Followers

Sunday, April 24, 2011

சாய்பாபா இறந்து விட்டார்!


புட்டபர்த்தியில் சாய்பாபா இன்று இறந்த செய்தி கேள்வியுற்றேன். அவரை மனிதனாக நினைத்தவர்களுக்கு இது எல்லோருக்கும் ஏற்படக் கூடிய மரணம். அவரை தெய்வமாகவும், தெய்வத்தின் அவதாரமாகவும் நினைத்தவர்களுக்கு அவரின் இறப்பு நம்ப முடியாத செய்தி. எப்படி ஒரு இறைவன் இறக்க முடியும்? எப்படி ஒரு இறைவன் நோய்வாய் பட முடியும்? எப்படி ஒரு இறைவன் வாயில் இருந்து லிங்கம் வரவழைக்கிறேன் என்று பக்தர்களை ஏமாற்ற முடியும்? என்றெல்லாம் நாம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் இது போன்ற ஆன்மீக வாதிகளின் சுய ரூபம் வெளியே தெரிய வரும்.

இதற்கெல்லாம் மூல காரணம் இறைவனைப் பற்றிய அறிவு நமக்கு சரிவர புகட்டப் படாததே! இறைவனுக்குரிய இலக்கணம் என்ன? என்பதை நாம் சரி வர புரிந்து கொண்டால் இது போன்ற போலி ஆன்மீகத்திலிருந்து விடுபடலாம். ஒரு ஆறுதலான செய்தி இவரது பணத்தைக் கொண்டு எண்ணற்ற ஏழை மக்கள் இன்றும் பயனடைகிறார்கள் என்பது.

சாய்பாபாவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கும், அவரது சிஷ்யர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமலரில் வந்த செய்தி:

புட்டபர்த்தி: அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஸித்தியடைந்தார் . இவருக்கு வயது 85 . பாபாவின் உடலை இன்று மாலை 6 மணியிலிருந்து குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வரும் புதன்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறும்.

கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.

பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு : வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யபப்டும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கிறது அனந்தபூர் மாவட்டம் முழுவதும் இந்நாளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. என மாநில அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சாய்பாபாவின் சரித்திரம்: சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.

ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், நானி பல்கிவாலா, டி.என்.சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.

1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தியுள்ளன.

சமூகத்தொண்டு: ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.

சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.

"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

பொன் மொழிகள்

* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.

* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.

* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.

* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

* மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.

பாபாவின் சேவைகள்...

* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகின்றன.

* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.

* ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

தலைவர்கள் இரங்கல்: சத்ய சாய்பாபா மறைவிற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய , மாநில அமைச்சர்கள் , அ.தி.மு.க.., பொதுசெயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா, ஆந்திர அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில்; சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியவர் சாய்பாபா. இதன் மூலம் தமிழக மக்களின் இதயத்தில் சாய்பாபா இடம் பிடித்து விட்டார் என்று கூறியுள்ளார். ‌ஜெ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சாய்பாபாவின் இழப்பு மனித குலத்திற்கு பேரிழப்பாகும் என கூறியுள்ளார். தமிழக துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் பாபாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி புறப்பட்டு சென்றார்.

ஆந்திரமுதல்வர் கிரண்குமார்ரெட்டி, கவர்னர் நரசிம்மன், மகாராஷட்டிர முன்னாள் முதல்வர் அசோக்சவான், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்த புறப்பட்டு சென்றனர்.

வழிகாட்டுதலாக இருந்த சாய்பாபா அத்வானி ; தெய்வீகத்தன்மையும், போற்றுதலுக்குரியவருமான சாய்பாபா லட்சக்கணக்கான மக்களின்மனதில் வாழ்ந்தவர் என பிரதமர் மன்மோகன்சிங் புகழாராம் சூட்டியுள்ளார். பாபா மறைவு நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பாபாவின் இழப்பு குறித்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் ; சாய்பாபாவை நான் பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். அவரது அறிவுரைகள் எனக்கு பல நேரங்களில் வழிகாட்டுதலாக இருந்தது. இந்தியா முன்னேற்றம் கண்டிட உழைத்த தலைவர்களில் இவரும் ஒருவர். இவரது மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பு இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

-நன்றி: தினமலர்

19 comments:

Anonymous said...

உங்கள் கருத்துகள் சரிதான். இன்னொருவர் இந்த மாதிரி ஊடகங்களும், தகவல் பறிமாற்றங்களும் இல்லாத காலத்தில் தோன்றியதால் தப்பித்தார்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன், மிகச்சரியான கேள்விகளுடன் ஆரம்பித்துள்ளீர்கள்.

அவரின் பக்தர்கள் பலருக்கு, 'அவர் கடவுள் இல்லை' என்று உண்மை விளங்கி இருக்கும் இன்று.

தினமலர் செய்தியை படிக்கும் போது, ஒன்று புரிகிறது. இவர் ஆன்மிகம் போதிக்கும் முன் இவரின் சொத்து என்ன..? இவருக்கு எப்படி இன்று இவ்வளவு சொத்து சேர்ந்தது..? ஆன்மிகம் மிக நல்ல பிசினஸ் என்று புரிகிறது... அரசியலை விட..!

இந்நேரம் நாம், நம் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை பற்றி நினைக்க வேண்டும். அன்னார் தன் நாற்பது வயதில் நபி ஆகும்போது, இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்கும்போது அன்றைய அரேபியாவின் மல்டி மில்லியனர்.

இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர்... இறக்கும்போது அன்னாரிடம் இருந்தது ஒரு கோவேறு கழுதை, கயிற்றுக்கட்டில், ஈச்சைநார் அடக்கிய தலைகாணி, ஒருவர் தொழுதால் ஒருவர் கால்நீட்டி படுக்க இயலாத ஒரே ஓர் அரை கொண்ட 'வீடு'... அவ்வளவுதானே..!

ஏன் இப்படி எனில், இவரின் ஆன்மிகம் சத்தியமானது என்று நிரூபணம் ஆகிறது.

ஆனால்,
இந்த
(அ)சத்ய
சாய்(ந்த)பாபா-வின்
ஆன்மிகம் பணம் சம்பாரித்து சொகுசாக வாழ்வதற்கான போலி ஆன்மிகம் என்று நிரூபணம் ஆகிவிட்டது.

ஆனால், இன்னும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காத மக்கள் பலர் உள்ளனர்.

suvanappiriyan said...

//உங்கள் கருத்துகள் சரிதான். இன்னொருவர் இந்த மாதிரி ஊடகங்களும், தகவல் பறிமாற்றங்களும் இல்லாத காலத்தில் தோன்றியதால் தப்பித்தார்.//

1.மக்களால் நெருங்க முடியாத உயரத்தில் இவர் இருந்ததில்லை. சாய்பாபாவை சாமான்யர் நெருங்க முடியாது.
2.ஆன்மீகவாதியாக மாறியவுடன் இருந்த சொத்தும் போய் சாப்பாட்டுக்கே சிரமப்பட்டார் ஒருவர். மற்றவரோ இந்தியாவை முதற்கொண்டு உலகமெங்கும் சொத்துக்களை ஏமாந்த பக்தர்களிடமிருந்து பெற்று மல்டி மில்லினராக ஆகி விட்டார்.
3.முன்னவர் லிங்கம் வரவழைப்பது, விபூதி,பூ வரவழைப்பது என்ற மோடி மஸ்தான் வேலை செய்யவில்லை. சாய்பாபா செய்தது அனைத்தும் பிராடு என்பது காணொளியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
4.எனக்கு இறை செயதி வருவதைத் தவிர மற்ற வகையில் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் என்றார் முன்னவர். ஆனால் சாய்பாபாவோ தான் பாபாவின் மறுபிறவி என்றும் தனக்கு தெய்வ சக்தி இருப்பதாகவும் அறிவித்தார்.

எனவே இருவரையும் ஒன்றாக நோக்க முடியாது அனானி. பெருத்த வித்தியாசம் உண்டு.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ. ஆஷிக்!

" 95 வயது வரை வாழ்வேன்" என்று சத்ய சாய் பாபா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, "பாபாவுக்கு ஒன்றும் நேராது; அவர் உடல்நிலை தேறி மீண்டு வருவார்" என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாய் பாபா தற்போது ஸித்தி அடைந்தது எப்படி என்று சில பக்தர்கள் மனதில் ஐயம் எழலாம்.”

இது சாய்பாபாவைப் பற்றிய புது செய்தி. அட இறந்து போகும் நேரத்திலுமா இத்தனை குழப்பம் செய்து விட்டு செல்ல வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

வாயில லிங்கம் எடுத்து கொடுத்தாரு(!?)

தங்க ஜெயின் எடுத்து பிரதமார்க்கே கொடுத்தரு(!?)

கடைசியில் இப்படி உயிரே கொடுத்துட்டரே

இந்த மரணம் நிறைய விஷயங்களுக்கு விடியலை கொடுக்கும் என்று நினைக்கிறேன்

பகிர்வுக்கு நன்றி சகோ

Feroz said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ். அன்பின் சகோ அருமையாக ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். நேற்று மருத்துவர் ருத்ரன் அவர்களின் பேஸ் புக்கில் நான் இட்ட பின்னூட்டம். . மிக நுன்னிய ஆக்கம். என் சிறுபிராயத்தில் இருந்து எங்களுடைய குடும்ப மருத்துவர் உடலின் மொழியை வைத்தே இந்த காய்ச்சல் என்று துல்லியமாக சொல்பவர். சாய்பாபாவின் பின்னல் போய் சொத்துக்களை இழந்து, மனைவியும் பிரிந்து மகளும் மருத்தவ படிப்பை முடிக்க முடியாமல் சொந்த ஊரில் மருத்துவமனை விற்று கிராமத்தில் இன்று மருத்துவமனை வைத்து இருக்கிறார். நேற்று அப்பா சொன்னார் புட்டபர்த்திக்கு சென்று விட்டார் என்று. இவரை போன்றோர் ஒன் இன் மில்லியன் என்று சொல்லலாம். மனம் வேதனையில் இருக்கிறது. ஆனால் அறிவுக் குருடர்களிடம் எத்தனை அறிவுப்பூர்வமாக விவாதித்தாலும் திருந்துவார்களா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. தோழமையுடன்.

suvanappiriyan said...

அலைக்கும் சலாம் பெரோஸ்!

//நேற்று அப்பா சொன்னார் புட்டபர்த்திக்கு சென்று விட்டார் என்று. இவரை போன்றோர் ஒன் இன் மில்லியன் என்று சொல்லலாம். மனம் வேதனையில் இருக்கிறது.//

என்ன செய்வது அவர்களுக்காக பிரார்த்திக்கத்தான் முடியும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஹைதர்!

//வாயில லிங்கம் எடுத்து கொடுத்தாரு(!?)

தங்க ஜெயின் எடுத்து பிரதமார்க்கே கொடுத்தரு(!?)

கடைசியில் இப்படி உயிரே கொடுத்துட்டரே//

அவர் இறந்து போகும் நேரத்தையே சரியாக கணிக்கத் தெரியாதவர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//நீங்கள் கூறும் கருனை மிக்க அல்லா , அடிமை பெண்களை , விபச்சாரத்துக்கு பயன் படுத்துமாறு மறைமுகமாக கூறுகின்றார்.//

அந்த காலத்திய உலக முறை தெரியாத பிதற்றலான வாதம். போரில் பிடிக்கப்படும் கைதிகளை பராமரிக்க அன்று சிறைகள் இல்லை. கிடைக்கும் கைதிகளை வென்றவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். அதே சமயம் இஸ்லாம் அரபு நாடுகளில் வந்தவுடன் இந்த முறையை முற்றாக ஒழிக்க படிப்படியாக திட்டம் தீட்டியது.

4:92. தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்;

இந்த சட்டங்கள் முறையாக பின்பற்றப் பட்டதால் முகமது நபி காலத்திலேயே அடிமைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருந்தனர். அதே கால கட்டத்தில் இன்றும் தஞ்சையில் சோழர்கள் காலத்தில் அடிமைகளாகவும், விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட பல குடும்பங்கள் அதே பெயரில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் கூட தேவரடியார்கள் என்ற பெயரில் கோவிலுக்கு நேர்ந்து விடும் பழக்கம் நேபாளத்தில் இருக்கிறது. இன்று வரை இந்து மதத்தில் இந்த பழக்கத்தை ஒழிக்க முடியவில்லை. ஆனால் புரையோடிப் போயிருந்த அடிமை முறையை இஸ்லாம் சில ஆண்டுகளிலேயே ஒழித்துக் கட்டியது. இன்று அரபு நாடுகளில் அடிமைகளே கிடையாது.

suvanappiriyan said...

//எதிர்காலம்கூட தெரியாத ஒன்றை என்னால் கடவுளாக ஒத்துக்கொள்ளமுடியவில்லை. இந்த கற்பனா கதாபாத்திரத்தால் என்னை ஒன்றும் பண்ணிவிடமுடியாது.//

விதி என்ற ஒன்று இல்லாவிட்டால் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது இறைவனுக்கு தெரியாது என்று ஆகிவிடும். நாளை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியாத ஒருவன் எப்படி என் இறைவனாக இருக்க முடியும்? விதி இல்லை என்று சொன்னாலும் விபரீதம். விதி இருக்கிறது என்று சொன்னாலும் விபரீதம்.

விதி என்ற ஒன்றுக்கு மட்டும் எப்படி விளக்கம் அளித்தாலும் குழப்பமே வந்து நிற்கும். அதற்குரிய அறிவை இறைவன் நமக்கு கொடுக்கவில்லை.

'உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியிருப்பதில் நீங்கள் பூரித்து போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான்.'-குர்ஆன் 57:23

நடந்து விட்ட காரியங்களுக்குத்தான் விதியை நினைத்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். இனி வருங்காலங்களில் நம் விதி எது என்று நமக்கு தெரியாத காரணத்தால் விதி இல்லாதது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நாளை ஒரு விபத்தில் எனது காலும் கையும் வெட்டப்படும் என்பது எனக்கு முன்பே தெரியும் என்று வைத்துக் கொள்வோம். இன்று இரவு என்னால் நிம்மதியாக தூங்க முடியுமா? எனவே விதியைப் பற்றிய ஒரு தெளிவின்மை மனிதர்களுக்கு நன்மையே தருகிறது. எனவே தான் உலக கணக்கெடுப்பில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் முஸ்லிம்களிடம் மிக மிக கம்மியாக இருக்கிறது. எது நடந்தாலும் இறை விதிப்படியே என்று முஸ்லிம்கள் நம்புவதுதான் இதன் காரணம்.

'இறைவன் நாடியதை அழிப்பான்: நாடியதை அழிக்காது வைப்பான்: அவனிடமே தாய் ஏடு உள்ளது.'-குர்ஆன் 13:40

ஒரு மனிதன் வருங்காலத்தில் தான் நல்லவனாக வாழ வேண்டும், தனக்கு சொர்க்கத்தில் இறப்புக்குப் பிறகு வாழ்வு வேண்டும் என்றும் நற் கருமங்கள் செய்வதாகவும் இறைவனிடம் மனமுருகி பிரார்த்தித்தால், அந்த பிரார்த்தனையை ஏற்று தான் எழுதிய விதியை தானே மாற்றுகிறான் இறைவன்.

இதையேதான் வள்ளுவரும்

'ஆகூழால் தோன்றும் அசைவன்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி'-குறள் 371 என்கிறார்.

செல்வம் வந்து சேர வேண்டிய நல்ல வேளை வந்து விட்டால் ஒருவனிடம் ஊக்கமும் வாடா முயற்சியும் வந்து விடும். போக வேண்டிய வேளை வந்து விட்டால் சோம்பல் வந்து செயலிழக்கச் செய்து விடும். எனவே நமது எண்ணத்தில் நமக்கு நல்ல விதியாக வருங்காலம் வர வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வர வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

விதியை உங்கள் வாழ்க்கையில் விலக்க நினைத்தாலும் உங்களையும் மீறி அநத விதி உங்கள் முன்னால் வந்து நிற்கும் என்று குறள் 380ல் வள்ளுவர் விளக்குகிறார். இதில் மேலும் விளக்கப் புகுந்தால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் வந்து விடுவோம் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

வலிப்போக்கன் said...

நல்லா பாத்து சொல்லுங்கோ? சாய்பாபா
இறக்கவில்லையாம் செத்த அவதாரம்
எடுத்துயிருக்காராம்

suvanappiriyan said...

//நீங்கள் , உங்களின் 6 வயது மகளை 53 வயது கிழவனுக்கு திருமணம் செய்து வைப்பீர்களா?//

இஸ்லாத்துக்கு முன்னர் ஜாஹிலிய்யாக் காலம் என்றழைக்கப்படும் மௌட்டீக கால அரேபியாவில் பெண்கள் மிகவும் இழிவானவர்களாகவே கருதப்பட்டனர். அவளது உரிமைகள் பறிக்கப்பட்டன; ஆண்களின் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கேளிக்கைப் பொருளாகவே கருதப்பட்டு வந்தாள். ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் முடிக்கக் கூடிய ஒரு கீழ்த்தரமான நிலையே காணப்பட்டது. இதனை நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விபரிக்கிறார்கள்:


“அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.


முதல் வகை, இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.


இரண்டாம் வகைத் திருமணம், ஒருவர் தம் மனைவியிடம் நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள் என்று கூறிவிட்டு அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளை விட்டும் அந்தக் கணவன் விலகியிருப்பான். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்ற வரை கணவன் அவளை ஒரு போதும் தீண்ட மாட்டான். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாள் எனத் தெரிய வந்தால், விரும்பும் போது அவளுடைய கணவன் அவளுடன் உடலுறவு கொள்வான். குலச் சிறப்பு மிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற அற்ப ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஹ்’ (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.


மூன்றாம் வகைத் திருமணம், பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்று கூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகிச் சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். இப்போது எனக்குக் குழந்தை பிறந்து விட்டது’ என்று கூறிவிட்டு அவர்களில் ஒருவனை நோக்கி ‘இவன் உங்கள் மகன் இன்னாரே’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.


நான்காம் வகைத் திருமணம், நிறைய மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள்.


இந்தப் பெண்கள் விலை மாதர்களாவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்துக் குழந்தை பிறந்தால் அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்று கூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை – பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் தந்தை எனக் கருதிய ஒருவருடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது.


சத்திய மார்க்கத்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது இன்று மக்களின் வழக்கிலுள்ள முதல் வகைத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்” [புகாரி: 5127].

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கருத்துவிடுகிறது; அவன் கோபமடைந்து விடுகிறான். எதைக்கொண்டு நன்மாராயம் கூறப்பட்டானோ அதைத் தீயதாகக் கருதி அந்தக் கெடுதிக்காகத் தன் சமூகத்தாரை விட்டும் ஒழிந்து கொள்கிறான். அதை இழிவோடு வைத்துக்கொள்வதா அல்லது அதை உயிரோடு மண்ணில் புதைத்து விடுவதா என்று குழம்புகிறான். அவர்கள் இவ்வாறெல்லாம் தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா” [அந்-நஹ்ல்: 58-59].

இது போன்ற காட்டுமிராண்டிகள் நிறைந்த அந்த அரபுகளை இன்று நாகரிக மனிதர்களாக மாற்றியது குர்ஆனும் முகமது நபியின் போதனையும் அல்லவா?

suvanappiriyan said...

மத்திய அரசின் தேசிய குற்றப்பதிவு கழகம் திரட்டியுள்ள தகவலில், கடந்த 2008இல் நாடு முழுவதும் 104 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 23 புகார்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் 19 புகார்கள் உள்ளன.

கடந்த 1996இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் குழந்தைத் திருமணம் தொடர்பாக நாடு முழுவதும் 96 புகார்கள் மட்டுமே இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை 2008இல் 8.3% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் புதுடெல்லியில் கடந்த 2003, 2008இல் தலா ஒரு குழந்தைத் திருமணம் தொடர்பாக புகார் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“எனக்கு திருமணம் நடந்தபோது என்னைச் சுற்றி என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்றே என்னால் அறிய முடியவில்லை” என்கிறார் மனியம்மா. ”அப்போது எனக்கு ஆறு வயதுதான். கல்யாணமென்றால் வீட்டை விட்டுச் இன்னொரு வீட்டுக்கு செல்லவேண்டுமென்று மட்டுமே எனக்கு தெரியும். நான் போக மாட்டேனென்று அழுது கொண்டேயிருந்தேன். ஆனாலும் என்னை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்” என்கிறார் தொடர்ந்து.
மனியம்மா, ஆந்திராவின் ஒரு கிராமத்தில் தனது உறவினர் சூழ அமர்ந்திருக்கிறார். அவர் கட்டியிருந்த சிவப்பு புடவையில் பதினொரு வயதிற்கும் கீழானாவராகவே தெரிந்தார். ஒரு தந்தையால் தன் குழந்தைக்கு இதை மனமுவந்து செய்ய முடியமா? ஆனால், அவரோ “இங்கெல்லாம் அப்படித்தான் பழக்கம் என்கிறார். இதுதான் எங்களின் பாரம்பரியம், பெண்கள் சிறியவயதில் மணமுடித்துவிடவேண்டும். கணவர்கள் வயதில் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் சரி, சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும்” என்று முடிக்கிறார்.

உலகிலேயே, அதிகமான குழந்தை மணமகள்களை கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் இடமான இந்தியாவிற்கு, 2020-இல் ‘வல்லரசாக’ப் போகும் நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்.-Thanks Vinavu

“எனக்கு திருமணம் நடந்தபோது என்னைச் சுற்றி என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்றே என்னால் அறிய முடியவில்லை” என்கிறார் மனியம்மா.

”அப்போது எனக்கு ஆறு வயதுதான். கல்யாணமென்றால் வீட்டை விட்டுச் இன்னொரு வீட்டுக்கு செல்லவேண்டுமென்று மட்டுமே எனக்கு தெரியும். நான் போக மாட்டேனென்று அழுது கொண்டேயிருந்தேன். ஆனாலும் என்னை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்” என்கிறார் தொடர்ந்து.

மனியம்மா, ஆந்திராவின் ஒரு கிராமத்தில் தனது உறவினர் சூழ அமர்ந்திருக்கிறார். அவர் கட்டியிருந்த சிவப்பு புடவையில் பதினொரு வயதிற்கும் கீழானாவராகவே தெரிந்தார். ஒரு தந்தையால் தன் குழந்தைக்கு இதை மனமுவந்து செய்ய முடியமா? ஆனால், அவரோ “இங்கெல்லாம் அப்படித்தான் பழக்கம் என்கிறார். இதுதான் எங்களின் பாரம்பரியம், பெண்கள் சிறியவயதில் மணமுடித்துவிடவேண்டும். கணவர்கள் வயதில் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் சரி, சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும்” என்று முடிக்கிறார்.

உலகிலேயே, அதிகமான குழந்தை மணமகள்களை கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் இடமான இந்தியாவிற்கு, 2020-இல் ‘வல்லரசாக’ப் போகும் நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்.

suvanappiriyan said...

//நல்லா பாத்து சொல்லுங்கோ? சாய்பாபா
இறக்கவில்லையாம் செத்த அவதாரம்
எடுத்துயிருக்காராம் //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வலிப் போக்கன்.

மாலதி said...

//நல்லா பாத்து சொல்லுங்கோ? சாய்பாபா
இறக்கவில்லையாம் செத்த அவதாரம்
எடுத்துயிருக்காராம் //
mmmmm

மாலதி said...

//நல்லா பாத்து சொல்லுங்கோ? சாய்பாபா
இறக்கவில்லையாம் செத்த அவதாரம்
எடுத்துயிருக்காராம் //
mmmmm

Robin said...

உங்கள் இறைத் தூதரும் குழந்தைத் திருமணம் செய்தவர்தான்!

non-muslim said...

// உங்கள் இறைத் தூதரும் குழந்தைத் திருமணம் செய்தவர்தான்!
//

Appadithaan seivom. nee yaaruda kaekka? Naangallam muslims. nanga naalu kalyanam seivom. :-). Adutha mathathukaaran thappu senjaa, vida mattom. Naanga muslims. maen makkal :)

suvanappiriyan said...

//நல்லா பாத்து சொல்லுங்கோ? சாய்பாபா
இறக்கவில்லையாம் செத்த அவதாரம்
எடுத்துயிருக்காராம் //
mmmmm//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலதி.

//உங்கள் இறைத் தூதரும் குழந்தைத் திருமணம் செய்தவர்தான்!//
அதை நான் மறுக்கவில்லையே ராபின்!
முகமது நபியின் திருமணத்தை கிண்டலாக வேறொரு பதிவில் ஒருவர் இட்ட பின்னூட்டத்துக்கான பதில் பின்னூட்டமே இது.

//Adutha mathathukaaran thappu senjaa, vida mattom. Naanga muslims. maen makkal :)//
நான் முஸ்லிம்!
மேன் மக்கள் என்ற பதம் வேறொரு மதத்துக்கு சொந்தம். தலையில், காலில், என்று பிறப்பிலேயே பேதம் காட்டுவது யாரென்று உங்களுக்கு நன்கு தெரியுமே! இஸ்லாத்தைப் பொறுத்த வரை உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பல்கி பெருகியவர்களே!