Followers

Tuesday, September 18, 2012

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?


ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?

வெங்கட் நாகராஜ் தனது காசி பயண அனுபவத்தை பற்றி எழுதிய இடுகையை பார்த்தேன். மிக சாதுர்யமாக தனது பாசிச கருத்துக்களை மென்மையாக சொல்லி நஞ்சை எப்படி விதைக்கிறார் என்று பாருங்கள்.

//கி.பி. 490 ஆம் வருடம் காசி விஸ்வநாதர் ஆலயம் கட்டப்பட்டது. பதினோறாம் நூற்றாண்டில் மீண்டும் ஹரிச்சந்திர மஹாராஜா ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார். 1194 ஆம் அண்டு முகம்மது கோரி நடத்திய படையெடுப்பின் போது இந்தக் கோவிலையும், வாரணாசியில் இருந்த மற்ற கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடவே, இது மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது.

பிறகு வந்த குத்புதின் ஐபக்கால் மீண்டும் இடிக்கப்பட்டு, அவரது மறைவிற்குப் பின் பல அரசர்களால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 1351-ம் ஆண்டு ஃபீருஸ் ஷா துக்ளக் என்பவரால் மீண்டும் இடிக்கப்பட மறுபடியும் நிர்மாணிப்பதில் நீண்ட இடைவெளி. அக்பரின் ஆட்சியில் வருமானத் துறை மந்திரியாக இருந்த தோடர் மால், 1585-ம் வருடம் மீண்டும் ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார்.

1669-ஆம் வருடம் அரசாட்சி புரிந்த ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோவிலை முற்றிலும் இடிக்க ஆணையிடுகிறார். கோவில் தரைமட்டமாக்கப்பட்டு அவ்விடத்தில் கியான்வாபி மாஸ்க் என்ற மசூதி கட்டப்படுகிறது. கோவிலின் முக்கிய பூஜாரியாக இருந்தவர் சிவலிங்கத்தோடு கோவிலின் பின்பக்கம் இருந்த ஞானவாபி கிணற்றுக்குள் குதித்து விடுகிறார். இப்போதும் இந்தக் கிணறு காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கிறது. எப்போதும் சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதிரே அவரது வாகனமான ரிஷப வாகனம் இருக்கும். தற்போதைய மசூதியை நோக்கி அக்காலத்தில் இருந்த ரிஷப வாகனம் இருக்கிறது. //

எந்த அளவு அவதூறுகளை பரப்ப முடியுமோ அந்த அளவு திட்டம் போட்டு சிலர் பரப்பி வருகின்றனர். ஒரு இடத்தை சுற்றிப் பார்ப்பவர் அதன் அழகை சொல்லி விட்டு அல்லது அங்குள்ள மக்களை சொல்லி விட்டுதான் செல்வார்கள். அதை விடுத்து சர்ச்சைக்குரிய அதன் இடிப்பை வலிந்து திணித்து வெறுப்பை நாசூக்காக விதைக்கிறார். முதலில் கோவில் என்பது வழிபாட்டு தலம் மட்டும் அல்ல. அந்நாட்டின் பொன்னையும் விலையுயர்ந்த சொத்துக்களையும் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக இருந்தது. எனவே வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் முதலில் கண் வைப்பது நம் நாட்டு கோயில்களைத்தான். பல இந்து மன்னர்கள் கோவிலை கொள்ளையடித்துள்ளார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளே இதற்கு சாட்சி! ஆனால் அவற்றை எல்லாம் எழுத மாட்டார்கள்.

இந்த பதிவை எழுதியவர் முகலாயர்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் இடிப்பதும் பிறகு கட்டுவதுமாக விஸவநாதர் ஆலயத்தின் வரலாற்றை எழுதுகிறார். இடித்தது மொகலாயர் ஆட்சி. அதே ஆட்சியில் அந்த கோவில் எப்படி திரும்பவும் கட்டப்பட்டது? அதை எப்படி அரசு அனுமதிக்கும்? நம் காலத்தில் இடிக்கப்பட்ட பாபரி மசூதியை இன்று வரை கட்ட முடிகிறதா? அறிவியல் வளர்ந்த காலத்திலேயே நிலைமை இப்படி இருக்க 1000 வருடங்களுக்கு முந்தய நிலையை சொல்ல தேவையில்லை. இதுதான் யதார்த்தம்.

பொதுவாக அரசர்கள் பெரும்பான்மை மக்களை அனுசரித்து செல்லவே ஆசைப்படுவர். ஏனெனில் அவர்களுக்கு சிக்கலின்றி ஆட்சி செலுத்த வேண்டும். ராமர் கோவில் கட்டுவோம் என்று சூளுரைக்கும் பிஜேபி தான் ஆட்சியில் அமர்ந்தால் அதை திரும்பி கூட பார்க்காது. இவ்வளவுதான் இவர்களின் மதப்பற்று. ஏனெனில் அவர்களின் ஆட்சி அமைதியாக செல்ல வேண்டும். காசி விசுவநாதர் கோவிலைப் பற்றி பல்கலைக்கழக பேராசிரியர் எழுதிய ஒரு கட்டுரையை முன்பு சேமித்து வைத்திருந்தேன். அதனை தற்போது அப்படியே தருகிறேன். ஒளரங்கசீப்பின் ஆட்சியும் காசி விசுவநாதர் கோவிலின் இடிப்பின் வரலாற்றையும் சற்று நோக்குவோம்.

--------------------------------------------------------------------------


அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.

இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.

ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. ''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட
ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

முனைவர் அ. தஸ்தகீர்.(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, 'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71

இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande, Islam And Indian Culture, Page 55

-------------------------------------------

இந்து இளவரசியை மணந்த அக்பர்!

முகலாயப் பேரரசர் அக்பர் ஆஜ்மீருக்குச் சென்று திரும்புகையில் சாம்பர் (Sambhar) என்ற ஊரில் ஆம்பர் (Ambar)மன்னர் ராஜா பார்மலின் மகளை இந்து மரபுப்படி திருமணம் செய்தார். அக்பரின் முகலாய வழியும், இராஜபுத்திர வழியும் இத்திருமணத்தால் ஒன்று சேர்ந்தது.

க.வெங்கடேசன், அக்பர்,சென்னை.
1972 –Page 47,48

--------------------------------------------

ஷா பாய் என்று ஜெய்ப்பூர் ஆவணங்களில் அழைக்கப்படும் இராஜபுத்திர இளவரசியை, அக்பரை திருமணம் செய்து கொண்டதற்கு பின் மரியம்-உஸ்-ஸமானி (Mariam-uz-zamani) என்று அழைக்கப்பட்டார்.

Ashirbadilal Srivastava, Akbar The Great, volume 2, Agra, 1973, Page 59.

--------------------------------------------

இந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்!

முகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.

“Already earlier in the year 1562, Akbar had married a Rajput Princess if Jaiour, who was to become the mother of his successor Jahangir”.
Laurence Binyon, Akbar, Edinburgh, 1932, page 59.

--------------------------------------------

இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.

ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.

குலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
1998, page 461.

“Like his father Shah-jahan was the offspring of a union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had more Indian than Mughal blood in his veins.”

Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.

************************************

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!

இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?

நவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்!

ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர் ஒளரங்கஜேப்தான்.

பரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
page 545.

உதயபுரி மஹல் அல்லது பாய் உதயபுரி (Udai Puri Mahal) என்ற மனைவியும் ஒளரங்கஜேப்பிற்கு இருந்ததாகச் சொல்லப் படுகிறது. (Kam Baksh) காம்பக்ஸ்என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் இவர்தான்.

டி.எப்.ஆர். மஆலிசாஹிப், முஸ்லிம் மன்னர்களின் இந்து ராணிகள், பத்ஹூல் இஸ்லாம்.
1957, November, Chennai.


ஒளரங்கசீப் பல வரிகளை போட்டு மக்களை கொடுமைபடுத்தியதாக ஒரு கருத்தும் உண்டு. ஆட்சி நடத்த மக்களின் வரி பணம் அவசியம். அது இன்று வரை தொடர்கிறது. முன்பு மொகலாயர் ஆட்சிக்கு முன்னால் வரி எப்படி போடப்பட்டது?


கடவுளின் சொந்த பூமி என்கிறார்களே, அந்தக் கேரளத்தில் தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே! தலைக்கு வரி, மீசை வைத்தால் வரி, திருமணத்திற்கு வரி, இறந்தால் வரி, எந்தவிதச் சடங்கு செய்தாலும் வரி என்று விதித்தார்கள்.

பனை மரம் ஏறினால் வரி, கள் விற்றால் வரி, வலை வீசினால் வரி, மீன் பிடித்தால் வரி என்று பிழைக்கும் வழிகளுக்கெல்லாம் வரி. பாடுபடாமல் வாழ்ந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு வரி கிடையாது. ----வ.அரசு.
SOURCE:>> “viduthalai newspaper “ SUNDAY, MAY 12, 2007

ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த மொகலாயர்கள் நம்மை ஏவ்வாறு 1000 வருடங்கள் ஆள முடிந்தது என்பதற்கு இந்த வரிகளே சாட்சியாக உள்ளது. இதற்கு முன் இந்து ஆட்சியாளர்களை விட முஸ்லிம் ஆட்சியாளர்களின் ஆட்சி சிறப்பாக இருந்ததாலேயே அகண்ட பாரதத்தை மொகலாயர்களால் உருவாக்க முடிந்தது.

69 comments:

கோவி.கண்ணன் said...

அடுத்த பதிவு கோவையில் தொடர் குண்டு வைத்தது இஸ்லாமியரா ?

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

:)

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

அவுரங்க சீப்பு ரொம்ப நல்லவர் :-))

சீக்கியர்கள் ஏன் கல்சா என்ற அமைப்பினை உருவாக்கி அவுரங்க சீப்பினை எதிர்த்தார்கள்?

குரு தேக் பகதூர் ஏன் துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளப்பட்டார்?

காசி ஆலயத்திற்கு ஒரு கதை சொன்னீர்கள், சோம்நாத்,மதுரா கோயில், முதல் 60,000 கோயில்கள் இடிக்கப்பட்டதே ஏன்?

எல்லா கோயிலிலும் ரேப் நடந்துச்சா?

சிவாஜி ஏன் அவுரங்கசீப்பினை எதிர்க்க வேண்டும்.

சாம்பாஜியை கொன்றது யார்?

சிவாஜியின் பேரன் சாகு வீட்டுக்காவலில் தான் வைக்கப்பட்டிருந்தார் வளர்க்க அல்ல.

அவுரங்க சீப்பு சாகும் வரையில் மராத்தாவுடன் சண்டையிட்டுக்கொண்டு ,வெற்றி பெறாமலே இறந்தார். என்பதே வரலாறு.

அவுரங்க சீப் இறந்ததும் ஏன் உடனே மொகலாய அரசு வீழ்ச்சியடைந்தது, மக்களும், மற்ற சிற்றரசர்களும் எப்போதும் தனியாக இயங்க காத்திருந்ததே காரணம்.

அவுரங்க சீப் ஒரு சூஃபி இஸ்லாமியர், நீங்க அவரை நல்லவர்னு சொன்னா வகாபி மார்க்க பந்து கோச்சுக்க போறாங்க :-))

வவ்வால் said...

கோவி,

//அடுத்த பதிவு கோவையில் தொடர் குண்டு வைத்தது இஸ்லாமியரா ?
//

அது மத நல்லிக்கணத்திற்காக தீபாவளி பட்டாசு வெடித்தார்கள், அதனை , குண்டு வெடிப்பு என இந்துத்வாக்கள் சொல்லிவிட்டார்கள், ஆதாராம் சு.பி சுவாமிகளிடம் உள்ளது :-))

k.rahman said...

நிறையவே தெரிந்து கொண்டேன். நல்ல பதிவு.

//ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த மொகலாயர்கள் நம்மை ஏவ்வாறு 1000 வருடங்கள் ஆள முடிந்தது//

நான் படித்த வரையில் பாபர் வந்தது 1515 ல். கடைசி மன்னர் பஹதூர் ஷா 1850 போல நாடு கடத்த பட்டார். மிஞ்சி போனால் ஒரு 300 வருடங்கள் தான் வரும்.

சிராஜ் said...

அருமை அண்ணன் கோவி கண்ணன் அவர்களுக்கு....

ஔரங்கசிப் பற்றி பேசுகையில் அதை பற்றி மட்டும் கருத்து தெரிவிங்கன்னே..அதான் நல்ல விவாதத்திற்க்கு அழகு....

பி.ஏ.ஷேக் தாவூத் said...

இணையத்தில் நாத்திக அறிவுஜீவி வேஷம் கட்டும் சிலர் (இவர்களில் சிலர் இந்துத்துவவாதிகள் மற்றும் சிலர் கிறித்தவ மிஷனரி எடுபிடிகள்) இது குறித்து வாயே திறக்க மாட்டார்கள். பிரபல வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர் அவர்கள் எழுதிய "வரலாறுகளும் வக்கிரங்களும்", சோம்நாத கோவில் குறித்த ஆய்வு போன்றவற்றை வாசித்தாலே இந்த பாசிஷ்ட்டுகளுக்கு தெளிவான விடை கிடைக்கும். ஆனால் தெரிந்து கொண்டே உண்மையை மறைத்து இன துவேசத்தை உண்டு பண்ண விரும்புகிறார்கள் இந்த கருங்காலிகள்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

கோவி கண்ணன் விரும்பினால் கோவை குண்டுவெடிப்பு குறித்தும் அதன் மூல காரணிகள் குறித்தும் உரையாடலாம். அதற்கு இவர் தயாரா? இந்த கருத்து பரிமாற்றத்தில் நேர்மையாக இருந்து கருத்துக்களை பதிய கோவி கண்ணன் தயார் என்றால் நானும் தயார் தான்.

Anonymous said...

எழுநூறு வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் ஒரு இளம் அடிமைப் பெண்ணை விற்ற விற்பனைப் பத்திரம் கிடைத்துள்ளது. அது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதன் மொழியாக்கம் கீழ் வருமாறு:

“விக்ரம் நூற்றாண்டு 1288 (கி.பி. 1231) வைகாசி 15-ம் நாள் வியாழக்கிழமை. இன்று இங்கே (ஸ்ரீ அன்ஹில் பாட்டனில்) கடவுளுக் கொப்பான ஸ்ரீ பீம தேவரின் வெற்றி ராஜ்ஜியத்தில் அடிமைப் பெண் விற்பனைப் பத்திரம் இவ்வாறு எழுதப்படுகிறது.

“ராணா ஸ்ரீ பிரதாப் சிங்கால் கொண்டு வரப்பட்ட சிவப்பு நிறமான பதினாறு வயது நிரம்பிய ‘பனுதி’ என்னும் பெயருடைய அடிமைப் பெண், தலைமேல் புல்லை வைத்து, நகரத்தின் பஞ்சாயத்தார் அறியும்படி நாற்சந்தில் வைத்து விற்கப்பட்டாள். அவளை விலைக்கு வாங்கிய ஆஸ்தர் அடிமைப் பணியைச் செய்விப்பதற்காக ஸ்ரீ பிரதாப் சிங்குக்கு ஐந்நூற்றி நாலு பணங்கள் தந்து, நகர வாசிகளான நாலு வர்ண மக்களுக்கும் தெரியும்படி ‘பனுதி’ அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

“இதன் பின்னர் அவ்வடிமைப் பெண் மனது வைத்துச் செய்ய வேண்டிய வேலைகளாவன: அவளை விலைக்கு வாங்கிக் கொண்டவரின் வீட்டைக் கூட்டுவது, பெருக்குவது, தானியங்களைக் குத்துவது, மாவரைப்பது, சுள்ளி பொறுக்கி வருவது, தண்ணீர் காய்ச்சுவது, அசுத்தங்களைத் தூர எறிவது, ஆடு, மாடுகளைப் பால் கறப்பது, தயிர் கடைவது, வயலுக்கு மோர் கொண்டு செல்வது, பருத்திக் காட்டில் வேலை செய்வது, நூல் நூற்பது, விவசாய வேலைகள், வீட்டு வேலைகள் முதலியன. இவ்வாறு வேலை செய்து கொண்டிருக்கும் அடிமைப் பெண்ணுக்கு வீட்டுச் சொந்தக்காரர் (எஜமான்) நாட்டையும், காலத்தையும் பொருத்தும், அவருடைய சொத்தின் அளவுப்படியும் உணவு, உடை வழங்க வேண்டும். அவள் எஜமானின் வீட்டு வேலைகளைச் செய்யும் போது அவளுடைய தந்தையோ, சகோதரனோ, கணவனோ வந்து வேலைகளுக்குத் தடங்கல் ஏற்பட்டால், எஜமான் அவ்வடிமைப் பெண்ணை ஈவிரக்க மின்றிக் கட்டி வைத்து அடித்து விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வேலைகளையும் செய்யும்படி செய்யலாம். பிறகு எஜமான் அவளுடைய தலைமுடியைப் பிடித்திழுத்து, காலால் உதைத்தும், தடியால் அடித்தும் அவள் இறந்துவிட்டால், எஜமான் குற்றவாளியல்ல; அவள் தன் தலையெழுத்தின் படி செத்தாள் என்பதை நான்கு வர்ண மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தத் தீட்டிலிருந்து புனிதர்களாக்கிக் கொள்வதற்காக எஜமான் தனது மனைவி, மக்களுடன் கங்கை நதியில் மூழ்கி எழுந்தாலே போதுமானது. அந்த அடிமைப் பெண் குளம், குட்டையில் விழுந்தோ, விஷம் கலந்த உணவு சாப்பிட்டோ இறந்து விட்டால், அவளுடைய எஜமான் குற்றவாளியல்ல; அவள் தனது விதியின்படி செத்தாள் என்பதை ஊர் பஞ்சாயத்துக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எஜமான் தன் குடும்பத்தாருடன் கங்கை நீராட வேண்டும். இதில் எழுதப் பட்ட கடமைகளை ஆற்றுவதற்கு நகரக்காவலர்களும், நகர வாசிகளும் சாட்சிகளாவர். இந்த விஷயமான ராணா பிரதாப்சிங்கும், நான்கு காவலர்களும் தமது கையால் எழுதியிருக்கின்றனர். இந்த விற்பனைப் பத்திரத்தை இரு தரப்பாரும் கேட்டதன் பேரில் ஜயதா பாரதியால் எழுதப்பட்டது.”
மேற்கண்ட விற்பனைப் பத்திரத்தில் அடிமை வழக்கத்தின் எவ்வளவு மோசமான உருவத்தைக் கண்டோம்! ஆனால், கரபாத்ரி சுவாமிஜி இதை எவ்வளவு அழகாக சித்திரிக்கிறார், பாருங்களேன்;

“அடிமை முறை யுகத்தில்கூட அடிமை வேலை செய்ய இயலாமல் ஆகி விட்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பையும் எஜமானரே ஏற்றுக் கொண்டார்.”

“உண்மையில் இவ்வடிமைகள் பெயரளவுக்குத் தான் அடிமைகளே தவிர, அவர்கள் எஜமானரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். அதனால் தான் எஜமானர் அடிமைகளின் உணவு, உடை வசதியைக் கவனித்த பிறகே, தன் குடும்பத்தின் உணவு, உடை வசதியைக் கவனித்தார்.”

பழங்கால அடிமை முறை மீண்டும் திரும்பி வரப்போவதில்லை. இதை, கரபாத்ரியின் ‘ரிதம்பரா பிரக்ஞை’யும் அறியும் இருந்தாலும் முக்காலங்களையும் ‘அறிந்த’ ரிஷிகளின் சாஸ்திரங்களை ஆதரிப்பது அவருடைய ‘கடமை’யாதலால், அடிமை வழக்கத்தையும் ஆதரிக்கிறார் பாவம்!

http://www.keetru.com/anaruna/aug07/ilavenil_2.php -

UNMAIKAL said...

சொடுக்கி >>>>>
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி!
<<<<< படிக்கவும்

சொடுக்கி >>>>>
பயங்கரவாதத்தின் நிறம் காவி! - ஞாநி – குமுதம்.
<<<<< படிக்கவும்


சொடுக்கி >>>>>அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே" . ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை.. <<<<< படிக்கவும்

சொடுக்கி >>>>>காவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி(?) 2 அதிர்ச்சி விடியோக்கள். <<<<< படிக்கவும்

சொடுக்கி >>>>>தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ. உரை. கேள்வி-பதில். <<<<< படிக்கவும்


.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பின் சகோதரர் சுவனப்பிரியன்,
வரலாற்றை திரித்து முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்து மக்களை அணி திரள வைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இந்துத்துவ கும்பல்கள் இருக்கின்றன. இவ்வளவு ஆதாரப்பூர்வமாக நீங்கள் எழுதிய இந்த பதிவு குறித்து ஒன்றும் சொல்லாமல் இதை திசை திருப்ப கோவி கண்ணன் அவர்கள் முயற்சிப்பதில் இருந்தே அவர் எதற்கு அடி போடுகின்றார் என்பதை படிக்கும் யாவரும் அறிந்து கொள்ளலாம்.

கோவி.கண்ணன் said...

//இதை திசை திருப்ப கோவி கண்ணன் அவர்கள் முயற்சிப்பதில் இருந்தே அவர் எதற்கு அடி போடுகின்றார் என்பதை படிக்கும் யாவரும் அறிந்து கொள்ளலாம்.//

அபச்சாரம் அபச்சாரம் போங்கோ.

ஆர்எஸ்எஸ் கும்பல் நாது இராம் கோட்சே பற்றி எழுதும் கட்டுரைக்கும், சன்னி முஸ்லிமான அவ்ரங்கசீப் பற்றி வஹாபி சுவனப்பிரியன் கட்டுரைக்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கும் மிஸ்டர் ஷேக் தாவூத் ?

வடக்கு பக்கமாகவே வடதுருவம் பக்கம் போனிங்க என்றால் திசை திரும்பால் எல்லா பக்கமும் தெற்காகவே இருக்கும். எந்தபக்கம் தொழுகை நடத்தினாலும் ஒண்ணு தான். திசை பற்றி வேறென்ன தகவல் வேண்டும் ?

UNMAIKAL said...

'இந்துக் கோயில்களையெல்லாம் ஒளரங்கசீப் இடித்துத் தள்ளினார் ' என்று குற்றம் சாட்டினால் அது தவறானது என்பதற்கு அவர் ஆட்சி காலத்திலிருந்து இன்று வரை நிலைத்து நிற்கின்ற எண்ணற்ற கோயில்கள், குருத்துவாராக்கள், கிறுஸ்துவ ஆலயங்கள் போன்றவற்றை ஆதாரங்களாக நாம் காட்ட முடியும். ' (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி. நெடுஞ்செழியன். பக்கம்: 224)

'எந்த ஒரு மன்னன் மற்றவர் பின்பற்றுகின்ற மதத்தைச் சகிக்கவில்லையோ, அவன் இறைவனுக்கே எதிரியான கலகக்காரனாவான் ' என்றும் ஆணித்தரமாய்க் ஒளரங்கசீப் கூறி இருக்கிறார்.

ஒளரங்கசீப் பல கோயில்களுக்கு ஜாகீர்கள் வழங்கியுள்ளார்.

அவரது ஆட்சியின் கடைசிக் காலத்தில், முன்னெப்போதும் இருந்ததைவிட அதிகமான அளவில் இந்துக்கள் பணி புரிந்தனர்.

ஜெய்சிங் என்பவர் தக்காணாத்தின் அரசப் பிரதி நிதியாக 1665ல் நியமிக்கப்பட்டார். முகலாயப் பேரரசில் இருந்த மிக உயர்ந்த பதவிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

கோயில்களைச் சீரமைப்பதிலும் பழுது பார்ப்பதிலும் இவர் காலத்தில் பெரிய அளவில் முயற்சிகள் நடந்தன.

வட இந்தியாவின் பல கோயில்களையும் குருத்துவார்களையும் ஒளரங்கசீப் ஆதரித்ததற்கான அரசாணைகள் இடம் பெற்றிருந்ததை, உஜ்ஜயினில் உள்ள மகா காவேஷ்வர் கோயில், சித்ரகூடத்தின் பாலாஜி கோயில், கெளஹாத்தியில் உள்ள உமா நந்த் கோயில் போன்ற கோயில்களிலிருந்து கிடைத்த நீதிமன்ற ஆணைகளின் தொகுப்பிலிருந்து அறியமுடிகிறது


என்று அந்த ஆணைகளைத் தொகுத்த பிரபல சரித்திர ஆராய்ச்சியாளர் பி.என்.பாண்டே கூறுகிறார். ('வரலாறுகளும் முன்முடிவுகளும் ' என்ற தலைப்பில் ராம் புனியானி. சிந்தனைச் சரம், செப்டம்பர் 2002),

புனித மக்கா நகரத்தின் ஷெரிப் இரு முறை தமது தூதர்கள் மூலம் ஒளரங்கசீப்பிடம் தமது நகர மக்களுக்குப் பெரும் பொருள் அனுப்புமாறு வேண்டிக்கொண்டார்.

அதற்கு ஒளரங்கசீப், 'எனது தேசத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்கக் கூடாதா ? 'என்று வினவி வெறுமே திருப்பி அனுப்பினார்.

இதிலிருந்து அவர் ஒரு முஸ்லிம் மதப்பற்றாளர் என்பதை விடவும் தம் குடிமக்களின் நலனில் அக்கறைக் கொண்ட பாதுஷா என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.


(முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி நெடுஞ்செழியன். பக்: 226)


காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைத்திருக்கும்போது உண்மையின் விதையை அங்கே தூவ முடியாது!

பிரம்மாவின் உயர் படைப்பு நாங்கள்தான் என்று ஆயிரமாயிராண்டு காலமாக ஏமாற்றிக்கொண்டிருந்த இவர்களின் ராஜபோகம், சென்ற நூற்றாண்டில் அம்பேத்காரர்களாலும் பெரியார்களாலும் பரிக்கப்பட்டு விட்டன;

மக்கள் விழித்துக்கொண்டனர்.

அவற்றை ஜீரணிக்க முடியவில்ல. கொஞ்சநஞ்சமிருந்தது தேவதாசி, அதுவும் பறிபோய்விட்டது.

குலக்கல்வியைக் கொண்டுவந்தோம், கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது; சமீபத்தில் மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வந்துப் பார்த்தோம், அதையும் புதைக்கவேண்டியதாகிவிட்டது;

முஸ்லிம்கள் குர்பானியை தடை செய்ய கோயிலில் பலி தடை என்று முன்னோடியாக வைத்துப்பார்த்தோம், அது கொண்டு வந்தவர்களையே குர்பானி(பலி) கொடுத்துவிடும் போலாகிவிட்டது. என்ன செய்வது ?

இப்படியாவது பிழைப்பை நடத்திப் பார்ப்போம், பழய குப்பையை கிளறினால் எதாவது கிடைக்காலாமல்லவா ? அதிலாவது குளிர் காயலாமல்லவா ? சங்கு சும்மாத்தானே கிடக்கிறது, ஊதுவோமே!

ஐயா! நம்மிடம் ஆயிரம் குளறுபடிகள் இருக்கின்றன, அவற்றை முதலில் சரி செய்வோம். பிறகு ஒளரங்கசீப்பைப் பார்ப்போம், அவர் எங்கேயும் போய்விடமாட்டார்.

என்ன சொன்னாலும் ஒளரங்கசீப், cheap ஆகிவிடமாட்டார்.

முடிவு ஒன்றுதான்,.... அது 'சத்தியமேவ ஜெயதே '!

சொடுக்கி விடியோ >>>
அவ்ரங்கசீப் மதமாற்றம் செய்தாரா? <<<< காணவும்.

.

கோவி.கண்ணன் said...

//பி.ஏ.ஷேக் தாவூத் said...
கோவி கண்ணன் விரும்பினால் கோவை குண்டுவெடிப்பு குறித்தும் அதன் மூல காரணிகள் குறித்தும் உரையாடலாம். அதற்கு இவர் தயாரா? இந்த கருத்து பரிமாற்றத்தில் நேர்மையாக இருந்து கருத்துக்களை பதிய கோவி கண்ணன் தயார் என்றால் நானும் தயார் தான்.//

விவாதிக்கலாம், ஆனால் அதற்கு முன்பு போர் என்றாலே அப்பாவிகள் கொல்லப்படுவது சகஜம் தானே - முதல்வர் ஜெ சொன்னது போல் "இஸ்லாமிய பெயர்தாங்கிகளின் நற்செயலான குண்டுவெடிப்பு என்றாலே அப்பாவிகள் கொல்லப்படுவது வரவேற்கத்தக்கது இல்லை என்றாலும் மன்னிக்கத் தக்கது" என்று தாங்கள் திருவாய் மலர்ந்தால் விவாதிக்கலாம், இல்லை என்றால் விவாதம் வீண்.

கோவி.கண்ணன் said...

//சிராஜ் said...
அருமை அண்ணன் கோவி கண்ணன் அவர்களுக்கு....

ஔரங்கசிப் பற்றி பேசுகையில் அதை பற்றி மட்டும் கருத்து தெரிவிங்கன்னே..அதான் நல்ல விவாதத்திற்க்கு அழகு....//

எனக்கெல்லாம் யாரும் மருந்து குடிக்கும் பொழுது குரங்கை நினைக்கக் கூடாதுன்னு சொல்லித்தரவில்லையே.

Anonymous said...

Mr kavna please post necessary only dont do silly religious .

Unknown said...

//அடுத்த பதிவு கோவையில் தொடர் குண்டு வைத்தது இஸ்லாமியரா ?

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
//

சகோ.கோவி கண்ணன்.

சகோ.சுவனப்பிரியன் கோவை குண்டு வெடிப்பு பற்றி எழுதுவது இருக்கட்டும் ...நீங்க ஒரு நல்லவரு வீல பெண்ட எடுக்கறதுல ...அப்பறம்.. ஒரு வல்லவரு கம்பு சுத்துரதுல...

இப்பிடி இருக்குர நீங்க ....

2006 ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு ....

2007 ல் ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு .....

2007 ல் தென்காசி RSS அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு...

2007 ல் டெல்லிக்கும் பாகிஸ்தான் லாஹுருக்கும் இடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில் குண்டு வெடிப்பு ....

2007 ல் ஹைதராபாத் மெக்கா நகரில் குண்டு வெடிப்பு....

2006 ல் மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகரில் வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து நடந்து RSS பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர்.. ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்......

இது அனைத்தையும் பற்றியும் நல்லடியாரான நீங்கள் எழுதுவீர்களா ...?

நன்றியுடன்
நாகூர் மீரான்

Unknown said...
This comment has been removed by the author.
UNMAIKAL said...

அமெரிக்க சினிமாவுக்கு எதிர்ப்பு:

சென்னையில் இஸ்லாமிய அமைப்புகள் கூட்டுப் போராட்டம்


சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின.

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் அமெரிக்க தூதரகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டன.

இந்த போராட்டத்தில் அமெரிக்க தூதரகம் தாக்குதலுக்குள்ளானது.

இதைத் தொடர்ந்து 2 நாட்களுக்குஅமெரிக்க தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு அண்ணா சாலை தர்கா அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் மாலை 3 மணி முதலே போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

அண்ணா சாலை முழுவதும் இஸ்லாமியர்கள் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

ஆங்காங்கே அமெரிக்க தேசியக் கொடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் அண்ணா சாலை தர்கா அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அமெரிக்காவுக்கு எதிராக கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர்.

இதில் ஒருதரப்பினர் போலீசாரின் அரணை உடைத்துக் கொண்டு அமெரிக்க தூதரகம் நோக்கி முன்னேற முயற்சித்தனர்.

அவர்களையும் போலீசார் தடுத்தனர்.

சென்னை அண்ணாசாலைதான் நகரின் மையமான போக்குவரத்துப் பகுதி. ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக இந்தப் பாதையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன,

இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தால் மயிலாப்பூர், ராயப்பேட்டை , அண்ணாசாலை ஆகிய தென்சென்னை பகுதிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன.

இன்னொரு பக்கம் அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தால் மத்திய சென்னை பகுதிகளான எழும்பூர், சிந்ததாரிப் பேட்டை வழியே பேருந்துகள் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பக்கமும் வாகனங்களால் நிலைகுலைந்து போனது.

சென்னையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

http://tamil.oneindia.in/news/2012/09/18/tamilnadu-muslim-movements-mass-protest-chennai-161707.html

Unknown said...

//வரலாற்றை திரித்து முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்து மக்களை அணி திரள வைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இந்துத்துவ கும்பல்கள் இருக்கின்றன//

அதானே. முஸ்லீம்கள் எவ்ளோ பெரிய அப்பாவிகள். ஒன்றுமே தெரியாத பாப்பாக்கள். யூத சதியினால் பாம் வைக்கும் அளவுக்கு ..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவன்ப்பிரியன்...

மதம் என்ற பெயரில் இவர்கள் ஏதேனும் பொய்யும் புரட்டும் வரலாற்றை திரித்து இட்டுக்கட்டுவதும்.. அதற்கு பதில் தருவதுமே வேலையா போச்சே..!

கி.பி. 490 ஆம் வருடம் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயம் பதினோறாம் நூற்றாண்டில் மீண்டும் ஹரிச்சந்திர மஹாராஜாவால் கட்டப்பட்டது என்றால் இடித்தவர் பெயர் என்ன..? அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

1194 ஆம் அண்டு முகம்மது கோரி நடத்திய படையெடுப்பின் போது இந்தக் கோவிலையும், வாரணாசியில் இருந்த மற்ற கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடவே, இது மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது எனில்... கட்டியவர் பெயர் என்ன..? அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

பிறகு வந்த குத்புதின் ஐபக்கால் மீண்டும் இடிக்கப்பட்டு, அவரது மறைவிற்குப் பின் பல அரசர்களால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது என்றால் அந்த அரசர்களின் பெயர் என்ன..? அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

1351-ம் ஆண்டு ஃபீருஸ் ஷா துக்ளக் என்பவரால் மீண்டும் இடிக்கப்பட தோடர் மால், 1585-ம் வருடம் மீண்டும் ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார் என்றால் மன்னர் அக்பரின் அனுமதியுடனா அனுமதி இல்லாமல் நைசாவா..? அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

கொத்தனார்தான் கோவிலை கட்டினார் என்றாலும் ஹரிச்சந்திர மஹாராஜா கட்டினார் என்றுதானே சொல்வோம்..? கூலியாட்கள்தான் இடித்தனர் என்றாலும் இடிக்க சொன்னவர் பெயர்தானே கூறப்பட்டுள்ளது..! இங்கே மட்டுமே எப்படி தோடர்மால் தொத்திக்கிட்டார்..?




suvanappiriyan said...

பின்னூட்டம் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! சில வேலைகள் காரணமாக வெளியில் செல்கிறேன். மூன்று மணி நேரத்துக்கு பிறகு தான் வருவேன். வந்து மற்ற பின்னூட்டங்களுக்கான பதில்களைப் பார்ப்போம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///முதலில் கோவில் என்பது வழிபாட்டு தலம் மட்டும் அல்ல. அந்நாட்டின் பொன்னையும் விலையுயர்ந்த சொத்துக்களையும் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக இருந்தது. எனவே வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் முதலில் கண் வைப்பது நம் நாட்டு கோயில்களைத்தான். பல இந்து மன்னர்கள் கோவிலை கொள்ளையடித்துள்ளார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளே இதற்கு சாட்சி! ஆனால் அவற்றை எல்லாம் எழுத மாட்டார்கள்.///

---இதிலே யாருக்காவது ஐயம் இருந்தால்... அவர்களுக்கான விக்கிபீடியா தகவல்..!

கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன.

பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஜூன் 27, 2011 அன்று ஆய்வு தொடங்கியது.

சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும், பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு (Rs.1,00,000,00,00,000) மேல் இருக்கும் என கருதப்படுகிறது

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///இடித்தது மொகலாயர் ஆட்சி. அதே ஆட்சியில் அந்த கோவில் எப்படி திரும்பவும் கட்டப்பட்டது? அதை எப்படி அரசு அனுமதிக்கும்?///---------ஓ... நீங்களும் கேட்டுட்டீங்களா...!


