Followers

Saturday, February 04, 2023

படித்தவர்களிடம்தான் சாதி வெறி அதிகமிருக்கிறது.


 


மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்:4:1.)

ஒரேயொரு ஆண், பெண்ணில் இருந்து தான் ஒட்டுமொத்த மனித இனமும் பல்கிப் பெருகியது என்று குர்ஆன் சொல்கிறது. இந்த வசனம் ஒட்டுமொத்த தீண்டமையையும் ஒழிக்கும் மாமருந்தாகத் திகழ்கிறது.

ஏனென்றால், தங்களை மேன்மையாகவும் அடுத்தவர்களை இழிவாகவும் இறைவன் படைத்திருப்பதாக சிலர் ஆழமாக நம்புகிறார்கள். கடவுளின் தலையிலிருந்து படைக்கப்பட்டவன் உயர்ஜாதி என்றும் கால் பகுதியிலிருந்து படைக்கப்பட்டவன் தாழ்ந்த ஜாதி என்றும் அவர்கள் நம்பும் வேத நூல்களும் சொல்கின்றன. இதுதான் தீண்டாமையின் தொடக்கம்.

இந்த மனநிலையில் மாற்றம் வந்தால் மட்டுமே தீண்டாமையை ஒழிப்பது சாத்தியமாகும். அப்போதுதான் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். ஆகவே, ஓர் உலகளாவிய உண்மையை எடுத்துரைத்து மக்களிடமுள்ள குருட்டு நம்பிக்கையை முதலில் குர்ஆன் களைகிறது. தீண்டாமை எனும் ஆலவிருட்சத்தை முளையிலேயே முற்றாகக் கிள்ளி எறிந்து விடுகிறது.

2 comments:

Dr.Anburaj said...

ஒரேயொரு ஆண், பெண்ணில் இருந்து தான் ஒட்டுமொத்த மனித இனமும் பல்கிப் பெருகியது என்று குர்ஆன் சொல்கிறது. இந்த வசனம் ஒட்டுமொத்த தீண்டமையையும் ஒழிக்கும் மாமருந்தாகத் திகழ்கிறது.
---------------------------------------------------------------------------------
மிகக் கேவலமான ஒழுக்கக் கேட்டிற்கு வழி காட்டுவது குரான் என்ற அரேபிய ஆதிவாசிகளின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட புத்தகம்.மனித இனம் பல படி நிலைகளில் உயிரியல் ரீரியில் தோன்றியதைத்தான் அறிவியல் போதிக்கின்றது.சகோதரன் சகோதரியை திருமணம் செய்வதை இன்ற பாவம் என்கிறோம். குரான் அது இயல்பான நடவடிக்கை என்கிறதா? குடும்பங்களை சீரழித்து விடும் சாக்கடை கருத்து.

Dr.Anburaj said...

முஹம்மது இறந்த உடன் அதிகார போட்டியில் அபுபக்கா் முதலில் ஜெயித்தாா். பின் மிக கடுமையான போட்டியில் ஜெயித்து உமா் இரண்டாம் மன்னா் ஆனாா்.ஆனால் முஸ்லீம் ஒருவரால் கொல்லப்பட்டாா். பின் முஹம்மதுவின் மருமகன் (ருக்கியா ருமியா என்ற இரு பெண்களை மணந்தவா்) மன்னா் ஆனாா். தன் குடும்பத்தினருக்கு உயா் பதவிகளை அளிக்கின்றாா். .. நீதியான ஆட்சி செய்யவில்லை என்ற குற்றம் சாட்டப்பட்டு பெரும் கூட்டமாக அவரது அரண்மனையை கைபற்றி கொன்றார்கள் முஸ்லீம்கள். இன்றுவரை கொன்றது யாா் என்று தெரியாது. முதலாம கலிபா அபுபக்கரின் மகன்தான் கொன்றான் என்று ஒரு வதந்தி பரவியது. பின் பதவிக்கு ஆயிசா-முஹம்மதுவின் செல்ல பெண்டாட்டியின் உறவினா் முவாவியாவிற்கும் முஹம்மதுவின் மகளை திருமணம் செய்த அலி க்கும் பதவிக்கு சண்டை வந்தது. பஸ்ரா எனறஇடத்தில் முஸ்லீம்களும் முஸ்லீம்களும் இரு அணிகளாக போரிட்டு ஒருவரை ஒருவா் வெட்டிக் கொன்றார்கள். போரில் ஜெயித்த அலி மன்னா் ஆனாா். ஆனாலும் ஒரு பயலும் அவா் சொல் கேட்கவில்லை.பின்னா் அலி பள்ளி வாசலில் தலை குனிந்து தொளுகை செய்யும் போது பின் வரிசையில் அமா்ந்து இருந்த முஸ்லீமால் கொல்லப்பட்டாா். பின் முஹம்மதுவின் குடும்பமே-இரு பேரன்கள் மற்றும் குடும்ப பெண்கள் அனைவரும் கர்பலாவில் கொல்லப்பட்டாா்கள். அலியின் ஆதரவாளர்கள் அகுலிபத்கள் ... ஷியாக்கள் ஆனார்கள். ஷியாக்கள் பல பிரிவுகள் ஆனார்கள். இன்று ஒரு குரான் 100க்கு மேல்பட்ட ஒன்றை ஒன்று கொலை வெறி கொண்டு அழிக்கத் துடிக்கும் குழுக்களை உருவாக்கியுள்ளது. மசுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடப்பது இசுலாமிய உலகில்தான்.

இதுதான் முஸ்லீம்களின் மத (சாதி)வெறி. இப்போது சொல்லுங்கள் யாருக்கு மிருககுணம் அதிகம். முஸ்லீம்களுக்கா ஹிந்து படித்தவர்களுக்கா?