Followers

Sunday, July 11, 2021

பாகிஸ்தான் - பலுசிஸ்தான்

 பாகிஸ்தான் - பலுசிஸ்தான்


இங்குள்ள ஹிங்க்லாஜ் மாதா மந்திரில் அங்குள்ள இந்துக்கள் தங்களின் மத வழிபாடுகளை எவ்வித அச்சமுமின்றி நிறைவேற்றுகின்றனர்.


அமித்ஸாவும் மோடியும் இவர்களுக்கு குடியுரிமை தருகிறேன் வாருங்கள் என்று கூப்பிட்டு வருடம் ஒன்றுக்கு மேல் ஆகிறது. ஆனால் எவரும் தான் பிறந்த மண்ணை விட்டு வரவில்லை.  அங்கு நிம்மதியாக இருப்பதாலேயே மோடி கொடுக்கும் வாய்ப்பை இவர்கள் பயன்படுத்தவில்லை.


ஒரு வேளை இந்தியா வர விரும்பினால் யோகி போன்ற ஆட்சியாளர் தயவில் வாழ வேண்டி வரும். இங்கு சாதிக்கு ஒரு நீதி கொடுக்கப்படுகிறது. தலித்துக்கு ஒரு நீதி, பார்பனருக்கு ஒரு நீதி என்று செயல்படும் இந்நாட்டை எப்படி இவர்கள் ஏற்பார்கள். மறந்தும் கூட வந்து விட மாட்டார்கள்.






2 comments:

Dr.Anburaj said...

முஸ்லீம்களையும் மற்றவர்களையும் ஏமாற்றும் கலையில் வல்லவா் சுவனப்பிரியன்.
அதுவும் பாக்கிஸ்தான் நாட்டிற்கு வக்கலாத்து வாங்குகிறாா் என்றால் இவரது பாசம் அன்பு பற்று அக்கறை எல்லாம் பாக்கிஸ்தான் நாட்டின் மீதுதான் என்பது உண்மையாகி விட்டது.

ஒருவன் வாழும் ஊரை நாட்டை விட்டு வெளியேறுவது என்னது அப்படிஒன்றும் சுலபமான விசயம் அல்ல. மொழி. . . .வாழ்வாதாரம் என்று பல கேள்விகள் மனதில் எழும்.

இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு சென்று வருதல் என்ற வகையில் அனுமதி பெற்று இந்தியா வந்தவா்கள் பல . . .பல ஆயிரம் பேர்கள் உள்ளார்கள்.
வராதவர்களைப்பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. வாருங்கள்
என்று பிரதமா் திரு.மோடிஜியும் சாணக்கியா் திரு.அமித்ஷா வும்
யாரையும் அழைக்கவில்லை.

அப்படி நீரூபிக்க ஒரு ஆதாரத்தை சுவனப்பிரியன் காட்ட வேண்டும்.

வந்துவிட்டு பாக்கிஸ்தான் போக மாட்டோம் என்று ஒரு கூட்டம் பல இடங்களில் ..பல ஆண்டுகளாக காத்துக் கிடக்கிறது. அவர்களின் பிரச்சனைக்கு தீா்வு காண விசயத்தை கையில் எடுத்திருக்கின்றார்கள். அவ்வளவுதான்.
1)பாக்கிஸ்தானில் இந்துக்கள் முமீன்களாக நடத்தப்படுகின்றார்கள்.
2) 1ம்வகுப்பில் சோ்ந்ததும் அனைத்து இந்துக்களுக்கும் இலவச கல்வி சீருடை ....அனைத்தும் வழங்கி இனிப்பு சாப்பிட மாதம் ரூ.10000 வழங்கப்படுகிறது.
3)இந்துக்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது. எத்தனை பட்டம் பெற்றாலும் எந்த பள்ளியில் கல்லூரியில் சோ்ந்தாலும் இலவசம்தான்.கைசெலவிற்கு மாதம் தொகை வழங்கப்படுகிறது. உதாரணமாக MA படிக்கும் ஹிந்துக்களுக்கு இலவச கல்வியும் உதவித்தொகையாக மாதம் ரூ 250000 வழங்கப்படுகிறது.
4) திருமண உதவித்தொகை ரூ.1000000 வழங்கப்படுகிறது.
5) வீடு கட்ட நிலம் இலவசம். வீடு கட்ட அரசு பங்காக இலவசமாக ரூ.20 லட்சம் அள்ளி கொடுக்கப்படுகிறது.
6)ஹி்நது பெண்கள் திருமணம் செய்ய 15 பவுண் தங்கமும் விருந்து செலவிற்கு ரூ.இரண்டு லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
7) ஹிந்து கோவில் அர்ச்சகா்களுக்கு அரசு கணக்கில் இருந்து மாத ஊதியமாக ரூ.50000 வழங்கப்படுகிறது. விழாக்கள் நடத்த வருடத்திற்கு ரூ 10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
8)1940 உள்ளபதிவேடுகள் படி கோவில் சொத்துக்கள் அனைத்தும் இந்துக்கள் வசம் தான் உள்ளது. அவைகள் நல்லமுறையில் நிா்வாகம் செய்யப்பட்டு இந்து ஆலயங்களுக்கு பல கோடி வருவாய் கிடைக்க அரசு உதவி வருகின்றது.
9)அரசு வேலைகளில் இந்துக்களுக்கு 12 சதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்துக்கள் அரசு வேலைகளில் சேர பல நிறுவனங்கள் சிறப்பு பயிற்சி இலவசமாக அளிக்கின்றன.
10.இந்துக்கள் தொழில் உள்ள தலா ஒரு கோடி வட்டியின்றியும் 50 சதம் மானியத்தோடும் கடன் உதவி வழங்கப்படுகிறது.
11. இந்து இளம் பெண்ககளை யாரும் கடத்தி அரேபிய மத கிழவர்களுக்கு திருமணம் செய்வதுதடை செய்யப்பட்டுள்ளது. அப்படி செய்தவர்கள் அனைவரும் நடுத்தெருவில் வைத்து தூக்கிலிடப்பட்டுள்ளாா்கள்.
12) ஹிந்து பெண்கள் முழு பாதுகாப்பு பெற்றுள்ளார்கள்.எனவே இரவு பகல் எந்த நேரத்திலும் எங்கும் சென்று வரலாம்.
13)இந்துக்களை காபீா்கள் இறைமறுப்பாளா்கள் என்று யாரும் இழிவாக பேசுவது தடைசெ்ய்யப்பட்டுள்ளது.பேசியவர்களுக்கு 10000 சவுக்கடி தண்டனையாக வழங்கப்பட்டு வருகிறது.
15) ஹிந்துக்கள் இறந்தால் எரிக்க ஒரு டன் சந்தன கட்டைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆம்
கழுதை விட்டையில் மணமான நெய் வடிகிறது. நம்புங்கள் நம்புங்கள்.நம்புங்கள்.

vara vijay said...

Balouch people are secular people, they had been not yet affected by JEWEISH AMERCAN SLAVE WAHABIS.