Followers

Saturday, September 19, 2026

பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் இந்துத்வா!


 


பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் இந்துத்வா!

ராய்ப்பூர் - சத்தீஸ்கர்
காஜல் என்ற ஆசிரியை பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதனை என்ற பெயரில் நஞ்சை விதைக்கிறார்.
'துர்கையாக மாறுவோம்: கருப்பு அங்கி அணிய மாட்டோம்'
'சனாதன தர்மத்தை யார் காப்பது?'
'நாங்கள் காப்போம்'
'இந்திய நாட்டை யார் காப்பது?'
'நாங்கள் காப்போம்'
'இந்தியா எங்கள் நாடு. இது ஒரு இந்து தேசம். நாங்கள் இந்துக்கள். இந்தியா எங்களுக்கானது'
என்று இந்த ஆசிரியை அந்த பிள்ளைகளின் மனதில் நஞ்சை விதைக்கிறார்.
அங்கு அமர்ந்துள்ள பிள்ளைகள் அனைவரும் பார்பன பிள்ளைகளாக இருந்தால் அவர் சொல்வது அவருக்கு நியாயமாக படலாம்.
ஆனால் அங்கு அமர்ந்துள்ள பிள்ளைகளில் 95 சதவீதம் பிற்படுத்தப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். சனாதனம் கட்டமைக்கப்பட்டதே பார்பனர்களின் நலனுக்காக. 'நாம் இந்துக்கள்... இந்தியா எங்களுக்கானது' என்பவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களையும் தலித்களையும் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தி அவர்களை வழிபடவும் அனுமதிப்பதில்லை. இந்த நிலை இன்று வரை தொடர்கிறது.
'நாமெல்லாம் இந்துக்கள்.. நம்மிடம் சாதி கிடையாது... தீண்டாமை கிடையாது,... பிராமண் சூத்திரன் என்ற பாகுபாடு கிடையாது... இரட்டை குவளை முறை கிடையாது... பொது குளத்தில் எல்லா சாதியும் தண்ணீர் எடுக்கலாம்... கோவிலில் எல்லோரும் சென்று வழிபடலாம்' என்று இந்த அம்மணி கூறியிருந்தால் நாமும் சேர்ந்து வரவேற்போம்.
'துர்காவாக மாறுவோம் கருப்பு அங்கி அணிய மாட்டோம்' என்று சொல்வதிலிருந்து முஸ்லிம்களை கண்டு எந்த அளவு சனாதனம் அரண்டு போயுள்ளது என்பதும் தெளிவாகிறது. இந்த எதிர்ப்பு இருக்கட்டும். அப்போதுதான் என்னதான் இருக்கிறது என்று இஸ்லாத்தை படிக்க அந்த மக்கள் முன் வருவார்கள். எங்கு எதிர்ப்பு இருக்கிறதோ அங்குதான் இஸ்லாம் வேகமாக வளர்ந்ததாக உலக சரித்திரம். இது தொடரட்டும்.

No comments: