Followers

Friday, July 13, 2012

உண்டு சுகிக்கவில்லை: உடுத்தி மகிழவில்லை:


முகமது நபியின் எளிய வாழ்க்கை!

தன்னைச் சுற்றி ஒரு அதிகார வர்க்கத்தை உண்டாக்கிக் கொள்ளத்தான் தன்னை ஒரு இறைத் தூதராக அறிவித்துக் கொண்டார் என்று ஒரு சாராரும், தனக்கு பொருளை ஆன்மீகத்தின் பெயரால் சுருட்டிக் கொள்ளத்தான் தன்னை இறைத் தூதராக அறிவித்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டை பொதுவாக பலரும் வைக்கின்றனர். ஆனால் இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நேர் எதிராகத்தான் நபியவர்களின் வாழ்க்கை அமைந்திருந்ததை நபித் தோழர்களின் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் ஆதாரங்களோடு சகோ பி.ஜெய்னுல்லாபுதீன் 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் ஒரு சில பகுதிகளை இங்கு பதிவாக தருகிறேன். படித்து பயன்பெறுங்கள்.

உடுத்தி மகிழவில்லை

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன.

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி 'இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்' என்று குறிப்பிட்டார். நூல் : புகாரி 3108, 5818

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து 'இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்' என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 1277, 2093, 5810

போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது என்பதையும், உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.



மேலும் உடனேயே அதை வேட்டியாக அணிந்து கொண்டதிலிருந்து எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடைத் தட்டுப்பாடு இருந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் இறுக்கமான கம்பளிக் குளிராடை அணிந்திருந்ததாகவும், மிகச் சில நேரங்களில் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்ததாகவும் சான்றுகள் உள்ளன. இதைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் ஒரு போர்வையை மேலே போர்த்திக் கொள்வார்கள். இரு கைகளும் வெளியே இருக்கும் வகையில் போர்வையின் வலது ஓரத்தை இடது தோளின் மீதும், இடது ஓரத்தை வலது தோளின் மீதும் போட்டுக் கொள்வார்கள். இதனால் அவர்களின் அக்குள் வரை முழுக் கைகளும் வெளியே தெரியும். பெரும்பாலும் அவர்களின் மேலாடை இதுவாகத் தான் இருந்துள்ளது. போர்வை சிறியதாக இருந்தால் கீழே ஒரு போர்வையைக் கட்டிக் கொள்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை விரித்து வைப்பார்கள். நூல் : புகாரி 390, 807, 3654

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையின் போது தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள். நூல் : புகாரி 1031, 3565

மக்கள் அனைவரையும் திரட்டி நடத்தப்படும் மழைத் தொழுகையின் போது கூட அக்குள் தெரியும் அளவுக்கு போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக அணிந்திருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வரியைத் திரட்ட ஒருவரை அனுப்பினார்கள். நிதி திரட்டி வந்த அவர் 'இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இது உங்களுக்கு உரியது' என்றார். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவர் தனது வீட்டிலோ, தனது தாய் வீட்டிலோ போய் அமர்ந்து கொள்ளட்டும்! இவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? என்று பார்ப்போம்' எனக் கோபமாகக் கூறினார்கள். பின்னர் அவர்களின் அக்குளை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தமது கைகளை உயர்த்தி 'இறைவா! நான் எடுத்துச் சொல்லி விட்டேனா?' எனக் கூறினார்கள். நூல் : புகாரி 2597, 6636, 6979, 7174, 7197

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலாடை பெரும்பாலும் சிறு போர்வையாகத் தான் இருந்தது என்பதையும் இதன் காரணமாகவே அவர்களின் அக்குள் தெரிந்துள்ளது என்பதையும் இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நிலையில் தம் பதவியையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி அணிந்து கொள்ளும் ஆடைகளைக் கூட அவர்கள் போதிய அளவுக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

உணவு, உடை போன்ற வசதிகளுக்காகத் தான் மனிதன் சொத்துக்களைத் தேடுகிறான். எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். மேனியை உறுத்தாத வகையில் மெத்தைகளையும் விரும்புகிறான். இந்த வசதிகளையெல்லாம் நாற்பது வயதுக்கு முன் அனுபவித்துப் பழக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது நினைத்தால் அந்தச் சுகங்களை அனுபவிக்கலாம் என்ற நிலையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் நேர்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது.


--------------------------------------------------

உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார். நூல் : புகாரி 5386, 5415

கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 6456

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991

அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய் முக்கியமானதாகும். பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது.



'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 730, 5862

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். 'ஏன் அழுகிறீர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?' எனக் கேட்டார்கள்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 4913

இது போன்ற அற்பமான தலையணையும் கூட போதுமான அளவில் இருந்ததா என்றால் அதுவுமில்லை.

இப்னு அப்பாஸ் என்பவரின் சிறிய தாயாரை நபிகள் நாயகம் (ஸல்) மணந்திருந்தார்கள். இப்னு அப்பாஸ் சிறுவராக இருந்ததால் அடிக்கடி தனது சிறிய தாயார் வீட்டில் தங்கி விடுவார். அப்போது நடந்த நிகழ்ச்சியை அவரே கூறுகிறார்.

'நான் எனது சின்னம்மா வீட்டில் ஓர் இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாக்கிலும், நபிகள் நாயகமும், எனது சின்னம்மாவும் தலையணையின் நீள வாக்கிலும் படுத்துக் கொண்டோம்' என்று அவர் கூறுகிறார். நூல் : புகாரி 183, 992, 1198, 4572

கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது. அதனால் தான் நீளமான பகுதியில் நபிகள் நாயகமும், அவர்களின் மனைவியும் தலை வைத்துக் கொள்ள இப்னு அப்பாஸ் அகலப் பகுதியில் தலை வைத்துப் படுத்திருக்கிறார்.

அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.

வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா?


11 comments:

VANJOOR said...

பா.ராகவன் :-

மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில்,

இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது.

காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல.

அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.

இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.

ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது. - பா.ராகவன்

சொடுக்கி >>>>>> 1. சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. - பா.ராகவன் <<<<<>>>>> 2. இஸ்லாம், முஹமது நபி (ஸல்) அவர்களைப்பற்றி அறிஞர்கள், ஞானிகள், சரித்திர ஆசிரியர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள் கூறுவது என்ன? – <<<<<>>>>> 3. நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா. அவசியம் படிக்க. <<<<<< படிக்கவும்

.

Anonymous said...

பர்மாவில் நடக்கும் முஸ்லிம் படுகொலைகளை பற்றி ஒரு பதிவு எழுதும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன், அங்கே நடக்கும் முஸ்லிம் படுகொலைகளை பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை.

-முபாரக் குவைத்

Anonymous said...

பாகிஸ்தானில் நடக்கும் இந்துக்கள் மீதான வன்முறையை பற்றியும் எழுதுங்களேன். காட்டுமிராண்டிகளால் அவர்கள் படும் துன்பம் எல்லாருக்கும் தெரியட்டுமே. அதை பற்றி எந்த அல்லாவின் பிள்ளையும் வாய் திறப்பதில்லையே.

suvanappiriyan said...

சலாம் வாஞ்சூர் பாய்!

//ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது. - பா.ராகவன்//

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து வரும் பின்னூட்டம். சௌக்கியமா! வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டளித்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ முபாரக்!

//பர்மாவில் நடக்கும் முஸ்லிம் படுகொலைகளை பற்றி ஒரு பதிவு எழுதும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன், அங்கே நடக்கும் முஸ்லிம் படுகொலைகளை பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை.//

நேரம் கிடைக்கும் போது இறைவன் நாடினால் அவசியம் பதிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அனானி!

//பாகிஸ்தானில் நடக்கும் இந்துக்கள் மீதான வன்முறையை பற்றியும் எழுதுங்களேன். காட்டுமிராண்டிகளால் அவர்கள் படும் துன்பம் எல்லாருக்கும் தெரியட்டுமே. அதை பற்றி எந்த அல்லாவின் பிள்ளையும் வாய் திறப்பதில்லையே.//

சிறுபான்மையினரை கொடுமைபடுத்துவது முஸ்லிமாகவே இருந்தாலும் அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். குர்ஆன் அவ்வாறு கட்டளையிடவில்லை. அப்படி செய்பவர்கள் இஸ்லாத்தை தவறாக விளங்கியுள்ளனர்.

மேலும் சமீபத்தில் சில பெண்களை கட்டாயமாக மதம் மாற்றியதாக ஒரு குற்றச்சாட்டு வந்தது. பிறகு அந்த பெண்களே தாங்களாகவே விரும்பி மாறியதாக அறிக்கை விட்டுள்ளனர். மேலும் அந்த பெண்களை பாகிஸ்தானிய இளைஞர்கள் திருமணமும் செய்து கொண்டுள்ளனர். தனது மனைவியை நெஞசறிந்து எவனாவது கொடுமை செய்வானா?

