Followers

Thursday, March 14, 2019

கேரள நீதி மன்றம் சுதர்ஸன் டிவிக்கு 50 லட்சம் அபராதம் விதித்தது!



கேரள நீதி மன்றம் சுதர்ஸன் டிவிக்கு 50 லட்சம் அபராதம் விதித்தது!
சுதரஸன் டிவி தொடர்ந்து இந்துத்வா கொள்கையை பரப்பும் ஒரு சேனல். இதன் உரிமையாளர் சுரேஷ். சென்ற ஆகஸ்ட் 2-, 2016 ஆம் ஆண்டு மலபார் கோல்ட் ஹவுஸ் துபாயில் பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாடியதாக மார்பிங் செய்யப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டது. ஆனால் அந்த வீடியோவானது மலபார் ஹவுஸ் சென்னையில் கொண்டாடிய ஒரு நிகழ்வாகும். முஸ்லிம்கள் பற்றி இந்துக்கள் தவறாக நினைக்க வேண்டும் என்ற பாசிச சிந்தனையில் இந்த பொய் செய்தியை சுரேஷ் வெளியிட்டுள்ளான். மலபார் கோல்ட் ஹவுஸின் உரிமையாளர் சுதர்ஸன் தொலைக்காட்சி மேல் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில் சுதர்ஸன் டிவி வீடியோவை மார்பிங் செய்து வெளியிட்டது உறுதியானது. தற்போது கேரள நீதி மன்றம் சுதர்ஸ்ன் தொலைக்காட்சிக்கு தவறு செய்தமைக்காக 50 லட்சம் அபதாரம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை மலபார் ஹவுஸின் உரிமையாளர் எம்பி அஹமது வரவேற்றுள்ளார். 'உண்மைக்கு கிடைத்த வெற்றி' என்று கூறியுள்ளார்.
மோடியிலிருந்து நம் ஊர் ஹெச் ராஜா வரை அனைத்து சங்கிகளுமே பொய் செய்திகளை பரப்புவதையே தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். அதன் வழியில் வந்த சுதர்ஸன் டிவியும் பொய் செய்திகளை திட்டமிட்டே பரப்பி வருகிறது. இவர்கள் ஆட்சியை இழந்த பிறகுதான் இது வரை என்ன என்ன கோல்மால்கள் செய்துள்ளார்கள் என்பது வெளிச்சத்துக்கு வரும். அதுவரை பொருப்போம்.
பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு இவ்வாறு லட்சக் கணக்கில் அபராதம் விதித்தால் ஃபேக் செய்திகள் குறைய வாய்ப்புண்டு. சங்கிகளும் வாலை சுருட்டிக் கொள்வர்.
தகவல் உதவி
சியாஸத்.காம்
14-03-2019


3 comments:

Dr.Anburaj said...


வீண் சேட்டைகள் செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேர வேண்டும்.

நீதிமனறம் சில வேளைகளில் நன்கு செயல்படுகின்றது.

Dr.Anburaj said...



3500 இசுலாமிய தேச படை வீரா்கள்
சிரியா ராணுவத்திடம் சரண் அடைந்தாா்கள். அரேபிய காடைத்தனத்தின் முடிவு இரத்தக்களறிதான். 1500 நடக்கும் இரத்தக்களறிக்கு அரேபிய நாட்டு மத நூல்கள் காரணமாக இருந்து வருகின்றது.

Dr.Anburaj said...

ஆனாலும் சாா் ஒரு பிரச்சனை உள்ளது. இசுலாமிய தேசம் போன்ற காடையர்களின் இயக்கத்தில் கேரளத்தில் இருந்து ஆண்கள் - கொஞ்சம் பெண்கள் கூட - சோ்ந்து ராணுவ பயிற்றி பெற்று பிற மத மக்களைக் கொன்று விட்டு இசுலாமிய காலிபேட்டை உருவாக்க முயன்று வருகின்றாார்கள்.

இசுலாமிய தேசப்படையில் இதுவரை அரசுக்கு தெரிந்து கேரள முஸ்லீம்கள் 314 பேர்கள் பணியாற்றி வருகின்றார்கள். ஆபத்தானவர்கள்.இந்தியாவிற்குள் வர அனுமதிக்கக் கூடாது.