Followers

Monday, March 02, 2026

ஈரான் மக்களுக்கான ஆயிஷா கடாபியின் முழுமையான உரை..

 


ஈரான் மக்களுக்கான ஆயிஷா கடாபியின் முழுமையான உரை..

 

உறுதிமிக்க மற்றும் சுதந்திரத்தை நேசிக்கும் ஈரான் மக்களே..

 

அழிவு, வேதனை மற்றும் துரோகத்தால் நிறைந்த ஒரு இதயத்தோடு நான் உங்களிடம் பேசுகிறேன்.

 

தனது நாடு சிதைந்து போவதைக் கண்கூடாகப் பார்த்த ஒரு பெண்ணின் குரல் இது..

 

அதுவும் வெளிப்படையான எதிரிகளால் அல்ல, மேற்கத்திய நாடுகளின் வஞ்சகமான புன்னகையையும், அவர்களின் பொய் வாக்குறுதிகளையும் நம்பி ஏமாந்ததால் ஏற்பட்ட விளைவு இது.

 

மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் ஏமாற்று வார்த்தைகளையும் முழக்கங்களையும் நம்பி ஒருபோதும் விழுந்துவிடாதீர்கள் என்று நான் உங்களை எச்சரிக்கிறேன்.

 

அவர்கள் ஒருமுறை என் தந்தை கர்னல் கடாபியிடம் சொன்னார்கள் :

நீங்கள் உங்கள் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிட்டால் உலகத்தின் கதவுகள் உங்களுக்காகத் திறக்கப்படும்” என்று.

 

என் தந்தை நல்லெண்ணம் மற்றும் பேச்சுவார்த்தையின் மீது கொண்ட நம்பிக்கையினால் விட்டுக்கொடுக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

 

ஆனால் இறுதியில் நேட்டோவின் (NATO) குண்டுகள் எங்கள் நிலத்தை எப்படிச் சாம்பலாக்கின என்பதை நாங்கள் பார்த்தோம். லிபியா ரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டது அதன் மக்கள் வறுமை, புலம்பெயர்தல் மற்றும் அழிவுக்குள் தள்ளப்பட்டார்கள்.

 

எனது ஈரானிய சகோதர சகோதரிகளே..

 

தடைகள், உளவாளிகள் மற்றும் பொருளாதாரப் போருக்கு மத்தியிலும் நீங்கள் காட்டும் துணிச்சலும், கண்ணியமும், விடாமுயற்சியும் உங்கள் தேசத்தின் கௌரவத்திற்கும் உண்மையான சுதந்திரத்திற்கும் சான்றாகும். எதிரிக்கு விட்டுக்கொடுப்பது என்பது அழிவு, பிளவு மற்றும் துன்பத்தைத் தவிர வேறெதையும் தராது.

 

ஒரு ஓநாயுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆட்டைக் காப்பாற்றாது அல்லது நிரந்தர அமைதியைக் கொண்டுவராது அது அடுத்த வேளை உணவிற்கான நேரத்தை மட்டுமே குறிக்கும்”

 

கியூபா, வெனிசுலா, வடகொரியா முதல் பாலஸ்தீனம் வரை உறுதியுடன் நின்றவர்கள், உலகின் மாவீரர்களின் இதயங்களில் இன்றும் வாழ்கிறார்கள் மற்றும் வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்து மாவீரர்களாக மாறியுள்ளனர் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

 

ஆனால் சரணடைந்தவர்கள் சாம்பலாக்கப்பட்டார்கள்,

 

அவர்களின் பெயர்கள் காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டன.

 

தைரியமிக்க ஈரான் மக்களுக்கு எனது சல்யூட்.

 

ஈரானியப் போராட்டத்திற்கு (Resistance) எனது சல்யூட்..

 

பாலஸ்தீன மக்களுடனான உலகளாவிய ஒற்றுமைக்கு எனது சல்யூட்.

 

அன்புடனும் கருணையுடனும்,

ஆயிஷா கடாபி..

 

No comments: