Followers

Sunday, August 16, 2009

காந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்?

இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் யார் என்ற உண்மையை எல்லா வரலாற்றாசிரியர்களும் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர். ஆனால் மகாத்மா காந்தி தனது சுய சரிதையில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இப் பதிவில் பார்ப்போமா!

அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் சகோதரர்கள். குஜராத்தில் போர்பந்தரில் பிறந்த இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள். 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை இவர்கள் நிறுவினார்கள்.

இவர்களின் கம்பெனி அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் போர்பந்தரில் தனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தி அவர்களை அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண்டு சம்பளத்திற்க்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.

காந்தி என்ற அந்த இளைஞர் தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த நேரம் இதுதான். 1863ம் ஆண்டு முதன்முறையாக காந்தி வேலையில் சேர்வதற்க்காக தென் ஆப்ரிக்கா பயணம் மேற்க்கொண்டார். அந்தப் பயணத்தில் இவர் ஒரு இந்தியன் என்பதால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டார். தென் ஆப்ரிக்காவில் உள்ள அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களிடம் பயணத்தைப் பற்றிக் கூறும்போது ' நம் நாட்டிலே நமக்கு சுய மரியாதை இல்லை. அதை வேறு எங்கும் எதிர்பார்க்க முடியாது போலும்' என்றார் காந்தி.

உடனேயே 'நாம் உழைத்து உண்கிறோம். நாம் ஏன் சுய மரியாதையை இழக்க வேண்டும்? நாம் ஏன் நாட்டு மக்களுக்கு சுய மரியாதை கிடைக்க பாடுபடக் கூடாது?' என்ற கேள்விக் கணையைத் தொடுத்து காந்தியின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பினர் ஜாவேரி சகோதரர்கள்.

அந்தக் கேள்விதான் காந்தியை தேச விடுதலைப் பற்றிய கவலையை ஏற்படுத்தியது. இதை காந்தி தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பின்பு காலங்கள் உருண்டோட ஒரு நாள் அப்துல்லாஹ் கம்பெனி வழக்கறிஞர் பேக்கர் அவர்களுக்கு உதவியாக டர்பனிலிருந்து பிரிட்டோரியாவிற்க்கு புகை வண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் செல்லும்போது வெள்ளையர்களால் காந்தி அவமானப்படுத்தப் பட்டு மாரிட்ஸ்பார்க் ஸ்டேஷனில் இறக்கிவிடப்பட்டார். அங்குதான் காந்தியின் சுதந்திர உணர்வு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

காந்தியும் ஜாவேரி சகோதரர்களும் சுதந்திர இந்தியாவைக் காண 'நேட்டால் இந்தியன் காங்கிரஸ்'
(Natal Indian Congress) என்ற அமைப்பை தென் ஆப்ரிக்காவில் நேட்டால் நகரிலுள்ள அவர்களது இல்லத்தில் 1894ம் ஆண்டு மே 22ல் ஆரம்பிக்கிறார்கள்.

அதன் முதல் தலைவராக அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களும் முதல் செயலாளராக காந்தியும் நியமிக்கப்பட்டார்கள். இவ்வமைப்பின் மூலம் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டினார்கள். பின்பு 1896ல் நேட்டால் இந்தியன் காங்கிரஸின் இரண்டாவது தலைவராக அப்துல் கரீம் ஆதம் ஜவேரியும் இரண்டாவது செயலாளராக காந்தியும் நியமிக்கப் பட்டார்கள்.

பின்பு காந்தி தனது உறவினர்களைப் பார்ப்பதற்க்காக தாயகம் திரும்பினார்.1897ல் மீண்டும் இரண்டாவது முறையாக தென் ஆப்ரிக்கா சென்றார். தனது குடும்பத்துடன் எஸ்.எஸ். சூர்லேண்ட் என்ற தாதா அப்துல்லாஹ் கம்பெனியின் பயணக்கப்பலில் இலவசமாக பயணம் செய்தார். எஸ்.எஸ்.நாத்ரி என்ற இன்னொரு கப்பலும் சென்றது. மொத்தமாக 800 பயணிகள் பயணமானார்கள்.

இந்த பயணம் வைர வரிகளால் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்தப் பயணத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் இந்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் துறைமுகத்திலிருந்து இந்தியர்கள் இறங்க அனுமதி வழங்கவில்லை.

இந்த தகவல் அறிந்த ஜவேரி சகோதரர்கள் இந்தியர்களின் சுதந்திர உணர்வுக்காக பிரிட்டிஷாரை கடுமையாக எதிர்த்தார்கள். ஜவேரி சகோதரர்களின் கடும் எதிர்ப்பைக் கண்டு கலங்கிய பிரிட்டிஷார் 23 நாட்கள் கழித்து இந்தியர்கள் அந்த துறைமுகத்தில் இறங்க அனுமதித்தனர்.

இது நேட்டால் இந்திய காங்கிரஸின் முதல் வெற்றி என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவம் மறைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தாதா அப்துல்லா கம்பெனி பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நேட்டால் இந்தியன் காங்கிரஸ் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தது. சுதந்திர வேட்கையைத் தூண்டும் ஆணிவேராக இருந்த ஜாவேரி சகோதரர்களின் கடல் வாணிபத்தை வீழ்த்த திட்டம் தீட்டினர் பிரிட்டிஷார்.

அதன் விளைவாக அவர்களின் நான்கு பயணிகள் கப்பல்களும் பல துறைமுகங்களில் நின்ற நிலையிலேயே மூழ்கடிக்கப்பட்டன. இன்றைய மதிப்பின்படி கிட்டத்தட்ட 150 கோடி தொகையை ஜாவேரி சகோதரர்கள் இந்திய விடுதலைக்காக இழந்தனர். மூழ்கடிக்கப்பட்ட 4 பயணிகள் கப்பலில் ஒன்று எஸ்.எஸ். கேத்திவ் கப்பல் குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு இன்று வரை கடலுக்கடியில் இருக்கிறது.
நன்றி : விடியல் வெள்ளி

நாட்டு சுதந்திரத்திற்க்காக தங்கள் நிறுவனத்தையும் பணம் பொருள் அனைத்தையும் இழந்த இந்த ஜாவேரி சகோதரர்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஒருக்கால் இவர்கள் இந்து மதத்தில் அதுவும் உயர் சாதியில் பிறந்திருந்தால் இன்று நமக்கெல்லாம் அறியப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள். உண்மைதானே!

4 comments:

Unknown said...

இவாரெல்லாம் நடை பெற்று இருக்க.... வெள்ளை காரனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து (சர்வர்கர்), நண்பனை காட்டி கொடுத்து ( வாஜ்பாய்) போன்றோர்கள் இன்று சுதந்திரம் எங்களால் தான் கிடைத்தது என்று ஒரு பொய்யை பல முறை கூறி உண்மை ஆக்க பார்கிறார்கள்...இவர்கள் நாடு பற்றை பேச குடஅருகதை இல்லாதவர்கள் இன்று சுதந்திரத்திற்கு உருமை கொண்டாடுகின்றர்கள். சுத்திர போருக்கு முதலில் வித்திட்ட மாவிரன் ஹைதர் அலி, திப்பு சுல்தான், போன்றவர்களின் அளப்பரிய தியாகங்களை இந்திய வரலாறு என்றும் அல்லிதிட முடியாது.....

suvanappiriyan said...

திரு முஹம்மத்!

//நாடு பற்றை பேச குடஅருகதை//

//உருமை//

//சுத்திர போருக்கு//

//அல்லிதிட முடியாது.....//

யுனிகோடில் தட்டச்சு பண்ண மிகுந்த சிரமம் எடுத்துக் கொள்கிறீரர்கள் என்று நினைக்கிறேன். மழலைத் தமிழை படிக்க சுவாரஸ்யமாகவும் இருந்தது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

இந்த உலகில் தமிழினம் தன் உயிருக்கும் உரிமைக்கும் காப்பின்றிக் கலங்கி நிற்கும் இந்தச் சூழலில்தான் இந்தியாவின் விடுதலை நாள்- சுதந்திர தினம் – ஆட்சியாளர்களால் கொண்டாடப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு மிட்டாயும், பணியாளர்களுக்கு விடுமுறையும் தவிர இந்த விடுதலை நாளில் மகிழ்ச்சி கொள்ள என்ன இருக்கிறது?

