
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label BANGLADESH. Show all posts
Showing posts with label BANGLADESH. Show all posts
Thursday, July 16, 2015
Saturday, February 28, 2015
அவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்!


அவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
அமெரிக்காவில் வசித்து வரும் பங்களாதேசத்தவரான 42 வயதான அபஜித் ராய் அடையாளம் தெரியாத நபர்களால் இரண்டு நாள் முன்பு கொல்லப்பட்டுள்ளார். மெகானிகல் இன்ஜியனரான இவர் பல ஆண்டுகளாக சமூக வலை தளங்களில் எழுதி வருபவர். சர்ச்சைக்குரிய சில விஷயங்களை தனது பிளாக்குகளில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். ரபீதா அஹமத் என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் முடித்திருந்தார்.
தனது மனைவியோடு பங்களாதேஷில் ஆட்டோ ரிக்ஷாவில் செல்லும் போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் வெட்டப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அவசரமாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் ரத்தம் அதிகம் வெளியாகி விட்டதால் இவரது உயிர் பிரிந்தது. இவரது மனைவிக்கும் காயங்கள் ஏற்பட்டு தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது பங்களாதேஷில் தேர்தல் பிரசாரம் மும்முரமாகி உள்ளது. எனவே இது அரசியல் சம்பந்தப்பட்ட கொலையா? அல்லது இஸ்லாமிய பெண்ணை மணந்ததால் பெண்ணின் உறவினர் தரப்பில் நிகழ்த்தப்பட்ட கொலையா? அல்லது நாத்திகத்தை தனது எழுத்துக்களில் தொடர்ந்து புகுத்தி வந்ததால் கோபமுற்ற இஸ்லாத்தை சரியாக விளங்காத மூடர்களால் செய்யப்பட்ட கொலையா? என்பது தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
பங்களா தேசத்து பிளாக்கர் யூனியனின் தலைவர் இம்ரான் சொல்லும் போது 'உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது' என்கிறார்.
'குற்றவாளிகளை கைது செய்ய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்' என்கிறார் தவ்ஃபீக் இம்ரோஸ் காலிதி.
நாடு முழுவதும் இந்த கொலைக்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கொலையாகவோ அல்லது பெண் வீட்டாரின் பழி வாங்குதல் கொலையாகவோ இருந்தால் இது எல்லா நாட்டிலும் நடக்கும் ஒன்றுதான் என்று நமது கண்டனத்தை பதிவு செய்து விட்டு சென்று விடலாம்.
ஆனால் அவிஜித் ராய் நாத்திக கருத்துக்களை எழுதியதால் இந்த கொலையை இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு யாராவது செய்திருப்பார்களேயானால் அவர்கள் இறைவன் முன் குற்றவாளியாக்கப்படுவார்கள். எவ்வளவு பெரிய குற்றம் செய்தவனையும் தனி மனிதர்கள் ஆயுதம் தூக்கி கொல்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை. நம்முடைய உயிரை ஒருவன் எடுக்க எதிரிலே வந்தால் நமது உயிரை காப்பாற்றிக் கொள்ள அந்த நேரத்தில் ஆயுதம் தாங்கி அவனோடு போரிட இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. மற்ற வேறு எந்த குற்றங்களாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. நீதி மன்றம் இருக்கிறது. காவல் துறை இருக்கிறது. இவற்றின் மூலம்தான் நமது பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமேயொழிய மூடத்தனமாக ஆயுதம் தூக்குவது இஸ்லாமிய நடைமுறை அல்ல என்பதை விளங்க வேண்டும்.
நபிகள் நாயகம் இஸ்லாத்தை பிரசாரம் செய்த காலங்களில் நாத்திகர்கள், நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள், கிறித்தவர்கள், யூதர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் நபிகள் நாயகத்திடம் வந்து பல குதர்க்கமான கேள்விகளை எல்லாம் கேட்டனர். அத்தனைக்கும் நபிகள் நாயகம் மிகப் பொறுமையாக பதில் அளித்ததை வரலாறுகளில் பார்கிறோம். தனக்கு பணத் தேவை ஏற்பட்ட போது ஒரு யூதரிடம் தனது பொருட்களை அடமானம் வைத்து விட்டு கடன் வாங்கியதை நாம் வரலாறுகளில் படிக்கிறோம். ஆட்சித் தலைவராக இருந்தும் மிரட்டி அவர்களிடம் மாமூல் வசூலிக்கவில்லை. அந்த அளவு மாற்று கருத்துடையவர்களை நபிகள் நாயகம் கண்ணியத்தோடு நடத்தியுள்ளார். எனவே நபிகள் நாயகத்தை பின் பற்றும் ஒரு முஸ்லிம் எதிர்க் கருத்து உடையவர்களை அதே கருத்துக்களைக் கொண்டுதான் விவாதித்து வெற்றி பெற முயல்வான். ஆயுதம் எடுப்பது ஒரு இஸ்லாமியனின் வழி முறை அல்ல என்பதை பதிவு செய்கிறேன்.
கொலைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு கொலையாளிகள் கைது செய்யப்பட்டு தக்க தண்டணையை அரசு பெற்றுத் தர வேண்டும். உயிரிழந்த அவிஜித் ராய் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
தகவல் உதவி:
கார்டியன்
28-02-2015
Subscribe to:
Posts (Atom)