் அனாச்சாரங்களை பற்றியும் அதனை இந்தியாவில் உருவாக்கிய அஹ்மத் ரசா கான் பறேலவியின் வண்டவாளங்களையும் 20.7.2012 அன்று பேசவுள்ளார்கள் என்பதை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

http://makkamasjid.com/



டிஸ்கி: தற்போது குர்ஆன் ஹதீஸை ஆணித்தரமாக சொல்ல ஆரம்பித்து விட்டார். இன்னும் மதகுரு போன்ற தோற்றத்தில் பிரத்யேக ஸ்டைலில் தலையில் துண்டோடு காட்சி தருவதைப் பற்றி சற்று யோசிக்க வேண்டும். ஒரு முறை முகமது நபியை காண வந்த ஒரு நாட்டுப் புற அரபி 'உங்களில் யார் முகமது நபி' என்று கேட்கிறார். அப்பொழுது தோழர்கள் நபிகள் நாயகத்தை காட்டுகிறார்கள். இந்த நிகழ்வானது முகமது நபிக்கும் அவரது தோழர்களுக்கும் உடை விஷயத்தில் எந்த வேறுபாடும் இருந்ததில்லை என்று அறிகிறோம். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபராக அந்த நேரத்தில் இருந்தும் மக்களோடு மக்களாகத்தான் இருந்துள்ளார். போகப் போக சகோதரரின் உடைகளிலும் மாற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்.

---------------------------------------------------------------



இந்த பதிவு சம்பந்தப்பட்ட தலைப்பில் சகோ பெரியார் தாசன் அவர்களின் 'சகோதரத்துவம்' என்ற தலைப்பில் இங்கிலாந்தில் பேசிய பேச்சையும் சற்று கேட்போம்.

137 comments:

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் சுவனப்பிரியன்,
இந்த கட்டுரை பல தவறான புரிதல்களுடன் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வடிக்கப்பட்ட வார்த்தைகளின் கோர்வையாகவே தெரிகிறது. ஏனெனில் சம்சுதீன் காசிமியை பொறுத்தவரை அவர் தியோபந்தி மதரசாவில் பாடம் படித்தவர். இந்த மதரசா தர்ஹா , மவ்லீது பாடல்களை எதிர்கின்ற ஒன்று. ஆனால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மத்ஹப் சட்டங்களை தான் உயர்த்தி பிடிக்கும். சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னரே நான் சென்னையில் மக்கா பள்ளியில் அவருடைய பயானை கேட்டிருக்கிறேன். அப்போதே தர்காவையும் மவ்லீதையும் சாடி தான் பேசுவார். எனவே இப்படி பேசுவதால் மட்டுமே தவ்ஹீது என்றெல்லாம் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு விட வேண்டாம். ஏனெனில் தப்லீக் காரர்கள் கூட இத்தகைய தர்காவையும் மவ்லீது பாடல்களையும் ஆதரிக்க மாட்டார்கள்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

சம்சுதீன் காசிமி தமது ஜும்மா பேச்சில் கூட தாருல் உலூம் தேவ்பந்த் மதரசாவை நன்றாக புகழ்ந்து பேசுவார். ஏனெனில் அந்த தியோபந்த் மதரசா மத்ஹப்பை தூக்கி பிடிக்கும் கல்விக்கூடங்களில் ஒன்றாகும். ஆனால் ரேபரேலி மதரசா (பரேலவிசம்) மத்ஹப் , தர்ஹா, மவ்லீது பாடல்கள் உட்பட அனைத்தும் இஸ்லாமிய வழிமுறை என்று நம்புவர்கள். இவர்கள் இரண்டு தரப்புக்கும் வட இந்தியாவில் மோதல்கள் நடக்கும். ஆனால் இவ்விரு குருப்பும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மத்ஹப் சட்டங்களை தான் தூக்கி பிடிக்கும். தியோபந்திகள் தம் பள்ளியின் உள்ளே வரக்கூடாதென்று பல பரேலவி பள்ளிகளில் போர்டு கூட தொங்கும்.

Anonymous said...

masha allah இவருடைய பயான்களை நான் எப்போதும் கேட்பது உண்டு மாஷா அல்லாஹ் நிச்சயமாக உண்மை சொன்னால் அடி உதை எல்லாம் வரும் அறியாத பாமர மக்களுக்கு இவர்களை போன்ற படித்த மௌலவிகள் தைரியத்துடன் உண்மையை எடுத்து சொன்னால் இஸ்லாமிய எழிச்சி வெகு துரத்தில் இல்லை யா அல்லாஹ் இவருக்கு உண்மை உரத்து சொல்வதற்கு தைரியத்தை கொடுப்பாயாக ஆமீன்
ரியாஸ்
கத்தார்

suvanappiriyan said...

சலாம் சகோ ஷேக் தாவுத்!

//சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னரே நான் சென்னையில் மக்கா பள்ளியில் அவருடைய பயானை கேட்டிருக்கிறேன். அப்போதே தர்காவையும் மவ்லீதையும் சாடி தான் பேசுவார். எனவே இப்படி பேசுவதால் மட்டுமே தவ்ஹீது என்றெல்லாம் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு விட வேண்டாம். ஏனெனில் தப்லீக் காரர்கள் கூட இத்தகைய தர்காவையும் மவ்லீது பாடல்களையும் ஆதரிக்க மாட்டார்கள். //

மத்ஹபுகளை பின்பற்றியவராக இருந்தாலும் குர்ஆன் ஹதீஸை இந்த அளவு தைரியமாக அதுவும் பள்ளி ஜூம்ஆ மேடையிலேயே பேசுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. மனிதன் என்ற முறையில் ஒரு சில தவறுகள் புரிதலில் இருக்கலாம். காலப் போக்கில் அதுவும் சரியாக்கிக் கொள்வார் என்றே நம்புவோம். முதலில் இந்த அளவு எதிர்ப்புகள் வரும் என்று தெரிந்தே பேசிய அவரை பாராட்டுவோம்.

suvanappiriyan said...

அதிரடி தள்ளளுபடி எதற்கு?

கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், சாந்தி தியேட்டர் அருகேயுள்ள, தனியார் குடி மையம் ஒன்றில், "சரக்கு' வகைகளுக்கு, தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. "மூணு பீர் வாங்கினா... ஒரு பீர் இலவசம்; மூணு லார்ஜ் வாங்கினா... ஒரு லார்ஜ் இலவசம்; இந்த சலுகையில், சரக்கு வாங்குவோருக்கு, ஒரு பிளேட் பிரியாணி இனாம்' எனக் கொடுத்து அசத்துகின்றனர்."சரக்கு'க்கு அறிவித்துள்ள தள்ளுபடி விளம்பரம், கடந்த ஒரு வாரமாக, கோவை முழுக்க பிரபலமாகி விட்டது.

குடி மைய உரிமையாளர் சிவகுமார் கூறியதாவது:ஒரு மாதமாக, மது விற்பனை, மந்தமாக இருந்தது. அதனால், இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளோம். பீர் உள்ளிட்ட அனைத்து, "சரக்கு' வகைகளுக்கும், வெளிநாட்டு, "சரக்கு'களுக்கும், மூன்றுக்கு ஒன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க, இந்தத் தள்ளுபடி விற்பனையை துவக்கியுள்ளோம். இங்கு வருவோருக்கு, வழக்கமாக, எட்டு வகையான நொறுக்குத் தீனிகள் வழங்கப்படுகின்றன. தள்ளுபடி திட்டத்தில், சரக்கு வாங்குவோருக்கு, கூடுதலாக சிக்கன் பிரியாணியும் இலவசமாக வழங்கப்படுகிறது.கிடைக்கும் லாபத்தில், ஒரு பகுதியை, இந்த தள்ளுபடி திட்டத்திற்கு செலவிடுகிறோம். திட்டத்தால், வருவாய் இழப்பு இல்லை. ஆனால், வாடிக்கையாளர்கள், 20 சதவீதம் அதிகரித்துள்ளனர்.இவ்வாறு சிவகுமார் கூறினார்.

வீட்டுக்கு "டிராப்' உண்டு!ஒரு சில கடைகளில், ஆடிச் சலுகையாக, "தள்ளாடும்' வாடிக்கையாளர்களை வீட்டில் கொண்டு விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."மது குடித்தவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது' எனத் தடை இருப்பதால், சில வாடிக்கையாளர்கள், குடி மையங்களுக்கு, பஸ்சில் வருகின்றனர். மது குடித்ததும், அவர்களால் சீராக நடக்க முடியாத நிலை ஏற்படுவதால், அவர்களை வீட்டிலேயே கொண்டு விடவும், சில கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மேலும் கூடும் என, விற்பனையாளர்கள் நம்புகின்றனர்.

தினமலர்

17-07-2012

ஷர்புதீன் said...

//பி.ஜேயும் இது சம்பந்தமாக கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும்.//

:-)


ஒரு வேளை பீ ஜெ அவர்கள் மற்ற சமூகத்தோடு ( சுன்னத் ஜமாஅத் தவிர ) உள்ளன்போடு இணைந்தால் அது குறித்து வாய் நிறையே சந்தோசத்தோடு பேசி திரிபவன் நானாகத்தான் இருக்கும் !

டிஸ்கி -
(மாற்று மத நண்பர் ஒருவர் இஸ்லாம் பற்றி அறிய விரும்பினால் பீ ஜெ விடம்தான் அனுப்புவேன் )

suvanappiriyan said...

சகோ ஷர்புதீன்!

//(மாற்று மத நண்பர் ஒருவர் இஸ்லாம் பற்றி அறிய விரும்பினால் பீ ஜெ விடம்தான் அனுப்புவேன் )//

உண்மைதான்! மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை இலகு தமிழில் அறிமுகப்படுத்துவதில் பிஜே முதல் இடத்தில் இருக்கிறார்.

Feroz said...

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பின் சுபி. நான் சொல்ல வந்ததை சகோ ஷேக் தாவுத் சொல்லி விட்டார்கள். சகோ காஸிமி சுன்னத்வல் ஜாமாதில் இருந்தாலும் அனைத்து பித்அத் களையும் கடுமையாக எதித்தவர்.முன்பு கோட்டைக்கு போய் முதல்வரை சந்தித்தபோது தான் பிஜே அவர்களுக்கும் காசிமிக்கும் மன வருத்தங்கள் ஏற்பட்டது நினைவிருக்கலாம். மற்றபடி முழுமையான தௌஹித் சிந்தனை உடையவர். தோழமையுடன்

suvanappiriyan said...

சலாம் சகோ ஃபைரோஸ்!

//முன்பு கோட்டைக்கு போய் முதல்வரை சந்தித்தபோது தான் பிஜே அவர்களுக்கும் காசிமிக்கும் மன வருத்தங்கள் ஏற்பட்டது நினைவிருக்கலாம். மற்றபடி முழுமையான தௌஹித் சிந்தனை உடையவர். தோழமையுடன் //

உங்கள் கருத்தேதான் எனது கருத்தும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//முழுமையான தௌஹித் சிந்தனை உடையவர்.//
:-) :)சரிதான் நான் என்ன சொன்ன வந்தேனோ அதை சுவனப்பிரியன் புரிந்து கொள்ளவில்லை. சகோ பெரோசும் புரிந்து கொள்ளவில்லை. தவ்ஹீத் என்றால் தர்ஹா மற்றும் சில இணை வைத்தல்களான (மழை, குழந்தை, செல்வம் முதலியன) அல்லாஹ் அல்லாதோரிடம் கேட்காமல் இருந்தால் மட்டும் போதுமென்று எண்ணுகிறீர்களா? இது மட்டும் தான் தவ்ஹீத்வாதி என்ற சொல்லுக்கு இலக்கணமா? மனிதர்களால் இயற்றப்பட்ட சட்டங்களை தூக்கி வைத்து கொண்டாடும் சம்சுதீன் காசிமி எவ்வாறு தவ்ஹீத்வாதி ஆனார் சகோஸ்? கொஞ்சம் விளக்குங்களேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
ஸலாம் சகோ.சுவனப்பிரியன்...

இந்த தாக்குதல் தவ்ஹீது பிரச்சாரத்துக்கு விழுந்தது..!

இணைவைப்புக்கு எதிராக பேசியதால் உண்டானது..!

தவ்ஹீது பிரச்சாரத்தை தன் முழுமூச்சாக கொண்டிருப்பதாக கூறும் ததஜ,,,, அட்லீஸ்ட்.... ஒரு நிபந்தனையின் அடிப்படையில் தேர்தல் சமயத்தில் மட்டும் கருணாநிதி.. ஜெயலலிதா.. இவர்களை சப்போர்ட் பண்ணுவது போன்றாவது, இந்த தவ்ஹீதுக்கு எதிரான தாக்குதலுக்காக மவுலவி சம்சுதீன் சாசிமியை தம் பழைய பகைமையை மறந்து சப்போர்ட் பண்ணலாமே...!

/// பி.ஜேயும் இது சம்பந்தமாக கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும். ///

வழிமொழிகிறேன்....!!!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏகத்துவம் என்றால் இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளும் அதிகாரங்களும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது. அவன் அல்லாத வேறு யாரிடமும் இவை இல்லை என்று நம்புவதாகும். இறைவனுக்கு மட்டும் உரிய பல அதிகாரங்களில் ஒன்று பிறருக்கு இருப்பதாக நம்பினாலும் அது ஏகத்துவத்திற்கு எதிரான நம்பிக்கையாகும்.

தர்ஹா வழிபாட்டையும் பித்அத் அநாச்சாரங்களையும் ஒரு பக்கம் எதிர்த்துக்கொண்டு மறுபக்கம் நான்கு பெரும் இமாம்களையும் , நபித் தோழர்களையும் பின்பற்ற வேண்டும் எனக் கூறுபவர் சம்சுதீன் காசிமி.

பின்வரும் வசனம் மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது எனக் கூறுகின்றது.

"கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது." (அல்குர்ஆன் 39:3)

எனவே நபித்தோழர்கள், நான்கு பெரும் இமாம்கள் கூறுவதெல்லாம் மார்க்கம் என்று கூறும் சம்சுதீன் காசிமி ஓரிறைக் கொள்கையாளரா?

Anonymous said...

/// பி.ஜேயும் இது சம்பந்தமாக கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும். ///

வழிமொழிகிறேன்....!!!

Rifath Abdul Razack.
Qatar

suvanappiriyan said...

சகோ ஷேக் தாவுத்!

//எனவே நபித்தோழர்கள், நான்கு பெரும் இமாம்கள் கூறுவதெல்லாம் மார்க்கம் என்று கூறும் சம்சுதீன் காசிமி ஓரிறைக் கொள்கையாளரா?//

எவருடைய உள்ளங்களையும் இறைவனே அறிவான்.

இஸ்லாம் என்ற அரபிச் சொல்லின் பொருள் 'அடிபணிதல்', 'கட்டுப்படுதல்' 'கீழ்ப்படிதல்' ஆகியவையாகும். படைப்பாளனாகிய இறைவனின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவற்றிற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான் இஸ்லாம்.

நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியில் இருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள்.
இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்றார்கள்.......
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50, முஸ்லிம் 10)

அடிப்படைகளான இந்த கடமைகளை ஒத்துக் கொண்டு இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து வாழ்ந்து வரும் சம்சுதீன் காசிமியை நான் முஸ்லிமாக பார்க்கிறேன். அதற்கு நீங்கள் தவ்ஹீத்வாதி என்றோ, மத்ஹப்வாதி என்றோ, வஹ்ஹாபி என்றோ, ஸலபி என்றோ எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அடிப்படை விஷயத்தில் முரணில்லாத அனைவரும் என் பார்வையில் தவ்ஹீத்வாதியே!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//தவ்ஹீது பிரச்சாரத்தை தன் முழுமூச்சாக கொண்டிருப்பதாக கூறும் ததஜ,,,, அட்லீஸ்ட்.... ஒரு நிபந்தனையின் அடிப்படையில் தேர்தல் சமயத்தில் மட்டும் கருணாநிதி.. ஜெயலலிதா.. இவர்களை சப்போர்ட் பண்ணுவது போன்றாவது, இந்த தவ்ஹீதுக்கு எதிரான தாக்குதலுக்காக மவுலவி சம்சுதீன் சாசிமியை தம் பழைய பகைமையை மறந்து சப்போர்ட் பண்ணலாமே...!//

உங்கள் கருத்தே என் கருத்தும். பிஜே இது விஷயமாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//எவருடைய உள்ளங்களையும் இறைவனே அறிவான்.//
அவரே தன் வாயால் தான் மத்ஹப்வாதி என்பதை பல தடவை அறிவித்திருக்கிறார் சகோ. எனவே அவருடைய உள்ளத்தை கிழித்து பார்த்து எல்லாம் இந்த முடிவுக்கு நான் வரவில்லை.

தவ்ஹீத்வாதி என்பதற்கு உங்கள் பார்வையோ எனது பார்வையோ தேவை இல்லை. இஸ்லாமிய அடிப்படையில் என்ன விளக்கம் இருக்கிறது என்று பார்த்தால் போதும். அல்லாஹ்வின் சட்டமியற்றும் அதிகாரத்தை இமாம்களுக்கும் நபித் தோழர்களுக்கும் கொடுப்பவர்கள் தவ்ஹீத்வாதிகள் அல்லர். ஆனால் சம்சுதீன் காசிமியை நானும் முஸ்லிமாக தான் பார்க்கிறேன். அவர் முஸ்லிம் இல்லை என்று நான் சொல்லவில்லை. (இதற்கு முன்னர் முஸ்லிம் என்பதற்கு தவறாக அர்த்தம் புரிந்திருந்தேன். ஆனால் அது தவறு என்று மார்க்க அடிப்படையில் புரிந்து கொள்ளும் போது என்னுடைய புரிதலை விலக்கி மார்க்கத்திற்கே முன்னிலை கொடுக்கிறேன்)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

கலிமா சொல்லி இணைவைக்காத ஒருவரை-முஸ்லிமை... ஜும்மா மிம்பரில் தவ்ஹீது பிரச்சாரம் செய்யும் ஒரு இமாமை... ஏகத்துவ பிரச்சாரம் செய்வதை எதிர்த்து முஷ்ரிக்குகள் அடிக்கிறார்கள்... என்றால்...

அந்த அடிவாங்குபவர்...
என்னுடைய இயக்கத்தின் 948 கொள்கையையும் ஏற்றுக்கொண்டவர் என்றால்தான்... நான் அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்றால்..........

நாம் எதை நோக்கி போகிறோம் என்று புரியவில்லை...!

ஹசனுல் ஆரிபின் - கீழக்கரை said...

அஸ்ஸலாமு அழைக்கும்..

மத்ஹபை பின்பற்றுவதால் சகோதரர் சம்சுதீன் காசிமி அவர்களை தவ்ஹீத்வாதி இல்லை என்று சொல்லும் சகோதரர் ஷேக் தாவூது அவர்கள், முதலில் நீங்கள் ஒரு உண்மையான தவ்ஹீத்வாதியா என்று 100% சொல்ல முடியுமா....
ஏனென்றால் என்னை பற்றி நான் எவ்வளவு பாவம் செய்துள்ளேன் என்னென்ன தவறுகள் செய்கின்றேன் என்பதனை என்னைவிட அல்லாஹ்வே மிக அறிந்தவன். அப்படி இருக்க நமக்கு மற்றவரை தவ்ஹீத்வாதி இல்லை என்று சொல்ல நமக்கு அதிகாரம் கொடுத்தது யார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அல்லாஹ் வஹீ எடுத்து சொல்லிய பின்பு இன்னின்னார் காபிர் என்று சொனார்கள், இதனை தாங்கள் மறந்துவிட வேண்டாம். பேசினால் நல்லதை பேசுவோம், அல்லது வாய் பொத்தி இருப்போம், இன்ஷா அல்லாஹ்....

வஸ்ஸலாம்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

நானும் பலமுறை ஹசரத் பயான் கேட்டிருக்கிறேன்.. இது அவருக்கு புதிதல்ல..

suvanappiriyan said...

//அவரே தன் வாயால் தான் மத்ஹப்வாதி என்பதை பல தடவை அறிவித்திருக்கிறார் சகோ. எனவே அவருடைய உள்ளத்தை கிழித்து பார்த்து எல்லாம் இந்த முடிவுக்கு நான் வரவில்லை.//

அப்படி சொன்னதால் அவர் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியாகி விடுவாரா? முதலில் மத்ஹப் எப்படி வந்தது? நபி அவர்களின் சொல் செயல் அங்கீகாரங்களை மார்க்க அறிஞர்கள் குறித்து வைத்தனர். அத்தோடு அவர்கள் அறிவுக்கு பட்ட வகையில் சில விளக்கங்களையும் எழுதி வைத்தனர். இதனை ஆதாரமாக வைத்து தங்களின் மார்க்க கடமைகளை செய்தவர்கள் மத்ஹப்வாதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். தற்போது அந்த சட்டங்கள் சில தவறாக விளங்கப்பட்டிருந்தால் அதை எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். குர்ஆன் சொன்னாலும் நான் மத்ஹப் வழியைத்தான் பின்பற்றுவேன் என்று எங்காவது சம்சுதீன் சொல்லியிருந்தால் அது விமரிசிக்கத்தக்கதே! முற்றிலுமாக இமாம்களையும் சஹாபாக்களையும் அவர்களின் சொற்களையும் புறம் தள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு நம்மை பல குழப்பத்துக்கு கொண்டு சேர்த்து விடும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

மத்ஹபை பின்பற்றுவதால் அவர் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியே சென்று விட்டார் என்று நான் இங்கே கூறினேனா? பின்னர் நான் சொல்லாததை வைத்து கொண்டு அதன் மேல் கருத்து சொல்லுவது எதற்காக.

