Followers

Thursday, April 07, 2011

குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

//7 -9 வது நூற்றாண்டுகளில், யூதம், கிறித்துவம், சமாரித்துவம், ஜோராஸ்டிரியனிஸ்ம், முகமதுவிற்கு முந்திய அரேபியம் - இவை எல்லாவற்றிலிருந்தும் கடன் பெறப்பட்டவைகளே அவை.//

அதாவது கட்டுரை ஆசிரியர் சொல்ல வருவது முகமது நபி குர்ஆனை இறைவனிடமிருந்து பெறவில்லை. பைபிள், தோரா போன்ற வேதங்களிலிருந்து காப்பி அடித்து குர்ஆனை தந்து விட்டார் என்கிறார். சரி... அடுத்த இரண்டு பாராக்களில் அவர் சொல்வதை அவரே மறுக்கும் விந்தையையும் பார்ப்போம்.

//கிறித்துவத்தில் சீசரும், கடவுளும், அரசும் கடவுளும் தனித்தனியே பார்க்கப்படுகின்றன. (மத் 22:17) ஆனால் இந்த வேறுபாடு இஸ்லாமில் இல்லை; இரண்டும் தனித்தனியே பார்க்கப் படுவதில்லை. முகமது ஒரு சேனைத் தலைவர்; சண்டையுமிட்டார்; சமாதானமும் செய்வித்தார்; சட்டங்களை இயற்றினார்; தண்டனைகளை அளித்தார். அவர் காலத்திலிருந்தே இஸ்லாமியர் ஒரு குழுவாக, சமூகத்தையும் சமயத்தையும் ஒன்றாக இணைத்திருந்தவர்களாக இருந்தனர்.//

மேலே சொன்ன கருத்திலிருந்து இங்கு முற்றிலும் மாறுபடுகிறார் ஆசிரியர். எதை நீங்கள் நம்பப் போகிறீர்கள். ஒரு மனிதரிடமிருந்து ஒரே புத்தகத்தில் ஒரே பக்கத்தில் இரு வேறுபட்ட கருத்துக்கள். எந்த அளவு குழம்பியிருக்கிறார் என்பது தெரியவில்லையா?

எசக்கியேல் 23 ஆம் அதிகாரத்தில் நான் எழுதவே கூசக் கூடிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இதை குடும்பத்தவர் மத்தியில் நம்மால் அமர்ந்து படிக்க முடியுமா? அதே போல் உதாரணத்திற்கு மீன்கள் கிடைத்த அற்புதத்தை ஏசுநாதரின் வாழ்நாளிலேயே நடந்ததாக லூக்கா சொல்கிறார்.ஆனால் இந்த அற்புதமோ ஏசு உயிர்த் தெழுந்த பின்னரே நடந்தது என்று யோவான் கூறுகிறார். இதில் யார் சொல்வதை நம்புவது. இது போன்று எண்ணற்ற உதாரணங்களை என்னால் பைபிளிலிருந்து எடுக்க முடியும். முகமது நபி இதே பைபிளை வைத்து குர்ஆனை காப்பி அடித்திருந்தால் இதில் உள்ள தவறுகள், ஆபாச கதைகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும். ஆனால் பைபிளில் சொல்லப்படும் சம்பவங்களும், குர்ஆனில் சொல்லப்படும் சம்பவங்களும் முற்றிலுமாக மாறுபடுகிறது. சொல்லப்படும் நபர்கள் ஒன்றாக இருந்தாலும் அவர்களின் வரலாறு முற்றிலும் மாறுபடுகிறது. இந்த இடத்தில்தான் கட்டுரை ஆசிரியர் குழம்பிப் போய் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்.

இனி இதே தலைப்பில் நான் முன்பு இட்ட பதிவை மீள் பதிவாக பார்ப்போம்.

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

திருக்குர்ஆனிலுள்ள கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பலவும் பைபிளில் சொல்லப்பட்ட தகவலை ஒத்து அமைந்திருக்கிறது, எனவே திருக்குர்ஆன் பைபிளைத் தழுவி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் காப்பியடிக்கப்பட்டதே! என்ற கிறித்தவ சபைகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதைப் பின்வரும் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்வோம்.

1. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். பைபிளின் பழய மற்றும் புதிய ஏற்பாடுகளைப் படித்துப் புரிந்து கொண்டு அதைப் பார்த்து எழுதுவதென்பது அவர்களுக்கு இயலாத காரியம் ஆகும். தன் தோழர்கள் எவருடையேனும் உதவியை இது விஷயத்தில் அவர்கள் நாடியிருக்கலாம் என்று கூற இயலுமா? இல்லை. ஏனெனில் அவ்வாறிருப்பின் அவர்களில் சிலருக்கேனும் அவ்விஷயம் (அதாவது அவர்கள் காப்பியடிக்கின்றனர் என்பது) தெரிந்திருக்கும். அதன் விளைவாக நபியைக் குறித்த அவர்களது நம்பிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவர்களுடைய உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உடலில் ஒரு முள் தைத்துவிடுவதைத் தடுப்பதற்குக் கூட தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்கள் நபித்தோழர்கள் என்பதை அறிக. உண்மை இவ்வாறிருக்க நபியவர்களைக் குறித்து அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டிருப்பின் இந்தளவுக்கு தியாகம் செய்யத் துணிந்த ஒரு சமுகத்தை எங்ஙனம் அவர்களால் உருவாக்க முடிந்தது?

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (அல்குர்ஆன் 29:48)

2. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் பைபிளின் பழய மற்றும் புதிய ஏற்பாடுகள் அரபி மொழியில் பெயர்க்கப்படவில்லை. இஸ்லாம் உலகெங்கிலும் வியாபித்த பிற்காலகட்டத்திலேயே அரபி மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. பைபிளின் பழய ஏற்பாட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஏர்ணஸ்ட் உர்த்வின் என்பவர் பின்வருமாறு கூறுகிறார். "இஸ்லாமின் வளர்ச்சிக்குப் பின்னர் அரபு மொழியும் வளர்ச்சியடைந்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் அன்றாட வாழ்க்கையின் மொழியாக அரபு மொழி மாறிவிட்டது. அரபு மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்படுவது அவசியமாகி விட்ட இக்கால கட்டத்தில்தான் பைபிளின் ஏராளமான பதிப்புகள் அரபியில் வெளிவரத் துவங்கின" (Ernst Wurthewin: Text of The Old Testament Page 104)
ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் பழைய ஏற்பாடு அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது என கிடைத்த கையெழுத்துக் குறிப்புகள் தெளிவு படுத்துகின்றன. (Ibid Page 224-225) பெரும்பாலும் இக்காலகட்டத்தில் தான் புதிய ஏற்பாடும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பிரபல ஆய்வாளர் சிட்னி எச் க்ரிஃபின் என்பவர் கூறுகிறார்: "அரபு மொழியில் சுவிசேஷங்களைக் கொண்ட மிகப் புராதனமான கையெழுத்து ஆவணம் சினாய் கையெழுத்துப் பிரதி 72 (Sinai Arabic MS72) ஆகும். ஜெருசலேம் சபையின் பிரார்த்தனை காலண்டரின் கால அட்டடவணைப் படி வரிசைப்படுத்தப்பட்ட நான்கு கானானிய சுவிவேஷங்களும் இதில் அடங்கும். இக்குறிப்பானது ரம்லா என்னுமிடத்தைச் சேர்ந்த ஸ்டீபன் (Stephen of Ramlah) என்பவரால் அரபு வருடம் 284 (கி.பி 897) ல் எழுதப்பட்டது என்று இதன் இறுதியில் அமைந்த குறிப்பு தெளிவாகக் கூறுகிறது. (Sidney H Griffith: The Gospel in Arabic: An Enquiry Into its Appearance In the First Abbasi Century Page 132) அதே புத்தகத்தின் இன்னொரிடத்தில் அன்போஸ்தலர்களின் நடபடிகள்,பவுலின் நிருபங்கள் மற்றும் கத்தோலிக்க நிருபங்களை உள்ளடக்கிய Sinai Arabic MS151 என்ற கையெழுத்து ஆவணம் ஹிஜ்ரி 253 (கி.பி 867) ல் பிஸ்ருப்னு ஸிர்ரி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் காணப்படுகிறது. இதில் சுவிசேஷங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். (Ibid Page 131)

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலகட்டத்திற்குப் பின்னர் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே பைபிள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நிலையில் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியவர்கள் அரபியில் உள்ள பைபிளைப் வேறு யாரிடமிருந்தோ படிக்கக் கேட்டு பின்னர் அதில் உள்ள கதைகளை உள்ளடக்கிய திருக்குர்ஆனை உருவாக்கினார்கள் என்ற வாதம் இங்கே எடுபடாமல் போகின்றது. அரபியில் இல்லாத ஒரு புத்தகத்தை அவர்கள் வாசிக்கக் கேட்டனர் என்பது அறிவீனமன்றோ?

3. இறை தூதர்களைக் குறித்து அவர்களைப் பாவிகளாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் பைபிளின் வரிகள் சித்தரிக்கின்றன. நோவா மது அருந்தி போதையில் புரண்டதாகவும், லோத்து மது அருந்தி சொந்தப் புதல்விகளுடன் சல்லாபித்ததாகவும், யாக்கோபை சதியனாகவும், தாவீதை தந்திரமாக ஏமாற்றக் கூடியவனாகவும், இயேசுவை மதுபானம் விளம்பியவராகவும் பைபிள் சித்தரிக்கின்றது. இத்தகைய குற்றங்கள் யாவும் மக்களை நன்மையின் பால் வழி நடத்தவேண்டிய இறைதூதர்களின் பண்புகளுக்கு உகந்ததல்ல என்பது அனைவரும் அறிந்த விசயமாகும். இதுபோன்ற அபத்தங்களை விட்டு குர்ஆன் பரிசுத்தமாக உள்ளது. இத்தகைய எந்த கற்பனைகளும் குர்ஆன் கூறும் வரலாறுகளில் எள்ளளவும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைபிளிலிருந்து காப்பியடித்தார்கள் என்பது உண்மையாயின் இறைதூதர்கள் மீது பைபிள் இட்டுக் கட்டியுள்ள பாவங்கள் குர்ஆன் வசனங்களிலும் இடம் பெற்றிருக்கும் (அல்லாஹ் மிகப் பரிசுத்மானவன்!) அவ்வாறு எதுவும் அபத்தங்கள் குர்ஆனில் இல்லை என்பது மட்டுமல்ல, திருக்குர்ஆன் கூறும் இறை தூதர்களின் வரலாறுகள் அவர்களை தூயவர்களாகவும் மகான்களாகவும் மிகப்பெரிய தியாகிகளாகவும் படம்பிடித்துக் காட்டுகிறது. இது பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே குர்ஆன் என்ற குற்றச்சாட்டின் முதுகெலும்பை முறிப்பதாக உள்ளது.
4. வரலாற்றைப் பொறுத் வரையில் அதன் அடிப்படைக்கு எவ்வகையிலும் பொருந்தாத பல செய்திகளும் வரலாறு என்ற பெயரில் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன. பைபிள் பண்டிதர்களே இதனை அங்கீகரித்துள்ளனர். "பல உறுதியற்ற வரலாற்றுத் தகவல்களும் பைபிளில் உள்ளன" (பார்க்க: பைபிள் வித்ஞான கோஷம் பக்கம் 12) உண்மையில் பைபிளிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காப்பியடித்திருந்தால் அத்தகைய பல உண்மைக்கு முரணான செய்திகள் குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் குர்ஆன் கூறும் சரித்திரங்களை நிரூபிக்கும் புவியியல் ரீதியான சான்றுகள் கூட இன்று உலகுக்கே வெளிச்சமாக உள்ளன.

5. அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும் நிரூபிக்கப்பட்ட பல விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான பல தகவல்களையும் பைபிள் கொண்டுள்ளது. உதாரணமாக சூரியன் படைக்கப்படும் முன்னரே இரவும் பகலும் உண்டானது என்று ஆதியாகமத்தின் வரிகள் கூறுகின்றன. இன்னும் சூரியன் மற்றும் சந்திரன் சஞ்சரிப்பதால் இரவு பகல் மாற்றம் ஏற்படுகிறது, (யோசுவா 10: 12,13) பூமி விலகிச் செல்லாமால் நாட்டி வைக்கப்படுள்ளது (சங்கீதம் 104:5) முயல் அசைபோடக் கூடிய மிருகம் (உபாகமம் 14:7) போன்ற வரிகள் விஞ்ஞானத்துக்கு முரணான பைபிளின் நிலைபாட்டை தெளிவுபடுத்துகின்றன. இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் இத்தகைய தகவல்கள் தீர்க்கதரிசிகளின் வரலாற்றைக் கூறும் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன என்பதாகும். பைபிளைத் தழுவியே குர்ஆன் உருவாக்கப்பட்டது என்ற கூற்று உண்மையாயின் விஞ்ஞான முரணான இத்தகை தகவல்கள் குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கவேண்டும். இத்தகை தகவல்கள் விஞ்ஞான முரணானவை என்பதைத் தெரிந்து கொண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதனை நீக்கியிருப்பார்களா என்று கருதவும் இடமில்லை. காரணம் அவர்கள் வாழ்ந்த காலம் இத்தகைய உண்மைகளை ஆராய்ச்சி செய்து அறியக்கூடிய காலகட்டமாக இருக்கவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள எந்தவொரு தகவலும் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்று இதுவரை எவராலும் நிரூபிக்க இயலவில்லை. ஒருவேளை நூற்றாண்டுகள் கழிந்து கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்ட காரணத்தால் முரணான தகவல்களை நீக்கியிருப்பார்கள் என்று கூறுவார்களேயானால், குர்ஆன் இறைவசனமல்ல என்பதை நிரூபிக்க ஆதாரம் தேடியவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் வருங்காலத்தை அறியக் கூடியவராக இருந்தார் என்ற நிலைக்கு வந்துவிடுவர். இதனால் அவர்களுக்கு கடவுள்தன்மையை வழங்கி இன்னும் அதிகமான வழிகேட்டில் விழுந்துவிடுவர்.

