Followers

Monday, September 25, 2017

அன்னை தெரஸாவுக்கு ஏற்பட்ட விரக்தி!

“பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?”

“என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.”

“என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.”


மேலே நாம் படித்த வார்த்தைகள் அனைத்தும் அன்னை தெரஸா உதிர்த்த முத்துக்கள்.

மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள ‘அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு’ என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதை நான் இணையத்தில் படித்தபோது முதலில் என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் நான் படிக்கும் காலத்திலிருந்தே அன்னை தெரஸாவைப் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தேன். பரலோகத்தில் இருக்கும் ஏசு இதற்காகவெல்லாம் தன்னை ரட்சிப்பார் என்ற நம்பிக்கையில்தான் தெரஸா தனது வாழ்நாளை பொதுப்பணிக்காக அர்ப்பணித்தார். காலம் செல்லச் செல்ல அவருக்கு உண்மை விளங்கியிருக்கிறது. எனினும் உலகம் முழுவதும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். இனி திரும்பி செல்ல வாய்ப்பில்லை என்பதால் மனதுக்குள் வைத்தே ஒரு மௌன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். முடிவில் தன்னையும் மீறி தனக்குள் உள்ள ஆற்றாமையை பல கடிதங்களாக எழுதி அதை ரகசியமாகவும் வைத்து பரலோகத்துக்கு போய் சேர்ந்து விட்டார் அந்த புண்ணியவதி. தற்போதுதான் அவை ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். ஏசு தன்னை எக்காலத்திலும் வணங்கச் சொல்லி சொல்லவில்லை. தான் கடவுள் என்றும் சொல்லவில்லை. ஏசுவுக்கு பின்னால் வந்தவர்கள் தங்களின் சுயநலத்துக்காக ஏசுவை கடவுளாக்குகிறார்கள். இந்த கருத்தே உலகம் முழுவதும் இன்றுவரை திணிக்கப்பட்டு வருகிறது. 'புதிய ஏற்பாடு' என்பது ஏசுவைப்பற்றி மத்தேயு மாற்கு யோவான் போன்றவர்கள் எழுதிய தொகுப்புகளே! இறைவனால் அருளப்பட்ட வேதமன்று. இப்படி மனிதர்களால் எழுதப்பட்டதை வேதவாக்கியமாக நம்பியதால்தான் தெரஸாவுக்கு முடிவில் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

'பின்பு ஏசு கலிலியோ எங்கும் சுற்றி திரிந்து அவர்களுடையே ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேசத்தைப் பிரசிங்கித்தார்.' - (மத்தேயு 4:23)

'ஏசு கலிலியோவில் வந்து தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்' - (மாற்கு 1:14)

'காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்' -(மாற்கு 1:15)

ஏசு சொன்னதுபோல் தேவனுடைய சுவிசேஷத்தை அன்னை தெரஸா பின்பற்றியிருந்தால் இத்தகைய ஏமாற்றத்துக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார். துரதிஷ்டவசமாக ஏசு பிரசிங்கித்த வேத வாக்கு மிஷினரிகளால் மறைக்கப்பட்டு விட்டது. ஏசுவுக்கு அருளிய அந்த வேத வாக்கு தற்போது நமக்கு கிடைக்குமானால் அது முற்றிலும் முஸ்லிம்களின் குர்ஆனையே ஒத்திருக்கும். 

என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். நான் முகமது நபியின் சொல் செயல் அங்கீகாரம் அனைத்தையும் முடிந்தவரை வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்ச்சிப்பவன். இருந்தாலும் அவரை கடவுள் நிலைக்கு உயர்த்தமாட்டேன். அவரை இறைவனின் தூதராகவே பார்க்கிறேன். அன்னை தெரஸாவும் என்னைப்போல் ஏசுநாதரை ஒரு தூதராக பார்ததிருந்தால் இது போன்ற ஒரு விரக்தி ஏற்பட்டருக்காது. அவரின் வாழ்க்கையில் ஒரு வெறுமையும் தோன்றியிருக்காது.

இறைவனே மிக அறிந்தவன்.



4 comments:

Dr.Anburaj said...

