Followers

Sunday, December 04, 2011

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஒரு வேண்டுகோள்!



ஓ துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள்

நீங்களில்லாமல் மிகவும் வெறுமையாக உள்ளது; இங்கு வந்து இந்த வெறுமையை நிரப்புங்கள்.

என்னை வண்ணங்களால் நிரப்புபவரே (வாழ்க்கையை வண்ணமயமாக ஆக்கும் அல்லாவே)

எதையும் படைக்கவேண்டும் என்று அல்லாஹ் நினைத்தால், 'உருவாகு' என்று அவர் ஆணையிட்டமாத்திரத்தில், அது உருவாகிறது ('உருவாகிவிட்டேன்' என்று பதிலும் அளிக்கிறது).

எங்குமே எதுவுமே இல்லாத அந்தத் தருணத்திலும், அவர் இருந்தார்; அவர் மட்டுமே எங்குமே இருக்கிறார்

என்னுள் எவர் இருக்கிறாரோ, அவரே உன்னுள்ளும் இருக்கிறார்

இறைவனே அத்தனை தொடக்கங்களுக்கும் ஒரே பிறப்பிடம்.

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;

ஒவ்வொரு விடியலிலும் எதனை எனதுடல் அணிந்திருக்கிறதோ, அந்த வாழ்வின் பொறியான எனதுயிர், புகையிலிருந்து வெளிவரும் கரியைப் போல இருண்டதாயிருந்தாலும், உங்களிடமிருந்து பெருகும் புத்துயிரின் ஒரு துளிக்காகவே அது உயிர்வாழ்ந்திருக்கிறது எனது இறைவனே . . .

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;

அந்த அல்லாவின் திருத்தூதரான நபியே மெய்ப்பொருள்;

அல்லாஹ்வின் ஆசிகளும் அமைதியும், நபிக்கு உரித்தாகட்டும்;

என்னை என்னிடமிருந்தே காப்பாற்றி விடுதலையளித்தால், அது உங்களது பெருந்தன்மையன்றி வேறில்லை எனது இறைவனே;

என்னை இப்பொழுது நானே அறியவேண்டும்; தயைகூர்ந்து எனக்கு விடுதலையளியுங்கள்

எனது இருண்ட செயல்களோடும், வெறுமையான ஆன்மாவோடும் நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை

என்னுள் நீங்களே வாழ்கிறீர்கள்; என்னை எங்கே அழைத்துவந்திருக்கிறீர்கள்?
உங்களிலும் நானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; உங்களைத் தொடர்கிறேன்; நான் உங்களது வெறும் நிழல்தானே தவிர வேறில்லை;
நீங்களே என்னை உருவாக்கினீர்கள்; இந்த உலகில் வாழ நான் தகுதியற்றவனாக இருந்தும், என்னை அரவணைத்தீர்கள்; நீங்களே முறை தவறாதவர்; நடுநிலையாளர்; நீங்களே மெய்ப்பொருள்.

நீங்கள் உத்தரவிட்டதும், எதுவுமே உடனடியாக உருவாவதைப்போல், என் வாழ்வுக்கும் ஒரு குறிக்கோளையும், ஒரு இலக்கையும் உத்தரவிட்டு அருளுங்கள்.

-நன்றி: மொழியாக்கம் ராஜேஸ்



இந்த பாடலை கேட்டு விட்டு சகோதரர் ராஜேஸ் அவர்கள் பின்வருமாறு தனது பதிவில குறிப்பிடுகிறார்.
//நான் உணர்ச்சிவசமெல்லாம் படவில்லை. ஆழ்ந்து யோசித்துத்தான் சொல்கிறேன். ஏற்கெனவே, ரஹ்மானின் பிற சூஃபி பாடல்களைக் கேட்கும்போதே ('பியா ஹாஜி அலி', 'கரீப் நவாஸ்', 'அர்ஸியான்'), இஸ்லாத்தின் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தேன். இப்போது, வெகு சீக்கிரமாகவே இஸ்லாத்துக்கு மதம் மாறிவிடுவேனோ என்று தோன்றுகிறது. இந்த அளவு இறைவன் என்ற ஆளுமையிடம் தன்னை முழுமையாக ஒப்புவிக்கக்கூடிய அளவு அமைந்த உருக்கமான, கேட்டதும் ஒருவித அமைதியளிக்கக்கூடிய பாடல்களை, எனக்குத் தெரிந்து வேறெந்த மதத்திலும் கேட்டதில்லை.//- -ராஜேஸ்



“ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”


3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”

3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.

19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.


குர்ஆனில் வரக் கூடிய இந்த சொற்றொடரை தழுவி இந்த பாடல் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை இறைவனை நோக்கி பாடுவதாக சொன்னாலும் ஓரளவு அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் ஒரு தர்ஹாவுக்கு முன்னால் அமர்ந்து பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.

//ஓ துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் //

இது போன்ற வார்த்தைகள் தர்ஹாவில் அடங்கியிருப்பவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்: நாம் கேட்கும் பல பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார் என்று நம்பி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

தர்ஹாவில் அடங்கியிருப்பவரின் சுய ரூபம் உங்களுக்கோ எனக்கோ தெரியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம். நித்தியானந்தாவைப் போல் மக்களுக்காக வெளிவேஷம் போட்டவராகவும் இருக்கலாம் உண்மை நிலை இறைவனுக்கே தெரியும்.

இந்த பாடல் இறைவனைத்தான் குறிக்கிறது என்றால் அதை ஒரு தர்ஹாவில் அமர்ந்து பாட வேண்டியதில்லை. அடுத்து இறைவனை நெருங்குவதற்கு இது போன்ற பாடல்களை பாடச் சொல்லி முகமது நபி நமக்கு கற்றுத் தரவில்லை. முகமது நபியின் அடக்கத்தலத்தில் இது போன்ற பாடல்கள் பாடப்படுவதில்லை.

பிராரத்தனை வணக்கம் அனைத்துமே இறைவன் ஒருவனுக்குத்தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கை. இதற்கு மாற்றமாக நீங்கள் எந்த முறையைக் கொண்டு வந்தாலும் அது இறைவனால் நிராகரிக்கப்பட்டு அதற்கு தண்டனையும் கொடுக்கப்படுவதாக குர்ஆன கூறுகிறது.

எனவே சகோ ராஜேஸ் உணரச்சிவசப்பட்டு ரஹ்மானின் பாடலைக் கேட்டு இஸ்லாத்துக்கு வர வேண்டாம். பாடல் சலிப்பு தட்டி விட்டால் இஸ்லாமும உங்களுக்கு சலிப்பாக தோன்றும். எனவே குர்ஆனின் தமிழ் அல்லது ஆங்கில மொழி பெயர்ப்புகளை வரிக்கு வரி தொடர்ந்து படித்து வாருங்கள். இது இறைவனின் வேதம்தான் என்ற முடிவுக்கு வந்தவுடன் பிறகு இஸ்லாத்துக்கு வருவதைப் பற்றியதான முடிவை எடுங்கள்.

உஙகளுக்கு மனம் அமைதியுற குர்ஆனின் வாசிப்பை ராகத்தோடு இசைக் கருவி இல்லாமல் கேட்டு வாருங்கள். உங்களின் உள்ளம் உண்மையாகவே ஈர்க்கப்படுவதை உணருவீர்கள். கீழே உள்ள காணொளியை ஒரு முறை பாருங்கள்.










ரஹ்மானின ராக்ஸ்டார் படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும கேட்டவுடன் ஒருவரின் மன நிலை எப்படி இருந்தது என்பதை ஒரு அன்பர் பின்னூடடத்தில் கூறியிருக்கிறார். அதையும் பாருங்கள்.
//While listening to this song, I feel like a aghori smoking ganja
Awesome music by ARR//

அதாவது காசியில் அகோரிகள் எவ்வாறு கஞ்சா அடித்து ஒரு வித மயக்க நிலையில இருப்பார்களோ அந்த நிலையில் தானும் இருப்பதாக இவர் கூறுகிறார். இசையை ஒரு அளவுக்கு மீறி நெசிக்க ஆரம்பித்தால் இதுதான் நிலை.

முஸ்லிம்களில் கூட பக்கீர்கள் என்ற ஒரு கூடடம் உழைக்காது இது போன்ற பாடல்களை பாடி பிச்சை எடுத்துக் கொண்டு திரிவதை பரவலாக பார்க்கலாம். இதை முற்றிலுமாக இஸ்லாம் தடுக்கிறது. நபியாகவும் ஆட்சித் தலைவராகவும் இருந்த முகமது நபி தனது வருமானத்திற்கு ஒரு ஆட்டுப் பண்ணையை சொந்தமாக வைததிருந்தார். வியாபாரமும் செய்தார். இவர்களைப் போல் புரோகிதத்தை வளர்க்கவில்லை.

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஒரு வேண்டுகோள்!

ரஹ்மான் சார்! தர்ஹா வணக்கத்தில் மூழ்கியிருந்த மக்களை குர்ஆனின் பக்கம் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வருகிறோம். இசையை சினிமாவோடு நிறுத்திக் கொள்ளுங்கள. நீங்கள் நன்மை என்று நினைத்து ஒழிந்து போன சூஃபி பாடல்களையும் தர்ஹா வணக்கங்களையும் மறு பிரவேசம் பண்ண வைத்து விடாதீர்கள். நீங்கள் ஹஜ்ஜூக்கு பலமுறை வந்திருக்கிறீர்கள். இங்கு ஒரு தர்ஹாவையாவது பார்த்ததுண்டா? முகமது நபி அடக்கததலத்தில் ஏதேனும் வணக்கங்கள் நடைபெறுவதை பார்த்திருக்கிறீர்களா? இல்லையே! எனவே குர்ஆனை மேலும் ஆழ்ந்து படியுங்கள. உண்மையான இஸ்லாத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். அதுதான் உங்களின் இரு உலக வாழ்க்கையையும் செம்மைப்படுத்தும்.

'தனக்கு இணை கற்ப்பிக்கப்படுவதை இறைவன் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள பாவத்தை தான் நாடியோருக்கு மன்னிப்பான.'
-குர்ஆன் 4:48

டிஸ்கி: முஹர்ரம் 9,10 நோன்பு வைப்பது முகமது நபி வலியுறுத்திய ஒரு வணக்கம். எனவே வசதியிருப்பவர்கள் நோன்பை வைக்கவும். மறந்து விடாமல் இருக்கவே இப்படி ஒரு ஞாபகமூடடல்

44 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

Assalaamu alaikkum warah...

