Followers

Tuesday, April 12, 2022

ஒரு இந்து சகோதரரின் ஆதங்கம்....

 


ஒரு இந்து சகோதரரின் ஆதங்கம்....

 

காலையில் இருந்து இந்த புகைப்படம் மனச உறுத்திட்டே இருக்கு. ஒருவர் இந்து என்பதால் அவரின் கடையை விட்டுவிட்டு, மற்றொருவர் இஸ்லாமியர் என்பதால் அவரின் கடையை எரிச்சுருக்கானுங்க.

 

3 வருஷமா கொரோனா பாதிப்புல வியாபாரம் பாதிச்சு, இந்த வருஷமாவது வியாபாரம் நல்லாருக்கும்னு, பக்கத்து கடை இந்துவை போல் தானே இவரும் நம்பிக்கையோட இருந்திருப்பார்.

அதுல தீயை வச்சுருக்கிங்களே, உங்கள் வம்சம் நல்லாருக்குமா. அந்த பாவத்தை உங்கள் வாரிசுகள் தான் சுமக்கும். நான் 4 வது படிக்கையில், என்னுடன் படித்த நண்பன் அப்துல் ராசித்தை ஒரு பென்சில் பிரச்சினைக்கு அடித்து விட்டேன், அவன் என் அம்மாவிடம் போய் சொல்லிவிட்டான்.

 

நான் வீட்டிற்கு சென்ற போது என் அம்மா என்னை வாசலிலேயே நிறுத்தி ''அடிக்கிறதே தப்பு, அதுலையும் நோம்பு வச்சுருக்க புள்ளைய அடிச்சுருக்கியே அறிவிருக்கா, அவன் பாவம் இல்லையா, முதலில் ராசித் வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்டுட்டு வீட்டுக்கு வா'' என்றார். மன்னிப்பு கேட்ட அன்று முதல் அவனுடன் நான் சண்டை போட்டதே இல்லை.

 

இன்று கடை எரிக்கப்பட்ட அதே இஸ்லாமியரும் நோம்பிருந்திருக்கலாம். ஆனால் என் அம்மாவை போல் அறிவுரை சொல்ல உங்களுக்கு நல்ல தாய், தகப்பன் இல்லை போலும். இந்த பண்டிகை காலத்தை நோக்கி காத்திருக்கும் தன் பிள்ளைகளுக்கு, அந்த மனிதர் என்ன பதில் சொல்லுவார்.

 

''நாம் இந்து இல்லை என்பதால் எரித்து விட்டார்கள் மகனே, மகளே'' என்றா. அந்த பிள்ளைகளின் மனநிலை எப்படி இருக்கும். ஒன்று புரிந்துக்கொள்ளுங்கள். காலம் எப்போதும் கத்தியோடு காத்திருக்கும்.

 

நீங்கள் செய்யும் தவறுக்கு உடனே வெட்டு விழாமல் இருக்கலாம். ஆனால் என்றாவது வெட்டுப்படுவது நிச்சயம். அது உங்கள் கழுத்தில் கூட விழலாம். அதற்குள் திருந்திவிடுங்கள்.

 

Shiva Prabu

 

1 comment:

A.Anburaj Anantha said...

அண்மையில் காஷ்மீரில் இந்து காபீர்கள் . .பிற மாநிலத்தைச் சார்ந்தவா்கள் - வளையல் விற்பனை தள்ளுவண்டியில் காய்கறிகள் பிளாஸ்டிக் சாமா்கள் விற்பனை செய்தவர்கள் 9 பேரை அரேபிய மத காடையர்கள் கொன்றிருக்கின்றார்கள்.
இப்படி இது வரை பல கோடி இந்துக்கள் அரேபிய மதவாத விஷக்கருத்துக்களால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
என்றாவது ஒரு கட்டுரை அவர்களைப்பற்றி. . .அவர்களுக்கு முஸ்லீம்கள் செய்த அட்டூழியம் குறித்து கண்டித்து . . .எழுதியதுண்டா. .சுவனப்பிரியன் . . .

நீஇன்றே நரகம் சென்றால் முஸ்லீம்கள் உருப்படுவார்கள்