பெற்றோரையே கொன்ற பிரியங்கா!
மீரட் நகரில் மிகவும் நாகரிமான குடும்பத்தில் பிறந்த இள நங்கை பிரியங்கா: 2003-ல் பாலிடெக்னிக் முடித்துள்ளார். 2005-ல் மிஸ் மீரட் பட்டத்தையும் வென்றுள்ளார். சாதுவான முக தோற்றம் கொண்ட இந்த பெண்ணின் உள்ளும் கொலை வெறி இருந்துள்ளது பலராலும் நம்ப முடியவில்லை.
தன்னை வளர்த்து ஆளாக்கிய தனது பெற்றோர்களை தனது தோழி அஞ்சுவோடு சேர்ந்து தன் கைகளாலேயே கொன்றுள்ளார் பிரியங்கா! 'கொலையும் செய்வாள் பத்தினி' - என்பது இதுதானோ!
தன் தாய் தன்னை மிகவும் கண்டித்தார். தந்தை தன்னை மற்ற குழந்தைகளைப்போல் நடத்தவில்லை: அக்காள் புருஷன் தன்னோடு தவறாக நடக்க முயற்ச்சித்தார்: என்னை கண்டிக்கும் யாரையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
-இவை எல்லாம் தன் பெற்றோர்களை கொன்றதற்க்கான காரணமாக பிரியங்கா மீடியாக்களிடம் சொன்னவை. ஆனால் உண்மையான காரணம் நீதிமன்ற விசாரணையில் வெளி வரலாம்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது 'பெற்றோர்கள் தன் குழந்தைகளை கண்டிப்பது குற்றமா?' அப்படியே கண்டித்தாலும் தன் பெற்றோர்களையே கொல்லும் அளவுக்கு செல்லும் இளம் தலைமுறையின் விபரீதப் போக்குக்கு யார் காரணம்? பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் அன்பை பரிமாறும் நேரம் குறைவதுதான் இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமா?- என்று கேள்வி நீண்டு கொண்டே போகிறது.
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, November 18, 2008
Wednesday, November 12, 2008
இந்துப் பயங்கரவாதம்
இந்துப் பயங்கரவாதம்
பொய் பேசுகிறர்களா, உண்மையைக் கூறுகிறார்களா என்றறியும் சோதனை நார்கோ அனலைசிஸ் எனப்படும். மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் கைது செய்யப்பட்ட இருவருக்கு இச்சோதனை பெங்களூரில் நடத்தப்பட்டது. மாலேகான் குண்டுவெடிப்பு பற்றியும் கூறினார்கள்; எதிர்காலத்தில் எங்கெங்கே குண்டு வைக்கச் சதித் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்பதையும் கூறிவிட்டார்கள். போபால், ஜபல்பூர் ஆகிய இடங்களில் குண்டு வைக்கப் போடப்பட்ட திட்டம்பற்றியும் கக்கி விட்டனர். பணம் தந்தது யார், ஆர்டிஎக்ஸ் தந்ததும், ஆயுதங்களைத் தந்ததும் யார், எந்தெந்த வகையில் உதவினார்கள் என்பதையெல்லாமே தெரிவித்து விட்டனர்.
மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் சாமியாரிணி பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இரண்டு பேர் ஈடுபட்டு முசுலிம்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த சதிச் செயல் மக்களுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. என்றாலும், இந்துத்துவ பயங்கரவாதம் 2006 முதலே கண்காணிக்கப்பட்டு வருகிற சேதிதான்.
6.4.2006 இல் நடந்த நான்டெட் குண்டுவெடிப்பு தொடர் பாகக் கைது செய்யப்பட்ட ராகுல் மனோகர் பாண்டே, மும்பை பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் என்கிற பானுராவ் வித்தல்ராவ் சவுத்ரி ஆகியோரின் கைதுகள் தீவிர வலதுசாரி (பிற்போக்கு)ச் சக்திகளின் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.
மனோகர் பான்டேவுக்கும், பிரக்யாசிங் தாக்கூருக்கும் பயங்கரவாதப் பயிற்சி மேடையாக, புனே நகரம் விளங்குகிறது.
இவர்கள் இரண்டு பேரிடமும் நடத்தப்பட்ட நார்கோ அனலைசிஸ் (பொய் அறியும் சோதனை) முடிவுகளின்படி, இவர்கள் இருவருக்கும் இச்சதியில் உள்ள தொடர்புகளை இவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 2003 முதல் 2006 வரை இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளில் மகாராட் டிரா மாநிலத்தில் நடத்தப் பெற்ற சதிச் செயல்களில் இரு வருக்கும் உள்ள தொடர்புகளை இவர்கள் ஒத்துக்கொண்டி ருக்கிறார்கள். மனோகர் பான்டே சதியில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார் என்று நார்கோ அனலைசிஸ் அறிக்கை கூறுகிறது.
பொய் அறியும் சோதனையின்போது, நான்டெட் நகரத்து சங் பரிவாரைச் சேர்ந்த லட்சுமண் ராஜ்கொண்டவார் என்பாரின் வீட்டில் நடந்த வெடிவிபத்து பற்றிய விவரங்களை எல்லாம் சொல்லிவிட்டார். இந்த வெடிவிபத்தில் நரேஷ் ராஜ் கொண்டவார் மற்றும் ஹிமான்சு பான்சே ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்து என்று காவல்துறையினர் முதலில் நினைத்தனர். பின்னர்தான், வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்டது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். தாங்கள் சக்தி வாய்ந்த வெடிப் பொருள்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் பாண்டே கூறிவிட்டார்.
விபத்தில் இறந்துபோன ஹிமான்சு பான்சே இச்சதிக் குழுவின் தலைவன் என்றும், வெடிகுண்டு தயாரிக்கும் முறை யைக் கற்றுக் கொடுத்ததே இந்த ஆள்தான் என்றும் கூறியதாக ஆய்வு அறிக்கையில் உள்ளது. ஜல்னா, புர்னா, பர்பானி பகுதிகள் உள்ளிட்ட மரத்வாடா பகுதியில் நடந்த எல்லா குண்டுவெடிப்புச் சதிச் செயல்களையும் செய்தவர்களே இந்த ஹிமான்சுவும், பான்டேயும்தான். புனே நகரிலிருந்து வெடிப் பொருள்களை ஹிமான்சு ஏற்றி வந்து, உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பதுக்கி வைத்திருக்கின்றனர் எனும் விவரமும் வெளி வந்துள்ளது.
உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் தொடர்பும் பற்றியும் பான்டே கூறிவிட்டார். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் ஹிமான்சுக்கு எல்லா உதவிகளையும் செய்தன. மிதுன் சக்ரவர்த்தி என்பவன் புனேயிலிருந்து வந்து வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை அளித்ததாகவும் பான்டே தெரிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு மராட்டியர்களின் ஆண்டுப் பிறப்பான குடிபாதவ் நாளில்தான் நான்டெட் குண்டு வெடிப்புச் சதிக் கான திட்டமே தீட்டப்பட்ட தகவலையும் பான்டே கூறி விட்டார். ஈத் நாளன்று மசூதியில் வைக்கத் திட்டம் போடப் பட்டிருந்த வெடிகுண்டுதான் வீட்டில் வெடித்துவிட்டது.
பான்டே தெரிவித்த செய்திகளிலேயே முக்கியமானதும், அதிர்ச்சியானதும் என்னவென்றால், இவர்களின் இருப்பிடத்துக்கு வந்து சொற்பொழிவு நிகழ்த்திவிட்டுப் போனவர் விசுவ இந்துப் பரிசத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா.
பர்பானி, நான்டெட் சதிச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவர் நார்கோ அனலைசிஸ் ஆய்வுக்காக அழைத்து வரப்பட்டார்.
பானுராவ் வித்தல் ராவ் சவுத்ரி (சஞ்சய்) தம் வாக்கு மூலத்தில் 2003 ஆம் ஆண்டிலேயே தானும் தன்னுடன் நான்கு பேரும் சேர்ந்து வெடிகுண்டு தயாரிக்கப் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்தனர்.
ஹிமான்சு பான்சே, மரோட்டி வாக், ராகுல் மனோகர் பான்டே மற்றும் யோகேஷ் ரவீந்திர விடுல்கர் ஆகியோரும் இவருடன் பயிற்சி பெற்றவர்கள் என்கிற விவரத்தையும் கூறியுள்ளார். புனேவில் சின்ககாட் பகுதியில் உள்ள ஆகாஷ் விடுதியில் இவர்களுக்கு வெடிகுண்டுத் தயாரிப்புப் பயிற்சி தரப்பட்டதாம்.
அவரங்காபாத்தில் உள்ள மசூதியில் மறுநாள் வைத்து வெடிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுதான் ராஜ் கொண்டவாரின் வீட்டில் வெடித்துவிட்டது என்பதை இவர் ஒத்துக்கொண்டுள்ளார்.
நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதற்குக் காரணமான வெடிகுண்டுகளை வைத்த அபுசலீம் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகிய இருவரையும் பழி தீர்ப்பதற்காக ஹிமான்சு திட்டமிட்டார் எனவும் சஞ்சய் கூறினார்.
- நவீன் அம்மேம்பலா, பெங்களூர்,
"தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்", 11.11.2008
பொய் பேசுகிறர்களா, உண்மையைக் கூறுகிறார்களா என்றறியும் சோதனை நார்கோ அனலைசிஸ் எனப்படும். மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் கைது செய்யப்பட்ட இருவருக்கு இச்சோதனை பெங்களூரில் நடத்தப்பட்டது. மாலேகான் குண்டுவெடிப்பு பற்றியும் கூறினார்கள்; எதிர்காலத்தில் எங்கெங்கே குண்டு வைக்கச் சதித் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்பதையும் கூறிவிட்டார்கள். போபால், ஜபல்பூர் ஆகிய இடங்களில் குண்டு வைக்கப் போடப்பட்ட திட்டம்பற்றியும் கக்கி விட்டனர். பணம் தந்தது யார், ஆர்டிஎக்ஸ் தந்ததும், ஆயுதங்களைத் தந்ததும் யார், எந்தெந்த வகையில் உதவினார்கள் என்பதையெல்லாமே தெரிவித்து விட்டனர்.
மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் சாமியாரிணி பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இரண்டு பேர் ஈடுபட்டு முசுலிம்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த சதிச் செயல் மக்களுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. என்றாலும், இந்துத்துவ பயங்கரவாதம் 2006 முதலே கண்காணிக்கப்பட்டு வருகிற சேதிதான்.
6.4.2006 இல் நடந்த நான்டெட் குண்டுவெடிப்பு தொடர் பாகக் கைது செய்யப்பட்ட ராகுல் மனோகர் பாண்டே, மும்பை பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் என்கிற பானுராவ் வித்தல்ராவ் சவுத்ரி ஆகியோரின் கைதுகள் தீவிர வலதுசாரி (பிற்போக்கு)ச் சக்திகளின் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.
மனோகர் பான்டேவுக்கும், பிரக்யாசிங் தாக்கூருக்கும் பயங்கரவாதப் பயிற்சி மேடையாக, புனே நகரம் விளங்குகிறது.
இவர்கள் இரண்டு பேரிடமும் நடத்தப்பட்ட நார்கோ அனலைசிஸ் (பொய் அறியும் சோதனை) முடிவுகளின்படி, இவர்கள் இருவருக்கும் இச்சதியில் உள்ள தொடர்புகளை இவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 2003 முதல் 2006 வரை இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளில் மகாராட் டிரா மாநிலத்தில் நடத்தப் பெற்ற சதிச் செயல்களில் இரு வருக்கும் உள்ள தொடர்புகளை இவர்கள் ஒத்துக்கொண்டி ருக்கிறார்கள். மனோகர் பான்டே சதியில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார் என்று நார்கோ அனலைசிஸ் அறிக்கை கூறுகிறது.
பொய் அறியும் சோதனையின்போது, நான்டெட் நகரத்து சங் பரிவாரைச் சேர்ந்த லட்சுமண் ராஜ்கொண்டவார் என்பாரின் வீட்டில் நடந்த வெடிவிபத்து பற்றிய விவரங்களை எல்லாம் சொல்லிவிட்டார். இந்த வெடிவிபத்தில் நரேஷ் ராஜ் கொண்டவார் மற்றும் ஹிமான்சு பான்சே ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்து என்று காவல்துறையினர் முதலில் நினைத்தனர். பின்னர்தான், வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்டது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். தாங்கள் சக்தி வாய்ந்த வெடிப் பொருள்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் பாண்டே கூறிவிட்டார்.
