Followers

Friday, October 26, 2012

வேப்பிலை, எலுமிச்சம் பழத்தால் ஓடும் அரசு பேருந்து!


'ஹையோ....என்னை உட்ரும்மா!....நான் பிள்ளை குட்டிக்காரன்'

-----------------------------------------------------

ஆலங்குடி: ஆவி பயத்தால் புதுக்கோட்டை அருகே அரசு பஸ்ஸுக்கு வேப்பிலை கட்டி ஓட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து, ஆலங்குடி வழியாக கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, பேராவூரணி வரை, அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், ஆவிகள், பேய்கள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும், திருவரங்குளம் ஆர்.எஸ்.பதி காடு, கொத்தமங்கலம், மேற்பனைகாடு, காவிரியாறு பாலம் வழியாகச் செல்கிறது. இந்த வழியாகச் செல்லும் போது, பஸ் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், மேற்பனைகாடு காவிரியாறு பாலத்தில் பைக்கில் சென்றவர்கள் மீது இந்த பஸ் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். காட்டுப்பகுதியில் செல்லும்போது, இந்த பஸ் அடிக்கடி பழுதாகி நின்றுவிடும். இரவு நேரங்களில் பெரும்பாலும் சில பயணிகளுடன் டிரைவர், கண்டக்டர் மட்டுமே தனியாக வரும் சூழல் உள்ளது. இரவு நேரங்களில் காட்டுப்பகுதியில் பஸ் பழுதாகி நிற்பதால், இந்த பஸ்சில் பயணிக்க பயணிகள் பயப்படுகின்றனர். மேலும், டிரைவர், கண்டக்டர்களும் இந்த பஸ்சில் பணி செய்ய தயங்குகின்றனர். இந்த பஸ்சில், "ட்யூட்டி' பார்க்க பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் தயங்குவதுடன், தங்களை வேறு பஸ்சுக்கு மாற்றித்தரும்படி கூறுகின்றனர். ஆனால், கோட்ட மேலாளர்கள் எச்சரிக்கையை தொடர்ந்து பயந்து கொண்டே வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், இந்த பஸ் டிரைவர், கண்டக்டர்கள் புதுக்கோட்டையில் உள்ள அம்மன்கோவிலில் அபிஷேகம் செய்தனர். கோவிலில் வைத்து வழிபட்ட எலுமிச்சை பழம், வேப்பிலையை பஸ் முன்னால் கட்டி, பஸ்சை ஓட்டி வருகின்றனர்.


பத்திரிக்கை செய்தி:-
25-08-2012

இறந்தவர்களின் ஆவி (உயிர்) மீண்டு வந்து உயிரோடு இருப்பவர்களைப் பிடித்துக் கொள்கிறது அது தான் பேய் என்று சிலர் கருதுகிறார்கள். இதற்கு சாத்தியமே இல்லை என்று இஸ்லாம் அடித்துக் கூறுகிறது.

''அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதைத் தன்னிடத்தில் நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை வாழ்வதற்காக அனுப்பி விடுகிறான்'' (அல்குர்ஆன் 39:42)

''அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ''என் இறைவனே! என்னைத் திரும்ப உலகுக்குத் திருப்பி அனுப்புவாயாக!'' என்று கூறுவான். (அல்குர்ஆன் 23:99)
''நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக'' என்றும் கூறுவான். அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையேயன்றி வேறில்லை; அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.'' (அல்குர்ஆன் 23:100)

மரணித்த பிறகு எந்த உயிரும் இந்த உலகத்திற்கு திரும்பி வராது, அவ்வுயிருக்கும் இவ்வுலகிற்கும் இடையில் திரை இருக்கிறது. அதை உடைத்துக் கொண்டு வரவே முடியாது. எனவே இறந்த மனிதனின் உயிர் உயிருடன் இருப்பவரின் உடலில் சவாரி செய்ய முடியவே முடியாது. எனவே இறந்தவனின் ஒரு ஆவி மற்றவனின் உடலில் ஏறும் என்ற நம்பிக்கை மற்றவர்களுக்கு வரலாம். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு அறவே வரக் கூடாது. ஆனால் நம்மிலும் சிலர் மனநலம் பாதிக்கப்பட்ட பலரை பேய் பிடித்திருப்பதாக நினைத்துக் கொண்டு தர்ஹாக்களில் கட்டிப் போட்டு அவர்களின் நோயை மேலும் அதிகப்படுத்துகிறார்கள். அரசாங்கம் இது போன்று ஏர்வாடி, வேளாங்கண்ணி, நாகூர் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பல நோயாளிகளை மீட்டு அவர்களை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும். இதனால் பலரின் வாழ்வை அழிவிலிருந்து மீட்கலாம்.

பஸ் டிரைவருக்கு வேப்பிலை கட்டப்பட்டதால் கொஞ்சம் தைரியத்தோடு வண்டியை ஓட்டுவார். அது ஒன்றுதான் இதில் கிடைத்த நன்மை. இதன் மூலம் காசு பார்க்கும் மந்திரவாதிகளுக்கும் சில நன்மைகள். இங்கு சவுதியில் பேய் ஓட்டுகிறேன் என்று யாராவது காசு பார்க்க ஆரம்பித்தால் அவர் கம்பி எண்ண வேண்டியதுதான். :-)






நண்பர்கள் அனைவருக்கும் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

63 comments:

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அத்தனை முஸ்லிம் உறவுகளுக்கும் எமது "ஈதுல் அல்ஹா" ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.!!!

நன்றியுடன்
நாகூர் மீரான்

Unknown said...

சகோ.சுவனப்பிரியன்

நம்ம இ.செ தளத்தில் ஒரு குட்டி நாய் ஓடியே 24 நாட்கள் 1500 மைல்கள் பயணம் செய்ததாக ஒரு பதிவு..சாரி இது ஒரு எதிர்பதிவாம்!!! இது நடக்குமா என்று நாம் தெரிவித்த கேள்விகளுக்கு பதில் தான் இல்லை..ஆனா எப்போதும் போல திசை திருப்பும் பணி கணக்கட்சிதமாவே நடந்தது!!!

******************************

* ஒரு குட்டி நாய் இவ்வளவு தூரம் ஒரே நோக்கத்தை பின்தொடர்ந்து வரமுடியுமா ??? ...

* ஒரு வாகனம் நார்மலாக மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் நாய்க்குட்டியின் வேகம் வாகனத்தின் வேகத்திற்கு ஈடாகுமா..???

* ஒரே சீரான வேகத்தில் வாகனத்தை போல் நாயால் ஓட முடியுமா...???

* 24 நாட்கள் அந்த நாய் இரவில் எங்கு உறங்கியது..உறங்கினால் நோக்கத்தை தவறிவிடுமே!!!...

* ஒரு நாய் பல நாட்களாக பின் தொடர்வது மிதிவண்டியில் செல்லும் நான்கு மாங்காய்களுக்கு ஏன் தெரியவில்லை..???யாரும் ஏன் சொல்லவில்லை.

* ஓடினாள் ,ஓடினாள், வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள் !!! ஓடும் நாய்க்கு 24 நாட்களாக சாப்பாடு எப்படி கிடைத்தது..???சாப்பாடை தேடினால் நோக்கம் தவறி விடுமே..???

* நாய்க்கு உணவளித்ததால் தான் நாய் பின் தொடர்ந்தால், பின் அவர்கள் பயணத்தை தொடர்ந்த முதல் ஓய்வு நேரத்திலேயே நாயை கண்டு கொள்ளலாமே!!! கண்ணு குருடா,,???

******************************

நாம் சொல்வது இதுதான் ...ஒரு பதிவை எதிர்பதிவாக போடுவது என்றால் குறைந்த பட்சம் லாஜிக்கோடவாவது போடுங்கள்..எதுக்கு இப்படி ஒரு பதிவை போடுவானேன் ..பின் பதில் சொல்ல முடியாமல் நெளிவானேன்!!!

நன்றியுடன்
நாகூர் மீரான்

UNMAIKAL said...

PART 1 பிணி ஓட்டும் வேப்பிலை


வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது..

வேப்பந்தழையின் இலை கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.


வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.

வேம்பின் சாறில் 10 அரிசி ,நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும்.

உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.


வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.

வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.

வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும்.

வேப்பிலை+ மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.

* வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.


வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

* நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு.

சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

* வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

* புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

* வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

* வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

* வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

* சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

* சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

* வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

* வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

* வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

* விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.

* அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

CONTINUED ……

UNMAIKAL said...

PART 2 பிணி ஓட்டும் வேப்பிலை

சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு.

கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு.

இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு.

இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது.

UNMAIKAL said...

எலுமிச்சையின் பயன்கள்

சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும்.

வாயுவும் சேர்த்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும்.

இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.

சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும்.

இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு குவளை நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும்.

காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.

வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சனை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும்.

இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.

உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும்.

இந்த ரத்தக்கட்டு நீங்க

சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும்.

இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.

எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.

காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர்.

இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது.

மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்ற வற்றிற்கு நல்லது.

நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும்.

கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.

• எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.

• எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.

• தாதுவைக் கெட்டிப்படுத்தும்.

• உடல் நமைச்சலைப் போக்கும்

•மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.

• மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.

எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம்.

இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.

Easy (EZ) Editorial Calendar said...

மிக சரியாக சொன்னீர்கள்....எல்லாமே அவர் அவர்களின் நம்பிக்கையை பொருத்தது...பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

விஜய் said...

கடவுளை நம்பலாம். பேயை நம்பக்கூடாதா? நல்ல நகைச்சுவையாளர் நீங்கள்.

suvanappiriyan said...

திரு விஜய்!

//கடவுளை நம்பலாம். பேயை நம்பக்கூடாதா? நல்ல நகைச்சுவையாளர் நீங்கள்.//

கடவுளை நம்புவதற்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்? பெய் என்ற ஒன்று கிடையாது என்று இறை வாக்கையே ஆதாரமாக காட்டியிருக்கிறேனே!

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//நம்ம இ.செ தளத்தில் ஒரு குட்டி நாய் ஓடியே 24 நாட்கள் 1500 மைல்கள் பயணம் செய்ததாக ஒரு பதிவு..சாரி இது ஒரு எதிர்பதிவாம்!!! இது நடக்குமா என்று நாம் தெரிவித்த கேள்விகளுக்கு பதில் தான் இல்லை..ஆனா எப்போதும் போல திசை திருப்பும் பணி கணக்கட்சிதமாவே நடந்தது!!!//

உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியதை நானும் பார்த்து ரசித்தேன். 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பது இதுதானோ. :-)

suvanappiriyan said...

சகோ மலர்!

//மிக சரியாக சொன்னீர்கள்....எல்லாமே அவர் அவர்களின் நம்பிக்கையை பொருத்தது...பகிர்வுக்கு மிக்க நன்றி.....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இராஜகிரியார் said...

சலாம் சகோ.

சற்றே பழைய செய்தியானாலும் கீழ்கண்ட செய்தியையும் பாருங்கள்.

Con woman arrested in UAE.

http://www.khaleejtimes.com/nation/inside.asp?xfile=/data/courtroundup/2012/September/courtroundup_September53.xml&section=courtroundup

UNMAIKAL said...

PART 1. ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்

ஆவி இருக்கு என நம்பினால் சிர்க்-ல் விழுந்து விடுவீர்கள் (எச்சரிக்கையாக இருக்கவும்)

ஆவி இருப்பதாக நம்பினால் அது மனிதனுக்குள் புகுந்துவிடும் என்ற நம்பிக்கை வளரும்

ஆவி புகுந்த மனிதனை குணப்படுத்த ஒரு சக்தி வேண்டும் அதற்காக ஏர்வாடி தர்காஹ் உங்கள் நினைவுக்கு வரும்!

ஏர்வாடி தர்காஹ்வில் உள்ள சமாதிக்கு சக்தி இருப்பதாக நம்ப வேண்டிவரும்!

தர்காஹ் நம்பிக்கை வளர்ந்தால் கத்தம் ஃபாத்திஹா, சந்தனகூடு மற்றும் சமாதி கும்பிடு போட வேண்டிய நிலை வளரும்!

இறுதியாக அல்லாஹ்வுக்கு இணையாக அவ்லியாக்களை வணங்கி வழிதவறி ஷிர்க்கில் வீழ்ந்து விடுவீர்கள்!

இயற்கை மரணமும் – மூட நம்பிக்கையும்

ஒருவன் வாழக்கூடிய வயதை முழுமையாக வாழந்து இயற்கையாக மரணித்துவிட்டால் அவனுடைய சரீரம் ஆத்மாவை வெளியேற்றுகிறதாம் இவ்வாறு வெளியே வரும் ஆத்மாவை நேரடியாக சுவர்க்கலோகம் சென்றுவிடுமாம்!

அன்றுமுதல் அவன் சுவர்க்க லோக பதவியை அடைந்துவிடுகிறானாம்!

நிம்மதியாக வாழ்கிறானாம் மீண்டும் மறுபிறவி எடுத்து வருவானாம்!

தற்கொலையும் – மூட நம்பிக்கையும்

ஒருவன் விபத்தின் மூலமாகவோ அல்லது விஷம் அருந்தியோ, தூக்கு மாட்டியோ அல்லது இன்ன பிற வழிகளின் மூலமாகவோ தற்கொலை செய்து மரணமடைந்துவிட்டால் அவனது சரீரம் ஆத்மாவை வெளியேற்றிவிடுகிறதாம் ஆனால் அந்த ஆத்மா மரணம் விதியாக்கப்படுவதற்கு முன் வெளியேறிவிடுவதால் சுவர்ககலோகத்திற்குள் பிரவேசிக்காதாம்!

அவன் வாழக்கூடிய வாழக்கையின் எஞ்சிய காலம் முழுவதும் இந்த உலகிலேயே சரிரம் இல்லாமல் வாழ வேண்டுமாம் இதற்கு பெயர்தான் ஆவியாம்!

ஆவி எப்படி இருக்கும்? – இதோ சில குருட்டு நம்பிக்கைகள்

ஆவியின் உடல் முழுவதும் வெண்மை நிற போர்வை போர்த்தியது போன்று இருக்குமாம்!

ஆவிக்கு இரண்டு கண்கள் இருக்குமாம்!

நீண்ட மூக்கும், நாயைப் போன்ற நாக்கும் இருக்குமாம்!

தலையில் கருமை நிற மயிர் முளைத் திருக்குமாம்! இந்த மயிர் பின்னங்கால்கள் வரை நீண்டு இருக்குமாம்!

கைவிரல்கள் அனைத்திலும் நகங்கள் குறைந்தது 4 இஞ்சுக்கு வளர்ந்திருக்குமாம்!

ஆவிக்கு கால் பாதங்கள் இருக்காதாம்
ஆவி காற்றில் மிதந்தபடி அங்கும் இங்கும் அலையுமாம்!

ஆவிக்கு கடுமையான பசி ஏற்படுமாம் அப்படிப்பட்ட நேரத்தில் தனக்குப் பிடித்தமானவருடைய உடலுக்குள்ளும் நுழைந்துவிடுமாம்

பசி தீர பிரியாணி, முட்டை, சாராயம் மற்றும் கோழிக்கறியை விரும்பி சாப்பிடுமாம்!

மந்திரவாதிக்கு மட்டும்தான் ஆவி கட்டுப்படுமாம்!

ஆவி யாருக்கு பிடிக்கிறது!

சமுதாயத்தில் வசதியாக வாழ்பவர்களுக்கு எப்போதும் பேய், பிசாசு பிடிப்பதில்லை மாறாக ஏழைகளுக்குத்தான் இந்த பேய் பிசாசு எல்லாம்!

அதிலும் ஏழைகளில் வாழ்க்கையை எதிர்த்துப் போராட மன வலிமையற்றவர்களுக்குத்தான் பெரும்பாலும் பேய் பிசாசு பிடிக்கிறது!

இதற்கான காரணம் என்ன?

அப்பாவி மக்களின் அறியாமையும் வேதனையும்

குடும்ப வருமானம் குறைந்து வியாபார இழப்புகள் அதிகமாக இருக்கும் போது வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அதை எண்ணி வருந்துபவருக்கு பைத்தியம் பிடிக்கலாம்!

இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க கூட குடும்பத்தாருக்கு வசதிகள் இருக்காது

மேலும் இப்படிப்பட்ட மன நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கு அலட்சியம் பார்க்கிறார்கள்

எனவேதான் வசதியற்றவர்கள் மன நோய் என்பதை அறிந்தும் சமுதாயத்தின் முன் கேவலப்படக்கூடாதே என்று பேய் பிசாசு என்று கூறி அனுதாபத்தை தேடுகிறார்கள்.

சுயநலவாதிகளின் ஆவி நாடகங்கள்

வாங்கிய கடனை திருப்பி செலுத்த வசதியிருக்கும் ஆனால் கடனை திருப்ப மனம் இருக்காது, இப்படிப்பட்ட நாடகதாரிகள் கடன்தாரரிடம் அடிக்கடி சாக்கு போக்குகளை கூறுவார்கள் இறுதியில் கடன்காரன் நெருக்கடி கொடுத்தால் உடனே ஆவியாட்டம் போடுவார்கள் கடன்காரனும் மிரண்டுவிடுவான்! கடன்தாரர் பரிதாபப்பட்டு சற்று அடங்கி விடுவார்!




CONTINUED …..

UNMAIKAL said...

PART 2.. ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்

திருமணம் ஆகாத நிலையில் வாழும் ஒருசிலர் திருமணத்திற்காக நாடகம் ஆடுவார்கள்!

குறிப்பாக காதலர்கள் ஆடும் ஆவி ஆட்டத்திற்கு அளவில்லை!

தனக்கு மணமகன் பிடிக்கவில்லை என்று கூற ஆவியாட்டம் போட்டு பெற்றோரை ஏமாற்றலாம்!


வேலைக்கு செல்ல உடல் வலிமை இருந்தும் குனிந்து வேலை செய்ய விரும்பாத ஒருசிலர் ஜாலியாக ஊர் சுற்ற நாடகம் ஆடுவார்கள்!

பேய் பிசாசு மூலம் வசூல் வேட்டைகள்

ஒருசில தெருக்களில் கோவில் இருக்காது உடனே அங்கு அம்மன் வந்துவிட்டதாக நாடகமாடி மக்களிடம் கோவில் கட்ட நாடகமாடுவார்கள்!

பஜனை, ஆராதணை மற்றும் உண்டியல் வசூல் வேட்டையில் இறங்குவதும் உண்டு

ஒரு சில பகுதிகளில் தர்கா இருக்காது உடனே ஏர்வாடி இப்ராஹீம் ஷா அவ்லியா கனவில் வந்துவிட்டார் என்று ஆவியாட்டம் போட்டு இங்கே ஒரு தர்காஹ் கட்டி சந்தன ஊர்வளம் எடுக்க ஆணையிடுவார்கள்!

இறுதியாக ஒரு புறம்போக்கு நிலத்தில் கட்டிடம் கட்டி அதற்குள் செங்கல் வைத்துவிட்டு அதை அவ்லியாவின் சமாதி என்று ஃபாத்திஹா ஓதுவதும் உண்டியல் வசூல் வேட்டையில் இறங்குவதும் உண்டு! (இது சேலம் பகுதியின் உண்மைச் சம்பவம்)

குறிப்பிட்ட தேவாலயங்களில் ஆவிகளுக்கு சிறப்பு பிராத்தனையும் சாட்டை அடியும் கொடுக்கப் படுகிறது!

பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலத்தை அரசாங்கம் இடித்து சாலை அமைக்க முற்பட்டால் அதை தடுப்பதற்காக அவ்லியா ஆவி மற்றும் அம்மன் ஆவிகள் என்று ஏராளமான ஆட்டங்கள் தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறுகின்றன.

வரலாற்று ஆவிகள் ஏன் பிடிப்பதில்லை?

ஹிட்லர் எத்தனையோ இலட்சம் பேரை கொன்று குவித்தான் ஒருவருடைய ஆவியும் அவனை பிடிக்க வில்லை ஏன்?

1945-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான் இதுநாள் வரை அவருடைய ஆவி யாருக்கும் பிடிக்கவில்லை ஏன்?

தற்கொலை செய்துக்கொண்ட ஹிட்லருக்கு பசி எடுக்காதா?

2வது உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பான் மீது பறந்து ஹிரோசிமா? நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசின.

ஹிரோசிமா நகரில் 1 இலட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் பலியானார்கள்.

இந்த 2,14,000-ம் ஆவிகளில் குறைந்தபட்சம் 1 இலட்சம் பேருக்காவது பிடித்திருக்க வேண்டும் ஏன் பிடிக்கவில்லை?

ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி போன்றோர் கொல்லப்பட்டனர் அவர்களின் ஆவி யாருக்கும் பிடிக்கவில்லையே ஏன்?

திறமைவாய்ந்த ஆவிகள் ஏன் பிடிப்பதில்லை?

அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவி
சட்டம் படித்த வக்கீல் மற்றும் நீதிபதியின் ஆவி
விமான பைலட் ஆவி
மக்களுக்கு வக்கீலுடைய ஆவி பிடிப்பதில்லை

அதே போன்று நீதிபதி மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவருடைய ஆவிகள் பிடிப்பதில்லை ஏன்?

சிந்தித்துப்பாருங்கள்

இப்படிப்பட்ட நிபுனர்களின் ஆவி பிடித்ததாக நாடகமாடினால் மருத்துவ உடல் கூறுகள் பற்றி பேச வேண்டிவரும், சட்டத்தின் சரத்துக்கள் பற்றி பேச வேண்டிவரும், விமானம் ஓட்டும் டெக்னாலஜி பற்றி பேச வேண்டிவரும்

எனவேதான் படிப்பறிவற்ற ஆவிகளை தேர்ந்தெடுத்து உடலில் ஆவி புகுந்துவிட்டது என்று தெளிவாக நாடகம் ஆடுகிறார்கள்!

இவர்களுக்கு ஏன் பேய், பிசாசு பிடிப்பதில்லை?

நாள்தோறும் சுடுகாட்டில் பிணங்களை எறிக்கும் வெட்டியானுக்கு என்றைக்காவது ஆவி பிடிக்கிறதா? இந்த மனிதன் அங்கே தானே வாழ்கிறான்!

கப்ருஸ்தான்களில் வீடுகட்டி வாழும் முஸ்லிம் ஏழைகளுக்கு என்றைக்காவது ஆவி பிடிக்கிறதா?

தமிழனுக்கு சிங்கள ஆவிதான் அதிகம் பிடிக்கிறது ஏன் ரஷ்ய ஆவி, ஜப்பான் ஆவி, கொரிய ஆவி பிடிப்பதில்லை!

தமிழனுக்கு மலையாள ஆவி பிடிக்கிறது உடனே அரபு வசனங்களை தெளிவாக ஓதுகிறானாம் ஏன் மராட்டிய ஆவி பிடிப்பதில்லை பகவத்கீதையை கஷ்டமான சமஸ்கிருத மொழியில் பேச வேண்டிவருமே என்ற பயமா?

1 முதல் 10 வயது பச்சிளங்குழந்தைகளுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை அதே சமயம் 60-70 வயதை தாண்டிய கிழடுகளுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை!

CONTINUED ……

UNMAIKAL said...

PART 3 . ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்


வர்த்தக ரீதியில் சிறந்தவர்களாக கருதப்படும் ரத்தன் டாடா, அம்பானி சகோதரர்கள், பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

அரசியல்வாதிகள், தலைசிறந்த ஆசிரியர்கள், கணித மேதைகள், விஞ்ஞானிகள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

கொலை நடந்த ஸ்பாட்டுக்கு இரவு பகலாக காவல் இருக்கும் காவலர்களுக்கு ஏன் அந்த ஆவி பிடிப்பதில்லை?

தற்கொலை செய்துக்கொண்டவர்களை போஸ்ட் மார்டம் செய்யும் ஊழியர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

ஜனாஸாக்களை குழிப்பாட்டுபவர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

பிர்அவ்ன் மரணித்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் அவனுடைய சடலத்தை மியுசியத்தில் வைத்துள்ளார்களே அந்த சடலத்துக்குள் ஏன் எந்த ஆவியும் நுழையவில்லை?

குறைந்தபட்சம் ஃபிர்அவ்னுடைய ஆவியாவது நுழையலாமே ஏன் முடியவில்லை?

ஆவியை பார்த்தேன் பயப்படுகிறேன்???

மனிதன் பயந்த சுபாவமுள்ளவன் எளிதில் பயப்படுவான்.

நம்மில் பலர் ஆவியை பார்த்ததாக கூறுவார்கள் பெரும்பாலும் இவ்வாறு கூறுபவர்கள் ஆவியை இருட்டில் பார்த்ததாகத்தான் சொல்வார்கள் காரணம் இருட்டில்தான் ஆவி அங்கும் இங்கும் அலையுமாம்!

இரவு நேரத்தில் ஆவி வந்து பயமுறுத்துமாம், அடித்துவிடுமாம் அப்படியானல் ஏர்வாடி தர்காஹ்வில் ஆயிரக்கணக்கான ஆவிகள் பகலில் அலைகிறதே அந்த ஆவிகளுக்கு உடலும் இலவசமாக கிடைத்துள்ளதே அப்போது அந்த ஆவிகள் உங்களை பயமுறுத்துகிறதா? அடிக்கிறதா? மிதிக்கிறதா? உண்மையில் ஆவி பயம் என்பது முட்டாள்தனம்!

ஆவி, காத்து கருப்பு அடிக்குமா?

இரவு நேரத்தில் மரங்கள் ஆக்ஸிஜனை வெளியேற்றி கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன அந்த நேரத்தில் நீங்கள் அங்கே சென்றால் அந்த விசக்காற்றின் தாக்கத்தால் மூர்ச்சையாகிவிடுவீர்கள், மயக்கம் வரும்

இது அறிவியல் உண்மை

ஆனால் இதை உணராத மக்கள் இரவு நேரத்தில் மரங்கள் இருக்கும் இடத்திற்கு சென்று மயங்கி விழுந்துவிட்டால் ஆவி அடித்துவிட்டது, காத்து கருப்பு ஒண்டிக்கொண்டது என்று கூறுகிறார்கள்.

இரவில் மரங்களினால் வெளிப்படும் கார்பன்டை ஆக்ஸைடின் தாக்கம் அதிகாக இருந்தால் அதை நாம் நுகர்ந்துக் கொண்டால் நம் மூளை தாக்குப்பிடிக்குமா?

மூளை குழம்பிப் போகாதா?

அந்த நேரத்தில் நம்மை அறியாமல் உளரல்கள் வருவது இயல்புதானே இதை ஏன் சிந்திப்பதில்லை!

இரவு நேரத்தில் மரங்களின் பக்கம் ஒதுங்காதீர்கள் அதே சமயம் மழைக்காலங்களில் பகலில் கூட மரங்களின் பக்கம் ஒதுங்காதீர்கள் தலையில் இடி கூட விழுந்துவிடலாம்!

ஆவி பயம் உருவாக்கப்படுகிறது!

பேய் சினிமா படம் பார்த்திருப்பீர்கள் எந்த படத்திலாவது சவுண்டு எஃபக்ட் இல்லாத பேய் சினிமா வருகிறதா?

படத்தில் ஆவி வரும்பொதெல்லாதம் இதயத்துடிப்பை அதிகரிக்கும் திக் திக் சத்தம்தான் வரும், கதவு இழுப்பது போன்ற ஓசை சப்தம் வரும், சன்னல் படபட வென்று அடிப்பது போன்ற சத்தம் வரும் இதெல்லாம் மனிதனை மிரளவைக்கும் மீடியாக்களின் சதித்திட்டம்!

இதே ஆவி சினிமா படத்தை சப்தமே இல்லாமல் ஊமை படமாக பாருங்கள் எந்த பயமும் வராது காரணம் மனிதனை சினிமா ஊடகம் தனக்குள் மயக்குகிறது!

குழந்தைகள் இந்த சினிமாக்களை பார்த்துவிட்டால் இரவு முழுவதும் நடுங்கும் எலி ஓடினால் கூட ஆவி என்று கூறும்! இது மீடியாக்களின் துரோகமில்லையா?

அமெரிக்கர்கள் நிஜமான ஆவியை கேமராவில் பிடித்ததாக கூறுவார்கள்

இதோ கேமிராவில் ஆவி படம் எவ்வாறு வருகிறது? சுய பரிசோதனை செய்து பார்ப்போமா!

இருட்டில் ஒரு கேமிராவை எடுத்துக்கொள்ளுங்கள் ஃபிளாஷ் லைட் போட்டதும் கேமிராவை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டே படம் எடுங்கள்

அப்போது இடையில் ஒரு டார்ச் லைட் வெளிச்சம் காட்டுங்கள்
கேமிராவின் அசைவும், பிளாஷ் லைட் மற்றும் டார்ச் லைட் வெளிச்சமும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் பிறகு அந்த வெளிச்சம் பிளி்ம் ரோலில் பதிவாகிவிடும் போட்டோ பிரிண்ட்-ல் ஆவி போன்று தோற்றம் இருக்கும்! இது ஒருசில அமெரிக்கர்களின் முட்டாள்தனம் என்று கூறலாமே!




CONTINUED …..

UNMAIKAL said...

PART 4. ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்

முடிவுரை

ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஆயிரம் பேர் விபத்து மற்றும் தற்கொலைகளின் மூலமாக மரணிக்கிறார்கள்.

இவர்கள் ஆவியாக உருவெடுத்து வருவார்களானால் மாதம் 1000 பேருக்கு ஆவி பிடிக்க வேண்டும்! ஆனால் ஏன் ஒரு சிலருக்கு பிடிக்கிறது!

ஒரு ஆவி பல உடல்களில் புகலாம் எனில் இந்த 1000 ஆவிக்கள் பல இலட்சம் உடல்களை அபகரிக்கலாமே வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு சம்பவமாவது நடந்துள்ளதா?

ஆவி என்பது இல்லை?

ஆவி பிடிக்கிறது என்று கூறுபவர்கள் முதலில் நல்ல டாக்டரிடம் சென்று மனநல வைத்தியம் செய்துக் கொள்ள வேண்டும்!

ஆவி எனும் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு எச்சரிக்கையாக இருக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக
அல்ஹம்துலில்லாஹ்!



THANKS TO SOURCE : http://unnmaygal.blogspot.com/2011/07/blog-post_5756.html

Nellai Premkumar said...

//இறந்தவர்களின் ஆவி (உயிர்) மீண்டு வந்து உயிரோடு இருப்பவர்களைப் பிடித்துக் கொள்கிறது அது தான் பேய் என்று சிலர் கருதுகிறார்கள். இதற்கு சாத்தியமே இல்லை என்று இஸ்லாம் அடித்துக் கூறுகிறது//

சொர்க்கம் என்ற ஓன்று இருக்கிறது, இறந்து போன முஸ்லிம்கள் மறுமையில் சொர்க்கத்தில் சுவனக்கன்னிகைகளுடன் உல்லாசமாக இருக்கலாம். என்று ஆணித்தரமாக நம்பும் நீங்கள் மனிதன் ஆவியாக வருவதை நம்ப மறுப்பது விந்தைதான். இறப்புக்கு பின் முஸ்லிம்கள் தங்கள் முழு உடலுடனும் முகத்தில் தாடியுடனுமா சொர்க்கத்தில் சுகம் காண செல்கிறார்கள். இது எந்த வகையில் சாத்தியம் சுவனம் சார்.

suvanappiriyan said...

திரு பிரேம் குமார்!

//சொர்க்கம் என்ற ஓன்று இருக்கிறது, இறந்து போன முஸ்லிம்கள் மறுமையில் சொர்க்கத்தில் சுவனக்கன்னிகைகளுடன் உல்லாசமாக இருக்கலாம். என்று ஆணித்தரமாக நம்பும் நீங்கள் மனிதன் ஆவியாக வருவதை நம்ப மறுப்பது விந்தைதான். இறப்புக்கு பின் முஸ்லிம்கள் தங்கள் முழு உடலுடனும் முகத்தில் தாடியுடனுமா சொர்க்கத்தில் சுகம் காண செல்கிறார்கள். இது எந்த வகையில் சாத்தியம் சுவனம் சார்.//

சொர்க்கம் நரகம் என்பது இறப்புக்கு பின்னால் வருவது. அதை நீங்களோ நானோ பார்க்கவில்லை. உங்கள் வாதப்படி சொர்க்கம் நரகம் இல்லமைலேயே இருந்து விட்டால் அதனால் எனக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. ஒருக்கால் நான் சொல்வது போல் சொர்க்கம் நரகம் இருந்து விட்டால் அதை நம்பாத நீங்களே அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.

மேலும் பேய் பிசாசு கிடையாது என்பதை அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. பேய் பிசாசு இருந்ததற்கான அறிவியல் நிரூபணம் இதுவரை சமர்ப்பிக்கப் படவும் இல்லை.

UNMAIKAL said...

//Nellai Premkumar said...

சொர்க்கம் என்ற ஓன்று இருக்கிறது, இறந்து போன முஸ்லிம்கள் மறுமையில் சொர்க்கத்தில் சுவனக்கன்னிகைகளுடன் உல்லாசமாக இருக்கலாம். என்று ஆணித்தரமாக நம்பும் நீங்கள் மனிதன் ஆவியாக வருவதை நம்ப மறுப்பது விந்தைதான். இறப்புக்கு பின் முஸ்லிம்கள் தங்கள் முழு உடலுடனும் முகத்தில் தாடியுடனுமா சொர்க்கத்தில் சுகம் காண செல்கிறார்கள். இது எந்த வகையில் சாத்தியம் சுவனம் சார். //
4:10 AM

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய

“புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்” ,

“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”,

“மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”

Dr.அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

என்னும் வைணவப் பெரியார் ஒரு இந்து மதப் பார்ப்பனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

கேந்த்ரீய வித்யா பீடம் என்ற இந்திய அரசின் கல்வி நிறுவனம் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக தாத்தாச்சாரியாருக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கியிருக்கிறது.

அவருடைய கட்டுரைகள்.


சொடுக்கி >>>>> 0000000 1.
வைகுண்ட லோகத்தில் வீடுகள் உண்டா?... மாடுகள், கிளிகள், மான்கள் உண்டா?... அங்கு வஸிப்பவர்கள் மனைவியுடன் இருக்கிறார்களா?... இங்கு போல் அங்கும் காம ஸூகத்தை அனுபவிக்கிறார்களா?... மகப்பேறுகளைப் பெறுகிறார்களா? ... அங்கேயும் திருடர்கள் இருப்பார்களா?... ஸந்யாஸிகள் இருப்பார்களா?... ஒரு புருஷன் மற்றொருவர் மனைவியை அங்கும் விரும்புவானா?... இந்தக் கேள்விகளை நான் கேட்கவில்லை. பின்?...
<<<<>>>> 00000000 2. உடலுறவுக்கு தட்டுபாடில்லாத சுவர்க்கம். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 89.<<<<>>>> 00000000 3.
பகுதி 90. - 91-1, பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம். கடவுளுக்கு வேலை என்ன?. உடலுறவுக்கு தேவடியாள்கள் விரும்பிய ஸ்த்ரிகள் நிறைய பேரை மோட்சலோகத்தில் அங்கு போனவன் படைத்துக் கொள்வான்.
<<<<<படிக்கவும்.


THANKS TO : http://thathachariyar.blogspot.com

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,

//சொர்க்கம் நரகம் என்பது இறப்புக்கு பின்னால் வருவது. அதை நீங்களோ நானோ பார்க்கவில்லை. உங்கள் வாதப்படி சொர்க்கம் நரகம் இல்லமைலேயே இருந்து விட்டால் அதனால் எனக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. ஒருக்கால் நான் சொல்வது போல் சொர்க்கம் நரகம் இருந்து விட்டால் அதை நம்பாத நீங்களே அதிகம் பாதிக்கப்படுவீர்கள். //

டச்சிங்!!! டச்சிங்!!!

ராவணன் said...

அண்ணாச்சி...ஒன்னு அறிவியலப் பத்தி பேசுங்க...இல்லாட்டி ஒங்க கொல தெய்வத்தின் எறை வசனத்தைப் பத்தி பேசுங்க.

ரெண்டுக்கும் ஒட்டுப் போட்டா ஒட்டாது அண்ணாச்சி.

ராவணன் said...

என்ன அண்ணாச்சி...ஒரு குட்டி நாய்க்கு ஒங்க கொல தெய்வம் கருண காட்டாதா அண்ணாச்சி?

Nellai Premkumar said...

//
சொர்க்கம் நரகம் என்பது இறப்புக்கு பின்னால் வருவது. அதை நீங்களோ நானோ பார்க்கவில்லை.//

உண்மைதான். ஆனால் நீங்களும் உங்கள் கூட்டத்தவரும் அங்கே மாட மாளிகைகளும், சுவனக்கன்னிகைகளும் இருப்பதாக அளந்து கொண்டிருக்கிறீர்களே அதை எந்த அடிப்படையில் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றே கேட்கிறேன்.

//உங்கள் வாதப்படி சொர்க்கம் நரகம் இல்லமைலேயே இருந்து விட்டால் அதனால் எனக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டு விடப் போவதில்லை.///

என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள் சுவனப்பிரியன். உங்கள் புனை பெயரே சுவனத்தின் மேல் உள்ள உங்கள் விருப்பத்தை கூறுகிறது. ஆனால் அப்படி ஓன்று அங்கே இல்லாவிட்டால் ஏமாந்து போய்விட மாட்டீர்களா. சுவனக்கன்னிகைகளுடன் இன்பமாக இருந்து சொர்க்கத்தின் சுக போகங்களை அனுபவிக்கும் உங்கள் எண்ணம் நஷ்டமாகிவிடாதா

//ஒருக்கால் நான் சொல்வது போல் சொர்க்கம் நரகம் இருந்து விட்டால் அதை நம்பாத நீங்களே அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.//

எப்படி பாதிக்கபடுவேன் சுவனப்ரியன் சார். என்னுடைய மத நம்பிக்கையிலும் சொர்க்கம் நரகம் இருக்கிறது.உங்கள் சொர்க்கத்தை போல் 5 star hotel அளவிற்கு எல்லாம் எங்களுக்கு சொல்லப்படவில்லை. சொர்க்கம் இருந்துவிட்டால் அதை அனுபவித்து விட்டு போகிறேன் எதிர்பாராத ஓன்று கிடைத்து விட்டால் அது இன்ப அதிர்ச்சி தானே. அப்படி இல்லாவிட்டால் அதை பற்றிய எந்த எதிர் பார்ப்பும் எனக்கு இல்லாததால் எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லை. எனவே எந்த பாதிப்பும் இல்லை.

//மேலும் பேய் பிசாசு கிடையாது என்பதை அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. பேய் பிசாசு இருந்ததற்கான அறிவியல் நிரூபணம் இதுவரை சமர்ப்பிக்கப் படவும் இல்லை.//

மதம் என்பதே மாயஜாலம் தான் சுவனப்பிரியன். நம்பிக்கைகளின் கட்டுமானம். இம்மை வாழ்கையை விட மறுமை வாழ்வையே முஸ்லிம்கள் விரும்ப வேண்டும் என்பதே இஸ்லாமின் கொள்கை என்று அறிந்திருக்கிறேன். அப்படி அந்த மறுமை சொர்க்கத்தையும், வாழ்க்கையையும் எந்த அறிவியல் நிருபித்திருக்கிறது. அப்படி அறிவியல் நிருபித்தால் தான் நான் நம்புவேன் என்று கூறினால். முதலில் முகமதுவிற்கு ஜிப்ரீல் வந்து குரானை ஓதியதை அறிவியல் ரீதியாக நிருபியுங்களேன். எந்த அறிஞர் நிருபித்திருக்கிறார். புராக் விமானத்தில் முகமது சுவனத்திற்கு சென்று வந்த நிகழ்வை எந்த அறிவியலுடன் சம்பந்தபடுத்தி நிருபிப்பீர்கள்.

அது எப்படி சுவனப்பிரியன் உங்கள் மத நம்பிக்கைகளை பற்றி பேசும்போது அதை பற்றி மட்டுமே கூறுகிறீர்கள். ஆனால் பிறரின் நம்பிக்கைகளை பற்றி பேசும்போது அங்கே அறிவியல் இருக்கிறதா பொறியியல் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்

suvanappiriyan said...

சகோ ராஜகிரியார்!

