Followers

Thursday, July 05, 2012

உலக படைப்பு அழிவு பற்றி சில சூத்திரங்கள்!

உலக படைப்பு அழிவு பற்றி சில சூத்திரங்கள்!

மனிதன் அன்று முதல் இன்று வரை இந்த உலகத்தைப் பற்றியும் அது எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றியும் சிந்தித்த வண்ணமே உள்ளான். இதற்கே இன்னும் விடை காண முடியாத போது இந்த உலகம் எப்பொழுது அழியும் என்பதை பற்றி சிந்திக்காத நபர்களே இல்லை எனலாம்.

"முன்னர் இருந்த காலங்கள் வரையறை செய்யப்படாதது எனும் கருத்தில் பெருவெடிப்பின் காலத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தது என ஒருவர் கூறலாம். காலத்தின் இந்த தொடக்கம் என்பது முன்னர் இருந்து வந்ததிலிருந்து மாறுபட்டதாகும் என்பது அழுத்தம் செலுத்த வேண்டிய கருத்தாகும்"
-A BRIEF HISTORY OF TIME( PAGE 9)

அறிவியல் அறிஞர் ஹாக்கிங் சொல்ல வருவது பெருவெடிப்புக்கு முன் வரையறுக்கப்பட்ட காலம் என்பது எதுவும் இருக்கவில்லை என்றும் இந்த அர்த்தத்தில் பெரு வெடிப்பு என்பதே காலத்தின் தொடக்கம் என்பதை தனது ஆய்வின் மூலம் விளக்குகிறார். குர்ஆனில் உலகம் படைக்கப்பட்டதைப் பற்றியும் உலக முடிவு நாள் பற்றியும் சில வசனங்கள் வருகிறது. பேரண்டம் படைக்கப்பட்டக் காலத்தில் ஒரு நாள் என்பது என்னவென்றோ அல்லது அதன் கால அளவு என்ன என்பதோ அறிவியல் பார்வையில் நம்மால் ஒரு தெளிவை அடைய முடியாது.

"வானங்களிலும் பூமியிலும் மறைவானவை இறைவனுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்"
-குர்ஆன் 16:77


பேரண்டத்தின் அழிவைப் பற்றியே மேற்கண்ட வசனம் நம்மிடம் பேசுகிறது. இதில் பேரண்டம் எப்போது அழிக்கப்படும் என்ற செய்தியை இறைவன் அறிவிக்கிறான். கண் சிமிட்டும் நேரத்தை விட குறைவான நேரத்தில் இந்த உலகம் அழிக்கப்பட்டு விடும் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த வசனம் இறங்கி 1433 வருடங்களாகி விட்டது. அந்த நேரம் இன்னும் வந்தபாடில்லை. ஏன் வரவில்லை?

காலம் சார்பற்றது. அது சுயம் பூரணமானது என்ற தப்பெண்ணத்தில் உலகம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம் வரை நம்பியிருந்ததால் காலம் எப்போதும் எங்கும் ஒரே நிலையானது. எனவே அதில் மனிதனுக்கும் இறைவனுக்கும் வேற்றுமை இல்லை என்றும், எனவே மனிதனுக்கு கண் இமைக்கும் நேரம் எவ்வளவோ அவ்வளவே இறைவனிடத்திலும் இருக்க முடியும் என எண்ணினர்.

உலக முடிவு நாளின் நிலைமையைப் பற்றி குர்ஆன் கூறும் போது:

'சூரியன் சுருட்டப்படும்போது! நட்சத்திரங்கள் உதிரும் போது: மலைகள் பெயர்க்கப்படும் போது: கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது: விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது'
-குர்ஆன் 81:1-5

வானம் பிளந்து விடும் போது: நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது: கடல்கள் கொதிக்க வைக்கப்படும்போது.
-குர்ஆன் 82:1-3


மேற் கண்ட வசனங்களை நாம் மேலோட்டமாக பார்த்தாலே இவை அனைத்தும் கண் சிமிட்டும் நேரத்துக்குள் நடந்து முடிய சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருவோம். எனவே இறைவன் கூறக் கூடிய கால அளவு என்பது நம்மிடம் உள்ள கால அளவு படி இல்லாமல் இறைவன் புறத்தில் உள்ள காலஅளவின்படியே ஆகும் என்ற முடிவுக்கு வரலாம்.

பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவையும் இறைவன் கூறியுள்ளான். ஆனால் அந்த கால அளவு பேரண்டத்தைக் குறித்த இறைவனின் கணக்கின்படியாகும். அக்காலத்தில் மனிதப் படைப்பே இருந்திருக்கவில்லை. பேரண்டத்தில் கால நிர்ணயம் செய்யக் கூடிய அளவு கோல் எதுவும் இருக்கவும் இல்லை. எனவே நமது பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள கணக்கு நமது கணக்கின்படி அல்ல என்ற முடிவுக்கு வரலாம்.

மேற்கண்ட பதிலைச் சரியாக புரிந்து கொள்ளும் பொருட்டு கண் சிமிட்டும் நேரத்திற்கு தோராயமாக எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை கவனிப்போம். கண் சிமிட்டுவதற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு விநாடியில் இரண்டு மூன்று முறை நம்மால் இமைகளை சிமிட்ட முடியும். ஆயினும் குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்து விடும் எனக் கூறுவதில் திருப்தி கொள்ளாமல் அதை விடக் குறைவான நேரத்தில் உலக அழிவு வரக் கூடும் எனக் கூறுகிறது. இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட்(milli second) கணக்கில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கமானது இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.

குர்ஆன் சொல்லும் கால அளவை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று மற்றவர்கள் கேட்கலாம். இந்த விளக்கமானது குர்ஆன் இறை வேதம்தான் என்று நம்புபவர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் மேலும் சில கணித வடிவமைப்புகளை பார்வையிடுவோம்.

பேரண்டத்தின் அழிவு எப்போது என்பது பற்றித் திருமறை வசனங்களிலிருந்து அது கூறிய கால அளவு ஏறத்தாழ 0.2 வினாடி என்று நாம் அனுமானித்தோம். ஆனாலும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1433 வருடங்களாகியும் இப்பேரண்டமானது அழிவுறத் தொடங்கவில்லை. எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி இவ்வுலகின் தற்போதய 1433 (ஹிஜ்ரி) வருடங்களை விட மிகுதியானதாகும் என ஐயமறத் தெரிகிறது. இந்த விளக்கத்திலிருந்து நமக்கு கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1433 வருடங்களை விட அதிகம் என்பதாகும்.

இன்னும் விளக்கமாக சொல்லப் போனால்...

0.2 வினாடி > 1433 வருடங்கள்

இந்த இடத்தில் குர்ஆனின் கணக்கின்படி பேரண்டத்தின் 2 வினாடி என்பது உலகியலின் கணக்கின்படி 1433 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை 1433 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1433 வருடங்களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். ஆனால் இப்பேரண்டம் எப்பொழுது துல்லியமாக அழியும் என்ற ரகசியத்தை நம்மை படைத்த இறைவனே அறிவான். இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1433 வருடங்களுக்கு மேல் என்றே கூற முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1433 வருடங்கள் என்ற எண் நிரந்தரமானதன்று. அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1434, 1435 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

குர்ஆன் இந்த பேரண்டத்தைப் படைக்க ஆறு நாட்கள் ஆனதாக கூறுகிறது. இந்த ஆறு நாட்கள் என்பதை நாம் முன்பு குர்ஆனிலிருந்து பெற்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி நம் உலகியல் கணக்குக்கு ஒரு தோராயமான மதிப்பை பெற முயற்ச்சிப்போம்.

மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் : 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி ஒரு நாளில் உள்ள மொத்த 0.2 வினாடிகள்:
=0.2*24=4.8=5

=0.2 வினாடி * வினாடி (sec) * நிமிடம் (min) * மணி(time)

=5 * 60 * 60 * 24

=43200 * 6 = 2259000 (ஆறு நாட்களுக்காக விடையை ஆறால் பெருக்கியிருக்கிறோம்)

=1433=0.2 வினாடி ( அதாவது பேரண்டத்தின் 0.2 வினாடியின் கால அளவு என்பது 1433 உலகியல் வருடங்களுக்கு மேல் என்ற எண்ணுக்கு நிகரானது என்பதை நினைவில் கொள்வோம்)

=1433 * 2259000 (இறைவன் புறத்தில் உள்ள ஆறு நாட்களின் மொத்தமுள்ள 0.2 வினாடிகளின் கால அளவுக்கு நிகரான நம் கணக்கில் உள்ள உலகியல் வருடங்கள்

=3237147000

உலகம் படைக்கப்பட்டதின் வருடங்களை உலகியல் கணக்கில் குர்ஆனின் சூத்திரத்தை வைத்து தற்போது கண்டு பிடித்து விட்டோம். இந்த பேரண்டம் உருவாக்கப்பட்டு 320 கோடி வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதனை மிக தெளிவாக கண்டு கொண்டோம்.

இப்பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களாயின என கானன் லிமாயிட்டரை மேற்கோள் காட்டி ஹார்லே ஷேப்லி கூறுகிறார்.

பேரண்டம் உருவாவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டன எனக் கூறுகிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

குர்ஆன் கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறியல் அறிஞர்களால் கண்டு பிடித்த அறிவியல் உண்மைகளோடு ஏறத்தாழ ஒத்து வருவதை கண்டு நாம் ஆச்சரியமடைகிறோம். அந்த அறிவியல் அறிஞர்களும் தோராயமாகத்தான் காலத்தை கணித்தனர். குர்ஆனோ இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலத்தை துல்லியமாக 1433 வருடங்களுக்கு முன்பே மிக சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு சென்றுள்ளதை பார்க்கிறோம். எழுதப் படிக்க தெரியாக ஒரு மனிதர் இந்த குர்ஆனை தனது சொந்த கற்பனையில் இயற்றியிருக்க முடியுமா என்பதையும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

----------------------------------------------------------

பூமி சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அந்த நாள் முதலாக பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்றும் நாம் அறிகிறோம். பூமியின் மிக்க முதுமையான பாறை மூலகத்தின் கதிரியக்கத் தேய்வை ஆராயும் போது, (Radioactive Decay of Elemets) புவியின் வயது 3.8 பில்லியன் என்று விஞ்ஞானிகள் கணிக்கிட்டிருக்கிறார்கள். மேலும் பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலகக் கதிரியக்கத் தேய்வை ஆய்ந்த போது, சூரிய குடும்பத்தில் பூமியின் வயது 4.6 பில்லியன் என்று இப்போது தெளிவாக முடிவு செய்யப் பட்டிருக்கிறது.



பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் வயதைக் கணக்கிடப் பல்வேறு முறைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். புதிய நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயும் விஞ்ஞானிகள் இன்னும் உறுதியாக அதன் வயதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. 2003 பிப்ரவரியில் ஏவிய “வில்கின்ஸன் பல்கோண நுண்ணலை நோக்கி விண்ணுளவி” [Wilkinson Microwave Anisotropy Probe (WMAP)] அனுப்புவதற்கு முன்பு பிரபஞ்ச உப்புதலை அளக்கும் “ஹப்பிள் நிலையிலக்கம்” (Hubble Constant) பயன்படுத்தப்பட்டுப் பலரது தர்க்கத்துக்கு உட்பட்டது. விண்மீன்கள் பூமியை விட்டு விலகிச் செல்லும் வேக வீதத்தை அறிந்து கொண்டு ஹப்பிள் நிலையிலக்கம் நிர்ணயமாகும். அதாவது காலாக்ஸி தொடர்ந்து மறையும் வேகத்தை அதன் தூரத்தால் வகுத்தால் வருவது ஹப்பிள் நிலையிலக்கம். அந்த நிலையிலக்கின் தலைகீழ் எண்ணிக்கை [Reciprocal of the Hubble Constant] பிரபஞ்சத்தின் வயதைக் காண உதவும். அவ்விதம் கண்டுபிடித்ததில் பிரபஞ்சத்தின் வயது 10-16 பில்லியன் ஆண்டுகள் என்று அறிய வந்தது. இம்முறையில் ஒரு விஞ்ஞானி பல்வேறு அனுமானங்களைக் கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால், அம்முறை உறுதியுடன் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.



அடுத்த முறை பூதளத்தின் மிகப் புராதனப் பாறைகளில் உள்ள மூலகங்களின் கதிரியக்கத் தேய்வைக் (Radioactive Decay of Elements in Oldest Rocks) கணக்கிட்டு பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் கணிக்கப் பட்டது. பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் மூலக கதிரியக்கத் தேய்வைக் கணக்கிட்டுப் பூகோளத்தின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் என்று அறியப்பட்டது.

அதே திடப்பொருள் விதிகளைப் பயன்படுத்தி காலாக்ஸி அல்லது புராதன விண்மீன்களில் எழும் வாயுக்களின் கதிரியக்கத் தேய்வுகளை ஆராய்ந்தனர். அவ்விதம் கணக்கிட்டதில் பிரபஞ்சத்தின் வயது 12-15 [plus or minus 3 to 4 billion] பில்லியன் ஆண்டுகள் என்று தீர்மானிக்கப்பட்டது ! ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் [Brightness versus Temperature] பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டுப் பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிட்டார்கள். ஈரோப்பியன் விண்வெளிப் பேரவை அனுப்பிய ஹிப்பார்கஸ் துணைக்கோள் (Hipparcos Satellite) விண்மீன் தூரத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்விதம் கணக்கிட்டதில் மிகப் புராதன விண்மீனின் வயது சுமார் 12 பில்லியன் ஆண்டுகள் என்று அறியப்பட்டது.

டாக்டர் கார்ல் போப்பர், ஆஸ்டிரியன் பிரிட்டீஷ் வேதாந்தி, பேராசிரியர் (Dr. Karl Popper)
“பிரபஞ்சத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாத பிரச்சனை என்ன வென்றால், அதை நாம் அறிந்து கொள்ள இயலும் என்னும் திறன்பாடு.”
டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)
-சி.ஜெயபாரதன்

---------------------------------------------------------------




கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.

Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.
இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.

ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.
ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத ‘சூப்பர் ஸ்டார்’ தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.

இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.

இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.

அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.

இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.
ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

-இணையதள பத்திரிக்கையில் வெளியான செய்தி

மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள

1. Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)
2. Universe By Roger Freedman & William Kaufmann III (2002)
3. National Geographic Encyclopedia of Space By Linda Glover.
4. The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)
5. Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)
6. திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்:
7. A Brief History Of Time.
8. ஜெயபாரதன் அறிவியல் கட்டுரைகள்


















28 comments:

சிராஜ் said...

சலாம் அண்ணன்,

அருமையான ஆக்கம். உங்களின் மார்க்க அறிவும் உலக அறிவும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது....

உங்களின் கணக்கீடும், அறிவியலாரின் கணக்கீடும், இறைவன் இல்லை என்று கூறும் அறிவிளிகளின் கணக்கீடும் தோராயாமாணதே....

எத்தனை கேலக்கி இருக்குன்னே நம்ம நால இன்னும் துள்ளியமா கண்டுபிடிக்க முடியல...இதுல முதல் கேலக்ஸி எப்படி தோணிச்சுன்னு சொல்றாங்களாம்.... நல்ல வேடிக்கை இது... நிச்சயம், சிந்திக்க கூடிய மக்களுக்கு இதில் அத்தாட்சி இருக்கு...

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

SALAM,

என்ன சகோ.அதுக்குள்ள இன்னொரு போஸ்ட் போட்டுடீங்க..பல பேரு போனதையே இன்னும் படிசிருக்கமாட்டான்களே....
எது எப்படியோ ஆனால் நல்ல பதிவு .....

நான் இன்ஷா அல்லாஹ் நாளைக்கு புதிய பதிவு போடுறேன்....

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//உங்களின் கணக்கீடும், அறிவியலாரின் கணக்கீடும், இறைவன் இல்லை என்று கூறும் அறிவிளிகளின் கணக்கீடும் தோராயாமாணதே....//

1433 வருடங்களுக்கு முன் உள்ள கால நிலையையும் அன்றைய அறிவியல் வளர்ச்சியையும் தெரிந்த ஒருவர் இன்றைய கால கட்டத்தோடு குர்ஆன் முற்று முழுதாக ஒத்துப் போவதை எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ திருவாளப்புத்தூர்!

//என்ன சகோ.அதுக்குள்ள இன்னொரு போஸ்ட் போட்டுடீங்க..பல பேரு போனதையே இன்னும் படிசிருக்கமாட்டான்களே....
எது எப்படியோ ஆனால் நல்ல பதிவு .....//

கோடை வெயிலுக்கு பயந்து சவுதிகள் குடும்பத்தோடு வெளி நாடுகளுக்கு சென்று விட்டனர். இதனால் வியாபாரமும் கொஞ்சம் டல். விற்பனை குறைந்தால் அலுவல வேலையும் தானாகவே குறைந்து விடும் அல்லவா! அந்த ஓய்வை பதிவுகள் எழுத பயன்படுத்திக் கொள்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு இந்தியன்!

//Mr suvanappiriyan

1) Do you accept that Islamists of the past caused death and and destruction of Hindus and their place of worship?//

முதலில் பாபரி மசூதியை இடித்ததையும், குஜராத்தில் 2000 முஸ்லிம்களை உயிரோடு கொளுத்தியதையும் ஒத்துக் கொள்ளுங்கள். இது நமது காலத்திலேயே நம் கண் எதிரிலேயே நடந்தது. அனைத்துக்கும் ஐ விட்னஸூம் உண்டு.

மொகலாயர் காலத்துக்கும் சேர சோழ பாண்டியர்கள் காலத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் சார்.

//2) Do you accept Hindus in the past were converted to Islam at the point of sword and their women were raped and enslaved?//

வாளால் இஸ்லாம் அந்த காலத்தில் வளர்ந்திரந்தால் இந்த காலத்தில் தங்களது தாய் மதத்துக்கு திரும்புவதற்கு என்ன தடையாக இருக்கிறது? இந்துவாக இருப்பதுதான் இந்தியாவில் பாதுகாப்பு என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரியுமே! அதிகார வர்க்கத்தில் அனைத்திலும் நீங்கள்தானே உள்ளீர்கள்? தாய் மதத்துக்கு அவர்களை திருப்ப வேண்டியதுதானே!

திலீப்குமாராக இருந்த ஏ.ஆர் ரஹ்மானை மாற்றியது எந்த வாள்? பெரியார்தாசனை அப்துல்லாவாக மாற்றியது எந்த வாள்?

//their women were raped and enslaved?//

வாரணாசி விசுவநாதர் ஆலயம்! -ஒளரங்கஜேப்

வங்காளத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்த ஒளரங்கஜேப் வாரணாசி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்சியின் கீழிருந்த ஹிந்து ராஜாக்கள் ஒளரங்கஜேப்பிடம் 'பயணத்தை ஒரு நாள் நிறுத்தித் தங்கிச் சென்றால் அந்த நாளில் எங்களது ராணிகள் கங்கையில் குளித்து விட்டு விசுவநாதரை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்'என்று கோரிக்கை வைத்தனர்.

ஹிந்து அரசர்களும் ராணியரும் கங்கைக் கரையில் தங்கி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டுச் செல்ல வேண்டுமென்ற கோரிக்கையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டவர் ஒளரங்கஜேப்.

அதனைத் தொடர்ந்து ஒளரங்கஜேப்பின் அன்றைய வழிப்பயணம் நிறுத்தப் பட்டது. வாரணாசிக்கு இடையேயான ஐந்து மைல்தூரம் முழுவதும் முகலாயப் பெரரசின் இராணுவத்தினர் நிறுத்தப் பட்டார்கள்.

இந்து ராணிகள் பல்லக்குகளில் சென்று புனித கங்கையில் நீராடினர். காசி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டார்கள். (ஒளரங்கஜேப் ஆட்சியில் அவரவர் விருப்பப்படி வணங்கிட அனுமதிக்கப் பட்டனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்)

பூஜைகள் முடிந்தபின் ஹிந்து ராணிகள் திரும்பினர். ஆனால் கட்ச் சமஸ்தானத்தின் ராணி மட்டும் திரும்பவே இல்லை. உடனே அந்த ராணியைத் தேடிக் கண்டு பிடிக்க முழு அளவிளான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் ராணியைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாததால் ஒளரங்கஜேப் ஆத்திரமடைந்தார். ராணியைத் தேடிக் கண்டு பிடித்திட தனது மூத்த அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.

அதிகாரிகள் தீவிரமாகத் தேடுகையில் விசுவநாதர் ஆலயத்தில் உள்ள ஒரு சிலை மட்டும் அசைந்தது. அந்தச் சிலையை அசைத்த போது பாதாளச் சுரங்கம் ஒன்றிற்குச் செல்லும் படிக் கட்டுகள் காணப்பட்டன. உள்ளே இறங்கிப் பார்த்தபோது அங்கே காணாமல் போன ராணி அவமானப் பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து ஹிந்து ராஜாக்கள் தங்களது எதிர்ப்பை உரத்த குரலில் வெளியிட்டார்கள். இந்த அக்கிரமத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று ஒளரங்கஜேப்பிடம் கோரினார்கள்.

அந்த இடத்தின் புனிதத் தன்மை மாசு படுத்தப்பட்டு விட்டதை உணர்ந்ததால் ஒளரங்கஜேப் விசுவநாதர் விக்கிரகத்தை வேறு இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்தக் கோவில் தரைமட்டமாக்கப் பட்டது. அந்தக் கோவிலின் மடாதிபதி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, 'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71


ஆக கற்பழிப்புகளை செய்தது யார் என்பதற்கு இது ஒரு உதாரணம் போதும். நமது காலத்தில் நித்தியானந்தா ஆர்த்தி ராவ் என்ற இள நங்கையை 40 முறை கற்பழித்ததாக அந்த பெண்ணே வாக்கு மூலம் கொடுத்துள்ளது. முதலில் அதை நிறுத்த முயற்சி செய்யுங்கள். இந்த புனிதர்தான் மதுரை ஆதீனமாம். :-)

suvanappiriyan said...

தங்கமணி!

//நீங்கள் சொல்வது ஆதாரமற்ற கதை. அது எந்த ஒரு அவுரங்கசீப் வரலாற்றிலும் கிடையாது. முஸ்லீம்கள் மனம் கோணக்கூடாது என்று கம்யூனிஸ்டுகள் விட்ட உட்டாலக்கடி..//

கம்யூனிஸ்டுகள் ஏன் சார் முஸ்லிம்களை குஷிப்படுத்த வேண்டும்? இஸ்லாத்துக்கு நேர் எதிர் கொள்கை உடையவர்களல்லவா கம்யூனிஸ்டுகள். உங்களுக்கு ஆதரவாக இருந்தால் அவர் சிறந்த வரலாற்று பேராசிரியர். உங்களுக்கு எதிராக இருந்தால் உட்டாலக்கடி :-) நல்ல நியாயம் சார்.

ஒருவர் அல்ல. மொத்தம் மூன்று வரலாற்றாய்வாளர்கள் ஆராய்ந்து எழுதிய ஒரு சம்பவம் உங்களுக்கு உட்டாலக்கடி!? அரவிந்தன் நீலகண்டன் இஸ்லாத்தைப் பற்றிய பார்வை நாம் அறிந்ததே! ஆர்எஸ்ஸால்தான் இந்தியாவுக்கு விமோசனம் கிடைக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஊறியவரிடம் வேறு எப்படிப்பட்ட பதிவுகளை எதிர்பார்க்க முடியும்? ஒளரங்கசீப் பல கோவில்களுக்கு தானம் கொடுத்ததும் ஆதாரமாக உள்ளது. ஒரு அரசன் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இஸ்லாத்தை ஏற்பதாக சொன்ன போது அதை தடுத்தவர் ஒளரங்கசீப்.
ஒளரங்கசீப் தனது ஆட்சியில் நீக்கிய வரிகள்:
கங்கையில் புனித நீராட போடப்பட்டிருந்த வரி நீக்கப் பட்டது; அஸ்தியை கங்கையில் கரைக்கப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; மீன், காய்கறி போன்ற உணவுப்பொருள்களுக்குப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; சாலை வரி, தொழில் வரி, ஆடுமாடு மேய்ச்சல் வரி, விற்பனை வரி போன்றவைகள் நீக்கப்பட்டன; தீபாவளியின்போது செய்யப்படும் தீப அலங்கார வரி, முஸ்லிம்களின் பராஅத் இரவு செய்யப்படும் தீப அலங்கார வரி நீக்கப்பட்டன; விதவைகள் மறுமண வரி நீக்கப்பட்டது இப்படி 80 வகையான வரிகள் நீக்கப்பட்டன.

சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!

ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். 'உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339

பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!

'நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.'
இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.

பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
1987, Page 61.

அரசியல் வேறு மதம் வேறு!

ஒளரங்கஜேப்பிடம் அவரது முஸ்லிம் நண்பர்கள் அவரது அரசாங்கத்திலுள்ள இரண்டு முஸ்லிம் அல்லாதவரை அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் காரணமாக பதவியில் வைத்துக்கொள்ளக் கூடாதென்று கூறியபோது அதனை ஏற்க மறுத்தவர் ஒளரங்கஜேப். 'அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. அரசியல் விவகாரங்களில் மதம் என்பது கிடையாது. அவரவர்கள் அவரவரது மத்தைப் பின்பற்றட்டும்.' என்று சொன்னவர் ஒளரங்கஜேப்.

டி.என.ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்
1950, Page 80

suvanappiriyan said...

'உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா மட்டத்திலுமுள்ள மக்களின் நலன்களை மேம்படுத்த நாம் சலிக்காமல் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மிகுந்த அன்போடும் பரிவோடும் செயல்படுத்தப் பட வேண்டும். நமது புனிதமான சட்டத்தின் படி புராதனக் கொவில்கள் எதையும் அழிக்கக் கூடாது. ' - ஒளரங்கஜேப்

P.N.Pande, Islam And Indian Culture, Page 45

suvanappiriyan said...

தங்கமணி!

//பரவாயில்லை. அவுரங்கசீப் என்ற முச்லீம் செய்ததற்கு இஸ்லாம் பொறுப்பாகாது என்று உங்களது வழக்கமான பல்லவி இருக்குமே.//

நான் கொடுத்த ஆதாரங்கள் ஒளரங்கசீப் அனைத்து மதத்தவரையும் சிறப்புடன் நடத்தினார் என்று சொல்கிறது. நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் ஒளரங்கசீப் கோவில்களை இடித்து இந்து மதத்தை அழிக்க முற்பட்டார் என்ற ரீதியில் செல்கிறது. இதில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும்.

ஐம்பது வருடங்களுக்கு மேல் தனது ஆட்சியால் இந்தியாவை செம்மையாக வழி நடத்தி சென்ற ஒரு அரசரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது உள்ளது போன்று தகவல் தொழில் நுட்ப வசதி இல்லாத காலம். பெரும்பான்மையானவர்கள் இந்து மக்கள். அவரை சுற்றி சத்ரபதி சிவாஜியிலிருந்து பல இந்து மன்னர்கள் ஒளரங்கசீப்பை கவிழ்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரது சொந்தங்களும் அவரை கவிழ்க்க பல சதித் திட்டங்களை தீட்டிய வண்ணமே இருந்தனர். இந்த நேரத்தில் ஒரு மன்னன் பெரும்பான்மை சமூகத்தினரின் வழிபாட்டு தலங்களை சகட்டு மேனிக்கு இடித்து தள்ளிக் கொண்டிருந்தால் பெரும்பான்மையான இந்து வெகுண்டெழ மாட்டார்களா? சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு வெளி நாட்டு அரசனை வழிக்கு கொண்டு வருவது அந்த காலத்தில் மிக சுலபம். ஆனால் இந்து மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரை ஐம்பது வருடங்கள் ஆட்சி செய்த வைத்ததை சாதாரண செயல் என்றா நினைக்கிறீர்கள். மற்ற மொகலாய மன்னர்களை விட நமது தமிழகம் வரை ஒளரங்கசீப்பின் ஆட்சி நீண்டிருந்தது. ஒளரங்கசீப்பக்கு எதிராக இந்து மக்கள் கிளர்ந்தெழுந்ததாகவோ புரட்சி வெடித்ததாகவோ எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்புகளை எழுதவில்லை. கடைசியில் நோய் வாய்ப்பட்டே சக்கரவர்த்தியாக இருக்கும் போதே மரணிக்கிறார் ஒளரங்கசீப். இதற்கு முன்னால் ஆணட் இந்து மன்னர்களை விட ஒளரங்கசீப்பின் ஆட்சி சிறப்பாக இருந்ததாலேயே இது சாத்தியமானது. 1100 வருடங்கள் நமது நாட்டை முகலாயர்கள் ஆண்டது சாதாரண காரியம் அல்ல.

நீங்கள் தரும் ஆதாரங்கள் வெள்ளையர்களால் பின்னால் புனையப்பட்டதாகவும் இருக்கலாம். இறைவனே உண்மையை அறிந்தவன்.

suvanappiriyan said...

தங்கமணி!