ஆனால் தவ்ஹீத்வாதி என்பவர் அல்லாஹ்வின் பண்புகளில் எந்த ஒன்றையும் படைப்பினங்களுக்கு கொடுக்க மாட்டார். எனவே நான் அல்லாஹ்வின் பண்புகளில் எதையும் படைப்பினங்களுக்கு கொடுக்கவில்லை. எனவே என்னை நான் தவ்ஹீதவாதி என்றே சொல்லுகிறேன்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

இணைவைத்தல் என்றால் அல்லாஹ்விற்கு இணையாக ஒன்றை சொல்லுவதும், அவன் வழங்க வேண்டிய அருள்களில் சிலவற்றை (மழை, குழந்தை, செல்வம் போன்றவைகள்) அல்லாஹ் அல்லாதவரிடம் கேட்பது என்று மட்டுமே இங்கே பொது புத்தியில் நுழைக்கப்பட்டு விட்டது. அதை தான் இங்கே இருக்கிற பல சகோக்களும் புரிந்து வைத்திருப்பதாக நான் அஞ்சுகிறேன். ஆனால் மீண்டுமொருமுறை நினைவு படுத்துகிறேன். "கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது." (அல்குர்ஆன் 39:3)

suvanappiriyan said...

சகோ ஸ்டார்ஜான்!

//நானும் பலமுறை ஹசரத் பயான் கேட்டிருக்கிறேன்.. இது அவருக்கு புதிதல்ல.. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//ஆனால் தவ்ஹீத்வாதி என்பவர் அல்லாஹ்வின் பண்புகளில் எந்த ஒன்றையும் படைப்பினங்களுக்கு கொடுக்க மாட்டார். எனவே நான் அல்லாஹ்வின் பண்புகளில் எதையும் படைப்பினங்களுக்கு கொடுக்கவில்லை. எனவே என்னை நான் தவ்ஹீதவாதி என்றே சொல்லுகிறேன். //

அப்போ சம்சுதீன் காசிமி படைப்புகளை படைத்தவனுக்கு நிகராக எங்கும் சொல்லியிருக்கிறாரா? அப்படி ஏதும் உங்களிடம் ஆதாரம் இருந்தால் அறியத் தாருங்கள்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

கைப்புண்ணுக்கு கண்ணாடி கேட்கிறீர்கள் சகோ. மத்ஹப் சட்டங்கள் தான் சரி அது தான் மார்க்கம் என்று சொல்லுபவர் (மதஹப் சட்டங்கள் குர்ஆன் - ஹதீஸிற்கு மாற்றமாக இருக்கிறது. வேண்டுமானால் இதற்கு ஆதரம் தருகிறேன்) காசிமி சாஹிப். சட்டங்கள் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்விற்கு உரியது ஆனால் அந்த உரிமை இமாம்களுக்கும் உரியது என்பது தானே மதஹப்களின் ஆதாரம். இதற்கு பெயர் என்னவோ?

பி.ஏ.ஷேக் தாவூத் said...

படைத்த ரப்புல் ஆலமீனுக்கு இணையாக இன்னொருத்தரை சொல்வதும் ஒன்று தான். அல்லாஹ்வின் பண்பில் ஒன்றான மார்க்க சட்டமியற்றும் அதிகாரத்தை வேறொருவருக்கு வழங்குவதும் ஒன்று தான். மத்ஹபில் குர்ஆனுக்கு முரணான சட்டங்கள் இல்லை என்று நீங்கள் சொல்வீர்களா? அந்த மத்ஹபை தூக்கி பிடிப்பது என்றால் அதன் பெயர் என்ன சகோ?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சுவனப்பிரியன்,

ஷிர்கில் இருந்து பரிபூரணமாக விலகி, விளங்கி... ஏக இறைவனை ஏற்று ஒருவரால் மனப்பூர்வமாக 'லா இலாஹா இல்லல்லாஹு' என்று சொல்லிவிட்டால்.... அங்கே ஏகத்துவம் நிலைநாட்டப்பட்டு விட்டது..! இவர் ஏகத்துவவாதி..!

மீதி.... 'முஹம்மது ரசூலுல்லாஹ்' என்று அவரால் மனப்பூர்வமாக நபி முஹம்மத் ஸல் அவர்களை இறுதிதூதராக ஏற்றுக்கொண்டு விட்டால்... அஹ்லே சுன்னத் வாதி..!

மேற்படி இரண்டையும் மனப்பூர்வமாக சொன்னவர் தன் வாழ்நாள் முழுதும்
அல்லாஹ் ரசூல் கட்டளைகளை பேணி அதற்கு கட்டுப்பட்டு அதன்படி ஒழுகி வாழ்வாரேயானால்... அவர்தான் முஸ்லிம்..!

இதுதான் நான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளங்கி வைத்திருக்கும் விளக்கம்..!

இன்று புரிதாக ஏதேதோ புதுப்புது விளக்கம் எல்லாம் சொல்கிறார்கள்...!

இஸ்லாமிய மாணவன் said...

பி.ஏ.ஷேக் தாவூத் அவர்களின் கருத்தை 100 / 100 ஏற்று கொள்கிறேன் ...

//பி.ஜேயும் இது சம்பந்தமாக கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும் ..//

வெளியிட மாட்டார் என்றே நினைக்கிறன் ..

Unknown said...

"கலிமா சொல்லி இணைவைக்காத ஒருவரை-முஸ்லிமை... ஜும்மா மிம்பரில் தவ்ஹீது பிரச்சாரம் செய்யும் ஒரு இமாமை... ஏகத்துவ பிரச்சாரம் செய்வதை எதிர்த்து முஷ்ரிக்குகள் அடிக்கிறார்கள்... என்றால்...

அந்த அடிவாங்குபவர்...
என்னுடைய இயக்கத்தின் 948 கொள்கையையும் ஏற்றுக்கொண்டவர் என்றால்தான்... நான் அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்றால்..........

நாம் எதை நோக்கி போகிறோம் என்று புரியவில்ல"//

excellent.எனது கருத்தும் இதுதான். .

இஸ்லாமிய மாணவன் said...

சுவனப் பிரியன்

//முற்றிலுமாக இமாம்களையும் சஹாபாக்களையும் அவர்களின் சொற்களையும் புறம் தள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு நம்மை பல குழப்பத்துக்கு கொண்டு சேர்த்து விடும்.//

குரான் ஹதீஸ் உங்களுக்கு போதவில்லையா ?

இஸ்லாமிய மாணவன் said...

தமில் முஸ்லிம்

//மற்றவரை தவ்ஹீத்வாதி இல்லை என்று சொல்ல நமக்கு அதிகாரம் கொடுத்தது யார். //

எவருடைய உள்ளதை பிளந்து பார்க்க எல்லாம் தேவை இல்லை ..

அவர் வெளிப்படையாக செய்யும் செயல்களை வைத்து சொல்லி விடலாம்

உதாரணம் ... தர்கா .

இஸ்லாமிய மாணவன் said...

தமில் முஸ்லிம்

//மற்றவரை தவ்ஹீத்வாதி இல்லை என்று சொல்ல நமக்கு அதிகாரம் கொடுத்தது யார். //

எவருடைய உள்ளதை பிளந்து பார்க்க எல்லாம் தேவை இல்லை ..

அவர் வெளிப்படையாக செய்யும் செயல்களை வைத்து சொல்லி விடலாம்

உதாரணம் ... தர்கா .

Starjan (ஸ்டார்ஜன்) said...

என் பெயர் ஸ்டார்ஜான் இல்ல ஸ்டார்ஜன்.

HBA said...

அ​ஸ்ஸலாமு அலைக்கும்,

//இந்த கட்டுரை பல தவறான புரிதல்களுடன் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வடிக்கப்பட்ட வார்த்தைகளின் கோர்வையாகவே தெரிகிறது. //

இது 100% சரியானதாகவே படுகிறது.


//தவ்ஹீத்வாதிகளை விட (வஹாபிகளை விட) மிக ஆணித்தரமாக தர்ஹா, சந்தனக் கூடு, மீலாது விழா, மூடப் பழக்கங்கள் போன்றவற்றை சகட்டு மேனிக்கு தாக்கி அவை அனைத்தும் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்று கூற ஆரம்பித்து விட்டார்.//

தவ்ஹீத்வாதி=வஹாபி - இ​து எந்த டிக்க்ஷனரி என்று தெரியவில்லை.

அ​வர் எப்பொழுதுமே தர்ஹா, சந்தனக் கூடு, மீலாது விழா, மூடப் பழக்கங்கள் போன்றவற்றை சகட்டு மேனிக்கு தாக்கி வருபவர்தான்.

அ​வர் பீஜே வை நேரடியாக தாக்கிப் பேசினால் அடியாள் அனுப்பும் ஒரு இயக்கம்தான் த .த.ஜ எ​ன்பதை மறந்து விடாதீர்கள்.

//ஒரு முறை முகமது நபியை காண வந்த ஒரு நாட்டுப் புற அரபி 'உங்களில் யார் முகமது நபி' என்று கேட்கிறார். அப்பொழுது தோழர்கள் நபிகள் நாயகத்தை காட்டுகிறார்கள். இந்த நிகழ்வானது முகமது நபிக்கும் அவரது தோழர்களுக்கும் உடை விஷயத்தில் எந்த வேறுபாடும் இருந்ததில்லை என்று அறிகிறோம். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபராக அந்த நேரத்தில் இருந்தும் மக்களோடு மக்களாகத்தான் இருந்துள்ளார். போகப் போக சகோதரரின் உடைகளிலும் மாற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்.//

இ​தே விஷயத்தை பீ.ஜே. வுக்கும் சொல்லுவீர்களா? ஏனேனில் அவர் எதிரே உள்ளவர்கள் எப்பொழுதும்தொப்பி அனிவதில்லை.ஆனால் அவர் எப்பொழுதும் தொப்பியுடனே இருக்கிறார்.

அ​ன்புடன்
HBA.

HBA said...

அ​ஸ்ஸலாமு அலைக்கும்,

//இந்த கட்டுரை பல தவறான புரிதல்களுடன் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வடிக்கப்பட்ட வார்த்தைகளின் கோர்வையாகவே தெரிகிறது. //

இது 100% சரியானதாகவே படுகிறது.


//தவ்ஹீத்வாதிகளை விட (வஹாபிகளை விட) மிக ஆணித்தரமாக தர்ஹா, சந்தனக் கூடு, மீலாது விழா, மூடப் பழக்கங்கள் போன்றவற்றை சகட்டு மேனிக்கு தாக்கி அவை அனைத்தும் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்று கூற ஆரம்பித்து விட்டார்.//

தவ்ஹீத்வாதி=வஹாபி - இ​து எந்த டிக்க்ஷனரி என்று தெரியவில்லை.

அ​வர் எப்பொழுதுமே தர்ஹா, சந்தனக் கூடு, மீலாது விழா, மூடப் பழக்கங்கள் போன்றவற்றை சகட்டு மேனிக்கு தாக்கி வருபவர்தான்.

அ​வர் பீஜே வை நேரடியாக தாக்கிப் பேசினால் அடியாள் அனுப்பும் ஒரு இயக்கம்தான் த .த.ஜ எ​ன்பதை மறந்து விடாதீர்கள்.

//ஒரு முறை முகமது நபியை காண வந்த ஒரு நாட்டுப் புற அரபி 'உங்களில் யார் முகமது நபி' என்று கேட்கிறார். அப்பொழுது தோழர்கள் நபிகள் நாயகத்தை காட்டுகிறார்கள். இந்த நிகழ்வானது முகமது நபிக்கும் அவரது தோழர்களுக்கும் உடை விஷயத்தில் எந்த வேறுபாடும் இருந்ததில்லை என்று அறிகிறோம். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபராக அந்த நேரத்தில் இருந்தும் மக்களோடு மக்களாகத்தான் இருந்துள்ளார். போகப் போக சகோதரரின் உடைகளிலும் மாற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்.//

இ​தே விஷயத்தை பீ.ஜே. வுக்கும் சொல்லுவீர்களா? ஏனேனில் அவர் எதிரே உள்ளவர்கள் எப்பொழுதும்தொப்பி அனிவதில்லை.ஆனால் அவர் எப்பொழுதும் தொப்பியுடனே இருக்கிறார்.

அ​ன்புடன்
HBA.

suvanappiriyan said...

இஸ்லாமிய மாணவன்!

//குரான் ஹதீஸ் உங்களுக்கு போதவில்லையா ?//

இது இரண்டும்தான் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படை என்பது அனைவருக்கும் தெரிந்ததே! பின்னால் வந்த மார்க்க அறிஞர்கள் குர்ஆனுக்கும் நபிகளின் ஹதீதுகளுக்கும் பல விளக்கவுரைகளை எழுதியுள்ளார்கள். அந்த விளக்கங்கள் குர்ஆன் ஹதீஸூக்கு மாற்றமில்லாமல் இருந்தால் அந்த கருத்துக்களை எடுத்துக் கொள்வதில் என்ன தவறு? இன்று பிஜே தரும் பல விளக்கங்களை நாம் எடுத்துக் கொள்வதில்லையா? எதற்கு பிஜே தனியாக ஒரு இயக்கம் ஆரம்பித்து, தனியாக ஒரு இணைய தளமும் ஆரம்பித்து பல விளக்கங்களையும கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். குர்ஆனும் ஹதீஸூம் புத்தக வடிவிலும் மின் நூலாகவும் பரந்து கிடக்கிறது. அவரவர் பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட வேண்டியதுதானே? இங்கு பிஜேயின் தனிப்பட்ட விளக்கங்களை எடுத்துக் கொள்ள நாம் எந்த வாதங்களை எல்லாம் வைக்கிறோமோ அவை அனைத்தும் சஹாபாக்கள், இமாம்கள், தாபியீன்கள் அனைவருக்கும் பொருந்தும்.

Anisha Yunus said...

அஸ் ஸலாமு அலைக்கும் சகோ சுவனப்பிரியன்,

இஸ்லாத்தை அதிகமாக, ஆழமாக விளங்க ஆரம்பித்த காலத்திலிருந்து ‘தமிழில்’ இமாம் அவர்களின் உரைகளை மட்டுமே விரும்பியுள்ளேன். எந்த உரையிலும் அவர் தவ்ஹீதை எதிர்த்தோ, குர்’ஆன் சுன்னத்துக்கு எதிராகவோ பேசி நான் அறிந்ததில்லை. (கவனிக்க:அவரின் எல்லா உரைகளையும் நான் கேட்டதோ/கேட்பதோ கிடையாது. நேரமிருப்பின் கேட்பதுண்டு, இப்பொழுதும் கூட. அதிலும் இஸ்லாமல்லாத அனாச்சாரங்கள் எதற்கும் இமாமிடமிருந்து சப்போர்ட்டை கண்டதில்லை. அல்ஹம்துலில்லாஹ்), எனவே அவரின் இந்த ஜும்மா உரை என்னை பிரமிக்க வைக்கவில்லை. ஆனால் அதன் பின் நடந்தது, சுப்ஹானல்லாஹ், எந்த ஒரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமுக்கு நேர விடக்கூடாதது, விரும்பக்கூடாதது. அல்ஹம்துலில்லாஹ், இதிலும் இஸ்லாத்திற்கே வெற்றி.

எனினும் இமாம் அவர்களை சரியாக கணித்து (பின்னூட்டங்களின் வாயிலாக நான் அறிந்து கொண்ட வரையில்) வைத்துள்ள நீங்களே, //"சகோ சம்சுதீன் காசிமியின் திடீர் மனமாற்றம்!"// இப்படி ஒரு தலைப்பு வைத்துள்ளது கொஞ்சம் நெருடலாக உள்ளது. யோசிக்கவும்.

//பி.ஜேயும் இது சம்பந்தமாக கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும்.//
நானும் எதிர்பார்க்கிறேன். இஸ்லாமிய சகோதரத்துவம் முக்கியமா அல்லது கருத்து மோதல்களில் ஏற்படும் பகைமை முக்கியமா என்பதை விளங்க ஒரு வாய்ப்பு, இன்ஷா அல்லாஹ்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோதரி அன்னு!

//இப்படி ஒரு தலைப்பு வைத்துள்ளது கொஞ்சம் நெருடலாக உள்ளது. யோசிக்கவும்.//

சகோ சம்சுதீன் காசிமி அவர்கள் பல காலமாக பித்அத்களை கண்டித்து வந்தாலும் அன்றைய ஜூம்ஆ பிரசங்கம் முன்பு இருந்ததைக் காட்டிலும் வீரியமாக இருந்தது. அதிலும் சம்பந்தப்பட்டவர்களை பூசி மெழுகாமல் நேரிடையாக பெயர்களை குறிப்பிட்டே கண்டித்து பேசியது எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எதையும் செய்யத் தணிந்தவர்கள் என்பதை தெரிந்தே பேசியது அவரது மதிப்பை என்னுள் அதிகப்படுத்தியது. எனவேதான் திடீர் மனமாற்றம் என்று தலைப்பு வைத்தேன். உள்ளங்களை புரட்டக் கூடியன் இறைவன் அல்லவா?

//நானும் எதிர்பார்க்கிறேன். இஸ்லாமிய சகோதரத்துவம் முக்கியமா அல்லது கருத்து மோதல்களில் ஏற்படும் பகைமை முக்கியமா என்பதை விளங்க ஒரு வாய்ப்பு, இன்ஷா அல்லாஹ்.//

உங்களைப் போல் நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

ஸலாம்

சுவனப் பிரியன்

குர்ஆனும் ஹதீஸூம் புத்தக வடிவிலும் மின் நூலாகவும் பரந்து கிடக்கிறது. அவரவர் பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட வேண்டியதுதானே?

எல்லாரும் இஸ்லாமில் அறிவாளிகள் இல்லையே .. அவற்றில் ஒரு சிலர் பாமரர் கூட இஸ்லாத்தில் இருக்கிறார்களே ... அவர்கள் என்ன செய்வது .. இதை தானே செய்ய முடியும் ..

தெரிந்ததை தெரியாதவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று தானே இறை சட்டம் சொல்லுகிறது ..

அதே இறைசட்டம் தானே உங்களிடம் ஒருவர் செய்தியை கொண்டு வந்தால் தீர விசாரித்து கொள்ளுங்கள் என்று சொல்லுகிறது.. கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டாம் என்று தானே இறை சட்டம் சொல்லுகிறது ..

பீ ஜெ சொல்லும் கருத்து குரான் ஹதீஸ் ஒத்துபோகிறதா என்று பார்க்கிறோம்.. அவருக்கு எதிர் கருத்து யாரிடம் உள்ளதோ அவரின் கருத்தையும் படித்து அவற்றில் எது சிறந்ததோ அதை பின்பற்றுகிறோம் .. அப்படி தானே !!!

இது தான் என்னால் முடிந்தது.. இது தான் நான் செய்யும் செயல் .. அப்படிதானே உங்களுடைய செயலும் ???

Unknown said...

சகோதரி அன்னு

//எந்த உரையிலும் அவர் தவ்ஹீதை எதிர்த்தோ, குர்’ஆன் சுன்னத்துக்கு எதிராகவோ பேசி நான் அறிந்ததில்லை. //

//இப்பொழுதும் கூட. அதிலும் இஸ்லாமல்லாத அனாச்சாரங்கள் எதற்கும் இமாமிடமிருந்து சப்போர்ட்டை கண்டதில்லை. //

ஆனால் அவர் தொழுகும் போதும், தொழ வைக்கும் போதும் கண்டு பிடித்து விடலாமே .. குர்ஆன், ஹதீச்க்கு பின்பற்றுகிறாரா? அல்லது குரான் ஹதீஸ் எதிரா உள்ள மத்கபை பின்பற்றுகிறா? என்று

உதாரணம் : கூட்டு து ஆ , ஜும்மா மிம்பரில் யாருக்கும் புரியாத அரபி வார்த்தை . இன்னும் நிறைய

நீங்கள் இப்படி கூட சொல்ல வரலாம் .. அவர் ஆய்வு செய்து பின்பற்றுகிறார் என்று .. அப்படி அவர் செய்வது சத்தியம் என்றால் என்ன செய்ய வேண்டும் .. நான் செய்வது நூற்றுக்கு நூறு மெய் .. அவரது கருத்துக்கு எதிர் கருத்து உள்ளவர்களுடன் விவாதம் செய்ய வர மறுப்பது ஏன் ?

சத்தியத்தை உலகெங்கும் பரப்பலாமே அவர் ???

Unknown said...

வ அலைக்கும் ஸலாம்

HBA HBA HBA HBA HBA

//இ​தே விஷயத்தை பீ.ஜே. வுக்கும் சொல்லுவீர்களா? ஏனேனில் அவர் எதிரே உள்ளவர்கள் எப்பொழுதும்தொப்பி அனிவதில்லை.ஆனால் அவர் எப்பொழுதும் தொப்பியுடனே இருக்கிறார்.//

பீ.ஜெ சொல்லும் பதில் கீழே .. நல்லா படிங்க ...

நீங்கள் மட்டும் தொப்பி அணியலாமா

தொப்பி அணிய ரசூல்(ஸல்) சொன்னதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸ் கூட இல்லை என்று நீங்கள் குறிப்பிட்டதைப் பார்த்தேன். ஆனால் தாங்களே தொப்பி அணிந்து இருக்கிறீர்கள். இது எதற்கு? முஸ்லிம் என்று தெரியத் தானே? அப்போ தொப்பி உங்களுக்கு ஒரு மறைமுக கண்ணியத்தை அளிக்கிறது. இதை பற்றி தங்கள் கருத்து என்ன?



தாரிக்

பதில் :

பல சந்தர்ப்பங்களில் இது போன்ற கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டு அதற்கு நான் பதிலளித்துள்ளேன்.

தொப்பிக்கும் மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் ஒருவர் இதை மார்க்கம் என்று கருதாமல் ஆடை அலங்காரம் என்ற அடிப்படையில் அணிந்தால் அதில் தவறேதுமில்லை.

தொப்பி அணிவது தவறு என்று நான் வாதிட்டால் தான் இது பற்றி நீங்கள் கேட்க முடியும். தொப்பி அணிய விரும்புவோர் அணியலாம். அணிபவரை ஆட்சேபிக்கக் கூடாது என்றும் அதே நேரத்தில் தொப்பி அணியாதவர்களைப் பார்த்து அணியுமாறு வற்புறுத்தவோ ஆர்வமூட்டவோ கூடாது என்பதையும் நான் கூறி வருகிறேன். எனவே நான் தொப்பி அணிந்தால் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றை செய்கிறேன். அணியாவிட்டாலும் அனுமதிக்கப்பட்டதைத் தான் செய்கிறேன். இதில் கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

http://onlinepj.com/vimarsanangal/pj_patriya_vimarsanam/neengal_mattum_thoppi_aniyalama/

படிச்சு தெளிவாகி கொள்ளுங்கள் ...

Unknown said...

//சகோ சம்சுதீன் காசிமி அவர்கள் பல காலமாக பித்அத்களை கண்டித்து வந்தாலும் அன்றைய ஜூம்ஆ பிரசங்கம் முன்பு இருந்ததைக் காட்டிலும் வீரியமாக இருந்தது. //

என்ன தான் சம்சுதீன் காசிமி பித் அத் கண்டித்து வந்தாலும், அவர் செய்யும் பித் அத் யை யார் கண்டிப்பது !!!!!

உங்களுக்கு கூட்டு து ஆ, ஜும்மா குத்பா மூன்று தடவை ,, தரைல ஒரு தமிழ் குத்பா , மிம்பர் ல ரெண்டு அரபி குத்பா .... இன்னும் நிறைய ... இவர் செய்வது எல்லாம் பித் அத் ஆகா தெரிய வில்லையா ???

ஆக மொத்தம் ,

வேலியே பயிரை மேயலாம்ம்மா !!!!!!!

suvanappiriyan said...

சலாம் சகோ சிந்தனை!

//பீ ஜெ சொல்லும் கருத்து குரான் ஹதீஸ் ஒத்துபோகிறதா என்று பார்க்கிறோம்.. அவருக்கு எதிர் கருத்து யாரிடம் உள்ளதோ அவரின் கருத்தையும் படித்து அவற்றில் எது சிறந்ததோ அதை பின்பற்றுகிறோம் .. அப்படி தானே !!!

இது தான் என்னால் முடிந்தது.. இது தான் நான் செய்யும் செயல் .. அப்படிதானே உங்களுடைய செயலும் ???//

நீங்கள் வைக்கும் கருத்தைத்தான் சகோ ஷேக் தாவுதுக்கு நானும் வைக்கிறேன். இமாம்களில் பல சிறந்த மேதைகள் இருந்துள்ளார்கள். நபித் தோழர்கள் நம்மை விட நபியை அருகில் இருந்து பார்த்து பாடம் பயின்றவர்கள். எனவே அவர்களை அலட்சியமாக ஒதுக்கி விட முடியாது. அவர்கள் குர்ஆன் ஹதீஸூக்கு உட்பட்டு தந்த மார்க்க தீர்ப்புகளையும் ஆய்வில் எடுத்துக் கொள்வதில் என்ன தவறு வந்து விடப் போகிறது என்பதே எனது கேள்வி!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும்..சகோஸ்,
ஆஹா ...பின்னுட்டங்கள் வேற திசையில் போய்க்கொண்டுயிருக்கிறது ,
நேரமின்மையால் நாளை கலந்துக்கொள்கிறேன்..இன்ஷால்லாஹ்

suvanappiriyan said...

//உங்களுக்கு கூட்டு து ஆ, ஜும்மா குத்பா மூன்று தடவை ,, தரைல ஒரு தமிழ் குத்பா , மிம்பர் ல ரெண்டு அரபி குத்பா .... இன்னும் நிறைய ... இவர் செய்வது எல்லாம் பித் அத் ஆகா தெரிய வில்லையா ???

ஆக மொத்தம் ,

வேலியே பயிரை மேயலாம்ம்மா !!!!!!! //

80 சதவீதம் தாண்டிய ஒருவர் இன்னும் 20 சதவீதம் தாண்டுவது பெரிய காரியம் அல்ல. இணை வைப்பிலிருந்து தவிர்ந்து கொண்டுள்ளார். சூழ்நிலை தற்போது அவரை இது போன்ற ஒன்றிரண்டு காரியங்களை செய்யச் சொன்னாலும் மக்களின் மனம் மாறும் போது நீங்கள் குறிப்பிடும் மாற்றங்கள் அவசியம் வந்து விடும். பிரார்த்திப்போம்.

இதை எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கி தனியாக பள்ளி கட்டிக் கொண்டு என்று போனோமோ அன்றே ஏகத்துவ பிரச்சாரத்துக்கு பலத்த அடி விழுந்தது. இன்று வரை எழும்ப முடியவில்லை. முன்பு மத்ஹபை ஆதரிக்கும் பள்ளிகளில் தினமும் ஏகத்துவ பிரசாரத்தை நானும் எனது நண்பர்களும் வலுக்கட்டாயமாக சொல்லி வந்தோம். தனிப் பள்ளி கண்டவுடன் அவர்களுக்கு மிக்க சந்தோஷமாகி விட்டது. ஆனால் இன்று வரை நான் இரண்டு பள்ளிகளிலும் தொழுதே வருகிறேன். இரண்டு பள்ளிகளிலும் தவ்ஹீத் முறைப்படியே தொழுது வருகிறேன்.

Unknown said...



// இமாம்களில் பல சிறந்த மேதைகள் இருந்துள்ளார்கள். நபித் தோழர்கள் நம்மை விட நபியை அருகில் இருந்து பார்த்து பாடம் பயின்றவர்கள். எனவே அவர்களை அலட்சியமாக ஒதுக்கி விட முடியாது. அவர்கள் குர்ஆன் ஹதீஸூக்கு உட்பட்டு தந்த மார்க்க தீர்ப்புகளையும் ஆய்வில் எடுத்துக் கொள்வதில் என்ன தவறு வந்து விடப் போகிறது என்பதே எனது கேள்வி!//

நீங்கள் சொல்வதை பார்த்தால் சஹாபாக்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தே இல்லையா !!! எல்லா சஹாபாகளும் ஒருமித்து கருத்து சொன்ன சட்டங்கள் ஏதும் இருக்கா ??

தயவு செய்து பீ.ஜெ எழுதிய

நபித் தோழர்களும் நமது நிலையும் புத்தகத்தை படியுங்கள் .. உங்களுக்கு கிடைக்கும் நிறைய தகவல் ...

www.onlinepj.com/books/nabithozarkalum-namathu-nilaiyum/

சஹாபாக்களை விட மற்றவர்கள் நன்கு விளங்க முடியுமா?

மார்க்கத்தைச் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் பரவலாக்கப்பட்டும் எளிதில் கிடைக்கும் வகையிலும் முழுமையாகத் திரட்டப்பட்டும் இருக்க வேண்டும்.

ஆதாரங்கள் சிதறிக் கிடந்தால், முழுமையாகத் திரட்டப் படாமல் இருந்தால், எளிதில் கிடைக்காமல் இருந்தால் ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப் படையில் தான் முடிவு செய்வார். ஆதாரம் கிடைக்காத போது சுயமாக முடிவு எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி இல்லை.

நபித் தோழர்களின் கடைசி காலத்தில் தான் குர்ஆன் முழுமைப்படுத்தப்பட்டது. ஆனாலும் அச்சிட்டு பரவலாக அனைவருக்கும் கிடைக்கும் நிலை இருக்கவில்லை.

மனனம் செய்தவர்களும், ஏடுகளில் எழுதி வைத்துக் கொண்டவர்களுமான மிகச் சில நபித் தோழர்கள் தவிர பெரும்பாலான நபித் தோழர்களுக்கு முழுக் குர்ஆனும் கிடைக்கவில்லை.

சந்தேகம் வந்தால் புரட்டிப் பார்க்கும் வகையில் ஏடுகளாகவும் அனைவரிடமும் இருக்கவில்லை.

அது போல் நபிமொழியை எடுத்துக் கொண்டால் இதற்கு அடுத்த நிலையில் தான் இருந்தது.

முழு ஹதீஸ்களையும் எழுதி வைத்த ஒரு நபித் தோழரும் இருக்கவில்லை.

முழு ஹதீஸையும் மனனம் செய்த ஒரு நபித் தோழரும் இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் பத்து சதவீதத்தை மனனம் செய்தவர்களோ எழுதி வைத்துக் கொண்டவர்களோ கூட அன்றைக்கு இருக்க வில்லை.

இந்த நிலையில் நபித் தோழர்கள் தாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அனைத்து ஹதீஸ்களையும் ஆய்வு செய்து தேடிப் பார்த்து தீர்ப்பளிக்கும் வாய்ப்பை பெறவே இல்லை. எனவே தான் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக எதை அறிந்தார்களோ அதைப் பின்பற்றினார்கள். மற்ற விஷயங்களில் தாமாக முடிவு செய்வது மட்டுமே அவர்கள் முன் இருந்த ஒரே வழி என்பதால் அதைத் தான் அவர்கள் செயல்படுத்த முடிந்தது.

ஆனால் இன்றைக்கு ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு நபரும் தமக்கென குர்ஆனை வைத் துள்ளோம்.

ஹதீஸ்கள் அனைத்தும் பாடம் வாரியாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக உள்ளன. அனைவரிடமும் அனைத்து நூல்களும் இல்லாவிட்டாலும் நூலகங் களிலும், மதரஸாக்களிலும் அவை உள்ளன.

சாப்ட்வேர்களாகவும் அனைத்தும் வந்துள்ளன.

எந்தக் கடினமான கேள்விக்கும் அரை மணி நேரம் செலவிட்டு அதற்கான ஆதாரங்களைக் கண்டு பிடிக்கும் அளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது.

இந்தக் காலத்தில் நபித் தோழர்கள் வாழ்ந்தால் நம்மை விடச் சிறப்பாக இந்த வசதியைப் பயன்படுத்தி சரியான பத்வாக்களை வழங்குவார்கள். அவர்கள் காலத் தில் நாம் இருந்தால் அவர்களிடம் ஏற்பட்ட தவறுகளை விட அதிகத் தவறு செய்பவர்களாக நாம் இருப்போம்.

இந்த நிலை ஏற்படும் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் ``எனது செய்திகளை வந்தவர்கள் வராதவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். எடுத்துச் சொல்பவரை விட யாரிடம் எடுத்துச் சொல்லப்படுகிறதோ அவர்கள் அதனை நன்கு பேணிப் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்று முன்னறிவிப்பு செய்தனர்.

புகாரி : 1741, 7074

Unknown said...



continue .....

உலகம் அழியும் வரை என்ன நடக்கும் என்பதையெல்லாம் அறிந்து வைத்துள்ள இறைவனால் தரப் பட்டதே இலாம். உலகம் அழியும் வரை தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய வகையில் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

அந்தந்த காலத்தை அடைபவர்களால் தான் அதன் சரியான பொருளை அறிந்து கொள்ள முடியும்.

எனவே இது போன்ற விஷயங்களில் நபித் தோழர்கள் புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இன்று நாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியும்.

சந்திர மண்டலத்தில் கிப்லாவை எவ்வாறு நோக்குவது? செயற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா? குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளை அன்றைக்கு அவர்களிடம் கேட்டால் இதெல்லாம் நடக்குமா என்ன? என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும்.

இன்று நாம் பல நவீன பிரச்சனைகளை நேரடியாகவே சந்திப்பதால் இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் நிச்சயம் குர்ஆனிலும், நபிவழியிலும் வாசகம் இடம் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆய்வு செய்தால் அதற்கான விடை கூறக் கூடிய ஆதாரங்களைப் பார்க்க முடிகின்றது.

ஆழ்கடலில் அலைகள் உள்ளன.

வானத்தைக் கூரையாக ஆக்கியுள்ளோம்.

மலைகளை முலைகளாக ஆக்கியுள்ளோம்.

ஃபிர்அவ்னின் உடலை நாம் பாதுகாத்து வைத்துள்ளோம்.

ஜுதி மலையில் நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக உள்ளது.

இது போல் எண்ணற்ற வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இவற்றை நாம் விளங்கியது போல நபித் தோழர்களால் விளங்க முடியாது. ஆய்வு செய்து இதற்கான விளக்கம் கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் நாம் வாழ்வதால் நமக்கு இது சாத்தியமாகிறது.

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்விடம், நிகழும் நேரம் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!!

திருக்குர்ஆன் 6:67

எனவே குர்ஆனும் நபிவழியும் மட்டுமே மார்க்க ஆதாரங்களாகும். இவ்விரண்டைத் தவிர நபித் தோழர்கள் உள்ளிட்ட எவரது சொல்லும் மார்க்க ஆதாரங்களாகாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆய்வு செய்யலாமே தாரளாமா..

Unknown said...



கடைசியா என்னுடைய விருப்பம் என்னவென்றால் ...


இணைவைப்பு,பித் அத் இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு, அளவுகோல் என்ன ?

பித் அத் செய்வது இணைவைப்பாகுமா ?

மத்ஹப் பின்பற்றினால் இணைவைப்பா ?

இவற்றுக்கு விடை கிடைத்தால் நாம் இன்னும் தெளிவாயிரலாம் !!!

Anonymous said...

Mr Sinthanai,

///எனவே குர்ஆனும் நபிவழியும் மட்டுமே மார்க்க ஆதாரங்களாகும். இவ்விரண்டைத் தவிர நபித் தோழர்கள் உள்ளிட்ட எவரது சொல்லும் மார்க்க ஆதாரங்களாகாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.///


நபி (ஸல்) அவர்களின் பாசறையில் வளர்ந்த நபித் தோழர்களின் சொல், செயல்களை நபி (ஸல்) அவர்களே புகழ்ந்தும் அங்கீகரித்துப் பேசியிருந்தாலும்கூட, நபித் தோழர்களின் கூற்றுக்கள் மார்க்க ஆதாரங்களாக ஆகாதா?

- Ismath

Anonymous said...

///சந்திர மண்டலத்தில் கிப்லாவை எவ்வாறு நோக்குவது? செயற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா? குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளை அன்றைக்கு அவர்களிடம் கேட்டால் இதெல்லாம் நடக்குமா என்ன? என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும்.///

சஹாபாக்கள், விளைச்சல் பெருகவேண்டும் என்பதற்காக தாவங்களில் மகரந்தச் சேர்க்கை செய்ததாக நாம் அறிகிறோம்.

அன்று எப்படி குடும்பக் கட்டுப்பாட்டிற்கு வழி இருந்ததோ, அந்த முறையில் குடும்பக் கட்டுப்பாட்டையும், விரும்பியவர்கள் செய்தார்கள் என்றறிகிறோம்.

///மார்க்கத்தைச் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் பரவலாக்கப்பட்டும் எளிதில் கிடைக்கும் வகையிலும் முழுமையாகத் திரட்டப்பட்டும் இருக்க வேண்டும். ஆதாரங்கள் சிதறிக் கிடந்தால், முழுமையாகத் திரட்டப் படாமல் இருந்தால், எளிதில் கிடைக்காமல் இருந்தால் ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப் படையில் தான் முடிவு செய்வார். ஆதாரம் கிடைக்காத போது சுயமாக முடிவு எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி இல்லை.///

இப்பொழுது ஆதாரங்கள் சிதறிக் கிடைப்பதும் இல்லை.

முழுமையாக திரட்டப்படாமலும் இல்லை.

ஆனாலும், ஆதாரங்கள் கிடைத்ததோ கிடைக்கவில்லையோ, சுயமாக முடிவு எடுப்பவர்கள் தற்போது அதிகம்.

///முழு ஹதீஸையும் மனனம் செய்த ஒரு நபித் தோழரும் இருக்கவில்லை.///

முழு ஹதீசையும் எந்த மனிதனுக்கு மனனம் செய்யலாம்?

- Ismath

Anonymous said...

// இமாம்களில் பல சிறந்த மேதைகள் இருந்துள்ளார்கள். நபித் தோழர்கள் நம்மை விட நபியை அருகில் இருந்து பார்த்து பாடம் பயின்றவர்கள். எனவே அவர்களை அலட்சியமாக ஒதுக்கி விட முடியாது. அவர்கள் குர்ஆன் ஹதீஸூக்கு உட்பட்டு தந்த மார்க்க தீர்ப்புகளையும் ஆய்வில் எடுத்துக் கொள்வதில் என்ன தவறு வந்து விடப் போகிறது என்பதே எனது கேள்வி!//


மிகச் சிறந்த அணுகுமுறை.

சிராஜ் said...

இங்க கடைய காலி பண்ணிட்டு..எல்லாம் டீக்கடைக்கு வாங்க... இன்னும் எவ்ளோ நாள் தான் ஓடும்???

முடியல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

அப்துல் ரஹீம் said...

அடிவங்குவதால் ஒருவன் தியாகியாக முடியாது

ரியாஸ் அஹ்மது said...

உமர் (றலி) அவர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க அல்குரான் வசனங்களையே அல்லாஹ் இறக்கியிருக்கும்போது நபித்தோழர்களை அவமரியாதை செய்வது ஏனோ?

402. 'மூன்று விஷயங்களில் இறைவன் என் கருத்துக்கேற்ப 'வஹி' அருளியுள்ளான். அவை, 'இறைத்தூதர் அவர்களே! மகாமு இப்ராஹீம் என்ற இடத்தில் தொழுமிடத்தை நாம் ஆக்கிக் கொள்ளலாமே!' என்று நான் கூறியபோது, 'மகாமு இப்ராஹீமில் நீங்கள் தொழுமிடத்தை ஆக்கிக் கொள்ளுங்கள்!" (திருக்குர்ஆன் 02:125) என்ற வசனம் அருளப்பட்டது. 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் மனைவியருடன் உரையாட வருபவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். எனவே தங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளுமாறு தங்களின் மனைவியருக்கு தாங்கள் உத்திரவிடலாமே!' என்றேன். அப்போது ஹிஜாப் (பர்தா) பற்றிய வசனம் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக நடந்தபோது நபி(ஸல்) அவர்கள் 'உங்களை விவாகரத்துச் செய்தால் உங்களை விடச் சிறந்த மனைவியரை உங்களுக்குப் பதிலாக இறைவன் அவர்களுக்கு ஆக்கிவிடுவான்' என்று கூறினேன். நான் கூறியவாறே (திருக்குர்ஆன் 66:05) வசனம் அருளப்பட்டது" என உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சிந்தனை,

இவ்வளவு தெளிவாக இருக்கும் நீங்கள்...

////இணைவைப்பு,பித் அத் இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு, அளவுகோல் என்ன ?////---அடிப்படையான இது மட்டும்... மவுலவி சம்சுதீன் காஸிமி தாக்கப்பட்டதற்கு பின்பு..(?!) தெரியாமால் இருப்பதுதான் எனக்கு ஆச்சர்யம்..!

இதில்தான் சகோ.ஷேக் தாவூத் தடுமாறுகிறார்..! ததஜவும் தடுமாறுவது இதில்தானோ என்று ஐயுறுகிறேன்..!

ஜெயலலிதாவை - கருணாநிதியை தேர்தலில்.. 'கையிலே காசு வாயிலே தோசை' என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்கள் தமக்கு செய்த பழைய பகையை எல்லாம் மறந்து ஆதரிக்கும்... அதரவு கேட்டு பிரச்சாரம் செய்யும் ஒரு ஜமாஅத்....

போயும் போயும் ஒரு மத்ஹப் இமாம்... ஒரு முஸ்லிம்... அவர் தாம் செய்யும் அதே ஏகத்துவம் பிரச்சாரம் செய்ததற்காக, ஷிர்க்கை எதிர்த்த காரணத்தால்... அவரின் உயிருக்கே ஆபத்து வரும்போது... மவுனமாக இருப்பதும்... ஆதரிக்காமல் இருப்பதும்.... சரியா..? அதைவிட கொடுமையாக, அவர் பித்அத் பின்பற்றும் மத்ஹபை எதிர்க்காதவர் என்று இந்த நேரத்தில் போய் கூப்பாடு போடுவதும்....

ஒரு முஸ்லிமுக்கு (அவர்கள் பாஷையில் தவ்ஹீதுவாதிக்கு) அழகே இல்லை..!

இதற்கு அவர்களே பலமுறை முரண்பட்டு உள்ளனர்..!

அனைத்து பித்அத் வாதிகளுடன் கூட்டு சேர்ந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை பித்அத் மதஹப் முஸ்லிம்கள் மற்றும் அரசு கெசட்டில் முஸ்லிம்கள் என்று இருக்கும் தர்ஹா வழிபாட்டு முஷ்ரிக்கள்... இவர்களுக்கான இடஒதுக்கீடு கமிஷன் காரணமாக சந்திக்க சென்றனர்..! இது அப்போது சரியானதே எப்படி..?

அனைத்து பித்அத் வாதிகளுடன் சேர்த்து பல போராட்டம் செய்தும் உள்ளனர்..! தம் மாநாடுக்கு பல பித்அத்/ஷிர்க் வாதிகளை அழைத்தும் உள்ளனர்..!

இப்போது மட்டும்... ஒரு பித்அத் எதிர்க்காத முஸ்லிம்... தவ்ஹீது விரோதியாக ஆகிவிடுவாரா..? என்னங்க இது நியாயம்..?

அவரை ஆதரித்து... அவரை தாக்கவந்த முஷ்ரிக்கீன்களை எதிர்த்து ஒரு நாலுவரி அவர்கள் தளத்தில் எழுதி இருந்தால் அவர்களின் ஈமான் எவ்வகையில் குறைந்து விடும்..!?

அத்தனை பெரும் ஒன்றாக வந்து ஷிர்க்குக்கு எதிரான தங்கள் ஆதரவை... ஏகத்துவ பிரச்சாரத்துக்கு எதிரான தங்கள் நிலைபாட்டை... ஸ்பாட்டுக்கே ஓடிவந்து தெரிவிக்க...

ததஜவின் வினோத நிலை மட்டும் என் மூளைக்கு புரியவே இல்லை..! உங்களுக்கு புரிந்து இருந்தால்... இது இஸ்லாமிய அடிப்படையில் சரி-அல்லது லாஜிக்களாக சரி- என்று பட்டால் எனக்கு அதை இங்கே நிரூபியுங்கள்..!

இப்படிக்கு---இன்றைய நிலையில் ததஜ வை விட சிறந்த இஸ்லாமிய இயக்கம் வேறு இல்லை என்று கருதுபவன்.

HBA said...

சகோ சிந்தனை

சுவனப் பிரியனின் ஹதீதை வைத்து நான் அவரிடம் கேட்ட கேள்விக்கு நீங்கள் பீ.ஜே.வின் விளக்கத்தை தருவதில் என்ன பயன். அவ்ருக்கு எப்படிதொப்பியோ அதைப் போல காசிமிக்கு மேல் துண்டு . அதிகமாக
மூடுவதில் தவறில்லை ( முகம் தவிர)

HBA.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ சகோ.சிந்தனை.....

////////பித் அத் செய்வது இணைவைப்பாகுமா ?

மத்ஹப் பின்பற்றினால் இணைவைப்பா ?

இவற்றுக்கு விடை கிடைத்தால் நாம் இன்னும் தெளிவாயிரலாம் !!!////////

இதற்கு என்னாலான உதவியை செய்கிறேன்...

உமர் ரலி அவர்கள் காலத்தில்,
பகல் முழுதும் நோன்புடன் கடின வேலை செய்து களைப்புற்ற சஹாபிகள்... இஷா முடிந்தவுடனே... (தொழ அதற்கு தடை இல்லாத காரணத்தால்இரவுத்தொழுகையை தனித்தனியாக தொழ... ) அதைக்கண்ட கலீபா அவர்கள், அவர்களுக்கு அவர்களிலிருந்து ஒரு ஓர் இமாமை தேர்ந்தெடுத்து ஜமாஅத்தாக தொழ சொல்லிவிட்டு.... "இது அழகிய பித்அத்" என்று கூறிவிட்டு வீட்டுக்கு செல்ல... ஹதீஸ் அறிவிப்பவர் கேட்பார்... நீங்கள் தொழவில்லையா என்று கலீபாவை... அப்போது அவர்கள் சொல்வார்கள்... இப்போது தூங்கி பின்னிரவில் எழுந்து பள்ளிக்கு வந்து தொழுவதே நபிவழி என்று..! புஃஹாரியில் நீங்கள் இதனை இன்னும் விரிவாக படித்து இருப்பீர்கள்..!

இந்த தொழுகைதான்... பின்னாளில் இன்று இஷாவுக்கு அடுத்து உடல் உழைப்பு இல்லாமல் ஓய்வில் இருப்போர் கூட உடனே தொழும் தராவீஹ் என்ற பித்அத் ஆகி நிற்கிறது..! (அந்த ஒன்பது /பதினொன்று / பதிமூன்று இன்று இருபத்திமூன்றாக ஆன 'ஆதாரமற்ற பித்அத்' தனிக்கதை)

சரி... இப்போது சொல்லுங்கள்.... அன்று இஷா முடிந்த வுடனே இரவுத்தொழுகை ஜமாஅத் என்ற பித்அத் ஷிர்க்கா...? அவர்களே சொல்லி இருக்கிறார்கள் பித்அத் என்று...! ஆனாலும், நீங்கள் சொல்லுங்கள்.... கலீபா உமர் ரலி அவர்களால் ஏற்படுத்தப்பட்டது ஷிர்க்கா..? !

அன்று... ஊரில் கலீபாவும் ஏனையோரும் நபிவழியை - இதுதான் நபிவழி என்று பின்பற்றும்போது... சிலர் தன் இயலாமையில் செய்வது... பித்அத் ஆகவில்லை..!

ஆனால், இன்று எவரும் அப்படி செய்யவும் இல்லை... நடு சாமத்தில் பள்ளிக்கு வந்து இரவுத்தொழுகை தொழ பள்ளி திறந்தும் இருப்பது இல்லை..! (பல தவ்ஹீது மர்கஸ் உட்பட)

மத்ஹப் பின்பற்றினாலே இணைவைப்பு என்று இப்போது திரிக்கபப்டுகிறது....!

எத்தனையோ மத்ஹப் வாதிகள்... இணைவைப்பு என்றால் என்னவென்று.. விளங்கி அதனை தவிர்த்து வந்ததை முப்பது வருடங்களுக்கு முன்னரே அறிவேன்..! அப்போதே தர்ஹாவை எதிர்த்தவர்கள் பலரை எனக்கு தெயர்யும்..!

இன்று இமாம் புஹாரி ஹதீஸா ஓகே... இமாம் முஸ்லிம் ஹதீஸா ஓகே... என்று இருப்போர்... புஹாரி மத்ஹபா..? முஸ்லிம் மத்ஹபா...?

இஸ்லாத்தின் மீது ஆர்வம கொண்ட அன்று இருந்த ஒரு கூட்டம்... இப்படித்தான் அந்த இமாம்களை பின்பற்றியது. இன்று இமாம்கள் சொன்னது சிலவை சஹீ ஹதீஸ்களுக்கு மாற்றம் என்றால் அதை விளங்கியும் மாறாதது மதஹபை பின்பற்றியோர் தவறு..! அதற்கு இமாம்கள் பொறுப்பு ஆக மாட்டார்கள்..!

அந்த இமாம்கள் நால்வருமே சொல்லிவிட்டார்கள்... "எனது பத்வா பின்னாளில் சஹீ ஹதீஸ் க்கு மாற்றம் என்றால்... நான் புரிந்த குர்ஆன் விளக்கத்துக்கு மாற்றம் என்றால்... எனது பத்வாவை பின்பற்றாமல்... சஹீ விளக்கத்துக்கு மாறிவிடுங்கள்' என்று..!

ஆகவே, மத்ஹப் ஷிர்க் ஆகாது..! ஒருவேளை... அந்த இமாம்கள்... 'எனக்கு மாற்றமாக அல்லாஹ் சொன்னாலும் சஹீ ஹதீஸ் கிடைத்தாலும்... நான் சொன்னதே சட்டம்' என்று சொல்லி இருந்தால் மட்டுமே மத்ஹப் ஷிர்க் என்றாகும்...! அதுவரை... பித்அத் என்றுதான் நம்மால் சொல்ல முடியும்..! எவ்வித ஆராய்ச்சியும் இல்லாமல்... மத்ஹப் இமாம் ஆசிரியர் சொல்வதை அப்படியே படித்து பட்டம் பெற்று... அவர் சொல்வதை அப்படியே இஸ்லாமாக எவ்வித சுய ஆராய்ச்சியும் இல்லாமல் பின்பற்றும் சாதாராண பாமர மக்கள் ஷிர்க் வாதிகள் என்று எப்படி சொல்ல முடியும்..?

இதுதான் எனது புரிதல்..! தவறு எனில் மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பின் சகோ சுவனப்பிரியன்,
இதற்கு முன்னர் சம்சுதீன் காசிமி தவ்ஹீத்வாதி என்று சொன்னீர்கள். ஆனால் அவரோ பக்கா மத்ஹப்வாதி என்று அவருடைய செயல்களே காட்டுகிறது . ஆனால் இப்போதோ என்பது பர்சன்ட் தாண்டியிருக்கிறார் என்று சொல்லுகிறீர்கள். அவர் மதஹப் சட்டங்களை தூக்கி பிடிப்பவர். அத்தகைய பல முற்போக்கான சட்டங்களின் அடிப்படையில் பத்வா கொடுக்கிற தியோபந்த் தாருல் உலூமை இன்றும் பின்பற்றுபவர். (தியோபந்த் கொடுத்த பல்வேறு முற்போக்கான பத்வாக்களின் லிஸ்ட் உங்களுக்கு தெரியுமென்று நம்புகிறேன். இம்ரானா மேட்டரை வேண்டுமானால் ஒரு சாம்பிளுக்கு நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.)

Unknown said...



சகோ இஸ்மத் அவர்களே

//நபி (ஸல்) அவர்களின் பாசறையில் வளர்ந்த நபித் தோழர்களின் சொல், செயல்களை நபி (ஸல்) அவர்களே புகழ்ந்தும் அங்கீகரித்துப் பேசியிருந்தாலும்கூட, நபித் தோழர்களின் கூற்றுக்கள் மார்க்க ஆதாரங்களாக ஆகாதா?//

மனிதனின் சொந்த கூற்றுக்கள் மார்க்க ஆதாரங்கள் ஆகாது ...

சஹாபாக்கள் என்ன .. ஒரு படி மேலே போயி நான் சொல்றேன் ..

நபியின் சொந்த கூற்றே மார்க்க ஆதாரம் ஆகாது ...

தெளிவாக படிக்கவும் ... சொந்த கூற்று ... சொந்த கூற்று ..

இறை சட்டத்தை தான் பின்பற்ற வேண்டும் ... வஹீ மட்டுமே ஆதாரம் ..
வஹீ = குர்ஆன் + ஹதீஸ்

வஹீ = குர்ஆன் + ஹதீஸ்

உங்களுக்கு என் வேண்டுகோள் .. திறந்த மனதுடன் இந்த புத்தகம் படியுங்கள் .. இன்ஷா அல்லாஹ் ... தெளிவடைவீர்கள் என்று சொல்வதை விட நேர்வழி பெறுவீர்கள் என்று சொல்வது தான் சாலச் சிறந்தது ..


தயவு செய்து பீ.ஜெ எழுதிய

நபித் தோழர்களும் நமது நிலையும் புத்தகத்தை படியுங்கள் ..

www.onlinepj.com/books/nabithozarkalum-namathu-nilaiyum/


Unknown said...

மற்றவர்களை பித்அத்-வாதிகள் என்று சொல்லும் ஜெய்னுல்ஆபிதீனும் சிஷ்யர்களும்; முதலில் TNTJவில் இருப்பது நபிவழியா அல்லது வழிகேடா என்று சொல்லவும்!

"இஸ்லாத்தில் பிரிவுகளுக்கு இடமில்லை ஏதேனும் ஒரு பிரிவில் மட்டும் இருந்தால்! அவர் வழி கேட்டில் இருக்கிறார் என்று உபதேசம் செய்துவிட்டு, தன் இயக்கத்தவர்களை மற்ற இயக்கத்தில் சேர தடை வித்திதுள்ளார் இந்த ஜெய்னுல் ஆபிதீன்.

இந்த காணொளியை பார்க்கவும்.
http://www.youtube.com/watch?v=gDUz31T2Rbw&feature=plcp

Unknown said...

மற்றவர்களை பித்அத்-வாதிகள் என்று சொல்லும் ஜெய்னுல்ஆபிதீனும் சிஷ்யர்களும்; முதலில் TNTJவில் இருப்பது நபிவழியா அல்லது வழிகேடா என்று சொல்லவும்!

"இஸ்லாத்தில் பிரிவுகளுக்கு இடமில்லை ஏதேனும் ஒரு பிரிவில் மட்டும் இருந்தால்! அவர் வழி கேட்டில் இருக்கிறார் என்று உபதேசம் செய்துவிட்டு, தன் இயக்கத்தவர்களை மற்ற இயக்கத்தில் சேர தடை வித்திதுள்ளார் இந்த ஜெய்னுல் ஆபிதீன்.

இந்த காணொளியை பார்க்கவும்.
http://www.youtube.com/watch?v=gDUz31T2Rbw&feature=plcp

Unknown said...



யாருமே பி.ஏ.ஷேக் தாவூத்க்கு பதில் சொன்னதாக தெரியவில்லையே


"கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது." (அல்குர்ஆன் 39:3)

இவர் இந்த வசனத்தை சொல்லும் போதே எனக்கு இவர் சொல்ல வருவது கொஞ்சம் என்ன நிறையவே புரிந்து விட்டது ..

இது பற்றி ஒருவரிடம் கேள்வி கேட்டேன் .. மத்ஹபை பற்றி ,

மத்கபை பின்பற்றினால் பித் அத் ஆ மற்றும் இணைவைப்பா ?

அவர் சொன்ன பதில்

மார்க்க சட்டங்களை வழங்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உண்டு என்பதில் நம்பிக்கையற்று, மனிதர்களும் சட்டம் இயற்றலாம் என்று கூறுவது அல்லாஹ்வுக்கு இணையாக அந்த மனிதனையும் ஆக்குவது தானே? ஆகவே மத்ஹப்வாதிகள் முஷ்ரிக்குகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மத்ஹப் ஏன், சஹாபாக்களை பின்பற்றலாம் என்று ஒரு கூட்டம் கிளம்பியுள்ளதே, அவர்களும் முஷ்ரிக்குகள் என்பது தான் எனது உறுதியான கருத்து..

இதை தான் பி.ஏ.ஷேக் தாவூத் சூசகமாக சொல்ல வருகிறாரோ ?

மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள் ..

Unknown said...

மற்றவர்களை பித்அத்வாதிகள் என்று சொல்லும் ஜெய்னுல்ஆபிதீனும் சிஷ்யர்களும் TNTJவில் இருப்பது வழிகேடா இல்லையா என்பதை முதலில் கூறவும்.

"இஸ்லாத்தில் பிரிவுகளுக்கு இடம் இல்லை; எவரேனும் ஒரு இயக்கத்தில் மட்டும் இருப்பாரேயானால், அது வழிகேடு" என்று உபதேசம் செய்த இந்த ஜெய்னுல்ஆபிதீன்; தன் இயக்கத்தில் இருப்பவர்களை வேறு எதிலும் சேர தடை போட்டுள்ளார்!


ஜெய்னுல் ஆபிதீனின் கூற்றுப்படி அவர் இயக்கம் ஒரு வழி கேடு இயக்கம்.

ஆதாரத்திற்கு இந்த காணொளியை பார்க்கவும்!

http://www.youtube.com/watch?v=gDUz31T2Rbw&feature=plcp

Unknown said...

மற்றவர்களை பித்அத்வாதிகள் என்று சொல்லும் ஜெய்னுல்ஆபிதீனும் சிஷ்யர்களும் TNTJவில் இருப்பது வழிகேடா இல்லையா என்பதை முதலில் கூறவும்.

"இஸ்லாத்தில் பிரிவுகளுக்கு இடம் இல்லை; எவரேனும் ஒரு இயக்கத்தில் மட்டும் இருப்பாரேயானால், அது வழிகேடு" என்று உபதேசம் செய்த இந்த ஜெய்னுல்ஆபிதீன்; தன் இயக்கத்தில் இருப்பவர்களை வேறு எதிலும் சேர தடை போட்டுள்ளார்!


ஜெய்னுல் ஆபிதீனின் கூற்றுப்படி அவர் இயக்கம் ஒரு வழி கேடு இயக்கம்.

ஆதாரத்திற்கு இந்த காணொளியை பார்க்கவும்!

http://www.youtube.com/watch?v=gDUz31T2Rbw&feature=plcp

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

*******அத்தனை பெரும் ஒன்றாக வந்து ஷிர்க்குக்கு எதிரான தங்கள் ஆதரவை... ///ஏகத்துவ பிரச்சாரத்துக்கு எதிரான தங்கள் நிலைபாட்டை...//// ஸ்பாட்டுக்கே ஓடிவந்து தெரிவிக்க...********

மன்னிக்கவும் பிழை திருத்தம்...!

^^^^^^அத்தனை பெரும் ஒன்றாக வந்து ஷிர்க்குக்கு எதிரான தங்கள் ஆதரவை... ஏகத்துவ பிரச்சாரத்துக்கு எதிரானவர்களுக்கான தங்கள் எதிர்ப்பு நிலைபாட்டை... ஸ்பாட்டுக்கே ஓடிவந்து தெரிவிக்க...^^^^^^

---என்று படிக்கவும்....!

Unknown said...

சிந்தனையின் சிந்தைக்கு;

மத்ஹப்வாதிகள் முஷ்ரிக்குகள் என்றால்,அவர்கள் அறுத்ததை எப்படி உண்கின்றீர்கள்?

முஷ்ரிக்குகள் அறுப்பதுதான் ஹராம் ஆயிற்றே!

ஜெய்னுல் ஆபிதீன் மத்ஹபில் இவையெல்லாம் ஹலாலா?

Nizam said...

சகோதரா சம்சுதீன் காசிமி மனமாற்றம் சந்தோஷம்மான விசஷம் அல்லாஹ் அவர்க்கு அருள் புரிவானகாக,

//பி.ஜேயும் இது சம்பந்தமாக கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும்.//பி.ஜே. அறிக்கை விடமாட்டர்ன்னு நினைக்கிறேன். சகோதரா காசிமி இவர் பலமுறை த.த.ஜ வையும் மற்றும் பி,ஜே.வையும் கேவலமாக விமர்ச்சித்துள்ளர். பி.ஜே. அவர்கள் அறிக்கை விட்டு சகோதரா காசிமி அவர்கள் இது எங்களுக்குள் உள்ள பிராச்சனை யாரும் தலையிடவேண்டாமுன்னு சொல்லிட்டா. வடைதான் மிஞ்சும்.

//அந்த அடிவாங்குபவர்...
என்னுடைய இயக்கத்தின் 948 கொள்கையையும் ஏற்றுக்கொண்டவர் என்றால்தான்... நான் அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்றால்..........

நாம் எதை நோக்கி போகிறோம் என்று புரியவில்லை...!//

எனக்கு புரியுது இது நல்லத்தான் இருக்கு இப்படியே 948 கூட 20 தை கூட்டினால் 968. இந்த 968யையும் தள்ளுபடி செய்தால் அண்ணன் ஷேக் ஜாமலி மற்றும் அப்புதுல் ரஹ்மன் முஸலியார் மற்றும் மீர்சாகுலாம் இவர்களுடன் ஒர் ஒற்றுமை ஏற்படும். பிறகு 948யுடன் 200யை கூட்டினால் 1148. இந்த 1148யையும் தள்ளுபடி செய்தால் அத்வானி, ராமகோபலன், இல கணேஷன் இவர்களுடன் ஒற்றுமை ஏற்படும். அடுத்த தள்ளுபடி லிஸ்ட் மோடியும் வருவார். அப்புறம் எதுக்கு கொள்கை கத்திரிக்கள்ளெல்லாம்.

Unknown said...

சமரசம் இல்லாத சத்தியக் கொள்கை ...

அசத்தியத்தால் வரும் ஒற்றுமை தேவையே இல்லை ...

... இஸ்லாம் என்பது முழுமையடைந்து விட்டது ...

************************************

முகமத் ஆஷிக் அவர்கள் கருத்தை உற்று நோக்குகிறேன்

நீங்கள் வைக்கும் இரவு தொழுகை வாதமும் தவறானது ...

*******************************************

.... உகண்டா சகோதரன் ... உங்களுக்கு அப்புறம் பதில் சொல்லுறேன் ..

இப்பிடியே கேப்புல கெடா வேட்டுனா எப்புடி .. எத்தனை பேருக்கு தான் பதில் சொல்ரியது ..

நேரம் கிடைக்கும் போது ...........

இன்ஷா அல்லாஹ் .....

M. அப்துர் ரஹ்மான் said...

தர்கா வழிப்பாட்டை எதிர்த்தால் சம்சுதீன் காசிமி தவ்ஹீத்வாதியா..?

Nizam said...

முஸ்லீம் சகோதரன் said...

//மற்றவர்களை பித்அத்வாதிகள் என்று சொல்லும் ஜெய்னுல்ஆபிதீனும் சிஷ்யர்களும் TNTJவில் இருப்பது வழிகேடா இல்லையா என்பதை முதலில் கூறவும்.// இஸ்லாத்துக்கு மாற்றமாக TNTJ செயல் பட்டால் அதன் பிறகு இருப்பது வழிகேடு

Unknown said...

....சிந்தனை
இப்பிடியே கேப்புல கெடா வேட்டுனா எப்புடி .. எத்தனை பேருக்கு தான் பதில் சொல்ரியது .....

நீங்கதான் மதஹபுவாதிகள் எல்லாரையும் முஷ்ரிக்குகள்-இணைவைப்பாளர்கள் ன்னு சொல்லிடீக. (எல்லாரும் ஒங்கள கேள்வி கேட்க மாட்டாங்களா??.) நீங்க சொன்னால் அப்டியே ஏத்துக்ரத்துக்கு நீங்க ஜெய்னுல்ஆபிதீனும் இல்ல, நான் அண்ணனோட சிஷ்யனும் இல்ல)

இருந்தாலும் ஒரு சந்தேகம், மத்ஹபு வாதிங்க எல்லாரும் முஷ்ரிக்கு ஆயிட்டா !....

நான் எங்க கறி வாங்குறது ???

என்ன மாதிரி வெளிநாட்டுல இருக்கறவங்க தான் ரொம்ப பாவம். ஏன்னா கறி பெரும்பாலும் இந்தியாவுல அல்லது பாகிஸ்தான்ல இருந்து தான் வருது!

ஹலால் சான்றுல, அவுக மதஹபா இல்லையான்னு இருக்காது! :(

நான் கறி வாங்கி சமைக்க வேணாமா?? சீக்கிரமா சொல்லுங்க!

Unknown said...

நிஜாம் said.....

இஸ்லாத்துக்கு மாற்றமாக TNTJ செயல் பட்டால் அதன் பிறகு இருப்பது வழிகேடு.....

அந்த வீடியோ லிங்க நீங்க பார்க்கலையா? அதுல ஜெய்னுல் ஆபிதீன் தான சொல்றார்! "எல்லா இயக்கத்திலும் இருக்கவேண்டும், ஒரு இயக்கத்தில் மட்டும் இருந்தால். அது வழிகேடுன்னு!"

TNTJ பைலாவுல அவர்தான சட்டம் போட்டு இருக்கார்! "TNTJவில் இருப்பவர்கள் வேறு எந்த ஒரு இயக்கத்திலும் இருக்க கூடாது" .