//“After attaining adequate information, the woman’s house was raided and various items used for superstitious activities were found. All items were seized and the woman was taken to the police to complete interrogation,” Al Nuaimi said.//

வருகைக்கும் தகவலை பகிர்ந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

//அது எப்படி சுவனப்பிரியன் உங்கள் மத நம்பிக்கைகளை பற்றி பேசும்போது அதை பற்றி மட்டுமே கூறுகிறீர்கள். ஆனால் பிறரின் நம்பிக்கைகளை பற்றி பேசும்போது அங்கே அறிவியல் இருக்கிறதா பொறியியல் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்//

குர்ஆனின் மொழி பெயர்ப்பு இன்று உலகம் முழுவதும் கிடைக்கின்றது. தமிழிலும் கிடைக்கிறது. அந்த குர்ஆன் வெறும் சொர்க்கம் நரகம் பற்றி மட்டுமே கூறவில்லை. பூமி உருவானது. இரவு பகல் மாறும் காரணம, உயிர்களின் இனப் பெருக்கம், மழைகள் உருவாவதன் தாத்பரியம் என்று அனைத்தையும் பற்றி பேசுகிறது. ஏதாவது ஒரு வசனம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு மாற்றமாக இருக்கிறது என்று நிரூபித்து விடுங்களேன். பிரச்னை முடிந்ததல்லவா?

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//கேந்த்ரீய வித்யா பீடம் என்ற இந்திய அரசின் கல்வி நிறுவனம் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக தாத்தாச்சாரியாருக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கியிருக்கிறது.

அவருடைய கட்டுரைகள்.//

பிரேம்குமாருக்கு பல உண்மைகளை விளக்கி தகவல் தந்தமைக்கு நன்றி!

suvanappiriyan said...

//மதம் என்பதே மாயஜாலம் தான் சுவனப்பிரியன். நம்பிக்கைகளின் கட்டுமானம். இம்மை வாழ்கையை விட மறுமை வாழ்வையே முஸ்லிம்கள் விரும்ப வேண்டும் என்பதே இஸ்லாமின் கொள்கை என்று அறிந்திருக்கிறேன். அப்படி அந்த மறுமை சொர்க்கத்தையும், வாழ்க்கையையும் எந்த அறிவியல் நிருபித்திருக்கிறது. அப்படி அறிவியல் நிருபித்தால் தான் நான் நம்புவேன் என்று கூறினால். முதலில் முகமதுவிற்கு ஜிப்ரீல் வந்து குரானை ஓதியதை அறிவியல் ரீதியாக நிருபியுங்களேன். எந்த அறிஞர் நிருபித்திருக்கிறார். புராக் விமானத்தில் முகமது சுவனத்திற்கு சென்று வந்த நிகழ்வை எந்த அறிவியலுடன் சம்பந்தபடுத்தி நிருபிப்பீர்கள்.//

முகமது நபி சொன்னது அனைத்தும் உண்மை என்று நான் நம்பக் காரணம் அவர் சொன்ன குர்ஆன் தான் காரணம். அந்த குர்ஆன் கண்டிப்பாக முகமது நபியின் கற்பனையில் உதித்தது அல்ல என்பதில் எந்த சந்தேகமும் எனக்கோ முஸ்லிம்களுக்கோ இல்லை.

suvanappiriyan said...

திரு ராவணன்!

//அண்ணாச்சி...ஒன்னு அறிவியலப் பத்தி பேசுங்க...இல்லாட்டி ஒங்க கொல தெய்வத்தின் எறை வசனத்தைப் பத்தி பேசுங்க.

ரெண்டுக்கும் ஒட்டுப் போட்டா ஒட்டாது அண்ணாச்சி.//

ரெண்டையும் ஒட்டி வருவதே இஸ்லாம். அதுதான் இதன் சிறப்பு.

suvanappiriyan said...

முதலில் தோன்றிய மதம் எது?

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! படிக்கத்தவறாதீர்!

கேள்வி: ராஜா கவுஸ், அல் படாயா, சவூதி அரேபியா.

உலகில் மதம் மாற்றப்படும் அனைவரும் இந்துக்கள் தான் என்றும், அவர்களுக்கு மதங்கள் போதிக்கப்படுவதில்லை என்றும், புத்த மதம் உலகில் தோன்றிய முதல் மதம் என்றும், பின்பு கிறித்தவம்.
அதன் பின்பு இஸ்லாம் வந்தது என்றும் இவையனைத்திற்கும் முன்பு தோன்றியது இந்து மதம் என்றும் முஸ்லிமல்லாத என் நண்பர் கேட்கிறார்.

பதில்: பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்:

இந்து மதத்தின் தோற்றம் எப்போது என்பதற்கு வரலாற்றுக் குறிப்பு இல்லை. இஸ்லாம், கிறித்தவம், புத்தம் ஆகிய மதங்களின் தோற்றத்துக்கு வரலாற்றுக் குறிப்பு உண்டு.
எனவே தான் இம்மதங்கள் தோன்றுவதற்கு முன் இந்து மதம் தான் இருந்தது என்று அவர் வாதிட்டிருக்கிறார்.

இந்து மதம் என்று ஒரு மதமே இல்லை என்பது தான் வரலாற்று உண்மை.
இந்து மதம் என்றால் என்ன என்று அவரிடம் இலக்கணம் கேளுங்கள்! அவர் கூறும் இலக்கணத்தை 99 சதவிகிதம் இந்துக்கள் மறுப்பார்கள்.

ஆம். இந்து மதம் எது என்பதற்கு நூற்றுக்கணக்கான இலக்கணங்கள் உள்ளன. ஒவ்வொரு இலக்கணத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறுகின்றனர்.

‘யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிறித்தவர் இல்லையோ அவர் தான் இந்து’ என்று எதிர் மறையாகத் தான் இந்துக்களுக்கு இந்திய அரசு இலக்கணம் கூறுகிறது.

இந்து மதம் என்ற பெயர் இம்மதத்திற்குரியது அல்ல என்று காஞ்சிப் பெரியவாள் கூட கூறியுள்ளார்.

எனவே, நூற்றுக்கணக்கான மதங்களை ஒருங்கிணைப்பதற்காகத் தான் இப்பெயர் பிற்காலத்தில் சூட்டப்பட்டது. சைவம், வைணவம், ஜைனம், சமணம் என்று பல நூறு மதங்களுக்கும் பொதுப் பெயராக இப்பெயர் பயன்படுத்தப்பட்டது.

இவற்றில் எது முதல் தோன்றியது என்பதில் அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு உள்ளது.

ஆனால், அகில உலகுக்கும் ஒரு கடவுள் என்ற கொள்கை முதல் மனிதரிலிருந்தே இருந்து வருகிறது. இந்து மதத்தின் முக்கிய நூல்களிலும் கூட ஓரிறைக் கொள்கை குறித்த குறிப்புகள் இன்றளவும் கிடைக்கின்றன. இக்கொள்கையின் பெயர் தான் இஸ்லாம்..

எனவே, கடவுள் ஒரே ஒருவன் தான் என்ற கொள்கை தான் முதல் கொள்கை.

இக்கொள்கையில் இஸ்லாம் மட்டும் அறவே சமரசம் செய்து கொள்ளாமல் கடைப்பிடித்து வருகிறது என்பதை அவருக்கு விளக்குங்கள்!

Unknown said...

தங்களின் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் பகிருங்கள் (http://www.tamiln.org/)
தமிழனின் நன்றிகள்...

Unknown said...

தங்களின் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் பகிருங்கள் (http://www.tamiln.org/)
தமிழனின் நன்றிகள்...

S. Robinson said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

Investigation and Media’s role in Terrorism: Indore, Hindutva hardliners’ haven

The arrest of right-wing militants in connection with the blast in Ajmer Dargah isn’t surprising and is just another in the series of arrests of members of org
anisations ranging from Abhinav Bharat to Sanatan Sanstha who have committed a series of bombings in India from Malegaon to Goa.

Headlines in prominent newspapers and leading English channels read like ‘Abhinav Bharat man caught’, ‘Ajmer blast suspects linked to Hindu groups’ or ‘Ajmer blast: Hindu group responsible’.
There is no mention of ’terrorism’ and suddenly words like suspects and ‘organisation member’ are back in journalistic lingo. Just a recent example because public memory is short:
Bettig mafia responsible for blast in Bagalore stadium during IPL!
During the Indian Premier League (IPL), bombs exploded in the stadium in Bangalore. Soon after, journalists who crave for breakthroughs and first page bylines, were mouthing names of persons involved in the blasts. There were reports that security agencies don’t deny the role of particular persons.

A few days passed and the everybody has forgotte it. Now it seems that it was local betting mafia that was involved in planting bombs in the stadium, and we no longer read any follow-ups or any sort of news. So did it make it less serious if underworld or betting mafia is involved?
The classic case was in Assam where major bomb strikes in which dozens died were ignored when ULFA was involved but once minor blasts occurred and a news agency suspected ‘Islamists’ angle’, it was suddenly prime time news and got repeatedly termed as terrorist attacks.

Just a day ago the Bangladesh government has handed DR Nabla alias Ranjan Daimary, the chief of the militant NDFB, that was involved in serial bombings in Assam in 2008 that caused over a 100 deaths. But the arrest didn’t make big news despite the fact that a terrorist mastermind was caught.

Ironically media perceptions force police and investigative agencies to hurry up in investigations and they throw up names to evade intrusive journos by saying that such group’s involvement is not ruled out. The casualty is truth.
Apart from inefficiency and political reasons, often the cases are not cracked because of these reasons. It’s a fact that had there been a BJP government in Maharashtra, Goa or Rajasthan, the activists of Sanatan Sanstha or Abhinav Bharat may never have been arrested.

Upright officers, political will needed
Though Himanshu Panse’s role in blasts in Marathwada had alerted security agencies, the investigation was closed. Firstly, some officers were soft on the group while others apparently didn’t want to get into controversy. It took an officer of the calibre of Hemant Karkare to unravel this network.

Even in cases of blasts where there was a clear stamp of right-wing radicals, Muslim youths were arrested and put for months in illegal detentions. In Hyderabad, those protesting police action were fired at and many were killed.

suvanappiriyan said...

.....The fact is that whether it is Hindutva-inspired fanatic or the Islamist militant, they are equally dangerous for the country. Terrorism and crime should be seen purely as a threat to the nation and not from the prism of religion.
Sadly, this doesn’t happen. When some youths from Azamgarh were arrested, the entire district was demonised. When youths from a particular Muslims-dominated town were arrested, the name of the town ‘Bhatkal‘ was added to their names though it was not their surname.

The aim was to defame the town. It was part of a strategy. Shouldn’t Indore be also termed haven of Hindutva-wadis in India. This peaceful town in Central India has been linked to almost all the major cases of bomb blasts.
Should towns be defamed: Is Indore Hindutva-wadi’s Azamgarh?
Either its Malegaon blast, Mecca Masjid or Ajmer terror strike, the accused are being arrested from Indore. The planning was done here. Even investigation trail in Samjhauta Express case has reached Indore. And the most wanted man, Ramji Kalsangra, whose arrest can unravel the entire group, also hails from here.

It is not that MP police were not aware of Sunil Joshi’s shadowy organisation that was based in Indore. It was also aware of Samir Kulkarni’s Abhinav Bharat that was functioning from MP. But the state police didn’t act then even though local Hindi papers printed tonnes of material.

Kulkarni’s role in planting bombs at Bhopal’s major Islamic gathering of tablighi jamaat that attracts 1 million Muslims was also known but police under BJP rule didn’t act. It is only when CBI and central investigative agencies reached Indore that the activity began.

The unfortunate aspect is that everything in India either gets politicised or communalised.

suvanappiriyan said...

சகோ ராபின்சன்!

//தங்களின் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் பகிருங்கள் (http://www.tamiln.org/)
தமிழனின் நன்றிகள்...//

வருகைக்கு நன்றி. இணைக்க முயற்சிக்கிறேன்.

UNMAIKAL said...

தகவலுக்காக மட்டும்.

PART 1. அந்தக் கலாச்சாரம் எது?

நமது பொருளாதாரத்தின் அடிப்படைக் கலாச்சாரம் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். ஆலோசகரும் கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று பொதுவாக அறியப்பட்டவருமான திருவாளர் எஸ். குருமூர்த்தி பேசி இருக்கிறார்.

1) இந்தியாவுக்கு வருகை தராத இந்தியாவைப்பற்றி குறைவாக அறிந்த அறிஞர்களான காரல்மார்க்ஸ், மாக்ஸ் வெப்பர், ஜான் கால்பிரைத் போன்ற அறிஞர்களால் உருவாக்கப்பட்டவை என்பது குருமூர்த்தி அய்யரின் குற்றப் பத்திரிகையின் முதல் அம்சமாகும்.

ஒரு நாட்டைப் பற்றி அறிய வேண்டுமானால் அந்த நாட்டுக்கு நேரில் வருகை தந்திருக்க வேண்டும் என்றால் பல நாடுகளின் பொருளாதாரம், சமூகச் சூழல் ஆகியவைபற்றி எழுதுபவர்கள், விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள்தானா?

இந்தியாவின் இந்துமதம்பற்றி காரல் மார்க்ஸ் விமர்சித்ததுண்டு.

இப்படி இந்து மதத்தின் அடி மடியில் கை வைத்து விட்டால் போதும்;

இந்தப் பூதேவர்களுக்கு வெட வெடப்பும், ஆத்திரமும் பொங்கி எழுந்து விடும்.

மார்க்சின் காலனியாதிக்கம் எனும் நூலில் மார்க்சு குறிப்பிடுவது முக்கியமானது.

சமூக நோக்கில் பார்த்தால் இந்துஸ்தானம் கிழக்கிந்திய அயர்லாந்தை ஒத்திருக்கிறது.

இத்தாலி சிற்றின்ப வேட்கை நிறைந்ததாக இருக்கிறது.

இத்தாலியும் அயர்லாந்தும் கலந்த ஒரு வினோதமான கலப்பாகவே இந்துஸ்தானம் தோன்றுகிறது.

சிற்றின்ப வேட்கையும், துன்பமும் நிறைந்துள்ள ஒரு உலகமாக அது இருக்கிறது.

இங்குள்ள மதமும் சிற்றின்பத்தின் சிறப்பை சிலாகிக்கும் போதே சன்னியாசத்தையும் ஆதரிப்பதாக இருக்கிறது என்று படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

குடியானவர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் இந்தச் சிறு கிராம அமைப்புகள் சிறியவைகளாக இருந்தாலும் அவர்கள் கீழை நாட்டுச் சர்வாதிகாரத்தின் அடித்தளங்களாக இருந்தன.

அவை மனித அறிவை மூடநம்பிக்கை என்ற சிறு போர்வைக் குள்ளேயே முடக்கி வைத்தன.

இதனால் அவர்களது சரித்திர கால வீர உணர்வும், சிறப்புகளும் அழிந்து போயின.

இந்த அமைப்புகள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும், தங்களைத் தாங்களே பெருமையோடு பார்த்துக் கொண்டன.

சாம்ராஜ்ஜியங்கள் அழிந்தாலும் நகரங்களில் பயங்கரப் படுகொலை நடந்தாலும், எவ்வளவு கொடுமையான நிகழ்ச்சிகள் நடந்தாலும், அவற்றைப் பற்றி இந்தக் கிராமங்கள் கவலைப்படவேயில்லை.

எனவே ஆதிக்கவாதிகளின் பிடியில் இக்கிராமங்கள் எளிதில் விழுந்தன.

கண்ணியமில்லாத தேக்கமடைந்து சோம்பலாகிக் கிடந்த இந்தக் கிராமங்கள் தான் கொலைகளை மதச் சடங்குகள் என்ற பேரில் ஆதரித்தன என்பதை நாம் மறக்கக் கூடாது.

இந்தக் கிராம சமூகங்களில் சாதி வேற்றுமையும், அடிமைத்தனமும் வளர்ந்து கெட்டு விட்டன.

அவை மனிதனை சூழ்நிலைகளின் அதிபதியாக மாற்றுவதற்குப் பதிலாக சூழ்நிலைகளின் அடிமைகளாக மாற்றிவிட்டன.

கண் மூடித்தனமாக இயற்கையைத் துதித்தன.

இயற்கையான தன் சக்தியால் வென்று அதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதன் இங்கே தாழ்ந்து போய் இயற்கைக்கு முன்னால் குரங்குக்கும், பசுவுக்கும் மண்டியிட்டு வணங்கினான் என்பதை நாம் பார்க்க வேண்டும். (நூல் பக்கம் 40-_41)

இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் வருண தர்மத்தையும் பிற்போக்குத் தனங்களையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் நேரில் எழுதியவர்களின் கருத்துக்களையாவது இவர்கள் ஏற்றுக் கொண்டவர்களா என்றால் அதுவும் இல்லை.

அப்படி எழுதியவர்கள் கிறித்தவர்கள் என்று மத முத்திரை குத்தி அப்பொழுதும் தப்பிக்கும் வழியைத்தான் பார்க்கிறார்கள்;

இது பார்ப்பனர்களுக்கே உரித்தான தந்திர உபாயம் என்பதை உணர்க!

2. சூரத் நகரம் வைரத் தொழிற்சாலையாக ஒளிர்வதற்குக் காரணம் இந்து சமூக அமைப்பின் பாரம்பரியக் கலாச்சாரமாம்.

அப்படியானால் இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ந்து வரும் தொழிற்சாலைகள் எந்த வகைக் கலாச்சாரத்துக்குச் சொந்தமானவை?

THANKS TO SOURCE : http://www.viduthalai.in/

CONTINUED ……..

UNMAIKAL said...

தகவலுக்காக மட்டும்.
PART 2. அந்தக் கலாச்சாரம் எது?

கோலார் தங்கச் சுரங்கத்துக்கு எந்தக் கலாச்சாரம் உத்தரவாதம் கொடுத்ததாம்?

அரசுகள் செய்ய வேண்டியதை இங்கு சமூகங்கள் செய்கிறதாமே!

இங்குள்ள சமுதாயம் என்பது என்ன?

ஜாதீய கட்டுமானம்தானே!

ஜாதீயக் கட்டுமானத்தில் சமுதாய உறவுகள் உண்டா?

சமுதாய உறவுகளைத் தகர்ப்பதுதானே இந்துத்துவாவின் ஜாதீய அமைப்பு?

தீண்டாமை நிலவும் ஒரு சமூக அமைப்புகள் சமூக உறவு எங்கிருந்து குதிக்கும்?

நகர சுத்தித் தொழில் எந்தச் சமூக உறவுகளின் அடிப்படையில் நடைபெறுகிறது?

இந்த அடிப்படைப் பணியைச் செய்வதற்கு குறிப்பிட்ட ஜாதியினருடன் சமூக உறவுகளின் அடிப்படையில் இணைந்து பணி செய்வோர் உண்டா?

இங்குள்ள சமூக உறவுகள் எப்படி இருக்கின்றன? வறுமைக் கோட்டுக்கும் கீழ் உழலுவோர் எந்த ஜாதியினர்?

தாழ்த்தப்பட்ட மக்களில் 86.25 விழுக்காட்டினர் நிலமற்றவர்களாக இருப்பது எந்த அடிப்படையில்?

விவசாயக் கூலிகளாகப் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பது ஏன்?

இதில் 48 விழுக்காட்டினர் கடனாளிகளாக இருப்பதும் தான்.

சமுக உறவுகள் பாரம்பரியமாகப் பாதுகாக்கப் பட்டதன் இலட்சணமா?

பாரம்பரிய உறவுக் கலாச்சாரம் என்று திருவாளர் குருமூர்த்தி சொல்லுவது மறைமுகமான ஜாதீய கட்டுமானத்தைத் தானே?

உண்மையைச் சொல்லப் போனால் தாழ்த்தப்பட்டவர்கள் வறுமையின் பிடியில் சிக்கிக் கிடப்பதற்கே காரணமே ஜாதியின் அடிப்படையில் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டதுதானே ஒதுக்கப்பட்டதுதானே!

முதல் பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையத்தின் தலைவராக இருந்த காகாகலேல்கர் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கருத்து - குருமூர்த்தியின் கருத்தினைக் கருச்சிதைவு செய்யக் கூடியதாகும்.

ஜாதி அமைப்பானது உலகில் எங்கும் கிடையாது. இங்குதான் இருக்கிறது.

பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் சமுதாய அமைப்பு மாற்றம் அடையும் -_ ஜாதி ஒழிந்து விடும் என்கின்றனர் சிலர்.

அந்த வாதம் தவறானதாகும்.

ஜாதி காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி இல்லை உணவு இல்லை; உடை இல்லை,

இது பொருளாதார, அமைப்பினால் வந்தது என்பது தவறு.

ஜாதி அமைப்பினால் தான் பொருளாதார வேறுபாடு இருந்து வருவது உண்மையாகும்.


பொருளாதாரத்தினால் பின்னடைந்து நிற்பது ஜாதியினால் ஏற்பட்ட விளைவே தவிர ஜாதி தோன்றுவதற்குரிய காரணம் அல்ல என்றாரே காகாகலேல்கர்

குருமூர்த்தி பெருமைப்படும் ஜாதியின் அடிப்படையிலான பாரம்பரிய சமூக உறவு எவ்வளவுப் பெரிய ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது இன்னொரு பார்ப்பனரான காகாகலேல்கரே மறுக்கிறாரே!

இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்லப்படுகிறது.

அந்த விவசாயத்தைப் பாவ தொழில் என்று சொல்லுவது திரு. குருமூர்த்தி தூக்கிப் பிடிக்கும் இந்து சமூக சாஸ்திரமான மனுதர்மம் (அத்தியாயம் - 10; சுலோகம் 84)


பார்ப்பனீய இந்துக் கலாச்சாரம் என்பது இந்தக் கதியில் இருக்கும் பொழுது அதனைத் தலைகீழாகப் புரட்டிச் சொல்ல குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்களால்தான் முடியும். - மின்சாரம்-

THANKS TO SOURCE : http://www.viduthalai.in/

UNMAIKAL said...

தகவலுக்காக மட்டும்.

PART 1. கழிப்பறையா? கோவிலா? - மணிமகன்-

சென்னை அண்ணா சாலை,பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை, கடற்கரைக் காமராஜர் சாலை, தியாகராயர் நகர் தியாகராயர் சாலை, உஸ்மான் சாலைகள், சவுந்திரபாண்டியனார் அங்காடிச் சாலை, உயர்நீதிமன்ற பிராட்வே சாலை .... இப்படி சென்னையின் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகளில் நீங்கள் ஒரு கழிப்பறையையாவது பார்த்திருக்கிறீர்களா?

ஆனால்,

சாலையோரங்களில் நடைபாதையை மறைத்துக்கொண்டிருக்கும் கோவில்களை நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

நெருக்கடி மிகுந்த சென்னையின் கிட்டத்தட்ட எல்லாத் தெருக்களிலும் ஒரு இந்துக் கோவிலாவது இருக்கும்.

அதுவும் போக்குவரத்தை தடை செய்வதாக இருக்கும், அல்லது நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

சில இடங்களில் இந்தக் கோவிலுக்குப் போட்டியாக மாதா சிலைகள் அமைத்து சிறு வழிபாட்டுத்தலங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

இது தமிழகத் தலைநகர் சென்னையின் நிலை. மாநிலம் முழுதும் உள்ள நிலைகளை வாசகர்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.

உங்கள் ஊர்களிலேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

முதலில் இந்தக் கோவில்கள் எல்லாமே சட்டவிரோதமானவை.

எந்தவித நில உரிமையும் இல்லாதவை.

ஆங்காங்கே சிலரால் சுய நலத்துக்காக அரசின் நிலத்தில், பொதுச் சொத்தினை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பவை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மதுரையில் பொது இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டிய கோவில்களை அகற்ற உத்தரவிட்டது.

அப்போது சில கோவில்கள் அகற்றப்பட்டன. அதன் விளைவாக சாலைகள் விரிவாயின.

போக்குவரத்து சீரானது.

அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளில் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் பொது இடங்களில் ஆக்கிரமித்து அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கோவில்களை அகற்றவும் ஆணையிட்டது.

மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்பியது.

குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

ஆனால், அது இன்னமும் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வில்லை.

மதச்சார்பற்ற இந்திய அரசின் சட்டமும் அதனை செயல்படுத்தும் நீதிமன்றங்களும் இந்த விஷயத்தில் நடுநிலையோடு தீர்ப்புக் கூறுகின்றன என்பது ஆறுதலான செய்திதான்.

ஆனால், மதத்தை வைத்தே பிழைத்துவரும் சங்பரிவார்கள்தான் சட்டத்தையும் மதிப்பதில்லை,

நீதிமன்றத்துக்கும் மதிப்பளிப்பதில்லை.

பொது ஒழுக்கத்தையும் பேணுவதில்லை.

பாபர் மசூதியை இடித்த சங்பரிவார்கள் இந்துக்கோவிலென்றால் கொதித்துப் போகிறார்கள்.

அண்மையில் இப்படித்தான் குய்யோ...முறையோ என்று குமுறினார்கள்.

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ்.

இவர் ஒன்றும் நாத்திகரோ அல்லது இந்து மதத்தினைச் சாராதவரோ அல்ல.

இவர் இந்துதான் என்பதை அவரது பெயரே சொல்லும்.

நெற்றியில் குங்குமம் இட்டபடியே இவர் தெரிவித்த ஒரு கருத்துக்குத்தான் சங்பரிவார்கள் சாடித்தீர்த்தன.


அக்டோபர் 6 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,

பொது சுகாதாரத்தை வலியுறுத்திப் பேசியபோது "நமது நாட்டில் கழிப்பறைகளை விட கோவில்களே அதிகமுள்ளன.

கோவில்களை விட கழிப்பறைகள் மிக முக்கியம்.

நாட்டில் எத்தனை கோயில்கள் உள்ளன என்பது முக்கியமல்ல.

கழிப்பறைகளுக்கும், சுகாதாரத்துக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசிவிட்டார்.

இந்த உரையை தொலைக் காட்சிகள் ஒளிபரப்பின.

அதைப் பார்த்தபோது அவர் திட்டமிட்டுப் பேசவில்லை என்பதை உணரமுடிகிறது.

பொதுச் சுகாதாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர் இயல்பாக நாட்டு நடப்பை எடுத்துக் காட்டும் விதமாக கழிப்பறைகளைவிடக் கோவில்கள் அதிகமுள்ளன என்ற உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.

அவ்வளவுதான் சங்பரிவாரின் அரசியல் முகமாக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி,`` மத நம்பிக்கையின் அடிப்படையில் கோயில்களைக் கட்டுவது என்பதும், கழிவறைகளை அமைப்பது என்பதும் வெவ்வேறு விஷயங்கள். - - மணிமகன்-

CONTINUED…

THANKS TO SOURCE: http://www.unmaionline.com/new/1138-toilet-or-temple.html

UNMAIKAL said...

தகவலுக்காக மட்டும்.

PART 2. கழிப்பறையா? கோவிலா? - மணிமகன்-

இந்தியா பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நாடு.

கோயில், மசூதி, குருத்வாரா, தேவாலயம் ஆகிய மக்களால் புனிதமான இடங்களாகக் கருதப்படுகின்றன.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களை தொடர்புபடுத்தி அமைச்சர் பேசியிருப்பது பெரும் தவறுஎன்று கூறியுள்ளார்.

வழக்கம்போல காங்கிரஸ் வழவழா மறுப்பைக் கூறியுள்ளது.

அதன் தொடர்பாளர் மணீஷ் திவாரி, ``எங்கள் கட்சி அனைத்து மதங்களின் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளது.

எந்த சூழ்நிலையில், எதை வலியுறுத்துவதற்காக ஜெய்ராம் ரமேஷ் அப்படி பேசினார் என்பது சரியாகத் தெரியவில்லை.

நாங்கள் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கின்றோம், என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்ராம் ரமேஷ் வீட்டுக்கு முன்பாக விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து,

தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தினார்களாம்.


எதற்காக ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்கவேண்டும்?

அவர் சொன்னதை துணிவோடு மறுக்க சங்பரிவார்களால் முடியுமா?

அது உண்மையில்லை என்றுதான் அவர்களால் கூறமுடியுமா?

நாட்டில் சரி பகுதிக்கு மேல் ஒரு வேளை உணவே உண்ணும் மக்களைப் பற்றிக் கவலைப் படாமல்,

கடவுளையும் மதத்தையும் பற்றி மட்டுமே கவலைகொள்ளும் காவிகளுக்கு மக்களின் பொதுச்சுகாதாரம் பற்றிப் பேசத்தான் அருகதை உண்டா?

இதற்கு முன் நாட்டை ஆண்ட பா.ஜ.கவுக்குத் தெரியாதா இந்தியாவின் பொதுச் சுகாதார நிலை?

புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன?

நாட்டில் 18 விழுக்காட்டினருக்கு தண்ணீருடன் கூடிய அய்ரோப்பிய மாதிரிக் கழிப்பறைகளும்,

11.5 விழுக்காட்டினருக்கு சாதாரண குழிக் கழிப்பறைகளும்,

6.9 விழுக்காட்டினருக்கு பிறவகைக் கழிப்பறைகளும் மட்டுமே உள்ளன.

எஞ்சிய 63.6 விழுக்காட்டினருக்கு கழிப்பறைகள் கிடையாது.

இதில் கிராமப்புரங்களில் வாழும் மக்களே அதிக அளவில் கழிப்பறைகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

இது 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்த தகவல்.

அதாவது இந்தக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 70 கோடி மக்கள் திறந்தவெளிகளில்,

வயல்வெளிகளில்,

சாலை ஓரங்களில் மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள மக்கள் நகராட்சிப் பூங்காக்களில் மலம் கழிக்கின்றனர்.

தொற்றுநோய் பரவுவதற்கு இவையே முக்கியக் காரணியாக உள்ளதாக சுகாதாரம் குறித்த ஆய்வு கூறுகிறது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 49.8 விழுக்காட்டினர் திறந்தவெளிகளிலும், 3.2 விழுக்காட்டினர் மட்டுமே பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துபவர் களாகவும் இருக்கின்றனர்.

இதுபோக பள்ளி செல்லும் 3 கோடி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கிடையாது.

இந்நிலையில் பள்ளிகளில் கட்டாயம் கழிப்பறைகளும் குடிநீர்வசதிகளும் செய்துதரப்பட வேண்டும் என்றும் அது மாணவர்களின் உரிமை என்று 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது.

-இந்தக் கணக்கோடு நாட்டில் உள்ள கோவில்களின் கணக்கையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.

தெருவுக்குத் தெரு கோவில்கள் உண்டு.

ஆனால், எல்லாத்தெருக்களிலும் கழிப்பறைகள் உண்டா?

கோவில்களைக் கட்ட ஒரு கூட்டம் எப்போதும் வசூல் நோட்டைத்தூக்கிக் கொண்டு காசு பார்ப்பது உண்டு.

ஆனால், சாலையோரங்களில், சந்துபொந்துகளில், வெட்ட வெளிப்பொட்டல்களில் மலம்-_ சிறுநீர் கழிப்பதை நிறுத்தி, பொதுக்கழிப்பிடம் கட்ட வசூல் நோட்டைத் தூக்கியதுண்டா?

கோவிலுக்காக சண்டைபோடும் பக்த சிரோன்மணிகள் கழிப்பறைகளுக்காக வாய் திறந்ததுண்டா?

அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் கட்டிக்கொடுத்துள்ள கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரிப்பதுதான் உண்டா?

சாலைப் போக்குவரத்தை ஆக்கிரமித்துள்ள கோவில்களை இடிக்க அரசு முனையும் போது அதனை எதிர்த்து மறியல் செய்யும் மதவெறி மாக்கள், எங்கள் தெருவுக்கு கழிப்பறை வேண்டும் என மறியல் நடத்தியதுதான் உண்டா? - - மணிமகன்-

CONTINUED…

THANKS TO SOURCE: http://www.unmaionline.com/new/1138-toilet-or-temple.html

UNMAIKAL said...

தகவலுக்காக மட்டும்.

PART 3. கழிப்பறையா? கோவிலா? - மணிமகன்-

நாட்டின் நிலை இவ்வாறிருக்க அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியது சரிதானே!

அன்றாடம் இரண்டு வேளை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவைப்படும் கழிப்பறை அவசியமா?

மனித அறிவை மழுங்கடித்து பணத்தையும் பறிக்கும் கோவில்கள் அவசியமா?

• நாத்திகக் கலைஞானி கமல்ஹாசனின் `நம்மவர் என்ற படத்தில் ஒரு காட்சி.கமல் அவர்களே அக்காட்சியில் பேசுவார்.

• ``எனக்கு அவசரமா பக்தி வந்திருச்சு;

பக்கத்தில கோவில் எங்க இருக்குன்னு யாராவது கேக்குறாங்களா?

அவசரமா யூரின் வருது;கக்கூஸ் எங்க இருக்குன்னுதானே கேக்குறாங்க...

அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுனது ஒரு வகையில இது மாதிரிதானே!

* இந்துத்துவ சோதனைக் களமான குஜராத்தில் நவீன ஹிட்லர் நரேந்திரமோடி சாலைகளை அகலப் படுத்த முனைந்தார்.

அப்போது சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றவேண்டிவரும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

சத்தமில்லாமல் அதற்கு ஒப்புதல் கொடுத்தார் மோடி.

அங்கு இந்துத்துவ வியாபாரத் தலங்களான கோவில்கள் பலநூறு இடிக்கப்பட்டன.

அங்குமட்டுமல்ல,

இந்தியாவின் வேறு எங்கும் இந்துத்துவாக்கள் இதுபற்றி மூச்சுவிடவில்லை.

மோடி இடித்தால் குட்டிச்சுவர்; மற்றவர் இடித்தால் கோவிலோ?



* 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு வினோத யதார்த்தம் இது.

இந்தியாவில் 49.8 விழுக்காட்டினருக்கு கழிப்பறைகள் இல்லை.

ஆனால், 63.2 விழுக்காட்டினர் தொலைப் பேசியும், 53.2 விழுக்காட்டினர் செல்பேசியும் வைத்துள்ளனர். - - மணிமகன்-

THANKS TO SOURCE: http://www.unmaionline.com/new/1138-toilet-or-temple.html

ராவணன் said...

அண்ணாச்சி ஒங்க கற்பனை ஒலகம் நல்லா இருக்கட்டும்.

அண்ணாச்சி எனக்கு நரகம் மட்டுமே வேண்டும்.
ஒங்க கொல தெய்வத்திடம் சொல்லி கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்.

Seshadri said...

Dear Mr.Suvanapriayan

very recently, in Haj 2.5 mn people gathered and throw the stone on sathan pillar, if sathan is not existing why you are wasting time and stones. if sathan is exists, why not ghost cannot exist.

if any one went to haj can seen the Mr.sathan or felt Mr.sathan.

suvanappiriyan said...

திரு சேஷாத்திரி!

//very recently, in Haj 2.5 mn people gathered and throw the stone on sathan pillar, if sathan is not existing why you are wasting time and stones. if sathan is exists, why not ghost cannot exist.

if any one went to haj can seen the Mr.sathan or felt Mr.sathan.//

சாத்தான் (ஷைத்தான்) என்பதும் பேய் பிசாசு என்பதும் ஒன்றல்ல. இரண்டும் வேறு வேறு ஆகும். ஒரு சராசரி மனிதனின் மனம் என்றுமே தவறான செய்கைகளையே அதிகம் நாடும். விபசாரம், கொலை, கொள்ளை, பொய் என்று மனிதர்களில் அதிகமான பேர் தவறிழைப்பதை பார்க்கிறோம். இவ்வாறு மனம் தூண்டப்படுவது சாத்தானினால் உண்டாவது. இதை ஒவ்வொருவரும் உணருகிறோம். இந்த சாத்தானின் வலையில் வீழ்ந்து விடாமல் நமது மனதை கட்டுப்பாட்டில் வைப்பவனே வெற்றி பெறுகிறான். இறைத் தூதர் ஆப்ரஹாம் தனது மகனை இறைவன் கட்டளையால் பலி கொடுக்கப் போகும் போது இதே போன்று சாத்தான் குறுக்கே வந்து அவரது மனத்தை களைக்கிறான். அந்த சம்பவம் பின் வருமாறு வருகிறது.

இப்ராஹீம் நபி அவர்கள் இறைவனது கட்டளைப் படி தமது மகனைப் பலியிட முன் வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான். ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் அவன் மீது ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.

அதன் பிறகு ஜம்ரதுல் உஸ்தா எனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை கற்களால் எறிந்தார்கள்.

அதன் பிறகு ஜம்ரதுல் ஊலா எனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.

பைஹகீ, ஹாகிம், இப்னு குஸைமா ஆகிய நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது.

அதை நினைவு கூரும் விதமாகவும், இறைவனது கட்டளை நமது சிற்றறிவுக்குப் புரியாவிட்டாலும் அதை அப்படியே ஏற்போம் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும், ஷைத்தான்களின் தூண்டுதலுக்குப் பலியாக மாட்டோம் என்பதைப் பிரகடனப்படுத்தும் வகையிலும் அந்த இடங்களில் கல்லெறிய வேண்டும். இந்த மூன்று இடங்களும் மினாவில் அமைந்துள்ளன. இதைத்தான் ஹஜ்ஜில் நீங்கள் பார்த்தது. ஆப்ரஹாம் நபியின் செயலை ஞாபகப்படுத்தும் முகமாகவே இந்த செயல் செய்யப்படுகிறது. அங்கு சாத்தான் இன்றும் இருக்கிறான் என்ற நினைப்பில் அவ்வாறு செய்வதில்லை.

ஆனால் பேய் பிசாசு என்பது இறந்தவனின் ஆவி வேறொரு மனிதனின் உடலில் புகுந்து விடுவதாக நம்பப்படுகிறது. இதைத்தான் நாம் விமரிசிக்கிறோம். இதற்குத்தான் ஆதாரங்களைக் கேட்கிறோம். முஸ்லிம்களில் பலரும் இன்றும் பேய் பிசாசு நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக நாகூர் தர்ஹா, மற்றும் ஏர்வாடி களை சொல்லலாம்.

Seshadri said...

Dear Mr.Suvanapriayan,

Thanks for reply.(good explanation)

my doubt is if mr.ibraham nabi can be disturbed by mr.sathan and he managed to aviod his mind change by throwing the stones at three differnt places believed true, why not lemon and neem can protect our mind from un disclosed power (negative/positive), so both are only belives, at least we can save the neem tree in the world.

even i felt this unknown power exist in my village near our islam friend house whose father, haj return senir person using some ritual to remove this negative elements thought from affected people mind.

so you can say don't know , you can not say not exist (since you cannot prove mr.ibrahim nabi met mr.sathan - only in the books it return.

துரைடேனியல் said...

நாகூர்மீரான் said //நம்ம இ.செ தளத்தில் ஒரு குட்டி நாய் ஓடியே 24 நாட்கள் 1500 மைல்கள் பயணம் செய்ததாக ஒரு பதிவு..சாரி இது ஒரு எதிர்பதிவாம்!!! இது நடக்குமா என்று நாம் தெரிவித்த கேள்விகளுக்கு பதில் தான் இல்லை..ஆனா எப்போதும் போல திசை திருப்பும் பணி கணக்கட்சிதமாவே நடந்தது// - நானும் அதை ரசித்தேன் சகோ.மீரான்! அவரையெல்லாம் நாம் ஒரு பொருட்டாய் எண்ண வேண்டியதில்லை என்பது என் கருத்து.

துரைடேனியல் said...

இறந்தவர்களின் ஆவி பூமியில் இருக்க முடியாது என்ற தங்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். அது மறுக்க முடியாத உண்மையாகும்.

suvanappiriyan said...

திரு சேஷாத்ரி!

//my doubt is if mr.ibraham nabi can be disturbed by mr.sathan and he managed to aviod his mind change by throwing the stones at three differnt places believed true, why not lemon and neem can protect our mind from un disclosed power (negative/positive), so both are only belives, at least we can save the neem tree in the world.//

இரண்டுமே நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றாலும் பேய் பிசாசுகளை பொருத்தவரை கிராமங்களில் மாத்திரம்தான் இந்த நம்பிக்கை இருக்கும். மக்கள் அதிக நடமாட்டம் உள்ள சென்னை போன்ற நகரங்களிலோ மேலும் சவுதி அரேபியா, ரஷ்யா போன்ற நாடுகளில் பேய்களின் நடமாட்டத்தை நம்மால் பார்க்க முடியவில்லையே ஏன்? இதிலிருந்து யார் பேயை நம்புகிறார்களோ அவர்களுக்கு பேயின் நடமாட்டம் உள்ளது. யார் நம்பவில்லையோ அவர்களுக்கு பேய்களின் நடமாட்டம் என்பது ஏமாற்று வேலை என்பது நிரூபணம் ஆகிறது அல்லவா?

//even i felt this unknown power exist in my village near our islam friend house whose father, haj return senir person using some ritual to remove this negative elements thought from affected people mind.//

அது அந்த மக்களின் நம்பிக்கை. எப்படி பேய் என்ற ஒன்று இருப்பதாக நினைத்து பயந்தானோ அவனுக்கு சில குர்ஆன் வசனங்களை ஓதினால் அது சென்று விடும் என்ற நம்பிக்கை விதைக்கப்படட்டதால் பேய் என்ற கற்பனைப் பாத்திரமும் விலகி விடுகிறது.

எங்கள் கிராமத்திலும் மாலை நேர தொழுகை நேரத்தில் சில இந்து பெண்கள் தங்கள் ஒரு வயது, இரண்டு வயது குழந்தைகளை மசூதிக்கு எடுத்து வந்து நாங்கள் தொழுகையை முடிக்கும் வரை வெளியில் காத்திருப்பார்கள். தங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது குர்ஆன் வசனத்தை ஓதி ஊதி விடச் சொல்வார்கள். நான் படிக்கும் காலங்களில் எல்லாம் பல குழந்தைகளுக்கு ஓதி ஊதி விட்டுருக்கிறேன். :-) இது அந்த தாய் மார்களின் நம்பிக்கை. இது தினமும் நடக்கும்.

//so you can say don't know , you can not say not exist (since you cannot prove mr.ibrahim nabi met mr.sathan - only in the books it return.//

குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. காரணம் நிரூபிக்கப்பட்ட அறிவியல் முடிவுகள் எதற்கும் முரண்படாமல் இதன் வசனங்கள் இருப்பது ஒரு காரணம். அடுத்து முகமது நபிக்கு தனது தாய் மொழியான அரபி மொழியைஎழுதவோ படிக்கவோ தெரியாது. இப்படிப்பட்ட ஒருவர் இது போன்ற இலக்கண சுத்தமான ஒரு அழகிய வேதத்தை தர வாய்ப்பே இல்லை. நபி மொழிகளுக்கும் குர்ஆனின் எழுத்து நடைக்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. அரபி மொழி தெரிந்தவர்கள் இந்த வித்தியாசத்தை நன்கு உணர முடியும். ஒரு மனிதனுக்கு காலம் பூராவும் இரு வேறு நடையில் தனது காப்பியங்களை படைக்க இயலாது. எனவேதான் ஆபரஹாமின் வரலாறையும் முகமது நபியின் வரலாறையும் இறைவன் வாக்கு என்று நம்புகிறேன். அடுத்து பேய் பிசாசு கிடையாது என்பதை பல அறிஞர்களும் நிரூபித்துள்ளனர்.



suvanappiriyan said...

திரு துரை டேனியல்!

//இறந்தவர்களின் ஆவி பூமியில் இருக்க முடியாது என்ற தங்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். அது மறுக்க முடியாத உண்மையாகும். //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

விஜய் said...

//அது அந்த மக்களின் நம்பிக்கை. எப்படி பேய் என்ற ஒன்று இருப்பதாக நினைத்து பயந்தானோ அவனுக்கு சில குர்ஆன் வசனங்களை ஓதினால் அது சென்று விடும் என்ற நம்பிக்கை விதைக்கப்படட்டதால் பேய் என்ற கற்பனைப் பாத்திரமும் விலகி விடுகிறது.//

அதே மாதிரிதான் வேப்பிலையும் எலுமிச்சையும் வைத்துக்கொண்டால் பேய் என்ற கற்பனைப் பாத்திரம் விலகி விடுகிறது

கோவி.கண்ணன் said...

என்ன சுபி சார்,

முக்குல சைத்தான் குடி இருக்கும் என்னும் நம்பிக்கைப் போல் பேருந்து எலும்பிச்சத்தால் ஓடுவதாக சிலர் நம்புகிறார்கள், அதில் என்ன தவறு ?

கோவி.கண்ணன் said...

// ஒருக்கால் நான் சொல்வது போல் சொர்க்கம் நரகம் இருந்து விட்டால் அதை நம்பாத நீங்களே அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.//

இது மிகவும் பொதுவான சொத்தை வாதம்.

இதே நம்பிக்கை தான் எல்லா மதவாதிகளிடமும் உள்ளது. பெந்தகொஸ்தே கூட இப்படித்தான் சொல்லுவார்கள்.

காலில் கல்லைக் கட்டிக் கொண்டு தண்ணீரில் குதிப்பவன் ஒருவேளை சாகும் போது பேரின்பத்தை அனுபவிக்கக் கூடும், குதித்துத்தான் பாரேன், என்று சொல்வதைப் போன்றது,

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//முக்குல சைத்தான் குடி இருக்கும் என்னும் நம்பிக்கைப் போல் பேருந்து எலும்பிச்சத்தால் ஓடுவதாக சிலர் நம்புகிறார்கள், அதில் என்ன தவறு ?//

முக்குல சைத்தான் குடி இருப்பதாக முஸ்லிம்கள் நம்பவில்லை. இறை தூதர் ஆப்ரஹாமை சைத்தான் வழி மறித்த இடம் அது. அதே போல் எங்கள்து வாழ்வில் சைத்தானின் ஊசலாட்டம் வநதால் நபி ஆப்ரஹாமைப் போல் நாங்களும் அவனது தவறான வழி காட்டுதலிலிருந்து விலகிக் கொள்வோம் என்பதை சிம்பாலிக்காக சொல்லுவதே அந்த நிகழ்வு.

நான் முன்பே சொன்னது போல் எலுமிச்சம் பழத்தை கட்டி தொங்க விடுவதால் அந்த ஓட்டுநர் சற்று நிம்மதியாக செல்வார். அது ஒன்றுதான் இதனால் விளைந்த நன்மை என்று பதிவிலேயே கூறியுள்ளேனே.

ஆனால் இந்த நம்பிக்கை ஆழமாக போய் மனநோயாளிகளை எல்லாம் பேய் பிடித்திருப்பதாக கதை கட்டி விட்டு தர்ஹாக்களிலும், கோவில்களிலும், மாதா கோவில்களிலும் கட்டிப் போடுவதைத்தான் இந்த பதிவில் எதிர்க்கிறேன்.

suvanappiriyan said...

//காலில் கல்லைக் கட்டிக் கொண்டு தண்ணீரில் குதிப்பவன் ஒருவேளை சாகும் போது பேரின்பத்தை அனுபவிக்கக் கூடும், குதித்துத்தான் பாரேன், என்று சொல்வதைப் போன்றது, //

நான் உங்களிடம் கேட்பது இதுதான். இஸ்லாமிய சட்டத்தை என்னால் முடிந்த வரை இணை வைக்காமல் பின் பற்றி வருகிறேன். தருமி முழு நாத்திகர். எங்கள் இருவருக்கும் உலக வாழ்க்கையில் ஒப்பிடும் போது நான் எதை இழந்து விட்டேன்: அல்லது தருமி போன்ற நாத்திகர்கள் என்ன சுகத்தை அடைந்து விட்டார்கள்? இதற்கு பதில் சொன்னால் போதும்.

விஜய் said...

// ஒருக்கால் நான் சொல்வது போல் சொர்க்கம் நரகம் இருந்து விட்டால் அதை நம்பாத நீங்களே அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.//

கடவுள் நமக்கு எதற்கு பகுத்தறிவு தர வேண்டும்? எதற்கு யாரோ ஒருவர் காதில் மட்டும் ரகசியமாக சொல்லிவிட்டு போக வேண்டும்? இவ்வளவு பெரிய பேரண்டத்தை படைத்த கடவுள் எல்லோரது காதுகளிலும் சொல்லியிருக்கலாம். அவ்வாறு சொல்லியும் தவறு செய்கிறவர்களை மறுமையில் கொடூரமாக தண்டிக்கலாம்.

கோவி.கண்ணன் said...

//அல்லது தருமி போன்ற நாத்திகர்கள் என்ன சுகத்தை அடைந்து விட்டார்கள்? //

தருமி போன்ற நாத்திகர்கள் முதுகில் குண்டு கட்டிக் கொண்டு தானும் செத்து மற்றவர்களையும் சாகடிக்கமாட்டார்கள், மத நம்பிக்கையாளர்கள் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் மூளைச் சலவையால் அதைச் செய்யக் கூடும்.

:)

தருமிபோன்ற நாத்திகர்களால் இடிக்கப்பட்ட வழிபாட்டுத்தளம் என்று எதுவும் கிடையாது.

//தருமி முழு நாத்திகர். எங்கள் இருவருக்கும் உலக வாழ்க்கையில் ஒப்பிடும் போது நான் எதை இழந்து விட்டேன்://

:) உங்களால் மாற்று மதத்தினரிடம் நட்புக் கொள்ளும் பொழுது அவர்கள் நாளைக்கு நரகத்துக்குப் போகிறவர் என்கிற தாழ்வான எண்ணம் இருக்கலாம், தருமியிடம் இப்படிப் பட்ட வீணான எண்ணங்கள் இருக்காது.

suvanappiriyan said...

திரு விஜய்!

//கடவுள் நமக்கு எதற்கு பகுத்தறிவு தர வேண்டும்? எதற்கு யாரோ ஒருவர் காதில் மட்டும் ரகசியமாக சொல்லிவிட்டு போக வேண்டும்? இவ்வளவு பெரிய பேரண்டத்தை படைத்த கடவுள் எல்லோரது காதுகளிலும் சொல்லியிருக்கலாம். அவ்வாறு சொல்லியும் தவறு செய்கிறவர்களை மறுமையில் கொடூரமாக தண்டிக்கலாம்.//

நம்மை படைத்த இறைவனுக்கு நாம் கட்டளையிட முடியாது. இறைவனின் அத்தாட்சிகளை நேரிடையாக பார்த்தும் பல மனிதர்கள் இறைவனை விசுவாசிக்காமலேயே இறந்துள்ளார்கள். எனவே எப்படி ஒரு அமைப்பு வைத்தாலும் அதிலும் நாம் கேள்வி எழுப்பலாம். இது மனிதனின் இயல்பு.

Nellai Premkumar said...

//குர்ஆனின் மொழி பெயர்ப்பு இன்று உலகம் முழுவதும் கிடைக்கின்றது. தமிழிலும் கிடைக்கிறது. அந்த குர்ஆன் வெறும் சொர்க்கம் நரகம் பற்றி மட்டுமே கூறவில்லை. பூமி உருவானது. இரவு பகல் மாறும் காரணம, உயிர்களின் இனப் பெருக்கம், மழைகள் உருவாவதன் தாத்பரியம் என்று அனைத்தையும் பற்றி பேசுகிறது. ஏதாவது ஒரு வசனம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு மாற்றமாக இருக்கிறது என்று நிரூபித்து விடுங்களேன். பிரச்னை முடிந்ததல்லவா?//

ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் என்பது புராண இதிகாச காலம் அல்ல சுவனப்ரியன். நீங்கள் சொன்ன குரான் பேசுகின்ற அனைத்து விசயங்களையும் பேசும் பல நூல்கள் அப்போதே வந்து விட்டன. எதோ குரான் மட்டுமே முதலில் இதை எல்லாம் சொன்னது போல பேசுகிறீர்கள். அவ்வளவு ஏன், குரானுக்கு முன்பே இருந்த மகாபாரத, இராமாயண இதிகாசங்களில் இருந்து நவீன அறிவியலுக்கு ஒத்து வரும் கருத்துகளையும் சம்பவங்களையும் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்களேன். உங்கள் குர்ஆனில் கூறப்பட்டவைகளை விட அதிகமாகவே கிடைக்கும். அந்த வசனம் அதை குறிக்கிறது இந்த வசனம் இதை குறிக்கிறது என்று சுற்றி வளைத்தல்கள் இல்லாமல் நவீன அறிவியல் கூறும் பல கருத்துக்களை நேரடியாகவே அவற்றில் காணலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லாத அறிவியலை விடவா உங்கள் குரான் சொல்லிவிட்டது.

எனக்கு தெரிந்த வரையில் குரானை ஆராய்ந்து தான் நான் அதை கண்டு பிடித்தேன் என்று எந்த அறிவியல் அறிஞரும் சொல்லவில்லை எந்த கண்டுபிடிப்புகளும். குரானில் சொல்லி இருப்பதை வைத்து தான் சிந்தித்தேன். என்று எந்த விஞ்ஞானியும் சொல்லவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள். சிந்தனையாளர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் துன்பப்பட்டு. இரத்தம் சிந்தி கண்டுபிடித்தவை. உங்கள குரான் ஒன்றும் அதற்கு காரணம் இல்லை. ரொம்ப சுலபமாக குரானில் இது சொல்லி இருக்கிறது என்று சொல்லி அவர்களை கேவல படுத்தாதீர்கள். இத்தனை அறவியல் கண்டுபிடிப்புகளுக்கு பிறகு தான் அதற்கு சம்பந்தமாக குரானில் உங்களை போன்றவர்கள் தோண்டி துருவி எதாவது வசனத்தை வைத்து எதாவது கண்டுபிடிப்புகளுடன் சம்பந்தப்படுத்தி இந்த வசனம் அதை குறிக்கிறது, அந்த வசனம் இதை குறிக்கிறது என்று கூறுவது தான். குரானின் அறிவியல். இன்றைய நவீன கண்டுபிடிப்புகளில் புரட்சியான கண்டுபிடிப்பான தொலைக்காட்சி மற்றும் செல்போன் போன்றவற்றை பற்றி உங்கள் குரான் எதாவது சொல்லி இருக்கிறதா என்று சொல்லுங்களேன். அது இறை வேதமா என்று பார்ப்போம்

//முகமது நபி சொன்னது அனைத்தும் உண்மை என்று நான் நம்பக் காரணம் அவர் சொன்ன குர்ஆன் தான் காரணம். அந்த குர்ஆன் கண்டிப்பாக முகமது நபியின் கற்பனையில் உதித்தது அல்ல என்பதில் எந்த சந்தேகமும் எனக்கோ முஸ்லிம்களுக்கோ இல்லை.//

நல்லது சுவனப்பிரியன். உங்கள் நம்பிக்கை வாழ்க. ஆனால் உங்கள் நம்பிக்கையை ஏன் அடுத்தவரும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு உசத்தி என்றால் . மற்றவர்களின் நம்பிக்கை அவர்களுக்கும் உசத்தி தான். எந்த காலத்திலும் உங்களால் முகமதுவிற்கு வஹீ இறங்கியதையோ. புராக் விமானத்தில் பரந்ததையோ அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாது. அப்படி இருக்கும்போது, மற்றவர்களின் நம்பிக்கை தவறு என்றும் உங்கள் நம்பிக்கை உண்மை என்றும் உங்கள் நம்பிக்கையை பிறருக்கு எதற்கு திணிக்கிறீர்கள். நீங்கள் அவரை எப்படி வேண்டுமென்றாலும் நம்புங்கள் அதை பற்றி எங்களுக்கு என்ன கவலை. ஆனால் அடுத்தவர்களின் நம்பிக்கையை குறை கூறும் உரிமை உங்களுக்கு மட்டும் அல்ல. யாருக்குமே இல்லை.


திரு உண்மைகள்

பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறீர்கள். பார்த்தீர்களா? நீங்கள் விரும்பும் சுவனம் பற்றி உங்கள் நாட்டில் உருவான வேதத்திலேயே இருக்கிறது. பிறகு ஏன் நீங்களும் சுவனப்பிரியரும் அரபு நாட்டு முகமதுவிற்கு சொம்பு தூக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.

suvanappiriyan said...

திரு பிரேம்குமார்!

//நல்லது சுவனப்பிரியன். உங்கள் நம்பிக்கை வாழ்க. ஆனால் உங்கள் நம்பிக்கையை ஏன் அடுத்தவரும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள். //

இஸ்லாம் சொல்லும் அனைத்து இறை சட்டங்களும் நம் பாரத மண்ணிலும் முன்பு இருந்தது. பின்னால் வந்த ஆட்சியாளர்கள் தங்களது மத கருத்தை திணித்ததால் உண்மையை .ழந்தோம். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது நம் மண்ணுக்கே உரிய புராதன கொள்கை. அது சிதைந்ததால்தான் நான் நெற்றியில் பிறந்தேன், நீ தொடையில் பிறந்தாய் என்று வருணங்களை கொண்டு வந்தனர். இவ்வாறு சாதி வேறுபாடு தலை தூக்கியதால்தான் எனது முன்னோர்கள் இந்து மதத்தை தலை முழுகினார்கள்.

//நீங்கள் விரும்பும் சுவனம் பற்றி உங்கள் நாட்டில் உருவான வேதத்திலேயே இருக்கிறது. பிறகு ஏன் நீங்களும் சுவனப்பிரியரும் அரபு நாட்டு முகமதுவிற்கு சொம்பு தூக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.//

என்னை சொல்லி விட்டு தற்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? :-)

விஜய் said...

//நம்மை படைத்த இறைவனுக்கு நாம் கட்டளையிட முடியாது. இறைவனின் அத்தாட்சிகளை நேரிடையாக பார்த்தும் பல மனிதர்கள் இறைவனை விசுவாசிக்காமலேயே இறந்துள்ளார்கள். எனவே எப்படி ஒரு அமைப்பு வைத்தாலும் அதிலும் நாம் கேள்வி எழுப்பலாம். இது மனிதனின் இயல்பு. //

குர்ரானை படிக்காமல் வேறு மதத்தில் இருந்து கொண்டோ அல்லது நாத்திகராக இருந்து கொண்டோ அவர் மனதறிந்து எந்த பாவமும் செய்யாதவராக இருந்தால் அவருக்கு சுவர்க்கம் கிடைக்குமா நரகம் கிடைக்குமா?

suvanappiriyan said...

//குர்ரானை படிக்காமல் வேறு மதத்தில் இருந்து கொண்டோ அல்லது நாத்திகராக இருந்து கொண்டோ அவர் மனதறிந்து எந்த பாவமும் செய்யாதவராக இருந்தால் அவருக்கு சுவர்க்கம் கிடைக்குமா நரகம் கிடைக்குமா? //

வேறு மதத்தில் முன்பு இறைவன் கொடுத்த வேதங்கள் மறைக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டுள்ளன. இதை இந்து அறிஞர்களும், கிறித்துவ அறிஞர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். நீங்கள் இந்து மதத்திலோ அல்லது கிறித்தவ மதத்திலோ இருந்து கொண்டு ஏக இறைவனை மட்டுமே நம்ப வேண்டும். இந்தியா முதற்கொண்டு பல தூதர்கள் வந்ததை நம்ப வேண்டும். அதில் கடைசியாக முகமது நபி இறைவனால் அனுப்பப்பட்டார் என்று நம்ப வேண்டும். உஙகள் பெயரைக் கூட அரபியில் மாற்றத் தேவையில்லை. உலகில் வாழும் காலங்களில் நல்ல செயல்களை செய்து வந்து மேலே நான் கூறிய சில கட்டளைகளையும் தொடர்ந்தால் அவர்களுக்கு சொர்க்கம் கிடைப்பதாக நபிகள் நாயகத்தின் நபி மொழி அறிவுறுத்துகிறது. உலகுக்கு தெரிவிக்காமல் மனதுக்குள் ஏக இறைவனை வணங்குவோர் பலரும் உள்ளனர்.

suvanappiriyan said...

//தருமி போன்ற நாத்திகர்கள் முதுகில் குண்டு கட்டிக் கொண்டு தானும் செத்து மற்றவர்களையும் சாகடிக்கமாட்டார்கள், மத நம்பிக்கையாளர்கள் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் மூளைச் சலவையால் அதைச் செய்யக் கூடும்.//

ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் லட்சக் கணக்கில் கொல்லப்பட்டார்களே! அவர்கள் நாத்திகர்கள் இல்லையா? மணிப்பூர் நாகாலாந்து போன்ற பிரதேசங்களில் நிகழும் வன்முறையை செய்வது யார் சார்? ஆக எங்குமே தவறாக வழி நடத்தப் பட்டால் எந்த மார்க்கமும் தவறாக சித்தரிக்கப்படும்.

//உங்களால் மாற்று மதத்தினரிடம் நட்புக் கொள்ளும் பொழுது அவர்கள் நாளைக்கு நரகத்துக்குப் போகிறவர் என்கிற தாழ்வான எண்ணம் இருக்கலாம், தருமியிடம் இப்படிப் பட்ட வீணான எண்ணங்கள் இருக்காது. //

தவறு. நான் நாத்திகத்தில் இருக்கும் தருமி, கோவி கண்ணன் போன்றவர்களுக்கு உண்மையை விளக்கி அவர்களையும் சொர்க்கத்தில் பிரவேசிக்க வைக்கலாம் என்று உண்மையிலேயே எண்ணுகிறேன்.

அடுத்து ஏக இறைவனை ஒத்துக் கொண்டு முகமது நபியை இறைத்தூதராக ஒருவர் ஏற்றுக் கொண்டால் அது போதும். மற்ற செயல்களை செய்யாவிட்டாலும் இந்த இரண்டு உறுதி மொழிகள் எடுத்ததாலேயே சொர்க்கத்துக்கு சென்று விட முடியுமே!

விஜய் said...

//இந்தியா முதற்கொண்டு பல தூதர்கள் வந்ததை நம்ப வேண்டும். அதில் கடைசியாக முகமது நபி இறைவனால் அனுப்பப்பட்டார் என்று நம்ப வேண்டும்//

இதை என்னால் நம்பவே முடியவில்லை. அப்படியென்றால் எனக்கு நரகம் நிச்சயம். நன்றி.

Nellai Premkumar said...

//இஸ்லாம் சொல்லும் அனைத்து இறை சட்டங்களும் நம் பாரத மண்ணிலும் முன்பு இருந்தது. பின்னால் வந்த ஆட்சியாளர்கள் தங்களது மத கருத்தை திணித்ததால் உண்மையை .ழந்தோம்//

இஸ்லாமில் ஒன்றும் புதிதாக இல்லை என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி சுவனப்ரியன். ஆட்சியாளர்கள் தங்கள் கருத்தை திணித்து இருக்கலாம். ஆனால் அவை திணிப்பதற்கு முன்பு இருந்தவை எதுவும் அழிந்து விடவில்லையே.

//ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது நம் மண்ணுக்கே உரிய புராதன கொள்கை. அது சிதைந்ததால்தான் நான் நெற்றியில் பிறந்தேன், நீ தொடையில் பிறந்தாய் என்று வருணங்களை கொண்டு வந்தனர். இவ்வாறு சாதி வேறுபாடு தலை தூக்கியதால்தான் எனது முன்னோர்கள் இந்து மதத்தை தலை முழுகினார்கள்.//

உங்களை போல் சொந்த நாட்டில் எதுவும் இல்லை என்று அடுத்த நாட்டு கொள்கைகளுக்கு கொடி பிடிப்பவர்கள அப்போது இருந்திருக்கலாம் சுவனப்ரியன். அவர்களால் இந்த வர்ண பேதங்கள் வந்திருக்கலாம். ஆனால் வரும் காலங்களில் இந்த நிலை மாறும். மாறுதல் ஒன்றுதானே மாறாதது.

//இவ்வாறு சாதி வேறுபாடு தலை தூக்கியதால்தான் எனது முன்னோர்கள் இந்து மதத்தை தலை முழுகினார்கள்.//

அது தான் தலை முழுகிவிட்டீர்கள் அல்லவா. பிறகு எதற்கு இந்து மதத்தில் அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது என்று நொட்டை நொள்ளை சொல்லவேண்டும். உங்கள் வேலைகளை பார்த்துகொண்டு போகலாமே. பெரும்பாலான எப்படி மதம் மாறுகிறார்கள் என்று தெரியும் சுவனப்ரியரே. வெளிநாட்டு வேலை, நல்ல வாழ்க்கை. அழகான பெண்ணை திருமணம் செய்து வைக்கிறோம் என்று மதம் மாற்றபடுபவர்களை கண் முன்னே பார்த்து கொண்டுதானே இருக்கிறோம். தயவு செய்து அப்படி எல்லாம் இல்லை என்று கூறாதீர்கள். எனக்கு தெரிந்து இது போல மதம் மாறியவர்களை வைத்து தான் கூறுகிறேன்.

//என்னை சொல்லி விட்டு தற்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? :-)//

நான் ஒன்றும் முகமதுவுக்கு சொம்பு தூக்கவில்லையே. அப்படி ஒரு அவசியமும் எனக்கு இல்லை. அதற்க்கான தேவையும் வராது. உங்களை போன்றவர்களுக்கு தான் அது தேவை அதை தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கூட்டத்தில் என்னை ஏன் சேர்க்கிறீர்கள். எனது நாட்டில் உள்ள மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை விட முகமது ஒன்றும் புதிதாக சொல்லிவிடவில்லை. மேலும் நீங்கள் அவரை பெரிய இவராக நினைத்து கொண்டிருக்கலாம். ஆனால் எனக்கு எந்த வகையிலும் அவர் ஒரு உயர்ந்த மனிதராக தெரியவில்லை.

suvanappiriyan said...

//உங்களை போல் சொந்த நாட்டில் எதுவும் இல்லை என்று அடுத்த நாட்டு கொள்கைகளுக்கு கொடி பிடிப்பவர்கள அப்போது இருந்திருக்கலாம் சுவனப்ரியன். அவர்களால் இந்த வர்ண பேதங்கள் வந்திருக்கலாம். ஆனால் வரும் காலங்களில் இந்த நிலை மாறும். மாறுதல் ஒன்றுதானே மாறாதது.//

எங்கு மாறியது? நேற்று ராமநாதபுரத்தில் சாதி வெறியால் நான்கு தலைகள் உருண்டுள்ளது. சாதி பாகுபாடுகளை தூக்கி பிடித்து பதிவு எழுதிய சின்மயியை கண்டித்த ராஜன் இன்று ஜெயிலில். இன்று வரை எவருமே அர்ச்சகராகலாம் என்பதற்கு கேஸ் நிலுவையில் உள்ளது. படிததால் சாதி வேற்றுமை போய் விடும் என்ற வாதம் வைக்கப்பட்டது. படித்தவர்கள் நிறைந்த இணைய உலகில்தான் சாதி சண்டைகளே அதிகம். எந்த காலத்தில் மாற்றப் பொகிறீர்கள்?

//பெரும்பாலான எப்படி மதம் மாறுகிறார்கள் என்று தெரியும் சுவனப்ரியரே. வெளிநாட்டு வேலை, நல்ல வாழ்க்கை. அழகான பெண்ணை திருமணம் செய்து வைக்கிறோம் என்று மதம் மாற்றபடுபவர்களை கண் முன்னே பார்த்து கொண்டுதானே இருக்கிறோம். தயவு செய்து அப்படி எல்லாம் இல்லை என்று கூறாதீர்கள். எனக்கு தெரிந்து இது போல மதம் மாறியவர்களை வைத்து தான் கூறுகிறேன்.//

http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3

இந்த தளத்தில் சென்று பாருங்கள். போன மாதம் மட்டுமே 20க்கு மேற்பட்டவர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இது ஒவ்வொரு மாதமும் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஊர் விலாசம் போட்டோ முதற்கொண்டு உள்ளது. எதற்காக மாறினார்கள் என்று நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள்.

//மேலும் நீங்கள் அவரை பெரிய இவராக நினைத்து கொண்டிருக்கலாம். ஆனால் எனக்கு எந்த வகையிலும் அவர் ஒரு உயர்ந்த மனிதராக தெரியவில்லை.//

அது உங்களின் விருப்பம். எடுத்து சொல்லலாம். யாரையும் கட்டாயப்படுத்த முடியாதே! கட்டாயப்படுத்த சொல்லி இஸ்லாமும் சொல்லவில்லை.