Weldone Bro.Suvanappriyan.
This is what we want to say about Islam.

Let the people think and get the right path with the help of Almighty through Quran and hadhees.

In your post,
each and every line is perfect.
Jazakkalaah khair.

சிராஜ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சுவனப் பிரியன்,

நல்ல ஆக்கம். நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு சொன்ன அறிவுரை நிச்சயம் அறிவுசார்ந்தது. அவர் குரானை படித்து இஸ்லாத்தை விளங்கிக்கொள்ள அல்லாஹ் அவருக்கு உதவி புரிவானாக.

சிராஜ்

சிராஜ் said...

/பின்வரும் கமெண்டை நீங்கள் வெளியிட வேண்டாம். இது உங்களுக்காக பிரத்யேகமாக அனுப்பப்பட்டது./

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சுவனப் பிரியன்,

சகோ. முஹர்ரம் 9 மற்றும் 10 அல்லது முஹர்ரம் 10 மற்றும் 11 ஆம் நாட்களில் ஆசுரா நோன்பு வைக்கலாம் என்று எழுதி உள்ளீர்கள். நான் அறிந்த வகையில் 10 மற்றும் 11 ஆம் நாள் நோன்பு வைப்பதற்கு ஆதாரம் இல்லை என்றே நினைக்கிறேன். இதை ஒரு முறை சரிபார்த்துக்கொள்ளவும்.

சிராஜ்

mujahidh ali said...

அஸ்ஸலாம் அழைக்கும்

மாஷா அல்லாஹ் அருமையான வேண்டுகோள்.

அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்கட்டும்.

pichaikaaran said...

தர்கா வழிபாடு என்பது இஸ்லாமில் ஏற்கப்பட்ட ஒன்று.. இறந்து போன சாதாரண மனிதன் நிலை வேறு, இறை அடியார்கள் நிலை வேறு

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆசிக்!

//Let the people think and get the right path with the help of Almighty through Quran and hadhees.//

உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.

//In your post,
each and every line is perfect.
Jazakkalaah khair.//

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! முஜாஹித் அலி!

//மாஷா அல்லாஹ் அருமையான வேண்டுகோள்.

அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்கட்டும்.//

உங்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ சிராஜ்!

//நல்ல ஆக்கம். நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு சொன்ன அறிவுரை நிச்சயம் அறிவுசார்ந்தது. அவர் குரானை படித்து இஸ்லாத்தை விளங்கிக்கொள்ள அல்லாஹ் அவருக்கு உதவி புரிவானாக.//

உங்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திககிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

/பின்வரும் கமெண்டை நீங்கள் வெளியிட வேண்டாம். இது உங்களுக்காக பிரத்யேகமாக அனுப்பப்பட்டது./

மார்க்கத்தை அனைவரும் தெரிந்து கொள்வதற்காக உங்கள் பின்னூட்டத்தையும் வெளியிட்டு அதற்கு ஆதாரமான ஹதீதையும வெளியிடுகிறேன்.

இறைவனின் மார்க்கத்தில் தவறுகள் நேர்ந்து விடக் கூடாது என்ற அக்கறை உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது. இதை வரவேற்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!


இறைவனுடைய தூதர் அவர்கள் முஹர்ரம் 10 ஆம் நாளில் தாமும் நோன்பு நோற்று நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள் அது யூதர்களும் கிறித்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள் 'இறைவன் நாடினால் அடுத்த ஆண்டில் நாம் முஹர்ரம் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்போம்' என்று கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் நபியவர்கள் மரணித்து விட்டார்கள்.

மற்றொரு அறிவிப்பில் அடுத்த ஆண்டு வரை உயிரோடு இருந்தால் ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.

அறிவிப்பவர் இப்னு அப்பாஸ்

நூல்: முஸ்லிம் 1916, 1917

இங்கு இறைத்தூதர் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று கூறும் ஆதாரபூர்வமான ஹதீது உள்ளதால் நாம் 9ம் 10ம் நோன்பு வைக்க வேண்டும் என்று அறிகிறோம்.

suvanappiriyan said...

பார்வையாளன்!

//தர்கா வழிபாடு என்பது இஸ்லாமில் ஏற்கப்பட்ட ஒன்று.. இறந்து போன சாதாரண மனிதன் நிலை வேறு, இறை அடியார்கள் நிலை வேறு//

ஒருவரை நல்லடியார் இறைவனின் நேசர் என்று உங்களால் எப்படி அறிய முடியும்? அவரது உள்ளத்தை ஊடுருவி உங்களால் பார்க்க முடியுமா?

'தரை மட்டத்துக்கு மேல் கட்டப்படும் அனைத்து சமாதிகளையும் தரை மட்டமாக்கு' என்று தனது மருமகன் அலியிடம் நபிகள் நாயகம் சொன்னதை மறந்து விட்டீர்களா? நபிமார்களை இறை நேசர் என்று சொல்லலாம். ஏனெனில் இறைவனே அவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நபிமாரகளின் அடக்கத்தலங்களையும் விழா கொண்டாடும் இடமாக ஆக்கக் கூடாது என்பது நபிகளின் கட்டளை

437. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வண்ணஸ்தலங்களாக ஆக்கிய யூதர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!"

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஆதாரம் புகாரி

கடடக் கூடாது என்பதற்கு ஆதாரபூர்வமான ஹதீதை தந்து விட்டேன். தர்ஹா கட்டலாம் என்பதற்கு ஆதாரத்தை நீங்கள்தான் தர வேண்டும்.

valparai pavin homestay said...

:-)


for follow ups!

suvanappiriyan said...

//நான் அறிந்த வகையில் 10 மற்றும் 11 ஆம் நாள் நோன்பு வைப்பதற்கு ஆதாரம் இல்லை என்றே நினைக்கிறேன். இதை ஒரு முறை சரிபார்த்துக்கொள்ளவும்//

சகோ சிராஜ்!

நான் பணி புரியும் இடத்தில் 9ம் 10ம் விட்டுப் போனவர்கள் 10ம் 11ம் நோன்பு வைப்பார்கள். இதை அனுசரித்தே நான பதிவிலும் எழுதியது. நீங்கள் சுடடிக் காட்டிய பிறகு மற்றும் சகோ ஆசிக் மெயில் மூலமும் 11ல் நோன்பு வைக்க சொல்லி வரும் ஹதீது பலஹீனமானது என்று வருவதால் முன்பு எழுதியதை நீக்கி விட்டேன். பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

suvanappiriyan said...

திரு புதிய தென்றல்!

உங்களின சிந்திக்க வைக்கும் பல பதிவுகளையும படித்தேன். இதற்கெல்லாம் தீர்வாக தனி தமிழ்நாடு என்ற கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியது. கோரிக்கைகளை போராடித்தான் பெற வேண்டும். தமிழர்களின் பிரச்னைக்கு இலங்கையில் தனி ஈழம் எவ்வாறு பிரச்னையை தீர்க்காதோ அதே போல் தனி தமிழ் நாடும் பிரச்னையை தமிழர்களுக்கு அதிகரிக்கவே செய்யும். வைகோவுக்கும் சீமானுக்கும் அரசியல் பண்ண இந்த கோஷம் சரி வரலாம் நடைமுறைக்கு ஒத்து வராது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//மேல உள்ள கேள்விகளுக்கு ஓரளவிற்கு விடை தெரிந்தாலும் , அடியேன் இஸ்லாமிய விசயங்களில் ஒரு கத்துக்குட்டி என்பதால் விசயம் அறிந்தவர்கள் விடை தருவார்களா?//

அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ சர்புதீன்

கீழே கொடுத்துள்ள லிங்கில் சென்று உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/shiyakal_kolkai_varalaru/

pichaikaaran said...

”தர்ஹா கட்டலாம் என்பதற்கு ஆதாரத்தை நீங்கள்தான் தர வேண்டும்.”

இதோ பாருங்கள்..


கப்ருகளை ஜியாரத் செய்வோம்......... அது உலகப் பற்றை நீக்கும். மறுமையை நினைவுபடுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயிதுல் குத்ரீ (ரலி) நூல் : அஹ்மது

pichaikaaran said...

நண்பரே,,, ஆதாரபூர்வ செய்திகளை உங்கள் சிந்தனைக்கு வைக்க கடமைப்பட்டு இருக்கிறேன்

*****************



நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது தாயாரில் அடக்கத் தலத்தை சியாரத் செய்த போது அழுதார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அபோது அவர்கள் என் தாயாடுக்காக பாவ மன்னிப்பு தேட நான் என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. என் தாயாரின் அடக்கத்தலத்தை சியாரத் செய்ய் அனுமதி கேட்டேன். அதற்கு அல்லாஹ் அனுமதித்தான். எனவே நீங்களும் கப்ரை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனின் அது மரணத்தை நினைவுபடுத்தும் என்று கூறினார்கள்.

suvanappiriyan said...

பார்வையாளன்!

//கப்ருகளை ஜியாரத் செய்வோம்......... அது உலகப் பற்றை நீக்கும். மறுமையை நினைவுபடுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயிதுல் குத்ரீ (ரலி) நூல் : அஹ்மது//

இந்த ஹதீது சொன்னது ஊரில் எல்லோரும் பொதுவாக அடக்கப்படும் பொது மைய வாடியை. அந்த அகன்ற மையவாடியில் நீங்கள் நுழைந்தவுடன் உங்களுக்கு மறுமையின் பயம் வரும். அது உண்மைதான்.

ஆனால் நீங்கள் குறிப்பிடும் தர்ஹாக்களில் அந்த எண்ணம் வருமா? ஒரு புறம் ரிகார்ட் டான்ஸ், மறுநாள் நாகூர் ஹனீபா இசைக் கசசேரி, பணங்களை வைத்து விளையாடப்படும் சூதாட்டம், கூட்டத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக கலப்பது, வாண வேடிக்கை, இத்தனை கூத்துகளையும் நடத்தி விட்டு 'மகானின் அருளாசி பெற்றுச் செல்லுங்கள்' என்று போர்டும் வைககிறீர்கள். முகமது நபி சொன்ன 'கபுர் ஜியாரத்' இதுதானா என்று உங்கள் மனசாட்சியிடமே கேட்டுப் பாருஙகள்.

//நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது தாயாரில் அடக்கத் தலத்தை சியாரத் செய்த போது அழுதார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அபோது அவர்கள் என் தாயாடுக்காக பாவ மன்னிப்பு தேட நான் என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. என் தாயாரின் அடக்கத்தலத்தை சியாரத் செய்ய் அனுமதி கேட்டேன். அதற்கு அல்லாஹ் அனுமதித்தான். எனவே நீங்களும் கப்ரை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனின் அது மரணத்தை நினைவுபடுத்தும் என்று கூறினார்கள்.//

நபிகள் நாயகம் தனது தாயாருக்காக கேட்டார்கள். அதுபோல் உங்களுக்கும எனக்கும் கேட்க ஆதாரமிருக்கிறது. ஆனால் தர்ஹாக்களில் மக்கள் செல்வது தங்களின் குறைகளை அந்த மகானிடம் எடுத்துச் சொல்லவே! அதாவது இறைவனிடம் கேட்க வேண்டியதை தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களிடம் சென்று கேட்கிறார்கள். இது இணை வைத்தலாகும். குர்ஆனில் இறைவன் இதை மன்னிக்கவே மாடடேன் என்கிறான். நீங்கள் நாகூர் தர்ஹாவுக்குச் செல்வது அங்கு அடங்கியிருக்கும் அப்துல் காதரின் பாவங்களை பிழை பொறுக்க இறைவனிடம் கேட்பதற்காகவா செல்கிறீர்கள். நாகூரில் அடங்கியிருப்பவர் உங்களின் ரத்த சொந்தமும் இல்லையே! இதற்கு விளக்கம் தாருங்கள்.

தராசு said...

வாங்க நண்பரே,

இத்தனை நாளா நீங்க தான் எதோ மாற்றுக் கருத்துக்கள் இல்லாம் ஒற்றுமையா இருக்கீங்கன்னு நினைச்சுகிட்டிருந்தேன், இப்ப நீனகளும் கிளம்பீட்டீங்களா, ரைட்டு.... எங்க போனாலும் அந்த ஒரு இடத்துக்குதான்யா வருவீங்க, இறைவன் ஒருவனே, அவன் அரூபி, அவனை அடைக்கும் தாழ் இதுவரைக்கும் கண்டு பிடிக்கலையா, பின்ன ஏன் இந்த மார்க்க பேதம், விடுங்க, டேக் இட் ஈஸி, ரஹ்மானுக்கு தர்கா வாசல் ப்டியில இறைவன் தெரிஞ்சார்னா தாரளமா பாடட்டுமே, உங்களுக்கு அவனை வேறு விதத்தில் ஆராதிக்க மனம் விழைகிறதுன்னா அப்படி செய்யுங்களேன், அதை விட்டுட்டு ஹதீஸ், அது இதுன்னுட்டு, ஒண்ணும் மட்டும் புரிஞ்சுக்கோ நண்பா, எத்தினி ருசியான நதியா இருந்தாலும் சரி, கடைசில கடல்லதான் கலக்கணும். கடல் ஒண்ணுதான், நதிதான் வேற, ரைட்டா,

இனிமேலாவது நான் செய்யறது ரைட்டு, அவன் செய்யறது தப்புனு நமக்கு நாமே நியாயம் தீர்க்காமல் இருப்போம், ஏன்னா பாவம் செய்யாதவந்தான் முதல்ல கல் எறியணும் தெர்தா ரைட்டு, மறுபடியும் சந்திப்போம்.

suvanappiriyan said...

நண்பர் தராசு!

//இத்தனை நாளா நீங்க தான் எதோ மாற்றுக் கருத்துக்கள் இல்லாம் ஒற்றுமையா இருக்கீங்கன்னு நினைச்சுகிட்டிருந்தேன், இப்ப நீனகளும் கிளம்பீட்டீங்களா, ரைட்டு....//

ஒறறுமை குலைந்து விடக் கூடாது என்பதற்காககத்தான் இந்த முயற்ச்சி நண்பரே!

//ரஹ்மானுக்கு தர்கா வாசல் ப்டியில இறைவன் தெரிஞ்சார்னா தாரளமா பாடட்டுமே,//

குர்ஆன் வசனத்தையும் இணைத்து இஸ்லாமிய வட்டததுக்குள் அதனை கொண்டு வருவதுதான் பிரச்னையே! தனிப்பட்ட முறையில் தனது வழிபாடாக செய்தால் யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை.

//இனிமேலாவது நான் செய்யறது ரைட்டு, அவன் செய்யறது தப்புனு நமக்கு நாமே நியாயம் தீர்க்காமல் இருப்போம், ஏன்னா பாவம் செய்யாதவந்தான் முதல்ல கல் எறியணும் தெர்தா ரைட்டு, மறுபடியும் சந்திப்போம்.//

ஒரு தவறை செய்து அதற்கு ஆதாரமாக குர்ஆனையும் காண்பித்தால் அதை தடுப்பது ஒவவொரு முஸ்லிமின் கடமை சகோதரரே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு சாரங்!

//50:7 – and the earth we had spread it out and set thereon firm mountains.
அரபிக் அறிந்த எல்லாரும் இதை தட்டை என்ற் மொழி பெயற்பபார்கள் அனால் இந்த அறிவியல் உன்மை வெளி வந்ததும் உடனே அந்தர் பல்டி.//

பூமியை நீட்டினோம்
-குரஆன் 50:7
'இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30

'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு 'விரித்தல்' என்ற ரீதியில் பொருள் கொள்வதுதான் அரபு இலக்கணத்தின் படி சரியாகும்.

'பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.

இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆன் கூறுகிறது. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!

'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஸ்டாஃபென் ஹாக்கிங்!

இந்த வசனம் அறிவியலை உண்மைபடுத்துகிறதா? அல்லது பொய்ப்படுத்துகிறதா என்பதை சாரங்கின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

//ஞானிகளை கடவுளுக்கு சமநாமாக வைக்க ஒரு ஹிந்து தயங்க மாட்டான். கடவுளை விட ஒரு படி மேல் வைக்கவும் யோசிக்கமாட்டான். ஹிந்துக் க்டடவுள் இப்படி செய்தால் கோபிக்க மாட்டார் . அவர் காட்டு மிராண்டி அல்ல.//

இதற்குதான் வேதத்திலிருந்து ஆதாரம் கேட்டேன். 'குர்ஆனைப் போல் இந்து மதவேதங்கள் அப்படியே மனிதர்கள் பினபற்றுவதற்காக அல்ல' என்று நீங்கள் வாதிட்டால் வேதத்தின் பயன்தான் என்ன? விளக்கம் சொல்லுங்கள.

மற்றவற்றிற்கு வேலை முடிந்து வருகிறேன்.

Anonymous said...

நபி(ஸல்)அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலை)அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை)அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்" என்று யூதர்கள் கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்' என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்: புகாரி(3397)

இது தான் ஆஷூரா நோன்பு வந்த கதை. அது யூதர்களின் பழக்கம், முகமது அதை தன் இனத்தின் பழக்கமாக மாற்றிக்கொண்டார். இன்னும் இஸ்லாமிய பழக்க வழக்கங்களையும் குரானையும் ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே பிறரிடம் இருந்து அடித்த காப்பிதான்.

suvanappiriyan said...

//இது தான் ஆஷூரா நோன்பு வந்த கதை. அது யூதர்களின் பழக்கம், முகமது அதை தன் இனத்தின் பழக்கமாக மாற்றிக்கொண்டார். இன்னும் இஸ்லாமிய பழக்க வழக்கங்களையும் குரானையும் ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே பிறரிடம் இருந்து அடித்த காப்பிதான்.//

ஹலோ அனானி!

யூதர்கள், கிறித்தவர்கள், இந்து மத வேதங்கள் என்று உலகில் உள்ள அனைத்து வேதங்களுமே ஒரு இறைவனால் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டவையே. எனவே தான் அனைத்திலுமே ஒரு பொதுவான ஒற்றுமையை காண முடியும். பிரச்னை அந்த வேதங்களில் மனித கரங்கள் புகுந்ததால் பொலிவிழந்து கிடக்கிறது. எனவேதான் அவர்களின் நடவடிக்கை குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கிறது. மோசே, ஏசு, ஆப்ரஹாம் என்ற அனைவருமே முகமது நபியைப் போன்ற இறைத் தூதர்களே!

பைபிளிலும், தோராவிலும் சில ஒற்றுமைகள் குர்ஆனோடு இருந்தாலும் பல வேற்றுமைகள் இருக்கின்றன. இவை எல்லாம் எங்கிருந்து வந்தன என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

Anonymous said...

//பைபிளிலும், தோராவிலும் சில ஒற்றுமைகள் குர்ஆனோடு இருந்தாலும் பல வேற்றுமைகள் இருக்கின்றன. இவை எல்லாம் எங்கிருந்து வந்தன என்று சற்று யோசித்துப் பாருங்கள்.//
யோசித்து பார்த்தேன் , இந்த ஹதீஸ் கிடைத்தது

(ஹதீஸ், புகாரி 4483

உமர் ரழியல்லாஹ{ அன்ஹ{ கூறுகிறார்:

'மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்' அல்லது 'என் இறைவன் மூன்று விஷயங்களில் என்னுடன் உடன்பட்டான்.

1 .' நான் (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) அவர்கள் நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே!'' என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.) மேலும்,

2 .நான், (அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லாவகை மனிதர்களும்) வருகிறார்கள். எனவே, (தங்கள் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களின் அன்னயரை பர்தா அணியும் படி தாங்கள் கட்டளையிடலாமே!'' என்று கேட்டேன் உடனே, அல்லாஹ் பர்தா(சட்டம்) குறித்த வசனத்தை அருளினான்.

3 .நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. எனவே, அவர்களிடம் நான் சென்று, 'நீங்கள் (நபி(ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதை) நிறுத்திக்கொள்ளவேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான்'' என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களின் துணைவியரில் ஒருவரிடம் நான் சென்றபோது, 'உமரே! தம் துணைவியருக்கு உபதேசம் செய்ய இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்!'' என்று கேட்டார். அப்போது அல்லாஹ், 'இறைத்தூதர் உங்களை விவாக ரத்து செய்தால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்'' எனும் (திருக்குர்ஆன் 66:5வது) வசனத்தை அருளினான். )

இப்படிதான் வந்தது என்று தெரிந்தது. முகமதுவிற்கு எதாவது காரியம் ஆக வேண்டி இருக்கும்போது அல்லா வருவார். அவரது நண்பர்களுக்கும் எதாவது காரியம் ஆக வேண்டி இருக்கும்போதும் அல்லா வருவார். இப்படி எல்லாராலும் சொல்ல முடியுமே, இதற்கு எதற்கு வஹீ எல்லாம் வர வேண்டும்.

pichaikaaran said...

"இறைவனிடம் கேட்க வேண்டியதை தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களிடம் சென்று கேட்கிறார்கள். இது இணை வைத்தலாகும்"

இது இணை வைத்தல் ஆகாது. உடம்பு சரி இல்லை என்றால் டாக்டரிடம் போகிறோம். அதற்காக இறைவனை நம்பாமல், டாக்டரை பார்க்க செல்கிறோம் என சொல்ல கூடாது.

நம்மை குணப்படுத்திய மருத்துவர்க்கு நன்றி சொல்கிறோம் அது இணை வைத்தல் ஆகாது.

நம் உயிரை காப்பாற்றியது இறைவன் தான் என்றாலும், மருத்துவருக்கும் நன்றி சொல்வது தவ்றாகாது..

அதே போலத்தான், தன்க்கு உதவி செய்த இஸ்லாமிய மகானை ரகுமான் மறக்காமல் போற்றுகிறார், அதற்காக இணை வைக்கிறார் என சொல்ல இயலாது.

மகான்களை போற்ற வேண்டும் எனப்தே இஸ்லாம் சொல்லும் கருத்து..

இதோ ஆதாரங்கள்

*****************************

அல்லாஹ்வுடைய பாதையில் வெட்டப்பட்டவர்களை மவுத்தானவர்களென்று சொல்லாதீர்கள். அவர்கள் ஹயாத்தையுடையவர்கள். ஆனால், அறியமாட்டீர்கள்" (2:154)

*********************
ஆண்டவனுடைய பாதையில் வெட்டப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நினைக்கவும் வேண்டாம். ஆனால் அவர்கள் ஜீவனுள்ளவர்கள். ஆண்டவன் பக்கமிருந்து ரிஸ்கை கொடுக்கப் படுகிறார்கள், ஆனந்தமாக இருக்கிறார்கள் (3:169,170)

suvanappiriyan said...

அனானி!

//இப்படிதான் வந்தது என்று தெரிந்தது. முகமதுவிற்கு எதாவது காரியம் ஆக வேண்டி இருக்கும்போது அல்லா வருவார். அவரது நண்பர்களுக்கும் எதாவது காரியம் ஆக வேண்டி இருக்கும்போதும் அல்லா வருவார். இப்படி எல்லாராலும் சொல்ல முடியுமே, இதற்கு எதற்கு வஹீ எல்லாம் வர வேண்டும்.//

முகமது நபி சொந்தமாக குர்ஆனை இயற்றியிருந்தால் பின் வரும் வசனங்களை மறைத்திருக்கலாம்.

'முஹம்மதே! அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிககலாம்: அல்லது அவர்களைத் தண்டிக்கலாம்'
-குர்ஆன் 3;128

'முஹம்மதே! இறைவன் உம்மை மன்னித்தான் உண்மை கூறுவோர் யார் என்பது உமக்குத் தெளிவாகி பொய்யர்களை நீர் அறியும் முன் அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்'
-குர்ஆன் 9;43

உலகில் யாருமே தன்னை தாழ்த்திக் கொள்ள மாட்டார்கள். இங்கு முகமது நபியை கண்டிக்கும் பல வசனங்களை நாம் பார்க்கிறோம். அதை விட இன்றைய விஞ்ஞானம் எதை உறுதிப்படுகிறதோ அதனை அடசரம் பிசகாமல் குர்ஆனால் எப்படி சொல்ல முடிகிறது? உங்களைப் போன்றவர்களுக்கு குர்ஆன் ஒரு சவாலையே விடுகிறது

'இவர் குர்ஆனை இட்டுக் கட்டிக் கூறுகிறார்' என்று அவர்கள் கூறகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக் கட்டி 10 அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்: இறைவனையன்றி உங்களுக்கு இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறுவீராக!
-குர்ஆன் 11:13

இந்த சவாலை உலகில் இன்று வரை எவரும் முறியடிக்கவில்லை: நீங்களும்தான் முயற்சி பண்ணி பாருங்களேன்.

எழுதப் படிக்கத் தெரியாத படிப்பறிவு கொஞசமும் இல்லாத ஒரு சமூகத்திலிருந்து வந்தவர்தான் முகமது நபி என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

suvanappiriyan said...

பார்வையாளன்!

//நம் உயிரை காப்பாற்றியது இறைவன் தான் என்றாலும், மருத்துவருக்கும் நன்றி சொல்வது தவ்றாகாது..//

டாக்டரை நேரிடையாக நிங்கள் பார்க்கிறீர்கள். மருத்துவம் செய்வதற்காக 5 வருடம் படித்து பட்டம் வாங்குகிறார். உங்கள் குறைகளை கேட்டு மருந்தும் கொடுக்கிறார். ஒரு நேரத்தில் ஒருவருக்குத்தான் அவரால் வைத்தியம் பார்க்க முடியும்.

ஆனால் நாகூரில் அடங்கியிருப்பவர் மருத்துவம் படிக்கவில்லை. நீங்கள் சொல்வதை அவர் கேட்கிறார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் அவரிடம் பிரார்த்தித்தால் அது அவருக்கு விளங்கினால் அவர் இறைதன்மை பெற்று விடுவார். அப்படி ஒரு சம்பவம் ஏதாவது நடந்திருக்கிறதாக எந்த தகவலும் இல்லை.

நாகூர் தர்ஹாவில் சென்று உங்கள் தேவைகளை முறையிடுவதற்கு குர்ஆனிலிருந்து ஆதாரம் கேட்டேன். இதுவரை தரவில்லை.

நீங்கள் குறிப்பிடும் குர்ஆன் வசனம் போரில் கொல்லப்பட்டு ஷஹீதானவர்களை இறைவன் குறிப்பிடுகிறான். மண்ணறை வாழ்க்கையிலே அவர்கள் சுகமாக இருப்பதாக குர்ஆன் கூறுகிறது. நாகூரில் அடங்கியிருப்பவர் சொர்க்கவாசி என்று எப்படி தெரிந்து கொண்டீர்கள்? உங்களுக்கு வஹீ ஏதாவத வருகிறதா?

ஒரு பேச்சுக்கு அவர் சொர்க்கவாதியாக இருந்தாலும் அவரிடம் போய் உங்கள் குறைகளை முறையிட என்ன ஆதாரம் இருக்கிறது. அதைத்தான் நான் கேட்கிறேன்.

pichaikaaran said...

ஒரு பேச்சுக்கு அவர் சொர்க்கவாதியாக இருந்தாலும் அவரிடம் போய் உங்கள் குறைகளை முறையிட என்ன ஆதாரம் இருக்கிறது."

ஓர் இஸ்லாமிய மகானிடம் முறையிட்ட பின்புதான், ரகுமான் குடும்பம் துன்பங்களில் இருந்து விடுதலை பெற்றது என்பது வரலாறு.

சரி,, தனிப்பட்ட அனுபவங்கள் வேண்டாம். இஸ்லாம் என்ன சொல்கிறது? பாருங்கள்

**********************

நிச்சயமாக பூமியில் உலா வந்து கொண்டிருக்கும் சில மலக்குகள் அல்லாஹ்வுக்கு உள்ளனர். அவர்கள் எனது உம்மத்துகளிடமிருந்து எனக்கு ஸலவாத்தைச் சேர்ப்பித்துக் கொண்டிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: இமாம் நஸயீ(ரஹ்), இமாம் தாரமீ(ரஹ்))
********************

ஜும்ஆவின் தினத்தில் என்மீது அதிகமாக ஸலவாத் ஓதுங்கள் அது எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கப்ரில் மடிந்தவர்களாயிருக்கும் போது எங்களின் ஸலவாத்தை உங்களுக்கு எவ்வாறு எடுத்துக் காட்டப்படும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி தின்பதை விட்டும் தடை செய்துள்ளான் என்றார்கள். (ஷத்தாத்பின் அவ்ஸ் (ரலி) நூல்: இமாம் அபூதாவூத்(ரஹ்), இமாம் இப்னுமஜா(ரஹ்), இமாம் நஸயீ(ரஹ்), இமாம் தாரமீ(ரஹ்), இமாம் அஹ்மத்(ரஹ்), இமாம் இப்னுஹிப்பான்(ரஹ்)).

pichaikaaran said...

" தர்ஹா கட்டலாம் என்பதற்கு ஆதாரத்தை நீங்கள்தான் தர வேண்டும்"

ஆயிரம் ஆதாரங்கள் உள்ளன..

தர்க்கா, இறை நேசர்கள் , மகான்களுக்கு சக்தி உண்டா? - இஸ்லாம் என்ன சொல்கிறது?



*******************************

இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) "இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) "இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்; "நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்" என்று கூறினார்கள். (18:21).

அல்ஃகப் மஜ்ஜித் என்னும் இடத்தில் நபிமார்களின் 70 கப்ருக்கள் இருந்தன என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

இமாம் ஹைதமி(ரஹ்), இமாம் பஜ்ஜார்(ரஹ்)

king of kumari said...

அந்த ஹதீஸ்களுக்கு நீங்கள் விளக்கம் அளிக்காமல் வேறு ஒன்றை கூறி அவரே தன்னை இப்படி கூற மாட்டார் என்கிறீர்கள். அதனால் அது இறை வார்த்தை என்கிறீர்கள். தனக்கு ஆதாயம் வேண்டும் என்றால் மனிதன் எதையும் செய்வான், சொல்வான் சுவனப்ரியன். தன்னையே சாட்டையால் அடித்து கொண்டு காசுக்காக கை ஏந்துகிரானே அவன் என்ன தன்னை உயர்த்திக்கொண்டா அந்த காரியத்தை செய்கிறான்.
கோமான் வீட்டு மகனான ராகுல் காந்தி ஏழைகள் வீட்டில் உணவு அருந்துகிறார், அவர்களுடன் மண் சுமக்கிறார். இப்படி தன்னை தாழ்த்தி கொள்வது எதற்காக என்பது நீங்கள் அறியாததா அல்லது நான் அறியாததா?அது போல இடை இடையே தன்னை பற்றியும் இப்படி கூறி கொண்டார் என்பதை தவிர வேறு விசேசம் ஓன்று இல்லை. நான் முதலில் சொன்ன ஹதீஸ்களுக்கு ஒரே இறைவன் சொன்னதால் ஒற்றுமை இருக்கும் என்றீர்கள். அந்த ஒற்றுமை யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் அவருக்கு பழக்கம் இருந்திருகிறது, அவர் மனைவியும் ஒரு கிறிஸ்தவராக இருந்தவர். என்பதால்தான் அந்த ஒற்றுமை வந்தது,
///பைபிளிலும், தோராவிலும் சில ஒற்றுமைகள் குர்ஆனோடு இருந்தாலும் பல வேற்றுமைகள் இருக்கின்றன. இவை எல்லாம் எங்கிருந்து வந்தன என்று சற்று யோசித்துப் பாருங்கள்//
நீங்கள் சொல்லும் வேற்றுமைகள் எங்கிருந்து வந்தன என்பதை தான் நான் சொன்ன இரண்டாவது ஹதீஸ் கூறுகிறது.

//எழுதப் படிக்கத் தெரியாத படிப்பறிவு கொஞசமும் இல்லாத ஒரு சமூகத்திலிருந்து வந்தவர்தான் முகமது நபி என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.//
எழுதபடிக்க தெரியாதவராக முகமது இருக்கலாம். ஆனால் தனக்கு வஹீ வந்ததா சொல்லி முகமது சொன்ன வசனங்களை அவரது நண்பர்கள் பலர்தான் எழுதி இருகிறார்கள் அப்படிதானே. அவர்கள் யாரும் எழுத படிக்க தெரியாதவர்கள் இல்லையே. அவர்களுடைய கருத்தையும் அதில் சேர்த்து கொண்டார்கள். அதற்கு இரண்டாவதாக சொன்ன ஹதீஸ்களே சாட்சி. இறைவன் சொன்னதாக அவர்கள் கூறி கொண்டதால் அதனை இறை வசனம் என்கிறீர்கள், அது தான் வித்தியாசம்.

//அதை விட இன்றைய விஞ்ஞானம் எதை உறுதிப்படுகிறதோ அதனை அடசரம் பிசகாமல் குர்ஆனால் எப்படி சொல்ல முடிகிறது?//
இன்றைய விஞ்ஞானம் குரானை படித்து தான் அதை கண்டு பிடித்தோம் இதை செய்தோம் என்று கூறவில்லையே. குரானில் உள்ள வசனங்களுக்கு இன்றைய விஞ்ஞானம் உறுதி படுத்துவதை வைத்து நீங்கள் விளக்கம் கொடுக்கிறீர்கள் அவ்வளவே. விஞ்ஞானம் எதுவுமே கண்டுபிடிக்காமல் இருந்தாலோ அல்லது அறிவியல் வளராமல் இருந்தாலோ எதை வைத்து விளக்கம் கொடுத்திருப்பீர்கள். 'திருப்பி தரும் வானம்' என்ற வசனம் தொலைக்காட்சி மற்றும் தொலை தொடர்பு சாதனங்களை கூறுவதாக ஒரு பதிவில் படித்தேன். இந்த தொலைகாட்சியும் தொலை தொடர்பு சாதனங்களும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால். அது மழையை பற்றி அந்த வசனம் கூறுகிறது என்று கூறி இருப்பீர்கள்.
(மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது.)
விக்கிப்பீடியாவில் இருந்து.............
இது தான் திருப்பி தரும் வானமே தவிர வேற ஏதும் இல்லை.
// உங்களைப் போன்றவர்களுக்கு குர்ஆன் ஒரு சவாலையே விடுகிறது//
அல்லா நகைச்சுவை செய்கிறாரா சுவனபிரியன், தன்னால் படைக்கபட்டவர்களிடம் சவால் விடுகிறாரே, ஏன் தன்னிடம் அவருக்கு நம்பிக்கை இல்லையா? ஒருவேளை அவரைவிட உயர்ந்தவரை படைதிருக்கிராரோ.

//இன்று வரை எவரும் முறியடிக்கவில்லை: நீங்களும்தான் முயற்சி பண்ணி பாருங்களேன்.//
முயற்சி பண்ணுகிறேனே, அப்படி பண்ணினால் எனக்கும் அல்லாவிற்கும் இடையில் தான் சவால். அல்லாவை வர சொல்லுங்களேன், நானும் ஒரு குரானை எழுதி கொடுக்கிறேன் அவரே சரி பார்க்கட்டும். "பிற மதத்தவனிடம் தொடர்பு வைக்க வேண்டாம், என்னை வணங்காதவன் காபிர், ஒத்து வரலேன்னா மனைவியை அடிக்கலாம்' என்பன மாதிரியான வசனங்களை கூற பெரிய மகானாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே. உலகில் உள்ள தத்துவ நூல்களையும் மத புத்தகங்களையும் ஆராய்ச்சி செய்தால் இதை விட சிறப்பாக ஒரு புத்தகத்தை எழுதலாம். எனது சவாலுக்கு அல்லா தயாராக இருக்கிறாரா என்று கேட்டு சொல்லுங்கள்.

suvanappiriyan said...

//எனது சவாலுக்கு அல்லா தயாராக இருக்கிறாரா என்று கேட்டு சொல்லுங்கள்.//

நம்பாதவர்களை பார்த்து இறைவன் கேட்கிறான். நீங்கள் இது போன்ற ஒரு அத்தியாயத்தை கொண்டு வர சொல்லி. நீங்கள் எழுதி முடித்தவுடன் அதனையும் குர்ஆனையும் ஒப்பிட்டு பொதுவில் விவாதிப்போம். முதலில் அத்தியாயங்களை எழுதுங்கள்.

Anonymous said...

http://www.ethirkkural.com/2010/02/blog-post_19.html. Kings of kumari avargale thayavu saithu intha pathivai padikkavum

sheik said...

King of kumari,

Be very careful about your words, you are challenging to the one who created you and me. We never get down for your words because as you say unknowingly.

Try to search the truth instead of just showing hatred.

sheik said...

King of kumari,

Be very careful about your words, you are challenging to the one who created you and me. We never get down for your words because as you say unknowingly.

Try to search the truth instead of just showing hatred.

king of kumari said...

//நம்பாதவர்களை பார்த்து இறைவன் கேட்கிறான். நீங்கள் இது போன்ற ஒரு அத்தியாயத்தை கொண்டு வர சொல்லி.//
நான் கடவுளை நம்புபவன் தான் சுவனப்ரியன். ஆனால் முகமது என்பவர் கூறும் கடவுளை இல்லை. அவர்தான் என்னை படைத்தார் அதாவது மனிதர்களை படைத்தார் என்றால் என்னிடம் சவால் விடும் தேவை அவருக்கு இல்லை. மனிதனிடம் சவால் விடும்போதே அவரின் கடவுள் தன்மை கேள்விக்கு உரியதாகி விட்டது
//நீங்கள் எழுதி முடித்தவுடன் அதனையும் குர்ஆனையும் ஒப்பிட்டு பொதுவில் விவாதிப்போம். முதலில் அத்தியாயங்களை எழுதுங்கள்.// விவாதிப்பது இருக்கட்டும். சவால் விடுபவர் அல்லா அல்லவா? அவர் எங்கே? சவால் மட்டும் தான் விடுவாரா. சவால் விட்டு விட்டு அப்படியே மறந்து விட்டாரா? சவால் விட்டவரும் அதை ஏற்பவரும் விவாதித்து கொள்வது தான் நடைமுறை. அவர் அல்லா என்பதால் நேரில் வரமாட்டார் தூதர் வழியாகத்தான் பேசுவார் என்றால் நீங்கள் அவரின் தூதரா சுவனப்ரியன் அவர்களே,

@Anonymous
//குரானின் இலக்கிய (literary miracles) ஆச்சர்யங்களை இந்த பதிவில் சிறிது பார்க்கவிருக்கிறோம்.//
இது தான் அந்த பதிவின் சாராம்சம்

இலக்கிய நயமும் கவிதை நயமும் இருப்பதால் அது கடவுளின் வார்த்தை என்றால் கவிஞர்களை எல்லாம் நம் கடவுள் என்று தான் சொல்ல வேண்டும்.
sheik
//Be very careful about your words, you are challenging to the one who created you and me.//
தெரியும் என்னை படைத்தவனும் கடவுள் தான் அவரை நான் நம்புகிறேன், சவால் விடும் கடவுளை அல்ல. மனித தன்மைக்கும் கடவுள் தன்மைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது நீங்கள்தான்.
குரானில் மனிதர்களை பார்த்து சவால் விட்டது அல்லா. நான் கூறியவற்றுக்கு விளக்கம் அளிக்காமல் அல்லாவின் சவாலை ஏற்கிறாயா என்று சுவனப்ரியன் கேட்கிறார். இந்த வார்த்தைகளை அவருக்கு கூறுங்கள். அதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை என்றால் முடியவில்லை என்று கூறுவது தான் பெருந்தன்மை. அப்படி இல்லாமல் சவாலை ஏற்று கொள்கிறாயா கேட்டால் வேறு என்ன சொல்ல சொல்கிறீர்கள்.
பொதுவாக முஸ்லிம்கள் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்று கூறுவதை கேட்டிருக்கிறேன். அதை நிரூபித்து விட்டீர்கள். தானே உயர்ந்தவன் என்னை விட பெரியவன் இல்லை என்று கூறுபவனை நோக்கி பலவித விமர்சனங்களும் கேள்விகளும் வரத்தான் செய்யும். அதை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாதவன் கேள்வி கேட்பவனை மிரட்டத்தான் செய்வான். அது போலதான் இஸ்லாமியர்களும், இக்கட்டான அல்லது உணர்வுபூர்வமான கேள்விகள் உங்களை நோக்கி எழும்போது நீங்கள் செய்வது இதே மிரட்டல் வேலையைத்தான். வெட்ககேடு இப்படி ஒரு மதத்தை தான் உலகில் பரப்ப துடித்து கொண்டிருகிறீர்கள். ஒன்று நன்றாக தெரிகிறது, மூளை மழுங்கிய உங்களை போன்றவர்களிடம் விவாதம் செய்வது வீண் என்று

Rafik said...

Dear King of Kumari,

May God bless all of us with peace and his blessings.

Thanks for your comments and questions. I appreciate that you are brave enough to put your questions and argue directly rather than keeping these questions in your heart and grow the hatred. Actually, This is the first step towards reaching the truth and right successful life.

Though I can answer your questions, I am not an expert.. but I can take you to the experts to understand more.. and even to argue..

You can visit this live one-on-one chat service at: http://www.islamreligion.com/articles/204/ so you may share with them your questions and concerns. It is online daily for most part of the day, but you can definitely catch them from 12 pm till 3 pm Eastern Time (5pm-8pm Greenwich Time).

Some more articles you may be interested in..

