Followers

Thursday, February 19, 2015

இந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்!



இந்திய அதிரடி கிரிக்கெட் ஆட்டக்காரர்களான சகோதரர்கள் இர்ஃபான் பதான் மற்றும் யூசுஃப் பதான் ஆகிய இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் உம்ரா செய்ய 12-02-2015 அன்று மக்கா வந்திருந்தனர். இவர்களின் உம்ரா பயணத்தை இறைவன் ஏற்றுக் கொண்டு இவர்களின் பாவங்களை மன்னிப்பானாக!

ஓர் உம்ராச் செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும்... (நூல்கள்: புகாரி 1773. முஸ்லிம் 2624. திர்மிதீ 855. நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா. முஅத்தா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றள்ளது)

''ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும், அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி 1782, 1863. முஸ்லிம் 2408, 2409)

நபி அவர்கள் செய்த உம்ராக்கள்.

"நபி அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள்!" என்ற அறிவிப்பு புகாரி 1778, 1780, 4148. முஸ்லிம் 2404, 2406, ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளன.

உம்ராவின் சிறப்பைக் குறித்து நபிகள் நாயகம் வலியுறுத்தியிருப்பதாலும், நபி அவர்கள் உம்ராச் செய்திருப்பதாலும் உம்ராச் செய்வது சிறப்பு மற்றும் நபிவழி. ஆனால், உம்ரா கட்டாயக் கடமை என்று நிறுவ மார்க்கத்தில் ஆதாரம் இல்லை! வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்வார்களாக!

No comments: