Followers

Wednesday, January 29, 2014

கொரியர்களையும் இஸ்லாம் விடவில்லை!



இஸ்லாமிய கலாசாரமும் கொரிய கலாசாரமும் இரு வேறுபட்டவைகள். ஆனால் அந்த மக்களையும் இஸ்லாமிய கொள்கையானது தற்காலங்களில் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. 35000 கொரிய முஸ்லிம்கள் தங்கள் வாழ்வியலாக இஸ்லாத்தை கொண்டுள்ளார்கள். இது அல்லாமல் வெளி நாட்டு முஸ்லிம்களின் எண்ணிக்கை தனியாக பல ஆயிரங்களைத் தாண்டும்.

கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஜூம்ஆ பள்ளியைத்தான் இந்த காணொளியில் நாம் பார்க்கிறோம். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு கொரிய இளைஞன் எவ்வளவு அழகாக குர்ஆன் ஓதுவதையும் தொழுவதையும் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். ராக் இசை, பாப் இசை, சினிமா, போதைப் பொருள் என்பதுதான் அங்குள்ள பெரும்பாலான இளைஞர்களின் பொழுதுபோக்கு. ஆனால் அவற்றிற்கு நேர் மாற்றமான இஸ்லாத்தை அந்த இளைஞனை தேர்ந்தெடுக்க வைத்தது எது? வாளா? அந்த இளைஞனை யாரும் சென்று இஸ்லாத்துக்கு வா என்று அழைக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட இறை நம்பிக்கையினால் இறை தேடலில் ஆரம்பித்து முடிவில் அந்த இளைஞனை அவனது தேடல் இஸ்லாத்தில் கொண்டு விட்டுள்ளது.

ஆடம்பர உலகம்: அவசர உலகம: எங்கும் எந்திர மயம்: இது போன்ற சூழலில் மனித மனம் நிம்மதி தேடி அலைகிறது. அந்த தேடுதல்தான் பலரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வருகிறது. இது தான் உண்மை காரணமேயொழிய நம் நாட்டு இந்துத்வாவாதிகள் சொல்வது போல் வன்முறையால் வளர்ந்ததல்ல இந்த மார்க்கம். அந்த இளைஞனின் முகத்தைப் பாருங்கள். எந்த அளவு சாந்தமும் அமைதியும் தவழ்கிறது.

காணொளியில் உள்ள பள்ளியில் ரமலானில் 300க்கும் அதிகமான நபர்கள் நோன்பு திறக்க பள்ளிக்கு வருவார்களாம். இந்நாட்டைச் சுற்றி இது வரை 11 பள்ளி வாசல்கள் உள்ளன. ஆனால் தினம் தினம் இஸ்லாத்தில் இணைவோர் அதிகரித்த வண்ணம் உள்ளதால் இந்த பள்ளிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புண்டு. கிறித்தவர்களும் பவுத்தர்களும் மட்டுமே கொண்ட இந்நாடு தற்போது இஸ்லாத்தையும் அரவணைத்துக் கொண்டுள்ளது.

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது

இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை முஹம்மதே! நீர் காணும்போது

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'

-குர்ஆன் 30:110

5 comments:

Anonymous said...

கொரிய முஸ்லிம் ஹலால் அமைப்பு என்ற நிறுவனம் கொரியாவில் தயாரிப்பாகும் உணவு வகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கி வருகிறது. அத்தகைய கொரிய ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.

- வள்ளுவன்

ஆனந்த் சாகர் said...

இஸ்லாம் என்ற நோய் தொற்றிக்கொண்ட கொரியர்கள் பாவம்.

ஆனந்த் சாகர் said...

//ஆனால் அவற்றிற்கு நேர் மாற்றமான இஸ்லாத்தை அந்த இளைஞனை தேர்ந்தெடுக்க வைத்தது எது? வாளா?//

தக்கியா (Taqiyah / புனித பொய்) தான் காரணம்.

Anonymous said...

சுவன்ப்ரியர், இஸ்லாம் உலக அளவில் பரவி வருவதை நீங்கள் அடிக்கடி பதிவு போட்டு தெரிய படுத்த வேண்டாம். அது கண்கூடாக தெரிகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மத வன்முறை, தீவிரவாதம், உள் நாட்டு குழப்பங்கள், இவை போதாதா இஸ்லாம் வளர்ந்து வருவதை தெரியப்படுத்த. ஏற்கனவே கொரியா இரண்டாக பிரிந்து சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் பரவி விட்டதல்லவா இனி பாருங்கள் அதிர் வேட்டுகள் முழங்கும். தங்களுக்குள்ளேயே அடித்து கொள்வார்கள் இன்னும் கொஞ்ச நாளில் 'கொரியாவில் ஷரியாவை கொண்டு வா, இஸ்லாமிய ஆட்சி கொண்டு வா' என்ற முழக்கங்கள் கேட்கும், நாடு வன்முறையால் ஜெக ஜோதியாக எரியும் - வாழ்க கொரியா,

Dr.Anburaj said...

கொரியாவில் உள்ள புத்தர்விஹாரங்கள் ஏன் உங்கள் கண்ணில் படிவில்லை.அன்பின் உருவமாகத் திகழும் கௌதமர் எங்கே! வெட்டி குத்து கழ்பழி என்று கூச்சல்போடும அரேபிய கலாச்சாரம் எங்கே? கொரியா இனிமேல்உருப்படாது.லெபனான் சிரியா போல்சீரழிந்து சின்னாப்பின்னமாகிப்போகும்.நிச்சயம் அதை தடுக்கும் அற்றல் கௌதமரின் அன்புள்ளத்திற்கு உண்டு. தங்களின் கூற்று ஒரு முட்டாள் கொரியனின் செயல்.