1947 ஆகஸ்டு 15 இந்திய விடுதலை நாள் என்பது தமிழர்கள் மீதான ஆதிக்கம் ஆங்கிலேயர் கையிலிருந்து இந்தியப் பார்ப்பன – பனியாக்களின் கைக்கு மாற்றித் தரபட்ட நாளே தவிர வேறல்ல; எனவே இது துக்க நாள் என்று அன்றே அறிவித்தார் தந்தை பெரியார். அவர் கூறியதே உண்மை என்பதைக் கடந்த் அறுபத்திரண்டு ஆண்டு கால வரலாறு மெய்ப்பிக்கிறது.
ஆம், அன்றும் இன்றும் ஆகஸ்டு 15 தமிழர்களுக்குத் துக்க நாளே!

சுதந்திர இந்தியாவில் தீண்டாமை ஒழியவில்லை. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைகள் ஒழியவில்லை. வெண்மணியும் விழுப்புரமும் ஊஞ்சனையும் மேலவளவும் தாமிரவருணியும் தாழ்த்தப்பட்ட மக்களின் குருதியில் பாரத மாதா திரும்பத் திரும்பக் குளித்தெழும் தொடர் நிகழ்வின் சில புள்ளிகளே அல்லவா?

ஒடுக்குண்ட மக்களின் சமூக நீதியை நிலைநாட்ட முடிந்ததா சுதந்திர இந்தியாவால்? இன்றளவும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற உயர் தனிக் கல்வி நிறுவனங்கள் பார்ப்பன மேலாதிக்கக் கோட்டைகளாகவே இருந்து வருகின்றன.

உழபவனுக்கு நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை ‘இடதுசாரிகளே’ மறந்து போய் விட்டார்கள். உலகமயத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று கருதும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போன்றவர்கள் ‘டாடாவுக்கே நிலம் சொந்தம்’ என்ற புதிய முழக்கத்தோடு புறப்பட்டிக்கிறார்கள். இப்போது சிவப்புப் பொருளியலைக் கைவிட்டு சிறப்புப் பொருளியலைத் தழுவியுள்ளர்கள். எல்லாம் நாற்காலி அரசியல் செய்த மாயம்! இந்துத்துவ பாசக, இந்தியத் தேசிய காங்கிரசு, இடதுசாரி முன்னணி... எல்லாரும் இந்திய வல்லாதிக்கச் சேவையில் கைகட்டி நிற்கக் காண்கிறோம்.
தமிழ்நாட்டில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று கொட்டி முழக்கி அரசியல் வளர்த்த திராவிட இயக்கம் இப்போது தில்லி வல்லாதிக்கத்தின் தரகு முகவாண்மையாகச் சீரழிந்து விட்டது. கொள்கையை வேட்டி என்றும், பதவியை மேல்துண்டு என்றும் வர்ணித்தவர் அண்ணா. தம்பி கருணாநிதியோ வேட்டி போனாலும் துண்டுதான் உயிரெனத் துடித்து நிற்கிறார். தமிழினத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்துவதில் அவருக்கும் செயலலிதாவுக்கும் வேறுபாடில்லை.