/// நம் காலத்தில் இடிக்கப்பட்ட பாபரி மசூதியை இன்று வரை கட்ட முடிகிறதா? ///--------படிப்பவருக்கு இது மறக்க முடியாத மரணஅடி கேள்வி..!


///பல இந்து மன்னர்கள் கோவிலை கொள்ளையடித்துள்ளார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளே இதற்கு சாட்சி! ஆனால் அவற்றை எல்லாம் எழுத மாட்டார்கள்.///----சகோ.சுவனப்பிரியன்... நீங்க எழுதுங்க சகோ. நான் தெரிஞ்சிக்கிறேனே. ப்ளீஸ்.


/// ராமர் கோவில் கட்டுவோம் என்று சூளுரைக்கும் பிஜேபி தான் ஆட்சியில் அமர்ந்தால் அதை திரும்பி கூட பார்க்காது. இவ்வளவுதான் இவர்களின் மதப்பற்று.///-----இதெல்லாம் ஓட்டுக்காக போடும் வேஷம் என்று புரிந்துதானே.. மூன்றாவது & நான்காவது முறை காங்கிரசுக்கு மக்கள் ஓட்டு போட்டு விட்டனர்.


மிக நல்ல பதிலடி பதிவுக்கு நன்றி சகோ.சுவனப்ரியன்..!

இனி வரலாற்றை திரிக்க நினைப்போர் கொஞ்சமாவது யோசிக்கட்டும்..!

மேலே முதல் கமெண்டில் ஒருவர்... இருக்காரே...

'மொகலாயர் படையெடுப்பு' என்ற பதத்தை..... 'இஸ்லாமிய படையெடுப்பு'..... என்று திரித்து தன் இஸ்லாமொபோபியாவை காட்டியவர்.


அதுமட்டுமா....

கூடவே...

'பிரிட்டிஷ் படையெடுப்பை'... அநியாயமாக.... 'கிழக்கிந்திய கம்பெனி வருகை'... என்று திரித்து... தனது ஒரிஜினல் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியவர்..!

கோவி.கண்ணன் said...

//
2006 ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு ....

2007 ல் ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு .....
...


இது அனைத்தையும் பற்றியும் நல்லடியாரான நீங்கள் எழுதுவீர்களா ...?//

அவங்களெல்லாம் தாங்கள் அக்மார்க்கம் அமைதி மார்க்கம் என்று கூறிக் கொள்ளவில்லையே. நீங்களும் உங்க மார்க்கமும் ஒலக அமைதிக்கானவை என்று நம்பும் உங்களுக்கு, மற்றவர்கள் குற்றம் செய்யக் கூடியவர்கள் என்று நான் வெளக்கி தான் வெளங்கிக் கொள்ள வேண்டுமா ?

R.Puratchimani said...

ஐயா சுவனம்,

//உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.//

உங்களுக்கு நேரம் இருக்கு நெறையா கதை சொல்றிங்க.....நீங்க கொடுத்து வச்சவருதான். உங்க சீப்பு எவ்வளவு நல்லவரு பாருங்க.......ஏன் இவர பத்தி தப்பு தப்ப சொல்றாங்க.

இவரு கிட்ட தட்ட ஆயிரம் கோயிலை இடித்ததாகவும், சீக்கிய குருவை கொன்றதாகவும், இவரு தீபவளிய தடை செய்ததா சொல்றாங்க உண்மையா இல்லையா? ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்களேன்.
//Mahmud of Ghazni sacked the second Somnath Temple in 1026, and looted it of gems and precious stones and the famous Shiva lingam of the temple was destroyed .[15] Later the temple was demolished by Mughal Emperor Aurangzeb in 1706.[16]//

//The Mughal Empire was marked by periods of tolerance of non-Muslims, such as Hindus and Sikhs, as well as periods of violent oppression and persecution of those people.[28] The reign of Aurangzeb was particularly brutal. No aspect of Aurangzeb's reign is more cited - or more controversial - than the numerous desecrations and even the destruction of Hindu temples.[28] Aurangzeb banned Diwali, placed a jizya (tax) on non-Muslims and martyred the ninth Sikh guru Tegh Bahadur.[28]//


//During his reign, tens of thousands of temples were desecrated: their facades and interiors were defaced and their murtis (divine images) looted.[28] In many cases, temples were destroyed entirely; in numerous instances mosques were built on their foundations, sometimes using the same stones. Among the temples Aurangzeb destroyed were two that are most sacred to Hindus, in Varanasi and Mathura.[29] In both cases, he had large mosques built on the sites.[28]

The Kesava Deo temple in Mathura, marked the place that Hindus believe was the birth place of Shri Krishna.[29] In 1661 Aurangzeb ordered the demolition of the temple, and constructed the Katra Masjid mosque. Traces of the ancient Hindu temple can be seen from the back of the mosque. Aurangzeb also destroyed what was the most famous temple in Varanasi- the Vishwanath Temple.[29] The temple had changed its location over the years, but in 1585 Akbar had authorized its location at Gyan Vapi. Aurangzeb ordered its demolition in 1669 and constructed a mosque on the site, whose minarets stand 71 metres above the Ganges. Traces of the old temple can be seen behind the mosque. Centuries later, emotional debate about these wanton acts of cultural desecration continues.Aurangzeb also destroyed the Somnath temple in 1706.[29]//

http://en.wikipedia.org/wiki/Persecution_of_Hindus

UNMAIKAL said...

PART 1. இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன்.


நாடாளும் மன்னனுக்குத் தேவையான ஆறு உறுப்புக்களுள் முதலாவதாகப் படையைக் குறிப்பிடுவார் வள்ளுவர். பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சீவகசிந்தாமணிக் காப்பியம் படையினால் விளையும் நன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

பொன்னின் ஆகும் பொருபடை யப்படை
தன்னில் ஆகுந் தரணி தரணியிற்
பின்னை யாம் பெரும்பொருள் அப்பொருள்
துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே (செய்யுள்: 1923)

பொன் இருந்தால் போரிடும் படையைத் திரட்டலாம். படை இருந்தால் ஆட்சி கிடைக்கும். ஆட்சி கிடைத்தால் கிடைக்காதன என்று எவையும் இல்லை என்பது இச்செய்யுளின் பொருளாகும். ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே மன்னர்களின் குறிக்கோள். இதனால்தான் இடைக்குன்றூர்க்கிழார் என்ற கவிஞர்,

"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறம் 76: 12)
என்று பாடியுள்ளார்.

இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன.

பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,

"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்". (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,

"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே" (புறம் 6)

என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.

சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,

"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"

என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம்.

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.

பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.

பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.

நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).

வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து)

கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.

மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211).

இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது.

இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.

ராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக "இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.

CONTINUED ……..

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பிரபல பின்னூட்டவாதி "நெத்தியடி"யுடன் களமிறங்கியிருக்கிறார்.தொடக்க‌மே அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறார்.களத்தில் சகோ பி.ஏ.ஷேக் தாவூத்தும் இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை கொடுக்கிறது.வரலாறுகள் இன்னும் நீளும் போல் தெரிகிறது பொருத்திருந்து பார்ப்போம்.

UNMAIKAL said...

PART 2 . இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன்.


முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).

நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான்.

இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான்.

அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.

இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான்.


சத்தியாசிரயனின் கல்வெட்டுச் செய்தி குறித்து தமிழ்நாட்டின் இரு பெரும் வரலாற்றுப் பேராசிரியர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

(இண்) பகைவனின் கல்வெட்டில் காணப்படும் பெரும் நாச வேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் ராஜேந்திரன் செய்திருக்கக் கூடுமா? என்ற வினா எழுந்தாலும் . . . (நீலகண்ட சாஸ்திரி 1989: 240).

(இண்) பகையரசன் நாட்டிய கல்வெட்டாகையால் இது கூறும் செய்திகளை உண்மையென்று நம்பலாகாது.

நீதியிலும், நேர்மையிலும் சிவத்தொண்டிலும் மேம்பட்டிருந்த சோழ மன்னனின் படைகள் இத்தகையக் கொடுமைகளை மக்களுக்கு இழைத்திருக்க முடியாது. (கே.கே. பிள்ளை 1981: 272)

இராஜேந்திரன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கக்கூடுமா? என்று சாஸ்திரியார் ஐயப்பட, கே.கே. பிள்ளையோ அப்படிச் செய்திருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.

இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின் மெய்கீர்த்திப் பகுதி " . . . யானைகள், குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத் தொகுதிகள்" ஆகியனவற்றை சத்தியாசிரயனிடமிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது (தந்தையாகிய இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால் இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது).

இராஜேந்திரன் பட்டத்திற்கு வந்த பிறகு (1012-1044) நிகழ்த்திய போர்களில் அவன் செயல்பாடு எத்தகையது? என்பதைக் கண்டால் மேற்கூறிய கல்வெட்டுச் செய்திகள் உண்மையா? பொய்யா? என்பது புலனாகும்.

கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். "

சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272).

வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).

முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).

ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.

. பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுக்கள் கூறும் இச்செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன என்று கூறும் சாஸ்திரியார் (1989; 346), இத்தகைய செயல்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன என்பதை மறந்துவிடுகிறார்.


CONTINUED …..

UNMAIKAL said...

PART 3. இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன்.


1894ம் ஆண்டுக்கான கல்வெட்டு ஆண்டறிக்கையில் (எண். 172) ஆகவமல்லன் அனுப்பிய தூதுவர்கள் இருவரில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்து ஆகவல்லமன் என்று பெயரிட்டும் மற்றொரு தூதுவனுக்கு பெண்களுக்கு உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் ராஜராஜன் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347).

சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான்.

தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் "ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்" என்று குறிக்கப்பட்டுள்ளது.

முதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான்.

மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.

1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.

3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர்.


திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை "பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).

கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:

கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான்.

அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.

கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.

தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.

பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான்.

சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்" எனனும் சடங்கை இவன் செய்தான்.

அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்
(சாஸ்திரி, மேலது, 579).

பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பொருஞ்சிங்கன் என்பவன் வைதீக சமயத்தைச் சேர்ந்தவன். சிறந்த சிவ பக்தன். சிதம்பரம் நடராசர் மீது பெரும்பற்று உடையவன் என்று இவனது வரலாற்றை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (1965: 117) குறிப்பிடுகிறார்.

சைவர்களின் முக்கிய புண்ணியத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்குக் கோபுரம் கட்ட தானம் செய்துள்ளான். இதனால் இவனது பட்டப் பெயர் ஒன்றின் பெயரால் "சொக்கசீயன் திருநிலை எழுகோபுரம்" என்று இக்கோபுரம் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தின் கீழைக் கோபுரத்தை எழுநிலைக் கோபுரமாக உயர்த்திக் கட்டினான்.

தன் பகை மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உருக்கி இக்கோபுரத்தின் தங்கக் கலயங்களைச் செய்தான்.

திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரநாதன் கோவில், திருவீரட்டாணம், ஜெம்புகேஸ்வரம், மதுரை, காளகஸ்தி ஆகிய சிவத்தலங்களில் திருப்பணிகளும் தானங்களும் செய்தான்.

"திருப்பதிகளெல்லாம் கும்பிட்டருளி தேவதானங்களும் திருவிடையாட்டங்களும் இறையிவி விட்டருளி திருப்பணியெல்லாம் செய்தருளி" என்று ஆக்கூர் சாசனம் (SI XII; 129) இவனது பக்தி உள்ளத்தைச் சுட்டிக் காட்டும்.

இத்தகைய சிவபக்தனான கோப்பெருஞ்சிங்கனுக்குரிய பட்டயங்களுள் "பரராஜ அந்தப்புர பந்திகாரன்" என்பதும் ஒன்று என இவனது ஆற்றூர் சாசனம் கூறும் (SII XII; 120).

பிற மன்னர்களின் அந்தப்புரத்தை சிறைபிடிப்பவன் என்பதே இப்பட்டத்தின் பொருளாகும்.

. தன் பகை நாடான சோழ நாட்டின் மீது படையெடுத்த இக்கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்தான். கோப்பெருஞ்சிங்கனுடன் போரிட்ட போசல நாட்டு மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறை மீட்டான்.

இவ்விரு நிகழ்வுகளையும் 'திருவய்ந்திரபுரக் கல்வெட்டு' குறிப்பிடுகிறது.


CONTINUED…..

UNMAIKAL said...

PART 4. இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன்.


இக்கல்வெட்டில் கோப்பொருஞ்சிங்கன் சோழநாட்டுக் கோவில்களை இடித்தசெயலும்

அவனுடன் போரிட்டு வென்ற போசல நாட்டு மன்னன் செய்த கொடுஞ் செயல்களும் இடம் பெற்றுள்ளன. அக்கல்வெட்டு வருமாறு: (கல்வெட்டு வரிகளில் அழுத்தம் எமது)

ஸ்வதி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு
யாண்டு 15 ஆவதின் எதிராம் ஆண்டு பிரதாப சக்கரவர்த்தி
ஹோய்ஸண ஸ்ரீ வீரநரசிம்மதேவன் சோழசக்கரவர்த்தியைக்
கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தில் பிடித்துக்

கொடு இருந்து தன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்துத் தேவாலயங்களும்
விஷ்ணு ஸ்தானங்களும் அழிகையிலே இப்படித்தேவன் கேட்டருளி,

சோழமண்ல பிரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி
நிலை நிறுத்தி அல்லது எக்காளம் ஊதுவதில்லை என்று தோர
சமுத்திரத்தினின்றும் எழுந்துவந்து,
மகாராஜ்ய நிர்மூலமாடி
இவனையும் இவன் பெண்டு பண்டாரமும் கைக்கொண்டு

பாச்சூரிலே விட்டு கோப்பெருஞ்சிங்கன் தேசமும் அழித்துச்
சோழச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக்கொடு என்று
தேவன் திருவுளமாய் ஏவ,

விடை கொண்டு எழுந்த ஸ்வஸ்தி ஸ்ரீமான் மகாபிரதானி பிரம விசுவாசி தண்டினகோபன் ஜகதொப்பகண்டன் அப்பண தன்னக்கனும்,

சமுத்திரகோபய்ய தன்னக்கனும் கோப்பெருஞ்சிங்கன்
இருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும், சோழகோன்
இருந்த தொழுதகையூரும் அஷ்த்து வேந்தன் முதலிகளில்
வீரகங்க நாடாள்வான், சீனத்தரையன் ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட முதலி 4 பேரையும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு,

பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எதுத்துவந்த தொண்டைமா
நல்லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து . . . .
வெட்டிவித்து திருப்பாதிரிப்பூலியூரிலே வீற்றிருந்து,
திருவதிகை திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து, வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு,

சேந்த மங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழியூர்களும், குடிக்கால்களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளைப் பிடித்தும் கொள்ளை கொண்டும்

சேந்தமங்கலத்தே எடுத்து விடப்போகிற அளவிலே கோப்பெருஞ்சிங்கன் குழைந்து சோழ சக்கரவர்த்தியை எழுந்தருளிவிக்கக் கடவதாக
தேவனுக்கு விண்ணப்பம் செய்ய, இவர் விட்டு, நமக்கும்
ஆள்வரக் காட்டுகையிலே, சோழ சக்கரவர்த்தியை
எழுந்தருளுவித்து கொடு போந்து ராஜ்யத்தே புகவிட்டது உ"

சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீதும் இலங்கையின் மீதும் படையெடுத்தபோது பகை மன்னர்களின் மகன், மனைவி, தாய் ஆகியோரின் மூக்கை அறுத்ததை ஏற்கனவே கண்டோம்.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் பகை நாட்டுக் குடிமக்களின் மூக்கை அறுக்கும் பழக்கமாக இது வளர்ச்சியுற்றது.


கந்திருவ நரசராஜன் (1638-1659) என்ற மைசூர் மன்னன் திருமலை நாயக்கருடன் போரிட, தன் படையை அனுப்பினான்.

அப்படை மதுரை நோக்கி வரும்போது வழியிலுள்ள ஊர்களை எல்லாம் கொள்ளையிட்டும், நெருப்பிட்டும் அழித்தது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி எதிர்பட்டோர் மூக்குகளையெல்லாம் அறுத்தது.
அறுபட்ட மூக்குகள் சாக்கு மூட்டைகளில் மைசூருக்குச் சென்றன.


நாட்டுத் துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே மூக்கறுத்தல் இருந்தது.

மைசூர் மன்னன் எதிரி நாட்டு மக்களுக்கு வழங்கும் தண்டனையாக இதை மாற்றினான்.

மூக்கறுப்பதற்கென்றே ஓர் இரும்புக் கம்பியை மைசூர்ப்படை வீரர்கள் வைத்திருந்தனர்.

இக்கருவியின் துணையால் மூக்கையும் மேலுதட்டையும் அறுத்துவிடுவார்கள்.

அறுத்த மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. மீசை உள்ள மேலுதட்டுக்குப் பரிசு அதிகம் (சத்தியநாதய்யர் 1956; 50-52).

இதற்குப் பழிவாங்கும் முறையில் தன் தம்பி குமாரமுத்துவின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் மைசூருக்கு அனுப்பினார்.

மைசூர்ப் படைவீரர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய மூக்கறுத்தலை மைசூரில் நாயக்கர் படை மேற்கொண்டது. இறுதியில் மைசூர் மன்னனைக் கைது செய்து அவன் மூக்கையும் அறுத்தனர். (மேலது)

ஃரையர் என்ற ஆங்கில அறுவை மருத்துவர் 1673க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் மைசூர்ப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மூக்கறுக்கும் செயல் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மன்னர் தன் படைவீரர்களுக்கு, பகைவர்களின் மூக்கை அறுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார்.

ஒரு கோணிப்பை அளவிலான மூக்குகள் மன்னரின் காலை உணவுக்கு வழங்கப்பட்டன.

உயிர்களைக் கொல்வது அவரது சமய நம்பிக்கைக்கு மாறானது என்பதால் அவர் இவ்வாறு செய்கிறாராம் (மேலது).

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடம் கருநாடகத்தில் உள்ளது.


CONTINUED ………

UNMAIKAL said...

PART 5. இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன்.


பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத் தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல் விட்டுவிடவில்லை.

60 லட்சம் பெருமானம் உள்ள அணிகலன்கள் யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான்.

சிருங்கேரி மடாதிபதிகள் வணங்கி வந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான்.

பல பிராமணக் குருக்களைக் கொன்றான். உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி ஒளிந்தார்.

அங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார்.

திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினான். சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினான்.


இச்செய்திகளை சிருங்கேரி சாரதா மடத்திலுள்ள ஆவணங்களால் அறிகிறோம் (சிவண்ணா, 1999 : 4142).

தஞ்சையை ஆண்ட மராத்திய இந்து மன்னன் ஹாஜி (16851712) ராணி மங்கம்மாளின் ஆளுகையில் இருந்த திருச்சி பகுதிக்கு தன் படைகளை அனுப்பிக் கொள்ளையடித்தான்.

ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் காலமான பிறகு அவரையடுத்து அதன் தலைவராக விளங்கியவர் கோல்வல்கர். ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் ஸ்ரீகுருஜி என்றழைக்கப்படும் அவர் இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லீம் படையெடுப்பாளர்கள் குறித்து:

அந்தப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டுப் பெண்கள் பலரைக் கற்பழித்தனர். நமது கோவில்களையும், யாத்திரைத் தலங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியவர்கள். சுகபோகங்களைத் தருவதாக ஆசை காட்டியோ அல்லது வாள்முனையில் மிரட்டியோ பெரும் எண்ணிக்கையினரைத் தமது மதத்திற்கு மாற்றினார்கள். என்று எழுதியுள்ளார் (கோல்வல்கர், 1992 : 8) .

ஸ்ரீ குருஜி' குறிப்பிடும் கொடுமைகள் இந்திய நாட்டு வரலாற்றில் புதிய செய்திகளல்ல என்பதை இதுவரை நாம் பார்த்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.

இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர்.

இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா?

படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை.

அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான்.


முதலாம் இராஜேந்திரன் தனது வடஇந்தியப் படையெடுப்பின் போது வடஇந்தியாவிலுள்ள மதுரா, என்ற நகரைக் கைப்பற்றினான்.

இந்நகர்தான் கஜினி முகம்மதுவின் தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளான நகரமாகும். இது குறித்து கே.கே. பிள்ளை (1981; 278, 279) பின்வருமாறு அவதானிப்பார்.

அந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினி முகம்மது பன்முறை தாக்குதல் தொடுத்தான்.

பன்முறை அதைக் கொள்ளையிட்டான். இவ்வட மதுரையை இராசேந்திரனும் வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையே ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை.

தனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை அவனது திருவாலங்காட்சுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

மேலும் ஈழ நாட்டு கிராமங்களை தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குத் தானமாக ராசேந்திரன் வழங்கினான்.

பொலனறுவை என்ற ஊரை, ஜனநாதமங்கலம் என்று பெயர் மாற்றியதுடன் அங்கு சிவன் கோவில் ஒன்றைக் கட்டுவித்தான்.

ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை.

இவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர்.


இதனால்தான் ஜார்ஜ் ஸ்பன்சர் என்பவர் சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பு குறித்து, தாம் எழுதிய கட்டுரைக்கு ‘The Politics of Plunder�, �The Cholas in the 11th Century Ceylon� (அரசியல் கொள்ளை பதினோறாவது நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள் என்று தலைப்பிட்டுள்ளார்.

சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர் அதைக் கருதுகின்றனர்.

உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயம் உள்ளது என்பது புலனாகும்.

CONTINUED ...

UNMAIKAL said...

PART 6. இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன்.


அதே நேரத்தில் இலங்கையில் வாழும் இன்றைய பெளத்தர்கள் சோழர்களின் படையெடுப்பை தமிழ்நாட்டுச் சைவர்களின் படையெடுப்பு என்று சமய வண்ணம் பூசி இன்றைய இலங்கைத் தமிழ்ச் சைவர்களை வெறுப்புடன் நோக்கினால் அது எந்த அளவு தவறானதோ,


அந்த அளவு தவறானது கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று கருதுவதும்,


அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும், படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கும் மன்னர்கள் எதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருப்பார்கள்.

இது இயற்கையானது.

இதற்கு இஸ்லாமிய சமயம் சார்ந்த படையெடுப்பாளர்களும் விதிவிலக்கல்ல.


(மதுரை பாரதி புக் ஹவுஸ், 'இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்' என்ற தலைப்பில் இக்கட்டுரையாசிரியரின் நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.)

உதயம் said...

// தனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை அவனது திருவாலங்காட்சுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் ஈழ நாட்டு கிராமங்களை தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குத் தானமாக ராசேந்திரன் வழங்கினான்.

பொலனறுவை என்ற ஊரை, ஜனநாதமங்கலம் என்று பெயர் மாற்றியதுடன் அங்கு சிவன் கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை.

இவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர்.

இதனால்தான் ஜார்ஜ் ஸ்பன்சர் என்பவர் சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பு குறித்து, தாம் எழுதிய கட்டுரைக்கு ‘The Politics of Plunder�, �The Cholas in the 11th Century Ceylon� (அரசியல் கொள்ளை பதினோறாவது நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள் என்று தலைப்பிட்டுள்ளார்.


சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர் அதைக் கருதுகின்றனர்.

உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயம் உள்ளது என்பது புலனாகும்.

அதே நேரத்தில் இலங்கையில் வாழும் இன்றைய பெளத்தர்கள் சோழர்களின் படையெடுப்பை தமிழ்நாட்டுச் சைவர்களின் படையெடுப்பு என்று சமய வண்ணம் பூசி இன்றைய இலங்கைத் தமிழ்ச் சைவர்களை வெறுப்புடன் நோக்கினால் அது எந்த அளவு தவறானதோ,
அந்த அளவு தவறானது கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று கருதுவதும்,
அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும், படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கும் மன்னர்கள் எதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருப்பார்கள்.இது இயற்கையானது. இதற்கு இஸ்லாமிய சமயம் சார்ந்த படையெடுப்பாளர்களும் விதிவிலக்கல்ல. //

'இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்' என்ற தலைப்பில் ஆ.சிவசுப்பிரமணியன். அந்நூலிலிருந்து ஒரு பகுதி.

அஜீம்பாஷா said...

'அவங்களெல்லாம் தாங்கள் அக்மார்க்கம் அமைதி மார்க்கம் என்று கூறிக் கொள்ளவில்லையே' அப்படினா
கண்ணன் என்ன சொல்ல வர்றார், அமைதி மார்க்கம் என்று சொல்லாதவங்க செய்வதெல்லாம் சரி என்கிறாரா.


Unknown said...

//அவங்களெல்லாம் தாங்கள் அக்மார்க்கம் அமைதி மார்க்கம் என்று கூறிக் கொள்ளவில்லையே. நீங்களும் உங்க மார்க்கமும் ஒலக அமைதிக்கானவை என்று நம்பும் உங்களுக்கு, மற்றவர்கள் குற்றம் செய்யக் கூடியவர்கள் என்று நான் வெளக்கி தான் வெளங்கிக் கொள்ள வேண்டுமா ?//

@கோவி கண்ணன்

அர்த்தமே இல்லாமல் பேசுகிறீர்களே....நான் குறிப்பிட்ட அனைத்து குண்டுவெடிப்பு செயல்களும் செய்தது தெளிவான நோக்கத்துடன் ...என்ன நோக்கம்..? ஒரு இடத்தில குண்டு வைத்து விட்டு அதை அப்பாவி முஸ்லிம் மக்களின் மீது போட்டு அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து..அவர்களுடைய மார்க்கம் தீவிர வாதத்தை போதிக்கிறது ...என்று இட்டு கட்டி இன்று வரை அதை தானே ஒரு அவலாக வாயில் போட்டு மென்று கொண்டு இருக்கிறீர்கள்...அனால் இன்னும் வெளிவராத எத்தனையோ குண்டுவெடிப்பு சம்பவங்கள் இருக்கின்றன...அதுவும் வெளிவரும். பின்பு தெரியும்...எது அமைதி மார்க்கம் எது தீவிரவாத மார்க்கம் என்று...

//அவங்களெல்லாம் தாங்கள் அக்மார்க்கம் அமைதி மார்க்கம் என்று கூறிக் கொள்ளவில்லையே.//

என்ன ஒரு கேவலமான பதில் ...அக்மார்க் மார்க்கம் இல்லை என்றால் அவன் குண்டு வைத்து விட்டு அடுத்தவன் மேல் பழி போட வேண்டுமா ?...அதை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்...அர்த்தமா பேசுவீர்கள் என்று அல்லவா உங்களை நினைத்து விட்டேன்...உங்கள் காவி சிந்தனை வெளி வருகிறது...
இங்கு வாதமே இஸ்லாமியர்கள் குண்டு வைப்பதாகத்தான்...ஆனால் இஸ்லாத்தின் மீது பழி போடப்படுகிறது என்று சொல்லியும் அதுக்கு, அவன் அப்படி தான் செய்வான் ..நீங்கள் தான் பழியை சுமந்து கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்வது போல் உள்ளது உங்கள் பதில் ...சரி இஸ்லாம் தீவிர வாதத்தை ஆதரிக்கிறது என்று வைத்து கொள்வோம்....நாங்கள் ஏன் உங்களிடம் இவ்வாறு இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று சொல்ல வேண்டும்..இஸ்லாத்தை ,நபி அவர்களை எவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்கிறீர்கள்...இஸ்லாம் வன்முறையை போதித்தால் இப்போது நீங்கள் பேசி கொண்டு இருக்க முடியாது...இஸ்லாத்தை எதிர்ப்பவர் எவரையும் உலகம் பார்த்திருக்க முடியாது...நாங்களும் இப்படி விளக்கம் அளித்து கொண்டு இருக்க மாட்டோம்...இவ்வாறு இதுவே இஸ்லாம் அமைதியை போதிக்கிறது என்பதற்கு சான்று...

இனிமேல் அவன் குண்டு வச்சான்..இவன் குண்டு வச்சான்னு பேசி பின்னூட்டத்தில் வராதீர்...தெளிவா இருக்கு ஆதாரம் இந்தியாவுல நடக்குற குண்டு வெடிப்புக்கு இந்துத்வா தான் காரணம்னு...பின்ன எதுக்கு மகாராஷ்டிரா நான்டெட்ல வெடி குண்டு தொழிற்சாலையே வைத்திருக்க வேண்டும் RSS பயங்கரவாதிகள்...?என்ன தீபாவளிக்கு பட்டாசு தயாரிக்கவா...?அதுல குண்டு வெடிக்க போய்தானே உண்மை வெளிவந்தது ...

ஒரு கேள்வி ..

இந்தியாவுல இந்துத்துவா சக்திகள் தான் செய்கிறது என்கிறீர்கள்..சரி.. அப்ப உலகத்துல மற்ற நாடுகள்லயும் குண்டு வெடிக்கிறதே...அங்க எந்த RSS காரன் வைக்கிறான் ?

உலக அளவுல வைக்கிறது யாருன்னு சொல்லனுமா...? இந்துதுவா சக்திகளை விட யூத அமெரிக்க சக்திகள் பெரியது..பயங்கரமானது... அது இன்ஷா அல்லாஹ் பதிவிலே பார்க்கலாம்...

கேள்வி ...

என்னய்யா நீங்க ஒரேடிய எல்லாத்துக்கும் இஸ்லாத்தின் எதிரிகள் தான் காரணம்னு சொல்லுறீங்க ...அப்ப முஸ்லிம்ல யாருமே குண்டு வைக்கிறது இல்லையா ...?

அடக்குமுறைக்கு ஆளான ,நீதி கிடைக்காத எந்த சமுதாயம் ஆனாலும் வன்முறைய கையில் எடுப்பது புதிதல்ல...மாவோஇஸ்டுகள் ஏன் வன்முறையில் இறங்குறான்...அவன் உரிமை அவனுக்கு கிடைக்கல... அவன் முஸ்லிமா ..?கிடையாது..வன்முறைய ஒழிக்கனும்னா அதுக்கு அதில எவன் ஈடு படுறானோ அவனோட நீதியையும் உரிமையையும் கொடுத்தாலே உலகத்துல பாதி வன்முறை ஒழிஞ்சிரும் ..அதுக்காக அவர்களுடைய மார்க்கத்தை குற்றம் சொல்வது அறிவுடைமை ஆகாது..

நன்றியுடன்
நாகூர் மீரான்

Unknown said...

//அவங்களெல்லாம் தாங்கள் அக்மார்க்கம் அமைதி மார்க்கம் என்று கூறிக் கொள்ளவில்லையே. நீங்களும் உங்க மார்க்கமும் ஒலக அமைதிக்கானவை என்று நம்பும் உங்களுக்கு, மற்றவர்கள் குற்றம் செய்யக் கூடியவர்கள் என்று நான் வெளக்கி தான் வெளங்கிக் கொள்ள வேண்டுமா ?//

@கோவி கண்ணன்

அர்த்தமே இல்லாமல் பேசுகிறீர்களே....நான் குறிப்பிட்ட அனைத்து குண்டுவெடிப்பு செயல்களும் செய்தது தெளிவான நோக்கத்துடன் ...என்ன நோக்கம்..? ஒரு இடத்தில குண்டு வைத்து விட்டு அதை அப்பாவி முஸ்லிம் மக்களின் மீது போட்டு அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து..அவர்களுடைய மார்க்கம் தீவிர வாதத்தை போதிக்கிறது ...என்று இட்டு கட்டி இன்று வரை அதை தானே ஒரு அவலாக வாயில் போட்டு மென்று கொண்டு இருக்கிறீர்கள்...அனால் இன்னும் வெளிவராத எத்தனையோ குண்டுவெடிப்பு சம்பவங்கள் இருக்கின்றன...அதுவும் வெளிவரும். பின்பு தெரியும்...எது அமைதி மார்க்கம் எது தீவிரவாத மார்க்கம் என்று...

//அவங்களெல்லாம் தாங்கள் அக்மார்க்கம் அமைதி மார்க்கம் என்று கூறிக் கொள்ளவில்லையே.//

என்ன ஒரு கேவலமான பதில் ...அக்மார்க் மார்க்கம் இல்லை என்றால் அவன் குண்டு வைத்து விட்டு அடுத்தவன் மேல் பழி போட வேண்டுமா ?...அதை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்...அர்த்தமா பேசுவீர்கள் என்று அல்லவா உங்களை நினைத்து விட்டேன்...உங்கள் காவி சிந்தனை வெளி வருகிறது...
இங்கு வாதமே இஸ்லாமியர்கள் குண்டு வைப்பதாகத்தான்...ஆனால் இஸ்லாத்தின் மீது பழி போடப்படுகிறது என்று சொல்லியும் அதுக்கு, அவன் அப்படி தான் செய்வான் ..நீங்கள் தான் பழியை சுமந்து கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்வது போல் உள்ளது உங்கள் பதில் ...சரி இஸ்லாம் தீவிர வாதத்தை ஆதரிக்கிறது என்று வைத்து கொள்வோம்....நாங்கள் ஏன் உங்களிடம் இவ்வாறு இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று சொல்ல வேண்டும்..இஸ்லாத்தை ,நபி அவர்களை எவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்கிறீர்கள்...இஸ்லாம் வன்முறையை போதித்தால் இப்போது நீங்கள் பேசி கொண்டு இருக்க முடியாது...இஸ்லாத்தை எதிர்ப்பவர் எவரையும் உலகம் பார்த்திருக்க முடியாது...நாங்களும் இப்படி விளக்கம் அளித்து கொண்டு இருக்க மாட்டோம்...இவ்வாறு இதுவே இஸ்லாம் அமைதியை போதிக்கிறது என்பதற்கு சான்று...

இனிமேல் அவன் குண்டு வச்சான்..இவன் குண்டு வச்சான்னு பேசி பின்னூட்டத்தில் வராதீர்...தெளிவா இருக்கு ஆதாரம் இந்தியாவுல நடக்குற குண்டு வெடிப்புக்கு இந்துத்வா தான் காரணம்னு...பின்ன எதுக்கு மகாராஷ்டிரா நான்டெட்ல வெடி குண்டு தொழிற்சாலையே வைத்திருக்க வேண்டும் RSS பயங்கரவாதிகள்...?என்ன தீபாவளிக்கு பட்டாசு தயாரிக்கவா...?அதுல குண்டு வெடிக்க போய்தானே உண்மை வெளிவந்தது ...

ஒரு கேள்வி ..

இந்தியாவுல இந்துத்துவா சக்திகள் தான் செய்கிறது என்கிறீர்கள்..சரி.. அப்ப உலகத்துல மற்ற நாடுகள்லயும் குண்டு வெடிக்கிறதே...அங்க எந்த RSS காரன் வைக்கிறான் ?

உலக அளவுல வைக்கிறது யாருன்னு சொல்லனுமா...? இந்துதுவா சக்திகளை விட யூத அமெரிக்க சக்திகள் பெரியது..பயங்கரமானது... அது இன்ஷா அல்லாஹ் பதிவிலே பார்க்கலாம்...

கேள்வி ...

என்னய்யா நீங்க ஒரேடிய எல்லாத்துக்கும் இஸ்லாத்தின் எதிரிகள் தான் காரணம்னு சொல்லுறீங்க ...அப்ப முஸ்லிம்ல யாருமே குண்டு வைக்கிறது இல்லையா ...?

அடக்குமுறைக்கு ஆளான ,நீதி கிடைக்காத எந்த சமுதாயம் ஆனாலும் வன்முறைய கையில் எடுப்பது புதிதல்ல...மாவோஇஸ்டுகள் ஏன் வன்முறையில் இறங்குறான்...அவன் உரிமை அவனுக்கு கிடைக்கல... அவன் முஸ்லிமா ..?கிடையாது..வன்முறைய ஒழிக்கனும்னா அதுக்கு அதில எவன் ஈடு படுறானோ அவனோட நீதியையும் உரிமையையும் கொடுத்தாலே உலகத்துல பாதி வன்முறை ஒழிஞ்சிரும் ..அதுக்காக அவர்களுடைய மார்க்கத்தை குற்றம் சொல்வது அறிவுடைமை ஆகாது..

நன்றியுடன்
நாகூர் மீரான்

Anonymous said...

Kavya says:
September 17, 2012 at 5:48 am

// பிற ஜாதியை தீண்டாமல் இருப்பது, அடி மட்ட ஜாதிகளிலும் இருக்கிற வழக்கம்தான். இதை பிராமணருக்கு மட்டும் சொந்தமாக ஆக்குவது கண்டிக்க தக்கது. தலித் மக்களில் கூட சக்கிலியர்களும் பறையர்களும் ஒன்று கூட மாட்டார்கள். இவ்வளவு ஏன், பிராமணர்கள், தங்கள் ஜாதி குள்ளேயே தீட்டு பார்பார்கள். இது தெரியுமா உங்களுக்கு? இன்றளவும் சில ஐயங்கார் வீடுகளில் ஐயர்களை உள்ளே வர விடமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அவர்கள் போன பிறகு அந்த இடத்தை மாட்டு சாணத்தை வைத்து சுத்தம் செய்வார்கள். இதை நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஏன் நீங்கள் சொல்லும் கௌண்டர்களும், செட்டியார்களும் என மற்ற ஜாதிகளும் கூட தீண்டாமையை தங்களுக்கு கீழே உள்ள ஜாதியில் காட்டுகிறார்கள்.//

ஐயங்காரோ எவரோ அவர்கள் வீட்டுக்குள் என்ன செய்தாலும் உங்களுக்கு என்ன பிரச்சினை? நீங்கள் எங்கள் வீட்டுக்குள் வந்து சென்றவுடன் நாங்கள் கழுவிவிட்டால் அது எங்கள் விசயம். உங்கள் முன்னால் செய்தால் மட்டுமே தவறு. என்று ஐயங்காரகள் கேட்டால் தவறில்லை. அதே சமயம், முன்னாள் வரும் தலித்தை ‘ஒத்திப்போ’ எனபதும், ஐயர் போலி, நாங்கள்தான் உண்மைப்பிராமணாள் என்று பத்திரிக்கைகளில் எழுதுவது, பொதுவிடங்களில் பேசுவது தவறு. ஊரில் உள்ள டீக்கடையில் எல்லாருக்கும் டீ கொடுப்போம். தலித்துக்கு மட்டும் தரமாட்டோம் என்றால் அது தீண்டாமை. அதே தலித்தை என்வீட்டுக்குள் வரவிட மாட்டேன் தீட்டாகும் என்றால் தீண்டாமை கிடையாது. நாங்கள் கட்டிய கோயிலில் தலித்துவரக்கூடாதென்பது தீண்டாமையன்றூ. அக்கோயில் ஊருக்கு நடுவில் எல்லாருக்கும் பொதுவான வழிபாட்டுக்குக்கட்டிவிட்டு தலித்தை மட்டும் வராதே என்பது தீண்டாமை தீண்டாமை பொதுவிடத்தில் காட்டப்படவேண்டும்.

 உங்கள் சொற்களையேப் பாருங்கள். உங்கள் ஜாதியினரரை பிராமணர்கள் என்றழைக்கிறீர்கள். அவர்களைப் பறையர், சக்கிலியர் என்றழைக்கிறீர்கள். சக்கிலியருக்கு அருந்ததியர் என்றும் நாவிதருக்கு மருத்துவர் என்ற பெயரும் பறையருக்கு ஆதிதிராவிடர் என்ற பெயரும்தான் பொதுவிடங்களில் சொல்லப்படவேண்டும். உங்களுக்குப்பிராமணர் அவர்களுக்கு அவர் விரும்பாப்பெயர். மனதிலே ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம். உங்கள் பார்ப்பனர்கள் என்பதே தமிழ். பிராமணர் என்பது ஒரு ஜாதியின் பெயரன்று.

//சமுதாயத்தில் இருக்கிற ஒரு சில சம்பிரதாயங்களை மிகை படுத்தி, அதை அரசியல் ஆக்கி //

”சிலசம்பிராதாயங்கள்” உங்கள் பார்வையில். அவை சமூகத்தைக்கெடுக்கும் விசயங்கள் என்பதும் அதை அவர்கள் மட்டுமல்லாமல் மற்றும்பலரும் ஆதிகாலத்திலிருந்தே தட்டிக்கேட்டுவந்தார்கள் என்பதும் வரலாற்று உண்மைகளாகும்.

சதி, விதவைகளுக்கு மொட்டை போட்டு அவமானப்படுத்துவது, பால்ய விவாஹம், தலித்துக்களின் மீது தீண்டாமைக்கொடுமை – இவையெல்லாம் சம்பிராதாயங்களா?

Anonymous said...

பூவண்ணன் says:
September 18, 2012 at 3:56 pm

தமிழ் ஹிந்துவில் வந்த இதே கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டங்கள்

எண்ணிக்கை அதிகமாக யார் இருந்தாலும்/அதிகாரத்திலும் பங்கோடு இருக்கும் போது அவர்கள் ஆதிக்கம் செய்வது தான் எங்கும் நடக்கிறது.அதை தடுப்பது தான் இட ஒதுக்கீடு
உத்தர் ப்ரதேச மாநிலத்தில் பிராமணர்கள் நம்ம ஊரில் உள்ள முக்குலத்தோர்,வன்னியர்,நாடார் போல குறிபிடத்தக்க சதவீதத்தில் உள்ளனர்.அங்க சும்மா அடிச்சு விளையாடுவாங்க
முக்கால்வாசி தாதா,கொலை கொள்ளை எல்லாவற்றிலும் திவாரி,ஷர்மா,திரிபாதி என்று தான் பெயர்கள் இருக்கும்
செல்வி மாயாவதியின் ஆட்சியில் ஒரு குப்தா என்ற பொறியியல் இன்ஜிநீரை அடித்து கொன்ற எம் எல் ஏ ஒரு திவாரி

http://articles.economictimes.indiatimes.com/2008-12-24/news/28465674_1_pwd-engineer-m-k-gupta-bsp-mla-shekhar-tiwari

இப்ப அகிலாஷ் யாதவ் ஆட்சிக்கு வந்தவுடன் கூண்டாஇசம் ,ஆட்டோ டிரைவர் அடித்து கொலை என்று செய்தி .பார்த்தல் ஒரு திவாரி யாதவ் என்பரை அடித்து கொலை செய்கிறார்

http://www.dnaindia.com/india/report_sp-worker-beats-auto-driver-to-death-in-kanpur_1665118

இடைநிலை மற்றும் மற்ற உயர்சாதியினரையே இந்த அடி அடிகிறார்கள் என்றால் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணி பாருங்கள்.
பார்சிகள் ஒன்றும் செய்வதில்லை மற்ற சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை போல என்றால் காரணம் எண்ணிக்கை. அவர்களின் பாதி எண்ணிகையில் பார்சிகள் இருந்தால் அவர்களும் புகுந்து விளையாடுவார்கள்
http://zeenews.india.com/news/uttar-pradesh/amarmani-tripathi-out-of-jail-for-2-months_729950.html

http://news.worldsnap.com/states/bihar/behind-bars-but-jd-u-legislator-munna-shukla-still-enjoys-minister-status-88475.html
வேறு மாநிலத்தில் மும்பையில் வசித்தாலும் தன் தங்கை கேரளாவை சேர்ந்த கீழ்சாதியை சார்ந்தவனை மணந்து கொண்டதால் அவர்கள் குடும்பத்தையே அழித்த திவாரி சகோதரர்களின் வழக்கில் நீதிபதியும் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது என்று தீர்ப்பு தந்ததும் இங்கு உண்டு

http://www.indlaw.com/guest/DisplayNews.aspx?8B2609C9-2E84-46DB-92F8-F2FDB42A0616

Anonymous said...

பூவண்ணன் says:
September 18, 2012 at 3:58 pm

ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதை போல தான் திராவிட இயக்கமும்.அந்த இயக்கத்தை பெருமளவில் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் சுவீகரித்து கொண்டதால் அவர்கள் நன்றாகவே பலன் பெற்றார்கள்.மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் தான் அதன் பலன்கள் புரியும்.
ஹிந்துத்வம் மற்றும் காங்கிரஸ் கோலோச்சிய/கோலோச்சும் ராஜஸ்தான்,உத்தர் பிரதேசம்,மத்திய பிரதேசம் ,பீகார் ,கர்நாடகா போன்ற மாநிலங்களில் சாதிகளுக்கு இடையே ஆன நிலையோடு தமிழகத்தை ஒப்பிட்டால் நம் நிலை புரியும்.
திருப்பி அடிக்கலாம்/சாதி கடந்து திருமணம் செய்யலாம்,பிறப்பால் எவனும் உயர்ந்தவன் கிடையாது என்ற சிந்தனையே அங்கு பின்தங்கிய சாதிகளுக்கு இன்னும் வரவில்லை.
மதரீதியாக சாதிகள் இல்லை என்று சொல்லும் சீக்கிய மதத்தை ஏற்ற பஞ்சாபில் கூட சாதிபிரிவினைகள் வெகு அதிகம்.முப்பது சதவீதத்திற்கு மேல் இருந்தாலும்/பொருளாதார ரீதியாக முன்னேறி இருந்தாலும் தலித் சீக்கியர்களுக்கும் உயர்சாதி சீக்கியர்களுக்கும் பிளவுகள் மிக அதிகம்.இப்போது கூட கீழ் சாதி சீக்கியரை மணந்த குற்றத்திற்காக சொந்த மகளை கொலை செய்த/வலுகட்டாயமாக கரு கலைப்பு செய்து இறப்புக்கு காரணமான குற்றத்திற்காக மந்திரி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
சாதி வேண்டாம் என்பவர்களை கிண்டலாக /வெறுப்பாக பார்க்கும்,சாதிரீதியான பெருமைகள் /இழிவுகள் சரி தான் என்ற எண்ணமே அங்கு மிகவும் பெரும்பாலோருக்கு இன்றும் உண்டு(பாரதியின் மறைவிற்கு கூட போகாத,அவரை சபித்த நம் தமிழகத்தின் 90 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலை தான் ).இங்கே போலித்தனமாக இருந்தாலும் சாதி வேண்டாம் ,ஒழியனும் என்று பேசுபவர்கள் பலர் உண்டு.தலைவர்களும் அதில் அடக்கம்.அதில் ஓரிரு சதவீதம் சொல்வதற்கு ஏற்ப உண்மையானவர்களாக இருந்தால் கூட அதுவே மற்ற மாநிலங்களை விட பல மடங்கு அதிகம் தான்.
24 ஆண்டுகளுக்கு முன்னே கலைஞர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முப்பது சதவீதம் இட ஒதுக்கீடு செய்தார்.ஜெயலலிதா அனைத்து பெண்கள் காவல் நிலையம்,பெண் கமாண்டோ என்று பெண்கள் அனைத்து துறைகளிலும் மிளிர நடவடிக்கைகள் எடுத்தார்.

தமிழகத்தை சேர்ந்த பெண்கள் தான் அதிகமாக வேலைக்கு போவது,பெரிய பதவிகளில் சிறந்து விளங்குவது ,சாதி மறுப்பு திருமணங்களில் ஈடுபடுவது போன்றவற்றில் முன்னோடியாக உள்ளனர்.

மத்திய அரசு பணிகளில்,விளையாட்டு,கலைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் மற்றும் ஒதுக்கீட்டு வகுப்பினர் பெரும்பாலும் தென் மாநிலங்களை சார்ந்தவர்களே
தமிழகத்தில் சாதிகளுக்கு இடையே ஆன இடைவெளி குறுகி கொண்டே தான் வருகிறது.அதற்க்கு திராவிட இயக்கம் முக்கிய காரணம்

Anonymous said...

september 18, 2012 2:12 PM
வன்பாக்கம் விஜயராகவன் said...

புலிகளைப்பற்றிய ஒரு கணிப்புக்கு நூஃமனின் -ஒரு இலங்கை தமிழர் -இண்டெர்வ்யூ படிக்க.

http://www.kalachuvadu.com/issue-153/page42.asp

இந்த 30 வருடப் போராட்டத்திற்கும் இத்துணை இழப்புகளுக்கும் பிறகு இது போன்ற துயரம் தொடரக் காரணம் புலிகளின் அணுகுமுறைதானா?

அப்படித்தான் நான் சொல்லுவேன். புலிகள் இயக்கம் அடிப்படையிலேயே ஒரு ராணுவ அமைப்புத்தான். அவர்களுக்கு என்று தெளிவான, யதார்த்தமான அரசியல் பார்வை இல்லை. அரசியல் நெளிவுசுளிவுகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. 1987இல் இந்திய நிர்ப்பந்தத்தால் வந்த தீர்வை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொண்டு, தங்களை ஸ்திரப்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார்கள். மக்களை அரசியல்மயப்படுத்தி மக்கள் சக்தியில் நம்பிக்கை வைக்காமல் ஆயுத முனையில் மக்களை வழிநடத்தினார்கள். தாங்கள், தாங்கள் மட்டுமே, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதில் உறுதியாக நின்றார்கள். தங்களுடன் கருத்துவேறுபட்டவர்களை எல்லாம் துரோகிகள் என்று அழித்தார்கள். அவர்கள் நம்பியிருந்த ஆயுதப்போர் என்னும் ஒற்றை அணுகுமுறையால் முதலில் தங்கள் மக்களிடமிருந்தே அன்னியப்பட்டார்கள். பிறகு வெளியிலிருக்கும் எல்லா ஆதரவுச் சக்திகளையும் இழந்தார்கள். அவர்களின் தோல்வி என்பது தவிர்க்க முடியாத தற்கொலைதான்.



புலம்பெயர் தமிழர்கள் இன்னும் தமிழ் ஈழக் கனவில் இருக்கிறார்கள். நாடுகடந்த தமிழ் ஈழம் ஒன்றையும் பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்தலுக்கான முயற்சியாகவே தெரிகிறது. ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு அது எந்தவகையிலும் உதவாது.


இலங்கையின் எல்லாச் சிறுபான்மையினரையும் அது மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது. சிங்கள பௌத்த தீவிரத் தேசியவாதத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது. இதுதான் புலிகளின் இந்த 30 ஆண்டுக்காலப் போரின் பலன் என்பது துயரமான விடயம். சிங்கள இதழ் ஒன்றுக்கான நேர்காணலில் “புலிகள் தமிழ் மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டு நந்திக் கடலில் மூழ்கிவிட்டனர்” எனச் சொல்லியிருந்தேன். இதுதான் யதார்த்தம். புலிகளின் தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் கூறலாம். என்றாலும் பிரதான காரணம் புலிகளின் தற்கொலை அரசியல்தான். ஈழத் தமிழ் மக்களிலிருந்தும் ஏனைய இலங்கை மக்களிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் சர்வதேச நாடுளிலிருந்தும் அவர்கள் தனிமைப்பட்டதற்கு அதுதான் காரணம்.

கோவி.கண்ணன் said...

//இனிமேல் அவன் குண்டு வச்சான்..இவன் குண்டு வச்சான்னு பேசி பின்னூட்டத்தில் வராதீர்...தெளிவா இருக்கு ஆதாரம் இந்தியாவுல நடக்குற குண்டு வெடிப்புக்கு இந்துத்வா தான் காரணம்னு...//

ஆமாம் ஆமாம், இன்னும் 10 ஆண்டுகளில் மும்பை தாஜ் ஓட்டலில் நடந்த படுகொலைகளும் தீ வைப்புகளும், பஜ்ரங்தள் தான் செய்தது என்று பாகிஸ்தானிய பத்திரிக்கை ஆராய்ச்சியை மேற்கோள்காட்டி செய்திகள் வரும்.

மும்பைத் தாகுதல் காசாப் அண்கோவின் கைவரிசையா ? சுவனப்பிரியன் நோண்டி நொங்கெடுத்து எழுதுவார்.

:)

:)

Anonymous said...

இலங்கையில் நடந்தது என்னவென்பதையும் இந்துத்துவவாதிகள் அறிந்துகொள்ள வேண்டுமே. பிரபாகரன் என்ற பயங்கரவாதி தன்னுடைய இயக்கத்திலிருந்த ஏராளமான இந்து மத ஆட்களுக்கு முஸ்லிம் பெயர்களை இயக்கப் பெயர்களாகச் சூட்டுவது வழமையாக இருந்தது. அதன் நோக்கம் முஸ்லிம்களுள் ஒரு சாரார் தன்னை ஆதரிப்பதாகக் காட்டுவதும், விடுதலைப் புலிகள் என்னும் பயங்கரவாதிகள் புரியும் அட்டூழியங்களுக்கு முஸ்லிம்கள் மீது பழி போடுவதுமே.

- வள்ளுவன்

UNMAIKAL said...

முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு


7.04.2011 அன்று டெல்லியில் நடந்த INSTITUTE OF OBJECTIVE STUDIES என்ற கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேசும் பொழுது

“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.

இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,

இந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,

கஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்

பல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.

ஆனால், உண்மை எதுவெனில்,

மைசூர் மன்னன் மாவீரன் திப்பு சுல்தான் 153 கோயில்களுக்கு மானியம் கொடுத்துள்ளார்.

மேலும் சமஸ்கிருதம்- உருது மொழி இணைந்த இந்திய கலாச்சாரத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனால் அதனை மறைக்க முகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி என்று கூறினார்.”

தன்னுடைய இந்த உரைக்கு ஆதாரமாக வரலாற்று ஆசிரியர் B.N.பாண்டே எழுதிய “History in the Service of Imperialism” வரலாற்று நூலை மேற்கோள் காட்டி உள்ளார்.

நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! சபாஷ்!!! நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்களே !!!

மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.-

"நீதிபதி மார்கண்டேய கட்ஜு"

ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்

‘குண்டு வைத்தது நாங்கள்தான்

என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘

என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன.

அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.

எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.

யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?

முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.

எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.

நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது

என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?
THANKS TO SOURCE: http://vanjoor-vanjoor.blogspot.com/2011/11/blog-post_09.html

.