அப்போ அவரோட பத்வா படி அதில் இருப்பவர்கள் வழிகேடர்கள் தானே?

அப்படின்னா அவர் தெரிந்தே சிஷ்யர்களை வழி கேட்டில் வச்சுருக்காரா?

Anonymous said...

Mr Sinthanai,


///மனிதனின் சொந்த கூற்றுக்கள் மார்க்க ஆதாரங்கள் ஆகாது ...சஹாபாக்கள் என்ன .. ஒரு படி மேலே போயி நான் சொல்றேன் .. நபியின் சொந்த கூற்றே மார்க்க ஆதாரம் ஆகாது ...///


நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்கள் போன்றவை அனைத்தும் வஹிக்குள் அடங்காது.

அல் குரான் என்பது வஹி.

ஹதீஸ்களில் வஹிக்குள் அடங்குபவையும் உண்டு.

islahme.com என்ற தளத்தில் போய், சுன்னாவை அணுகும் முறை என்ற பாடத்தை பாருங்கள்.


- Ismath

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சிந்தனை,

தாங்கள் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய சொல்லி இருக்கிறீர்கள். அனால், என்னால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்..!

உமர் (ரலி) அவர்கள் செய்தது உங்கள் கூற்றுப்படி ஷிர்க்கா... பித்அத்ஆ... நபிவழியா...?

வெறுமனே இப்படி...
///நீங்கள் வைக்கும் இரவு தொழுகை வாதமும் தவறானது ...///...என போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..! 'எப்படி தவறானது' என்று விளக்கவும்.

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு.... அப்புறமாக... //நபியின் சொந்த கூற்றே மார்க்க ஆதாரம் ஆகாது ...//---இதுபோன்ற குழப்பங்களை தூவலாமே..?!?

உங்களுக்கு எப்படி தெரியும்... ஹதீஸில் நபி ஸல்.. அவர்கள் சொன்னதில் எது எது மார்க்க கருத்து... எது எது சொந்த கூற்று என்று..?

நபி ஸல் அவர்களே.. 'இது மார்க்க கருத்து பின்பற்றுங்கள்'... 'இது எனது சொந்த கருத்து பின்பற்ற தேவை இல்லை' என்று சொன்னால் மட்டுமே நம்மால் அப்படி நம்மால் இயலும்..! சொந்த கருத்து என்று கூறாத எல்லாமே நம்மை பொறுத்த மட்டில் மார்க்கம்தான்...!

நிதானம்... சகோ.சிந்தனை..! நிதானம்...! ரொம்ப ஸ்பீடு வேண்டாம்..! முதலில் உங்களிடம் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலை சொல்லுங்கள்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சுவனப்பிரியன்....

ஜசாக்கல்லாஹு க்ஹைர்..! அருமையான கருத்து..!
////இதை எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கி தனியாக பள்ளி கட்டிக் கொண்டு என்று போனோமோ அன்றே ஏகத்துவ பிரச்சாரத்துக்கு பலத்த அடி விழுந்தது. இன்று வரை எழும்ப முடியவில்லை. முன்பு மத்ஹபை ஆதரிக்கும் பள்ளிகளில் தினமும் ஏகத்துவ பிரசாரத்தை நானும் எனது நண்பர்களும் வலுக்கட்டாயமாக சொல்லி வந்தோம். தனிப் பள்ளி கண்டவுடன் அவர்களுக்கு மிக்க சந்தோஷமாகி விட்டது. ஆனால் இன்று வரை நான் இரண்டு பள்ளிகளிலும் தொழுதே வருகிறேன். ///

நானும்.... இரண்டு பள்ளிகளிலும் குர்ஆன் சஹீ ஹதீஸ் ஆதாரத்தின் படியிலான இஸ்லாமிய முறைப்படியே தொழுது வருகிறேன்.... இதுதான் பராக்டிகளாக சிறந்த தாவா..! நான் இவர்கள் போன்றவர்களால்தான் மதஹப்க்கு வெளியே என்ன இருக்குது என்று எட்டிப்பார்த்தேன்..!

இன்று... நமது தூய இஸ்லாமிய பிரச்சாரம் நடைபெற்றே ஆக வேண்டிய மதஹப் பள்ளிகளில் நடைபெறாததன் காரணமாகத்தான்....

இமாம் மவுலவி சம்சுதீன் காஸிமி நமது வேலையான தவ்ஹீது பிரச்சாரத்தை கையில் எடுத்து இருக்கிறார் போலும்..! :-)))

இதை நாம் சரியான இந்த நேரத்தில் ஆதரிக்க வில்லை என்றால்... முஷ்ரிக்குகளை எதிர்க்க வில்லை என்றால் ஏகத்துவ பிரச்சாரத்துக்கு பலத்த பின்னடைவு ஏற்படும்..!

பேசாமல்.. அந்த முஸ்லியார்... பரலேவி இருவரும்... "ததஜ எங்க பக்கம்ங்க, அதனால்த்தான் அமைதியா இருக்காங்க.." (!?!) என்று அறிக்கை விட்டால்தான்... இவர்கள் வாயை திறப்பார்கள் போலும்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அல்லாஹ் நமக்கு கூறுகிறான்...


…أَن تَعْتَدُواْ وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ

...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்..! திருக்குர்ஆன். 5:2

சகோ.மவுலவி சம்சுதீன் காசிமியை பாவத்திலும் வரம்பு மீறலிலுமா நாம் உதவிக்கொள்ள சொல்கிறோம்...? அவரிடம் இவ்விஷயத்தில் நன்மையையும் இறையச்சமும் இல்லையா...???

ஏதோ... புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி..! இதற்கு மேலே கூற ஒன்றும் இல்லை..!

மா ஸலாமா...!

Unknown said...

//
~முஹம்மத் ஆஷிக் citizen of world~

உமர் (ரலி) அவர்கள் செய்தது உங்கள் கூற்றுப்படி ஷிர்க்கா... பித்அத்ஆ... நபிவழியா...?

வெறுமனே இப்படி...
///நீங்கள் வைக்கும் இரவு தொழுகை வாதமும் தவறானது ...///...என போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..! 'எப்படி தவறானது' என்று விளக்கவும்.

//

நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் .. நீங்கள் வைத்த வாதம் எப்படி தவறானது என்று ? இரவு தொழுகை நேரம் பற்றி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுதது முதல் பஜ்ரு வரை பதினோரு ரக்அத் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1216
இரவுத் தொழுகையை இஷாவிலிருந்து சுபுஹ் வரை தொழலாம் என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.


நாங்கள் ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: நஸயீ 1588
இதே கருத்து அபூதாவூத் 1167, இப்னுமாஜா 1317, அஹ்மத் 20450 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரவில் தொழ ஆரம்பித்து, ஸஹர் கடைசி வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தான் தொழுதுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

ரமளான் மாதத்தில் இஷா முதல் சுப்ஹ் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகை தான் தொழுதுள்ளனர் என்று மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் ஒன்றே இவர்களின் நம்பிக்கை தவறு என்பதற்குப் போதுமான சான்று.
இரவுத் தொழுகையை இரவு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் தொழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.

எனது சிறிய தாயாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்கள் வீட்டில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருக்கும் என்பதைக் காண்பதற்காக அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுப் பின்னர் உறங்கினார்கள். இரவின் கடைசி மூன்றாம் பகுதி ஆனதும் எழுந்து அமர்ந்தார்கள். வானத்தைப் பார்த்து வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன (3:190) என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து உளூச் செய்தார்கள். பல் துலக்கினார்கள். பின்னர் பதினொரு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் பிலால் (சுப்ஹ்) தொழுகைக்கு பாங்கு சொன்னார். இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுப் புறப்பட்டு மக்களுக்கு சுபுஹ் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 7452

Unknown said...

continue...

எனது சிறிய தாயாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்கள் வீட்டில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருக்கும் என்பதைக் காண்பதற்காக அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுப் பின்னர் உறங்கினார்கள். இரவின் கடைசி மூன்றாம் பகுதி ஆனதும் எழுந்து அமர்ந்தார்கள். வானத்தைப் பார்த்து வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன (3:190) என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து உளூச் செய்தார்கள். பல் துலக்கினார்கள். பின்னர் பதினொரு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் பிலால் (சுப்ஹ்) தொழுகைக்கு பாங்கு சொன்னார். இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுப் புறப்பட்டு மக்களுக்கு சுபுஹ் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 7452

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 376

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 183

முஹம்மது ஆஷிக் இப்போ சொல்லுங்க ...

நீங்கள் வைக்கும் கேள்வியே தவறா இருக்கும் போது பதில் எப்படி சொல்வது ...

சிந்தனை " பேசும் முன் யோசிப்பவன் "

அப்புறம் ....

தௌஹீத் டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் [குரானுக்கு முரண்படாத ஹதீஸ் ]

//போயும் போயும் ஒரு மத்ஹப் இமாம்... ஒரு முஸ்லிம்... அவர் தாம் செய்யும் அதே ஏகத்துவம் பிரச்சாரம் செய்ததற்காக, ஷிர்க்கை எதிர்த்த காரணத்தால்... அவரின் உயிருக்கே ஆபத்து வரும்போது... மவுனமாக இருப்பதும்... ஆதரிக்காமல் இருப்பதும்.... சரியா..? அதைவிட கொடுமையாக, அவர் பித்அத் பின்பற்றும் மத்ஹபை எதிர்க்காதவர் என்று இந்த நேரத்தில் போய் கூப்பாடு போடுவதும்....

ஒரு முஸ்லிமுக்கு (அவர்கள் பாஷையில் தவ்ஹீதுவாதிக்கு) அழகே இல்லை..!

இதற்கு அவர்களே பலமுறை முரண்பட்டு உள்ளனர்..!

அனைத்து பித்அத் வாதிகளுடன் கூட்டு சேர்ந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை பித்அத் மதஹப் முஸ்லிம்கள் மற்றும் அரசு கெசட்டில் முஸ்லிம்கள் என்று இருக்கும் தர்ஹா வழிபாட்டு முஷ்ரிக்கள்... இவர்களுக்கான இடஒதுக்கீடு கமிஷன் காரணமாக சந்திக்க சென்றனர்..! இது அப்போது சரியானதே எப்படி..?

அனைத்து பித்அத் வாதிகளுடன் சேர்த்து பல போராட்டம் செய்தும் உள்ளனர்..! தம் மாநாடுக்கு பல பித்அத்/ஷிர்க் வாதிகளை அழைத்தும் உள்ளனர்..!

இப்போது மட்டும்... ஒரு பித்அத் எதிர்க்காத முஸ்லிம்... தவ்ஹீது விரோதியாக ஆகிவிடுவாரா..? என்னங்க இது நியாயம்..?

//

அவர்கள் முரண்படவில்லை ... நெக்ஸ்ட் இது தான்

Unknown said...


சுவனப்பிரியன் , முஹம்மத் ஆஷிக் அவர்களுக்கு ....

//இதை எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கி தனியாக பள்ளி கட்டிக் கொண்டு என்று போனோமோ அன்றே ஏகத்துவ பிரச்சாரத்துக்கு பலத்த அடி விழுந்தது. இன்று வரை எழும்ப முடியவில்லை.//

நீங்கள் சொல்ல வருவதை பார்த்தால் பள்ளியில் மட்டும் தான் பிரச்சாரம் செய்ய முடியும் !!!மற்ற இடங்கள் இல்லையா ஏகத்துவ பிரச்சாரம் செய்வதற்கு .... [ உதாரணம் : வீதி , தெரு ]

ஓகே .. தொவ்ஹீதுக்கு தனி பள்ளி வருவதேர்க்கு முன் ... மத்கப் பள்ளியில் எப்படி பிரசாரம் செய்தீர்கள் .. மிம்பர் படி ஏறி .. நம்மில் ஏகத்துவ முழக்கம் இட்டோர் எதனை பேர் .. பள்ளிகள் தான் எத்தனை ...>>

மத்கப் பள்ளியில் அடி வாங்கியது தான் மிச்சம் ... நீங்கள் பிரசாரம் செய்வதேர்க்கு எல்லாம் அவகாசம் தர மாட்டார்கள் ... வெற்று கூச்சல் தான் ஏற்படும் ...


// இரண்டு பள்ளிகளிலும் குர்ஆன் சஹீ ஹதீஸ் ஆதாரத்தின் படியிலான இஸ்லாமிய முறைப்படியே தொழுது வருகிறேன்.... //

மத்ஹபை ஆதரிக்கும் பள்ளிகளில் கீழ்கண்ட செயல்கள் நடக்கின்றனவா ???

இணைவைக்கும் இமாம் இருந்தால் என்ன செய்வீர்கள் ...

இணைவைக்கும் இமாமை பின்பற்றுவீர்களா ??

இணைவைப்பு காரியங்கள் நிகழும் பள்ளி [ உதாரணம் : மொவ்ளூத் ஓதுதல் [அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பண்புகளில் நபியையும் சேர்ப்பது .] சுன்னத் ஜமாஅத் பள்ளியில் மொவ்ளூத் ஓதாத எத்தனை இம்மாம் தான் உள்ளனர் ???

இப்படி நடக்கும் பள்ளியில் தொழுவீர்கலா ??

நீங்கள் ஏன் தௌஹீத் பள்ளி இருக்கும் போது இந்த மத்ஹப் பள்ளியை நாடுவது ஏன் ?

*********************************
இதற்க்கு அடுத்து தான் உகாண்ட சகோ கேட்ட கேள்வி பதில் அளிக்க முடியும்

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஸலாம்,
வழா வழா கொழா கொழா எல்லாம் தேவையில்லை சகோ. மக்கா பள்ளி இமாம் சம்சுதீன் காசிமி குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று சொல்லுகிறாரா இல்லை நான்கு பெரும் இமாம்களின் கருத்தும் மார்க்கம் என்று சொல்லுகிறாரா? நான்கு பெரும் இமாம்களின் மதஹப் சட்டங்களில் குர்ஆன் ஹதீஸ்க்கு முரண்படாத சட்டங்களே இல்லை என்று இங்கு சம்சுதீன் காசிமி அவர்களுக்காக ஆஜராகி இருக்கும் சகோக்கள் நிருபித்து விட்டால் நான் என்னுடைய கருத்தை பகிரங்கமாக வாபஸ் வாங்கி விடுகிறேன். அவர் தவ்ஹீத்வாதி என்று நானும் உரக்க கூவுகிறேன். இதை செய்வது ரொம்ப சிம்பிள் சகோஸ். செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

எனக்கு அதிகமதிகம் சிரிப்பை வரவைத்து விட்டது நிஜாம் சகோ. ஒற்றுமை கோஷத்தை ஒரு பாராவில் புரிய வைத்து விட்டீர்கள்
//எனக்கு புரியுது இது நல்லத்தான் இருக்கு இப்படியே 948 கூட 20 தை கூட்டினால் 968. இந்த 968யையும் தள்ளுபடி செய்தால் அண்ணன் ஷேக் ஜாமலி மற்றும் அப்புதுல் ரஹ்மன் முஸலியார் மற்றும் மீர்சாகுலாம் இவர்களுடன் ஒர் ஒற்றுமை ஏற்படும். பிறகு 948யுடன் 200யை கூட்டினால் 1148. இந்த 1148யையும் தள்ளுபடி செய்தால் அத்வானி, ராமகோபலன், இல கணேஷன் இவர்களுடன் ஒற்றுமை ஏற்படும். அடுத்த தள்ளுபடி லிஸ்ட் மோடியும் வருவார். அப்புறம் எதுக்கு கொள்கை கத்திரிக்கள்ளெல்லாம்.//

ஜாஹிர் ஹுஸைன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ சம்சுதீன் காசிமி தர்கா இணைவைப்பு பற்றி பேசி இருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ் .
ஆனால் அவர் செய்யும் கூட்டு துவா போன்ற பித் அத் களை பற்றி இன்னும் பேச ஆரம்பிக்க வில்லை .இந்த வீடியோ வில் சத்திய சகாபாக்கள் ரசூலுல்லாஹ் வின் அருகில் இருந்து நேரடியாக மார்க்கத்தை விளங்கியவர்கள் அவர்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்று சொல்கிறார் .இதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா ?
ஆக மார்க்கத்தில் ஒரே ஒரு கொள்கையை மட்டும் சொல்லி விட்டு மற்றவற்றை பற்றி வேறு கொள்கையில் இருக்கிறார் .அதையும் சரி செய்யட்டும் அப்போது தாராளமாக அவரை ஆதரிக்கலாம்
அதுவரை அவரை முழுதுமாக ஆதாரிக்க எப்படி முடியும் .
அனைத்து பித் அத் களும் வழிகேடு .வழிகேடு நரகில் சேர்க்கும் என்று நமக்கு தெரியும் .

Nizam said...

//முஸ்லீம் சகோதரன் said...// //உகாண்டா தோழன் said...// நீங்கள் இருவரும் ஒர் நபர் என்று தெரிகிறாது.

நீங்கள் கொடுத்த 4 நிமிடா விடியோ தலைப்பி "தடம் மாறிய P.J" என்ற தலைப்பு 15 வருஷத்திற்கு முன்னால் உள்ளது போல் தெரிகிறாது. முன்னும் பின்னும் மொட்டையாக உள்ளது. குறிப்பு அதில் தொப்பி இல்லாம் இருக்கிறார் அதற்கும் நாம் சகோதரார்கள் பீ.ஜே. தொப்பி இல்லம்மல் இருக்கின்றார் இதே Linkகை தந்தாலும் தரலாம்.


உகாண்டா தோழன் said...

//அந்த வீடியோ லிங்க நீங்க பார்க்கலையா? அதுல ஜெய்னுல் ஆபிதீன் தான சொல்றார்! "எல்லா இயக்கத்திலும் இருக்கவேண்டும், ஒரு இயக்கத்தில் மட்டும் இருந்தால். அது வழிகேடுன்னு!"// அந்த விடியோ TNTJ இல்லதா போது எடுத்தது. எதற்கும் நிங்கள் இந்த விடியோவை பார்ருங்கள்
http://www.youtube.com/watch?v=oaMV45FkYPs&feature=relmfu
பி.ஜே, TNTJவையம் வழிகேடு. கெடுகெட்ட ஜமாத் என்று சொல்லுகிறார். (3.00 to 3.17) எதில் உன்மையுள்ளதோ நிங்கள் விளங்கிகொள்ளுங்கள்.

//TNTJ பைலாவுல அவர்தான சட்டம் போட்டு இருக்கார்! "TNTJவில் இருப்பவர்கள் வேறு எந்த ஒரு இயக்கத்திலும் இருக்க கூடாது" .// இந்த பைலா நிர்வகிகளுக்கு மட்டும் தான். நானும் அந்த பைலா நெட்டில் படித்துள்ளேன். (உ,ம்) ஒரு நபர் மமக விலும் ததஜ இது இராண்டுலும் நிர்வாகியாக இருந்தால் கந்துரிவிழா, ஆர்பட்டம், எலெக்ஷ்ன் வந்தால் இந்த நிர்வாகி எதை ஆதாரிப்பார். பிறகு நீங்கள் அதற்கும் ஒரு Link தருவீகள் TNTJ நிர்வாகி இந்த இயக்கத்திலும் இருக்கிறார் அந்த இயக்கத்திலும் இருக்கிறார் என்று.

நான் TNTJ அனுதாபியாக தான் இருக்கிறேன். எல்லா சுன்னத் ஜமாத் பள்ளிகளுக்கும் மற்றும் எல்லா கல்யானத்திற்து செல்கிறேன். எனக்கு இது பொருந்தாது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

கழுவுற மீனில் நழுவுற மீன்.... இப்போது பார்க்கிறேன்..!

சகோ.சிந்தனை " பேசும் முன் யோசிப்பவன் " சிந்தனை........ என்ன ஒரு ஜம்பம்...!

செமை தமாஷ்....

ர்ர்ர்ர்ர்ரொம்ப நல்லல்ல்ல்ல்ல்ல்லவே யோசிச்சி யோசிச்சி.... எல்லா ஹதீஸையும் போட்டுட்டு....

ஆனா...... ரமலானில்... இரவுதொழுகை இமாம் ஜமாஅத்தாக தொழவைக்க எந்த நேரத்தில் நபி ஸல்.... அவர்கள் பள்ளிவாசல் வந்தார்கள் என்ற அந்த ஒரே ஒரு லேட்டஸ்ட் நபி அவர்களின் கடைசி ரமலானின் ஹதீஸை மட்டும் மிக மிக லாவகமாக தவிர்த்து உள்ளீர்களே சகோ... அது எப்படி சகோ...? தில்லாலங்கிடி சகோ..!

நான் கேட்டது என்ன....?

நீங்கள் சொன்னது என்ன....?

ரமலானில் பள்ளிவாசலில் இறைவுத்தொழுகை ஜமாஅத் பற்றி நான் கேட்டால்...

நீங்களோ....

முட்டி மோதி நானே ஏற்கனவே... ஆமோதித்த...பஜ்ர் வரை... ///இஷா முடிந்தவுடனே... (தொழ அதற்கு தடை இல்லாத காரணத்தால் இரவுத்தொழுகையை தனித்தனியாக தொழ... ) /// என்று சொன்னதில் எனக்கு மீண்டும் விளக்க பாடம் நடத்துகிறீர்கள்..!

நான் கேட்டது.... இறைவுத்தொழுகைக்கான ஜமாஅத் தொழுகையை இஷா முடிந்த வுடனே... பள்ளிவாசலில்.... தொழ ஆரம்பிக்கும் நேரம் பற்றி...!

எனக்கு உங்கள் அறிவை எல்லாம் திரட்டி....

உமர் ரலி அவர்கள் பள்ளிவாசலில் ரமலானின் இரவுத்தொழுகையை ஆரம்பித்து வைத்த நேரமும்....

நபி ஸல்.. அவர்கள் பள்ளிவாசலில் ரமலானின் இரவுத்தொழுகையை ஆரம்பித்து வைத்த நேரமும்

...ஒன்றுதான் என்று ஆதாரம் காட்ட வேண்டும்..!

