Followers

Thursday, March 14, 2019

'பார்க்க வச்சு சாப்பிடாதீங்க'

'பார்க்க வச்சு சாப்பிடாதீங்க'
'தமிழகத்தில் ஒரு வழக்கம்  உண்டு. பக்கத்தில் இருப்பவர் எந்த நிலையில் இருப்பாரோ... எனவே எது சாப்பிட்டாலும் பக்கத்தில் உள்ளவரிடம் 'சாப்பிடுகிறீர்களா?' என்று ஒரு கேள்வியை கேட்போம். இப்போ என்னை பாக்க வச்சு சாப்பிடுறீங்க... நீங்க உங்களின் உயர் சாதி பெருமையை பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்கிறீர்கள். தாழ்ந்த சாதியான நான் என் பெயருக்கு பின்னால் சாதியை போட வெட்கப்படுகிறேன். என்னை பார்க்க வைத்து சாப்பிட்டுக் கொண்டுள்ளீர்கள்' என்று கரு பழனியப்பன் சொன்னவுடன் பலர் இனி சாதி பெயரை என் பெயர் பின்னால் போட்டுக் கொள்ள மாட்டேன் என்று உறுதி எடுத்தனர். இது தான் மாற்றம்.
படித்தவர்கள் நிறைய உள்ள கேரளாவில் சாதி பெயரை சேர்த்துக் கொள்வதில் வெட்கப் படுவதில்லை: ஆனால் தமிழகத்தில் வெட்கப்படுகிறார்கள். காரணம் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் பெரியார். என்ற தகவலையும் கரு பழனியப்பன் பதிந்தார்.
------------------------------------------------
இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள எங்கள் கிராமத்து தெரு பெயர்கள் எல்லாம் என்ன தெரியுமா? ஞாயக்கர் தெரு, கொல்லன் தெரு, பாப்பான் தெரு, செக்கடித் தெரு. ஆனால் வசிப்பது அனைவரும் இஸ்லாமியர்கள். அனைத்து சாதியினரும் இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைந்து விட்டனர். எவருக்குமே தாங்கள் முன்னால் எந்த சாதியில் இருந்து வந்தோம் என்றே தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளோம்.
இப்போது உள்ள இந்து தலைமுறையினர் தாங்கள் எந்த சாதி என்று நன்றாக தெரியும். ஆனால் 800 வருடங்களுக்கு முன்பு சாதிக் கொடுமையால் இஸ்லாத்தை ஏற்ற எங்கள் மூதாதையரின் சாதி என்ன என்பது எங்களுக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளவும் நாங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. கருப்பு, வெள்ளை, தூய வெள்ளை, மாநிறம் என்று பல கலவைகளில் இஸ்லாமியரை எங்கள் கிராமத்தில் பார்க்க முடியும். இஸ்லாம் இந்திய மண்ணுக்கு செய்த மகத்தான பணிகளில் சாதியை ஒழித்ததும் ஒன்று. அதனால் தான் பெரியாரே இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த வழி என்று சொல்லி விட்டு சென்றார். அதனால்தான் எல்லா மதங்களையும் விமரிசித்த பெரியார் நபிகள் நாயகத்தை புகழ்ந்து விட்டு சென்றார்.


2 comments:

Dr.Anburaj said...

யாரும் எந்த பெண்ணையும் புணரலாம் என்ற கொள்கைஉடையவா்.மகள் என்று வளா்த்த பெண்ணையே ...... பண்பாடுயின்றி மனைவியாக்கிக் கொண்ட உத்தமன் ஈவெரா. இவருக்கு இசுலாம் மிகவும் பிடித்தது என்றாலே இசுலாத்தின் தகுதியை நாம் தெரிந்து கொள்ளலாம். சரியான தகவல்கள் தெரியாமல் சிலா் பேசம் அவசர பேச்சுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமா ?
--------------------------------------------------------------------------------
பாரத ரத்னா அம்பேத்காா் சொல்கிறாா்
சாதீயத்தை ஒழித்தது கௌதம புத்தர். பௌத்தத்தை ஒழித்தது இசுலாம்.
------------------------------------------------------------------------------
இசுலாமிய பிரிவுகள்
ஷயா சன்னி அகமதியா சுபி போர்முஸ்லீம்கள் லெப்பை தக்கினி மரைக்காயா் ராவத்தா் மாப்பிள்ளை மாப்ளா காக்கா சேட் சையது ஷேக் பீர் தாவுத் அன்சாரி நவாப் போனற சாதிகள் உங்களிடம் உள்ளேதே. இதுபோன்று ஆயிரம் உள்ளது. ஏக இறைவன் ஏன சமூகம் என்று பீற்றி என்ன பயன் ? பிரிவுகளின் மோதல்இரத்தக்களறியாக உள்ளதே ? தெளிவான கொள்கையோடுதானே சிறுபான்மை பெண்களை கற்பழித்து வைப்பாட்டியாக வைக்கின்றீர்கள். வங்கதேசத்தின் வரலாறு தெரியும் தங்களுக்கு. இராக்கில் வாழந்த எகஸ்டி மக்களின் அவல நிலைக்கு இசுலாம் தானே காரணம்.
காடையா்களை உருவாக்குவதில் தனித்திறமை காட்டி வருவது இசுலாம்.

vara vijay said...

Periyar also told there is no holg and who taught u about god is a fraud. What is ur opinion.