விபத்தில் இறந்துபோன ஹிமான்சு பான்சே இச்சதிக் குழுவின் தலைவன் என்றும், வெடிகுண்டு தயாரிக்கும் முறை யைக் கற்றுக் கொடுத்ததே இந்த ஆள்தான் என்றும் கூறியதாக ஆய்வு அறிக்கையில் உள்ளது. ஜல்னா, புர்னா, பர்பானி பகுதிகள் உள்ளிட்ட மரத்வாடா பகுதியில் நடந்த எல்லா குண்டுவெடிப்புச் சதிச் செயல்களையும் செய்தவர்களே இந்த ஹிமான்சுவும், பான்டேயும்தான். புனே நகரிலிருந்து வெடிப் பொருள்களை ஹிமான்சு ஏற்றி வந்து, உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பதுக்கி வைத்திருக்கின்றனர் எனும் விவரமும் வெளி வந்துள்ளது.
உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் தொடர்பும் பற்றியும் பான்டே கூறிவிட்டார். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் ஹிமான்சுக்கு எல்லா உதவிகளையும் செய்தன. மிதுன் சக்ரவர்த்தி என்பவன் புனேயிலிருந்து வந்து வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை அளித்ததாகவும் பான்டே தெரிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு மராட்டியர்களின் ஆண்டுப் பிறப்பான குடிபாதவ் நாளில்தான் நான்டெட் குண்டு வெடிப்புச் சதிக் கான திட்டமே தீட்டப்பட்ட தகவலையும் பான்டே கூறி விட்டார். ஈத் நாளன்று மசூதியில் வைக்கத் திட்டம் போடப் பட்டிருந்த வெடிகுண்டுதான் வீட்டில் வெடித்துவிட்டது.
பான்டே தெரிவித்த செய்திகளிலேயே முக்கியமானதும், அதிர்ச்சியானதும் என்னவென்றால், இவர்களின் இருப்பிடத்துக்கு வந்து சொற்பொழிவு நிகழ்த்திவிட்டுப் போனவர் விசுவ இந்துப் பரிசத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா.
பர்பானி, நான்டெட் சதிச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவர் நார்கோ அனலைசிஸ் ஆய்வுக்காக அழைத்து வரப்பட்டார்.
பானுராவ் வித்தல் ராவ் சவுத்ரி (சஞ்சய்) தம் வாக்கு மூலத்தில் 2003 ஆம் ஆண்டிலேயே தானும் தன்னுடன் நான்கு பேரும் சேர்ந்து வெடிகுண்டு தயாரிக்கப் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்தனர்.
ஹிமான்சு பான்சே, மரோட்டி வாக், ராகுல் மனோகர் பான்டே மற்றும் யோகேஷ் ரவீந்திர விடுல்கர் ஆகியோரும் இவருடன் பயிற்சி பெற்றவர்கள் என்கிற விவரத்தையும் கூறியுள்ளார். புனேவில் சின்ககாட் பகுதியில் உள்ள ஆகாஷ் விடுதியில் இவர்களுக்கு வெடிகுண்டுத் தயாரிப்புப் பயிற்சி தரப்பட்டதாம்.
அவரங்காபாத்தில் உள்ள மசூதியில் மறுநாள் வைத்து வெடிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுதான் ராஜ் கொண்டவாரின் வீட்டில் வெடித்துவிட்டது என்பதை இவர் ஒத்துக்கொண்டுள்ளார்.
நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதற்குக் காரணமான வெடிகுண்டுகளை வைத்த அபுசலீம் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகிய இருவரையும் பழி தீர்ப்பதற்காக ஹிமான்சு திட்டமிட்டார் எனவும் சஞ்சய் கூறினார்.
- நவீன் அம்மேம்பலா, பெங்களூர்,
"தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்", 11.11.2008
Tuesday, November 11, 2008
குர்ஆன் பற்றி சில அறிஞர்களின் கருத்துக்கள்!
குர்ஆன் பற்றி சில அறிஞர்களின் கருத்துக்கள்!
