Followers

Friday, August 07, 2009

விவேகானந்தர்தான் சொன்னார்



பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், “மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால் இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான்” என்றார் விவேகானந்தர்.

இதைக் கேட்ட பசு பாதுகாப்பு பிராச்சாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார். பிறகு சமாளித்துக் கொண்டு “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே” என்றார். சுவாமிஜி லேசாகச் சிரித்தபடி “ஆமாம். பசு நம் தாய்தான். எனக்குப் புரிகிறது. வேறு யாருதான் நம்மைப் போன்ற இவ்வளவு புத்திசாலிகளான பிள்ளைகளைப் பெற முடியும்” என்றார்.

(ஆதாரம்: ‘எனது சிந்தனைகள் - விவேகானந்தர்')

12 comments:

மு. மயூரன் said...

நன்றி.

Anonymous said...

பசு மாடும் பசு மாட்டின் மூத்திரமும்
(பஞ்ச கவுமியம்) புனிதம்.

ஆனால் அந்த மாட்டைப் பராமரிப்பவனும்,பால் கறந்து தருபவனும் தீண்டத் தகாதவர்கள்.
தொட்டால் தீட்டு.
விவேகானந்தரையாவது ஒழுங்காப்
படியுங்கப்பா!

Unknown said...

சிரிக்கவும் சிந்திக்கவும். அருமை

suvanappiriyan said...

வருகைபுரிந்து கருத்தை பதித்த மயூரன், சுல்தான், அனானி போன்றோருக்கு நன்றிகள்.

பசு மாட்டைப் பராமரிக்கிறேன் என்று கிழட்டு மாடுகளை சரியான தீவனமும் கொடுக்காமல் வளர்க்கிறார்கள். இதனால் அங்கேயே இறந்த பசுக்களும் உண்டு. ஏழை விவசாயி இனி இந்த மாட்டை வைத்து பால் கறக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து விற்க சென்றால் அங்கும் சென்று இந்த பசு பக்தர்கள் பிரச்னை பண்ணுகிறார்கள். வட மாநிலத்தில் பசு மாட்டை உணவுக்காக அறுத்ததற்க்காக நான்கு தலித்களை அடித்தே கொன்றுள்ளது ஒரு கூட்டம். விவேகானந்தரின் வார்த்தைக்காவது இனி மதிப்பு கொடுப்பார்களா பார்ப்போம்.

மு. மயூரன் said...

மாட்டிறைச்சி வெறுப்பு/பசுவதை வெறுப்பு ஊடாக இந்துத்துவமும் பவுத்தமும்(இலங்கை) பண்ணும் அபத்த அநியாயங்கள் தொடர்பில் உங்கள் கரிசனை கண்டு மகிழ்ச்சி. அதே நேரம் இதே அடிப்படையில் முஸ்லிம்களின் பன்றி இறைச்சி மீதான வெறுப்பு தொடர்பாகவும் சிந்திக்க வெண்டும்.
இங்கே பன்றி இறைச்சி விற்பனை நிலையங்களை முஸ்லிம்கள் வாழும் பகுதி/அருகாமையில் வைக்கமுடியாமல் வன்முறைகூட பிரயோகிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.

பன்றி இறைச்சி உலகின் கணிசமானளவு மக்களின் உணவாக இருக்கின்ற பொழுது அவ்விறைச்சியை விற்றுப்பிழைப்பதை இஸ்லாமிய நாடுகளும், இஸ்லாம் அமைப்புக்களும் தடுத்தும் தொந்தரவுக்குள்ளாக்கியும் வருதல் அபத்தமானதே.

suvanappiriyan said...

பசுவதையின் பிண்ணனி

'' பசுவதை '' '' பசுவதை '' என்று கூறும் ஆரியர்களின் மூதாதையர்களுடைய பண்டைய காலத்து பிரதான உணவே பசுவின் இறைச்சியாகும். என்பது அதிகமானோருக்குத் தெரியாது. அதேப்போன்று அவர்களுடைய வேதக்கிரந்தங்களில் எங்குமே பசுமாட்டை வணங்க வேண்டுமென்றோ அல்லது அதை அறுத்து உண்ணக்கூடாது என்றோ திட்டவட்டமாக சொல்லப்படவில்லை.
ஆரியர்களுக்கும், குப்தர்களுக்கும் இடையில் நிகழ்ந்து வந்த ஏற்றத் தாழ்வுகளின் காரணமாக ஆரியர்கள் விரும்பி உண்டு வந்த பசுவின் இறைச்சியை தடை செய்வதற்காக குப்த மன்னர்களால் இயற்றப்பட்ட சட்டம் தான் பசுவதை தடுப்புச் சட்டம்.

கி.பி. 200ல் தீண்டாமை இல்லை. கி.பி. 600ல் தீண்டாமை பிறந்தது என்று முடிவு செய்ய முடியும்.

புத்தமதத்தினரும் பிராமணர்களும் தங்களுக்குள் உயர்ந்தது யார் என்ற போட்டி போட்டதால் தீண்டாமை ஏற்பட்டது. குப்தமன்னர்களால் தான் பசுவதை ஒரு குற்றமாக ஆக்கப்பட்டது. ஆதார நூல்: தீண்டப்படாதவர் -டாக்டர் அம்பேத்கர் பக்கம் 168

பிராமணன் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தியது தங்களுக்கு மேல் அந்தசுத்தைப் பெற்றிருந்த புத்தபிட்சுக்களிடமிருந்த உயர் ஸ்தானத்தைப்பறிக்கவே. இழந்த இடத்தைப்பிடிக்க பிராமணர் மாமிசம் உண்பதை விடுவதோடு, மரக்கறி உண்பவர்களாகவும் மாறினார்கள். ஆனால் அவர்களுடைய மனுசட்டம் மாட்டிறைச்சி உண்பதை தடுக்கவில்லை. ஆதாரநூல்: தீண்டப்படாதவர்- டாக்டர் அம்பேத்கர் .பக்கம் 128

அக்னிக்காக குதிரைகள், காளைகள். எருதுகள், மலட்டுப்பசுக்கள், செம்மறியாடுகள் பலியிடப்பட்டன என்று ரிக்வேதம் கூறுகிறது (எக்சு 91.14)

ரிக்வேதத்தின்படி பசுக்கள் வாளாலும் கோடரியாலும் கொல்லப்பட்டன.(72.6)
ஆதார நூல்: தீண்டப்படாதவர்-டாக்டர் அம்பேத்கர். பக்கம் 94

விஷ்ணுவிற்கு குள்ளமான எருதும், வளமான கொம்புள்ள காளையை விரித்ராவை அழித்த இந்திரனுக்கும், கறுப்பு பசுவை புஷனுக்கும், செம்பசுவை ருத்ரனுக்கும் பலியிடவேண்டும். (தைத்திரிய பிராமணா)
ஆதார நூல்: தீண்டப்படாதவர்- டாக்டர் அம்பேத்கர் .பக்கம் 95

1870ல் பசுவந்தணை என்கிற திருநெல்வேலி மாவட்ட கிராமத்தில் ரெட்டியார் ஒருவருக்கு குழந்தைப்பேறு இல்லாது போகவே பசுவை அறுத்து பிராமணர்களை வரவழைத்து விருந்துக்கொடுத்தார் அதில் பசுவின் தொப்புள் மாமிசத்தை பிராமணர் உட்பட மற்றவர்களும் உண்டது தெளிவாகப் பதிவு ஆகி இருக்கிறது. அந்த பிராமணர்களின் வழித் தோன்றல்களை நேரில் சந்தித்த ஒருவரும் இதை உறுதிப்படுத்தினார்.

ஆதார நூல்: சோமயாகப் பெருங்காவியம்

Barari said...

MR MAYUR. MUSLIMKAL PANDRI IRAICHCHIYAI UNNA MAATTAARKAL.ANAL ATHAI VIRPPAVARAIYO ALLATHU THINBAVARAIYO POI YAAR THADUKKIRAARKAL.THAVARAANA THKAVAL.PANDRIYAI ARUTHTHU MUSLIMKAL VANANGUM IDATHTHILUM VAZUM IDATHTHILUM THEVAIYILLAMAL MAYURAN PONDRA R.S.S.ATKAL VEESUM BOTHUTHAAN PIRATCHCHINAIKAL VARUKIRATHU.KAAVI MAYURAN SINTHIKKA VENDUKIREN.

suvanappiriyan said...

திரு பராரி!

//MR MAYUR. MUSLIMKAL PANDRI IRAICHCHIYAI UNNA MAATTAARKAL.ANAL ATHAI VIRPPAVARAIYO ALLATHU THINBAVARAIYO POI YAAR THADUKKIRAARKAL.THAVARAANA THKAVAL.//

உங்கள் வாதத்தை ஒத்துக் கொள்கிறேன்.

//MAYURAN PONDRA R.S.S.ATKAL VEESUM BOTHUTHAAN PIRATCHCHINAIKAL VARUKIRATHU.KAAVI MAYURAN SINTHIKKA VENDUKIREN.//

உங்கள் கருத்தில் நான் மாறுபடுகிறேன். மயூரன் அவர்களை கடந்த இரண்டு வருடங்களாக இணையம் மூலம் அறிவேன். அவர் ஒரு பகுத்தறிவாதி. கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். எனவே அவரை காவி சிந்தனை உடையவராக நான் பார்க்கவில்லை. அவர் கேட்கும் கேள்விக்கு தக்க பதிலை அளிப்பதுதான் சிறந்தது. இரண்டு மூன்று மணிகளுக்கு பிறகு மயூரனுக்கு தக்க பதிலை அளிக்கிறேன்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

மயூரன்!

//இங்கே பன்றி இறைச்சி விற்பனை நிலையங்களை முஸ்லிம்கள் வாழும் பகுதி/அருகாமையில் வைக்கமுடியாமல்//

முஸ்லிம்கள் பன்றிக் கறியை சாப்பிடுவதில்லை. பிறகு அவர்கள் வசிக்கும் பகுதியில் பன்றிக் கறி விற்பது கடைக்காரருக்கே நஷ்டமல்லவா!

நண்பர் பராரி கூறியது போல் பன்றி இறைச்சி விற்பதையோ அல்லது வளர்ப்பதையோ எந்த முஸ்லிமும் தடுப்பதில்லை. அடுத்து பன்றிக் கறி சாப்பிடாமல் இருப்பதால் வரும் நன்மைகளை பார்ப்போம்.

1.இன்று இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவரின் எண்ணிக்கை நான்காகி விட்டது. எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வேறு பயமுறுத்துகிறார்கள். இதற்க்கெல்லாம் மூலகாரணம் மெக்ஸிகோ நாட்டின் ஒரு பன்றித் தொழுவம். அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பரவி பிறகு இன்று இந்தியாவையும் பிடித்து ஆட்டுகிறது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பயணித்தவர்கள். பன்றிக்கறி சாப்பிடாமல் இருந்திருந்தால் பன்றிகளை தொழுவத்தில் வளர்த்திருக்கவும் மாட்டார்கள்: 'ஸ்வைன் ஃப்ளூ' என்ற நோயால் நம்மை பயமுறுத்தியிருக்கவும் மாட்டார்கள்.

2. ஆட்டிறைச்சியை வேக வைக்க அரை மணி எடுத்துக் கொண்டால் பன்றிக் கறியை வேக வைக்க ஒரு மணி நேரம் தேவைப்படும். அப்பொழுதுதான் பன்றியின் மாமிசத்தில் உள்ள கிருமிகள் சாகின்றனவாம்.

3. மற்ற மிருகங்களெல்லாம் இலை, தழை, மாமிசம் என்று சாப்பிடும்போது பன்றி மட்டும் தனது பிரதான உணவாக மலத்தையே சாப்பிடுகிறது. இதனை அறத்து சாப்பிட நமக்கு மனது வருமா! உவ்வ்வே.....

அடுத்து பன்றியின் மாமிசம்தான் இஸ்லாத்தில் தடையேயொழிய முழு பன்றி இனமும் அல்ல. தற்போதய ஆராய்ச்சியில் பன்றியின் இதயம் மனிதனின் இதயத்தோடு ஒத்துப் போவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். பிற்க்காலத்தில் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் இதயம் மனிதனுக்குக் கூடப் பொருத்தப்படலாம். இதை எல்லாம் இஸ்லாம் தடை செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து தலைப்புக்கு சம்பந்தமில்லாத கேள்வி: யாழ்,வவுனியா, ஊவா நகரசபை தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. தமிழ் மக்களுக்கு ராஜபக்ஷேயின் மேல் சிறிது நம்பிக்கை வந்திருப்பதுபோல்தான் தெரிகிறது. உங்கள் கருத்து என்ன?

படகோட்டி said...

பன்றி இறைச்சியை உண்பது இஸ் லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பன்றி உடலமைப்பு ஏறக்குறைய மனித உடலமைப்பைப் போன்றே உள்ளது என்று யாராவது அறிகிறீர்களா? அதன் இரத்தம், அதன் இருதயம், நோய்த்தாக்குதலுக்கு தரும் எதிர்ப்பு என்று அத்தனை ஆராய்ச்சிகளும் மனித உடலை ஒத்திருக்கின்றன. பன்றியைச் சாப்பிடுவது மற்றொரு மனித உடலைச் சாப்பிடுவது போல. ம்யூட்டேஷன் எனப்படும் உருமாறி மாறி வரும் வியாதிகள் இவ்வாறானவகையில் ஏற்படக் காரணமாயிருக்கின்றன. மேலும் குணாதிசயங்களும் பாதிக்கப்படுகிறது இதனைச் சாப்பிடுவோர் சமூக மத்தியில் கொடூர வகையான குற்றங்கள் அதிகரிக்கின்றன.

suvanappiriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு படகோட்டி!

suvanappiriyan said...

