Followers

Tuesday, April 05, 2022

அன்பான பாஜகவினர்க்கு,

 

அன்பான பாஜகவினர்க்கு,

 

PM.நேதாஜி ஆகிய நான் இந்து மதத்தை சேர்ந்தவன் ...

 

எனக்கு ஒரு சந்தேகம் 🤔

 

நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் உண்மையான இந்துவே இல்லை, என நேரிலும்,

 

சமூக வலைதளங்களிலும், மிகவும் கீழ்தரமாக விமர்சிக்கிறீர்கள்..!!

 

நான் இந்து இல்லை என்பதை, எதை வைத்து நீங்கள் அளவீடு செய்கிறீர்கள் ?

 

பாஜக சொல்லித்தான் நான் கடவுளை வணங்குகிறேனா ?

 

அல்லது

 

RSS-காரர்கள் சொல்லித்தான் கோவிலுக்கு செல்கிறேனா ?

 

அல்லது

 

பெரியார் சொன்னதற்காக கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டேனா.. !

 

இல்லையே..?

 

எப்போதும் மிகச் சரியானதையே, தேர்தெடுப்பவன் நான்.!!

 

நீங்கள் வருவதற்கு முன், நான் கடவுளை வணங்கிக்கொண்டே தான் இருந்தேன், இப்பொழுதும்  வணங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்...

 

பாஜக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமே..!!

 

முடிந்தால் மக்களுக்கு நன்மை செய்து மக்கள் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்..!!

 

மாற்று மதத்தை சேர்ந்தவர்களே உங்களை ஆதரிப்பார்கள் அதை விட்டுவிட்டு பாஜகவை ஆதரிக்கவில்லை, என்கிற ஒரேகாரணத்திற்காக....

 

மதம் வைத்து ஓட்டு கேட்பது சரியா ?

 

இதுதான் உங்கள் அரசியலா ?

 

இவ்வளவுதான் உங்கள் நாகரீகமா ?

 

திரு. #பன்வாரிலால்_புரோகித் தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பின் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல், மத்திய அரசின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் கீழ்கண்ட உயர்பதவிகளை நியமனம் செய்தார்..

 

1. மதுரை பல்கலைக்கழகம் - எம் கிருஷ்ணன்..

2. அண்ணா பல்கலைக்கழகம் - சூரப்பா

3. தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகம் - சுதா சேஷய்யன்

4. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் - பிரமிளா குருமூர்த்தி

5. தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகம் - C பாலச்சந்திரன்

இவற்றில் 80 சதவிகிதம் பிராமணர்கள்.. அதாவது தமிழ்நாட்டில் வெறும் 1.5 சதவீதம் மட்டுமே இருப்பவர்கள்.. மீதம் 98 சதவிகிதம் இருக்கும் முதலியார், பிள்ளை, நாடார், செட்டியார் கவுண்டர், வன்னியர், ஆதிதிராவிடர், நாயுடு, யாதவர் போன்ற சமூகங்களிலிருந்து யாருமே இல்லையே ? நாங்கள் இந்துக்கள் இல்லையா

அப்படி என்றால் இந்துக்கள் என்றால் பிஜேபி ஆர்எஸ்எஸ் பார்வையில் வெறும் பிராமணர் மட்டும்தானா ?

 

தேர்தல் வேலை செய்வது , வாக்களிப்பது, கலவரங்கள் செய்து கோர்ட்டுகளில் கேஸ்களுக்கு அலைவது நாங்கள்...!! அதன் மூலம் கிடைக்கும் பதவி அதிகாரத்திற்கு பிராமணர்கள்..!!

 

அந்த பிராமணர்கள் யாரும் தேர்தல்களிள் வாக்களிப்பது கூட கிடையாது.

இதுதான் RSS பிஜேபியின் இலக்கணமா ?

 

அப்படியெனில்...!

 

"என் வாக்கு"

 

உங்களுக்கு நிச்சயமாக இல்லை..!

 

நீங்கள் எப்போதும் போலவே,

 

நோட்டாவுக்கு கீழேதான்..!

 

இப்படிக்கு...

#PM_நேதாஜி_DCT.,

இந்து மதத்தை சேர்ந்தவன்.



 

1 comment:

Dr.Anburaj said...

