Followers

Thursday, June 22, 2023

சத்ரபதி சிவாஜி இஸ்லாமியருக்கு எதிரியா?

 

சத்ரபதி சிவாஜி இஸ்லாமியருக்கு எதிரியா?

 

சிவாஜியின் தாத்தாவும் அப்பாவும் வேலை பார்த்தது இஸ்லாமிய மன்னர்களிடத்தில்...

 

சிவாஜியின் அப்பா அவ்வாறு வேலை பார்த்து வரும் போது இஸ்லாமிய மதத்தில் ஐக்கியம் கொண்டு இஸ்லாமியராகவே மாறி பெங்களூருவில் மரணித்தார்.

 

இஸ்லாமிய பெண்ணையும் இரண்டாந்தாரமாக மணந்து கொண்டார்.

 

சித்தி இப்றாகீம், மராட்டிய மன்னன் சிவாஜியின் மெய் காப்பாளர் மற்றும் தளபதியாக திகழ்ந்தவர், சிவாஜியின் நிழலாக இருந்த ஒரு இஸ்லாமியர்,

 

சிவாஜி அதிகம் செல்லும் ஆன்மீக தலம் ஹசரத் ஷாஹா ஷரிப் தர்ஹா அடக்ஸ்தலம்,

இந்த தலத்திற்கு சென்ற பிறகு தான் சிவாஜியின் பாட்டனார் மொலுஜிக்கு இரு மகன்கள் பிறந்தனர்,

 

அந்த பெரியவர் பெயரை தான் தன் இரு மகன்களுக்கு சூடினார்,

 

மூத்தவர் ஷாஹாஜி(சிவாஜியின் தந்தை)

 

ஷர்போஜி(சிவாஜி சித்தப்பா)

 

இங்கு எங்குமே சிவாஜி இஸ்லாமிய எதிர்ப்பைக் காட்டவில்லை. அப்படி என்றால் எதிர்ப்பு என்பதெல்லாம் பின்னாளில் பார்பனர்களால் புனையப்பட்டவைகளே...

 

சொல்லப் போனால் சிவாஜியை இந்து மன்னனாக முடி சூட்டுகிறோம் என்று சொல்லியே சிவாஜியின் கஜானாவையே காலி செய்தவர்கள் சித்பவன் பார்பனர்கள். 'நீ சூத்திரன்.. அதற்கு பரிகாரமாக நீ மன்னனாக வேண்டுமானால் ஒரு கோடி பார்பனர்களுக்கு தந்து முடி சூட்டிக் கொள்ள வேண்டும்’ என்று கொள்ளையடித்து நாட்டை நாசமாக்கியவர்கள் பார்பனர்கள். சிவாஜி இறந்த பிறகும் அவரது உழைப்பில் உருவான கோட்டைகளை ஆளுக்கொன்றாக பிரித்துக் கொண்டு அதனையும் சரிவர ஆளத் தெரியாமல் பிரிட்டிஷ் காரனிடம் கொடுத்து மான்யம் வாங்கி ஒதுங்கிக் கொண்டவர்கள். மராட்டிய பேஷ்வாக்கள் இவர்கள்தான்.

 

 ஆக... சிவாஜிக்கு எதிரி முஸ்லிம்கள் அல்ல... சித்பவன் பார்பனர்களே.




 

3 comments:

true tamilian said...

சிவாஜி கஜினி மொஹமதுவை போன்ற ஒரு கொள்ளைக்காரன்
கொள்ளைக்காரர்களுக்கு உண்மையில் மதம் கிடையாது
விட்டால் சிவாஜி இஸ்லாமில் சேர்ந்துவிட்டால் கதை கூட நீ அடிப்பே

Dr.Anburaj said...

அடிக்கடி சத்தரபதி சிவாஜயைப்பற்றி எழுதுகின்றாா். உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்கு அல்ல. ஔரங்கசீப் பை புகழ்ந்து தள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அதைச் செய்கின்றாா்சுவனப்பிரியன்.

இந்தியாவை நாசமாக்க வந்த அரேபிய முகலாய துருக்கி காடையா்களை எதிா்த்து போராடிய மாவீரா் சத்ரபதி சிவாஜி.
படையெடுப்பாளா்கள் முஸ்லீம்கள் என்றால் சத்ரபதி சிவாஜி முஸ்லீம்களை எதிா்த்தாா் என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
அவர் உள் வீட்டில் நாட்டிலட பல சோதனைகளை எதிா் கொண்டாா் என்பதும் உண்மை.
அதையும் திறம்பட ஜெயித்தாா்.

சித்பவன் பிறாமணா்கள் இந்துக்கள். இந்தியா்கள். அவர்களிடம் குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் சண்டாளர்கள். . .அரேபிய காடையர்கள் போல் கிடையாது.

Dr.Anburaj said...


சத்ரபதி சிவாஜியை கொள்ளைக்காரன் என்பவன் சரியான அரேபிய காடையன். அரேபிய வாகாபி.சலாபி. இசுலாமிய தேச படையின் உளவாளி.. இந்திய முகவா். சிவாஜி உயா்ந்த லட்சியங்களோடு வாழ்ந்தவா். சிறு குறைகள் மறக்கத்தான் வேண்டும். கவனமாகப் பதிவிடுங்கள்.இது மகராஷ்ரம் என்றால் தங்களின் தலை தப்பாது.


என்னை படித்திருக்கின்றீர்களா என்று கேட்ட பெயரில்ிலாத மனிதா் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.