6. பைபிளில் காணப்படாத இறைத்தூதர்கள் மற்றும் சமூகங்களின் வரலாறுகளும் திருக்குர்ஆனில் காணப்படுகின்றன. உதாரணம்: ஆது மற்றும் ஃதமூது சமூகங்கள், அவர்களுக்கு மத்தியில் அனுப்பப்பட்ட தூதர்கள் ஹ¨து (அலைஹிஸ்ஸலாம்), மற்றும் ஸாலிஹ் (அலைஹிஸ்ஸலாம். இவர்களைக் குறித்த எந்த தகவலும் பைபிளில் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பியடித்தார்கள் என்றிருப்பின் பைபிளில் கூறப்படாத இந்த இரண்டு பெரும் சமூகங்களின் வரலாறுகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்ததாம்?

7. இறைதூதர்களின் வரலாறுகளில் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. இவற்றைப் பற்றிய எந்த தகவலும் பைபிளில் இல்லை. உதாரணமாகப் பின்வரும் சம்பவங்களைக் கூறலாம்.

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களை நிராகரித்த அவர்களின் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல் (அத்தியாயம் 11 வசனங்கள் 42 முதல் 46 வரை) நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நம்றூது மன்னனுடன் நடத்திய விவாதம் (அத்தியாயம் 2: வசனம் 258) அவர்களின் தந்தை ஆஸருடன் நடந்த உரையாடல் (6:74, 19:41-49, 43: 26-27) மரணத்தவர்களை உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வின் ஆற்றலை விளக்குவதற்கு நான்கு பறவைகளப் பிடித்து பின்னர் அவற்றைத் துண்டுகளாக ஆக்கி அவற்றில் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டுப் பன்னர் அழைத்தால் அவை ஓடி வரும் என்று அல்லாஹ் அவர்களுக்கு விளக்கிக் காட்டியமை (2:260) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டு பின்னர் அல்லாஹ்வின் ஆற்றலால் அற்புதாமக மீட்கப்பட்டது (21: 69,70) போன்ற சம்பவங்களைக் குறித்த எந்தத் தகவலும் பைபிளில் இல்லை.
இன்னும் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிட அதனை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ராயீல் சந்ததிகளிடம் கூறுகையில் அவர்கள் பசுவை அறுக்க மனமின்றி அதன் தன்மைகளைக் குறித்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தது, (2:67-71) கொலைக் குற்றம் நிரூபிக்க அறுக்கப்பட்ட பசுவின் மாமிசத் துண்டைக் கொண்டு கொலை செய்யப்பட்டவனின் சடலத்தின் மீது அடிக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டது (2: 72-73) முதலானவை குறித்த தகவல்களும் பைபிளில் இல்லை.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) அவர்களின் பிறப்பு முதல் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. தனது குழந்தைப் பருவத்தில் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொறுப்பில் புனிதப் பள்ளியில் தங்கியிருந்த மர்யம் (அலை) அவர்களுக்கு அற்புதமாக அல்லாஹ் உணவளித்தமை! (3:37) பிரசவ காலத்தில் மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த தனிப்பட்ட அருட்கொடைகள் (19: 23-26) ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறி மக்களிடம் பேசியதன் மூலம் தன் முதல் அற்புதத்தை வெளிப்படுத்தியமை (19: 29-33) களிமண்ணில் ஒரு பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் அவர் ஊதியபோது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது உயிருள்ள பறவையாக மாறியது (3:49) போன்ற தகவல்களும் பைபிளில் எங்கும் இல்லை. பைபிளைப் பார்த்து காப்பியடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை உருவாக்கியிருப்பின் பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்? திருக்குர்ஆன் முற்றிலும் இறைவனால் அருளப்பட்டது! அதன் காரணமாகவே பைபிளின் எந்தப் பகுதியிலும் இடம்பெறாத பல உண்மைச் சம்பவங்களும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. இதோ மர்யமின் வரலாற்றை விவரிக்கும் இடத்தில் திருக்குர்ஆன் கூறியது எத்துணை உண்மை!

(நபியே!) இவை (அனைத்தும்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும் மர்யம் யார் பொறுப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (3: 44)

8. திருக்குர்ஆன் விவரிக்கும் இறைதூதர்களின் வரலாறுகள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டதும் தெளிவான விளக்கங்களை உடையதும் ஆகும். இறைதூதர்களின் வலாற்றை விவரிக்கும் தன்மை பைபிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. மோசே (மூஸா அலைஹிஸ்ஸலாம்) ஸினாய் மலைக்குச் சென்றிருந்த சமயத்தில் இஸ்ரவேலர்கள் வணங்குவதற்காக பொன்னால் ஆன ஒரு காளைக் கன்றை உருவாக்கிக் கொடுத்தது மோசேயின் சகோதரனும் தீர்க்கதரிசியும் ஆன ஆரோன் (ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்) என்று பைபிளின் வரிகள் கூறுகின்றன. திருக்குர்ஆனில் மட்டுமல்ல பைபிள் கூட இறை தூதராக அறிமுகப்படுத்தும் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் சிலைவணக்கத்துக்கு துணைபோனார்கள் என்பது அறிவுக்குப் பொருந்தாததாகும். இதே சம்பவத்தை திருக்குர்ஆன் விவரிக்குமிடத்து காளைக் கன்றை உருவாக்கி இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் சிலைவணக்கத்தைத் தூண்டியவன் இஸ்ரவேல் சமூகத்தில் உள்ள சாமிரி என்ற வழிகேடன் என்றும் அதன் காரணமாக அவன் இறைகோபத்திற்கு ஆளாகி நோயினால் பீடிக்கப்பட்டான் என்று கூறுகிறது (20: 85-97)

முடிவுரை
இதுவரை குறிப்பிடப்பட்ட அனைத்து சம்பவங்களிலிருந்தும் திருக்குர்ஆன் கூறும் வரலாற்று சம்பவங்கள் பைபிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அது முழுக்க முழுக்க இறைவேதம் என்பதும் தெள்ளத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்குமிடங்களில் பைபிளில் காணப்படும் அபத்தங்கள், அறிவுக்குப் பொருந்தாதா விஷயங்கள், முரண்பாடுகள் எதுவும் திருக்குர்ஆனில் இல்லை. திருக்குர்ஆன் கூறும் வரலாறு படிப்பவர்களின் உள்ளத்தை உருக்குவதாகவும் இறையச்சத்தையும் சிறந்த படிப்பினையை வழங்குவதாகவும் உள்ளன. இவை அனைத்தும் திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பனையல்ல. அல்லாஹ் இறக்கிய உண்மை வேதம் என்பதற்கான சான்றுகளாகும்.
"விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை." (அல்குர்ஆன் : 53: 1-4)


மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

14 comments:

suvanappiriyan said...

