Followers

Monday, March 24, 2014

மாயா கோட்னானியின் இன்றைய நிலை!

மாயா கோட்னானியின் இன்றைய நிலை!



2002 குஜராத் கலவரத்தில் நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த கூட்டு படுகொலையை அவ்வளவு சீக்கிரத்தில் நாம் மறந்து விட முடியாது. அந்த படுகொலைகளை முன்னின்று நடத்திய பிஜேபியின் எம்எல்ஏவும் நரேந்திர மோடி அமைச்சரவையில் அமைச்சராகவும் பணி புரிந்த 58 வயதான மாயா கோட்னானி என்ற மருத்துவரின் நிலை மிக பரிதாபகரமாக உள்ளது.

தற்போது டிபி நோயும் மன அழுத்தமும் ஏகத்துக்கு அவரை வாட்டி எடுக்கிறது. 28 வருடம் சிறை தண்டனையை பெற்றுள்ள அவர் இடையில் சிறிது காலம் பெயிலில் வந்தார். தற்போது திரும்பவும் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி நம்மை காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் அப்பாவி பொது மக்களை தீயில் பொசுக்கினார். ஒரு பெண்ணாகவும் மருத்துவராகவும் இந்த சமூகத்துக்கு செய்ய வேண்டிய பணிகள் இந்துத்வா கொள்கைகளால் அவரது ஞாபகத்துக்கு அன்று வரவில்லை. நரேந்திர பாய் நம்மை காப்பாற்றி விடுவார் என்று எண்ணியிருந்தார். இன்று நரேந்திர மோடியின் பிரதமர் கனவே ஆட்டத்தில் இருக்கிறது. டெல்லியில் பாராளுமன்றம் போவதற்கு பதில் டெல்லி திஹார் சிறையை நோக்கி அவரது பயணம் சென்று கொண்டிருக்கிறது.

மாயா கோட்னானியின் கணவர் சுரேந்திரா கோட்னானி கூறுகிறார்: 'பல நோய்கள் தற்போது மாயாவை தாக்கியுள்ளது. டிபி மற்றும் மன அழுத்தம் போன்றவற்றின் தாக்கத்தினால் அவரது எலும்புகள் மிகவும் பலவீனமடைந்து விட்டன. கோவிலின் விளக்கு ஒன்று தவறுதலாக அவர் மேல் விழுந்ததில் முகத்தில் தீப்புண்கள் வேறு ஏற்பட்டுள்ளன. எனது மனைவியின் நிலை எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது. அவர் பெயிலில் வந்த மூன்று மாதத்தில் 25 மருத்துவ மனைகளில் அவரின் உடலை காட்டியுள்ளோம். பல தனியார் மருத்துவ மனைகளிலும் வைத்து வைத்தியம் செய்தோம். எந்த முன்னேற்றமும் இல்லை.'

தலைமை மருத்துவர் டாக்டர் எம்எம் பிரபாகர் கூறுகிறார்: 'மாயா கோட்னானி அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். இது அதிகரித்தால் அது இவரை தற்கொலைக்கும் தூண்டும்'

இந்த ஆர்டிக்கிள் வந்த பக்கத்தில் ஒரு இந்து நண்பர் பின்னூட்டம் இட்டிருந்தார். அதனையும் பார்ப்போம்.

UMESH MEHTA SAID......

(Reply to sampat kotiyan/ahmedabad)Rather We should say to all those Hindu communal provoked by Narendra Modi and Pravin Togadia including SINGHAL that all of these killers of RSS/BJP/VHP/BAJARANGDAL/SHIVSENA/ABHINAVBHARAT too will face the severe consequences much more greater than MAYA KODNANI,see how she is being treated by LAW and SUPREME LAW being ALMIGHTY for her wrong doings against innocents to whom she had got killed via communal Hindus of RSS/BJP/VHP/BAJARANGDAL/SHIVSENA/ABHINAV BHARAT, so now it will be a direct justice from BHAGWAN THE LORD RAMA to punish severely these Hindu communal outlawed who were instrumental in killing innocent Indians in Gujarat that includes Hindu Dalit Karsevaks too,who were killed at the provocation of Narendra Modi by these out lawed of Hindu communal political out fits of within Gujarat and imported from out side of Gujarat.They all will face GRAVEST OF THE GRAVE PUNISHMENT much more severe then MAYA KODNANI, as THERE IS NO SOUND IN WHIP OF A BHAGWAN!!!

'நரேந்திர மோடிக்கும், அமீத் ஷாவுக்கும், பிரவீன் தொகாடியாவுக்கும், அசோக் சிங்கலுக்கும் இதை விட பெரும் கொடுமையான தண்டனைகளை இறைவன் கொடுப்பான். இறைவனின் தண்டனை எந்த சத்தமும் இல்லாமல் திடீரென்று அவர்களை பிடிக்கும்'

ஆம். கண்டிப்பாக! ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனைக்கு உடன் பதிலளிப்பதாக இறைவன் கூறுகிறான். சில நேரங்களில் தண்டனை தாமதப்படுத்துவது இதை விட மோசமான ஒரு அழிவைக் கொடுப்பதற்காகவே.

எனவே இந்துமதத்தை வளர்க்கும் எண்ணமுள்ளவர்கள் அதன் கொள்கைகளை சொல்லி தாராளமாக இந்து மதத்தை வளர்க்கலாம். இந்து மதம் திரும்ப விருப்பப்படும் இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் அவர்கள் விருப்ப்பட்டால் தாராளமாக கொண்டு செல்லட்டும். ஆனால் இந்துத்வ வெறி தலைக்கேறி சிறுபான்மையினரை மிரட்டி கொலை செய்து கொள்ளையடித்து இந்து தர்மாவை காக்க புறப்பட்டீர்கள் என்றால் மாயா கோட்னானிக்கு நிகழ்ந்த இந்த துயரத்தையே நீங்களும் அனுபவிப்பீர்கள். நீங்கள் துன்பப்படும் போது உங்களை கொம்பு சீவி விட்ட நரேந்திர மோடியோ, அமீத் ஷாவோ தமிழகத்தின் எச்.ராஜாவோ அன்று உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலையைத்தான் நாம் பார்த்து வருகிறோம்.

இன்னும் சில மாதங்களில் மாயா கோட்னானியை விட இழிவான நிலையை நரேந்திர மோடி அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தகவல் உதவி

டைம்ஸ் ஆஃப் இந்தியா
12-02-2014

1 comment:

ஆனந்த் சாகர் said...

//இன்னும் சில மாதங்களில் மாயா கோட்னானியை விட இழிவான நிலையை நரேந்திர மோடி அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.//

இதுதான் இஸ்லாமிய ஈன புத்தி என்பது.