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யா; திருச்சியைச் சேர்ந்த ஜெயா; வேதாரண்யம் வட்டம், வண்டல் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா; பழனி அருகிலுள்ள க.கலையமுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா; தஞ்சை மாவட்டம் வடசேரியைச் சேர்ந்த சதுரா; இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 17 வயதான திருச்செல்வி; திண்டுக்கல் அருகேயுள்ள புள்ளக்காடுபட்டியைச் சேர்ந்த சங்கீதா; மானாமதுரை வட்டம் கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவக்குமார்; தண்டாரம்பட்டு வட்டம், ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான துரை; ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான இளங்கோ; கோவை மாவட்டத்திலுள்ள சோமனூரைச் சேர்ந்த அருந்ததியினரான சிற்றரசு; திருவாரூக்கு அருகேயுள்ள அரிதுவார்மங்கலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவாஜி இவர்கள் அனைவரும் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காகக் கொல்லப்பட்டவர்கள். கடந்த நான்காண்டுகளில் நடந்து பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ள கௌரவக் கொலைகளின் எண்ணிக்கையே இத்தனை இருக்கிறது என்றால், அம்பலத்துக்கு வராமலும், போலீசாரால் அமுக்கப்பட்டும் மறைக்கப்பட்ட கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை எத்துனை இருக்கக்கூடும்?

நீங்கள் பாகிஸ்தானின் பெண்களைப் பற்றி கவலைப்படுவதற்கு முன் நம் தமிழகத்தில் சாதி மாறி திருமணம் செய்ததற்காக தினந்தோறும் கொல்லப்படும் சகோதரிகளைப் பற்றி கொஞ்சமாவது கவலைப் பட்டால் அநியாயக் கொலைகள் தடுக்கப்படலாம். செய்வீர்களா?

suvanappiriyan said...

நபிகள் நாயகத்தின் அரண்மனை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துக்களை அங்கேயே விட்டு விட்டு எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.
மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும் 'இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்' எனக் கூறினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள். நூல் : புகாரி 3906

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்தப் பணத்தில் விலை கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் தான் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் இன்றளவும் இருக்கிறது.

தொழுகை நடத்துவதற்காக மட்டும் அந்த இடத்தை அவர்கள் வாங்கவில்லை. ஒரு அரசை நடத்துவதற்குத் தேவையான பல பணிகளைக் கருத்தில் கொண்டே அவ்விடத்தை வாங்கினார்கள்.

தொழுகைக்கான விசாலமான பள்ளிவாசல், மக்காவைத் துறந்து வந்த சுமார் எழுபது பேர் நிரந்தரமாகத் தங்கும் வகையில் வெளிப் பள்ளிவாசல், வீர விளையாட்டுகளுக்காகவும், இராணுவப் பயிற்சிக்காகவும் பள்ளிவாசலுக்கு முன் பரந்த திடல் ஆகிய அனைத்தும் அங்கே அமைக்கப்பட்டன.

பள்ளிவாசலை ஒட்டி தமக்கான வீடுகளையும் அமைத்துக் கொண்டார்கள். பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் தமக்காக அவர்கள் வீடு கட்டிக் கொள்ளவில்லை. மாறாக தம் சொந்தப் பணத்திருந்து வாங்கிய இடத்தில் மிகச் சிறிய அளவிலான இடத்தைத் தமக்காக ஒதுக்கிக் கொண்டார்கள்.

உலகிலேயே ஒரு மன்னர் தமது சொந்தப் பணத்தில் கட்டிய அரசாங்கத் தலைமையகம் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.

தமது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட நிலத்தில் தமக்காக அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தை ஒதுக்கியிருப்பார்கள்? இடங்களுக்கு பெரிய மதிப்பு இல்லாத அன்றைய காலத்தில் எவ்வளவு பெரிய இடத்தைத் தமக்காக வைத்திருந்தாலும் அது ஒரு பெரிய சொத்தாகக் கருதப்பட மாட்டாது. அத்தகைய காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீடு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நள்ளிரவில் எழுந்து அல்லாஹ்வைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போது தமது நெற்றியை நிலத்தில் வைத்து வணங்குவதை பலரும் பார்த்திருப்பீர்கள். இதை ஸஜ்தா என்று கூறுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது வீட்டில் ஸஜ்தா செய்வதற்குக் கூட அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை அறியும் போது அவர்களின் வீடு எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

'நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். நூல் : புகாரி 382, 513, 1209

ஒருவர் படுத்துறங்கும் போது அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இன்னொருவர் தொழுவது என்றால் 5ஷ்5 இடம் போதுமானதாகும். ஆனால், இந்த மாமனிதரின் வீடு அதை விடவும் சிறியதாக இருந்துள்ளது. மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை. மனைவி கால்களை மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது என்றால் என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை என்று பாருங்கள்!

suvanappiriyan said...

நபிகள் நாயகத்தின் அரண்மனை

பேரீச்சை மர ஓலையால் வேயப்பட்டதாகத் தான் அந்த அறை கூட அமைந்திருந்தது. அந்த வீட்டுக்குக் கதவுகளோ, ஜன்னல்களோ கிடையாது; திறந்த வாசல் தான். இரவில் பாயையே வாசல் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை முன்னரே பார்த்தோம்.

மாமன்னரை விட்டு விடுங்கள்! இதை வாசிக்கின்றவர்களில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒருவராவது இத்தகைய ஒரு வீட்டில் வசிக்க ஒப்புவாரா? தனது வீட்டை விட ஆயிரம் மடங்கு பெரிய இடத்தைச் சமுதாயத்துக்கு வழங்கிய ஒருவர் இப்படி வசிக்க விரும்புவாரா?

இந்த வரலாற்று நிகழ்ச்சி நபிகள் நாயகத்தின் வீட்டின் பரப்பளவை மட்டும் கூறவில்லை. அத்துடன் மற்றொரு செய்தியையும் சேர்த்துக் கூறுகிறது.

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரம் பணியும் போது நீங்களே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?' என்ற சந்தேகத்தை நீக்குவதற்காக 'அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என்று ஆயிஷா (ரலி) விளக்கம் தருகிறார்.

வீட்டில் விளக்கு இல்லாமல் இருளாக இருப்பதால் தான் விரலால் குத்துவதை வைத்து ஸஜ்தா செய்யப் போகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது.

உலக மகா வல்லரசின் அதிபதியாகத் திகழ்ந்த நபிகள் நாயகத்தின் வீட்டில் விளக்கு என்பதே இருந்ததில்லை என்றால் இதற்கும் கீழே ஒரு எளிமை இருக்க முடியுமா?

பாரசீக ரோமாபுரி மன்னர்களின் அரண்மனைகளில் தொங்கிய சரவிளக்குகள் பற்றி இங்கே கூறப்படவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள உதவும் மண்சிட்டிகளில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி எரிக்கப்படும் திரி விளக்கைத் தான் இங்கே குறிப்பிடுகிறார்கள். இந்த விளக்குகளுக்கு ஊற்றும் எண்ணெய் இருந்தால் காய்ந்த ரொட்டியைத் தொட்டுக் கொள்வதற்குப் பயன்படுத்தியிருப்பார்களே?

ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் மட்டும் தான் விளக்கு இல்லாமல் இருந்ததா என்றால் அதுவுமில்லை. 'அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அவர்கள் வீட்டில் என்றுமே விளக்கு இருந்ததில்லை என்பதைக் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டுச் சுவர் கூட போதுமான உயரம் கொண்டதாக இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள். நூல் : புகாரி 729

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசித்த வீட்டின் நிலை இது தான்.

செல்வச் செழிப்பில் புரண்டு, எல்லா விதமான சுகங்களையும் அனுபவித்துப் பழகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்ட கொள்கைக்காக அனைத்தையும் இழக்கிறார்கள்.

நாட்டை விட்டு விரட்டப்பட்ட பின் அவர்களின் காலடியில் அரபுப் பிரதேசமே மண்டியிடுகிறது. இப்போது அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழாவிட்டாலும் சராசரி மனிதன் ஆசைப்படும் வாழ்க்கையையாவது வாழ்ந்திருக்கலாம்.

ஆனாலும் அரசுப் பணத்தில் எதையும் தொடுவதில்லை என்ற கொள்கையின் காரணமாக கடை நிலையில் உள்ள ஏழையின் வாழ்க்கையை விட கீழான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.

அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைகள் இருந்தும் இவற்றைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதற்கு இவை போதுமான சான்றுகளாக உள்ளன.
-பி.ஜெய்னுல்லாபுதீன்(மாமனிதர் நபிகள் நாயகம்)

suvanappiriyan said...

திரு புனை பெயரில்!

//கடவுள் என்பது பயமுறுத்தப்படாமல், எதேச்சிகாரம் பண்ணாமல், அடுத்தவர்களின் வாழ்வைச் சிதைக்கும் எண்ணம் வராமல், கடத்தல், கஞ்சா, ஹவாலா , கடற்கொள்ளை, பெண்மோகம், என்ற சிந்தனைகள் வராமல் வாழும் எண்ணம் தர வேண்டும். அதனால் தான் இந்து மதச் சிந்தனைகளை பலரும் , தங்கள் மதம் மாறாமல், ஏற்றுக் கொண்டே இருக்கிறார்கள்….//

http://www.youtube.com/watch?v=BAOeO0O8sDs&feature=g-high-rec
இந்து மதம் என்றால் என்ன என்பதைப் பற்றி சைவ மதத்தின் வழி வந்த கருத்தம்மா புகழ் பெரியார்தாசன் கூறுவதையும் கொஞ்சம் கேளுங்கள்.
திரு மலர் மன்னன்!
//அமெரிக்கா, ஐரோப்பாவிலேதான் இஸ்லாத்தைக் கண்டித்து வெளியே வர முடிகிறது. மற்ற நாடுகளில் நிலைமை அவ்வாறு இல்லை.//

அமெரிக்காவில் இஸ்லாம் எந்த அளவு வீரியமாக வளர்ந்து வருகிறது என்பதை விக்கி தளம் தரும் செய்தியை கொஞ்சம் பார்த்து விடுங்கள். உங்களின் மற்ற கேள்விகளுக்கு வேலையை முடித்து விட்டு வந்து பதில் தருகிறேன்.

http://en.wikipedia.org/wiki/Islam_in_the_United_States

suvanappiriyan said...

ஸ்மிதா!

//Mind you, this was the only mosque in India which conducted the prayer session.
Islam oru amaidhi maargam. Sure.//

உசாமா பின் லாடன் இறந்ததற்காக தமிழகத்தில் தொழுகை நடத்தியதை பல முஸ்லிம்களும் கண்டித்துள்ளனர். ஆனால் இரட்டை கோபுர தாக்குதலுக்கு உசாமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சமீபத்திய அமெரிக்க ஆய்வுகள் கூறுகின்றன. சிஐஏ மற்றும் பெண்டகனின் வஞ்சகம் எந்த அளவு என்பதை ஒரு மேல் நாட்டு பத்திரிக்கையாளர் கூறுவதை பாருங்கள்.

பிரபல எழுத்தாளர் ஷிமோர் ஹெர்ஷ் கூறுவதாவது:
'பெண்டகன்' இது அமெரிக்காவின் இராணுவ தலைமையகத்தின் பெயர்.வேறு சொற்களில் சொன்னால் உலகில் கொலை பாதகங்களை நிகழ்த்தும் தலைமையகம். அமெரிக்காவின் இந்த இராணுவ தலைமையகம் உலகில் தாம் விரும்பும் இடத்தில் குண்டுகளை வெடிக்க வைத்திடும் திறமை கொண்டது. இதற்காக இது கைக்கொள்ளும் தந்திரங்கள் பலப்பல.
அந்த யுக்திகளுள் ஒன்று தனது முகவர்களை முஸ்லிம் அமைப்புகளுக்குள் திணித்து விடுவது. பின்னர் தான் விரும்பும் இடத்தில் குண்டுகளை வெடிக்க வைப்பது. பழி தானாகவே அந்த முஸ்லிம் அமைப்புகளின் மீது விழும். அந்த அமைப்புகளுக்கும் வேறு வழி இருக்காது. இப்படி செய்வதற்கு இரண்டு நோக்கங்கள் உண்டு.
ஒன்று முஸ்லிம் அமைப்புகளை அவை எத்துணைதான் சாத்வீகமான அமைதியான அமைப்புகளாக இருந்தாலும் அவற்றை தீவிரவாத அமைப்புகளாக மாற்றி விடலாம்.
இரண்டு அந்த அமைப்புகள் செயல்படும் நாடுகளில் குண்டு மழையை பொழியச் செய்து அமெரிக்க ராணுவத்தை நிரந்தரமாக தங்க வைப்பது. குண்டு வெடித்த நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமில்லை என்று புழுகி அந்நாட்டின் பாதுகாப்பைத் தன் வயப்படுத்தி விடுவது. தற்போது இதைத்தான் அரபு நாடுகள் முழுக்க அமெரிக்கா செய்து வருகிறது.
-ஷிமோர் ஹெர்ஷ்
'பெண்டகன் தானே சில தீவிரவாத குழுக்களையும் தற்கொலைப் படைகளையும் உருவாக்கி விடும்.'
-American terror MG: Feb 16- 2005

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் (PROFESSOR) இந்த சம்பவம் அமெரிக்காவின் உள்வேளை(PROFESSOR) என்றார்கள். ஸ்டீவ் ஜோன் என்ற (PROFESSOR) கூறுகிறார்: 19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சாத்தியம் இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது ஜெட் பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடிகுண்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அவ்வாறு சொன்னதால் அவர் வேளை நீக்கம் செய்யப்பட்டார்.

இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் பதில். விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. இரட்டை கோபுரத்தின் தூண்களை 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது. 10 நாட்கள் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எறிக்கும் என்றது. இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?

விமானம் வளைந்த விதத்தை பற்றி விமான ஓட்டுனர் பலரிடும் கேட்டால், பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது. ராணுவ விமானத்தை மட்டும் அவ்வாறு வளைக்க முடியும் என்கிறார்கள், என்பார்கள். (இதை யூத விமானியிடம் கேட்க கூடாது)

அடுத்து அவர்கள் சொல்லகூடிய முக்கிய தடையம் போன். பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை(!) வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா! நான்தான் மார்க் பீகம். அம்மா! நான் பேசுவது கேட்கிறதா? அம்மா!.. அம்மா!.. (mom I am mark beegham. Can you hear me. Mao! Mom!.) மொபைல் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கேளுங்கள், 32000 அடி உயரத்தில் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்று. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்: 4000 அடியில் .04 % நெட்வர்க்தான் கிடைக்கும். 8000 அடியில் .01% நெட்வர்க்தான் கிடைக்கும். 32000 அடியில் .006% நெட்வர்க்தான் கிடைக்கும். நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 0% என்றால் நெட்வர்க்கே கிடைக்காது, .006% என்றால்?

விமானம் விபத்துக்குன்டானால் முக்கிய தடையமாக கருதுவது அதன் கருப்புப்பெட்டி. ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டி இருக்கும். கருப்புப்பெட்டியானது 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அவ்வாறு இருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.

suvanappiriyan said...

.....இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அளித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று காட்டிய ஊடகங்கள், அவர் அழித்த பேட்டியை காண்பித்ததா?. அல்-ஜஸிரா ஊடகத்தை தவிர.

ஒசாமா பின்லேடன் மீது அநியாயமாக பழியைப்போட்டது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை.

இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?

தி சண்டே டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தி…

ஹெல்மாண்ட் மாகாணம், கேம்ப் பாஸ்டியனில் நிலை கொண்டுள்ள இங்கிலாந்து வீரர்களும், காந்தஹார் விமான நிலையத்தில் நிலை கொண்டுள்ள கனடா நாட்டு வீரர்களும் இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த இரு இடங்களிலும் உள்ள விமான நிலையங்கள்தான் ஆப்கானிஸ்தானின் முக்கிய விமானப் போக்குவரத்து தலமாக உள்ளது. இந்த விமான நிலையங்களைத்தான் நேட்டோ படையினர் போக, வர பயன்படுத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் போதைப் பொருளுக்குப் பெயர் போனது. குறிப்பாக அங்கு ஓபியம் விளைச்சல் கிட்டத்தட்ட விவசாயம் போலவே உள்ளது. ஆனால் (தாலிபான் ஆட்சியில்) 2001ம் ஆண்டு வாக்கில் ஓபியம் விளைச்சல் குறைவாகவே இருந்தது. இந்த ஓபியத்திலிருந்துதான் ஹெராயின் பிரித்தெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2001க்குப் பிறகு அதாவது அமெரிக்கா தலைமையில் நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுறுவிய பின்னர் அங்கு ஓபியம் உற்பத்தி கிடுகிடுவென அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் போதைப் பொருள் ஏஜென்ட் ஒருவர் ஈரானின் பிரஸ் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், வெளிநாடுகளைச் சேர்ந்த போதைப் பொருள் முதலைகளுக்குப் பிறகு அதிக அளவில் ஓபியம், ஹெராயின் உள்ளிட்டவற்றை வாங்குவது ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டு ராணுவத்தினர்தான்.

(அமெரிக்க படை எடுப்பிற்க்கு பிறகு) உலக அளவில் உள்ள ஹெராயினில் 90 சதவீதம் ஆப்கானிஸ்தானில்தான் உற்பத்தியாகிறது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை ஏன் இத்தனை காலம் தங்கியுள்ளது என்பது புரிகிறதல்லவா?