அறிஞர் கொய்தே கூறுகிறார்:
குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அந்நியமாகத் தெரிகிறது. பிறகு புதுமையாகத் தெரிகிறது. அடுத்து ஒரு தென்றல் போல் மனதைக் கவர்ந்து செல்கிறது. மதிப்பச்சத்தை ஏற்படுத்துகிறது- அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீரமாகவும் வலுவானதாகவும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அதன் மீது மதிப்புக் கொள்ளச் செய்வதாகவும் அமைந்துள்ளது- இந்த நூல் இவ்வாறு காலங்காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தை செலுத்தக் கூடியதாக இருக்கிறது.
-Quoted in T.P. Hughes Dictionary Of Islam, Page – 526.
ஜி.மார்கோலத் கூறுகிறார்:
உலகத்திலுள்ள பெரும் மத கிரந்தங்களில் குர்ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தைத் தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்த போதிலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும் பெரும் பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத்தக்க முறையில் மாற்றி அமைப்பதிலும் அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது. அது முதலில் அரேபிய பாலைவனத்தில் சிதறிக் கிடந்த மக்களை இலட்சியத்தைப் பேணும் குழுவாக ஒன்றிணைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாக மாற்றியது. ஐரோப்பிய மக்களும் கிழக்கிந்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்கு சமய அரசியல் அமைப்புகளை அது தோற்றுவித்துள்ளது.
-Introduction to J.M.Rodwells The Koran, New york, Every mans library 1977, page 711
ஆர்தர் ஜே.ஆர்.பெர்ரி கூறுகிறார்:
குர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்ச்சியை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன். ஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் அழகையும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிகக் குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத் துல்லியமாக பின்னிப் பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன். குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதை உணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச் செய்கிறது. குர்ஆனின் இந்த விநோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது.
'அதனுடைய சொற்களின் ஓசைநயமே மக்களின் கண்களை கசியச் செய்கிறது. உள்ளங்களைப் பரவசமடையச் செய்கிறது.' - என்று பிக்தால் தன் மொழி பெயர்ப்பில் சொன்ன கருத்து எந்த வகையிலும் மிகையானதல்ல.
-The Koran Interpreted, London Oxford University Press, 1964,Page 8.
'நமது அடியாரான முஹம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்: இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்'
குர்ஆன் 2:23
அறிஞர் கொய்தே கூறுகிறார்:
குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அந்நியமாகத் தெரிகிறது. பிறகு புதுமையாகத் தெரிகிறது. அடுத்து ஒரு தென்றல் போல் மனதைக் கவர்ந்து செல்கிறது. மதிப்பச்சத்தை ஏற்படுத்துகிறது- அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீரமாகவும் வலுவானதாகவும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அதன் மீது மதிப்புக் கொள்ளச் செய்வதாகவும் அமைந்துள்ளது- இந்த நூல் இவ்வாறு காலங்காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தை செலுத்தக் கூடியதாக இருக்கிறது.
-Quoted in T.P. Hughes Dictionary Of Islam, Page – 526.
ஜி.மார்கோலத் கூறுகிறார்:
உலகத்திலுள்ள பெரும் மத கிரந்தங்களில் குர்ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தைத் தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்த போதிலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும் பெரும் பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத்தக்க முறையில் மாற்றி அமைப்பதிலும் அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது. அது முதலில் அரேபிய பாலைவனத்தில் சிதறிக் கிடந்த மக்களை இலட்சியத்தைப் பேணும் குழுவாக ஒன்றிணைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாக மாற்றியது. ஐரோப்பிய மக்களும் கிழக்கிந்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்கு சமய அரசியல் அமைப்புகளை அது தோற்றுவித்துள்ளது.
-Introduction to J.M.Rodwells The Koran, New york, Every mans library 1977, page 711
ஆர்தர் ஜே.ஆர்.பெர்ரி கூறுகிறார்:
குர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்ச்சியை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன். ஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் அழகையும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிகக் குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத் துல்லியமாக பின்னிப் பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன். குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதை உணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச் செய்கிறது. குர்ஆனின் இந்த விநோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது.
'அதனுடைய சொற்களின் ஓசைநயமே மக்களின் கண்களை கசியச் செய்கிறது. உள்ளங்களைப் பரவசமடையச் செய்கிறது.' - என்று பிக்தால் தன் மொழி பெயர்ப்பில் சொன்ன கருத்து எந்த வகையிலும் மிகையானதல்ல.