ஆதாரம் இல்லை எனில்...

இரண்டும் வெவ்வேறு நேரம் எனில்....

எனக்கு சொல்லுங்கள்...

உமர் ரலி அவர்கள் செய்தது...

ஷிர்க்கா...

பித்அத் ஆ....

நபிவழியா...?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.ஷேக் தாவூத்,

///எனக்கு அதிகமதிகம் சிரிப்பை வரவைத்து விட்டது நிஜாம் சகோ. ///---எனக்கு சிரிப்பு வரவில்லை.... இப்படி முஸ்லிம் யாரு... முஷ்ரிக் யாரு.. முஸ்லிம் அல்லாதவர்கள் யாரு என்று எதுவுமே தெரியாமல்...
இருக்கிறார்களே... என்று....

////நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!///---என்று அல்லாஹ் சொல்லும்போது.... அங்கே நன்மையையும் இல்லை... இறையச்சமும் இல்லை என்றால்... அந்த "ஒற்றுமை உதாரணத்தில்" மேப்படியான்கள் எப்படி வருவார்கள்...!

இப்படி அரைகுறையாக குர்ஆன் ஆயத்தை புரிந்தால்...

உங்கள் தவ்கீது ஜமாஅத் கொள்கை இருக்கும்...

அதை பிரச்சாரம் செய்ய... பின்பற்ற முஸ்லிம் யாரும் இருக்க மாட்டோம்...

எல்லாரும் எதிரிகளால் கொல்லப்பட்டு செத்தே போயி இருப்போம்..!

அல்லாஹ் நமக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும்... அதைவிட எப்போது எதில் ஒன்று பட வேண்டும்... எப்போது கொள்கை அளவில் பிரிந்து நிற்க வேண்டும்... என்ற புரிதலையாவது உடனே கொடுக்கட்டும்... என்று துவா செய்கிறேன்..!

உதாரணமாக...

நான் மோடியை விமர்சித்து எழுதியதால்... பிரச்சினை...
என் வீட்டை சுற்றி ஆர் எஸ் எஸ் ரவுடிகள்....... என்னை தாக்க வந்து இருக்கிறார்கள்..!

விஷயம் கேள்விப்பட்ட எதிர்த்த வீட்டு ததமுக காரன்... பக்கத்து வீட்டு எஸ் டி பி ஐ காரன்... மாடி விட்டு விடியல் வெள்ளி காரன்... பின் வீட்டு ஜமாத்தே இஸ்லாமி காரன்... எதிர்வீட்டு இதஜ காரன்.. ரெண்டு வீடு தள்ளி இருக்கும் தப்லீக் ஜமாஅத் காரன்... நாலு வீடு தள்ளி உள்ள மதஹப் இமாம்... எல்லாரும் எனக்காக நான் முஸ்லிம் என்பதற்காக என்னை நமது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக உதவிக்கு ஓடோடி வருகிறார்கள்....!

இந்நிலையில்.... சகோ.ஷேக் தாவூத், நீங்கள் எனது இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் என்று வைத்துக்கொள்வோம்... நீங்கள் எனக்காக என்னை காப்பற்ற எனது உயிரை காப்பாற்ற உதவ... அட்லீஸ்ட் வேறு யாரு கிட்டேயும் ஸலாம் சொல்லாமலாவது ஓடோடி வருவீர்களா...? உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்கு உதவுவீர்களா...?

அல்லது.... இந்த முஸ்லிம் யாரு... இவன் கொள்கை என்ன... எந்த ஜமாஅத் காரன்... எந்த கொள்கையை ஆதரிப்பவன்... நமக்கும் அவன் கொள்கைக்கும் ஏதும் ஒன்றேனும் முரண்பாடு உள்ளதா... அவன் பிளாக்கில் வேறு ஏதேனும் ஓர் இயக்கத்தை ஆதரித்து எழுதி உள்ளானா... இவனை நாம் காப்பற்றலமா... காப்பற்ற போனால்... மற்ற எதிர்களுடன் ஒட்டி உரச வேண்டி வருமே... தீட்டு வருமே... நாளை தவ்ஹீது ஜமாஅத் இணைந்த இஸ்லாமிய சமூக ஒற்றுமை அப்டீன்னு போட்டோ போற்றுவங்களே... இவன் உயிரா.... நமது கொள்கையா...

....என்று யோசித்து கொண்டு இருப்பீர்களா....?!?!?!

கொள்கைக்காக பிரிந்து கிடைப்பதில் தப்பே இல்லை....

வாழ்வா சாவா என்றால் கூடவா... ஒன்று பட மாட்டீர்கள்...?

ததஜ விண் கொள்கை பற்றி மிக மிக சீரியஸாக நாம் சுயபரிசோதனை செய்து சிந்திக்க வேண்டிய தருணம்..!

ஜாஹிர் ஹுஸைன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
கந்துரி ,தர்கா வழிபாட்டை சகோ காசிமி கண்டித்தார் .அல்ஹம்துலில்லாஹ் .கந்துரி ,தர்கா வழிபாட்டை ஆதரிக்கும் த.மு.மு.க ஒரு பக்கம் அதற்காக வசூலும் செய்து கொண்டு இன்னொரு பக்கம் அதை கண்டித்தவருக்கும் ஆதரவு தெரிவிக்கிறது . ஆக இவர்கள் இதிலும் அரசியல் தான் செய்கிறார்கள்

Anonymous said...

ரஹ்மான்....said

சம்சுதீன் காசிமி தவ்ஹீத்வாதியா..?

சம்சுதீன் காசிமி ஒரு சகோதரரின் கேள்விக்கு பதில் அளித்த போது, வெறும் குர்ஆன் ஹதீஸை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் ஒரு வருடம் ஆனாலும் நாம் தொழுகவே போகவே முடியாது. எனவே மத்ஹபுகளைப் பின்பற்றி அவர்களின் விளக்கத்தைப் பெற வேண்டும் என்று சொல்கிறார்.
அதற்கான வீடியோ காட்சி.
http://www.youtube.com/watch?v=CYIdTmsYJ2A&feature=player_embedded

ஒளு செய்வதற்கு எங்கிருந்து தொடங்கி எங்கிருந்து முடிக்க வேண்டும் என புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள தெளிவான ஹதீஸ்.
உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், 'எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160


இதை காசிமி படித்து விட்டே வேண்டுமென்றே மறைக்கிறார் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. மதஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என அடித்துச் சொல்லும் இவர், அதே இமாம்கள் எழுதிவைத்த குடும்பவியல் சட்டங்களை ஏற்றுக்கொள்ளத்தயாரா? என பகிரங்மாக அறிவிக்கத் தயாரா?

suvanappiriyan said...

சகோ ரஹ்மான்!

//அதே இமாம்கள் எழுதிவைத்த குடும்பவியல் சட்டங்களை ஏற்றுக்கொள்ளத்தயாரா?//

நீங்கள் குறிப்பிடும் சில சட்டங்கள் இமாம்கள் தங்களின் குறிப்புகளாக சொல்லவில்லை. பின்னால் இஸ்லாமிய எதிரிகள் அந்த இமாம்களின் பெயரால் இட்டுக் கட்டிய பொய் செய்திகள். இதற்கு அவர்கள் குர்ஆனையோ ஹதீஸையோ அதாரமாக வைக்கவில்லை. தற்போது அந்த புத்தகங்கள் எல்லாம் மத்ரஸாக்களில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. நீங்கள் 1, 2, 3, 4, 5... என்று பட்டியலிட்ட சட்டங்கள் இஸ்லாமிய சட்டங்கள் என்று சம்சுதீன் காசிமி அவர்கள் கூறினால் உங்கள் வாதத்தை ஒத்துக் கொள்ளலாம். இதை எல்லாம் அவர் ஒத்துக் கொண்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியுமா?

naren said...

நண்பரே,

இதில் நடைப்பெறும் விவாதம் சம்பந்தமில்லையென்றாலும், மத்ஹபு பற்றி சம்சுதீன் காசுமி சரியான புரிதல் கொண்டுள்ளார். இக்காணொளியை பார்த்தால் அவர் தவ்வீதவாதியா எனக்கு தெரியாது ஆனால் அவர் ஒரு உண்மையான முஸ்லிம்.

http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=575%3A31-jan-10&catid=72%3Afiqh&lang=en

http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=843%3Awhy-does-islamic-laws-differ-between-various-madhabs&catid=72%3Afiqh&lang=en

Nizam said...

சகோதரா உங்களுக்கு சிரிப்பு வாரவில்லை என்றால் அது அது சூழ்நிலையை பொறுத்தாது. எனக்கும்தான் சிரிப்பு வாரவில்லை. சகோ.ஷேக் தாவூத், நினைவூட்டல் பிறகுதான் எனக்கு சிரிப்பு வந்தாது. சிரிப்பு எப்படியோ இருந்துக்கிட்டு போகட்டும்.

சகோ சம்சுதீன் காசிமி தக்க வந்தாது RSS காரர்களோ BJP காரர்களோ இல்லை. தக்க வந்தாது முன்னாடி விட்டுக்காரன் என்ன பன்ன முடியும், ஒருவேலை சகோ.ஷேக் தாவூத் தடுக்க போகிறார் என்றால் எல்லா வீட்டுக்காரனும் சகோ சம்சுதீன் காசிமி விட்டுவிடுவார்கள். பிறகு என்ன சகோ.ஷேக் தாவூத்தான்


//"ததஜ எங்க பக்கம்ங்க, அதனால்த்தான் அமைதியா இருக்காங்க.."// எனக்கு தெரிந்த வரை ததஜ இந்த பக்கம் இல்லை அந்த பக்கமும் இல்லை இந்த விசயத்தில் ததஜ எல்லோரும் முஸ்லீம்கள் என்று தான் இருக்குது. ததஜ அமைதியாக இருப்பது நல்லதுன்னு எனது கருத்து.

Nizam said...

naren said...

//இதில் நடைப்பெறும் விவாதம் சம்பந்தமில்லையென்றாலும், மத்ஹபு பற்றி சம்சுதீன் காசுமி சரியான புரிதல் கொண்டுள்ளார். இக்காணொளியை பார்த்தால் அவர் தவ்வீதவாதியா எனக்கு தெரியாது ஆனால் அவர் ஒரு உண்மையான முஸ்லிம்.//

நன்பரே உங்கள் புரிதால் சரியானது அவர் ஒர் தவ்வீதவாதியே. இங்கு விவாதம் நடைபெறுவது ததஜ அவருக்கு அதராவு என் தராவில்லை என்றுதான்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.ரஹ்மான்,

இன்றைக்கு தமிழகத்தில் ததஜ இயக்கத்தை விட சிறந்த இஸ்லாமிய இயக்கம் வேறில்லை. ஆனால் அது முழுமையான தூய இஸ்லாமிய இயக்கம் என்று சொல்ல முடியாது. அதிலும் தவறுகள் உள்ளன.

அதன் தற்போதைய தலைவர் மிக மிக சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால், அவர் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்லர்.

இந்நிலையில்...
சென்ற மாதம் பெரம்பலூரில் யாரோ ஒரு 16 வயது முஸ்லிம் பெண்ணுக்கு அவரின் திருமணத்தில் பெரம்பலூர் கலெக்டர் & காவல் துறையால் தொந்திரவு வந்தபோது... உடனே ஓடிப்போய் கலெக்டரை & காவல் துறையை "என்ன?" என்று முதலில் சென்று தட்டிக்கேட்டது ததஜ தான்'..!

இந்த மணமக்கள் தவ்ஹீதுவாதிகளா...
அவர்கள் திருமணம் தம்மால் பொதுவாக புறக்கணிக்கப்படும் சுன்னத்வாதி கல்யாணமா...
அவர்கள் தொழுகையில் பித்அத் வாதிகளா...
எந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள்...
என்றெல்லாம் ததஜ யோசிக்கவே இல்லையே..!

இப்படி பொதுமக்கள் மீது மட்டும் தனி அன்பும் பாசமும் நேசமும் அக்கறையும் கொண்ட ததஜ தம்முடைய எதிர் இயக்கங்களிடம் மட்டும் வேறு ஓர் அளவுகோள் காட்டுவது ஏன்..?

அதுவும் ஒரு முஸ்லிம்...
குத்பா மிம்பரில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்ததால்...
ஷிர்க் வாதிகளால் எதிர்க்கபப்ட்டு தாக்கப்பட்டும்...
மவுனம் காத்தால்...
இது இயக்க காழ்ப்புணர்ச்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது..!

பெரம்பலூரில் பார்க்கப்படாத இஸ்லாம் இங்கே மட்டும் எப்படி வந்தது..?

பிரச்சினையை பற்றி பேசுங்கள் சகோதர்களே... பிரச்சினையில் சம்பத்தப்படாத கிளை தகவல்கள் எல்லாம் இந்த விவாதத்தில் தேவை இல்லை...!

Nizam said...

முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//அதுவும் ஒரு முஸ்லிம்...
குத்பா மிம்பரில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்ததால்...
ஷிர்க் வாதிகளால் எதிர்க்கபப்ட்டு தாக்கப்பட்டும்...
மவுனம் காத்தால்...
இது இயக்க காழ்ப்புணர்ச்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது..!//
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதால் இருக்கும். சகோதரே இதையே நான் உங்களிடம் கேற்கிறேன் ததஜ நிர்வகிகளுக்கு யார்வது தக்கினால் யார்வது இயக்க காழ்ப்புனார்சி தள்ளிவிட்டு உதவுவரா? சொல்லப்போனல் BJP RSS VHP இவர்களை கட்டிலும் இந்த இயக்கவாதிகள் அதிமாக த.த.ஜ.வை தக்கப்பட்டுள்ளார்கள். இந்த விசஷயத்தில் ததஜ பொறுமை கடைப்பிடிப்பாது நல்லது. இதை மையமாக வைத்து தான் என் முதல் கம்மான்டில் கூறிவுள்ளேன்.

"பி.ஜே. அவர்கள் அறிக்கை விட்டு சகோதரா காசிமி அவர்கள் இது எங்களுக்குள் உள்ள பிராச்சனை யாரும் தலையிடவேண்டாமுன்னு சொல்லிட்டா"

Nizam said...

எனக்கு குரான் ஹதீஸ் ரொம்பா டிப்பா தெரியாது. இருந்தாலும் எல்லா இயக்கமெல்லாம் என்ன என்ன பணி செய்யராங்கண்னு ஒரளவுக்கு தெரியும். நட்டுல நடக்கற வைத்துத்தான் என்னுடைய கருத்து இருந்தாது. ததஜ அறிக்கைக்விட்டாலும் அல்லது PJ அறிக்கைக்விட்டாலும் எனக்கு ஒன்றுமில்லை, என்னுடைய கருத்து யாருக்கவாது கயப்படுத்திருந்தால் என்னை மன்னிக்கவும். இதோடு இந்த பதிவில் என்னுடைய கருத்தை நிறுத்திக்கொள்கிறேன். வஸ்ஸலாம்.

Anonymous said...

வாழ்த்துக்கள், முஹம்மது ஆசிக் - citizen of the world -.

"சிந்தனை" என்ற பெயரில் இருப்பவர் உளறிக் கொட்டுகிறார். அவர் உங்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கவேயில்லை. பதிலளித்துவிட்டதாக ஏதோ உளறுவதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.

- வள்ளுவன்

Unknown said...

முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//இன்றைக்கு தமிழகத்தில் ததஜ இயக்கத்தை விட சிறந்த இஸ்லாமிய இயக்கம் வேறில்லை. ஆனால் அது முழுமையான தூய இஸ்லாமிய இயக்கம் என்று சொல்ல முடியாது. அதிலும் தவறுகள் உள்ளன.
//

ததஜ எந்த விசயத்தில் தவறு இழைத்து விட்டது ... உங்களுக்கு தெரிந்ததை பட்டியலிடுங்கள் ...
சம்பந்தபட்டவர்களிடம் கேட்டு விடலாம் .. இப்படி வெருமேனே தவறு இருக்கு என்று சொன்னால் எப்படி ... எந்த விசயத்தில் தவறு இருக்கு ... லிஸ்ட் கொடுங்க ..

//அதன் தற்போதைய தலைவர் மிக மிக சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால், அவர் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்லர். //

அவர் தன்னை தவறுக்கு அப்பாற்பட்டவர் என்று அவர் சொன்னதே கிடையாது ..


தொவ்ஹீட்வாதி யார் ? முஸ்லிம் யார் ? என்பதே குழப்பமா !!!!

***************************

Unknown said...

//
ஜாகிர் said..

இந்த வீடியோ வில் சத்திய சகாபாக்கள் ரசூலுல்லாஹ் வின் அருகில் இருந்து நேரடியாக மார்க்கத்தை விளங்கியவர்கள் அவர்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்று சொல்கிறார் .

//

இவரின் சொல்லியதை பொறுத்து கருத்து சொல்கிறேன் ...

சகாபாக்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்று சொல்கிறாரே .. இது அப்பண்டமான இனைவைப்பாக உங்களுக்கு தெரியவில்லையா ...

ஹதீஸ் ... ஆதம் உடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்களே ... இதில் சகாப்பக்கள் அடங்க வில்லையா !!!!!

இறைவன் தான் தப்புக்கு அப்பாற்பட்டவன் ...

தவறே செய்யவில்லை என்றால் ஒட்டகப் போர் எப்படி வந்தது .. இதில் சகாபாகளும் இருந்தார்களே ...

Unknown said...

வள்ளுவன்

வள்ளுவன் உங்கள் குறள் களிலும் பிழை இருக்கு ....

//"சிந்தனை" என்ற பெயரில் இருப்பவர் உளறிக் கொட்டுகிறார்.
//

அப்புறம் ....

//அவர் உங்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கவேயில்லை. பதிலளித்துவிட்டதாக ஏதோ உளறுவதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.//

அவருக்கு இன்னமும் பதில் அளித்து முடிக்கவே இல்லையே .. அவர் என்ன கேட்டார் தொழுகை இமாமத் செய்யும் நேரம் பற்றி ...

இதில் எனக்கு என்னவென்றே புரியவில்லை ..

நான் கேள்வி மட்டுமே தான் கேட்டேன் ..

பித் அத் செய்வது இணைவைப்பாகுமா ?

மத்ஹப் பின்பற்றினால் இணைவைப்பா ?

கேள்வி கெட்டவனை பிடிச்சு இப்படிலாம் அவர் விளக்கிய விதம் எனக்கு புரியவில்லை ...

அடுத்து கருத்து ஒன்று நான் சொன்னேன் ...

ஏன்னா சொன்னேன்னா

மார்க்க சட்டங்களை வழங்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உண்டு என்பதில் நம்பிக்கையற்று, மனிதர்களும் சட்டம் இயற்றலாம் என்று கூறுவது அல்லாஹ்வுக்கு இணையாக அந்த மனிதனையும் ஆக்குவது தானே? ஆகவே மத்ஹப்வாதிகள் முஷ்ரிக்குகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மத்ஹப் ஏன், சஹாபாக்களை பின்பற்றலாம் என்று ஒரு கூட்டம் கிளம்பியுள்ளதே, அவர்களும் முஷ்ரிக்குகள் என்பது தான் எனது உறுதியான கருத்து..

வள்ளுவன் உங்கள் குறள் களிலும் பிழை இருக்கு ....

BACK TO PAVILION ....

எவ்வளோ சகோ கேள்வி கேற்றுகாங்க அவங்களுக்கு முடிஞ்சா பதில் சொல்லுங்க ...

Anonymous said...

@சிந்தனை,

//வள்ளுவன் உங்கள் குறள் களிலும் பிழை இருக்கு ....//

என் குறள்களில் என்ன பிழை?

அத்துடன், நீங்கள் இன்னமும் முஹம்மது ஆசிக்கின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவேயில்லை. ஏதோ உளறிவிட்டு ஓடிவிட்டாற் பதிலளித்ததாகுமா? அவர் கேட்டது ஏதோ நீங்கள் சொல்வது வேறேதோ. உமர் (ரலி) செய்தது ஷிர்க்கா, பித்அத்தா, நபிவழியா என்று அவர் கேட்கிறார். நீங்கள் அதற்குப் பதிலளிக்கவேயில்லை.

- வள்ளுவன்

suvanappiriyan said...

இந்த பதிவு சம்பந்தப்பட்ட தலைப்பில் சகோ பெரியார் தாசன் அவர்களின் 'சகோதரத்துவம்' என்ற தலைப்பில் இங்கிலாந்தில் பேசிய பேச்சையும் சற்று கேட்போம்.

http://www.youtube.com/watch?feature=endscreen&NR=1&v=trVm7gSQlec

Unknown said...

ஸலாம்

மன்னிக்கவும்... நேரம் கிடைக்காததால் பதில் அளிக்க முடியவில்லை ... ஆகவே கிடைக்கும் நேரத்தில் பதில் கொடுக்கலாம் என்று நினைக்கிறன் ..

வருகிறேன் .. இன்ஷா அல்லாஹ்

naren said...

நண்பர், சு.பி.
///
ஆனால் இன்று வரை நான் இரண்டு பள்ளிகளிலும் தொழுதே வருகிறேன். இரண்டு பள்ளிகளிலும் தவ்ஹீத் முறைப்படியே தொழுது வருகிறேன்.
////

தொழுகை முறை ஒன்றுதான் என நினைத்திருந்தேன்.
அது என்ன சுன்னத் தொழுகை முறை, தவ்வீது தொழுகை முறை. விளக்கினால் நலம். தொழுகை முறையை அல்லா சரியாக அறிவிக்கவில்லையா. அவ்வாறு தப்பாக தொழுதால் பாதி நபர் சுவனத்திற்கு செல்ல முடியாது போலிருக்குதே.

Unknown said...

