Followers

Saturday, February 18, 2023

பாராளுமன்றத்தில் இந்து மத எம்பியின் ஆவேச உரை

 பாராளுமன்றத்தில் இந்து மத எம்பியின் ஆவேச உரை


'புல்டோஷர்...புல்டோஷர்.. புல்டோஷர்... புல்டோஷர் பாபா என்பதில் ஒரு முதலமைச்சர் சந்தோஷமடைகிறார். ஏழைகளின் வீடுகளை இடிப்பதில் பெருமை கொள்கிறார். இது ஏன் இந்த நாட்டில் தொடர்கிறது. அதுவும் முஸ்லிம்களிடம் மட்டுமே ஏன் உங்களின் அரக்கத்தனத்தைக் காட்டுகிறீர்கள்?


ஒரு மந்திரி எதற்கெடுத்தாலும் 'பாகிஸ்தான் போய்விடு' 'பாகிஸ்தான் போய் விடு' என்கிறார். நம் எல்லோரும் பாகிஸ்தான் போய் விட்டால் இவர் யாருக்கு மந்திரியாக இருக்கப் போகிறார். அவரது வேலையே போய் விடுமே.


ஒரு எம்பி கத்தியை கூர்மையாக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். சட்டம் வேடிக்கை பார்க்கிறது.


நாட்டின் அனைத்து மட்டத்திலும் வெறுப்பு வளர்க்கப்பட்டுள்ளது. அது முஸ்லிம்களை மட்டும் பாதிக்கப் போவதில்லை. ஒட்டு மொத்த நாட்டையும் முடிவில் இந்துக்களை நோக்கியும் வந்து கொண்டிருக்கிறது. 


தொலைக்காட்சியில் தினமும் இந்து முஸ்லிம் வெறுப்பையும், பாகிஸ்தான் வெறுப்பையும் விதைக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. நாட்டு மக்களுக்கு ஒரு வேளை உணவு இல்லாமல் அல்லாடுகிறார்கள். அது பற்றி என்றாவது விவாதம் நடந்துள்ளதா?' என்று விளாசி தள்ளியுள்ளார்.


சம்பந்தப்பட்ட இருவரும் தேள் கொட்டிய திருடன் போல திரு திருவென முழிப்பதை பாருங்கள். கண்டிப்பாக ஏழை மக்களின் சாபம் இந்த இருவரையும் நிம்மதியாக தூங்க விடாது.















No comments: