Followers

Friday, January 17, 2014

ஆயிஷா ஜாஃப்ரி - சவுதி விமான ஓட்டி!



படத்தில் இருப்பது ஹனாதி ஜக்கரியா அல் ஹிந்தி - 2004 ல் சவுதி விமான ஓட்டியாக வேலையில் சேர்ந்த முதல் சவுதி பெண். பெயரை வைத்து பார்க்கும் போது இவரது தாயோ அல்லது தந்தையோ நமது இந்தியாவை சேர்ந்தவராக இருக்கலாம்.

அடுத்து ஆயிஷா ஜாஃப்ரி என்ற சவுதி பெண்ணும் இதே போல் விமான சம்பந்தமான படிப்பை முடித்து இன்று சவுதிகளை பெருமைபட வைத்துள்ளார். தபுக் பல்கலைக் கழகத்தில் புவியியல் படிப்பை முடித்தார். அதன் பிறகு மாஸ்டர் டிகிரியையும் 'பப்ளிக் ரிலேஷன்' என்ற பிரிவில் முடித்துள்ளார்.

இவர் அல் வதன் தினசரி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறும் போது: 'விமானம் சம்பந்தப்பட்ட இது போன்ற துறைகளை சவுதி பெண்கள் அதிகம் எடுப்பதில்லை. இது எனக்கு மிகுந்த சவாலான படிப்பாக இருந்தது. எனது உறவினர்களில் சில ஆண்கள் இந்த துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பல முறை பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளேன். விமான கட்டுப்பாடு, மற்றும் விமான ஓட்டியாக வேலை செய்வது மிக ரிஸ்கான வேலை. பல பேரின் உயிர்களுக்கு நாம் பொறுப்பாகிறோம் என்ற அதிக பலுவும் இந்த வேலையில் சேர்ந்து கொள்கிறது. எந்த நேரமும் எதுவும் இந்த வேலையில் நடக்கலாம் என்பதால் இந்த துறையை தேர்ந்தெடுப்பவர்கள் மிக சொற்பமே!

புவியியல் துறையில் நான் முன்பே பட்டம் பெற்றிருந்ததால் விமானம் சம்பந்தப்பட்ட படிப்பை படிப்பதில் எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. மேலும் காலநிலை, காற்று வீசும் திசைகள் பற்றிய அறிவு போன்றவை எல்லாம் முன்பே நன்றாக படித்திருந்ததால் ஓரளவு சுலபமாக இருந்தது. ஆங்கில அறிவும் ஓரளவு நன்றாக இருப்பது அவசியம். சவுதி பெண்கள் நான் மேற்கூறிய தகுதிகளை வளர்த்துக் கொண்டு இந்த படிப்பை அதிகம் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை சொல்லிக் கொள்கிறேன். சவுதி மட்டும் அல்ல. மொத்த வளைகுடாவையும் எடுத்துக் கொண்டாலும் இந்த துறையில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இந்த தொழிலில் ஆண்கள் கலப்பில்லாமல் பெண்கள் மட்டுமே கூட பணிகளை செய்து விடலாம் ஆதலால் இந்த தொழிலானது சவுதி பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பது எனது கணிப்பு.

இந்த படிப்பை முடிப்பதற்கு எனக்கு சகல விதத்திலும் மிகவும் உறுதுணையாக இருந்தது எனது தந்தை என்றால் மிகையாகாது' என்று தனது பேட்டியை முடித்துக் கொண்டார் இந்த இளம் சவுதி பெண்மணி.

சவுதி ஓரளவு இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் பெண்களின் முன்னேற்றத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது: என்ற வாதம் பரவலாக வைக்கப்படுகிறது. அது பொய்யான வாதம்: பெண்கள் இஸ்லாமிய வரைமுறைக்குள் தங்களின் முன்னேற்றத்தை மிகச் சிறப்பாக தற்காலங்களில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்குவதற்கே இதனை தமிழ்படுத்தினேன்.

இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் பெண்கள் முன்னேற்றத்தில் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சவுதி மற்றும் வளைகுடாக்கள் விஞ்சி விடும் என்பது எனது கணிப்பு. அந்த முன்னேற்றம் பெண்மைக்கு இழிவு வராத வகையில் இருக்கும்: இஸ்லாமிய வரையறைக்குள் இருக்கும் என்பது மேலும் அந்த முன்னேற்றத்திற்கு மெருகூட்டுகிறது.

தகவல் உதவி:

சவுதி கெஜட்

7 comments:

வவ்வால் said...

திரு.சுபி.சுவாமிகள்,

பெண்ணுரிமை விடயத்தில் மிகவும் பிற்போக்கான சவுதியில் பெண்ணொருவர் விமான ஓட்டியாக வந்திருப்பது பாராட்டுக்குரியது.

