Followers

Tuesday, December 02, 2008

சீரா என்ற பெயரில் ஒரு போலி இஸ்லாமியர்!




சீரா என்ற பெயரில் ஒரு போலி இஸ்லாமியர்!

சமீப காலமாக சீரா என்ற பெயரில் பதிவுகள் எழுதி வரும் ஒரு பதிவரை நாம் அனைவரும் அறிவோம். இவருக்கு கொடுக்கப்பட்ட வேலை நடு நிலையான இந்து மக்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவது. தனக்கு கொடுக்கப்பட்ட இந்த வேலையை மிகவும் திறமையாக இந்த நபர் செயல்படுத்தி வருகிறார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பொய்யயான செய்திகளை வெளியிடுவது. இதன் மூலம் ஹிந்துக்களை உசுப்பி விட்டு இஸ்லாமியருக்கு எதிராக பின்னூட்டம் வாங்க வேண்டியது. அவர்கள் மனத்தில் இஸ்லாத்துக்கு எதிரான எண்ணங்களை விதைப்பது என்று தன் வேலையை இந்த நபர் அருமையாக செய்து வருகிறார்.

//ஆனால் இன்று காங்கிரசும் அதே பாப்பனிய பயங்கரவாத பாஜக வழியில் பாகிஸ்தானை மிரட்டுவதை கண்டு மதச்சார்பற்ற இந்தியர்களும் முஸ்லீம்களும் கடும் கோபத்தில் உள்ளார்கள். கம்யூனிஸ்டு ஏ பி பரதன் ஏற்கெனவே அப்படிப்பட்ட தவறான பாதையில் சென்று பாகிஸ்தானை மிரட்டும் வேலையெல்லாம் வைத்துகொள்ளவேண்டாம் என்று காங்கிரஸை எச்சரித்திருந்தார்.//- சீறா.

//வறுமையில் வாடும் ஏழை முஸ்லீம்களிடமிருந்து பிடுங்கிய பணத்தை வைத்து இப்படி ஊதாரி செலவு செய்ய திட்டம் போட்ட இந்து பாசிச பாஜக அரசுக்கும், அந்த திட்டத்தை செயல்படுத்திய இந்து பாசிச காங்கிரஸ் அரசுக்கும் வித்தியாசம் என்ன?//-Seera

//நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலவினை இரண்டாக உடைத்து விட்டதை ஸஹீஹ் அல் புகாரியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படியிருக்கையில், ஏற்கெனவே நிலவுக்கு ஆம்ஸ்ட் ராங் ஆகியோரை அனுப்பியதாக அமெரிக்கா கூறியதை இஸ்லாமியர் சந்தேகக்கண்ணுடனேயே பார்த்தார்கள்.

அது பிறகு பெரிய ஏமாற்றுவேலை என்று அமெரிக்கர்களாலேயே புட்டு புட்டு வைக்கப்பட்டது. உண்மையில் நிலவுக்கு யாரும் போகவும் இல்லை, அதனுக்கு யாரும் துணைக்கோள் அனுப்பவும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது

ஆகவே நாம் பார்ப்பது அரை நிலவுதான். அந்தபக்கத்து நிலவு உடைத்து ஹிராம் மலைக்கு அப்பால் விழுந்துவிட்டது என்பதே ஸஹீஹ் அல் புகாரி கூற்று. (பாகம் 5, அத்தியாயம், 58, எண் 208, 209, 210, 211) (பாகம் 4, அத்தியாயம் 56, எண் 830, 831, 832)//-Seera


இதே மாதிரியான உளரல்களை இவரின் ஒவ்வொரு பதிவிலும் காணலாம். விபரம் அறிந்த பதிவர்கள் இந்த கோமாளியின் செய்கையை கண்டு சிரித்து விட்டு சென்று விடுகின்றனர். ஆனால் இவரை முஸ்லிமாக நினைத்துக் கொண்டு கோபமாக இவருக்கு இன்னும் பின்னூட்டம் அளித்து வரும் சக பதிவர்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.

விருத்த சேதனமும் செய்து கொண்டு கையில் 'இஸ்மாயில்' என்றும் பச்சை குத்திக் கொண்டு காந்தியைக் கொன்றவர்கள் இதுவும் செய்வார்கள். இதற்கு மேலும் செய்வார்கள்.

Sunday, November 30, 2008

ஹேமந்த் கர்கரே - வீரத்திருமகன்!



உண்மையிலேயே தொலைக்காட்சியில் அந்தக் காட்சியைப் பார்த்தவர்களுக்கு மெய் சிலிர்த்திருக்கும். சிக்கலான நேரங்களில் தமக்கு கீழுள்ளவர்களை அனுப்பி விட்டு தலைவன் பின்னால் இருந்து இயக்குவதுதான் உலக மரபு. வழக்கத்துக்கு மாறாக இந்த வீரத் திருமகன் தானே தீவிரவாதிகளை ஒடுக்க முன்னால் சென்று சதிகாரர்களால் குண்டுக்கு பலியாக்கப்பட்டுள்ளார். அவரைக் கொன்றது தீவிரவாதிகளின் குண்டுதானா அல்லது அவரின் எதிரிகளால் இந்த சந்தர்ப்பம் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும்.

மாலேகான் குண்டு வெடிப்பிலும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த குண்டு வெடிப்புகள் எல்லாவற்றிலும் சங்பரிவாரின் கை இருக்கிறது என்பதை உலகம் அறிய செய்தவர். தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாமியார்களையும், ஜெனரல் புரோகிதையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். இதனால் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி போன்றோரின் விமர்சனத்துக்கும் உள்ளானவர். சங் பரிவாரும் இவருக்கு குறி வைத்திருந்தது. தன் முடிவு இதனால் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்து பல கைதுகளை தீவிரமாக செய்த இவர் ஒரு வீரத் திருமகன்தான்.

நாட்டுப் பற்று என்ன என்பதை நாம் இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் இந்த நாட்டுக்கு துரோகம் இழைக்கிறானா! அவனைப் பிடித்துக் கொடுப்பதில் முதல் ஆளாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். அதே போல் ஒரு இந்து இந்த நாட்டை நிர் மூலமாக்க நினைக்கிறானா! அவனை பிடித்து சட்டத்தின் பிடியில் கொடுப்பதில் முதல் ஆளாக இந்துக்கள் இருக்க வேண்டும். நம்ம ஆள்தானே என்று சற்று கண்டும் காணாமல் இருந்தால் பாதிக்கப் படுவது நமது நாடும் நமது குடும்பமும் நமது உற்றார் உறவினர்களும்தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

கர்கரேயின் மனைவி நரேந்திர மோடி தர நினைத்து இழப்பீட்டுப் பணத்தை வாங்க மறுத்து விட்டதாக இணையங்களில் பார்த்தேன். இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் கர்கரேயின் மதிப்பு மேலும் கூடுகிறது. தனது மனைவியையும் தனது குடும்பத்தையும் அந்த மகான் எந்த அளவு பக்குவப்படுத்தியுள்ளார் என்று நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. சில சில்லரைகளுக்காக நாட்டையே நிர்மூலமாக்கத் துணியும் கயவர்களுக்கு மத்தியில் இந்த மகான் நிச்சயம் என் பார்வையில் வீரத்திருமகன்தான்.

மேலும் எங்கு குண்டு வெடித்தாலும் உடன் ஏதாவது ஒரு முஜாஹிதீன் பெயரை வைத்து முஸ்லிம்களை கருவறுப்பதையே தொழிலாக கொண்டது நம் காவல்துறை. தற்போதுதான் மீடியாக்களும் வலைப்பதிவர்களும் சற்று நிதானித்து பதிவு எழுதுவதாக நினைக்கிறேன். இந்த மாற்றத்துக்கு அடிகோலிய அந்த வீரத்திருமகன் ஹேமந்த் கர்கரேயும் மேலும் உயிரிழந்த தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான மனித குல விரோதிகள் அழிந்து நாசமாகட்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

Tuesday, November 25, 2008

அஸ்ஸலாமு அலைக்கும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும்

முகமன் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி நான் ஒரு பதிவு இடலாம் என்றிருந்தேன். ஆனால் நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை நண்பர் மஸ்தூக்கா அழகாக தனது பதிவில் எடுத்தாண்டுள்ளார். இனி நண்பர் மஸ்தூக்காவின் பதிவின் மீள் பதிவு:

மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது அழகிய முகமன் கூறித் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது இனம் நிறம் மொழி தேசம் மதம் இவை எல்லாவற்றையும் கடந்த ஓர் அழகிய பண்பாடு.

இவ்விதம் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன், வெறுப்பு குரோதம், பகை, உயர்வு தாழ்வு ஆகிய அனைத்தையும் அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக அன்பு, பாசம், சகோதரத்துவம், ஆகியவற்றை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது எனலாம்.

ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களை வெறுக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரிடம் சென்று அழகிய முகமன் கூறி கை கொடுத்தால் அதுவரை அவருக்கு உங்கள் மீதிருந்த வெறுப்பின் அளவு குறைந்து விடும். மென்மேலும் தொடர்ந்து இதனைக் கடைப் பிடித்தால் வெறுப்பு படிப்படியாகக் குறைந்து இறுதியில் அடியோடு அவர் மாறிப்போவதைக் காணலாம்.

ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் இந்த அழகிய முகமன் எப்படி இருக்க வேண்டும்? அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து நேரத்திலும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் தானே முகமன் கூறுவதன் நோக்கம் நிறைவேறும்.

உலகின் பலதரப்பட்ட மக்கள், பல்வேறு மதத்தினர், பல் வேறு மொழி பேசுவோர், பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றுவோர் எப்படியெல்லாம் முகமன் கூறும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்? கொஞ்சம் அலசி ஆராய்ந்து சரியானதைத் தெர்ந்தெடுப்போமா?

ஆங்கிலேய ஆட்சி ஒரு காலத்தில் உலகின் பெரும் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் உலகம் முழுவதும் அம் மொழி வெகு எளிதில் பரவிற்று. பல்வேறு நாடுகளிலிருந்தும் அவர்கள் அடித்து விரட்டப்பட்டாலும், அவர்களது மொழி மட்டும் பலமாக வேரூன்றி கோலோச்சிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

நாகரிகம் என்று கருதி பலரும் ஆங்கில மொழியில் முகமன் கூறுவதைக் காண்கிறோம். ஒருவரையொருவர் சந்திக்கும் போது குட்மார்னிங் சொல்கிறார்கள்.இதையே மாலைப் பொழுதுக்கு வேறு மாதிரியும் இரவுப் பொழுக்கு வேறு மாதிரியும் சொல்ல வேண்டும். பகல் பொழுதில் ஒருவரைச் சந்திக்கும்போது 12 மணிக்கு முன் ஒரு வார்த்தை, அதன் பின் வேறு வார்;த்தை என்று மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வரை சந்திக்கும்போது அவருக்கு வாழ்த்துச் சொல்வதா? அல்லது மணியைப் பார்த்துக் கொண்டிருப்பதா?

நமது நண்பர் அல்லது உறவினரைச் சந்திக்கிறோம் அல்லது அவர்கள் வீட்டுக்குச் செல்கிறோம். அவர்கள் குடும்பத்தில் ஒரு இறப்பு அல்லது துக்கம் நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு எப்படி குட்மார்னிங் சொல்ல முடியும்? அது அவருக்கு நல்ல காலைப் பொழுதல்லவே! பேட் மார்னிங் என்றல்லவா சொல்ல வேண்டும். இது பழக்கமில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் நாகரிகமும் இல்லையே!

சிலர் ஹலோ என்கிறார்கள், அவரும் பதிலுக்கு ஹலோ என்பார். சிலர் ஹாய் என்பர்கள். பதிலுக்கு ஒரு ஹாய். அதிகம் ஆங்கிலம் படித்தவர்கள் ஹவ் டு யு டு சொல்வார்கள். பதிலுக்கும் அதே ஹவ் டு யு டு தான். இதில் அழகிய முகமன் எங்கே இருக்கிறது?

தமிழ் பேசும் கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலர் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்கிறார்கள். அதனைக்கேட்டவரும் 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்று மறு மொழி சொல்கிறார். ஏசுவைப் புனிதராகக் கருதும் அவர்களைப் பொருத்தவரை இந்த ஸ்தோத்திரம் சரியானதாக இருக்கலாம், அதனை இங்கு நாம் விமரிசிக்கவில்லை. ஆனால் இது எப்படி ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன் ஆக இருக்க முடியும்?

வடநாட்டின் சில பகுதிகளில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ராம் ராம்' என்பர். அதனைக் கேட்பவரும் அதற்கு மறுமொழியாக 'ராம் ராம்' என்பார். அவர்கள் கடவுளாகக் கருதி வணங்கும் இராமரை நினைவு படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் சந்திப்பவருக்கு உரிய வாழ்த்து இதில் என்ன இருக்கிறது?

இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்துச் சகோதரர்கள் பலர் 'நமஸ்தே' என்றோ 'நமஸ்கார்' என்றோ கூறுகின்றனர். மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி பேசும் தென்னாட்டு இந்துச் சகோதரர்கள் 'நமஸ்காரம்' என்று கூறுவர். தமிழர்கள் பலரும் இதையொட்டி 'வணக்கம்' என்கின்றனர். இவை அனைத்தும் 'நான் உங்களை வணங்குகிறேன்' என்ற பொருளையே தருபவை.

யாரை யார் வணங்குவது? அனைவருமே அவர் எம்மதத்தவராயினும் கடவுளை மட்டும் அல்லவா வணங்க வேண்டும்? மனிதரை மனிதர் ஏன் வணங்க வேண்டும்? 'வணங்குதல் என்னும் பொருளில் சொல்வதில்லை முகமன் கூறுமுகமாகத்தான் சொல்கிறோம்' என்று சிலர் வாதிடலாம். அப்படியானால் 'வணக்கம்' என்னும் சொல்லுக்கு வேறு என்ன தான் பொருள்?
முகமன் கூறுமுகாக அவர்கள் சொல்லும் 'வணக்கம்' கூட பெரியவர் சிறியவருக்கோ, ஆசிரியர் மாணவருக்கோ, உயர்ந்தவர் தாழ்ந்தவருக்கோ சொல்வதில்லை. (உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது எந்த முறையிலும் இருக்கலாம்)

இவை எல்லாவற்றையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இஸ்லாம் சொல்லும் அழகிய முகமன் எப்படி என்று பார்ப்போமா?

ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'அஸ்ஸலாமு அலைக்கும்'(இறைவின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!) என்று ஒருவர் சொல்ல அதனைக் கேட்டவர் 'வ அலைக்குமுஸ் ஸலாம்' (அவ்வாறே உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)

ஆகா! என்ன அற்புதமான வார்த்தைகள்! எத்துனைச் சிறந்த முகமன்! உயர்ந்தவர் தாழ்ந்தவர், பெரியவர் சிறியவர், ஆண்கள் பெண்கள், பெற்றோர் குழந்தைகள், ஆசிரியர் மாணவர், முதலாளி தொழிலாளி, அனைவரும் சொல்லலாம் அனைவருக்கும் சொல்லலாம். மகிழ்ச்சி, துக்கம், கோபம், குதூகலம் எந்த நேரத்திலும் சொல்லலாம். எந்த நேரத்திலும் சொல்லாம், யாரும் சொல்லலாம். யாருக்கும் சொல்லலாம். இனம் புரியாத பேரின்பம் அடைவீர்கள். எங்கே! ஒரு முறை சொல்லுங்கள் பார்ப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!)

Saturday, November 22, 2008

மைக்கேல் ஜாக்ஸன் மீகாயிலாக ஏன் மாறினார்?

மைக்கேல் ஜாக்ஸன் மீகாயிலாக ஏன் மாறினார்?

நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான மைக்கேல் ஜாக்ஸன் இன்று முஸ்லிமாக தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு இன்று மீகாயிலாக நம் முன் வலம் வருகிறார். இவரின் சகோதரர் ஜெராமிக் ஜாக்ஸன் (அப்துல் அஜீஸ்) முன்பு ஒரு பேட்டியில் 'என் சகோதரனையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொள்ளச் சொல்வேன்' என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போல் தன் சகோதரனுக்கு இஸ்லாமிய வாழ்க்கை நெறியை அறிவுருத்தி இன்று இஸ்லாமிய உலகினுள் பிரவேசிக்க வைத்துள்ளார்.

தான் பின்பற்றும், தன் தாய் தந்தையர் பின் பற்றும் ஒரு கொள்கையை விட்டு இஸ்லாத்துக்கு செல்வது என்பது ஏதோ 'எடுத்தேன்: கவிழ்த்தேன்' என்பது போன்ற ஒரு செயலல்ல. அரசின் எதிர்ப்பு: குடும்பத்தின் எதிர்ப்பு: நண்பர்களின் ஏளனம்: அனைத்தையும் தாங்கிக் கொண்டு உலகம் முழுவதும் பரிச்சயமான 'மைக்கேல் ஜாக்ஸன்' என்ற பெயரையும் நீக்கி விட்டு புதுப் பெயரை சூட்டிக் கொள்கிறார் என்றால் அவரின் மனமாற்றத்தை நாம் லேசாக எடை போட்டுவிட முடியாது.

தான் பிறந்து வளர்ந்த அமெரிக்காவைத் துறந்து தற்போது பஹ்ரைனில் குடியேறத் திட்டமிட்டுள்ளாராம். 'கோடிகளால் அமைதி கிட்டாது. இன்று எனக்கு தேவை மன அமைதி.அது இஸ்லாத்தில்தான் எனக்கு கிடைக்கும்' என்று சொல்வது போல் உள்ளது இவரின் மனமாற்றம்.

London based Arabic "al-Mujallah" has recently published an interview of Jermaine Jackson for the first time since he became Muslim. In this interview, he has expressed his passionate love for Islam. Let us see how he responded to various questions: -

What were your feelings after you proclaimed that you were a Muslim?
Jaramike Jackson:
Having embraced Islam, I felt as if I were born again. I found in Islam the answers to those queries which I had failed to find in Christianity. Particularly, it was only Islam that provided satisfactory answer to the question relating to the birth of Christ. For the first time I was convinced about the religion itself. I pray my family members might appreciate these facts.

What happened when you got back to the US after embracing Islam?
Jaramike Jackson:
When I returned to USA, American media orchestrated heinous propaganda against Islam and the Muslims. The gossips were let loose on me which really disturbed my peace of mind. The Hollywood was hell-bent upon maligning the Muslims. They were being projected as terrorists. There are many things where there is consensus between Christianity and Islam, and Quran presents Holy Christ as a virtuous Prophet. Then, I wondered, why Christian America levels baseless allegations against Muslims?

What was the reaction of your brother Michael Jackson?
Jaramike Jackson:
On my way back to America, I brought a number of books from Saudi Arabia. Michael Jackson asked me himself for some of these books for study. Before this, his opinion was influenced by the propaganda of American media against Islam and the Muslims. He was not inimical towards Islam, but he was not favorably disposed towards Muslims either. But after reading these books, he would keep mum and not say anything against Muslims. I think perhaps this is the impact of the study of Islam that he diverted his business interests towards Muslim traders. Now, he has equal shares with the Saudi billionaire prince Waleed bin Talal, in his multi-national company.
It was said earlier that Michael Jackson was against Muslims, then there are rumors that he had become Muslim. What is the real story?
I testify this fact, at least there is nothing in my knowledge that Michael Jackson ever said anything derogatory against Muslims. His songs, too, give message of love for others. We have learnt from our parents to love others. Only those who have their own ax to grind hurl allegations on him. When there can be a nasty uproar against me when I became Muslim, why can it not be so against Michael Jackson. But, so far, media has not subjected him to scathing criticism, although he is threatened for his getting somewhat closer to Islam. But who knows what would it look like when Michael Jackson embraces Islam.

Wednesday, November 19, 2008

ஹாஜிகளே! வருக!! வருக!!!




ஹாஜிகளே! வருக!! வருக!!!

25000 ஹாஜிகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா கண்டங்களில் இருந்து இந்த வருடம் ஹஜ்ஜீக் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியா வருகிறார்கள். மேற்கண்ட நாட்டு ஹாஜிகளின் பொறுப்பாளர் அலாவுதீன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார். இவர்களை கவனிக்கும் பொருட்டு 24 மணி நேரமும் மூன்று ஷிஃப்ட்களாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அலாவுதீன் கூறுகிறார்.

மேலும் சவுதியில் பணிபுரிவோர் தக்க அனுமதி இல்லாமல் ஹஜ்ஜீ செய்ய வந்தால் காவலர்களால் பிடிக்கப் பட்டு தண்டனையும் வழங்கப்படும் என்றும் அவர்களின் நாட்டுக்கும் திரும்ப அனுப்பப் படுவார்கள் என்றும் சவூதி அரசு எச்சரித்துள்ளது. எனவே நிர்வாக வசதிக்காக சவூதி அரசு எடுக்கும் இந்நடவடிக்கைக்கு நாமும் ஒத்துழைப்பு கொடுத்து நமது நண்பர்களுக்கும் அறிவுறுத்துவோம்.

ஹஜ்ஜீக் கடமை என்பது கடன்கள் இல்லாமல் உடல் ஆரோக்கியமும் இருந்து மெக்கா செல்வதற்கான முழு ஆவணங்களும் இருந்தால்தான் கடமையாகும். ஆர்வக் கோளாரில் சிலர் வெளியாட்களின் மூலமாக பயண ஏற்ப்பாட்டை செய்து கொண்டு பல சிரமங்களுக்கும் ஆளாகிறார்கள். இந்த வருடம் சவூதி அரசும் மிகவும் கண்டிப்புடன் இருப்பதால் முறையான அனுமதி கிடைக்காதவர்கள் பொறுமையுடன் இருந்து அடுத்த வருடம் முயற்ச்சி செய்வார்களாக!

இறைவன் நமது உள்ளத்தைத்தான் பார்க்கிறான்.

'ஹஜ்ஜுக்குத் தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்: திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் இறை அச்சமே மிகச் சிறந்தது.'

-குர்ஆன் 2:197