Followers

Wednesday, April 20, 2011

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறுகள்!


இது பற்றிய அறிவியல் அறிஞர்களின் கருத்தைப் பார்ப்போம்.

மிகக்குறைந்த காற்றழுத்தத்தில் நுண்ணுயிரிகள் விண்வெளியில் வாழ்வது ஆராய்ச்சியின் மூலம் நமக்கு தெரியவருகிறது. இப்போது இருக்கும் செவ்வாயின் தட்ப வெப்பம், சுற்றுச்சூழலிலேயே, இந்த நுண்ணுயிரிகளை வைத்தால், இந்தக் கிருமிகள் வாழலாம் என்பதும் அறிய வருகிறது.

செவ்வாயின் தரைக்குக் கீழ் பெரும் அளவில் தண்ணீர் உறைந்து இருக்கிறது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளதால், இந்த ஆராய்ச்சிக்கு இன்னும் ஒரு தூண்டுதலாக அது இருந்தது என்று பேராசிரிய க்ரால் தெரிவிக்கிறார்.

'சமீபத்தில் செவ்வாய்ப் பயணங்களில், தரைக்குக் கீழ் பெரும் கடல்கள் உறைந்திருக்கலாம் என்பது தெரியவருவதால், அங்கு தரைக்குக் கீழ் உயிர்கள் இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது ' என்று இவர் கூறுகிறார்.

க்ரால் இந்த ஆராய்ச்சியைப் பற்றி அதிகம் பேசவில்லை என்றாலும், இந்த ஆராய்ச்சியின் பயனாக, மெத்தனோஜென்கள் செவ்வாய்க்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வளர்க்கப்படலாம். (ஒரு வேளை மனிதர்கள் செவ்வாய்க்குச் செல்ல முடிவு செய்தால்)

'மீத்தேன் என்பது கிரீன்ஹவுஸ் வாயுவாக இருப்பதால், இந்த மெத்தனோஜென்களை அங்கு கொண்டு சென்று அங்கு இருக்கும் வெப்ப அளவை உயர்த்த இந்த நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தலாம் ' என்று க்ரால் தெரிவித்தார்.

நன்றி: டேவிட் ஒயிட் ஹவுஸ்

பூமி போன்ற கிரகத்தில் உயிர்கள் இருக்க மிகவும் அத்தியாவசியமான தேவை என தண்ணீர் கருதப்படுகிறது. தரைக்கடியில் இருக்கும் தண்ணீர், செவ்வாய் கிரகத்தைப்புரிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் அங்கு மனிதர்கள் பயணம் செய்யவும் மிகவும் முக்கியமான விஷயம். மார்ஸ் ஒடிஸ்ஸி விண்கலத்தின் முக்கிய நோக்கமே அங்கு இருந்ததாகக் கருதப்படும் தண்ணீர் என்னவாயிற்று என்பதை அறிவதுதான். ஏப்ரல் 2001இல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், இந்த பிப்ரவரியில் தன்னுடைய வேலையை ஆரம்பித்தது. செவ்வாயின் பரப்பில் இருக்கும் வேதிப்பொருள்களை ஆராய்வதும், அதில் இருக்கும் கனிமங்களை ஆராய்வதும் அதன் இதர முக்கிய நோக்கங்கள். முக்கியமாகத் தேடப்பட்ட தனிமம், ஹைட்ரஜன்.

ஒடிஸ்ஸி விண்கலம், செவ்வாயில் இருக்கும் கதிர்வீச்சை அளக்கவும் தேவையான மானிகளை எடுத்துச் சென்றது. அதிக கதிர் இயக்கம் இருக்கும் கிரகத்தில் மனிதர்கள் பயணம் செய்வது மிகவும் கடினமானது.

செவ்வாய் கிரகம், நம் சூரியமண்டலக் கிரகங்களிலேயே மிகவும் அதிகமாக ஆராயப்பட்ட கிரகம். பூமிக்கு மிக அருகாமையில் இருக்கும் இந்தக் கிரகம், பூமி போலவே ஆனதாக இருப்பதும் முக்கியமான விஷயம்.

குளிர்ந்த, பாறைகள் நிரம்பிய செவ்வாயின் பரப்பு பல ஒளிப்படங்களில் மார்ஸ் பாத்ஃபைண்டரால் பிடிக்கப்பட்டது. மார்ஸ் குலோபல் சர்வேயர் என்ற விண்கலமும் சமீபத்தில் செவ்வாயின் பரப்பில் நடந்த புழுதிப்புயலைப் படம்பிடித்து அனுப்பியிருந்தது.

---------------------------------------------------------------------

நேச்சர் அறிவியல் இதழில், நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் மேகங்களில் உயிர்களின் அடிப்படை கட்டுமானப் பொருள்கள் முதலில் தோன்றியதாக குறிப்பிடும் ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது.

நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் அதி குளிர் நிலைமைகளை பரிசோதனைச் சாலையில் உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள், மிகச்சிறிய பனிக்கட்டி துகள்கள் உருவாவதையும் அது அல்ட்ரா வயலட் கதிர்களினால் தூண்டப்பட்டு உயிர்களுக்குத் தேவையான முக்கியமான வேதிவினைகளை நடத்துவதையும் காண்பித்திருக்கிறார்கள்.

இந்த பரிசோதனைகளில், அணுக்கள் அமினோ அமிலங்களாக கோர்த்தன. இவை புரோட்டான்களின் அடிப்படைப் பொருட்கள். இவைகளே உயிர்கள் மேலே மேலே கட்ட உதவும் அடிப்படைப் பொருள்கள்.

இப்படிப்பட்ட மேகங்களில் தோன்றிய அடிப்படைப் பொருட்கள் நம் சூரிய மண்டலம் உருவானபோது அங்கங்கு சிதறி பூமியிலும் விழுந்து பூமியில் உயிர்கள் தோன்ற காரணமாயிருக்கலாம்.

நம் பூமியில் உயிர்கள் வருவதற்கு வந்த வழி பல மெட்டியோரைட்டுகள் எனப்படும் வான்கற்கள் என்பதற்கு பல தடயங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால், அறிவியலாளர்கள், எப்படி மெட்டியோரைட்களான வான்கற்களில் உயிர்களுக்கான அடிப்படைப் பொருட்கள் வந்தன என்பதை ஆராய விரும்பினார்கள்.

இதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒரு வழியில், தண்ணீர் சேர்ந்த சிக்கலான வேதிவினைகள் நம் சூரியமண்டலம் ஆரம்பிக்கும் போது அதன் கடினமான கற்களில் நடந்திருக்கலாம்.

இப்படிப்பட்ட வேதிவினைகள் பலவிதமான அமினோ அமிலங்களை உருவாக்கின. உதாரணமாக, முர்சிஸான் விண்கல்லில் சுமார் 70 சதவீத அமினோ அமிலங்கள் இருந்தன.

இரண்டு தனித்தனி குழுக்கள், ஒன்று மேக்ஸ் பெர்ன்ஸ்டைன் தலைமை தாங்கிய Seti குழு, இரண்டாவது ப்ரெமன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த யுவே மெர்ஹென்ரிஷ் Uwe Meierhenrich குழு, வேறொரு வழியைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் காற்றற்ற வெளியில் இருக்கும் மிகச்சிறிய பனித்துகள்களின் மீது நடக்கும் வேதிவினைகள் சம்பந்தப்பட்டது இந்த வழி.

இந்த ஆராய்ச்சியாளர்கள், நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் காற்றற்ற வெளியையும் அதில் இருக்கும் சுற்றுச்சூழலையும் பரிசோதனைச்சாலையில் உருவாக்கினார்கள். அல்ட்ரா வயலட் கதிரியக்கமும், -258 டிகிரி தட்பவெப்பமும் (சைபர் டிகிரிக்கு 15 டிகிரி அதிகம்) இந்த பரிசோதனைச்சாலையில் உருவாக்கப்பட்டன.