தெரஸா அவா்கள் சுவாமிவிவேகானந்தாின் பத்தகங்களை படிக்கவில்லை.ஆகையால்தான் இதுபொன்ற ஒர விரக்தி நிலைக்கு ஆளாகியுள்ளாா்.
01.இயேசு ஒரு மனிதன்தான்
02.உலக மக்களின் பாவத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை.
03.யுதா்கள் தங்களை ரட்சிக்க ஒரு இறைதூதரை கிறிஸ்துவை அனுப்புவாா் என்று விசுவாசித்தாா்கள். சுழற்காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கதரிசி புமிக்கு மீண்டும் வருவாா்.பிறகு கிறிஸ்து பிறப்பாா் என்பது யுதா்களுடைய நம்பிக்கை.இயேசு தன்னை கிறிஸ்து என்று அறிவித்தாா். எலியா யாா் என்ற கேள்விக்கு யோவானைக் காட்டினாா். யோவான் எலியா என்று யுத குருமாா்கள் ஏற்கவில்லை. பரலோகம் செல்லும் போது என்ன உடலில் போனாரே அதே உடலில் அவா் வருவாா் (-மாமிசத்தில் எலிசா).ஆகவே யோவான் எலியா இல்லை என்றனா். இயேசு தன்னை பொய்யாக கிறிஸ்து என்று அறிிவத்ததால் இவரை வேதப்புரட்டன் என்று பட்டம் கட்டி சிலுவையில் அடித்தனா். சிலுவையில் அடித்ததினத்திற்குமறுநாள் சப்பாத் பண்டிகை.எனவே இயேசுவுடன் சிலுவையில் அடிக்கப்பட்ட கள்ளா்கள் கால்முறித்து கொன்று அடக்கம் செய்தனா் அரச படை வீரா்கள்.ஆனால் இறந்ததாகச் சொல்லப்பட்ட இயேசுவை குந்திாிகம் தடவிய துணியில் நன்கு சுற்றி ஒரு குகைக்குள் பாதுகாப்பாக வைத்தாா்கள்.வீரா்கள் ஏன் இயேசுவை அடக்கம் செய்யவில்லை ? இயேசு காப்பாற்றப்பட்டாா். பின் பிற நாடுகளில் வாழும் யுதா்களை சந்திக்க புறப்பட்டாா். இந்தியாவிற்கு வந்ததா்.இங்கு காஷமீாில் இறந்ததா். என்று கூடுதலாக சாித்திரம் சொல்கிறாா் காதியானி முஸ்லீம் நபி குா்சா முஹம்மது.
04.இயேசுவின் இரத்தம் பாவிகளை ரட்சிக்கும் என்பது முட்டாள்தனம்
06.யுதா்களிடையே சீா்திருத்தத்தை ஏற்படுத்தியவா்
07. தன்னை துன்புருத்தி சிலுவையில் அடித்த மக்களுக்காக ” பிதாவே இவா்களை மன்னியும்.தாங்கள் செய்வது என்ன வென்று அறியாதிருக்கின்றாா்கள் ” என்று அன்பின் சிகரமாக பிராத்த்தனை செய்தாா்.
08.சிலுவையில் அடிபட்டமைக்காக மனம் வெதும்பி ” என்தேவனே என்தேவனே என்னை ஏன் கைவிட்டீர் ” என்று தனது ஆற்றாமையை கொட்டுகின்றாா்.
09.இயேசு நல்ல நிறை ஞானியாவாா். இந்து பண்பாடு மிக்கவா். சாத்வீகவாதி.
10.கிறிஸ்தவ இயேசுவை தவறாக சித்ததாிக்கின்றது.
11. இயேசு சிலுவையில்அடிப்பட்டதற்கு பொதுவாக மக்களின் சீா்திருத்தத்தை விரும்பாத மனநிலைரதான் காரணம்.
12.விபச்சாரம் செய்த பெண்ணுக்கு கல்லால் அடித்து கொல்ல அனுமதி தாரும் என்று கேட்ட மக்களுக்கு ” உங்களில் பாவம் செய்யாதவன் முதல் கல்லை அவள் மீது போடட்டும் என்றாா். கல்லை போட யாரும் இருக்கவில்லை.அனைவரும் கலைந்து போய்விட்டாா்கள். இது உலகத்திற்கு ஒரு பொிய பாடம்.
13.மதம் என்பது மனபாிபாகத்தை உயா்த்துவது என்பது இந்து மதத்தின் கொள்கை.அதன்படி வாழ்ந்தால் தெரஸா அவா்களுக்கு எந்த குழப்பமும் ஏற்படாது.
14. கத்தோலிக்கா்களை மட்டுமே கடவுள் அருள் பெற்றவா்களாக கருதும் முட்டாள்தனமும் இத்தகைய வெறுமை ஏற்படக் காரணம்.
15. இயேசு” நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கின்றோம்.என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான் ” என்று அத்வைதம் பேசுகின்றாா்.
16.இயேசு செக்ஸ்உறவுக்கு பிறக்கவில்லை என்ற கருத்து முக்கியமானது அல்ல. பாலியல் உறவு பாவம் அல்ல.
17. செக்ஸ் உறவுக்கு பிறப்பது இயல்பானதுதான்.க
தவறான கருத்துக்களை பின்பற்றுபதால் ஏற்படும் குழப்பம் தெரஸாவுக்கு ஏற்பட்டுள்ளது.