தமிழ்நாட்டின் உழவும் நெசவும் சுதந்திர இந்தியாவில் பாழ்பட்டுக் கிடக்கின்றன. பன்னாட்டுக் குழுமங்களின் சுரண்டல் கொள்ளை நம் காற்றையும் மண்ணையும் கெடுத்து வருகிறது. நாம் உண்ணும் உணவையும் குடிக்கும் நீரையும் நஞ்சாக்கி வருகிறது.
இதற்கொரு முடிவு கட்ட வேண்டுமானால்,. விடுதலைக்காகத் தமிழர்கள் ஒன்றுபடுவதற்குத் தடையாக நிற்கும் சாதியத்தை எதிர்த்துப் போராட வேண்டும். தமிழ்த் தேசியமும் சமுக நீதியுமான குறிக்கோள்களுக்கான போராட்டமே நமக்கு உண்மையான விடுதலையைத் தரும்.

-தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

suvanappiriyan said...

"அன்று அனுமன்; இன்று ராவணன்' :

பா.ஜ., கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஜஸ்வந்த் சிங் கூறியதாவது:புத்தகம் எழுதியதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கியது வேதனை அளிக்கிறது. இந்திய அரசியலில் இந்த நாள் ஒரு துயரமான நாள். என் புத்தகத்தை படிக்காமலேயே பா.ஜ., தலைவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். புத்தகம் தொடர்பாக காங்கிரஸ் விமர்சித்தால் சரி; ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இணைந்திருந்த பா.ஜ., கட்சி என்னை நீக்கியது வியப்பளிக்கிறது. என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிய விவரத்தை, ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.என் தரப்பு நியாயத்தை அறிய கட்சி தரப்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை. இதுநாள் வரை பாரதிய ஜனதா கட்சியின் அனுமன் என, என்னை மீடியாக்கள் விமர்சித்தன. ஆனால், இன்று நான் அந்தக் கட்சிக்கு ராவணனாகி விட்டேன். கடந்த 1977ம் ஆண்டில் ராணுவப் பணியை விட்டு, நாட்டுக்கு சேவை செய்ய பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தேன்.புத்தகம் எழுதியதன் மூலமாக, இந்தியாவுக்கு எதிராக நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. புத்தகம் எழுதியதற்காக நான் வருந்தவில்லை. அது என்னுடைய ஐந்தாண்டு கால கடின உழைப்பில் உருவானது. என் அரசியல் பயணம் தொடரும்.இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.

ஜின்னாவால் 2வது முறையாக பாரதிய ஜனதாவில் சர்ச்சை : புதுடில்லி : பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா விவகாரத்தால், பா.ஜ., கட்சியில் சர்ச்சை ஏற்படுவது இது இரண்டாவது முறை.கடந்த 2005ம் ஆண்டில், பாகிஸ்தான் சென்றிருந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அங்கு ஜின்னாவைப் பற்றி புகழ்ந்து பேசினார். "அவர் ஒரு மதச்சார்பற்ற தலைவர்' என்று, பாராட்டினார். இந்த விவகாரம் அப்போது பா.ஜ., கட்சியில் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதனால், அத்வானி தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. இம்முறை ஜின்னாவை புகழ்ந்ததன் மூலம் ஜஸ்வந்த் சிங் பாதிக்கப்பட்டுள்ளார். பாக்., உருவாவதில் நேரு பங்கு அதிகம் என்றதுடன், சர்தார் படேலையும் குறைத்து அந்த நூலில் எழுதியிருக்கிறார்.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், பாரதிய ஜனதா தலைமையில் மத்தியில் அமைந்த அரசுகளில் ராணுவம், நிதி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவருக்கு ஆர்.எஸ்.எஸ்., பின்னணி எதுவும் கிடையாது. ம.பி.,யில், குவாலியர் மகாராணியின் ஆலோசகர் ஆங்கரே என்பவருக்கு நெருக்கமானவர் என்ற முறையில் பா.ஜ.,வில் சேர்ந்தார். ஆனால், வாஜ்பாய்க்கு மிகவும் வேண்டியவராக இருந்தார். ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார்கில் உள்ள ராஜ குடும்பத்தில், 1938 ஜனவரி 3ம் தேதி பிறந்த ஜஸ்வந்த் சிங், 1967ம் ஆண்டு வரை ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். பின்னர் அரசியலுக்கு வந்தார்.
-Dinamalar