இந்த சூழ்நிலைகள், அண்ட வெளியில் திரியும் கார்பன் மோனோக்ஸைட், அம்மோனியா போன்ற மூலக்கூறுகளை இணைத்துக்கொண்டு வேதிவினைகளை உருவாக்கின.

இரண்டு குழுக்களுமே, அமினோ அமிலங்கள் உருவாக்கத்தையும், கிளைசின், அலனைன், செரைன், ப்ரோலைன் போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் உருவானதையும் குறிப்பிட்டுள்ளன.

இந்த பரிசோதனைகள் ஒரே மாதிரி நிகழ்த்தபடவில்லை. ஒரு குழு தண்ணீர் அதிகமான சூழலை உருவாக்கிக்கொண்டது. மற்றொன்று தண்ணீர் குறைவாக பரிசோதனை நடத்தியது. தண்ணீர் குறைவான பரிசோதனை, அதிகமான அமினோ அமிலங்களை உருவாக்கியது.

இந்த பரிசோதனைகள் போல நடக்கும் பல பரிசோதனைகள், அகிலத்தில் பல வேறுவிதமான சூழ்நிலைகளில் பல சிக்கலான மூலக்கூறுகள் தோன்றுவதன் தடயங்களை உறுதி செய்கின்றன. இது அண்டவெளியெங்கும் உயிர்கள் இருக்கின்றன என்று நினைப்பவர்களின் எண்ணத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றன.

நன்றி: -திண்ணை

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

பூமியில் உயிரினங்கள் வாழ்வதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். வானங்களிலும் உயிரினங்கள் உள்ளதாக குர்ஆன் சொல்கிறது. இது சில காலங்களுக்கு முன்பு வரை நம்ப முடியாத செய்தி. ஆனால் இன்றைய அறிவியலோ வேறு கிரகங்களில் உயிரினம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை பட்டியலிட ஆரம்பித்து விட்டது. இது போன்ற ஒரு உண்மையை முகமது நபி சொல்ல எவ்வாறு சாத்தியப்படுகிறது. தனது கற்பனையில் முகமது நபி குர்ஆனை உருவாக்கியிருந்தால் இந்த உண்மையை எவ்வாறு அவரால் சொல்ல முடிந்தது? தனது சான்றுகளில் ஒன்றாகவே இறைவன் இந்த வாக்கியத்தைப் போடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்..

----------------------------------------------------------------------------------------------

பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175 பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். குர்ஆன் 7;10

இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

மேற்கண்ட இரண்டு குர்ஆன் வசனங்களிலிருந்தும் நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175 பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். குர்ஆன் 7;10

11 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பகுத்தறிவு உடையோர் சிந்திப்பதற்காகவே குர்ஆன் உள்ளது. அவ்வாறு சிந்திக்கும்கால் அவர்களுக்கு பல விஷயங்கள் கிட்டுகின்றன. மிக அருமையானதொரு ஆக்கம் சகோ.சுவனப்பிரியன். மிக்க நன்றி.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ. ஆஷிக்!

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

குர்ஆன் வசன ஆதார ஒளியில் நல்ல தொகுப்பு

நன்றி சகோ

மாலதி said...

மிக அருமையானதொரு ஆக்கம் மிக்க நன்றி.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. ஹைதர் அலி!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//மிக அருமையானதொரு ஆக்கம் மிக்க நன்றி.//

முதல் வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ. மாலதி!

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
வாழ்த்துகள் சகோ! அறிவியலுடன் குர்ஆனை ஒப்பிட்டு சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
வாழ்த்துகள் சகோ! அறிவியலுடன் குர்ஆனை ஒப்பிட்டு சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ.பாருக்

வாழ்த்துகள் சகோ! அறிவியலுடன் குர்ஆனை ஒப்பிட்டு சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சமுத்ரா said...

good one

suvanappiriyan said...

//good one//

வாங்க சமுத்ரா! உங்களின் பல ஆக்கங்களையும் தொடர்ந்து படித்து வருபவன். நான் அறிவியல் சம்பந்தமாக எழுதும் இடுகைகளில் தகவல் பிழைகள் ஏதும் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..