சார்வாகன்!

////16:103. “நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.//
_________________

இப்படி குறிப்பிடப்படும் மெக்காவாசிகள் பார்த்த மனிதர் யார்? அவரின் மொழி எது?//

நீங்கள் குறிப்பிடும் அந்த நபர் வரக்கா பின் நவ்பல். இவர் கிறித்தவ மதத்தை தழுவியவர். கதீஜா அவர்களுக்கு நெருங்கிய உறவினர். இவர் ஹூப்ரு மொழியில் சிறந்த வல்லுனர். பைபிளை ஓரளவு எழுதியும் தன்னுடன் வைத்திருந்தார். முகமது நபி ஜிப்ரீலைப் பார்த்து முதன் முதல் பயந்தவுடன் அவரது மனைவி கதீஜா வரக்காவிடம் விபரங்களைச் சொல்கிறார். இதைக் கேட்ட வரக்கா 'முகமது நபியிடம் வந்தது ஜிப்ரீல்' என்று விளக்குகிறார். ஏனெனில் முகமது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு பைபிளில் இருந்தது. இது நடந்து சில நாட்களிலேயே மரணித்தும் விடுகிறார். அவர் இறந்த பிறகும் பல வருடங்கள் முகமது நபிக்கு குர்ஆன் சிறிது சிறிதாக இறங்கியது. வரக்காவுக்கு தெரிந்த மொழியோ ஹூப்ரு: முகமது நபிக்கு அருளப்பட்ட வேதமோ அரபி மொழி: மேலும் தனது மொழியையே எழுதவும் படிக்கவும் தெரியாதவர் முகமது நபி. அன்றை இஸ்லாமிய எதிரிகள் 'முகமது வரகாவிடம் பாடம் பயின்றுதான் குர்ஆனை சொல்கிறார்' என்று பரவலாக பேச ஆரம்பித்தனர். அதை மறுக்கும் விதமாகத்தான் மேற்கண்ட வசனம் இறங்கியது.

//முகமதுவின் காலத்தில் அரபி மொழி எழுத்து வழக்கில் இருந்தற்கான ஒரு வரலார்று சான்று காட்ட முடியுமா?//

பல சான்றுகள் காட்ட முடியும். மக்காவில் உள்ள சிலை வணங்கிகளோடு 'ஹூதைபிய்யா உடன்படிக்கை' ஏற்பட்டது. முகமது நபி தனது மோதிரத்தால் அந்த உடன்படிக்கையில் கைநாட்டு இடுகிறார். இது பல ஹதீதுகளில் பதியப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை விளக்கி முகமது நபி காலத்திலேயே பல மன்னர்களுக்கும் எழுதப்பட்ட கடிதங்கள் இன்றும் பாதுகாக்கப்படுகிறது.

உஸ்மான் காலத்தில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் ஒன்று இஸ்தான்புல்லிலும், மற்றொன்று தாஸ்கண்டிலும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இலக்கண இலக்கியம் கற்ற பல கவிஞர்கள் முகமது நபி காலத்திலும் அதற்கு முன்னும் வாழ்ந்திருக்கிறார்கள். இம்ரவுல்கைஸ், முதனப்பீ போன்ற அறிஞர்களும், ஹஸ்ஸான்,கஃபு போன்ற நபித்தோழர்களும் அறிஞர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். குர்ஆனுக்கு போட்டியாக 'அல் பீலு மல் பீலு' என்ற கவிதைகளை இயற்றிய கவிஞர்களும் முகமது நபி காலத்திலேயே இருந்துள்ளனர். அந்த முயற்சியில் பிறகு தோல்வியும் அடைந்தனர்.

பிலிப் கே. ஹிட்டி, ரேனல்ட் நிக்கல்ஸன், புரோக்கல் மேன் போன்ற அறிஞர்களின் அரபு இலக்கியங்கள், அரபு வரலாறு பற்றிய புத்தகங்களை ஆங்கிலத்திலேயே படிக்கலாம்.

//எனக்கு ஒரு சந்தேகம் இதுவரை எந்த முஸ்லிம் ஆராய்சியாளரும் எந்த அகழ்வாராய்சியும் செய்தாகவோ,குரானுக்கு வரலாற்று ஆதாரங்கள் தேடியதாகவோ செய்தி இல்லை ஏன்? எல்லாம் வார்த்தை விளையாட்டு மட்டுமே.//

எனது பதிவின் வலது பக்கத்தில் ஸ்லைட் ஷோ வாக ஓடும் படங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்? அனைத்தும் குர்ஆன் கூறும் வரலாற்று ஆதாரங்கள். பைபிளில் கூறப்படாத சாலிஹ் நபியை பின்பற்றியோர் மலைகளை குடைந்து வீடுகளை அமைத்ததை 4000 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வை இன்றும் நாம் பார்க்கலாம். நானும் எனது நண்பர்களும் சென்று பார்த்தோம். அந்த ஊர் இன்றும் சவுதி அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீங்கள் சவுதி வந்தால் அந்த இடங்களை எல்லாம் நான் அழைத்து சென்று காண்பிக்கிறேன். மிகவும் வசதியாகவும் நாகரிகமாகவும் அந்த மக்கள் வாழ்ந்ததை பார்த்து நான் ஆச்சியப்பட்டேன். சமையல் கட்டில் பாத்திரங்களை வைக்கும் இடங்களைக் கூட மிக நேர்த்தியாக மலைகளை குடைந்து அமைத்திருந்தது பரவசப்படுத்தியது எங்களை. அதே போல் பாரோ மன்னனின் உடல், முகமது நபிக்கு முதன்முதல் குர்ஆன் வசனம் இறங்கிய ஹுரா குகை, பத்ர்,உஹது போன்ற இடங்களெல்லாம் சவுதி அரசால் இன்றும் பாதுகாக்ப்பட்டு வருகிறது. இதற்காக ஒர தனி அமைச்சகமே செயல்படுகிறது.

suvanappiriyan said...

தருமி!

//கடன் பெறப்பட்ட கதைகள், சமூகமும் சமுதாயமும் ஒன்றாக இணைத்திருப்பது இரண்டும் வெவ்வேறு points. தெளிவாகவே சொல்லியுள்ளேன். இதில் என்ன முரண்பாடு கண்டீர்களோ?//

//கிறித்துவத்தில் சீசரும், கடவுளும், அரசும் கடவுளும் தனித்தனியே பார்க்கப்படுகின்றன. (மத் 22:17) ஆனால் இந்த வேறுபாடு இஸ்லாமில் இல்லை;//

கடன் பெறப்பட்ட கதைகள் என்று சொல்வனவற்றில் பெயர்கள் மாத்திரம் தான் ஒன்றாக வருகிறது. ஆனால் சம்பவங்கள் அனைத்தும் முற்றாக மாறுபடுகிறது. ஏற்கெனவே அதற்கான ஆதாரங்களை கொடுத்திருக்கிறேன். அந்த கதைகளை ஒட்டியே முகமது நபி கொண்டு வந்த இஸ்லாமின் சமூக அமைப்பும் அமைய வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக அரசியலும் மதமும் ஒன்றாக கலக்கப்படுகிறது. நாட்டின் அரசராகவும், ஆன்மீக தலைவராகவும் சிறந்து விளங்கியது முகமது நபியின் தனித் தன்மையை காட்டுகிறது. இதை கட்டுரை ஆசிரியரும் ஒத்துக் கொள்கிறார். முதலில் பைபிளைப் பார்த்துதான் குர்ஆன் எழுதப்பட்டது என்று சொல்லிவிட்டு, ஏசுவுக்கு மாற்றமாக ஆட்சி அதிகாரத்தை முகமது நபி கையிலெடுத்தார் என்பது முரணல்லவா! ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். ஏனெனில் ஆன்மீகத் தலைமையும் ஆட்சி தலைமையும் குர்ஆனின் அடிப்படையிலேயே அமைந்தது.

மேலும் நீங்கள் அனுப்பிய ஒரு பின்னூட்டம் மட்டுறுத்தும் போது பிளாக்கர் பண்ணிய சொதப்பலினால் காணாமல் போய் விட்டது. அதை திரும்பவும் அனுப்புங்கள்.

சீனு!

//எனக்கும் இரு வேறு கருத்துக்கள் தெரியவில்லை. யாராவது தமிழ் தெரிந்தவர்கள் இருந்தால் எனக்கும் விளக்குங்கள்.//

இப்பொழுது விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

தருமி said...

வேறொரு பதிவிற்கான உங்கள் பின்னூட்டங்களை இங்கே போடுவதின் பொருள் என்னவோ?

தருமி said...

//நபியவர்களைக் குறித்து அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டிருப்பின் இந்தளவுக்கு தியாகம் செய்யத் துணிந்த ஒரு சமுகத்தை எங்ஙனம் அவர்களால் உருவாக்க முடிந்தது?//

நம்மூர் அரசியல்வாதிகள் இயற்கையாக இறந்தால் கூட தீக்குளிக்கும் நம் ’கண்மணிகளும் ’ இப்படிதானே ‘தியாகம்’ செய்கிறார்கள். நம் தலைவர்களூம் கடவுளின் நபிகளோ?

//அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (அல்குர்ஆன் 29:48)//

இந்த 'certificate' எதுக்கு?
தன்னையே காத்துக் கொள்ள முகமது தனக்குத் தானே நிறைய இதுபோன்ற certificates கொடுத்துக் கொள்கிறாரென ஏற்கெனவே சொல்லியுள்ளேன்.
குரான் என்பதை நீங்கள் நினைப்பதுபோல் நான் நினைக்கவில்லை. பின் அதிலிருந்து மேற்கோளிட்டால் நான்; நம்பணுமா, என்ன?

//உண்மைகளுக்கு முரணான பல தகவல்களையும் பைபிள் கொண்டுள்ளது. உதாரணமாக சூரியன் படைக்கப்படும் முன்னரே இரவும் பகலும் உண்டானது //
இதேபோல் சூரியன் படைக்கப்படும் முன் எப்படி ஒளி வந்தது என்று ஆறுவயது பிள்ளை கேட்பதைப் பற்றி என் பதிவில் உண்டே!

//முயல் அசைபோடக் கூடிய மிருகம் (உபாகமம் 14:7) போன்ற வரிகள் விஞ்ஞானத்துக்கு முரணான பைபிளின்..//

ஆமாம்... குரானில் கூட இது போன்று இருக்குமே .. தேனி பழம் சாப்பிடும்; மனித விந்து ‘எங்கேயோ இருந்து’ வருமே .. அதுபோல் .. இல்லையா?

//பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது//

பைபிளில் காணப்படும் கதைகள் குரானில் சரியாகவோ தவறாகவோ உள்ளது என்பதுதான் இங்கே உள்ள கேள்வி.

//பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்? /
கோவிச்சிங்காதீங்க .. என்னைப் பொறுத்தவரை ‘மத நூல்கள்’ எல்லாமே இப்படித்தான் ... கதைகள்!

//அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை." (அல்குர்ஆன் : 53: 1-4)//

இந்த ‘செர்டிபிகேட்’ அடிக்கடி வருதே .. ஏன் என்றுதான் கேட்டிருந்தேன். திருப்பி திருப்பி இப்படி ‘அல்லா’ சொல்லணும்னு என்ன தேவை? ஏதோ நாலு பேரு கேள்வி கேட்பாங்க... அதுக்காக மொதல்லேயே இப்படி ஒரு பதிலை வைத்துவிடும் டெக்னிக் மாதிரில்லா இருக்கு. மறுபடி மறுபடி ‘எங்க அப்பன் குதிருக்குள்ள இல்ல’ அப்டின்ற கதை மாதிரி தெரியுது!

suvanappiriyan said...

சார்வாகன்!

////16:103. “நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.//
_________________

இப்படி குறிப்பிடப்படும் மெக்காவாசிகள் பார்த்த மனிதர் யார்? அவரின் மொழி எது?//

ஒரு சிறிய திருத்தம். வரகா பின் நவ்பல் என்றுதான் நானும் இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆதாரத்தைப் பார்க்காமல் என் மனதில் இருந்ததை எழுதி விட்டேன். ஆனால் இப்னு கஸீர், பாகம் 4ல், பக்கம் 63ல் அந்த நபர் பனூ முகீரா கோத்திரத்தை சேர்ந்த ஒரு இளைஞர். சஃபா மலைக்குப் பக்கத்தில் வியாபாரம் செய்து வந்த கிறித்தவர். இவரைப் பார்த்து பல முறை இஸ்லாமிய போதனை செய்து வந்தார் முகமது நபி. இந்த நேரத்தில் இவரிடமிருந்து தான் சிலவற்றைக் கற்றுக் கொண்டு குர்ஆனாக நமக்குத் தருகிறார் என்று சிலர் பேச ஆரம்பித்தனர். அந்த நபரோ சிரிய நாட்டைச் சேர்ந்தவர். முகமது நபி காலத்தில் சிரிய மக்கள் அரபு மொழியை பேசவில்லை. அந்த நபருக்கும் அரபி மொழி தெரியாது. இதைத்தான் இறைவன் இங்கு மேற்கோளாக காட்டுகிறான்.

ஆதாரம்:
இப்னு கஸீர், பாகம் 4ல், பக்கம் 63

suvanappiriyan said...

//நம்மூர் அரசியல்வாதிகள் இயற்கையாக இறந்தால் கூட தீக்குளிக்கும் நம் ’கண்மணிகளும் ’ இப்படிதானே ‘தியாகம்’ செய்கிறார்கள். நம் தலைவர்களூம் கடவுளின் நபிகளோ?//

நம்மூர் அரசியல்வாதிக்கு நம்மூரில் உள்ள சிலர் செய்யும் ஒரு செயல். ஆனால் எங்கிருந்தோ வந்த ஆப்ரிக்கர் பிலால், ஈரானிலிருந்து வந்த சல்மான் பார்ஸி, கேரளாவிலிருந்து சென்ற சேரமான் பெருமாள் அதே போல் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக முகமது நபியை மதிப்பது அவர் எங்களுக்கு இறைவனிடமிருந்து கொடுத்து விட்டு சென்ற குர்ஆனும், அவரது அழகிய வழி காட்டுதலுமே!

//இதேபோல் சூரியன் படைக்கப்படும் முன் எப்படி ஒளி வந்தது என்று ஆறுவயது பிள்ளை கேட்பதைப் பற்றி என் பதிவில் உண்டே!//

எங்கு வந்திருக்கிறது என்று வசன எண்ணைத் தாருங்களேன்.

//தேனி பழம் சாப்பிடும்; மனித விந்து ‘எங்கேயோ இருந்து’ வருமே .. அதுபோல் .. இல்லையா?//

இதெல்லாம் குர்ஆனில் இல்லாமல் தருமி சொந்தமாக சொல்வது. ம்ம்.. அப்புறம்.

//இந்த ‘செர்டிபிகேட்’ அடிக்கடி வருதே .. ஏன் என்றுதான் கேட்டிருந்தேன். திருப்பி திருப்பி இப்படி ‘அல்லா’ சொல்லணும்னு என்ன தேவை?//

இத்தனை ஆதாரங்கள் இருந்து இத்தனை தடவை குர்ஆன் மெய்ப்பித்தும் கண்டு கொள்ளாமல் வேறு கேள்விக்கு சாமர்த்தியமாக தாவி விடுகிறீர்களே! என்றாவது ஒருநாள் இந்த தவறுகளை உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்பீர்கள் என்ற எண்ணம் தான் காரணம்.

'பெருந்தன்மையை மேற் கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!'
-குர்ஆன் 7:199

Anisha Yunus said...

as salamu alaykum brother,

intha topic-il maraintha pazani baabaavin puthagam arumaiyaaga irukkum. aanaal athil suthi vazaikkaamal neradiyaaga ezuthiyiruppaar. enave christian sagothara sagotharigalukku konjam nerudalaaga irukkak koodum.

'Let the bible speak' ennum bookum arumaiyaay ezuthappatta onru.

ithe conceptil pakisthani writer oruvarin 'isabella' ennum kathai arumaiyaaga irukkum. but athil antha pen isabella islaathirku manam maari pin islaamiya thuravi aagivittaar enru mudithiruppaar. ithu onraith thavira marra idamellaam puthagathil arumaiyaaga ezuthappattirukkum, oru puthinathin saayalil.

hmm.. thiru Qur'an il koorap paduvathu pola kannirunthum makkal kurudaraaginranar.enna seyya.

suvanappiriyan said...

சகோ. அன்னு!

//hmm.. thiru Qur'an il koorap paduvathu pola kannirunthum makkal kurudaraaginranar.enna seyya. //

சரியாக சொன்னீர்கள்.

'இறைவனை அஞ்சிக் கொள்' என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தில் ஆழ்த்துகிறது' -குர்ஆன் 2:206

எனவே சிலர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று வரட்டு பிடிவாதம் பிடிப்பவர்களிடத்தில் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்ச்சிப்பது சில விபரங்களை நாமும் அறிந்து கொள்ளத்தான். இறைவன் அனைவருக்கும் நேர் வழியைக் காட்டுவானாக!

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சார்வாகன்!

//2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?//

சட்டங்களை போட்டவன் அந்த சட்டங்களை மாற்றவும் மறக்கடிக்கவும் அதிகாரம் பெற்றவனாகிறான். ஒரு வயது குழந்தைக்கு பாலூட்டும் தாய் குழந்தை பெரிதானவுடன் உணவு முறைகளிலே மாற்றத்தை கொண்டு வருகிறாள். குழந்தையின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து உணவு மாறுகிறது. இதனால் தாயின் அறிவை குறைத்து மதிப்பிட மாட்டோம்.

அதுபோல் மக்காவில் உயிர் வாழவே சிரமப்படும்போது 'திருடினால் கையை வெட்டுங்கள்' என்று கூற முடியாது. கூறினால் அதற்கு அர்த்தமும் இருக்காது. முஸ்லிம்கள் கையில் ஆட்சி வந்தவுடன்தான் இந்த சட்டத்தை போட முடியும். மாறும் சூழலுக்கேற்ப சட்டங்களை வகுப்பதுதான் அறிவுடைமை.

//87:6. (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-//

மனிதன் மறதி என்ற பலஹீனத்தோடு படைக்கப்பட்டிருக்கிறான். இந்த மறதியினால் வேதத்தில் ஏதும் குறைவு வந்து விடக் கூடாது என்பதால் அதைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்கிறான். ஜிப்ரீல் கொண்டு வந்த வசனங்களில் எதையும் மறதியால் முகமது நபி விட வில்லை என்பது இவ்வசனத்தின் மூலம் தெளிவாகிறது.

//2.முகமது நபி எழுதப்படிக்கத் தெரியாதவர் போல் தெரியவில்லை.
* * *
96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.//

ஒரு வசனத்தை மட்டும் தனியாக பிரித்து பார்க்கிறீர்கள். அதன் தொடர்ச்சியாக வரும் அடுத்த வசனம்

'அறியாதவற்றை மனிதனுக்கு கற்றுத் தந்தான்'-குர்ஆன் 96:5

மனித குலம் அனைவருக்கும் சொல்லப்பட்ட வசனம் இவை.

ஹூதைபிய்யா உடன் படிக்கையின் போது 'இறைவனின் தூதர் முஹமது நபி' என்றிருந்தது. இதை எதிரிகள் ஒத்துக் கொள்ளவில்லை. 'இதை ஒத்துக் கொண்டு நாங்களும் கையெழுத்திட்டால் முகமதை இறைத் தூதராக ஒத்துக் கொண்டவர்கள் ஆகிவிடுவோம். எனவே இறைத் தூதர் என்ற வாசகத்தை அழிக்க வேண்டும்' என்றனர் எதிரிகள். முகமது நபி 'பரவாயில்லை. நாங்கள் அழித்து விடுகிறோம்' என்று தோழர்களை பார்த்து “அந்த வாசகத்தை நீக்கி விடுங்கள்' என்று சொன்னபோது 'எங்கள் கையால் அழிக்க மாட்டோம் நீங்கள் இறைவனின் தூதர் என்பதை நாங்கள் நம்புகிறோம்.' என்று தோழர்கள் மறுக்கின்றனர். உடனே முகமது நபி 'எங்கே அந்த வாசகம்?' என்று கேட்கிறார். தோழர்கள் காண்பித்தவுடன் 'இறைத் தூதர்' என்று எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை தமது கையால் அழிக்கிறார். தனது பெயர் அரபியில் எவ்வாறு எழுதுவது என்பதே முகமது நபிக்கு தெரியாமல் இருந்திருக்கிறது என்பதை இதிலிருந்து அறிகிறோம்.

மேலும் பல மன்னர்களுக்கு அவர் சொல்ல எழுதப்பட்ட கடிதங்கள் அனைத்திலும் அவரது மோதிரத்தின் அடையாளமே இடப்பட்டிருக்கும். எந்த ஒரு மனிதரும் தனக்கு தெரிந்த ஒரு மொழி அறிவை மறைக்க மாட்டார். அது அவசியமும் இல்லை. அதிலும் அரபி அவரது தாய் மொழி.

suvanappiriyan said...

சார்வாகன்!

//4.வல்லமை மிக்கவர் யார்?

“நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”- 2:129

இறைவனா?

53:5. மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

ஜிப்ரீலா?//

'வானவர்கள் இறைவனை முந்திப் பேசமாட்டார்கள். இறைவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்'-குர்ஆன் 21:27

இது போன்ற பல வசனங்கள் வானவர்கள் அனைவரும் இறைவின் கட்டளைக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்று சொல்கிறது.

நீங்கள் குறிப்பிடும் வசனத்தில் தனது படைப்பான வானவர் ஜிப்ரீல் மிக்க வலிமையுடையவர் என்று தனது படைப்பை சிறப்பித்து கூறுகிறான் இறைவன்.

'நமது கணிணிக்கு புதிதாக இறங்கியிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி வலிமை சேர்க்க வல்லது' என்று பில்கேட்ஸ் சொல்வதாக வைத்துக் கொள்வோம். உடனே பில்கேட்ஸ் வலிமையுடையவரா? அல்லது விண்டோஸ் எக்ஸ்பி வலிமையுடையதா? என்று கேள்வி எழுப்ப மாட்டோம்.

//5.வஹீ என்பது என்ன?யாருக்கு மட்டும் அளிக்கப் படும்?
(தொடரும்)//

'வஹி' என்பது இறைச் செய்தி. இது இறைவன் மனிதர்களிடம் பேசுவது. மூன்று வழிகளில் இது நடை பெறும். ஒன்று வானவர் மூலமாக. மற்றது மனிதர்களின் உள்ளத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவது. மூன்றாவது கனவுகள் மூலமாக மனிதர்களுக்கு இறைச் செய்தியை சொல்வது.

'உங்கள் தோழர் முகம்மது பாதை மாறவில்லை.வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவது அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.'
-குர்ஆன் 53:2,3,4
----------------------------


குடுகுடுப்பை!

//தருமிக்கும், சீனுவுக்கும் கொஞ்சம் நரகத்தில சூடு அதிகமா கிடைக்குமா?நமக்கு என்னத்தெரியும் எல்லாம் அறிந்தவன் இறைவன் ஒருவனே?//

நீங்கள் இதுவரை இட்ட பின்னூட்டங்களிலேயே உண்மையை உள்ளபடி உரைக்கும் ஒரே பின்னூட்டம் இதுதான். வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

சார்வாகன்!

//அவர் சாகும் வரை எழுதப் ப்டிக்க கற்றுக் கொள்லவில்லையென்றால் இஸ்லாமியர்கள் கூட‌ நம்புவார்களா என்பது கூட சந்தேகமே..
அவர் படித்தவர் என்றால் பிற‌ர வேதங்களை கற்றறிந்தவர் என்று கூற வாய்ய்ப்பு வந்துவிடும் என்ப்தால் இந்த சமாளிப்பு.//

20 ஆம் நூற்றாண்டில் அறிவியல் யுகத்தில் வாழ்வதாக கூறப்படும் நம் நாட்டில் நூறுசதவீத எழுத்தறிவு பெற்ற மக்களாக அனைவரும் மாறி விட்டோமா? இல்லையே!

'முஹம்மதே! இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர். அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்'- குர்ஆன் 29:48

இறைவனே அத்தகைய ஏற்பாட்டை செய்து விட்டான். இறக்கும் வரையில் அவருக்கு எழுதப்படிக்க தெரியாமல் இருந்ததும் இது ஒரு இறை வேதம் என்பதைக் கூறிக் கொண்டிருக்கிறது. முகமது நபியின் ஒவ்வொரு அசைவையும், அவரது தலைமுடியில் எத்தனை நரை முடிகள் இருந்தது என்பதையும் அவரது தோழர்கள் குறித்து வைத்துள்ளனர். இஸ்லாத்தின் எதிரிகள் இவரிடம் ஏதாவது குறையை கண்டுபிடித்து (உங்களையும் தருமியையும் போல்) குர்ஆன் இறைவேதம் இல்லை என்பதை நிரூபிக்க மிகவும் முயற்சி எடுத்து வந்தனர். இவருக்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் இதை ஒன்றை வைத்தே குர்ஆன் இறை வேதம் அல்ல எதிரிகள் நிரூபித்திருப்பார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. முடிந்தால் நீங்களும் முயற்ச்சித்துப் பாருங்களேன்.

அடுத்து முந்தய வேதங்களில் உள்ள இறைத் தூதர்களின் பெயர்களும் ஊர்களும் தான் குர்ஆனில் ஒன்றாக வருகிறது. சம்பவங்கள் அனைத்தும் தோரா பைபிளில் இருந்து குர்ஆன் முற்றிலும் மாறுபடுகிறது. இதைப் பற்றி நான் முன்பே குறிப்பிட்டும் வழக்கம் போல் வேறு கேள்விக்கு தாவி விட்டீர்கள். ஏசுவின் இறப்பு, சிலுவையில் அறையப்பட்டது என்று பல இடங்களில் பைபிளிலும் குர்ஆனிலும் பெருத்த வேறுபாடு உண்டு.

//இந்த இறைசெய்தி பற்றி தெளிவாக கூறுங்கள்.

1.இது இறைதூதர்களுக்கு மட்டும்தான் வருமா?

2.மற்ற‌வர்களுக்கும் வரும் என்றால் இப்போது யாருக்காவது வரலாமா?

3.இறைச் செய்தி வந்தரெல்லாம் நபியா?//

1.மற்றவர்களுக்கும் வரும். ஏசுவின் தாயார் மேரியுடன் இறைவன் பேசியிருக்கிறான்.

'இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்?' என்று அவர் கேட்டார். 'தான் நாடியதை இறைவன் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் 'ஆகு' என்பான். உடனே அது ஆகி விடும்' என்று இறைவன் கூறினான்.-குர்ஆன் 3:47

2.வருவதற்கு அவசியம் இல்லை. ஏனெனில் குர்ஆனானது உங்களுக்கும் தருமிக்கும் எனக்கும் ஆக உலக மக்கள் அனைவருக்குமாக உலக முடிவு நாள் வரைக்கும் அனுப்பப்பட்டது.

3.இல்லை. இதற்கு முந்தய குர்ஆன் வசனமே ஆதாரம்.

suvanappiriyan said...

சார்வாகன்!

//கல்வி ஞானம் எதற்கு எழுதப் படிக்க தெரியாதவருக்கு?- 20:114.//

எழுதப்படிக்க தெரிந்தவர்தான் அறிவாளி என்று உங்களின் தவறான புரிதலே இப்படி ஒரு கேள்வி. மனிதனின் பகுத்தறிவை வெளிப்படுத்தும் பல காரணிகளில் ஒன்றுதான் எழுதுவதும் படிப்பதும். 'படித்த முட்டாள்' என்ற வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துவோம். 'படிக்காத மேதை' என்ற வார்த்தையையும் நாம் அடிக்கடி பயன்படுத்துவோம். உலகின் பல அறிஞர்கள் எழுதப்படிக்கத் தெரியாமலேயே இருந்திருக்கின்றனர். எனவே மனிதனின் அறிவை அவனது எழுத்தாற்றலும், படிப்பாற்றலும், பேச்சாற்றலும், கேள்வி ஞானமும், பார்த்தறிதலும் மேலும் மெருகுற செய்யும். உங்கள் வாதப்படி பார்த்தால் ஊமையும் செவிடனும் அறிவில் குறைந்தவர்களே! ஆனால் கண் இல்லாமலேயே உங்களை விட நேர்த்தியாக தனது இருப்பிடத்திற்கு வந்து சேரும் குருடர்களை பார்த்து மேற்கண்ட கேள்விக்கு தெளிவு பெறுங்கள்.

//வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!.//

ஒரு வசனம் முடிவடைவதற்குள் 'மறந்து விடுவோமோ' என்ற அச்சத்தில் நாவை அவசரப்பட்டு அசைப்பது கூடாது. ஏனெனில் உம் இதயத்தில் அந்த வசனங்களை மனனம் செய்விப்பது எனது வேலை' என்று முகமது நபிக்கு இறைவன் அறிவுறுத்துகிறான். தெளிவான வசனம். இதில் குழப்பத்திற்கு இடமில்லையே!

//குரான் முகமதுவை மிரட்டுகிறது. என்ன செய்தாரென்று தெரியவில்லை.முகமதுவை நரகத்தில் எறிவேன் என்கிறது.குரானை மறக்க வைத்து விடுவேன் என்கிறது. 17:39, 17:86., 13:37//

எந்த ஒரு மனிதரும் தன்னை தாழ்த்திக் கொள்ள மாட்டார். அதுவும் ஆன்மீகத் தலைவர் 'நீ நரகுக்கு செல்வாய்' என்ற ரீதியில் கடுமையான வசனங்கள் வருவதை விரும்ப மாட்டார். இதனால் பக்தர்கள் மத்தியில் சம்பந்தப்பட்டவரின் பெருமை குறையும். குர்ஆனை முகமது நபியே தனது சொந்த கற்பனையில் சொல்லியிருந்தால் தனது அந்தஸ்து குறையும் என்று எண்ணி மேற்சொன்ன வார்த்தைகளை சொல்லாமல் மறைத்திருக்கலாம். இது போன்ற வசனங்களையும் ஒளிவு மறைமின்றி மனித சமுதாயத்துக்கு கொடுத்து விட்டார் முகமது நபி. ஏனெனில் இது இறை வேதம்.

எந்த வசனங்களெல்லாம் குர்ஆன் இறை வேதம் அல்ல என்று நீங்கள் எடுத்து வைக்கிறீர்களோ, அந்த வசனங்களே அது இறை வேதம்தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் குர்ஆனின் சிறப்பு.

suvanappiriyan said...

சார்வாகன்!

//இப்போதைய உபயோகத்தில் இருக்கும் குரான் 1924ல் எகிப்தில் வழிவழியாக மனம் செயதவர்களிடம் இருந்து
வடிவமைக்கப் பட்டது//

மீண்டும் தவறான தகவல்கள். உலகில் உள்ள குர்ஆன்களில் எழுதும் முறைகளில் பல மாற்றங்கள் வந்திருக்கும். அது மொழியின் வளர்ச்சி. இதற்கு உதாரணமாக முன்பு திருக்குறளையே எடுத்துக்காட்டினேன். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கும், நாம் இப்பொழுது படிக்கும் குறளுக்கும் எழுதும் முறையில் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? பொருளில் எந்த மாற்றமும் இல்லை. வசனங்களிலும் எந்த மாற்றமும் இல்லை. குர்ஆனில் வசனங்களில் மாற்றம் இருந்தால் உஸ்மானின் மூலப்பிரதியை வைத்து கண்டுபிடித்து விடலாம்.

அதே போல் தற்போதுள்ள குர்ஆன் 1924 ஆம் வருடத்திலிருந்து எகிப்திலிருந்து பிரதி எடுக்கப்பட்டது என்ற செய்தியை பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. பல ஆண்டுகளுக்குமுன்பு இதற்காக அமெரிக்க கிறித்தவ சபை உலக குர்ஆன்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒப்பிட்டு பார்த்து 'குர்ஆன்களில் எந்த வசன மாற்றமும் இல்லை' என்று அறிவித்தது. நான் முன்பே கேட்டிருக்கிறேன். மூலப்பிரதியிலிருந்து எந்த வசனம் மாற்றப்பட்டது? அதற்கு ஆதாரத்தையும் முன்பே கேட்டிருக்கிறேன்.

//உம்ம்மையாதுக்களின் காலத்தில் முகமதுக்கு எதிரிகளான அபு சுஃபியானின் வம்சம் ஆட்சிக்கு வந்ததும் கூட இந்த முகமதுக்கு எதிரான வசனம்,ஹதிதுகள் நுழைய காரணம் ஆக இருக்கலாம்.//

எத்தனையோ நபித் தோழர்கள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்திருக்க, உலகம் முழுவதும் உஸ்மான் காலத்திலேயே பல பிரதிகள் எடுக்கப்பட்டிருக்க, அதில் இரண்டு பிரதி இன்றும் நம் முன் இருக்க நெஞ்சறிந்து பொய் சொல்லலாமா சார்வாகன். முன்பு குர்ஆனை முகமது நபியே இட்டுக்கட்டியதாக சொன்னீர்கள். நான் விளக்கம் கொடுத்தவுடன் வேறுவழியின்றி இப்பொழுது உமையாக்கள் சில வசனங்களை சேர்த்திருக்கலாம் என்கிறீர்கள். உங்கள் மனசாட்சியிடமே கேட்டுப்பாருங்கள். உங்களின் பல கேள்விகளை உங்கள் மனமே ஒத்துக் கொள்ளாது.

//இதற்கு இறைவன் எங்கும் நிறைந்த பரம் பொருள் என்றே தத்துவார்த்தமாக்வே விளக்கம் அளிபார்களே தவிர,இறவனுக்கு முகம் உண்டு என பொருள் கொள்ள மாட்டார்கள்.//

இது மிகவும் வரிவாக விளக்க வேண்டிய கேள்வி. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இறைவனுக்கு உருவம் உண்டு. ஆனால் நம்மால் அதைக் கற்பனை செய்திட முடியாது.

Pradeep said...

கிருத்துவ யூத மத கருத்துக்களில் சில மாற்றங்களுடன் முகமது இயக்கத்தில் வெளியிடப்பட்டதே குர்ரான். இன்றைய ரீமேக் படங்களை போல.