//அந்த முன்னேற்றம் பெண்மைக்கு இழிவு வராத வகையில் இருக்கும்: //

அப்போ உலகநாடுகளில் பலப்பணிகள் புரியும் பெண்களும் "பெண்மைக்கு" இழிவு சேர்க்கிறாங்களா?

இல்லை உலக நாடுகள் எல்லாம் பெண்மைக்கு இழிவு சேர்க்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனவா?

அந்தப்புரங்கள் வைத்து பாலியல் அடிமைகளாக பெண்களை இழிவுப்படுத்துவதே அரேபீய ஆளும் வர்க்கம் தான்.

Anonymous said...

சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது.

ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன.

பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பவங்களை மட்டுமே வத்திக்கான் திருச்சபை இதுவரை அறிக்கையிட்டுள்ளது.

பாதிரிமாரின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்க திருச்சபை தலைமை மூடிமறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் அதிகாரிகளுக்கு முறையிடாமல், சம்பந்தப்பட்ட பாதிரிமாரை வேறு கத்தோலிக்க பங்குப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் வத்திக்கான் மீது விமர்சனங்கள் உள்ளன.

http://www.bbc.co.uk/tamil/global/2014/01/140118_vatican.shtml

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//இல்லை உலக நாடுகள் எல்லாம் பெண்மைக்கு இழிவு சேர்க்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனவா?//

நான் சொல்ல வந்ததை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வதை அது இரவாக இருந்தாலும் மேற்கு நாடுகளில் பிரச்னை இல்லை. அதே போல் உடை விஷயத்திலும் எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதனால் பாலியல் விவகாரத்தில் சிக்கி தங்களின் குடும்ப வாழ்வையும் இழந்த பெண்மணிகள் நம் நாட்டிலும் உண்டு. இதற்கு காரணம் சரியான திட்டமிடுதல் இல்லாததாலேயே! சவுதியை பொருத்த வரை ஒரு பெண் தானாக விரும்பினால் மட்டுமே மற்ற ஆடவரோடு கள்ள தொடர்பு கொள்ள முடியும். வலுக்கட்டாயம் பண்ண முடியாது. அதற்கு காரணம் சவுதியில் நடைமுறைப்படுத்தப்டும் கடுமையான சட்டங்கள். இதை நாம் ஐரோப்பிய நாடுகளில் எதிர்பார்க்க முடியாது என்பதே நான் சொல்ல வந்தது.

SNR.தேவதாஸ் said...

பாரத பிரதமர் திரு.மோடி அவர்களால்தான் இது சாத்தியமாகி உள்ளது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Seeni said...

Nalla pakirvu...!

Anonymous said...

தாயுமானவன் on January 16, 2014 at 9:53 pm

திரு. ரூபன்.

அதிகம் இல்லை 5 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த இலங்கை வரலாறை பாருங்கள் அப்போது தெரியும். இதை விட கேவலமான அவலம் அங்கு நடந்து இருக்கிறது. அந்த அவலத்தை நடத்தியது இசுலாமிய ஆட்சியாளர்கள் கிடையாது. மகிந்த ராஜபட்சே என்கிற ஒரு பவுத்த சிங்கள இன வெறி மிருகம் அதை நடத்தி முடித்தது. உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமானால் திருப்பதிக்கு வந்து பூரண கும்ப மரியாதையுடன் பெருமாளை தரிசனம் செய்து விட்டு போன அதே பவுத்த பாசிச மிருகம் தான்.. வெறும் 2 ஆண்டுகளில் சிங்கள ராணுவத்தால் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் மன்னிக்கவும் இந்து தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்களின் கலாசார சின்னமான கோவில்கள் பல இடிக்கப்பட்டன… பல இந்து தமிழ் பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதை பற்றிஎல்லம் இந்த தளத்தில் யாரும் ஒரு மூச்சு கூட விடவில்லை. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி என்பது 300 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போன ஒன்று… ஆக, 400 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட இந்துகளுக்காக வார்த்தைக்கு வார்த்தை கண்ணீர் வடித்து இஸ்லாமியர்களுக்கு எதிராக கட்டுரை தீட்டும் தாங்கள் 4 ஆண்டுகளுக்கு முன்னாள் நம் கண் முன்னே இந்து தமிழர்களை கொன்றழித்த பவுத்த பாசிசத்தை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே ஏன்? தாங்கள் தான் என்றில்லை இந்த தளத்தில் இசுலாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக வரிந்து கட்டி கொண்டு கட்டுரை கணைகளை தொடுக்கும் எழுத்தாளர்கள் அனைவருமே ஈழ தமிழர் அழிப்பை கண்டுகொள்ளாதது ஏனோ? தமிழர்களை கொன்ற பவுத்தம் இந்திய மதம் என்பதாலா அல்லது விவேகானந்தர் கூறியது போல் பவுத்தம் இந்து மதத்தின் ஒரு கிளை மதம் என்பதாலா. ஒருவேளை ராஜபட்சே இசுலாமியனாக இருந்திருந்தால் இந்நேரம் தங்களின் வன்முறையே வரலாறாய் தொடர் இலங்கையில் இருந்து தொடங்கியிருக்கும் அப்படிதானே!!!! ஹ்ம்ம்… உங்களின் அடுத்த பாகமாவது இந்துகளுக்கு எதிரான பவுத்த மத அட்டுழியங்களை தோலுரித்து காட்டுகிறதா என்று பாப்போம்.. ஒரு மனசாட்சியுள்ள உண்மையான இந்துவாக இதை கேட்கிறேன்…

//குறைந்தபட்சம் 200 மில்லியன் ஹிந்துக்கள் இந்தியாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ரத்த ஆறே ஓடியிருக்கிறது //

200 மில்லியன் என்றால் 20 கோடி என்று அர்த்தம்.. 20 கோடி இந்துக்களை இசுலாமியர்கள் கொன்றார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. பாரதியார் காலத்திலேயே 30 கோடி தான் இந்தியாவின் மக்கள் தொகை. அதற்க்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு அதிகபடியாக 20 கோடி தான் இருக்கு வாய்ப்பு உண்டு. நீங்கள் கூறும் கணக்கு படி பார்த்தல் இந்தியாவில் இந்நேரம் இந்துகளோ இந்து மதமோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களில் சிலர் கொடுங்கோல் ஆட்சி புரிந்தார்கள் என்பது உண்மைதான். அவர்களால் இந்துகளின் உயிர் பறிக்க பட்டது என்பதும் உண்மை தான்.ஆனால் நீங்கள் கூறுவது போல் 200மில்லியன் இந்துக்களை கொன்றார்கள் என்பதெல்லாம் அபத்தம். இந்தியாவை ஆண்ட இசுலாமிய மன்னர்களை காட்டிலும் இந்தியாவை கொள்ளையடிக்க வந்த இசுலாமியர்களால் தான்(தைமூர் ,கஜினிமுகமது, கோரிமுகமது) போன்ற கொள்ளையர்களால் தான் இந்துகளின் உயிரிழப்பு அதிகம். அவர்களுக்கு தேவை இந்தியாவின் செல்வம் அது இருக்குமிடம் இந்து கோவில்களில்,இந்துகளின் கோவில்களில் மலை மலையாக செல்வம் குவிந்து இருப்பது அவர்களின் கண்களை உறுத்தியது. ஆகவே செல்வங்களை கொள்ளையடிக்க கோவிலை தாக்கினார்கள். அதை தடுக்க வந்த அப்பாவி இந்துக்கள் பலர் பலி ஆனார்கள் ..அதுவும் கூட பல ஆயிரங்களில் தானே தவிர.. நீங்கள் சொல்வது போல் கோடிகளில் எல்லாம் கிடையாது.. மற்றபடி இந்தியாவை ஆண்ட முகலாயர்கலான பாபர், ஹுமாயுன், அக்பர், ஜெஹன்கிர் போன்றோர்கள் நல்லாட்சியே தந்தார்கள். கடைசியாக வந்த அவுரங்கசிப் ஒரு மத வெறியன் என்பது உண்மையே ஆனால் அதற்காக இந்துக்களை கோடிகளில் கொலை செய்யும் அளவிற்கு அவன் செல்லவில்லை … மாறாக இந்துகளின் அடிப்படை உரிமைகளை பறித்தான். எப்படி ராஜபட்சே தமிழர்களின் உரிமையை பறித்தானோ அதே போன்று .. ஏற்கனவே உள்ள பழைய கோவில்களை விட்டு ,புதிதாக கட்டிய கட்டி கொண்டு இருக்கும் கோவில்களை இடிக்க ஆணையிட்டான் ஜிசியா என்னும் வரியை இந்துக்களின் தலையில் திணித்தான் இவ்வளவே.

suvanappiriyan said...

//பாரத பிரதமர் திரு.மோடி அவர்களால்தான் இது சாத்தியமாகி உள்ளது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்//

மோடி என்ற பித்து உங்கள் தலையில் ஏகத்துக்கும் ஏறியுள்ளது. அது இறங்க கொஞ்ச நாள் ஆகும். :-)