சரியான வாத்து மடையன். வழக்கம் போல் இந்துதான் இப்படி எல்லால் பிதற்றிக்கொண்டிருப்ான். வாழ்க்கையில் எந்த பயிற்சியையும் பெறாதவன் பாவம்.
விமா்சனம்-1
நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் உண்மையான இந்துவே இல்லை, என நேரிலும்,
சமூக வலைதளங்களிலும், மிகவும் கீழ்தரமாக விமர்சிக்கிறீர்கள்..!!
பதில்- நிச்சயம் ஏதோ ஆா்வக்கோளாறு காரணமாக இப்படி சிலா் பதிவிடலாம். தவறுதான். தலைவர்கள் கட்சியின் கொள்கைகளை முறையாக கற்றவர்கள் . .பக்குவம் பெற்றவர்கள். . இப்படிப் பேசவில்லை. ஆகவே சிறுவர்கள் பேசுவதை கருத்தில் கொள்வது தங்களைப் போன்ற பெரியவர்களுக்கு அழகல்ல.
2.பாஜக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமே..!! முடிந்தால் மக்களுக்கு நன்மை செய்து மக்கள் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்..!! மாற்று மதத்தை சேர்ந்தவர்களே உங்களை ஆதரிப்பார்கள்
சரியான யோசனை.பாருங்கள் தாங்களும் வளா்ச்சித்திட்டங்களை முன்வைத்துதான் அரசியல் செய்கிறோம். வீடு கழிவறை.. என்று பல பல திட்டங்கள். ஊழல் அற்ற ஆட்சியை. . . .. கடனில்லாத பாரதம். . .பயங்கரவாதம் இல்லாத பாரதம். . . .வறுமைக்கோட்டிற்கு கீழ் யாரும் வாழாத இந்தியாவை உருவாக்க பாடுபடும் இயக்கம்தான் பாரதிய ஜனதா.
3. கவா்னா் தனக்குள்ள அதிகாரம் படி நியமனங்கள் செய்திருப்பாா்.தமிழக அரசு ஒப்புக்கொண்டபின் தங்களுக்குஏன் குடைச்சல்? அனைவரும தகுதியானவர்கள்.பொருத்தமானவர்கள். சுரப்பா பெரும் விஞ்ஞானி. ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் உயா்ந்தவா். தோ்வு எழுதாமல் யாரையும் தோ்ச்சி என்று அறிவிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு துணிச்சலாக மறுப்புரை செய்தவா். மருத்துவா் சுதா அவர்கள். பிறாமண பெண்ணாக நான் அறியமாட்டேன்.ஆனால் லண்டன் ாயல் சொசெட்டி அவருக்கு FRCS என்ற மிக உயரிய விருதினை வழங்கியுள்ளதை பாரக்கும் போது இந்த பதவிக்கு அவரால் பெருமை என்பதைத் தாங்கள் உணர வேண்டும்.

தகுதியானவர்களை இகழ்ந்தால் நாடு அழியும். நாம் அழிவோம். நோ்மையானவர்களைக் கண்டால் தமிழக அரசியல் வாதிகளுக்கு என்றும் பயம்தான்
4.பார்ப்பனர்கள் தேவலோகத்தில் இருந்து வந்தவா்கள் கிடையாது.நமது முப்பாட்டனுக்கும் முப்பாட்டனும் அவர்களது முன்பாட்.டனுக்கு முப்பாட்டனும் அண்ணன் தம்பி தான். ஒரு குடும்ப கிளைதான். சமூக பரிணாமம்தான் பார்ப்பனர்களையும் மற்றவர்களையும் உருவாக்கியுள்ளது.சாதி துவேசம் அல்ல.அனைவரின் உடலிலும் ஒரு ஜீன்கள்தாம்.
5. உன்னை காபீா் . .infidel. . .vd;W என்று அழைப்பவனின் யோக்கியதை குறித்து நீ இன்னும் உணரவில்லை.கிணற்றுத்தவளை.காஷ்மீா் பைல்ஸ படம் பாா்முதலில்.
6.நீ பாரதிய ஜனதாவிற்கு விரையில் வோட்டு போடுவாய். காலம் உனக்கு நல்லறிவை அளிக்கும்