-The Koran Interpreted, London Oxford University Press, 1964,Page 8.
'நமது அடியாரான முஹம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்: இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்'
குர்ஆன் 2:23
Wednesday, November 05, 2008
பராக் ஒபாமா - என் பார்வையில்

பராக் ஒபாமா - என் பார்வையில்
எல்லோரும் எதிர்பார்த்தபடி பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகி விட்டார். ஆப்ரிக்க நாட்டைச் சார்ந்த ஒருவர் அதிபராக முதன் முறையாக வெள்ளை மாளிகையை தொடுவது பலராலும் நம்ப முடியவில்லை. பல நீக்ரோ இனத்தவர் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழுத காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. கென்ய மக்கள் குழுவினராக ஆனந்த நடனமாடியது கண் கொள்ளாக் காட்சி.
நம் இந்தியாவில் எப்படி ஒரு இனம் இன்று வரை பலராலும் ஒடுக்கப்பட்டு வருகிறதோ அதே போன்ற நிலைதான் அமெரிக்காவிலும். இடமும் பெயரும் மட்டுமே மாற்றம். ஒபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றவர்களை நிற வெறி பிடித்த வெள்ளையர்கள் அவமானப்படுத்திய நிகழ்ச்சி பல இடங்களிலும் நிகழ்ந்துள்ளது. அரசாள்வதற்கு மன்னருக்கு மகனாக பிறக்க வேண்டும்: மக்களாட்சிக்கு தலைவராக வர இன்ன இனத்தில்தான் பிறந்திருக்க வேண்டும் என்ற கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து இன்று அமோக வெற்றி பெற்றுள்ளார் ஒபாமா.
அதிலும் அமெரிக்காவில் கணிசமான மக்கள் தொகையை கொண்ட யூதர்களும் ஒபாமாவை ஆதரித்ததுதான் பலருக்கும் ஆச்சரியம். இஸ்லாமிய பாரம்பரியத்தில் வந்தவர்: மதரஸாவில் கல்வி பயின்றவர்: இஸ்லாமிய தீவிரவாதி: முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்: என்றெல்லாம் ஒபாமாவுக்கு எதிரான பிரச்சாரம். வாக்குச் சீட்டில் ஒபாமா என்பதற்கு பதில் ஒஸாமா என்று அச்சடித்த ஒரு சிலரின் குள்ள நரித்தனம். தேர்தலுக்கு முன் 'அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமாவை வைப்பதும், ஒஸாமாவை வைப்பதும் ஒன்றுதான்' என்று கூறிய ஆஸ்திரேலிய பிரதமரின் திமிர்த்தனம். அமெரிக்க தேவாலயங்கள் முழுவதும் பாதிரிகளால் ஒஸாமாவின் இஸ்லாமிய பின்னணியை வைத்து எதிர்ப் பிரச்சாரம். இதை எல்லாம் முறியடித்து 'மாற்றம் தேவை' என்ற ஒரே முழக்கத்துடன் இன்று அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா அமரப் போகிறார்.
பொருளாதார பின்னடைவு, ஆப்கன் பிரச்னை, ஈராக் பிரச்னை, பாலஸ்தீன பிரச்னை, என்று பல சிக்கல்களை ஜார்ஜ் புஷ் என்ற கிறுக்கனால் மேலும் சிக்கலாக்கப் பட்டுள்ளது. இந்த பிரச்னைகளை எல்லாம் எப்படி சமாளிக்கிறார் என்பதில்தான் ஒபாமாவின் உண்மையான வெற்றி அமைந்துள்ளது.
நிறவெறி, மொழிவெறி, மதவெறி அனைத்தையும் கடந்து சிறந்த உலக தலைவராக மிளிருகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Sunday, November 02, 2008
வைகோவின் வடிகட்டிய தேசத் துரோகம்!!
விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சித்து எழுதிய ஹிந்து நாளிதழின் கோவை - ஈரோடு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஆனால் இந்தத் தாக்குதலால் தமிழக முதல்வர் தொடங்கி, எந்தவொரு அரசியல்வாதியும் கண்டனம் செய்யவில்லை.
கருத்துச் சுதந்திரத்தக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கம் நேர்ந்துள்ள அச்சுறுத்தல் இது என்பது ஓர் அபாயம். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுடைய வன்முறையையும் செயல்பாடுகளையும் ந்த மௌன அரசியல்வாதிகள் அங்கீகரிக்கிறார்கள் என்பது மற்றொரு மிகப் பெரிய அபாயம். இந்த மௌன ஆதரவை வைகோ நன்றாக சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார். தமது பொதுக்கூட்டப் பேச்சில் (அக்டோபர் 21 அன்று) புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருக்கிறார். இலங்கை துண்டாடப்படாமல் காக்க இந்தியா எந்த விதத்தில் உதவினாலும் சரி, இந்தியாவே துண்டாடப்படும் அபாயம் ஏற்படும் என்று பிரதமரை எச்சரித்திருக்கிறார்! தமிழ் ஈழம் உருவாக உதவுவதற்கு, தாமே படை திரட்டி, தலைமை தாங்கி நடத்திச் செல்ல முடியும் என்றும் அவர் சவால் விட்டிருப்பது, பகிரங்க புலிகள் ஆதரவுப் பேச்சு மட்டுமல்ல; வடிகட்டிய தேசத் துரோகமும்கூட. ஆனால், இதற்கும் தமிழக முதல்வர் மௌனம் காத்து மறைமுக ஆதரவு தெரிவிப்பார் என்று நம்பலாம்!
தமிழக அரசியல்வாதிகள் நினைப்பதுபோல், பிரபாகரன் தமிழ் ஈழத்தைத் தனி நாடாகப் பெற்று, ஆட்சி புரிய அனுமதிக்கப்பட்டால் விடுதலைப்புலிகளின் அடுத்த குறி தமிழகமாக இராது என்பது என்ன நிச்சயம்? அப்போது இங்கே நிலவக்கூடிய கொடுங்கோன்மையில் யாரும் எதையும் மேடைபோட்டுப் பேசக்கூட முடியாது! புலி ஆதரவுப் புயலில் நிலை தடுமாறும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன் (காங்கிரஸ்) மட்டுமே தெளிவாகச் சிந்தித்தது. தைரியமாகப் பேசியுள்ளார். ராஜீவ்காந்தி கொலையாளிகளை ஆதரிக்கும் வெறிப் போக்கைத் துணிந்து கண்டனம் செய்துள்ளார். தடை செய்யப்பட்ட இயக்கத்தையும் அதன் தலைவரையும் பகிரங்கமாக ஆதரித்துப் பேசுவோரை, தமிழக முதல்வர் கைது செய்யாதது ஏன்? என்று நியாயம் கேட்டிருக்கிறார். தமிழ் உணர்வு என்பது மொழி, பண்பாடு, உரிமைகள் காப்பதில் இருக்க வேண்டியதுதான். ஆனால் அந்த உணர்வு வெறியாக திசை மாறி நாட்டைத் துண்டாட அனுமதித்தால், தமிழ்ப் பண்பாடும் தமிழ் உணர்வும் தழைக்காது. விரைவில் அழிந்துதான் போகும். மும்பையில் ராஜ்தாக்கரே விசிறி விட்டிருக்கும் மராத்தியப் பிரிவினை உணர்வும் இத்தகைய விபத்தையே விளைவிக்கும்.
வரலாற்று ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பல்வேறு அழகான இழைகளைக் கொண்டு பின்னப்பட்ட நாடு இந்தியா. அதில் ஒவ்வோர் இழைக்கும் தனித் தன்மையும் குணமும் உண்டு என்பதற்காக, இழையிழையாகப் பிரிக்க ஆரம்பித்தால் நாடும் துவண்டு போகும். அதன் மாநிலங்களும் தனித் தனி இழைகளாகி வலுவிழந்து சுருண்டு தொங்கும்.இந்த விபரீதம் நோக்கிச் செல்லவும் மக்களைத் தூண்டவும் முற்படும் சுயநல அரசியல்வாதிகள் ராஜ் தாக்கரேயானாலும் சரி. வைகோவானாலும் சரி, கைதாகி தண்டனை பெற வேண்டும். மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும்.
-கல்கி (02.11.08)
- - - - - - - - - - - - - - - -
கருத்துச் சுதந்திரத்தக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கம் நேர்ந்துள்ள அச்சுறுத்தல் இது என்பது ஓர் அபாயம். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுடைய வன்முறையையும் செயல்பாடுகளையும் ந்த மௌன அரசியல்வாதிகள் அங்கீகரிக்கிறார்கள் என்பது மற்றொரு மிகப் பெரிய அபாயம். இந்த மௌன ஆதரவை வைகோ நன்றாக சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார். தமது பொதுக்கூட்டப் பேச்சில் (அக்டோபர் 21 அன்று) புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருக்கிறார். இலங்கை துண்டாடப்படாமல் காக்க இந்தியா எந்த விதத்தில் உதவினாலும் சரி, இந்தியாவே துண்டாடப்படும் அபாயம் ஏற்படும் என்று பிரதமரை எச்சரித்திருக்கிறார்! தமிழ் ஈழம் உருவாக உதவுவதற்கு, தாமே படை திரட்டி, தலைமை தாங்கி நடத்திச் செல்ல முடியும் என்றும் அவர் சவால் விட்டிருப்பது, பகிரங்க புலிகள் ஆதரவுப் பேச்சு மட்டுமல்ல; வடிகட்டிய தேசத் துரோகமும்கூட. ஆனால், இதற்கும் தமிழக முதல்வர் மௌனம் காத்து மறைமுக ஆதரவு தெரிவிப்பார் என்று நம்பலாம்!
தமிழக அரசியல்வாதிகள் நினைப்பதுபோல், பிரபாகரன் தமிழ் ஈழத்தைத் தனி நாடாகப் பெற்று, ஆட்சி புரிய அனுமதிக்கப்பட்டால் விடுதலைப்புலிகளின் அடுத்த குறி தமிழகமாக இராது என்பது என்ன நிச்சயம்? அப்போது இங்கே நிலவக்கூடிய கொடுங்கோன்மையில் யாரும் எதையும் மேடைபோட்டுப் பேசக்கூட முடியாது! புலி ஆதரவுப் புயலில் நிலை தடுமாறும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன் (காங்கிரஸ்) மட்டுமே தெளிவாகச் சிந்தித்தது. தைரியமாகப் பேசியுள்ளார். ராஜீவ்காந்தி கொலையாளிகளை ஆதரிக்கும் வெறிப் போக்கைத் துணிந்து கண்டனம் செய்துள்ளார். தடை செய்யப்பட்ட இயக்கத்தையும் அதன் தலைவரையும் பகிரங்கமாக ஆதரித்துப் பேசுவோரை, தமிழக முதல்வர் கைது செய்யாதது ஏன்? என்று நியாயம் கேட்டிருக்கிறார். தமிழ் உணர்வு என்பது மொழி, பண்பாடு, உரிமைகள் காப்பதில் இருக்க வேண்டியதுதான். ஆனால் அந்த உணர்வு வெறியாக திசை மாறி நாட்டைத் துண்டாட அனுமதித்தால், தமிழ்ப் பண்பாடும் தமிழ் உணர்வும் தழைக்காது. விரைவில் அழிந்துதான் போகும். மும்பையில் ராஜ்தாக்கரே விசிறி விட்டிருக்கும் மராத்தியப் பிரிவினை உணர்வும் இத்தகைய விபத்தையே விளைவிக்கும்.
வரலாற்று ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பல்வேறு அழகான இழைகளைக் கொண்டு பின்னப்பட்ட நாடு இந்தியா. அதில் ஒவ்வோர் இழைக்கும் தனித் தன்மையும் குணமும் உண்டு என்பதற்காக, இழையிழையாகப் பிரிக்க ஆரம்பித்தால் நாடும் துவண்டு போகும். அதன் மாநிலங்களும் தனித் தனி இழைகளாகி வலுவிழந்து சுருண்டு தொங்கும்.இந்த விபரீதம் நோக்கிச் செல்லவும் மக்களைத் தூண்டவும் முற்படும் சுயநல அரசியல்வாதிகள் ராஜ் தாக்கரேயானாலும் சரி. வைகோவானாலும் சரி, கைதாகி தண்டனை பெற வேண்டும். மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும்.
-கல்கி (02.11.08)
- - - - - - - - - - - - - - - -
Subscribe to:
Posts (Atom)