தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் யாழ்பாணத்து முருங்கைக்காய் கிடைக்கும். மற்ற மாவட்டங்களில் இருப்பதாக தெரியவில்லை. தூத்துக்குடி கடல் மணலுக்கும் அதுக்கும் இந்த யாழ்பாண முருங்கை சடசடவென வளரும்.
இது வாட்டசாட்டமாக 3-4 அடிக்கு மேல் கூட நீளமாக காய்க்கும். சதைப்பத்து, குணம் நிறைந்தது. நிறமும் நல்ல பச்சை நிறம்.
சாம்பாரில் என்ன காய்கறிகள் போட்டாலும் இந்த யாழ்ப்பாணத்து காயும் மாங்காயும் போட்டு வைக்கணும். தயிர் சாதத்துக்கு கூட இதை தொட்டு சாப்பிட்டு விடலாம்னா பாருங்களேன்.
யாழ்ப்பாணத்தில் இந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு பண்ணுவாங்க. நம்ம திருநெல்வேலி சைவக்காராள் வீட்டு புளிலாக்கறி தானே னு கேப்பீங்க. அதுதான் இல்லை. Ofcourse, திருநவேலி சொதி, புளிலாக்கறி, புளிக்கொழம்பு, வெள்ளக்கறி, நாகர்கோவில் புளிக்கறி, அவியல், தீயல் எல்லாவற்றிலும் யாழ்பாணத்து காய் சூப்பர். ஆனா ஜாஃப்னா பொரிச்ச குழம்புல இதை நிஜமாவே எண்ணைல பொரிச்சு, புளி இட்டு, சீரகம், பொடி வெங்காயம் வெள்ளப் பூடு போட்டு தேங்காய்பால் இரண்டாம் பாலில் கொதிக்க விட்டு முதல் தேங்காப் பால் விடுவதே ஹை லைட்!
தூத்துக்குடி, திருநெல்வேலி சைவ வேளாளர்கள் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காலம் ஒன்று உண்டு. நுவரேலியா, கண்டி, யாழ் நகரங்களில் செட்டில் ஆகி பல்வேறு தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். நம்மூர்ல கொழும்புகாரங்க வீடு என சொல்வோம். இவர்கள் ஊர் திரும்பும் போது கப்பலில் யாழ்பாண முருங்கை தடிகளை மறக்காமல் இங்கு கொண்டு வந்திருக்கக் கூடும். இல்லை எனில் இங்கு இந்த முருங்கை மரம் வர வாய்ப்பு இல்லை. அதன் பெயரே அதன் பிறப்பிடத்தை சொல்லிக் கொடுக்கிறதே.
மேலோட்டமாக பார்த்தால் முருங்கைக்காய் தான். ஆனால் அதில் தான் எவ்வளவு சத்து, ருசி, அது பிறந்த நாடு, அது இங்கு வந்து வளர்ந்த விதம், அதன் வரலாறு என்று எத்தனை விஷயங்கள் அதன் உள் அடக்கமாக இருக்கின்றன?
வாழ்க்கை எவ்வளவு அழகானது பார்த்தீர்களா? ஒரு முருங்கை காய்க்கு கூட பாரம்பரியம் இருக்கிறது. இந்தப் பாழும் ஹிந்துக்களுக்கு பாரம்பரியம் இருக்கிறதா என்ன? பாரம்பரியமா! வீசை என்ன விலை என்று கேட்பார்கள் இன்று. நன்றி - ம.பூமா குமாரி அவர்களுக்கு .
Courtesy : Sukumar Shan
See less

No comments:
Post a Comment