What is Islam: http://www.islamreligion.com/category/49/

Evidence Islam is Truth: http://www.islamreligion.com/category/33/

The Benefits of Islam: http://www.islamreligion.com/category/43/

Beliefs in Islam: http://www.islamreligion.com/category/50/

Prophet Muhammad, may God praise him: http://www.islamreligion.com/articles/22/

Worship and the Five pillars of Islam : http://www.islamreligion.com/category/56/

The Hereafter: http://www.islamreligion.com/category/59/

Stories of New Muslims: http://www.islamreligion.com/category/63/

The Veil unveiled: http://www.islamreligion.com/articles/287/

How I Came to Love the Veil: http://www.islamreligion.com/articles/482/

Women's Liberation through Islam: http://www.islamreligion.com/articles/355/

Islamic Morals and Practices: http://www.islamreligion.com/category/58/

Comparative Religion: http://www.islamreligion.com/category/68/

Video Section: http://www.islamreligion.com/videos/

Also we recommend that they read the following brief and informative ebooks that they may download or read online:

1) A Brief Illustrated Guide to Understanding Islam: http://www.islamreligion.com/ebooks/islam-guide.pdf

2) Islam is...: http://www.islamreligion.com/ebooks/Islam-Is.pdf

3) The True Religion: http://www.islamreligion.com/ebooks/True-Religion-of-God.pdf

4) The True Message of Jesus Christ: http://www.islamreligion.com/ebooks/The-True-Message-of-Jesus-Christ.pdf

5) Did God Become Man: http://www.islamreligion.com/ebooks/Did-God-Become-Man.pdf


Thanks and May God bless all of us with right path and best in the life.

Rafik said...

King of Kumari,

I did not see your previous comment before I sent my comment.

Your last comment with below words

"Muslimgal Moolai salavi seiyyappatavargal ena kelvi pattirikkiren"

"Neengal seivathu Mirattal velaithan"

"Vetkakedu. Ippadi oru mathathai.."

"Moolai mazhungiya ungalai pondravargal"

show what person you are.. not the one as I expected.

When you are able to pre-judge and give bad remarks on entire community people.. then people can understand what type of maturity and knowledge you have.

I can answer your question in a simple way.. YOUR QUESTIONS ARE NOT LOGICAL AT ALL.. IT IS SIMPLY CHILDISH..

When people like you made the allegation that these are not God's words but human.. then God simply asked back a very logical question.. can you bring a book like this, you can call anybody to help you except me.

இதுக்கு answer பன்னுங்கய்ய்யனா.. அத விட்டுட்டு.. God எப்படி மனுசன்கிட்ட சவால் விடலாங்கரதெல்லாம் ஒரு கேள்வியா? ஒரு குழைந்தைகூட இந்த கேள்விக்கு answer பன்னிருமே..

king of kumari said...

திரு ரபிக்
நீங்கள் கொடுத்த இணைய தளத்தை பார்த்தேன். அதில் இருப்பவற்றை படிக்க முயற்சி செய்கிறேன்.
//When you are able to pre-judge and give bad remarks on entire community people.. then people can understand what type of maturity and knowledge you have. //
ஒரு பழமொழி சொல்வார்கள், 'உன் நண்பனை பற்றி கூறு, உன்னை பற்றி சொல்கிறேன்' என்று. உலகம் எங்கும் உள்ள முஸ்லிம்களின் நடத்தை மற்றும் நான் சந்தித்த பழகிய முஸ்லிம்கள் எல்லாம் வைத்து தான் அதை கூறுகிறேன், நான் சொன்னவற்றில் எந்த தவறும் இல்லை. உங்களில் ஒன்றிரண்டு பேர் நங்கள் அப்படி இல்லை, இஸ்லாம் அன்பு மார்க்கம், அமைதி மார்க்கம் என்று வெளியில் கூறி கொள்ளலாம். ஆனால் உண்மை அப்படி இல்லை.
//I can answer your question in a simple way.. YOUR QUESTIONS ARE NOT LOGICAL AT ALL.. IT IS SIMPLY CHILDISH..//
எந்த வகையில் அதில் LOGIC இல்லை என்பதை விளக்கினால் நல்லது.
//When people like you made the allegation that these are not God's words but human.. then God simply asked back a very logical question.. can you bring a book like this, you can call anybody to help you except me. //

ரபீக் அவர்களே, நீங்கள் கடவுளின் வார்த்தைகள் என்று சொல்வது, உங்களுக்கு மட்டும்தான் அது கடவுளின் வார்த்தை. மற்றவர்களுக்கு அந்த புத்தகம் எந்த விதத்திலும் முக்கியத்துவம் இல்லை. அதை கடவுளின் வார்த்தையாக பார்க்க வேண்டிய தேவை மற்றவர்களுக்கு இல்லை. குழந்தைதனமாகவே கேட்கிறேன். மதம் என்ற ஒன்றை பின்பற்றும் எல்லாருக்கும் எதாவது ஒரு வேத புத்தகம் வழிக்காட்ட இருக்கவே செய்யும். கடவுள் சவால் விடுவது லாஜிக் இருப்பதாகவே இருக்கட்டும். ஒரு தகப்பன் தன் ஒரு வயது மகனிடம் நான் நூறு கிலோ எடையை தூக்குவேன், உன்னால் இப்போது தூக்க முடியுமா உதவிக்கு ஆள் வேண்டுமென்றாலும் வைத்துகொள் என்று சொன்னால் அது எந்த அளவு நகைப்புக்கு உரியதாக இருக்குமோ, அப்படித்தானே இருக்கிறது அல்லாவின் சவாலும்.
//இதுக்கு answer பன்னுங்கய்ய்யனா.. அத விட்டுட்டு.. God எப்படி மனுசன்கிட்ட சவால் விடலாங்கரதெல்லாம் ஒரு கேள்வியா? ஒரு குழைந்தைகூட இந்த கேள்விக்கு answer பன்னிருமே..//
ரபீக் அவர்களே, முதலில் நான் சொன்னதுபோல் அது உங்களுக்குதான் கடவுளின் வார்த்தை, மற்றவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் அதில் இல்லை. நீங்கள் இதுபோல ஒரு வார்த்தை உண்டா இது போல யாராவது கூற முடியுமா என்று சொல்லும் அளவுக்கு அப்படி ஒன்றும் சிறப்பாக நான் படித்த தமிழ் குர்ஆனில் இல்லை. அது தான் இனைய தளத்தில் நிறய கிடைக்கிறதே குழந்தைத்தனமாக நான் ஓன்று கேட்கிறேன், பெரியவர் நீங்கள் பதில் சொல்லுங்கள், அதாவது கடவுள் மனிதர்களை பார்த்து விட்ட இந்த சவாலை ஒருவர் ஏற்று கொள்கிறார் என்று வைத்து கொள்வோம், அதாவது குரானை போல் ஒன்றை உருவாக்கி காட்டு என்று கடவுள் கூறிய சவாலை ஏற்று ஒருவர் அதன்படி செய்ய முயன்றால் கடவுள் அவரது சவாலை ஏற்றவரை சந்திக்க நேரில் வருவாரா? அதாவது சவால் விட்டவரும் அதை ஏற்பவரும் நேரில் விவாதித்து கொள்வது தான் நடைமுறை. உதாரனத்திற்கு நான் உங்களிடம் ஒன்றை குறித்து சவால் விட்டால் போட்டி நம் இருவருக்கும் இடையேதான், நாம் தான் அதனை விவாதித்து முடிவு எடுத்து கொள்ள முடியும். நம்மால் முடிவு எடுக்க முடியாத பட்சத்தில், நம்மை விட அறிவில் உயர்ந்த ஒருவரை நடுவராக வைத்து கொள்வோம். அவர் தீர்ப்பு சொல்வார் இது தான் நடைமுறை. இங்கே கடவுள் மனிதர்களை பார்த்து விட்ட இந்த சவாலை ஒருவர் ஏற்கும் பட்சத்தில் அல்லாவும் நேரில் வரவேண்டும், அவர் அல்லா என்பதால் நேரில் வர மாட்டார் என்றால், தனக்கு பதிலாக தூதரை அனுப்ப வேண்டும். அப்படி இல்லை அத்தியாயத்தை எழுது விவாதிக்கலாம் என்று சுவனப்ரியன் கூறினார். அது ஏற்புடையது இல்லை. ஏன் என்றால் சவால் விட்டது சுவனப்ரியனோ நீங்களோ இல்லை. சர்வ சக்தி படைத்த அல்லா. so அல்லாவே நேரிலோ அல்லது தூதர் மூலமாகவோ சவாலை எற்பவருடன் விவாதிப்பது தான் முறை. எப்படி? அல்லா வருவாரா? வருவார் என்றால் சொல்லுங்கள் பிற மத வேதங்கள் மற்றும் அறிவியல் நூல்கள் மேலும் எங்கள் சொந்த கருத்துகள் இதுபோன்றவைகளை சேர்த்து குரானை விட சிறந்த நூலை எழுதி கொடுக்கிறோம். குரானும் இது போன்ற பலவற்றின் கலவை தானே.
நான் முதலில் சுவனப்ரியன் அவர்களிடம் சில ஹதீஸ்களை கொடுத்து கேட்டது இதை தான். ஆனால் அதற்கு ஒழுங்காக பதிலளிக்காமல் அல்லாவின் சவாலை ஏற்கிறாயா என்று கேட்கிறார், ஏற்கிறேன் என்று சொன்னால் வார்த்தையை யோசித்து பேசு என்று இன்னொருவர் சொல்கிறார். நீங்கள் குழந்தை தனமாக இருக்கிறது என்கிறீர்கள்.
இதற்கு நீங்கள் பதிலளித்தாலும் சரி, அல்லது ஒரு குழந்தையிடம் பதிலளிக்க சொன்னாலும் சரிதான்.

king of kumari said...

இதை சொன்னதற்காக மிரட்டல் ஏதும் விடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இந்த குழந்தை தனமான கேள்விக்கு பதிலை மட்டும் எதிர் பார்க்கிறேன்

Rafik said...

திரு. King of Kumari அவர்களே,
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக! 
 //நீங்கள் கொடுத்த இணைய தளத்தை பார்த்தேன். அதில் இருப்பவற்றை படிக்க முயற்சி செய்கிறேன்.// 
நன்றி. உங்கள் முயற்சிக்கு இறைவன் உதவி புரிந்து வெற்றியும் அளிப்பானாக. 

//ஒரு பழமொழி சொல்வார்கள், 'உன் நண்பனை பற்றி கூறு, உன்னை பற்றி சொல்கிறேன்' என்று. உலகம் எங்கும் உள்ள முஸ்லிம்களின் நடத்தை மற்றும் நான் சந்தித்த பழகிய முஸ்லிம்கள் எல்லாம் வைத்து தான் அதை கூறுகிறேன், நான் சொன்னவற்றில் எந்த தவறும் இல்லை. உங்களில் ஒன்றிரண்டு பேர் நங்கள் அப்படி இல்லை, இஸ்லாம் அன்பு மார்க்கம், அமைதி மார்க்கம் என்று வெளியில் கூறி கொள்ளலாம். ஆனால் உண்மை அப்படி இல்லை.//
பழமொழி .. உன் *நண்பனை* பற்றி கூறு உன்னை பற்றி கூறுகிறேன் என்பதே. உன் சமுதாயத்தில்  ஒருவனைப்பற்றி அல்லது பலரைப்பற்றி கூறு உன்னை பற்றி கூறுகிறேன் என்றா இருக்கிறது.?? இரண்டிற்கும் எவ்வளவு பெரிய வித்யாசம்.? வித்யாசம் பார்ப்பதே..முட்டாள் தனம். .   "வீரப்பன்" , "கோட்சே" , etc போன்றவர்கள் இந்துவாக இருப்பதினால் எல்லா இந்துக்களும் அப்படிதான் என்பது எவ்வளவு  முட்டாள் தனமோ.. ஒருத்தரை விடுங்கள்.. மலேகான், மெக்கா மஸ்ஜித், சம்ஜஹுட எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா, போன்ற இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்ற ஒரு தீவரவாத கூட்டம் இந்துக்களாக இருப்பதினால், அதே போன்று,  குஜராத்தில் 2002 ல் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் என்று கூட  பாரமால், முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக கற்பழித்து, எரித்து, சூறையாடி இன அழிப்பு செய்தார்களே ஒரு மிக பெரிய கூட்டம், அவர்கள் இந்துக்கள் என்பதற்காக.. அதே போல் Maoists,  Naxalites போன்ற தீவரவாதிகள் இந்துக்களாக இருப்பதினால்.. எப்படி அத்தனை இந்துக்களையும் குறைகூறுவது என்பது எவ்வளவு முட்டாள் தனமோ.. அதே போன்று.. திருபுராவின் NLFT , Northern Ireland, Romania, Ugando, US நாடுகளில் உள்ள கிறிஸ்துவ Extremist தீவரவாத இயக்கங்களில் உள்ளவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால், சமிபத்தில் 69 வாலிபர்களை கொன்று குவித்த நோர்வேயைச் சேர்ந்த "Anders breivik" என்பவன் கிறிஸ்துவராக இருப்பதினால்.. அணைத்து கிருஸ்துவர்களையும் தீவரவாதிகளாக நினைப்பது எவ்வாறு பைத்தியக்கார தானமோ..சிறு பிள்ளை தனமோ.. அப்படிதான் இருக்கிறது நீங்கள் கூறுவது. நீங்கள் பழகியவர்களில் சிலர் அயோக்கியர்களாக இருப்பதினால் அணைத்து முஸ்லிம்களையும் அவ்வாறு கூறுவது.. அதற்காக மதத்தையே தவறாக கூறுவது  உங்கள் அறிவு முதிர்ச்சியை. (Maturity ) காட்டுகிறது. 
முஸ்லிம் பெயர் வைத்து விட்டால் ஒருவன் உண்மையான முஸ்லிம் ஆகிவிட முடியாது.  இஸ்லாம்  சொல்படி சரியாக நடப்பவர்கள் தான் உண்மையான முஸ்லிம்.
இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். இந்திய அரசியல் சட்டப்படி.. நம் முன்னால் முதல்வர் கருணாநிதி ஒரு இந்து.. ஆனால் அவர் இந்து மத கோட்பாடுகளை யா  பின்பற்றுகிறார்.. அவரை வைத்து இந்துக்கள் எல்லாமே.. அவ்வாறுதான் கோட்பாடுகளை பின்பற்றுகிறவர்கள் என்று கூறமுடியுமா ?
ஒரு பள்ளியில் படிக்கும் ஒரு சிலர்கள் வழி தவறி சென்றால் எப்படி அந்த பள்ளியையே அல்லது அந்த ஆசிரயரையே அதற்கு காரணமாக ஆக்கலாமா ? ஒரு மதத்தை பற்றி தெரிந்து கொள்ள அதில் சொல்ல பட்ட கோட்பாடுகளையும்  அந்த மதத்தின் Authentic வேதங்களையும் புத்தகங்களையும் படிக்க வேண்டுமே தவிர.. டாஸ்மார்க்கில் தண்ணி அடிப்பவனை பார்த்து அவன் மதத்தை படிக்க கூடாது.   இஸ்லாம் எப்படி வாழ கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ள, ஒரு உண்மையான இஸ்லாமியன் வாழ்கையை படிக்க, முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அவரின் தோழர்கள் அபு பக்கர் (ரலி), உமர் (ரலி) போன்றோர்களின் வாழ்க்கையை படித்து பாருங்கள்.


மேலும் உங்களில் ஒருத்தர் நமக்கு எல்லாம் நன்கு தெரிந்தவர் எல்லா மதங்களிலும் அது மட்டும் அல்லாது மதங்களுக்கு எதிரான நாத்திக கோட்பாடுகளிலும் ஆராய்ச்சியோடு மட்டும் இல்லாது வாழ்ந்தும் பார்த்து இருக்கிறார். இறுதியில் தனது அறிவுக்கு சரியாக தோன்றிய  மதத்தை தேர்ந்து எடுத்திருக்கிறார். அவர் சொல்வதை நீங்களே கேளுங்கள். 
http://www.youtube.com/watch?v=VxLk_9cEdOk&feature=player_embedded 
http://www.youtube.com/watch?v=02XIkC5tyXM

Rafik said...

//எந்த வகையில் அதில் LOGIC இல்லை என்பதை விளக்கினால் நல்லது.//
அதைதானே நான் 
"When people like you made the allegation that these are not God's words but human.. then God simply asked back a very logical question.. can you bring a book like this, you can call anybody to help you except me. "
கடவுள் இவ்வாறு கேட்டதில் என்ன தவறு அது மட்டும் இல்லாது கடவுள் கேட்டது எவ்வளவு லாஜிக் ஆனா கேள்வி என்றும் கூறி இருக்கிறேன். 
//ரபீக் அவர்களே, நீங்கள் கடவுளின் வார்த்தைகள் என்று சொல்வது, உங்களுக்கு மட்டும்தான் அது கடவுளின் வார்த்தை. மற்றவர்களுக்கு அந்த புத்தகம் எந்த விதத்திலும் முக்கியத்துவம் இல்லை. அதை கடவுளின் வார்த்தையாக பார்க்க வேண்டிய தேவை மற்றவர்களுக்கு இல்லை. குழந்தைதனமாகவே கேட்கிறேன். மதம் என்ற ஒன்றை பின்பற்றும் எல்லாருக்கும் எதாவது ஒரு வேத புத்தகம் வழிக்காட்ட இருக்கவே செய்யும். கடவுள் சவால் விடுவது லாஜிக் இருப்பதாகவே இருக்கட்டும். ஒரு தகப்பன் தன் ஒரு வயது மகனிடம் நான் நூறு கிலோ எடையை தூக்குவேன், உன்னால் இப்போது தூக்க முடியுமா உதவிக்கு ஆள் வேண்டுமென்றாலும் வைத்துகொள் என்று சொன்னால் அது எந்த அளவு நகைப்புக்கு உரியதாக இருக்குமோ, அப்படித்தானே இருக்கிறது அல்லாவின் சவாலும்.//

King of Kumari அவர்களே,  என்ன சார் இது..? அந்த சிறுவன் தானே அந்த தகப்பனிடம் சென்று நீ தகப்பனே இல்லை நீ என்னை போன்று ஒரு சாதாரண சிறுவன் தான். அனால நீ தகப்பன் என்று கூறுகிறாய். சிறுவனான உனக்கு தகப்பனை போன்று உடல் வலிமை இருப்பதாக கூறுகிறாய் என்று சொன்னால்.. நம்முடைய தகப்பர்களாக இருந்திருந்திருந்தால் பெல்ட் எடுத்து ஒரு பிடி பிடித்திருப்பார்கள். .ஆனால் நீங்க சொன்ன கடவுள் என்ற தகப்பனோ..அப்படியா மகனே.. என் உடல் வலிமையை உனக்கு நிருபிக்க இதோ இந்த எடையை தூக்குகிறேன் .. உன்னால் தூக்க முடியுமா என்று கேட்டால்...நீ அப்படி கேளு ராசா.. என்று சொல்வோமா.. அல்லது நகைப்புக்குரியது என்று கூறுவோமா?

//ரபீக் அவர்களே, முதலில் நான் சொன்னதுபோல்...
... குரானும் இது போன்ற பலவற்றின் கலவை தானே. //

என்ன சொல்ல..இந்த பாராவில் ஏகப்பட்ட லாஜிக் இல்லாத கேள்விகள்.. படிப்பவர்களுக்கே புரியும். இருந்தாலும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

//..
ஒருவர் அதன்படி செய்ய முயன்றால் கடவுள் அவரது சவாலை ஏற்றவரை சந்திக்க நேரில் வருவாரா? .. //

Come on King of Kumari அவர்களே.. சவாலை சந்திக்க கடவுள் நேரில் எதற்கு வரவேண்டும். என்ன குத்து சண்டை சவாலா கடவுள் விட்டிருக்கிறார்..?

//அதாவது சவால் விட்டவரும் அதை ஏற்பவரும் நேரில் விவாதித்து கொள்வது தான் நடைமுறை. ..//
நம் இருவரும் என்ன இப்பொழுது நேரிலா விவாதித்து கொண்டு இருக்கோம்..? அதான் கடவுள் புத்தகத்தை கொடுத்து விட்டு சவாலையும் விட்டுருக்கிறாரே.. அதை எதிர்கொண்டு சவாலை முறியடிப்பதை விட்டுவிட்டு, நேரில் வருகிறாயா.. ஒத்தைக்கு ஒத்தை வரியா...என்று கேட்பதெல்லாம்.. என்ன சார் இது.. இப்ப நீங்க தான் கடவுளை மிரட்டிறீங்க.. (ஆனால் அவர் யாருடைய மிரட்டலுக்கும் மிரள மாட்டார் என்பது வேறு..) , ஒரு வேலை கடவுளே நேரில் வந்தால் உடனே நீங்கள் அவரை ஏற்று கொண்டு தானே ஆக வேண்டும், பிறகு அங்கு எங்கே சவால் இருக்கிறது...? லாஜிக் உடன் பேசுவோம்...தயவு செய்து.

//...
அல்லா வருவாரா? வருவார் என்றால் சொல்லுங்கள் பிற மத வேதங்கள் மற்றும் அறிவியல் நூல்கள் மேலும் எங்கள் சொந்த கருத்துகள் இதுபோன்றவைகளை சேர்த்து குரானை விட சிறந்த நூலை எழுதி கொடுக்கிறோம். குரானும் இது போன்ற பலவற்றின் கலவை தானே. ..//

இந்த போட்டியில்.. அல்லாஹ் அவருடைய ஆட்டத்தை ஆடிவிட்டார். உங்களை ஆட சொல்லிவிட்டார். இனி நீங்கள் தான் ஆட வேண்டும். It is your turn now. அதற்க்கு அல்லாஹ் வர வேண்டியது இல்லை. போட்டியில் இறங்கி ஜெயித்து காட்டுங்கள் முதலில். அப்பறம் பேசலாம்.. இது கலவையா ஒரிஜினலா என்று.

Rafik said...

//நான் முதலில் சுவனப்ரியன் அவர்களிடம் சில ஹதீஸ்களை கொடுத்து கேட்டது இதை தான். //
//
இப்படிதான் வந்தது என்று தெரிந்தது. முகமதுவிற்கு எதாவது காரியம் ஆக வேண்டி இருக்கும்போது அல்லா வருவார். அவரது நண்பர்களுக்கும் எதாவது காரியம் ஆக வேண்டி இருக்கும்போதும் அல்லா வருவார். இப்படி எல்லாராலும் சொல்ல முடியுமே, இதற்கு எதற்கு வஹீ எல்லாம் வர வேண்டும். //

இஸ்லாம் மற்றும் முஹம்மது நபியை பற்றி முழுவதும் தெரியாதவர்கள், அருமை பெருமைகளை புரியாதவர்கள், இந்த கேள்வியை கேட்டதில் தவறு இல்லை.

இறைவன் முஹம்மது நபி (sal) அவர்களிடம் 6000 சொச்சம் வசனங்கள் உள்ளடக்கிய திருக்குரானை ஒரே இரவில் கொடுத்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கச் சொல்லி, அதில் கூறப்பட்ட சட்டங்களை அன்று இரவே சட்டமாக்கச் சொல்லி ஏவவில்லை. ஏனென்றால் அது மக்களுக்கு சாத்தியமல்லாத காரியம். அது மட்டும் அல்லாது அப்பொழுது முஹம்மது நபி (sal) வாழ்ந்து வந்த அந்த அரபு நாடும் அதன் மக்களும் எல்லா வித சீர் கேட்ட செயல்களில் ஊறி போய் இருந்தனர். ஆதலால் இறைவன் தனது இறை வேதத்தை மற்றும் சட்டங்களை சிறிது சிறிதாக மக்களுக்கு கொண்டு செல்ல நாடியிருக்கிறான். ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவையான வசனங்களை அனுப்பி மக்களை சீர்படுத்தியிருக்கிறான். We call this process now as "Progressive Improvement". அப்பொழுதே இதை இறைவன் மக்களிடத்தில் செய்திருக்கிறான். அப்படி இறக்கப்பட்டது குரான் என்னும் இறை வேதம். அப்படி தேவையை கருதி அருளப்பட்டது தான் ஓமர் (ரலி) அவர்கள் சொன்ன சட்டங்களும் வசனங்களும். இதில் எந்த குளறு படியும் இல்லை.

எனது அறிவுக்கு உட்பட்டதை நான் கூறியிருக்கிறேன். ஆனால் இறைவனே எல்லாம் அறிந்தவன்.

//..வார்த்தையை யோசித்து பேசு என்று இன்னொருவர் சொல்கிறார். //

King of Kumari அவர்களே, மிரட்டுகிறார். மிரட்டுகிறார் என்று கூறுகிறீர்களே. சகோ. Sheik அப்படி என்னதான் கூறினார். "உங்களுடைய வார்த்தையை ஜாக்கிரதையாக உபயோகிங்கள். ஏனென்றால் நீங்கள் சவால் விடுவது உங்களையும் என்னையும் படைத்த இறைவனிடம்.." என்றார். இதில் எங்கே.. மிரட்டல் இருக்கிறது. King of Kumari அவர்களே, இங்கு படிப்பவர்களெல்லாம் முட்டாள்கள் இல்லை.

Rafik said...

உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்து விட்டேன்..

இனி எனது கேள்விகள்..

நாத்திகவாதிகள் கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்புபவர்கள் என்பதால், ஓர் நாத்திகவாதி இந்த கேள்விகளை கேட்டிருந்தால், அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் நீங்களோ ஒரு ஆத்திகர் என்று பெருமையாக கூறிகொள்கிரீர்கள், அணைத்து மதங்களுக்கும் வேத புத்தகம் என்று ஒன்று உண்டு என்று வேறு சொல்கிறீர்கள். அவ்வாறெல்லாம் சொன்ன நீங்கள் வசதியாக தன்னுடைய மதத்தையும் வேதத்தையும் மறைத்துவிட்டு திருகுரான் இறைவினால் அருளப்படவில்லை என்று சொல்வதை பார்க்கும்போது, ஏதோ நீங்கள் கடவுளை நேரடியாக பார்த்து அவருடன் காபி சாப்பிட்டுவிட்டு நேராக சுவனபுத்திரன் blogku வந்து இதை பேசுவது போல பேசுகிறீர்கள்.

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வாறு கடவுள் இருப்பதை நம்புகிறீர்களோ அல்லது உணர்கிரீர்களோ, அதே போல தான் இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல, உலகில் உள்ள கடவுளை நம்பும் அணைத்து ஆத்திகர்களும் அப்படிதான் ஏதோ ஒரு வகையில் நம்புகிறார்கள் அல்லது உணர்கிறார்கள். ஆனால் இதில் எது கடவுள் சொன்ன வழி, எந்த வழி சிறந்த வழி, எந்த வழி சிறந்த வாழ்கையை வாழ்வதற்கு சிறிய பெரிய என்றில்லாமல் எல்லா விசயங்களிலும் வழிகாட்டுகிறது, மனிதனை சீர்படுத்துகிறது, எது கடவுள் இருப்பதை அதிக தர்க்க ரீதியாக நிரூபிக்கிறது, எந்த வழி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது, என்பதெல்லாம் தான் கேள்வி. அதைத்தான் நாம் அடுத்தவர்கள் மனது புண்படாமல் விவாதித்து கண்டு கொள்ள வேண்டும்..


ஆத்திகர் இஸ்லாத்தை பற்றி விமர்சிக்க கூடாது என்ற நான் சொல்லவில்லை. அதற்கு ஒரு நெறியை பின்பற்ற வேண்டும் என்பது தான் என் கருத்து. அதை இரண்டு வகை படுத்தலாம்.

வகை. 1. : அதாவது, ஆத்திகரான ஒருவர் தனது மதம் எது என்று கூறிவிட்டு, அவர்கள் மதத்தில், குறிப்பிட்ட அந்த மூட நம்பிக்கையோ அல்லது தவறானா செயலோ இல்லை என்று நிருபித்து விட்டு, அடுத்த மதத்தில் உள்ள அந்த செயலை அந்த மதத்தினர் மனம் புண்படாத வண்ணம் கூறலாம். அதனால் வரும் தீங்குகளை எடுத்து கூறலாம். விவாதிக்கலாம். நேரான பாதையை நோக்கி அழைக்கலாம்.

வகை. 2. :அல்லது அவர் தன் மதத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட மூடநம்பிக்கையோ அல்லது தவறான செயலையோ இருப்பதாக ஒத்துக்கொண்டு விட்டு, இஸ்லாத்திலும் அவ்வாறு இருந்தால் அதை பற்றி தாராளமாக விமர்சிக்கலாம் அல்லது விளக்கம் கேட்கலாம்.

இந்த மூன்று வகையிலும் (நாத்திகர், ஆத்திகர் வகை 1 & 2.) இல்லாமல், வேறொரு வகை ஆத்திகர், தான் ஆத்திகர் என்று கூறிவிட்டு, ஆனால் தன் மதத்தை மறைத்து விட்டு, அடுத்த மதத்தை பற்றி விமர்சிப்பது, விமர்சிப்பது மட்டும் அல்லாமல் இது போன்ற..
(
"Muslimgal Moolai salavi seiyyappatavargal ena kelvi pattirikkiren"

"Neengal seivathu Mirattal velaithan"

"Vetkakedu. Ippadi oru mathathai.."

"Moolai mazhungiya ungalai pondravargal"

"இஸ்லாம் அன்பு மார்க்கம், அமைதி மார்க்கம் என்று வெளியில் கூறி கொள்ளலாம். ஆனால் உண்மை அப்படி இல்லை. "
)

அடுத்த மதத்தவர்களின் மீது துவேசம் கக்கும் சொற்களை கூறுவது, எனது இறுதி கேள்வியை கேட்க தூண்டிகிறது.. இதற்கெல்லாம் பதில் சொல்வதை விடுங்கள்.. கேள்வி கேட்பதற்கு ஒரு அருகதை வேண்டாமா..???

இது போன்ற முகத்தை மறைத்து, துவேசத்தை இறைக்கும் சொற்களை கூறும் நபர்களை .. சுவனபுத்திரன் BLOCK செய்யவேண்டும், அடுத்தவர்களின் நேரம் இது போன்ற கமெண்ட்ஸ்களுக்கு பதிலளித்து வீணாவதை தடுக்க வேண்டும்.

அதே சமயம் தன் துவேஷ வார்த்தைகளுக்கு அவர் வருத்தம் தெரிவித்து, இஸ்லாமை பற்றி தன் திறந்த மனதுடன் கேள்விகளுடனோ அல்லது ஒரு ஆரோகியமான விவாதத்திற்கோ வருவாரானால், அவரை Block செய்யாமல், அவருடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பது, இதை படிக்கு அணைத்து இஸ்லாமியர்களின் கடமையாகும்.

இறைவனே எல்லாம் அறிந்தவன். நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக..

suvanappiriyan said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

சகோ. ரபீக்!

மிகவும் அழகாக இஸ்லாம கூறிய முறையில் பொறுமையாக மிகவும் ஆணித்தரமாக பதில் அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். சகோ கிங் ஆப் குமரி இதற்கு என்ன பதில் அளிக்கிறார் என்று பார்ப்போம்.

நீண்ட விளக்கத்துக்கும் கருத்துக்கும் நன்றி!

Rafik said...

தங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.

சகோ. சுவனப்பிரியன், தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும், மேலும் உங்கள் இந்த பணி அனைவருக்கும் பயன்படவும் இறைவன் அருள்புரிவானாக.