Followers

Friday, April 01, 2011

ஷியாக்கள் ஒரு பார்வை - ஜூபைல் நகரில் நடந்த நிகழ்ச்சி.

ஸஹாபாக்களும் அஹ்லுல் பைத்தும்

தகவல் தந்த சகோ. முஃப்தி அவர்களுக்கு நன்றி!

6 comments:

suvanappiriyan said...

சார்வாகன்!

//மனித சமுதாயம் எந்த கால கட்டத்திலும்,எந்த இடத்திலும்,எல்லா மக்களும் நிம்மதியாக இருந்ததாக காட்ட முடியாது.மனித சமுதாயத்தின் விலங்குகளை உடைக்க பல் உயிர்களை பலி கொடுத்தே முன்னேறியிருக்கிறது.

மதம் என்ற போர்வையில் நடக்கும் ஆக்கிரமிப்புகளும்,கொள்ளைகளும் வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் பார்க்கலாம்.எந்த மதமும் விதி விலக்கு அல்ல.

மதம் என்பது ஒரு தனி மனிதனின் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு மனிதனை(நாட்டை) மத குருக்களும்,மத புத்தகங்களும் வழி நடத்தக் கூடாது.//

உங்கள் வாதப்படி உலகில் நிம்மதியாக வாழ்ந்த சமூக கட்டமைப்பே எங்கும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். உலக மதங்களையும் தூர வைத்து விடுவோம். இவை எல்லாவற்றையும் தவிர்த்து புதிய வாழ்க்கை முறை ஒன்றை தெரிவியுங்களேன். அது எப்படி இருக்க வேண்டும்? யார் அதன் தலைவராக இருக்க வேண்டும். மதங்களை தாண்டி அப்படி ஒரு வாழ்வு முறை வெற்றி பெற்ற நாடு எது? கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்.

//இது சவுதி அரசில் சம்பளம் கூட உங்கள் கடவுச் சீட்டை பொறுத்தே அமையும் என்பதும் உண்மையா இல்லை மறுக்கப் போகிறீர்களா?//

ஒரு நிறுவனத்தில் ஒரு நபர் சம்பளம் பெறுவது அவரின் திறமையைப் பொறுத்தது. இங்கு மதம் தலையிடுவதில்லை. ஒரு நிறுவனத்தின் ஓனர் திறமைக்கேற்ற சம்பளத்தைத்தான் கொடுப்பார். விபத்து என்பது எதிர்பாராத விதமாக நடக்கும் ஒன்று. அதில் சம்பந்தப்பட்டவர்களின் தேவையை அறிந்து உதவுவதுதானே முறை. ஒரு நபர் பெறும் சம்பளத்தையும், பிளட் மணியையும் எப்படி ஒன்றாக பார்க்கிறீர்கள்?

suvanappiriyan said...

சார்வாகன்!

//மதங்களை ஆக்கபூர்வமாக விமர்சிப்பவர் இனையத்தில் மிக குறைவு.இதனை பல் மாறுபட்ட ஒலியில்(சிறிதளவே) ஓதப்படும் குரான்கள் உண்டு என்று முன் பதிவுகளில் காட்டியுள்ளோம்.வார்ஸ் குரான் வட ஆப்பிரிக்க நாடுகளில் பயன் படுத்தப்படுகிரது என்பதற்கு அக்குரானின் மின் பிரதியும் அளித்தோம் மாற்றமில்லாதது என்றால் எப்படி.
குயுஃபிக் எழுத்து முரையில் இருந்து உயிரெழுத்துகளை பிரிக்க கோடு புள்ளி வைத்தார்கள் என்று அறிந்த பிரகும் கை படாமலே கோடு புள்ளி வைக்க முடியுமா?//

திரும்பவும் பழைய வாதத்தையே வைக்கிறீர்கள். குரஆன் புத்தக வடிவில் வரவில்லை. ஒலி வடிவமாகத்தான் குரஆன் அருளப்பட்டது. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் ஓலைச் சுவடிகளில் எழுதிய எழுத்து முறைக்கும் நீங்களும் நானும் பயன்படுத்தும் தற்போதய எழுத்து முறைக்கும் வித்தியாசம் உண்டா? இல்லையா? இதனால் திருக்குறளின் கருத்துக்களில் ஏதாவது மாற்றங்கள் வந்ததா? இல்லையே! இதே அளவு கோலை குர்ஆனுக்கும் வைத்துப் பாருங்கள். குர்ஆனை முழுவதும் மனனம் செய்த எத்தனையோ நபித் தோழர்கள் ஜனாதிபதி உஸ்மான் தொகுத்த குர்ஆனை சரிபார்த்தனர். இதற்காக குழுவே நியமிக்கப்பட்டது. அன்று எவரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

மொழியின் வளர்ச்சிக்காக எழுதும் முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வருவது உலக மரபு.

தருமி!

//உங்கள் முடிவு உங்களுக்கு சரியான முடிவு.
அது போல் கிறித்துவனாக மாறிய ஒருவருக்கும் (எனக்கும் பல காலம்வரை இருந்த நினைப்புத்தான் அது!) அவரது முடிவே சரியான முடிவு என்று இருக்குமல்லவா? பனம்பழமா, பலாப்பழமா ...?//

பலாப் பழத்தை அப்படியே சாப்பிட முடியுமா? மேலே உள்ள முற்களை(ஏசுவையும், ஜிப்ரீலையும், மேரியையும் கடவுளாக்கியது) எடுத்து பலாச் சுலைகளை(ஏசுநாதர் போதித்த போதனைகளை-பவுல் போதித்தவைகளை நீக்கி) எடுங்கள். எனக்கும் தாருங்கள். நானும் சாப்பிடுகிறேன்.

ஆஹா...அப்போது என்ன சுவையாக இருக்கும் தெரியுமா?

suvanappiriyan said...

தருமி,சார்வாகன்!

நீங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் கட்டுரையாளர் எந்த அளவு விபரம் உள்ளவர் என்பதை

இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

suvanappiriyan said...

அனலைஸ்ட் அம்பிக்கு!

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'

குர்ஆன் 6 : 103

இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம்.

'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.

ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380

மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.

'முகம்மதே! 'வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் ' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோசேயிடம் கேட்டுள்ளனர்..'இறைவனைக் கண் முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.

குர்ஆன் 4 :153

'தனது இறைவனின் பெரும் சான்றுகளை அங்கு அவர் கண்டார்'
குர்ஆன் 53:18

இவை எல்லாம் முகமது நபி இறைவனைக் காணவில்லை என்று தெளிவாகக் கூறிக் கொண்டிருக்க இறைவனைப் பார்த்தார் அவருக்கு மனநோய் என்றெல்லாம் தத்துபித்தென்று உளறிக் கொட்டும் அனலைஸ்ட்டைத்தான் ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும். உளறிக் கொட்டுபவருக்குப் பெயர் அனலைஸ்டாம். :-)

suvanappiriyan said...

சார்வாகன்!

//அதாவது முதலில் என்னவாக குரான் இருந்ததோ அதனை சரி பார்க்கவே முடியாது.ஆதரம் இல்லாதது.

ஒரு நம்பிக்கை மட்டும்தானா,இல்லை குரான் ஒலி வடிவிலதான் வழங்கப்பட்டது என்பதற்கு குரானில் இருந்தா,சமகால ஆதாரமாக எதனையாவது காட்டமுடியுமா?//

'இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது'
-குர்ஆன் 29:49
குர்ஆன்வசனங்களை முகமது நபி காலத்திலேயே அபுபக்கர், உமர், உதுமான், அலீ போன்றோர் முழு குர்ஆனையும் மனனமிட்டு இருந்தார்கள். அதையே இறைவன் இங்கு குறிப்பிடுகிறான்.

'முஹம'மதே! உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம். நீர் மறக்க மாட்டீர்'
-குர்ஆன் 87:6
முகமது நபியின் உள்ளத்தில் குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்கிறான். எனவெ சில வசனங்களை மறந்திருப்பார்கள் என்று சொல்லவும் இங்கு இடமில்லை. மேலும் கிட்டத்தட்ட 26 நபித் தோழர்கள் குர்ஆனை மனனம் செய்து உடன் எழுதியும் வைத்தார்கள். அவ்வப்பொது இறங்கும் வசனங்களை தோல்களிலும், எலும்புகளிலும், மரப்பட்டைகளிலும் மேற்சொன்ன நபித்தோழர்கள் குறித்தும் வைத்தார்கள்.

//இந்த குழு சரி பார்த்த விவரங்கள்.எந்த சசுரா யார் யாரிடம் இருந்து பெறப்பட்டது,யார் எழுதியது,எபோது போன்ற விவரங்கள் பாஅதுகாக்கப் பட்டு இருக்கவேண்டும்.
ஹ‌ஃப்சாஅவின் குரானையே உதுமான் அழித்து விட்டார்.இது சந்தேகத்தையே ஏற்படுத்தும்.//

மீண்டும் தவறான தகவல். முகமது நபியின் தோழர்கள் 24 மணி நேரமும் அவருடனே இருந்ததில்லை. காலையில் இருப்பவர் மாலையில் வேலைக்கு சென்று விடுவார். மாலையில் இருப்பவர் காலையில் வேலைக்கு சென்று விடுவார். முறை வைத்து அந்த தோழர்கள் இஸ்லாத்தை கற்றார்கள். இறை வசனம் இறங்கும்போது இந்த தோழர்கள் குறித்து வைப்பார்கள் என்று முன்பே பார்த்தோம். இவ்வாறு குறித்து வைக்கும் போது சில அத்தியாயங்கள் மாத்திரம் இப்னு அப்பாஸிடம் இருக்கும். வேறு சில அத்தியாயங்கள் அபுஹூரைராவிடம் இருக்கும். இன்னும் சில அத்தியாயங்கள் அன்னை ஆயிஷாவிடம் இருக்கும். இஸ்லாம் பல நாடுகளுக்கும் வளர்ந்தவுடன் பல மக்களுக்கும் குர்ஆனின் தேவை அதிகரித்தது. எனவே உஸ்மான் பலரிடமும் சிறு சிறு அத்தியாயங்களாக இருந்த குர்ஆன் ஒன்று திரட்டினார். குர்ஆனை மனனம் செய்திருந்த அனைத்து நபித் தோழர்களையும் அழைத்து சரி பார்த்து அனைவரின் ஒப்புதலோடு குர்ஆன் பல பிரதிகள் எடுக்கப்பட்டு பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது.

அதில் இரண்டு பிரதிகளில் ஒன்று தாஷ்கண்ட் மியூஸியத்திலும், மற்றொன்று இஸ்தான்புல் மியூஸியத்திலும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்கள் கையில் உள்ள குர்ஆனை அந்த மூலப்பிரதியோடு ஒப்பிட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

தோல்களிலும், எலுமபுகளிலும் சிறு சிறு அத்தியாயங்களாக எழுதி பலரிடமும் இருந்த குர்ஆன் ஆவணங்களை குழப்பம் வர வேண்டாம் என்று கருதி அனைத்தையும் கொளுத்திவிட ஆணையிடுகிறார் உஸ்மான். இப்படி செய்யாமல் இருந்திருந்தால் கிறித்தவர்களைப் போல் நாட்டுக்கு ஒரு பைபிள் குர்ஆனிலும் செயல்படுத்தப்பட்டிருக்கும். உங்களைப் போன்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கும் மிகுந்த வசதியாய் போயிருக்கும். அதற்க்கெல்லாம் முடிவு கட்டிய உஸ்மான் பாராட்டுக்குரியவர்.

Basheer Ahamed Erode said...

Arumayana katturaigal.... enaku oru doubtu.... neer tntj nu nenachen.. but tntj la ''ahlul baith'' bayana veliyitta islamkalvi.com ma palavesam.com nu kurai soldrangalae... so neer thelivana muslim nu nirubichiteenga... indha iyakathukellam kolgai onnu than apran yen oruthana oruthan kurai solli nammal madhiri aalungala "kadupetharanga your honour" ... netlayae thouheed adipadaila nalla nalla bayan thodarchiya varadhu Islamkalvi.com la than....