UNMAIKAL said...

PART 1. வரலாற்று காலம் தொட்டே உருவான சூழ்ச்சி

ஊடகங்களின் திரித்தலுக்கும் மறைத்தலுக்குமான வரலாற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் அதற்கான விதை வரலாற்று காலம் தொட்டே விதைக்கப்பட்டிருப்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

இந்திய வரலாற்றைத் தொகுத்த ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களுக்கும் பிற சமூகங்களுக்கும் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம்கள் மேல் வெறுப்பை உண்டாக்குமாறு வரலாற்றில் முஸ்லிம்கள் செய்த நன்மைகளையும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் மறைத்தும் திரித்தும் வரலாற்றைச் சிதைத்துள்ளனர்.


அதனால்தான் இன்றும் நம் வரலாற்றுப் பாடங்களில்,

ஆரியர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும்போது "ஆரியர் வருகை" என்றும் "முஸ்லிம்கள் படையெடுப்பு" என்றும் பதிந்துள்ளதைப் பார்க்கலாம்.

சுயநலனுக்காக மதச் சண்டைகளை உருவாக்கி, மக்களைக் கொன்று குவித்த இந்து மன்னர்களின் வரலாற்றை மறைத்து, அவர்களை உன்னதமானவர்களாகத் திரித்துக் காட்டுகிறது நாம் பயிலும் வரலாறு.

அதுபோல முஸ்லிம் மன்னர்களில் இஸ்லாத்துக்கு மாற்றமான புதிய மதமொன்றை உருவாக்கிய அக்பர், மனைவியின் கல்லறைக்காக மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்த ஷாஜஹான் போன்ற மன்னர்களை - மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தப்புரங்களில் கோலோச்சியவர்களை - நல்லவர்களாக, மகாபுருஷர்களாக, கலைநயம் மிக்கவர்களாகச் சித்தரிக்கும் வரலாறு,

தன் சொந்தச் செலவுக்கு அரசாங்க கஜானாவிலிருந்து நிதி எடுக்காமல் குர்ஆனை எழுதி, தொப்பி நூற்று, எளிய வாழ்க்கை வாழ்ந்த மன்னர் ஒளரங்கசீப்பை மதவெறியராகவும்

ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த துக்ளக்கை ஒரு கோமாளியாகவும்

நம் உள்ளத்தில் பதிய வைத்ததில் நெஞ்சில் வஞ்சகம் குடிகொண்டிருந்த வரலாற்றாசிரியர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைமகன் திப்புசுல்தான், கேரளத்து நாயர் பெண்களின் சீர்திருத்திற்காகப் பாடுபட்டதைத் திரித்த வரலாறு,

18 தடவையும் படையெடுத்து வென்ற முஹம்மது பின் கஜ்னவியை முஸ்லிம்களின் உள்ளங்களில்கூட தோற்றுப்போன ஒரு வில்லனாக சித்தரிப்பதில் நம் பாடத் திட்டத்தில் இப்போதும் பயிற்றுவிக்கப்படுகின்ற வரலாறு வென்றிருக்கின்றது.


இறைமறை குர்ஆனும், "நம்பிக்கையாளர்களே ! ஒரு(தீய)வன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதை(ஏற்றுக் கொள்ளும் முன்னர்)த் தீர விசாரித்துக் கொள்ளுங்கள்.

(இல்லையேல் உண்மை) அறியாமல் ஒரு (குற்றமற்ற) சமூகத்துக்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக் கூடும். பின்னர் (உண்மை வெளிவரும்போது) நீங்கள் செய்ததைக் குறித்து உங்களை நீங்களே நொந்து கொள்ள வேண்டியவர்களாவீர்கள்"
(49 : 6) என்று கூறுகிறது.

"தனக்குக் கிடைக்கும் செய்தியை ஆராயாமல் அப்படியே பரப்புவன் பொய்யன்" என நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.

அச்சு ஊடகங்களின் தற்போதைய நிலை

Print media என்று சொல்லப்படும் அச்சு ஊடகம், சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் - குறிப்பாகத் தமிழக அளவில் - பத்திரிகை தர்மத்தை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ளதைக் கண்கூடாகக் காணலாம்.

இன்று பத்திரிகைகள் - குறிப்பாக நாளிதழ்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்க இரண்டு வகையான உத்திகளைத்தான் கையாளுகின்றன.

அவை, 'பரபரப்புப் பத்திரிகையியல்' மற்றும் 'மஞ்சள் பத்திரிகையியல்' (Sensational Journalism and Yellow Journalism).

குஜராத் ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிறகு 'சந்தோஷ்' எனும் பத்திரிகை இந்துப் பெண்கள் முஸ்லிம்களால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கலவரத்தை ஊதிப் பெரிதாக்கியது தெரிந்ததே.

முஸ்லிம்கள் மீதோ கிருஸ்த்துவர்கள் மீதோ தாக்குதல் நடந்தால், "இரு பிரிவுகளுக்கு மத்தியில் பிரச்னை" என மென்மையாய் செய்தி தரும் பத்திரிகைகள்,

நேரெதிர் நிகழ்வுகளில் காட்டும் வேகம் ஆச்சரியமளிக்க கூடியதாக இருக்கும்!

எவர் வைத்து வெடித்த குண்டாக இருந்தாலும் எங்குக் குண்டு வெடித்தாலும் சற்றும் யோசிக்காமல் "முஸ்லிம் தீவிரவாதி", "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்று படுவேகமாகச் செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க ஊடகங்கள் தயங்குவதில்லை.

மாலேகானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு சங் பரிவார் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டமை இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


CONTINUED…..

UNMAIKAL said...

PART 2.. வரலாற்று காலம் தொட்டே உருவான சூழ்ச்சி

விடுதலைப்புலிகளை தமிழ்ப் போராளிகள் எனக் குறிப்பிடும் பத்திரிகைகள் பாலஸ்தீனப் போராளிகளுக்கு, "தீவிரவாதி" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவதைப் பார்க்கின்றோம்.

பிற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறும் தீவிரவாதிகள் என்று அழைக்கும் ஊடகங்கள் முஸ்லிம்களை மட்டும் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்று அழைப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம்.

குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் பயங்கரவாதி ப்ரக்யாசிங்கை, "சாது" என்று பயபக்தியுடன் அழைப்பதாகட்டும்,

ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு தீவிரவாத 'மாஸ்டர் மைண்ட்' ஆகத் திகழ்ந்த புரோஹித்தை தேசப் பற்றாளராகக் காட்டுவதற்கு நமது 'நடுநிலை நாளிதழ்கள்' படாத பாடு படுகின்றன.

பிற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறும் தீவிரவாதிகள் என்று அழைக்கும் ஊடகங்கள் முஸ்லிம்களை மட்டும் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்று அழைப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம்.

குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் பயங்கரவாதி ப்ரக்யாசிங்கை, "சாது" என்று பயபக்தியுடன் அழைப்பதாகட்டும்,

ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு தீவிரவாத 'மாஸ்டர் மைண்ட்' ஆகத் திகழ்ந்த புரோஹித்தை தேசப் பற்றாளராகக் காட்டுவதற்கு நமது 'நடுநிலை நாளிதழ்கள்' படாத பாடு படுகின்றன.


டெல்லி குண்டு வெடிப்பில் பக்கம் பக்கமாக எழுதி, இஸ்லாத்தைத் தூற்றிய இந்தியாடுடே முதல், பள்ளிவாசலில் குண்டு வெடித்தால் பள்ளி வாசலில் "வைக்கப்பட்டிருந்த" குண்டு வெடித்தது என்று செய்தியைத் திரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாசிசப் பத்திரிகை தினமலர்வரை,

அவற்றில் எதுவுமே இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்புப் பற்றிய செய்திகளில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை.

காரணம், வெளிப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருந்த அவர்களின் சொந்த கோர முகங்கள்!

பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிரபராதியாக வெளி வந்திருக்கிறார் இம்ரான்.

ஆனால் பொய்யான குற்றச்சாட்டுகளை பக்கம் பக்கமாக வெளியிட்ட பத்திரிகைகள் நிரபாரதியாக வெளிவந்த செய்தியில் அக்கறை காட்டவில்லை.

அவை அடுத்து ஒரு முஸ்லிமைக் குற்றவாளியாக, தீவிரவாதியாகக் காட்ட வேண்டிய ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கக் கூடும்..

இன்னொரு புறம் சமீபத்தில் தினமலர் செய்ததைப் போல் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் தங்கள் தலைவரைப் பற்றி அவதூறுகளை,

நையாண்டி செய்து அவர்களின் உணர்வுகளைத் தூண்டி,

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையையும் பத்திரிகைகள் செய்து கொண்டிருக்கின்றன.

அதுபோல இஸ்லாத்தைக் குறித்துத் தவறான செய்திகளைக் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் மூலம் பதியும் பத்திரிகைகள் அவற்றுக்கான மறுப்புகளை அனுப்பினால் அவற்றைப் புறக்கணிப்பதைப் பார்க்கின்றோம்.


அதுபோல ஆதிக்க சாதி எழுத்தாளர்கள் மூலமும் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, பெயர்தாங்கிகளாக வாழும் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின் போன்ற எழுத்தாளர்கள் மூலமும் "கருத்துச் சுதந்திரம்" என்ற பெயரால் முஸ்லிம்களின் உணர்வுகளைச் சீண்டுவதைப் பார்க்கின்றோம்.

எதற்கெடுத்தாலும் "புலனாய்வுப் பத்திரிகையியல் (Investigative Journalism)" என்ற பெயரில் "மதரஸாக்களில் ஆயுதப் பயிற்சி" போன்ற பொய்யான கட்டுக் கதைகளைப் பரப்பும் பத்திரிகைகள்,

முஸ்லிம் அமைப்புகளின் பேரணிகளைக்கூட தீவிரவாதப் பயிற்சிகளாகச் சித்தரிக்கும் புலனாய்வு(?)ப் பத்திரிகைகள்,

சங் பரிவாரங்கள் நடத்தும் வெளிப்படையான ஆயுதப் பயிற்சியை வெறும் செய்தியாகக்கூடத் தராது.


CONTINUED....

UNMAIKAL said...

PART 3.. வரலாற்று காலம் தொட்டே உருவான சூழ்ச்சி

தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் தற்போதைய நிலை

அச்சு ஊடகத்துக்குச் சற்றும் சளைக்காமல் - இன்னும் சொல்ல போனால் - அதை மேலும் மோசமாக்கும் வகையில்தான் தொலைக்காட்சி சானல்களும் உள்ளன.

புராண புளுகுகளை உண்மை வரலாறாகத் திரிக்கும் தொலைக்காட்சிகள் திப்புவின் உண்மை வரலாற்றை ஒளிபரப்பும் போது நூலை அடிப்படையாகக் கொண்ட "கற்பனை கதை" என்று அறிவிப்புச் செய்து ஒளிபரப்பியது நினைவிருக்கலாம்.

அதுபோல் "பகுத்தறிவுப் பகலவன்"களால் நடத்தப் படும் தொலைக்காட்சிகளில் மூட நம்பிக்கைகளைப் பார்வையாளர்களின் மனதில், குறிப்பாகப் பெண்களின் மனதில் விதைக்கும் நாடகங்களை ஒளிபரப்புவது,

அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மேற்கத்திய கலாசாரத்தைத் திணிப்பது,

எங்குக் குண்டுவெடிப்பு நடந்தாலும் Breaking News எனும் பெயரில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவது,

போன்ற சமுதாயச் சேவை(?)யாற்றும் தொலைக்காட்சிகள்,

"தீவிரவாதிகள்" என்று 'சொல்லப் பட்டவர்கள்' நிரபாரதிகள் என விடுதலை செய்யப்படும்போது கள்ள மவுனம் சாதிக்கின்றன.

பாராளுமன்றத் தாக்குதல் சதியில் 'மாட்டிக் கொண்ட' அப்சல் குருவுக்குத் தூக்குதண்டனையை உயர்நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் தரவில்லை.

மாறாக, தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தவே எனும் உண்மையை எந்த ஊடகமும் வெளிப்படுத்துவதில்லை.

நடுநிலை தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட, "அப்சல் குருவைத் தூக்கிலிடாதது ஏன்?" என கேள்வி எழுப்பி முஸ்லிம் விரோதப் போக்கை விதைக்கின்றனர்.

சமீபத்தில் நடந்த மும்பைத் தாக்குதலைக் குறித்து விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னமேயே நடுநிலை ஆங்கிலத் தொலைக்காட்சிகள்கூட நிகழ்வை நான்கு நாட்கள் நேரடி ஒளிபரப்புச் செய்தன.

அதிலொன்றும் தவறில்லை.

ஆனால், ஆங்காங்கே இஸ்லாமிய விரோதப் போக்கை விதைக்க முயன்றது தான் தவறு.

அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்.

தீவிரவாதத் தடுப்பு பிரிவின் தலைவர் கார்கரே முதலாவதாகக் குறி வைத்து சுடப்பட்டது,
அதற்கு முன்னர் அவருக்கிருந்த பரிவாரங்களின் கொலை மிரட்டல்,

இஸ்ரேலியர்களின் நரிமன் ஹவுஸின் பங்களிப்பு
என ஏராளமான சந்தேகங்கள் சங்பரிவார – மொஸாத் – அமெரிக்க பங்களிப்பை நோக்கி விரல் நீட்டினாலும் அவை தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் மறைக்கப்பட்டதை உணரலாம்.

இணையத்தளங்களில் ஓப்பீட்டளவில் முஸ்லிம்கள் முன்னேறியிருந்தாலும் இஸ்லாத்தின் பெயரில் திட்டமிட்ட போலி வலை தளங்கள், தவறான பிரசாரங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.

முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றுபட்டு,

பத்திரிகைகளில் வெளியாகும் தவறான செய்திகளுக்கு மறுப்பளித்தல்,

தேவையெனில் சட்ட நடவடிக்கை எடுத்தல்,

செய்தி நிறுவனங்களையும் ஊடகங்களையும் உருவாக்கல்,

பத்திரிகை உலகில் புகுதல் என,

தொலைநோக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் முஸ்லிம்கள் தங்களை மட்டுமல்ல, ஓட்டு மொத்த உலகையும் காப்பாற்ற முடியும்.

சிறந்த சமுதாயம் என அருள்மறை வர்ணிக்கும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இச்சமுதாயத்துக்கு மட்டும்தான் அந்த ஆற்றல் இருக்கிறது.

நீதிக்குக் குரல் கொடுக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் தன் தூக்கத்தைக் களைந்து அறிவாயுதத்தை கையில் ஏந்தி அநீதிகளுக்கெதிராய் போராடும் காலம் நெருங்கி விட்டது.

THANKS TO SOURCE: http://www.ottrumai.net/TArticles/30-MisleadingMedia-1.htm

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அய்யா கோவி கண்ணன் அவர்களே,
எங்கேயாவது நான் கோவையில் குண்டு வைத்த முஸ்லிம்களை விடுதலை செய் என்று சொல்லி நீங்கள் கேட்டதுண்டா? எவன் தவறு செய்தாலும் தண்டனைக்கு உள்ளாக வேண்டும். ஆனால் நீதி இரண்டு தரப்பிற்கும் சமநீதியாக இருக்க வேண்டும் என்று தான் இதற்கு முன்னர் ஒருதடவை சொல்லியிருக்கிறேன். ஆனால் சம்பந்தமேயில்லாமல் // இஸ்லாமிய பெயர்தாங்கிகளின் நற்செயலான குண்டுவெடிப்பு என்றாலே அப்பாவிகள் கொல்லப்படுவது வரவேற்கத்தக்கது இல்லை என்றாலும் மன்னிக்கத் தக்கது" என்று தாங்கள் திருவாய் மலர்ந்தால் விவாதிக்கலாம், இல்லை என்றால் விவாதம் வீண்.// இப்படி உளறுவது தங்களிடம் விவாதிக்க சரக்கு ஒன்றும் இல்லை என்பதை தான் காட்டுகிறது. உங்களிடம் நேர்மை இருந்தால் ஆதாரப்பூர்வமாக எழுதப்பட்ட இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்திருப்பீர்கள். ஆனால் அந்த நேர்மை துளியும் உங்களிடம் கிடையாது. நீங்களெல்லாம் என்னத்த எழுதி என்னத்த செஞ்சு.

வலையுகம் said...

மிஸ்டர் வவ்வால்

///காசி ஆலயத்திற்கு ஒரு கதை சொன்னீர்கள், சோம்நாத்,மதுரா கோயில், முதல் 60,000 கோயில்கள் இடிக்கப்பட்டதே ஏன்?////

உங்களுக்கு இவ்வளவு கஞ்சத்தனம் ஆகாது சொல்றது தான் சொல்றீங்கே 60,00000 கோயில்களை இடித்தார்கள் என்று சொல்லி இருக்கலாம் ஹா ஹா

மார்க்ஸ் தனது தனது புத்தகத்தில் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது

இந்துத்துவவாதிகளுக்கு வரலாறு ஒரு பாதுகாப்பான ஆயுதம்.செத்துப்போனவர்களும் இறந்தகாலங்களும் இன்று வந்து சாட்சி சொல்ல மாட்டார்கள் என்கிற தைரியம் அவர்களுக்கு. பச்சை மனங்களில் விதைக்கப்படும் நச்சுக் கருத்துக்கள் இந்துத்துவவாதிகளின் எதிர்கால அரசியலுக்கு இன்று செய்யப்படும் முதலீடு.

(பாட நூல்களில் பாசிசம். வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள் எனும் நூலில். அதன் ஆசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் முன்னுரை.)

Sathish Murugan . said...

@கோவி.கண்ணன் இப்போ எதுக்கு சண்டை? @சுவனப் பிரியன் முகலாய மன்னர்கள் அனைவரும் யோக்கிய சீலர்கள், எங்குமே கோவில்களை இடிக்கவில்லை, அவர்கள் வந்த பின்தான் இங்கு இருக்கும் திக்கற்ற சூனா பானாக்கள் எல்லோரும் தங்களுக்கு அறிவுகண்ணை திறந்து(?) அமுதம் தந்த நபி என்னும் நல்லவரின் இஸ்லாம் மதத்தை பின்பற்றினர். இப்பொழுது இந்தியாவில் குண்டு வைப்பதெல்லாம் நபி அன்று சொன்ன அறிவு சொற்பொழிவினால்தான். பாபர் மசூதி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தே அங்கு தான் இருந்தது. ராமரே நபியின் மறுபிறப்புதான். இஸ்லாம் மட்டுமே மதம், மற்றவை சாத்தானின் வேதம். போதுமா...? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், அப்படி என்ன மதம், மனிதனை மறந்த மதம்? அடுத்தவனை துன்புறுத்தி பார்ப்பதில் ஒரு குரூரம்? வெட்கமா இல்லை? இங்கு இருக்கும் சூனா பானக்களே, உங்களின் பூர்விகம் தமிழாய் இருப்பின், நீங்கள் எம்மிடமிருந்து எதிரியின் மிரட்டலுக்கு அஞ்சி அவனின் வற்புறுத்தலுக்கும் எலும்பு துண்டுக்கும் ஆசைப்பட்டு மதம் மாறிய வாப்பாக்களின் வழிவந்தவர்களே என்பதை நினைவில் கொள்க. இஸ்லாம் இன்று வந்த கோரை, இந்து ஆலமரம், என்றுமே அமைதியாத்தான் இருக்கும். போய் புள்ள குட்டிகள நல்லவழில வளக்க பாருங்க பாக்கிகள... எப்போ பார்த்தாலும் குண்டு வைக்கணும், மதம் பரப்பனும்னு கோணையாத்தான் இருக்கு புத்தி....

வலையுகம் said...

சூனா பான சதீஷ் முருகன் அவர்களுக்கு

///இங்கு இருக்கும் சூனா பானக்களே, உங்களின் பூர்விகம் தமிழாய் இருப்பின், நீங்கள் எம்மிடமிருந்து எதிரியின் மிரட்டலுக்கு அஞ்சி அவனின் வற்புறுத்தலுக்கும் எலும்பு துண்டுக்கும் ஆசைப்பட்டு மதம் மாறிய வாப்பாக்களின் வழிவந்தவர்களே ////

அப்பூடியா சொல்லவேயில்லை அது எப்பூடிப்பு பயந்து வந்தாய்ங்களா??? ஹா ஹா ஹா

பார்ப்பனிய ஆட்சியாளர்களின் ஒடுக்கு முறைக்குள்ளாகியிருந்த ஜாட்டுகள் இன்னும் இதர விவசாயச் சாதிகளின் உதவியோடு தான் முகம்மது பின் காசிம் சிந்துப் பகுதியை வெற்றிக் கண்டார்.(எலியட்:”இந்திய வரலாறு”)

பண்டைய இந்துப் பண்பாட்டின் உறுதியான ஆர்வலரான ஹேவல் முஸ்லிம்கள் மீது அனுதாபமோ அல்லது அவர்கள்பால் இரக்கமோ காட்டதவர்.இந்தியாவில் இஸ்லாம் பரவியது குறித்து அவர் முன்வைத்துள்ள சுவையான சான்று பின்வருமாறு:

”இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டவர்களுக்கு,நீதிமன்றத்தில்,ஒரு முஸ்லிம்களுக்குக் கிடைத்த அனைத்து உரிமைகளும் கிடைத்து வந்தன. அங்கு நீதிமன்றங்களில் அராபியச் சட்டங்களையோ, பழக்க வழக்கங்களையோ அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. குர்-ஆனே அனைத்து வழக்குகளையும் தீர்மானித்து வந்தது. மதமாற்றம் என்ற இந்த வழிமுறையானது இந்துச் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களிடையே குறிப்பாக, பார்ப்பனியத்தின் கடுமையான விதிமுறைகளால் “அசுத்தமான வர்க்கங்கள்” எனக் கருதப்பட்டு வந்த மக்களிடையே வலுவான பாதிப்பைச் செலுத்தி வந்தது.
(ஹேவல்- நூல்: இந்தியாவில் ஆரிய ஆட்சி)

ஆளாளப்பட்ட ஹேவலே உண்மை ஒத்துக் கொள்கிறார் சூனா பனா நீங்கள் எல்லாம் பிஸ்கோத்து வேறு எங்காவது போய் தலையாட்டுகிறவர்களிடம் போய் கதை சொல்லவும்

Unknown said...

@கோவி கண்ணன்

வருந்துகிறேன்...

தற்போது தான் பழைய பதிவுகளை (உங்கள் சகாக்களின் பகுத்தறிவு பதிவுகளையும் அதற்கு இட்ட எதிர் பதிவுகளையும்)பார்க்க நேர்ந்தது ...அதே பழைய பல்லவி தான் திரும்ப திரும்ப வருகிறது...நான் கூட புதுசா ஏதோ யோசிக்கிராங்கலோன்னு நெனைச்சி புல்லரிச்சி போனேன் ...இதற்கு முன்னர் எத்தனையோ சகோதர ,சகோதரிகள் மிக அழகாக விளக்கம் அளித்தும் அதே அற்ப கேள்விகள் மீண்டும் வருவதும் தெரிகிறது.. உங்களிடம் (நாத்திகர் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாத்தை மட்டுமே எதிர்ப்போர்..)இருப்பதே ஒரு சில கேள்விகள்.. அதை தான் வைத்து கொண்டு சார்வாகன் ,இக்பால் செல்வன் , தருமி, செங்கொடி,இன்னும் இது போன்றோர் பதிவை தேர்த்தி வருவதும் தெரிகிறது... இது கூட உங்கள் சொந்த அறிவு என்று சொல்லி விட முடியவில்லை...உலக அளவில் கேட்க படுகின்ற பொதுவான கேள்விகளே...இனிமேல் நீங்கள் மெனைக்கெட தேவை இல்லை...ஒவ்வொன்றாக எடுத்து அலசப்படும் ...இன்ஷா அல்லாஹ்...அதுவே இறுதியாக இருக்கும்...தமிழ் மொழி பேசும் மக்களுக்கு இனி நீங்கள் சொல்லி கொள்வதற்கு புதுசாக ஒன்னும் இருக்காது...இனி என்னிடம் இருந்து பின்னூட்டம் எதுவும் இது போன்ற கேள்விகளுக்கு வராது...இன்ஷா அல்லாஹ் ...இனி பின்னூட்டம் அல்ல ...பதிவு தான்...

நன்றியுடன்
நாகூர் மீரான்

வவ்வால் said...

திரு.ஹைதர் அலி,

இணையம் முழுக்க இந்துத்வ சக்திகளா, 60,000 கோயில்கள் என விக்கியிலும் இருக்கு போய் திருத்துங்க.

உங்களுக்கு தேவையானதை வரலாறு என்றும், எதிரானதை நச்சு கருத்துன்னும் சொல்லிட்டா சரியா போச்சா?

கஜினி முகமது, கோரி முகமது, அக்மது ஷா அப்தாலி, திமூர், செங்கிஸ்கான்,அலாவுதின் கில்ஜி, மாலிகாபூர்,அவுரங்க சீப் ,இவர்களைப்பற்றிய வரலாறு இணையம் முழுக்க தவறாக ,கொலைக்காரர்கள் என இருக்கு ,நீங்களும், சு.பி சுவாமியும் சேர்ந்து மாற்றி எழுதி எங்களுக்கு நல்ல வரலாற்றினைப்படிக்க தருவீர்களாக :-))

Anonymous said...

சதீஷ் முருகன் said.....


@நாகூர் மீரான், /*.இஸ்லாம் வன்முறையை போதித்தால் இப்போது நீங்கள் பேசி கொண்டு இருக்க முடியாது...*/ இஸ்லாம் வன்முறைய போதிக்கலன்னா, அப்புறம் என்னாத்துக்கு, எப்போவுமே குண்டு வச்சிட்டே இருக்கீங்க...? /*இஸ்லாத்தை எதிர்ப்பவர் எவரையும் உலகம் பார்த்திருக்க முடியாது...நாங்களும் இப்படி விளக்கம் அளித்து கொண்டு இருக்க மாட்டோம்...இவ்வாறு இதுவே இஸ்லாம் அமைதியை போதிக்கிறது என்பதற்கு சான்று... */ யோவ் காமடி பீசு, சாது மிரண்டா காடு கொள்ளாது, மவனே என்னைக்காவது மனிதர்கள் கொதிக்கும் போது, உன்னை மாதிரி (கவனிக்க, மனித இஸ்லாமியர்களை அல்ல) கோமாளிங்க இப்படி பேச நாக்கு இருக்காது... உன்னால என்ன பண்ண முடியும்? மிஞ்சி போனா சூனா பானா சைட்ல வந்து அவருக்கும் ரெண்டு ரவுண்டு அடி வாங்கி வைப்ப... விளக்கம் கிழிக்கிறாராம்... முதல்ல மனிதம்னா என்னன்னு தெரிஞ்சுக்கோ, அப்புறம் வசனம் பேசலாம். on ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?


Sathish Murugan . said...

@ஹைதர் அலி,

/*அப்பூடியா சொல்லவேயில்லை அது எப்பூடிப்பு பயந்து வந்தாய்ங்களா??? ஹா ஹா ஹா */
ஹி ஹி ஹி... ஒருத்தருக்கு சொந்த வரலாறே தெரியலயாம் , இவரு அடுத்தவங்க சொன்னத காப்பி பேஸ்டு பண்ணுவாராம். சன்னி, ஷியா, அரபு பேசும் முஸ்லீம், அரபு பேசா முஸ்லீம், மதம் மாறிய முஸ்லீம்.... தம்பி, போங்க... ரொம்ப பேசுனாலும் வேஸ்டு தான்...

அப்புறம், சூனா பானா -- சுவன பிரியன்....
எல்லா புகழும் சூனா பானாவுக்கே...

வலையுகம் said...

சதீஷ் முருகன்

/////மிஞ்சி போனா சூனா பானா சைட்ல வந்து அவருக்கும் ரெண்டு ரவுண்டு அடி வாங்கி வைப்ப...///

ஹா ஹா இம்பூட்டுத்தான் உங்க அரசியலா காத்து வாங்கும் உங்க தளத்தில் வந்து கருத்து போடாத்தான் இவ்வளவு பேச்சாஅ ஹா ஹா

இனி என்னிடம் இருந்து பின்னூட்டம் எதுவும் இது போன்ற கேள்விகளுக்கு வராது...இன்ஷா அல்லாஹ் ...இனி பின்னூட்டம் அல்ல ...பதிவு தான்...

இப்படி நாகூர் மீரான் சொல்லி விட்டதால் உங்கள் தளத்தில் கருத்தும் போட மாட்டார் வட போச்சே

Sathish Murugan . said...

கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியல, பக்கிக்கு காமடிய பாரு...

ஹுஸைனம்மா said...

எல்லா மன்னர்களும் கொள்ளையடிக்க, எதிரியை ஒழிக்க போன்ற காரணங்களுக்காகத்தான் கோவில்களை இடித்தார்கள். இதில் முகலாய மன்னர்களும் விதிவிலக்கில்லை. தமிழகத்தில் காஞ்சி கோயிலும் சமணக் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. (http://amarx.org/?p=348)

திருப்பதி கோயிலும் முன்பு முருகன் கோயிலாக இருந்ததெனத் தெரிவிக்கும் மின்னஞ்சல் பெற்றதாக ஒரு இந்து அன்பர் வேறொரு வலைப்பூவின் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இப்படி ஒவ்வொரு தரப்பினரும் எதிரியைப் பலமிழக்கச் செய்யவே கோயில்களைக் குறிவைத்தார்கள். முகலாய மன்னர்கள் இஸ்லாமைப் பரப்பத்தான் கோவில்களை அழித்தார்கள் என்றால் வடநாடு முழுதும் இன்று இஸ்லாமிய பள்ளிவாசல்களால் நிரம்பியிருக்க வேண்டுமே?

எந்த முகலாய மன்னரும் இஸ்லாமைப் பரப்புவதற்காக இந்தியா வரவில்லை. அவர்கள் வந்தபின்புதான் இஸ்லாம் இந்தியாவுக்கு வந்தது என்பதும் தவறான கூற்று. இந்தியாவின் முதல் மசூதி கேரளாவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. முகலாயர்கள் வந்ததோ 14-15ம் நூற்றாண்டுகளில்தான்.

Anonymous said...

சதீஷ் முருகன் ....said

@ஹைதர் அலி

அட, /*காத்து வாங்கும் உங்க தளத்தில்*/ நீங்க படிக்க, எழுத நான் ஒன்னும் சூனா பானா இல்லை... எனக்கு பிடிச்சதை என் இடத்துல கிறுக்குறேன். /*உங்கள் தளத்தில் கருத்தும் போட மாட்டார் வட போச்சே */ ஹி ஹி ஹி... உங்களோட ஒரே சிரிப்பு தான் போங்க... நீங்க சொல்றது கருத்தா? அட... உங்க கருத்த வச்சு பாகிஸ்தான் பேங்குல பணமா வாங்க போறேன்?

on ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?



suvanappiriyan said...

வருகை புரிந்து கருத்தை பதிந்த வாஞ்சூர் பாய், முஹம்மது ஆஷிக், நாகூர் மீரான், ஹைதர் அலி, சதீஷ் முருகன், கோவி கண்ணன், வவ்வால், ஷேக் தாவூத், உதயம், அப்துல் அஜீஸ், புரட்சி மணி, ஜெய் சங்கர், சிராஜ், ரஹ்மான் அனைவருக்கும் நன்றிகள் பல.

பல வேலைகள் காரணமாக உடனுக்குடன் இணையத்தில் வந்து பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். இத்தனை ஆதாரங்கள் அடுக்கடுக்காக இருந்தும் நமது வரலாற்று பாடநூல்கள் எந்த அளவு மொகலாய ஆட்சியாளர்கள் மேல் அபாண்டங்களை சொல்லி வருகிறது என்பதை இன்று பலரும் அறிந்து வருகின்றனர். தகவல் தொடர்பு அதிகம் உள்ள இந்த காலத்திலேயே இஸ்லாத்துக்கு எதிராக இத்தனை விஷக் கருத்துக்களை இவர்களால் விதைக்க முடிகிறது என்றால் அன்றைய காலத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

நான் பல விளக்கங்கள் கொடுக்க அவசியம் இல்லாமல் மிக தெளிவாக சகோதரர்கள் விளக்கி விட்டதால் எனது வேலை குறைந்துள்ளது. இது போல இன்னும் இரண்டு தலைப்புகள் மொகலாயர்கள் சம்பந்தமாக உள்ளது. அதை இறைவன் நாடினால் நாளை வெளியிடுகிறேன்.

//அவுரங்க சீப்பு சாகும் வரையில் மராத்தாவுடன் சண்டையிட்டுக்கொண்டு ,வெற்றி பெறாமலே இறந்தார். என்பதே வரலாறு.//-வவ்வால்

மூடப்பழக்க வழக்கங்களைத் தடுக்கும்பொருட்டு ஜோதிடம் பார்த்தல், பஞ்சாங்கம் தயாரித்தல், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் தீண்டாமை போன்ற வைகளுக்குத் தடை விதித்ததார். எனவே ராஜபுத்திரர்கள் எதிரி.
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பொது மக்களுக்கும் சமூகத்திற்கும் தொல்லை கொடுத்த 'சத்நாமிகள் ' என்ற கூட்டத்தாரை அழித்ததால் அந்த இனம் பாதுஷாவுக்கு பரம்பரை எதிரி.

மராட்டியர்களின் நாயகனாகக் கருதப்பட்ட சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்ததார். அவர் தந்திரமாகத் தப்பிச்சென்று அவுரங்கசீப்புக்கு எதிராக மராட்டிய மக்களிடம் பிரச்சாரம் செய்தகாரணத்தினால் மராட்டியர்கள் எதிரி.

ஷியா முஸ்லிம்கள் தங்கள் உடல் முழுவதும் அலகுகள் குத்திக்கொண்டும் சாட்டையால் தங்களை அடித்துக்கொண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் மொஹரம் பண்டிகையைக் கொண்டாடினர். அந்த பண்டிகை ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் ஷியா முஸ்லிம்கள் அவுரங்கசீப்புக்கு எதிரி.
(முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்)

பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!

'நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.'
இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.

பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
1987, Page 61.


'சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!

ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். 'உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339

suvanappiriyan said...

ஒளரங்கஜேப் இந்து கோயில்களை இடித்தாரா?

1679 ல் அவருடைய ராணுவத்தில் 'மன்சூதார்கள் ' என்றழைக்கப்படும் உயர் ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 575. அதாவது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ஒரு மன்சூதார் என்ற கணக்கில் இருந்தனர். அதில் 182 பேர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் (நிச்சயமாக இடதுசாரிகள் அல்ல). அதுபோன்று நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் முக்கியமானவர்கள் ராஜா ஜெஸ்வத் சிங், ராஜா ஜெய்சிங் ராஜா அவ்ராத்சிங் ஹதா, பீஷம்சிங் கத்வானி ஆகியவர்கள்.
சுவாத்தி என்றரசன் மஹோலியைக் கைப்பற்றுவதற்காக படை எடுத்துச் சென்றபோது அதை காப்பாற்றுவதற்காக ராஜா மனோகர்தாஸ் என்ற மன்சூதார் தலைமையில் ஒரு படையை அனுப்பிவைத்தார் என்று வரலாறு கூறுகிறது.

திரு P. N. பாண்டே அவர்கள் அலகாபாத்தில் மேயராக இருந்தபோது கோயில் பற்றிய ஒரு பிரச்சினை வந்தது. ஒரு கோயிலுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அதை மீண்டும் வழங்கக் கோரி அந்த கோயிலின் Trust வழக்குத் தொடர்ந்தது. அதற்கு ஆதாரமாக Royal Farman என்று சொல்லப்படும் அரசு ஆணை ஒன்றை முன் வைத்தது. அந்த அரசு ஆணை மன்னர் அவுரங்கசீப் அவர்களினால் பார்ஸி மொழியில் வழங்கப்பட்டிருந்தது.

மதவெறிப் பிடித்து கோயிலை இடிக்கும் மன்னன் ஒரு கோயிலுக்கு மானியம் எப்படி வழங்கமுடியும் ? அது பொய்யான ஆவணமாகத்தான் இருக்கமுடியும் என்று பாண்டே கருதினார். இருந்தாலும் அதை பரிசீலிக்கக் கருதி பாரஸீக மொழியிலிருக்கும் அரசு ஆணைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்த திரு ராஜா தேவ்பஹ்தூர் பர்மன் அவர்களிடம் கொடுத்து ஆராய்ந்தபோது அது உண்மையானதுதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. தவிர மேலும் ஆரய்ந்தபோது
மதுரா கோயில் உள்பட நானூறுக்கும் மேற்பட்ட கோயில்கள், குருதுவாராக்கள், ஜெய்ன மடங்களுக்கு மானியம் வழங்கி அவற்றின் பராமரிப்புக்கு உதவினார் என்பதும் தெரியவந்தது. இதை பற்றி பேராசிரியர் சதீஷ்சந்திரா தன்னுடைய ' 'Essays on Medieval India ' வில் இப்படி கூறுகிறார் :-
Not only did many old Hindu Temples continue to exist in different parts of the country, there is also documentary evidence of Aurangazeb 's renewal of land grants enjoyed by Hindu Temples at Madhura and elsewhere, and of his offering gifts to them. (such as to the Sikh Gurudwara at Dehra Dun, continuation of Madad-i-m 'aash grants to math of Nathpanthi yogis in Pargana Didwana, Sarkar Nagar to Ganesh Bharti...

suvanappiriyan said...

ஜிஸ்யா வரியைப் பற்றிய மேலும் சில தகவல்கள்!

பேரரசர் அக்பரால் நீக்கப்பட்ட ஜெஸ்யா வரியை மீண்டும் கொண்டுவந்து இந்துக்களை துன்புறுத்தினான் அவுரங்கசீப் - இது ஒரு குற்றச்சாட்டு. ஜெஸ்யா வரி என்றால் என்ன ? இஸ்லாமிய ஆட்சியில் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய மாற்று சமயத்தவர்களை 'திம்மி 'கள் என்று அழைக்கப்பட்டனர்.

அத்தகையவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஒரு வரி போடப்பட்டது. அதற்கு ஜெஸ்யா வரி என்று பெயர்.
அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்தது 1658. ஜெஸ்யா வரி போடப்பட்டது ஆட்சிக்கு வந்து 22 வருடம் கழித்து அதாவது 1679 ல். அவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே 80 க்கும்மேற்பட்ட வரிகளை நீக்கியிருக்கிறார்.

அவைகளில் சில: கங்கையில் புனித நீராட போடப்பட்டிருந்த வரி நீக்கப் பட்டது; அஸ்தியை கங்கையில் கரைக்கப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; மீன், காய்கறி போன்ற உணவுப்பொருள்களுக்குப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; சாலை வரி, தொழில் வரி, ஆடுமாடு மேய்ச்சல் வரி, விற்பனை வரி போன்றவைகள் நீக்கப்பட்டன; தீபாவளியின்போது செய்யப்படும் தீப அலங்கார வரி, முஸ்லிம்களின் பராஅத் இரவு செய்யப்படும் தீப அலங்கார வரி நீக்கப்பட்டன; விதவைகள் மறுமண வரி நீக்கப்பட்டது இப்படி 80 வகையான வரிகள் நீக்கப்பட்டன.
இத்தனை வரிகளை நீக்கியவர் ஜஸ்யா வரியை ஏன் போடவேண்டும் ? இதை 'கரைகண்டம் கி. நெடுஞ்செழியன் ' சொல்வதை பார்ப்போம். 'அதுவும் அவர் ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1679 ல் ஜெஸ்யா வரியை விதிக்க முடிவு செய்தார். அதே நேரத்தில் ஏழைகள், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், அரசு பணியில் உள்ளோர், வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்வோர் என எண்ணற்றோர் இந்த வரியிலிருந்து விலக்குப் பெற்றனர். மொத்தத்தில் இந்த வரியைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன ' '.
'இந்த வரி விதிப்பானது இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமியராக மதம் மாறவேண்டும் என்ற நிர்பந்தத்திற்காகவோ, இஸ்லாத்தை இந்த வரிவிதிப்பின் மூலம் நாடு முழுவதும் பரப்பிவிடலாம் என்ற ஆசையினாலோ ஒளரங்கஜேப் இந்த வரிவிதிப்பை அமுல்படுத்தவில்லை. ஆனால் இந்த வரிவிதிப்பின் மூலம் அரசியல் ரீதியாகத் தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்து வந்த தக்கான சுல்தான்களைத் திருப்தி படுத்திவிடலாம் என்று ஒளரங்கஜேப் ஒரு அரசியல் கணக்கைப் போட்டார் என்கிறார் பேராசிரியர் சதீஸ் சந்திரா. ' (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்).
பொருளாதார சீர்திருத்தத்திற்காவே ஜெஸ்யா வரி விதிக்கப்பட்டதாகவும் 1705 ம் ஆண்டு இந்த வரியினை அவுரங்கசீப் அடியோடு நீக்கிவிட்டார் என்றும் இந்திய சரித்திரத்தில் மாற்றம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் எழுதிய சர் எலியட் என்ற ஆங்கிலேயே வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
இந்த வரி யாருக்கு எப்படி போடப்பட்டது ?

எல்லா செலவுகளும் போக ஆண்டொன்றுக்கு வருமானத்தில் ரூபாய் 52 மிஞ்சினால் அதற்கு வரி ரூ.3/4. ரூபாய் 250 மிஞ்சினால் வரி ரூ61/2. ரூபாய் 2500 மிஞ்சினால் வரி ரூ 13. அதற்குமேல் வரி இல்லை. இதை நடுத்தர வர்க்கமாக இருந்தால் இரண்டு தவணைகளிலும் சாதாரண வர்க்கமாக இருந்தால் மூன்று தவணைகளிலும் செலுத்தலாம்.

வரி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்:
ஆறு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு வரி இல்லை; உழவருக்கு வரி இல்லை; தச்சருக்கு வரி இல்லை; பொற்கொல்லருக்கு வரி இல்லை; கருமாருக்கு வரி இல்லை; கொத்தனாருக்கு வரி இல்லை; கூலி வேலை செய்பவருக்கு வரி இல்லை; அரசாங்க ஊழியருக்கு வரி இல்ல அவர் எந்த பதவியில் இருந்தாலும்; அர்ச்சகர், புரோகிதர், துறவிகள் இவர்களுக்கு வரி இல்லை. (அப்போதெல்லாம் டை கட்டிக்கொண்டு ஆபிஸிலும் பேங்கிலும் உத்தியோகம் பார்க்காத காலம்)

அப்படியானால் வரி வசூலித்தது எவ்வளவு ? ஒரு புள்ளி விபரம்:
1680-81 ம் ஆண்டில் பாதுஷாபூர் என்ற பட்டணத்தில் வாழ்ந்த மக்களின் முஸ்லிம் அல்லாதோர் எண்ணிக்கை 1855. அதில் வரி விலக்கு அளிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1320. வரி அளித்தவர்கள் 535 பேர் மட்டுமே. வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 2950.

suvanappiriyan said...

சுஷ்மா சுவராஜ் - தாவூத் இப்றாகீம்

பா.ஜ.க வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜீக்கும், பயங்கரவாதி தாவூத் இப்றாகீமுக்கும் இடையே பல ரகசிய தொடர்புகள் இருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைச் சொல்பவர் வேறு யாரும் அல்ல. பா.ஜ.க வின் முண்ணனி தலைவராக இருந்து விலகிய முன்னாள் டெல்லி முதல்வர் மதன்லால் குரானா இந்தக் குற்றச் சாட்டை சுமத்தியுள்ளார்.

டெஹல்கா, ஆபாச வீடியோ, போதை மருந்து, தேச விரோதிகனோடு தொடர்பு என்று பாஜக வின் முன்னணி தலைவர்களின் யோக்கியதைகள் சந்தி சிரிக்கும் வேளையில் சுஷ்மா சுவராஜ் மீது வெடித்துள்ள இந்தக் குற்றச்சாட்டு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக வுக்கு அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் கலவரங்களும் குண்டு வெடிப்புகளும் ஏற்படுவது மதன்லால் குரானா பகிரங்கமாக கூறியுள்ள சுஷ்மா சுவராஜ் - தாவூத் இப்றாகீம் தொடர்புகள் காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் பலமாக எழுந்துள்ளது.

மும்பையில் சமீபத்தில் ரயில்களில் தொடர் குண்டு வெடிப்புககள் நடந்துள்ளது. இச் சூழ்நிலையில் தாவூத் இப்றாகீமுக்கும், சுஷ.மா ஸ்வராஜீக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளி வந்துள்ளன. இதனை உளவுத் துறை அலட்சியப் படுத்தி விடக் கூடாது. உளவுத் துறை உன்னிப்பாக தேச விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண் காணித்து, உண்மை வெளியாவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- 'உணர்வு' வார இதழ்
21 - 27 ஜுலை, 2006

suvanappiriyan said...

//அவுரங்க சீப்பு சாகும் வரையில் மராத்தாவுடன் சண்டையிட்டுக்கொண்டு ,வெற்றி பெறாமலே இறந்தார். என்பதே வரலாறு.//-வவ்வால்


மிக எளிதாய் அவுரங்கசீப் நல்லவர் என்பதற்கான ஒரு உண்மையை சரித்திரஆய்வாளர்களும்.ஆசிரியர்களு்ம் மறந்து விடுகிறார்கள்

அவுரங்க சீப் எவ்வளவு பொறுப்புள்ள மன்னன் என்பதற்கு சிறையில் அடைக்கப்பட்ட சிவாஜிக்கு கூடை கூடையாக பழங்களும்
அவர் பூஜை செய்ய பூக்களும் அனுப்பி இருப்பார் .

தன் எதிரியை கொள்வதுதானே மன்னர்களின் மரபு அவுரங்கசீப் அப்படிசெய்து இருந்தால் சரித்திரத்தில் சிவாஜிக்கு இவ்வளவு பெருமை இருக்காது.

இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.ஏன் என்றால் அந்த பழ கூடைகளை பயன்படுத்திதான் சிவாஜி தப்பினார் இது வரலாறு.

இன்னொரு உண்மை

சிவாஜி அவுரங்க சீப் காலத்திலேயே இறந்துவிட்டார். அவர் இறந்த பின் அவர் மனைவிக்கும்,இரண்டு மகன்களுக்கும் ஆதரவு கொடுத்து இன்றைய மும்பை பகுதிக்கு அவர்களை ஆட்சியாளர்களாக்கி உள்ளார் அவுரங்கசீப்.
இவ்வளவு செய்த அவரை என்ன சொல்வது ???

suvanappiriyan said...

//ஹி ஹி ஹி... ஒருத்தருக்கு சொந்த வரலாறே தெரியலயாம் , இவரு அடுத்தவங்க சொன்னத காப்பி பேஸ்டு பண்ணுவாராம். சன்னி, ஷியா, அரபு பேசும் முஸ்லீம், அரபு பேசா முஸ்லீம், மதம் மாறிய முஸ்லீம்.... தம்பி, போங்க... ரொம்ப பேசுனாலும் வேஸ்டு தான்...//-சதீஷ் முருகன் .

"சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்".

(சி. அச்சுதமேனோன் - கொச்சின் மாநில கையேடு - 1910. பக்கம் 193. c. achchutha menon - Cochin State Manual - 1910. Page No: 193.)

நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத தாழ்த்தப்பட்டப் பெண்களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன.

அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: "நம்முடைய நாட்டில் சொந்தம் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்" (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை - பக்கம் 147).

நம்பூதிரிமார்கள் கீழ்ஜாதி பெண்களைக் கற்பழித்தால் கூட தண்டிக்கப்படுபவர்கள் அந்தக் கீழ்ஜாதி பெண்களாகத் தான் இருப்பர்.

"நம்பூதிரிகள் கீழ்ஜாதி பெண்டிர் மீது வன்கொடுமை செலுத்தினால் அந்த நபரின் கண்களைக் குத்த வேண்டும்(கண்கள் சிறிது காலத்திற்குக் கட்டப்பட வேண்டும் என்பது தான் சாதாரணமாக நடைமுறைபடுத்தப்பட்டிருந்தது).

அந்தக் கீழ்ஜாதி பெண்ணையும் அவள் குடும்பத்தையும் கொன்றொழிக்கவோ அல்லது முஸ்லிம்களுக்கு விற்றுவிடவோ செய்ய வேண்டும். அப்பெண்ணின் அழகு நம்பூதிரியைப் பாதிப்படைய வைத்ததே அவளும் அவள் குடும்பத்தினரும் செய்த தவறு" (கேரளம், ஃப்ரான்ஸிஸ் புக்கானன் - பக்கம் 75).

கீழ்ஜாதி பெண்டிர் மீது உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட அடக்கு முறையாகும் இது.

R.Puratchimani said...

ஐயா சுவனம்,
தீபாவளியை தடை செய்ததற்கு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்களேன். ரம்ஜானை தடை செய்பவனை இசுலாமியர்கள் எல்லாம் நல்லவனாக ஏற்றுகொள்வார்களா?
நன்றி

வவ்வால் said...

சு.பி,

சுவாமிகள்,,

இந்த பதிவில் மேற்கோள் காட்டிய நூல்களை நீங்கள் படித்துள்ளீர்களாக?

இந்த பதிவே ஒரு ஆங்கிலப்பதிவின் மொழியாக்கம், அதில் வெட்டி ஒட்டிய மேற்கோள்கள் அப்படியே மொழியாக்கம் செய்துள்ளீர்கள், மூல நூல்களாக ,முழுதும் படிக்காமல், பார்த்தீர்களா, வரலாற்று ஆதாரம் என சொல்வது வேடிக்கை.

மேலும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டதை , மொகலாய மற்றும் அடிமை வம்ச சுல்தான்களுடன் கூட இருந்த அரண்மனை சரித்திர ஆசிரியர்களே ஆவணப்படுத்தியுள்ளார்கள்.

சில பி.டி.எஃப் உள்ளது படித்துவிட்டு பதிவிடுகிறேன்.

//அவுரங்க சீப் எவ்வளவு பொறுப்புள்ள மன்னன் என்பதற்கு சிறையில் அடைக்கப்பட்ட சிவாஜிக்கு கூடை கூடையாக பழங்களும்
அவர் பூஜை செய்ய பூக்களும் அனுப்பி இருப்பார் .
//

சிவாஜியை பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்தது மான்சிங், அவரே வாக்கு கொடுத்தார், பின்னர் வீட்டு சிறையில் வைத்து பார்த்துக்கொண்டதும் மான் சிங்க் தான்.

வாக்கு கொடுத்தும் கைது செய்ய வேண்டியதாகிவிட்டதே என மான் சிங்க் அனைத்து வசதிகளுடன் கவனித்துக்கொண்டார், இதில் அவுரங்க சீப்புக்கு தொடர்பில்லை.

மான் சிங்க் இல்லை எனில் சிவாஜி கொலை செய்யப்பட்டிருப்பார் .

சாம்பாஜியை 1689 இல் அவுரங்க சீப் கொன்றுள்ளார், ராஜா ராம் தொடர்ந்து போரிட்டுள்ளார் ,அவரை பிடிக்க ஊர் ஊராக அவுரஙக சீப் அலைந்து ,பின்னர் இறந்துள்ளார்.

அவுரங்க சீப்புக்கு பின்னரும் மராத்தா சாம்ராஜ்யம் இருந்துள்ளது, அகமது ஷா அப்தாலியுடன் 3 ஆம் பானிபட் போர் புரிந்துள்ளார்கள், இதெல்லாம் அவுரங்க சீப் கால்த்திற்கு பின்னர்.

நீங்கள் சொல்வது போல இருந்தால் ஏன் வரலாற்றினை மாற்றி எழுத நீங்கள் முயற்சிக்க கூடாது, விக்கிப்பீடியாவில் கூட முயற்சிக்கலாமே, அது கட்டற்ற களஞ்சியம் தான்.

பலாயிரம் பேர் கொல்லப்பட்டதும், கோயில்கள் இடிக்கப்பட்டதும் வரலாறு, வாள் முனையில் மதமாற்றம் நடைப்பெற்றதும் வரலாறு,எனவே அதனை சில கட் &பேஸ்ட் பதிவுகள் மாற்றிவிடாது.

வவ்வால் said...

மான் சிங்க் அல்ல ஜெய் சிங் மற்றும் அவர் மகன் ராம் சிங் , சிவாஜியை பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் போது பாதுகாப்புக்கு உறுதி அளித்தார்கள் ,தவறாக மான் சிங் என குறிப்பிட்டுள்ளேன்.

suvanappiriyan said...

ஸ்மிதா!

//Piriyan,

We have been seeing in the last few days, how Muslims (of all places, chennai)have indulged in protests against an english film whom nobody has evene heard of. The best (or the worst) part is that muslim college students who took part in the protest said that they had not even seen the clips on internet.//

இதனை வன்மையாக கண்டிக்கிறேன். அமைதியான முறையில் நம் எதிர்ப்பை ஒரு போராட்டமாக ஆள்வோருக்கு காட்டலாம். ஆனால் இதை சாக்காக வைத்து சில சமூக விரோதிகள் கூட்டத்தில் புகுந்து இது போன்ற காலித் தனங்கள் செய்வதை நானும் வெறுக்கிறேன். இஸ்லாமும் வெறுக்கிறது.

இர.கருணாகரன் said...

கால வெள்ளத்தின் ஓட்டத்தில் பல உண்மைகள் அழகாக வேண்டுமென்றே மறைக்கப்பட்டு மனித இன துவேஷ சக்திகளின் ஆதிக்கத்தில் உலகம் கட்டுண்டு கிடப்பதை உணர முடிகின்றது.

இனத்தை இனமே வெறுப்பதேல்லாம் மனிதன் வகுத்துக்கொண்ட வாழ்க்கையிலே என்றுதான் கூறவேண்டும். பல உண்மைகள் திட்டம்போட்டு மறைத்து பகையை மட்டும் ஊதி ஊதி வளர்த்து விட்டார்கள் .

ஓம் நமசிவய.