Dr.Anburaj said...


இசுலாம் மற்றும் கிறிஸதவ சமய அமைப்புக்களை பொருத்த மட்டில் மதம் என்றால் ஆள்பிடிப்பது மட்டும்தான். ஆட்களின் எண்ணிக்கையை பெருக்கி ......அரசாட்சியை கைபற்றி .............. தங்கள் கட்சியை சேராத மக்களை ஒடுக்கி ....ஒடுக்கி அழிப்பதுதான் மதம் என்ற கொள்கை காரணமாக விரக்தி ஏற்படுகின்றது.
தான் சிறந்த கொள்கை என்று நம்பி வந்த பல கருத்துக்களின் மீது உள்ள நம்பிக்கை அவருக்கு குறைந்து விட்டது.அதுவும் விரக்திக்கு காரணம்.

Dr.Anburaj said...

மேலும் மதர் தெரசா அவா்கள் தொண்டு பண்ணவில்லை.மத வியாபாரம் பண்ணினாா். திரு.தேசாய் அவா்கள் பிரதமராக இருந்த போது மதமாற்றத்தை ஒழுங்கு படுத்தும் சட்டம் அருணாச்சல பிரதேசத்தில் போடப்பட்டது.உடனே தெரசா அம்மையாா் அங்கு 26 இடங்களில் நடத்தி வந்த தொண்டு அமைப்புக்களை மூடி விட்டாா்.மதம்மாற்ற அனுமதியில்லையெனில் ”தொண்டு” ம் இலலை.என்றாா். அவரெல்லாம் புனிதரா ? இதற்குபோய் நோபல் பாிசு. புனிதா் பட்டம். சாியான வெத்து வேட்டு.பெருங்காய டப்பா.
ஊரணி நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு.யாதும்ஊரே யாவரும் கேளீா் என்ற தத்துவங்களை இவா் அறியாா்.யாவருக்கும் ஈமின் அவன்இவன் என்றன்மின் என்ற திருமந்திர அமிா்த வசனங்களை இவா் ஒரு நாளாவது படித்திருந்தால் வாழ்ககை என்ற என்பதை சாியாக உணா்ந்திருப்பாா்.இவா் படித்த மூடநம்பிக்கைகள் இவரது மனதில் விரக்தியை எற்படுத்தி விட்டது.

Dr.Anburaj said...


இந்துமதத்தின் நோக்கம் மனிதனை பிறாமணன் ஆக்குவது.அந்தணனாவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே ! என்பது திருவாசகம்.சொா்க்கம் நரகம் என்ற ஆசை திட்டம் இந்து புராணங்களில் காணப்பட்டாலும் அதுவும் ஒரு தற்காலிக பாவ புண்ணிய பலனை அனுபவிக்கும் நிலைதான். மீண்டும் அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டப்பட்ட வாழ்க்கைக்கு வந்துதான் ஆக வேண்டும்.சொா்க்கம் -நரகம் என்ற ஆசையின் அடிப்டையில் மனிதன் செயல்படுவது ஆபத்தானது.சாியான மனபாிபாகம் கொண்டவா்கள் தாங்கள் செய்த தா்மத்திற்காக நியாயத்திற்காக தொண்டுகளுக்கான ஒருபோதும் வருத்தம் அடைய மாட்டாா்கள்.