Followers

Thursday, March 20, 2014

'மோடி விகாஸ் புருஷ் அல்ல வினாஷ் புருஷ்' உமாபாரதி!



'நரேந்திர மோடியை இந்த இந்திய ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி ஒரு பொய்யான தோற்றத்தைக் கொடுத்து வருகின்றன. ஊதிய அந்த பலூனின் காற்றை அதே பத்திரிக்கைகளே வெளியாக்க வேண்டும். இந்துக்களும் முஸ்லிம்களும் குஜராத்தில் ஒரு வித அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். 'மோட்டா பாய்' என்று தான் அவரை நான் அழைப்பேன். இந்த மோடியை 17 வருடங்களாக எனக்குத் தெரியும். இவர் யார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இந்த ஐந்து வருடங்களில் குஜராத் மிக பின்னோக்கி சென்று விட்டது. இதை உணராத பலரும் இவரை 'விகாஸ் புருஷ்' என்று அழைக்கின்றனர். இவர் விகாஸ் புருஷ் அல்ல இந்த நாட்டை அழிக்க வந்த 'வினாஸ் புருஷ்' என்று சொல்லிக் கொள்கிறேன்.'

இவ்வளவு காட்டமாக மோடியை விமரிசிக்கும் உமாபாரதி இந்துத்வாவின் மற்றும் பிஜேபியின் முக்கிய தலைவர்களில் ஒருவராவார். பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் மோடியை மிக நன்றாகவே கணித்து வைத்துள்ளார் உமாபாரதி. ஆனால் இந்த ஏமாற்றுக் காரனை பிரதமராக்க ஒரு பெரும் சதியே இந்தியா முழுக்க நடந்து வருகிறது. இதற்கு நமது பத்திரிக்கைகளும், படித்தவர்களில் ஒரு பிரிவினரும் முழு மூச்சாக வேலை செய்வதைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இவர்கள் என்னதான் முயற்சித்தாலும் மோடி என்றுமே இந்நாட்டு பிரதமராக முடியாது. நமது நாட்டு மக்கள் மிக திறமைசாலிகள். யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும்.

No comments: