Followers

Tuesday, January 12, 2016

இந்து - இஸ்லாம் - கிறித்தவம் - ஓர் ஒப்பீடு



இந்துத்வா அடிப்படையில் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் பிஜேபி அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு 'இந்து' என்பதன் விளக்கம் தெரியாதாம். சரி நமக்கு தெரிந்ததை சொல்லி வைப்போம்....

இந்து - இஸ்லாம் - கிறித்தவம் - ஓர் ஒப்பீடு

இந்து என்னும் பெயரானது இடைக் காலத்தில் இடப்பட்ட பெயராகும் என்று சுவாமி விவேகானந்தரும், நேருவும், சங்கராச்சாரியாரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். ஆதியிலே அது சனாதன தர்மம் என்றும் ஷஷ்வத் தர்மம் ஸ்வ தர்மம் என்றும் அழைக்கப் பட்டுவந்தது.

சனாதன என்னும் சமஸ்கிரத சொல்லின் பொருள் நிலையானது, தொடர்ச்சியானது, தொன்மையானது என்பதாகும்.ஷஷ்வத் என்பதற்கு வானையும் பூமியையும் உயர்ந்த எண்ணங்களோடு ஒன்றினைக்கும் நேர்வழி என்று பொருளாகும்.இந்த சனாதனத்தையும் ஷஷ்வத்தையும் ஒன்றினைத்தால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும்.

இறைவன் குர்ஆனிலே இஸ்லாத்தை 'தீனுல் கய்யும' என்று குறிப்பிடுகிறான். 'தீனுல் கய்யும்' என்ற அரபி வார்த்தையைத் தமிழ்ப் படுத்தினால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும். இதன் மூலம் இரண்டு மதத்தின் பெயர்களும் ஒரே விளக்கத்தைக் கொடுக்கின்றன என்று நம்மால் அறிய முடிகிறது.

ஸ்வதர்மம் என்று பகவத் கீதை (18: 45: 47) குறிப்பிடுகிறது.

ஸ்வப்ஹவ நியாக் கர்மம் - 'மார்க்கம் இயற்கையானது. பெற்றோர்களது அல்ல' என்பது இதன் பொருள்.

இதையே தான் 'தீனுல் ஃபித்ரத்' என்று 'இயற்கையான முறையிலான மார்க்கம்' என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

இதிலிருந்து சனாதன தர்மம், ஷஷ்வத் தர்மம், ஸ்வதர்மம், என்பதெல்லாம் சமஸ்கிரத மொழியிலமைந்த இஸ்லாத்தின் மறு பெயர்கள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஓரிறைக் கொள்கை!

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் மந்திரத்தை அறியாத தமிழர் எவரும் இல்லை எனலாம். 'நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள் இருக்கையில்' என்ற சித்தர்கள் பாட்டையும் இன்றும் நாம் மறந்து விட வில்லை. எனவே ஆரியர்கள் சனாதன தர்மத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பே திராவிடர்களாகிய நம் முன்னோர்கள் ஒரே இறைவனை வணங்கியும், சிலை வணக்கத்திற்கு எதிரான கொள்கையையும் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.
ஆரியர்களின் வணக்க வழிபாடுகளும் ஆதியில் ஓரிறையைச் சார்ந்தே இருந்துள்ளது. பிற்பாடு ஏற்பட்ட வழக்கம் தான் பல தெய்வ வணக்கம் என்பதை முன்பு பல ஆதாரங்களோடு பார்த்தோம்.

இஸ்லாத்தின் கடவுள் கொள்கை 'லா இலாஹா இல்லல்லாஹ்' இதன் பொருள் 'வணக்கத்துக்குரியவன் இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பதாகும்.

'அல்லாஹ்' என்றதும் ஏதோ அரபு நாட்டுக் கடவுள். முஸ்லிம்களின் குல தெய்வம் என்று எண்ணி விட வேண்டாம். இந்த பிரபஞ்சத்தை படைத்து காத்து அருள் செய்யும் மாபெரும் ஆற்றலுடையவனை தமிழிலே கடவுள் என்றும், ஆங்கிலத்திலே காட் என்றும், ஹிந்தியில் பகவான் என்றும், பார்ஸியிலே குதா என்றும், ஹீப்ரூவிலே எலோய் அல்லது எலோஹிம் என்றும், அராமிக்கில் ஏலோய் அல்லது எல்லோய் என்றும் அழைப்பது போல் அரபி மொழியில் அல்லாஹ் என்று அழைக்கிறோம்.

முஸ்லிம்கள் ஒரே இறைவனை 'அல்லாஹ்' என்னும் பெயர் கொண்டு அழைப்பதற்கு காரணம் அரபு மொழி விசுவாசத்தால் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் என்னும் பெயர் ஏக இறைவனால் அங்கீகரிக்கப் பட்ட ஒரு பெயராகும். இன்னும் அனைத்து மத வேதங்களில் அறிமுகப் படுத்தப் பட்டு அங்கீகரிக்கப் பட்ட பெயராகவும் இருக்கிறது.

இந்து மதத்தின் நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தின் இறுதியில் 'அல்லாஹ் உபநிஷர்' என்னும் தலைப்பில் ஒரு உபநிஷத்தே இடம் பெறுகிறது. அதில் ஒரு சுலோகம் கூறுகிறது.

'இல்லாம் தபர இல்லாம் இல்லல்லே. இல்லல்லாம் ஓமல்லாம் இல்லல்லாம் தியான நிஸ்வரூபாயா'

இதன் பொருள் : 'அல்லா - அந்த ஏக தெய்வத்திற்கு யாதொரு இணையுமில்லை. சத்திய தெய்வத்தின் ஓம்கார சப்தத்தை வாழ்த்துங்கள்'

பைபிள கூறுகிறது

'அல்லேலூயா' கர்த்தருடைய ஊழியக் காரரே துதியுங்கள். கர்த்தருடைய நாமத்தை துதியுங்கள்.'
113 : 1 - சங்கீதம்

ஹிப்ரு மொழியில் கர்த்தருடைய திரு நாமம் 'அல்லேலூயா' என்று பைபிள் கூறுகிறது. கிறித்தவர்கள் 'அல்லேலூயா' என்று ஜெபிப்பதைப் பார்க்கிறோம்.

'அல்லேலூயா' எனும் பெயரின் இறுதியில் இடம் பெறும் 'யா' என்பது விளிவேற்றுமை சொல்லாகும் யா = (ya)…

'அல்லேலூயா' என்பதை 'யா அல்லோலு' என்று எழுதினாலும் கூறினாலும் பொருள் மாறுவதில்லை.

ஹிப்ரு மொழி என்பது அரபு மொழிக்கு சகோதர மொழியாகும். ஹிப்ரு மொழியிலான 'அல்லேலூயா' அல்லது 'யா அல்லேலு' என்பதற்கு இணையான அரபு மொழி வார்த்தை 'யா அல்லாஹ்' என்பதாகும்.

கிறித்தவர்கள் ஏகஇறைவனை 'யாஅல்லேலு' என்றழைக்கிறார்கள். முஸ்லிம்கள் அதே ஏக இறைவனை 'யா அல்லாஹீ' என்றழைக்கிறார்கள்.

இன்னும் அல்லாஹ் என்னும் சொல்லுக்கு ஆண்பால், பெண்பால கிடையாது. பன்மை கிடையாது. ஆனால் அல்லாஹ் என்னும் சொல்லுக்கு மாற்றமாகப் பயன் படுத்தப்படும்எல்லா சொற்களுக்கும் பண்மையும் பாலும் கற்ப்பிக்கப் படுவதைக் காண்கிறோம். கடவுள் என்பதை கடவுளர்கள் என்றும் ஆண்டவன்என்பதை ஆண்டவர்கள் என்றும GOD – GODS – GODDESS என்றும் கூறுவதைப் பார்க்கிறோம். ஆகவே ஏக இறைவனின் தனித்துவத்தைக் காட்ட அந்த இறையை அல்லாஹ் எனும் பெயர் கொண்டு அழைக்கிறோம்.

அந்த இறைவன் எங்கிருக்கிறான்?

ஏழு வானங்களுக்கு அப்பால் அவனுடைய சிம்மாசன (அர்ஷ்) த்தின் மீதிருக்கிறான் என்று இஸ்லாம் கூறுகிறது.

அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான்.
20 : 5 - குர்ஆன்

அவனுடைய குர்ஸியும் வானங்களிலும் பூமியிலும் பரவி இருக்கிறது.
2 : 255 - குர்ஆன்

'அவனுடைய குர்ஸி என்பது இறைவனின் பாதத்தின் ஸ்தலமாகும். அர்ஷ் என்பதன் பெறுமதி பற்றி இறைவனைத் தவிர வேறு எவரும் அறிய மாட்டார்கள்.' என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : தாரகுத்னீ, ஹாகிம்

கிறித்தவ வேதமான பைபிள் கூறுகிறது

'கர்த்தருடைய சிம்மாசனம் பரலோகத்தில் இருக்கிறது.'
11 : 4 - சங்கீதம்

இந்து மதம் கூறுகிறது

எங்கு சென்று எதுவும் திரும்புவதில்லையோ அது என்னுடைய உயர்ந்த உறைவிடம் அதை சூரியன் பிரகாசிக்கச் செய்வதில்லை. சந்திரனும் இல்லை. அக்கினியும் இல்லை.
15 : 6 - பகவத் கீதை

மூன்று மார்க்கங்களும் இறைவனின் இருப்பிடத்தைப் பற்றிய செய்தியை ஒன்றாகவே சொல்கின்றன.

இத்தகைய உயர்வான இடத்தில் இருக்கும் ஏக இறைவனை யாரும் கண்டதுண்டா?

'என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது'
7 : 143 - குர்ஆன்

'பார்வைகள் அவனை அடைய முடியாது'
6 : 103 - குர்ஆன்

'தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை'
1 : 18 - யோவான்

'அவன் மகாத்மா காணுதற்கரியவன்'
7 : 19 - பகவத் கீதை

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

'அர்ஜீனா! சென்று விட்டனவும் நிகழ்வனவும், இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன். ஆனால் என்னை எவனும் அறியான்.'
7 : 25,26 - பகவத் கீதை

மூன்று மார்க்கங்களுமே இறைவனைக் காண முடியாது. அதற்குரிய சக்தி நம் கண்களுக்கு கொடுக்கப் பட வில்லை என்று கூறுகிறது. ஆனால் மூன்று மதங்களிலும் உள்ள மத குருமார்களில் சிலர் இறைவனை என் கண்ணால் பார்த்தேன் என்றெல்லாம் அவ்வப்போது புருடா விடுவார்கள். பாவம் அவர்களுக்கும் வயிற்றுப் பிழைப்புக்கு மக்களிடம் எதையாவது சொல்ல வேண்டும் அல்லவா!

'இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை'
32 : 3 - அதர்வண வேதம்

'யார் இயற்கையை வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்.'
40 : 9 - அதர்வண வேதம்

'அண்டத்தின் முக்கூறு மூலமான மண்ணுலகையும், விண்ணுலகையும் ஆக்கி பொருளனைத்தினையும் தனித்தியங்கி ஆதரவளிப்பவன் அவனே.'
1 : 15 : 4 - ரிக் வேதம்

'அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்.'
10 : 190 : 3 - ரிக் வேதம்

'ஒப்பாரிக்கு உலகை ஆள்பவன், இயங்கும் இயங்காப் பொருள்களுக்கும் தலைவன். ஆன்மாவுக்கு அகத் தூண்டல் அளிப்பவன்.'
1 : 89 : 5 - ரிக் வேதம்

'வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்'
8 : 1 : 1 - ரிக் வேதம்

'அந்த வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவன்தான்'
6 : 45 : 16 - ரிக் வேதம்

'இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பப் பட்ட இறைவனின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹமத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்' என்று மேரியின் மகன் ஏசு கூறியதை நினைவூட்டுவீராக.

61 : 6 - குர்ஆன்

ஏசுநாதர் தன் மக்களிடம் 'தனக்குப் பிறகு அகமது என்ற பெயரில் ஒரு தூதர் வர இருக்கிறார்' என்று போதித்ததை இறைவன் இங்கு கோடிட்டுக் காட்டுகிறான்.

Shwetashvatara Upanishad Chapter 4 verse 20

It is mentioned in Shwetashvatara Upanishad

“na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam”.
“His form cannot be seen, no one sees Him with the eye”.
(Shwetashvatara Upanishad 4:20)

(The Principal Upanishad by S. Radhakrishnan pg. 737)
(And in Sacred books of the East Volume 15, the Upanishad part II, Page no. 253)

BHAGWAD GEETA 7:20

The most popular amongst all the Hindu Scriptures is the Bhagwad Geeta.

Bhagwad Geeta mentions
“Those whose intelligence has been stolen by material desires worship demigods” that is “Those who are materialistic, they worship demigods” i.e. others as deities besides the True God.
(Bhagwad Geeta 7:20)

It is mentioned in Bhagavad Gita
“He who knows Me as the unborn, as the beginning-less, as the Supreme Lord of all the worlds...”
(Bhagwad Geeta 10:3)

YAJURVEDA
Vedas are the most sacred amongst all the Hindu Scriptures. There are principally 4 Vedas: Rig Ved, Yajur Ved, Sam Ved, and Atharva Ved.

i. Yajurveda Chapter 32, Verse 3

It is mentioned in Yajurveda
“na tasya pratima asti”
“There is no image of Him”

It further says, “as He is unborn, He deserves our worship”.
(Yajurveda 32:3)

(The Yajurveda by Devi Chand M.A. pg. 377)

ii. Yajurveda Chapter 40 Verse 8

It is mentioned in Yajurveda Chapter 40 verse 8
“He is bodiless and pure”.
(Yajurveda 40:8)

(Yajurveda Samhita by Ralph I. H. Griffith pg. 538)

iii. Yajurved Chapter 40 Verse 9

It is mentioned in Yajurved
“Andhatma pravishanti ye assambhuti mupaste”
“They enter darkness, those who worship natural things.”
E.g. worship of natural elements air, water, fire, etc.
(Yajurveda 40:9)

It further continues and says
“They sink deeper in darkness those who worship sambhuti i.e. created things”
E.g. created things such as table, chair, idols, etc.

(Yajurveda Samhita by Ralph T. H. Griffith pg. 538)



மேற்கண்ட வேத வசனங்களின் மூலம் நம் அனைவரையும் படைத்தது ஒரே இறைவன் தான் என்ற முடிவுக்கு வருகிறோம். எனவே நம் கைகளால் படைத்தவைகளை விடுத்து நம்மை படைத்த அந்த ஒரே இறைவனையே வணங்குவோம். இறப்புக்குப் பிறகு சுவனத்தையும் பரிசாக பெறுவோம்.

தகவல் உதவிக்கு நன்றி
ஜாகிர் நாயக், அபு ஆசியா

என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்.

2 comments:

Dr.Anburaj said...

இதிலிருந்து சனாதன தர்மம், ஷஷ்வத் தர்மம், ஸ்வதர்மம், என்பதெல்லாம் சமஸ்கிரத மொழியிலமைந்த இஸ்லாத்தின் மறு பெயர்கள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது.

இஸ்லாம் காலத்தால் பிந்தியது.சனாதன தர்மம், ஷஷ்வத் தர்மம், ஸ்வதர்மம் ஆகிய பெயா்கள் காலத்தால் ரொம்பவும் முந்தியது.சாித்திரம் எட்டாத காலத்திற்கு முற்பட்டது. ஆகவே சனாதன தர்மம், ஷஷ்வத் தர்மம், ஸ்வதர்மம்,என்ற கருத்துக்கள் அரேபியாவில் இஸ்லாம் என்று 1400 வருடங்களுக்கு முன்பு போதிக்கப்பட்டது எனபதுதான் சாியானது.

சானாதன தா்மம் சிலை வழிபாட்டு கண்டிக்கவில்லை. தவறு,பாவம் என்றுச் சொல்லவில்லை.நான் ஒரு இந்து. என் அளவிற்கு இந்து மதத்தை படித்தவரோ - -உணா்ந்தவரோ திரு.ஜாகீா் நாயக் அல்ல. வாா்த்தை ஜால விஷமம் செய்கின்ற குறும்புக்காரா்.

உலகின் பெரும் பகுதிக்கு ஆன்மீக வெளிச்சம் கலாச்சாரம் பண்பாடு அளித்தது இந்துஸ்தானம் ஆகும்.

அரேபியாவில் இருந்து பெட்ரோல் வரட்டும்.சமயம் தேவையில்லை.அது உள்நாட்டு சரக்காக நிறையவே உள்ளது.

அரேபியா சமயம் இருக்கும் பெரும்பான்மையான இடங்களில் மனித இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது.முகம்மது சீா்திருத்தம் என்ற பெயாில் போா்கள் நடத்தி இரத்த ஆறு ஓடக் காரணமாக இருந்தாா்.அவரது சீடா்கள் அரேபிய படையெடுப்புக்கு இசலாம் என்ற பெயா் அளித்து நாடுகளை கொள்ளையடித்து பெண்களை -குமுஸ் பெண்களாக்கி வைப்பாட்டிகளாக்கி பெண்களை வியாபாரம் செய்து உலகில் கலாச்சாரம் கெட்டுப்போக காரணமாக இருந்தாா்கள்.பின் பதவி வெறி கொண்டு ஒருவா்க்கு ஒருவா் சண்டையிட்டு முகம்மது நபியின் குடும்பத்தையே வெட்டி கொலை செய்தாா்கள். அந்த வழக்கு இன்னும.ஃ சன்னி - ஷியா முஸ்லீமி் என்று ஈரான் - சவுதி அடிதடியில் நிற்கின்றது.
இந்த கதி இந்தியாவிற்கு வேண்டும் என்று நினைக்கின்றான் ஜாகீா் நாயக்.

Dr.Anburaj said...

இதன் பொருள் : 'அல்லா - அந்த ஏக தெய்வத்திற்கு யாதொரு இணையுமில்லை. சத்திய தெய்வத்தின் ஓம்கார சப்தத்தை வாழ்த்துங்கள்'

ஆதாரஙகளின் விபரங்களைத் தொிவிக்க முடியுமா ?