இந்த உலகில் தமிழினம் தன் உயிருக்கும் உரிமைக்கும் காப்பின்றிக் கலங்கி நிற்கும் இந்தச் சூழலில்தான் இந்தியாவின் விடுதலை நாள்- சுதந்திர தினம் – ஆட்சியாளர்களால் கொண்டாடப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு மிட்டாயும், பணியாளர்களுக்கு விடுமுறையும் தவிர இந்த விடுதலை நாளில் மகிழ்ச்சி கொள்ள என்ன இருக்கிறது?
1947 ஆகஸ்டு 15 இந்திய விடுதலை நாள் என்பது தமிழர்கள் மீதான ஆதிக்கம் ஆங்கிலேயர் கையிலிருந்து இந்தியப் பார்ப்பன – பனியாக்களின் கைக்கு மாற்றித் தரபட்ட நாளே தவிர வேறல்ல; எனவே இது துக்க நாள் என்று அன்றே அறிவித்தார் தந்தை பெரியார். அவர் கூறியதே உண்மை என்பதைக் கடந்த் அறுபத்திரண்டு ஆண்டு கால வரலாறு மெய்ப்பிக்கிறது.
ஆம், அன்றும் இன்றும் ஆகஸ்டு 15 தமிழர்களுக்குத் துக்க நாளே!
சுதந்திர இந்தியாவில் தீண்டாமை ஒழியவில்லை. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைகள் ஒழியவில்லை. வெண்மணியும் விழுப்புரமும் ஊஞ்சனையும் மேலவளவும் தாமிரவருணியும் தாழ்த்தப்பட்ட மக்களின் குருதியில் பாரத மாதா திரும்பத் திரும்பக் குளித்தெழும் தொடர் நிகழ்வின் சில புள்ளிகளே அல்லவா?
ஒடுக்குண்ட மக்களின் சமூக நீதியை நிலைநாட்ட முடிந்ததா சுதந்திர இந்தியாவால்? இன்றளவும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற உயர் தனிக் கல்வி நிறுவனங்கள் பார்ப்பன மேலாதிக்கக் கோட்டைகளாகவே இருந்து வருகின்றன.
உழபவனுக்கு நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை ‘இடதுசாரிகளே’ மறந்து போய் விட்டார்கள். உலகமயத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று கருதும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போன்றவர்கள் ‘டாடாவுக்கே நிலம் சொந்தம்’ என்ற புதிய முழக்கத்தோடு புறப்பட்டிக்கிறார்கள். இப்போது சிவப்புப் பொருளியலைக் கைவிட்டு சிறப்புப் பொருளியலைத் தழுவியுள்ளர்கள். எல்லாம் நாற்காலி அரசியல் செய்த மாயம்! இந்துத்துவ பாசக, இந்தியத் தேசிய காங்கிரசு, இடதுசாரி முன்னணி... எல்லாரும் இந்திய வல்லாதிக்கச் சேவையில் கைகட்டி நிற்கக் காண்கிறோம்.
தமிழ்நாட்டில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று கொட்டி முழக்கி அரசியல் வளர்த்த திராவிட இயக்கம் இப்போது தில்லி வல்லாதிக்கத்தின் தரகு முகவாண்மையாகச் சீரழிந்து விட்டது. கொள்கையை வேட்டி என்றும், பதவியை மேல்துண்டு என்றும் வர்ணித்தவர் அண்ணா. தம்பி கருணாநிதியோ வேட்டி போனாலும் துண்டுதான் உயிரெனத் துடித்து நிற்கிறார். தமிழினத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்துவதில் அவருக்கும் செயலலிதாவுக்கும் வேறுபாடில்லை.
தமிழ்நாட்டின் உழவும் நெசவும் சுதந்திர இந்தியாவில் பாழ்பட்டுக் கிடக்கின்றன. பன்னாட்டுக் குழுமங்களின் சுரண்டல் கொள்ளை நம் காற்றையும் மண்ணையும் கெடுத்து வருகிறது. நாம் உண்ணும் உணவையும் குடிக்கும் நீரையும் நஞ்சாக்கி வருகிறது.
இதற்கொரு முடிவு கட்ட வேண்டுமானால்,. விடுதலைக்காகத் தமிழர்கள் ஒன்றுபடுவதற்குத் தடையாக நிற்கும் சாதியத்தை எதிர்த்துப் போராட வேண்டும். தமிழ்த் தேசியமும் சமுக நீதியுமான குறிக்கோள்களுக்கான போராட்டமே நமக்கு உண்மையான விடுதலையைத் தரும். அந்த விடுதலைக்கான போராட்டத்திற்கு அணி திரள்வோம், தமிழர்களே!
தமிழர் விடுதலைப் போர் முழக்கம்! சமூக நீதித் தமிழ்த் தேசம்!

-தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்