Nizam said...
//நீங்கள் கொடுத்த 4 நிமிடா விடியோ தலைப்பி "தடம் மாறிய P.J" என்ற தலைப்பு 15 வருஷத்திற்கு முன்னால் உள்ளது போல் தெரிகிறாது. முன்னும் பின்னும் மொட்டையாக உள்ளது. //

நான் கொடுத்த வீடியோ ஜெய்னுல்ஆபிதீன் மற்றும் அபூ அப்துல்லா ஆகியோருக்கு இடையில் "இயக்கம்" என்ற தலைப்பில் நடந்த விவாதத்தின் இறுதிப் பகுதி.

ஏன் இந்த விவாத வீடியோவை, ஜெய்னுல் ஆபிதீன் தன் சீடர்களுக்கு காட்ட மறுக்கிறார்?? சீடர்கள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயமா? இதுவரை ஆன்லைன்பிஜே வில் இல்லை. (அவ்வாறு இருந்தால் தெரிவிக்கவும்).

இதை முழுமையாக காண http://annajaath.com/?p=5020

Unknown said...

Nizam said...
//நீங்கள் கொடுத்த 4 நிமிடா விடியோ தலைப்பி "தடம் மாறிய P.J" என்ற தலைப்பு 15 வருஷத்திற்கு முன்னால் உள்ளது போல் தெரிகிறாது. முன்னும் பின்னும் மொட்டையாக உள்ளது. //

நான் கொடுத்த வீடியோ ஜெய்னுல்ஆபிதீன் மற்றும் அபூ அப்துல்லா ஆகியோருக்கு இடையில் "இயக்கம்" என்ற தலைப்பில் நடந்த விவாதத்தின் இறுதிப் பகுதி.

ஏன் இந்த விவாத வீடியோவை, ஜெய்னுல் ஆபிதீன் தன் சீடர்களுக்கு காட்ட மறுக்கிறார்?? சீடர்கள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயமா? இதுவரை ஆன்லைன்பிஜே வில் இல்லை. (அவ்வாறு இருந்தால் தெரிவிக்கவும்).

இதை முழுமையாக காண http://annajaath.com/?p=5020

Unknown said...

Nizam Said...
//இந்த பைலா நிர்வகிகளுக்கு மட்டும் தான். நானும் அந்த பைலா நெட்டில் படித்துள்ளேன். (உ,ம்) ஒரு நபர் மமக விலும் ததஜ இது இராண்டுலும் நிர்வாகியாக இருந்தால்...////

நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய் அல்லது நீங்கள் TNTJ பைலாவை சரியாக படிக்கவில்லை.
http://www.tntj.net/head-office/bylaw

இதில் பக்கம் 13ல் உறுப்பினர் என்னும் தலைப்பில் 2வது விதியை பார்க்கவும்.
"இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர் வேறு எந்த அமைப்பிலோ அல்லது அரசியல் கட்சியிலோ இருக்க கூடாது"

நிர்வாகி என்பதற்கும் உறுப்பினர் என்பதற்கும் வித்தியாசம் இல்லையா??

இப்போது சொல்லுங்கள், நீங்கள் பொய் சொன்னீர்களா அல்லது கவன குறைவா?

suvanappiriyan said...

சகோ நரேன்!

//தொழுகை முறை ஒன்றுதான் என நினைத்திருந்தேன்.
அது என்ன சுன்னத் தொழுகை முறை, தவ்வீது தொழுகை முறை. விளக்கினால் நலம். தொழுகை முறையை அல்லா சரியாக அறிவிக்கவில்லையா. அவ்வாறு தப்பாக தொழுதால் பாதி நபர் சுவனத்திற்கு செல்ல முடியாது போலிருக்குதே. //

அனைவருக்குமே ஐந்து நேர தொழுகைதான். எண்ணிக்கையிலும் எந்த மாற்றமும் இல்லை. தொழும்போது சிலர் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்வார்கள். சிலர் வயிற்றின் அடிப் பகுதியில் கட்டிக் கொள்வார்கள். சிலர் தலையில் தொப்பி அணிந்து கொள்வார்கள். சிலர் தொப்பி அணிய மாட்டார்கள். இவை அனைத்திற்குமே ஆதாரம் உண்டு. சில ஹதீஸ்கள் பலகீனமானவையும் வருவதால் சிலர் தவ்ஹீத் முறைப்படியே தொழுவர். இருவருக்குமே தொழுவதற்கான நன்மை கிடைத்து விடும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//இருவருக்குமே தொழுவதற்கான நன்மை கிடைத்து விடும். //
என்னை எவ்வாறு தொழ கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள் என்று பெருமானார் சொல்லியிருக்க எப்படி தொழுதாலும் நன்மை கிடைக்கும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஒன்றை பெருமானார் இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று காட்டியிருக்க அதற்கு மாற்றமாக செய்துவிட்டு அப்படி மாற்றமாக செய்ததற்கும் நன்மை உண்டு என்று சொல்ல தைரியம் வேண்டும். உங்களிடம் தைரியம் இருக்கிறது சகோ. அல்லாஹ்விற்கு அஞ்சி கொள்ளுங்கள் சுவனப்பிரியன்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் இருந்தால் போதும் என்று சொன்னால் அஹ்லே குர்ஆன்களின் நிலை என்ன? அவர்கள் அல்லாஹ்விற்கு இணையாக வேறொரு படைப்பை இணை கற்பிப்பதில்லை. எனவே இவர்களின் நிலை என்ன சகோஸ்?

suvanappiriyan said...

சகோ ஷேக் தாவுத்!

//என்னை எவ்வாறு தொழ கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள் என்று பெருமானார் சொல்லியிருக்க எப்படி தொழுதாலும் நன்மை கிடைக்கும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஒன்றை பெருமானார் இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று காட்டியிருக்க அதற்கு மாற்றமாக செய்துவிட்டு அப்படி மாற்றமாக செய்ததற்கும் நன்மை உண்டு என்று சொல்ல தைரியம் வேண்டும். உங்களிடம் தைரியம் இருக்கிறது சகோ. அல்லாஹ்விற்கு அஞ்சி கொள்ளுங்கள் சுவனப்பிரியன்.//

அல்லா உள்ளங்களை பார்க்கிறான், அது போல நமது அறிவின் காரணமாக நாம் தவறாக கனகிடுவதை அவன் மன்னிக்கவும் செய்கிறான். நன்றி செலுத்துகிறானா என்பதை தான் இறைவன் பார்ப்பானேயொழிய அவன் நெஞ்சில் கை கட்டினா? இடுப்பில் கை கட்டினானா? என்ற கேள்வி அங்கு வராது. ஷிர்க் விஷயத்தில் நாம் எந்த சமனும் செய்து கொள்வதில்லை. ஹதீதுகளை விளங்கியதில் ஒரு சில தவறுகள் வந்தால் அதை அன்போடு எடுத்து சொல்வோம். இதற்காக அவரது பள்ளியில் தொழக் கூடாது என்றும் டிஎன்டிஜே பள்ளியில் தொழுதால்தான் இறைவன் ஒத்துக் கொள்வான் என்று சொல்வதும் இஸ்லாமிய வழி முறை ஆகாது. அதிகாலையில் குளிரையும் பொருட்படுத்தாது பஜ்ர் தொழுகைக்கு செல்லும் என் தாத்தா சுன்னத் ஜமாத் வழியில்தான் தொழுகிறார். அவரது தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று சொல்கிறீர்களா?

Unknown said...

சுவனப்பிரியன் , முஹம்மத் ஆஷிக் அவர்களுக்கு ....

கேள்வி கேட்டேன் ..பதிலை காணோமே ????????????

பதில் சொல்லுங்கள் ...

//இதை எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கி தனியாக பள்ளி கட்டிக் கொண்டு என்று போனோமோ அன்றே ஏகத்துவ பிரச்சாரத்துக்கு பலத்த அடி விழுந்தது. இன்று வரை எழும்ப முடியவில்லை.//

நீங்கள் சொல்ல வருவதை பார்த்தால் பள்ளியில் மட்டும் தான் பிரச்சாரம் செய்ய முடியும் !!!மற்ற இடங்கள் இல்லையா ஏகத்துவ பிரச்சாரம் செய்வதற்கு .... [ உதாரணம் : வீதி , தெரு ]

ஓகே .. தொவ்ஹீதுக்கு தனி பள்ளி வருவதேர்க்கு முன் ... மத்கப் பள்ளியில் எப்படி பிரசாரம் செய்தீர்கள் .. மிம்பர் படி ஏறி .. நம்மில் ஏகத்துவ முழக்கம் இட்டோர் எதனை பேர் .. பள்ளிகள் தான் எத்தனை ...>>

மத்கப் பள்ளியில் அடி வாங்கியது தான் மிச்சம் ... நீங்கள் பிரசாரம் செய்வதேர்க்கு எல்லாம் அவகாசம் தர மாட்டார்கள் ... வெற்று கூச்சல் தான் ஏற்படும் ...


// இரண்டு பள்ளிகளிலும் குர்ஆன் சஹீ ஹதீஸ் ஆதாரத்தின் படியிலான இஸ்லாமிய முறைப்படியே தொழுது வருகிறேன்.... //

மத்ஹபை ஆதரிக்கும் பள்ளிகளில் கீழ்கண்ட செயல்கள் நடக்கின்றனவா ???

இணைவைக்கும் இமாம் இருந்தால் என்ன செய்வீர்கள் ...

இணைவைக்கும் இமாமை பின்பற்றுவீர்களா ??

இணைவைப்பு காரியங்கள் நிகழும் பள்ளி [ உதாரணம் : மொவ்ளூத் ஓதுதல் [அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பண்புகளில் நபியையும் சேர்ப்பது .] சுன்னத் ஜமாஅத் பள்ளியில் மொவ்ளூத் ஓதாத எத்தனை இம்மாம் தான் உள்ளனர் ???

இப்படி நடக்கும் பள்ளியில் தொழுவீர்கலா ??

நீங்கள் ஏன் தௌஹீத் பள்ளி இருக்கும் போது இந்த மத்ஹப் பள்ளியை நாடுவது ஏன் ?

*********************************

பி.ஏ.ஷேக் தாவூத் said...

இந்த தூதர் உங்களுக்கு ஒவ்வொன்றையும் கற்று தருவதற்காக வந்திருக்கிறார் என்று தான் பெருமானாரை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். எனவே மார்க்கத்தில் பெருமானார் கற்று தந்த வழிமுறையில் செய்தால் தான் பலனை நாம் எதிர்பார்க்க முடியும். நான் சொல்லாத அமல்களை யார் செய்தாலும் அது தூர வீசப்படும் என்ற பெருமானாரின் அறிவிப்பை நாமெல்லாம் அடிக்கடி படித்திருக்கிறோம். ஒரு ஹதீஸை படித்து தவறாக பொருள் கொண்டு செய்தால் நன்மை கிடைக்கும் தான். ஆனால் சரியான ஒன்றை சொல்லும் போது தவறான ஒன்று கைவிடாமல் அதை தொடர்ந்து செய்வது பெருமானாரை அவமதிப்பது போலாகும். இங்கே பெரும்பாலானவர்களுக்கு நபி வழி தொழுகை எதுவென்று சொல்லப்பட்ட போதும் தமது முன்னோர்கள் காட்டிய வழியிலேயே இருப்பேன் என்று அடம் பிடித்து தான் இருக்கிறார்கள்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒன்றை முடிவு செய்து விட்டால் அதற்கு மாற்று கருத்து சொல்ல எந்தவொரு முஹ்மினான ஆண்களுக்கோ பெண்களுக்கோ அனுமதியில்லை. எனவே தொழுகை விசயத்தில் அல்லாஹ்வின் தூதர் காட்டி தந்த வழியில் தொழுவோம். தவறாக தொழுபவர்களுக்கு எடுத்து தான் சொல்ல முடியும். அவர்கள் அவ்வாறு தொழுதாலும் நன்மை என்று அடிப்படையில்லாமல் சொல்ல வேண்டாம்.

suvanappiriyan said...

//இணைவைக்கும் இமாமை பின்பற்றுவீர்களா ??//

பள்ளியில் தொழ வைக்கும் அனைத்து இமாம்களும் இணை வைப்பில் உள்ளதாக எப்படி சொல்கிறீர்கள்? மவ்லூதில் வரும் இணை வைப்பை ஒட்டி வரும் சில வரிகளின் பொருள் உணராமலும் அதை விளங்காமலும் சிலர் ஓதலாம். இமாம்கள் அனைவரும் அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்ல.

நம் கண்ணுக்கு தெரிந்து இணை வைக்காமல் உள்ள ஒருவரை பின்பற்றி தொழுவதில் என்ன தவறு வந்து விடப் போகிறது? முன்பு பிஜேயும் இதற்கு ஆதரவாக கருத்து சொல்லியிருந்தாரே!

ஹூதைபிய்யா உடன் படிக்கையில் 'இறைத்தூதர்' என்ற வார்த்தை அழித்தால்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என்றதற்கு அதை ஏற்றுக் கொண்டு தங்கள் கைகளாலேயே 'இறைத் தூதர்' என்ற வாசகத்தை அழித்ததை பார்க்கிறோம்.

இதனால் முகமது நபி இறைத் தூதர் இல்லை என்று ஆகி விடுமா? அங்கு குழப்பம் வராமல் நமது செயல் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் சில இடங்களில் நாம் விட்டுக் கொடுப்பது பின்னால் விளையக் கூடிய நன்மையை நாடியே! இன்று மத்ஹப் பளிளகளிலேயே ஷிர்க்கான விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. பள்ளி இமாம்களும் தவ்ஹீத் முறையில் தொழுவதற்கு தடை போடுவதில்லை. மவ்லூதுக்கு வரும் கூட்டம் தற்போது வெகு சொற்பமே. ஓதுவதற்கு ஆளில்லை. இன்ஷா அல்லாஹ் முற்றிலுமாகவும் ஒழிக்கப்படும்.

//நீங்கள் பிரசாரம் செய்வதேர்க்கு எல்லாம் அவகாசம் தர மாட்டார்கள் ... வெற்று கூச்சல் தான் ஏற்படும் ...//

நான் கேள்வி கேட்டிருக்கிறேன். கால தாமதமாக வந்த நான் தனி ஜமாத்தாக சிலரோடு தொழுததை தட்டிக் கேட்ட இமாமை விளங்க வைத்தவன் நான்.

மேலும் இன்று டிஎன்டிஜே பள்ளிகளில் ஜூம்ஆ பிரசங்கம் யாருக்கு நடக்கிறது. ஊருக்கு ஒதுக்குபுறமாக டிஎன்டிஜே உறுப்பினர்களுக்கு மட்டும்தானே நடக்கிறது. ஊர் பொது மக்கள் ஜூம்ஆ உரையை கேட்க வாய்ப்பு உள்ளதா? மத்ஹப் பள்ளிகளில் முன்பு வீரியமாக நடந்த பிரசாரம் தனி பள்ளி கட்டி சென்றவுடன் மிகவும் குறைந்துள்ளதை தமிழகம் முழுக்க பரவலாக அறிந்து கொள்ளலாம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தவ்ஹீது ஜமாஅத் கார சகோஸ்...

நான் கேட்ட எந்த கேள்விக்கு இதுவரை பதில் அளித்து உள்ளீர்கள்..? சொல்லுங்கள்..!

இந்த பதிவு சம்பந்தமாக இனி ஏதாவது பேசினால் நல்லா இருக்கும்..!

முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரட்டும்..! பிறகு உங்கள் கேள்விக்கு தக்க பதில் தருகிறேன் இன்ஷாஅல்லாஹ்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தவ்ஹீத் கார சகோஸ்...

ரமலானில் இரவுத்தொழுகை... இருபத்து மூன்று ரக்கத் பித்அத்... இதில் உங்கள் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..!

"பித்அத் என்றாலே ஷிர்க்" என்று உங்களால் தற்போது விளக்கம் அளிக்கப்படுகிறது..!

இந்த அடிப்படையில் ஷிர்க் நடக்கும் பள்ளியில்... ஒரு இணைவைக்கும் இமாம் தொழவைக்கும் பள்ளியில் தொழக்கூடாது என்கிறீர்கள்..!

எனில், ரமலானில் ஒரே இமாம் ஒரே ஜாமத்துக்கு இருபது மூன்று ரக்கத் தொழவைக்கும் கஃபத்துல்லாவில் & மஸ்ஜித் நபவியில் ரமலானில் மட்டும் தொழக்கூடாதா.... அல்லது அது "இணைவைக்கும் இமாம்" தொழ வைக்கும் பள்ளி என்ற உங்கள் 'நவீன தவ்ஹீது புரிதல்' அடிப்படையில்... (?!) அது 'தவ்ஹீது பள்ளி இல்லை மத்ஹப் பள்ளி' என்ற அடிப்படையில் நாம் இனி எப்போதுமே மக்கா ஹரம் ஷரீபை நாம் நம் வாழ்வில் புறக்கணிக்க வேண்டுமா..?

ஒரு தவ்ஹீது வாதி மக்காவில் ஹஜ் செய்யலாமா..? கூடாதா...?

உங்கள் பதிலை ஆர்வமுடம் எதிர்பார்க்கிறேன்..!

Unknown said...

சகோ பி.ஏ.ஷேக் தாவூத்

ஜெய்னுல்ஆபிதீனின் இரண்டு சீடர்கள் சகோ. Nijam & சகோ. சிந்தனை காணாமல் போய்விட்டார்கள்!
நீங்களாவது பதில் சொல்வீர்களா ??

பித்தத் செய்பவர்கள் மற்றும் மத்ஹப் வாதிகள் முஷ்ரிக்குகள் என்றால்! அவர்கள் அருத்ததை எப்படி சாப்பிடலாம்?

ஜெய்னுல் ஆபிதீன் கூற்றுப்படி "ஒரு இயக்கத்தில் மட்டும் அங்கம் வகித்தால் அது வழிகேடு" . அப்படி என்றால் தன் உறுப்பினர்களை மற்ற இயக்கத்தில் சேர தடுக்கும் TNTJ வழி கேடுதானே!

ஏன் அந்த விவாதத்தை ஜெய்னுல் ஆபிதீன் , தன்னுடைய இணைய தளத்தில் பகிர வில்லை?

Nizam said...

உகாண்டா தோழன் said...

//ஜெய்னுல்ஆபிதீனின் இரண்டு சீடர்கள் சகோ. Nijam & சகோ. சிந்தனை காணாமல் போய்விட்டார்கள்!// சரி, நீங்கள் நித்தியானந்த பிடாத்தில் இருந்து கேற்கின்றிர் என்று புரிகிறாது.

//பித்தத் செய்பவர்கள் மற்றும் மத்ஹப் வாதிகள் முஷ்ரிக்குகள் என்றால்! அவர்கள் அருத்ததை எப்படி சாப்பிடலாம்?// நான் இது வரைக்கும் வாயில் தான் சப்பிடுகிறேன் உகாண்டாவில் எப்படி சப்பிடுகிறார்கள் என்று எனக்கு தெரியாது.

//ஜெய்னுல் ஆபிதீன் கூற்றுப்படி "ஒரு இயக்கத்தில் மட்டும் அங்கம் வகித்தால் அது வழிகேடு". அப்படி என்றால் தன் உறுப்பினர்களை மற்ற இயக்கத்தில் சேர தடுக்கும் TNTJ வழி கேடுதானே!// இந்த கேள்வி எந்த ஹதீஸ் நிமித்தம் வழிகேடு அல்லது வழி கேடுதானே! என்பதை விளக்கிவிட்டு இந்த கேள்வி தொடரளாம்.

// ஏன் அந்த விவாதத்தை ஜெய்னுல் ஆபிதீன் , தன்னுடைய இணைய தளத்தில் பகிர வில்லை?// P.J. யிடம் சென்று கேட்கவேண்டிய கேள்வி. எனது பதில் வேண்டுமெண்றால் P.J. Pant அணிந்தால் எனக்குகென்னா Lunike அணிந்தால் எனக்குகென்னா சகோதரே.

Nizam said...

முஹம்மத் ஆஷிக் citizen of world~

//நான் கேட்ட எந்த கேள்விக்கு இதுவரை பதில் அளித்து உள்ளீர்கள்..? சொல்லுங்கள்..!

இந்த பதிவு சம்பந்தமாக இனி ஏதாவது பேசினால் நல்லா இருக்கும்..!

முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரட்டும்..! பிறகு உங்கள் கேள்விக்கு தக்க பதில் தருகிறேன் இன்ஷாஅல்லாஹ்..!//

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே. நான் உங்கள் நேரத்தை எதற்கு வீண்யாடிக்க வேண்டும் என்றுதான் ஒதுங்கிணேன். அனால் நீங்கள் பக்கம் பக்கம் பின்னுட்டாம் இடுவதால் இந்த என்னுடைய விளக்கம்.


//"பித்அத் என்றாலே ஷிர்க்" என்று உங்களால் தற்போது விளக்கம் அளிக்கப்படுகிறது..! // இந்த செண்டன்சை வைத்து உங்கள் கேள்வி அமைந்திருக்கு. இது தவறான விளக்கும் இப்படி யார் விளக்கம் தருகிறார் என்று ஆதராத்தோடு குறிப்பிடவும்.

//ஒரு தவ்ஹீது வாதி மக்காவில் ஹஜ் செய்யலாமா..? கூடாதா...?

உங்கள் பதிலை ஆர்வமுடம் எதிர்பார்க்கிறேன்..!// தொப்பி போடதவார், கூட்டு துஆவில் பங்கு பெறதாவார், மாதகபை பின்பற்றதவார், விரலை ஆட்டுகிறாவர் இது போன்று விளம்பார பலகை மெக்கா பள்ளிவாசல் முன்னிலையில் இது வரைக்கும் இல்லை என்று நினைக்குறேன். அப்படி ஒன்று வந்தால் மறுபடியும் இந்த கேள்வியை கேலுங்கள். இன்ஷா அல்லாஹ் பதில் தருகிறோம்.

Unknown said...

நிஜாம் அவர்களுக்கு

காமெடி பதில் வேண்டாமே !!!!

உகாண்ட தொடர்பில் இருங்கள் .. பதிலளிப்போம் ... இன்ஷா அல்லாஹ்

Nizam said...

சகோதரு சிந்தனை

//காமெடி பதில் வேண்டாமே !!!!//

நீங்கள் என்ன தான் பதில் கொடுத்தலும் செவுடன் காதில் சங்கு ஊதினது போல் தான். HBA/முஸ்லீம் சகோதரன்/உகாண்டா தோழன்/ என்னை பொறுத்தவரை
துங்குபவரை தான் எழுப்ப முடியும் முழிச்சிக்கிட்டு தூங்குவதுப் போல் பாசாங்கு காட்டுரவங்களை எழுப்ப முடியாது. இன்ஷா அல்லாஹ் நீங்கள் முயற்சி செய்யுங்கள்.

Unknown said...

Nizam said...
உகாண்டா தோழன் said...
//பித்தத் செய்பவர்கள் மற்றும் மத்ஹப் வாதிகள் முஷ்ரிக்குகள் என்றால்! அவர்கள் அருத்ததை எப்படி சாப்பிடலாம்?//
நான் இது வரைக்கும் வாயில் தான் சப்பிடுகிறேன் உகாண்டாவில் எப்படி சப்பிடுகிறார்கள் என்று எனக்கு தெரியாது.///

அன்பு சகோ. நிஜாம்;

இறைவனின் மார்க்கத்தை கேலி செய்யாதீர்கள், அது சைத்தான் செய்யும் வேலை. சைத்தானின் கூட்டத்தில் ஒருவராக ஆகி விடாதீர்கள்!

உங்களுக்கு அடிப்படை இஸ்லாமிய அறிவு இருக்கும்(?) என்ற நம்பிக்கையில், நான் என்னுடைய கேள்வியை எளிமையாக கேட்டுவிட்டேன்! மன்னிக்கவும்.

இப்போது விளக்கமாகவே கேட்கிறேன்!

பித்தத் செய்பவர்கள் மற்றும் மத்ஹப் வாதிகள் அனைவரும் முஷ்ரிக்குகள் (இணைவைப்பாளர்கள்) என்று சொல்கிறீர்கள்.

அத்தகைய முஷ்ரிக்குகள் அறுக்கும் மாமிசம் ஹலாலா(அனுமதிக்கப்பட்டது) அல்லது ஹராமா(விலக்கப்பட்டது)?

அடுத்து நீங்கள் பதில் எழுதும் முன், ஒரு நினைவூட்டலுக்காக இறைவனின் திருமறையில் இருந்து ஒரு வசனம்..


16:125.(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.

ஸூரத்துந் நஹ்ல் (தேனி)

நீங்கள் இறைவனின் மீதும்,இறுதி தீர்ப்பு நாள் மீதும், அவன் வழங்கிய இந்த வேதத்தின் மீதும் உண்மையாகவே நம்பிக்கை கொண்ட வராக இருந்தால்! உங்களுக்கு இந்த ஒரு வசனமே போதுமானதாக இருக்கும், அடுத்த முறை எல்லோரிடமும் கண்ணியமாக,அழகிய முறையில் விவாதம் செய்ய..

Unknown said...

Nizam said...
// இந்த கேள்வி எந்த ஹதீஸ் நிமித்தம் வழிகேடு அல்லது வழி கேடுதானே! என்பதை விளக்கிவிட்டு இந்த கேள்வி தொடரளாம்.//

உங்கள் கேள்விக்காக பதில் நான் அனுப்பிய வீடியோ லிங்கில் முழுமையாக உள்ளது.

சத்தியத்தை அறிந்து கொள்ள அதனை பார்க்கவும்.

Unknown said...

சிந்தனை said...
//நிஜாம் அவர்களுக்கு

காமெடி பதில் வேண்டாமே !!!!

உகாண்ட தொடர்பில் இருங்கள் .. பதிலளிப்போம் ... இன்ஷா அல்லாஹ்///

அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்

Unknown said...

Nizam said...

//நீங்கள் என்ன தான் பதில் கொடுத்தலும் செவுடன் காதில் சங்கு ஊதினது போல் தான். HBA/முஸ்லீம் சகோதரன்/உகாண்டா தோழன்/ என்னை பொறுத்தவரை
துங்குபவரை தான் எழுப்ப முடியும் முழிச்சிக்கிட்டு தூங்குவதுப் போல் பாசாங்கு காட்டுரவங்களை எழுப்ப முடியாது. இன்ஷா அல்லாஹ் நீங்கள் முயற்சி செய்யுங்கள்.//

சகோ நிஜாம்,

நான் கேட்ட கேள்விக்கு எப்போது நீங்கள் பதில் சொன்னீர்கள்???

கீழே உள்ள இந்த கேள்வியையும் சேர்த்து.

Nizam Said...
//இந்த பைலா நிர்வகிகளுக்கு மட்டும் தான். நானும் அந்த பைலா நெட்டில் படித்துள்ளேன். (உ,ம்) ஒரு நபர் மமக விலும் ததஜ இது இராண்டுலும் நிர்வாகியாக இருந்தால்...////

நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய் அல்லது நீங்கள் TNTJ பைலாவை சரியாக படிக்கவில்லை.
http://www.tntj.net/head-office/bylaw

இதில் பக்கம் 13ல் உறுப்பினர் என்னும் தலைப்பில் 2வது விதியை பார்க்கவும்.
"இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர் வேறு எந்த அமைப்பிலோ அல்லது அரசியல் கட்சியிலோ இருக்க கூடாது"

நிர்வாகி என்பதற்கும் உறுப்பினர் என்பதற்கும் வித்தியாசம் இல்லையா??

இப்போது சொல்லுங்கள், நீங்கள் பொய் சொன்னீர்களா அல்லது கவன குறைவா?

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஸலாம்,
சம்சுதீன் காஷிமிக்கு வால் பிடித்த சகோஸ்கள் எல்லோரும் கண்டிப்பாக இந்த வீடியோவை முழுவதும் கேளுங்கள். அவர் மத்ஹப் குறித்து குர்ஆன் - ஹதீஸ் சட்டதிட்டங்கள் குறித்து எத்தகைய கருத்துக்களை கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மத்ஹபை நேரடியாகவே ஆதரிக்கும் சம்சுதீன் காசிமி

http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=843%3Awhy-does-islamic-laws-differ-between-various-madhabs&catid=72%3Afiqh&lang=en

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஸலாம்,
சம்சுதீன் காஷிமிக்கு வால் பிடித்த சகோஸ்கள் எல்லோரும் கண்டிப்பாக இந்த வீடியோவை முழுவதும் கேளுங்கள். அவர் மத்ஹப் குறித்து குர்ஆன் - ஹதீஸ் சட்டதிட்டங்கள் குறித்து எத்தகைய கருத்துக்களை கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மத்ஹபை நேரடியாகவே ஆதரிக்கும் சம்சுதீன் காசிமி

http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=843%3Awhy-does-islamic-laws-differ-between-various-madhabs&catid=72%3Afiqh&lang=en

நாஷித் அஹமத் said...

On Saturday, July 28, 2012, நாஷித் அஹமத் wrote:


சம்சுதீன் காசிமி தாக்கப்பட்டதற்கு தவ்ஹீத் ஜமாஅத் என கண்டனம் தெரிவிக்கவில்லை?

பதில் :

சம்சுதீன் காசிமி என்பவர் ஏகத்துவத்தை பிரசாரம் செய்பவராக இருந்து அவர் தாக்கப்பட்டிருந்தால் தான் நீங்கள் இது போன்ற கேள்விகளை கேட்பதில் நியாயம் இருக்கும். இவரே இணை வைப்பில் ஊறி திளைத்துக்கொண்டு, இன்னொரு சாரார் செய்யும் காரியத்தை விமர்சிப்பதனால் இவரை யோக்கியவான் என்று கருதி விட முடியாது. திக காரனுக்கும் சங்க பரிவாருக்கும் இடையே கூட கொள்கை ரீதியாக மோதல் வெடிக்கும், அதில் சங்க பரிவாரில் உள்ள ஒருவர் தாக்கப்பட்டு விட்டால், கடவுள் மறுப்புக்கு எதிராக இவர் பேசிய காரணத்தால் அல்லவா தாக்கப்பட்டிருக்கிறார், ஆகவே இவருக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று எவரும் எண்ண மாட்டோம், அதில் எள்ளளவும் அறிவு இல்லை. கடவுளை மறுப்பவனுக்கு எதிராக இவன் பேசியதால் மட்டுமே இவன் நியாயவான் ஆகி விட மாட்டான், கடவுளை மறுப்பது எப்படி தவறோ, அதே அளவிற்கு அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் குட்டி தெய்வங்களை வணங்குவதும் தவறு தான். இந்த தவறை செய்து விட்டு அந்த தவறை கண்டிக்கும் தார்மீக உரிமையை கூட இவர்கள் பெறவில்லை என்பது தான் இதற்கு நாம் சொல்ல வேண்டிய காரணமாக இருக்க வேண்டும்.

அதே போல, காசிமி என்பவர் தர்காவிற்கு செல்லக்கூடியவர்களை விமர்சித்து விட்ட காரணத்தால் அவரை வானளவிற்கு புகழ்ந்து தள்ளி, இவரை போல தவ்ஹீத்வாதி உண்டா? என்றெல்லாம் புகழ் மலை கொடுத்து எழுதி வருகிறது ஒரு அறிவிலி கூட்டம்.

தர்காவிற்கு செல்வது எப்படி பெரும் பாவமோ அதே போன்று மத்ஹப் தான் மார்க்க சட்டம் என்று கூறுவதும் பாவம் தான். மார்க்கத்தின் ஒரு சட்டத்தை அல்லாஹ் தந்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என்று நம்புவது தான் முழு தவ்ஹீத்வாதியின் குணம். இது அல்லாமல், மார்க்க சட்டத்தை எவன் தந்தாலும் ஏற்றுக்கொள்வேன், இமாம் பெயரை சொல்லி எந்த கிறுக்கன் எதை சொன்னாலும் அதுவும் மார்க்கம் தான் என்று சொல்லும் இவர், அந்த தர்காவிற்கு சென்று இணை வைப்பதை போன்றே இணை வைத்தவர் தான் என்பது தெள்ள தெளிவு.

இவர் மத்ஹபிற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர் என்பதை அறிய இவரது இந்த உரையை கேட்கவும்..
மத்ஹப்பு வித்தியாசங்கள்

இன்னும், மார்க்க சட்டங்கள் தெரியாது என்றால் தெரியாது என்று சொல்வது தான் ஒருவனது அழகு. பயண தொழுகை குறித்து ஒருவர் கேட்கும் கேள்விக்கு இவர் அடிக்கும் அண்ட புளுகு, ஆகாசப்புளுகுகளை இந்த உரையில் பார்க்கவும். 88-ஜம்மு கஸர்-Jammu kasar 25 12 2009

இவர் சொல்லும் பதிலுக்குரிய ஆதாரங்களை இவரால் காட்ட முடியுமா என்றால் முடியாது !!
நான் எதை வேண்டுமானாலும் சொல்வேன், ஆதாரம் எல்லாம் காட்டவே மாட்டேன், நீங்கள் அதை பின்பற்ற வேண்டும் என்கிற புது மத்ஹபை உருவாக்குபவர் தான் மேற்ப்படி காசிமி என்பவர்.

மேலும், மார்க்க பத்வாக்களை கூட இவர் பல முறை இவர் தொலைகாட்சியின் மூலம் நடத்தும் காமடி கேள்வி பதில் நிகழ்ச்சி மூலமாக
கேலி செய்து வருகிறார்.
கடந்த ரமளானின் போது இவரிடம் ஒருவர் இணை வைக்கும் இமாமை பின்பற்றலாமா என்று கேட்ட போது, அந்த கேள்வியையே கண்டித்து, மவ்லூத் ஓதினால் இணை வைப்பவர் என்று சில அறிவில்லாதவர்கள் தான் சொல்கிறார்கள், என்று மவ்லூதை கூட நியாயப்படுத்தி பேசியவர் தான் இந்த காசிமி.
மேலும் இன்னொரு கேள்வியில், மக்ரிப் தொழாமல் ஒருவர் இஷா தொழுகை ஜமாத்தில் சென்றால் முதலில் மக்ரிப் தொழ வேண்டுமா அல்லது இஷா தொழ வேண்டுமா என்று ஒருவர் கேட்ட போது, மக்ரிப் தொழுது விட்டு இஷா தொழ வேண்டும் என்று அபு ஹனீபா இமாம் சொல்கிறார்கள், ஷாபி இமாமோ, அந்த ஜமாத்தில் சேர்ந்து இஷா தொழுவது சரி தான் என்கிறார்கள், என்று பதில் சொல்லி, இறுதியில் எது மார்க்க சட்டம், எது நபியின் வழிகாட்டுதல் என்பதையே சொல்லாமல் முடித்து கொண்டார் இந்த காசிமி.

ஆக, மத்ஹபை ஆதரிப்பதையே தமது அடிப்படை கொள்கையாக கொண்ட ஒருவரை பச்சை முஷ்ரிக் என்று தான் சொல்ல முடியுமே தவிர தவ்ஹீத்வாதி என்று ஒருகாலும் சொல்ல முடியாது.

இரண்டு முஷ்ரிக்குகளுக்கிடையே சண்டை நடந்தால் யாருக்கு ஆதரவாகவும் நாம் குரல் கொடுக்க முடியாது !

ஷேக் said...

பள்ளிவாசலுக்கு ஐவேளை தொழச்செல்லாத, அதற்கு சப்பை காரணங்கள் கூறும் பிஜேவைவிட சம்சுதீன் காசிமி எவ்வகையில் குறைந்துவிட்டார் ததஜ-காரர்களே!

சஹாபாவை கிரிமினல் எனக்கூறிவிட்டு, நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என மேடைதோறும் விளக்கமளித்து நடந்த பிஜே, மீண்டும் அந்தர்பல்டியடித்து கிரிமினலை கிரிமினல் என்றுதான் கூறவேண்டும் எனவும் நான் அந்த அர்த்தத்திலேயேதான் கூறினேன் எனவும் கூறிய பிஜேவைவிட சம்சுதீன் காசிமி எவ்வகையில் குறைந்துபோய்விட்டார் ததஜ-காரர்களே!

மற்றவர்களைக் குறைகாணும் ததஜ செல்வங்கள், முதலில் தம் தலைவரை ஒழுங்காக பள்ளிவாசல் சென்று தொழக்கூறுங்களேன்.

- ஷேக், கன்னியாகுமரி

Nizam said...

ஷேக் said...
//பள்ளிவாசலுக்கு ஐவேளை தொழச்செல்லாத, அதற்கு சப்பை காரணங்கள் கூறும் பிஜேவைவிட சம்சுதீன் காசிமி எவ்வகையில் குறைந்துவிட்டார் ததஜ-காரர்களே!//
இதுகொரு விடியோ லிங்க் கொடுங்கா

//பிஜேவைவிட சம்சுதீன் காசிமி எவ்வகையில் குறைந்துபோய்விட்டார்//
ஒர் தராசு இருந்தா நிறுத்திபார்த்துங்கா

Nizam said...

//அத்தகைய முஷ்ரிக்குகள் அறுக்கும் மாமிசம் ஹலாலா(அனுமதிக்கப்பட்டது) அல்லது ஹராமா(விலக்கப்பட்டது)?// முஷ்ரிக்குகள் என்று நெத்தியில் என்ன ஓட்டிருக்குமா? இப்படித்தான் ஒவ்வொருவரையும் பார்ப்பார்களா?

//இதில் பக்கம் 13ல் உறுப்பினர் என்னும் தலைப்பில் 2வது விதியை பார்க்கவும்.
"இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர் வேறு எந்த அமைப்பிலோ அல்லது அரசியல் கட்சியிலோ இருக்க கூடாது"

நிர்வாகி என்பதற்கும் உறுப்பினர் என்பதற்கும் வித்தியாசம் இல்லையா??// அப்படியா இருந்துட்டு போகுது. ததஜ சேரும்போது இந்த விதியை நடைமுறை படித்துக்கிறேன்.

உங்கள் பழய கருத்துக்கள் அழியவில்லை நினைக்குகிறேன். இது உங்களுக்கும் பொருந்தும் நீங்க ஒருமுறை படித்துபார்க்கவும்.

16:125.(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.

ஸூரத்துந் நஹ்ல் (தேனி)

நீங்கள் இறைவனின் மீதும்,இறுதி தீர்ப்பு நாள் மீதும், அவன் வழங்கிய இந்த வேதத்தின் மீதும் உண்மையாகவே நம்பிக்கை கொண்ட வராக இருந்தால்! உங்களுக்கு இந்த ஒரு வசனமே போதுமானதாக இருக்கும், அடுத்த முறை எல்லோரிடமும் கண்ணியமாக,அழகிய முறையில் விவாதம் செய்ய..

கணியூர் அப்துல் ரஹிமான் said...

ஒரு முஸ்லிம் அவசியம் தெரிதுகொள்ளவேண்டிய விஷயங்கள்

கீழ்காணும் தளங்களுக்கு செல்லவும் :

Tamil Bayan - Thasawwuf (Tariqa) Dr.Deen Mohamed (Al Azhari) Part 1

12 Parts
http://www.youtube.com/watch?v=PHsZgsDlu-s


Islam & Tasawwuf - Part:1/10

10 Parts
http://www.youtube.com/watch?v=EIRP1AUYpJc


IKK Class 6 Mubarak 1
6 Parts
http://www.youtube.com/watch?v=XxwgetIjyfs



K A Rahiman
Coimbatore

Anonymous said...

Chapter (2) sūrat l-baqarah (The Cow)

Sahih International: And do not say about those who are killed in the way of Allah , "They are dead." Rather, they are alive, but you perceive [it] not.
Tawassul - Is it really shirk?
Please see this video and decide for youself
Go to the website:
http://www.youtube.com/watch?v=KJHKrXf7c-o

suvanappiriyan said...

சகோ ஷேக்!

ஒருவரின் மேல் எந்த குற்றத்தை சொல்வதாக இருந்தாலும் சம்பந்தபட்டவரை அணுகி அது உண்மைதானா என்று உறுதி செய்தவுடன் தான் ஒரு முடிவுக்கு வர முடியும். எனவே முதலில் பிஜேயிடம் இது சம்பந்தமாக கேட்டு நேரிடையாகவே தெளிவு பெறுங்கள்.

Anonymous said...

ரொம்ப நாள் கழிச்சு வந்துட்டம் போல நல்லதான் போய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட்டே இருக்கு பிண்ணுட்டம் இந்த விசயத்துக்கும் ஏம்பா பீஜேயே கூப்பிடுறிங்க சம்சுதீன் காசிமிய அல்லாஹ் காப்பாற்றுவான். பி.கு. ஒன்னு சொல்ல மறந்துட்டன் பதிவ விட பிண்ணுட்டம் படிக்க பயமா இருக்குப்பா.

muthuppettai.com said...

//பி.கு. ஒன்னு சொல்ல மறந்துட்டன் பதிவ விட பிண்ணுட்டம் படிக்க பயமா இருக்குப்பா.//

உண்மைதான் சகோ கலில் ரஹ்மான் அவர்களே சுவனப் பிரியன் கவணிக்கட்டும் பதிவின் உயர்ந்த நோக்கத்தை சிதைக்கும் பிண்ணுட்டங்களை புறந்தள்ளுவது நலம்

சேக் முஹம்மது said...

சகோதரர் சுவனப்பிரியன்,

என்னுடைய கீழ்கண்ட கருத்தை நீங்கள் ஏன் இன்னும் அனுமதிக்கவில்லை என்று தெரிந்துகொள்ளலாமா?

அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் சகோதரரே.

நடுநிலையைப் பேணிக்கொள்ளுங்கள். ஒருபக்கச் சார்பாக கருத்துகளை அனுமதிப்பதற்கும் நீங்கள் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லவேண்டி வரும் என்பதை நினைவில் வையுங்கள்.

சேக் முஹம்மது said...

// சுவனப் பிரியன் said...

சகோ ஷேக்!

ஒருவரின் மேல் எந்த குற்றத்தை சொல்வதாக இருந்தாலும் சம்பந்தபட்டவரை அணுகி அது உண்மைதானா என்று உறுதி செய்தவுடன் தான் ஒரு முடிவுக்கு வர முடியும். எனவே முதலில் பிஜேயிடம் இது சம்பந்தமாக கேட்டு நேரிடையாகவே தெளிவு பெறுங்கள்.//

சகோதரர் சுவனப்பிரியன்,

நான் என்னமோ அவதூறு கூறுவது போன்ற தோற்றத்தில் பதிலளித்துள்ளீர்கள். அதே சமயம் என்னுடைய கருத்துகளை வெளியிடாமல் தடுத்து வைக்கவும் செய்துள்ளீர்கள். இது இஸ்லாமிய பண்பாடா சுவனப்பிரியன்?

சகோதரர் பிஜே மீது நானாக எந்த ஒரு குற்றத்தையும் இட்டுக்கட்டவில்லை. என்னுடைய பிற கருத்துகளை அனுமதித்து, அதன்பின் விளக்கமளியுங்கள். இல்லையேல் அல்லாஹ்வுக்கு அஞ்சிகொள்ளுங்கள். நடுநிலை போன்று காட்டிக்கொண்டு, ஒரு பக்கக்கருத்துகளை அனுமதிக்காமல் தடுத்து வைப்பது முறையன்று.

நடுநிலையான கருத்துப்பரிமாற்றத்துக்கு உங்கள் ப்ளாக்கில் இடமில்லை என்றால் அதனை அறிவித்துவிடுங்கள்.

இலவசமாக கிடைக்கும் வலைப்பதிவு வசதியில் எத்தனை ப்ளாக் வேண்டுமானாலும் யாராலும் திறக்கமுடியும் என்பதை மறக்கவேண்டாம்.