//நீங்கள் சொல்ற லாஜிக் படி, இந்த அட்டூழியத்துக்காக அந்த மசூதியை இடிச்சிட்டு கோவில் கட்டிடலாமா?//

இந்துக்களின் கோவில்களின் உள்ளே உள்ள சிலை இந்து மத நம்பிக்கை படி கடவுளாக மதிக்கப்படகிறது. அந்த இடத்தில் ஒரு அசிங்கம் நடந்தால் சிலை தீட்டுபட்டு விட்டதாக கருதி சிலை உள்ள இடங்களை மாற்றுவது தொன்று தொட்டு வரும் பழக்கம். இதை இந்து மத புரோகிதர்கள் கேட்டுக் கொண்டதாலேயே அந்த கோவிலை இடித்து விட்டு பக்கத்தில் அந்த சிலையை வைத்து வேறொரு கோவில் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இந்து மக்களின் வேண்டுகோள்தான் அங்கு நிறைவேற்றப்படுகிறது.
ஆனால் பள்ளிவாசலின் நிலை அப்படி அல்ல.


நாங்கள் ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் இருந்த போது கிராமத்து அரபி ஒருவர் வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்க துவங்கி விட்டார். அல்லாஹ்வின் தூதர் அவர்களின் தோழர்கள் “தடுத்துக்கொள்” “தடுத்துக்கொள்” எனக்கூறினர். அவரைத் நிறுத்தி (தடுத்து) விடாது விட்டு விடுங்கள் என, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூற அந்நபரை அவர்கள் (சிறுநீர் கழித்து முடியும் வரை) விட்டு விட்டனர். அதன்பிறகு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவரை அழைத்து “இந்தப்பள்ளிகள் இது போன்ற சிறுநீர் கழிக்கவோ, அல்லது அசுத்தங்களை போடவோ உரியதல்ல. ஆயினும் அவை கண்ணியமும் மேன்மையும் பொருந்திய அல்லாஹ்வை நினைவு கூறுவதற்கும், இன்னும் திருமறையை ஓதுவதற்கும் மட்டுமே சரியான (உரிய)தாகும். கூட்டத்திலிருந்த ஒரு மனிதரை ஒரு வாளி தண்ணீர் கொண்டு வருமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டனர். (அவர் கொண்டுவந்து) அதன்மீது பரவலாக ஊற்றினார்.

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு
ஆதார நூல்: புகாரி 186

இந்த நபி மொழியிலிருந்து பள்ளி அசுத்தப்பட்டாலும் கழுவினால் அந்த அசுத்தம் சென்று விடும் என்பது கட்டளை. எனவே பள்ளியை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலைகள் இருக்கும் இடம் அசுத்தப்பட்டால் அதற்கு தீட்டு கழித்து வேறொரு இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது இந்து மத நம்பிக்கை. அதைத்தானே இந்துக்களின் விருப்பமறிந்து ஒளரங்கசீப் செயல்படுத்தினார். இதில் சக்கரவர்த்தியை எவ்வாறு குறை காண முடியும்?
கலைஞர் எழுதிய பராசக்தி வசனமான 'கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்பதற்காக' என்று சொன்னால் கை தட்டி விசில் அடிக்கிறீர்கள். அதையே ஒளரங்கசீப் செய்தால் மதவெறி என்கிறீர்கள்.

Anonymous said...

//முதலில் பாபரி மசூதியை இடித்ததையும், குஜராத்தில் 2000 முஸ்லிம்களை உயிரோடு கொளுத்தியதையும் ஒத்துக் கொள்ளுங்கள். இது நமது காலத்திலேயே நம் கண் எதிரிலேயே நடந்தது. அனைத்துக்கும் ஐ விட்னஸூம் உண்டு.//

How do you want to justify the thousands of temples demolished in Malaysia? These are more recent than your Babri masjid demolitions. Would you recommend Hindus in Malaysia use bombs just as the Indian muslims plant bomb every December 6th?

கோவி.கண்ணன் said...

பசுமாடு, தென்னை மரம் கட்டுரை இன்னும் சரியாக பொருந்திவரவில்லை. முயற்சி தேவை.

வெறும் 10 மதிப்பெண்கள் மட்டுமே.

Anonymous said...

ஏனுங்க ஒளரங்கசீப் அம்புட்டு நல்லவருங்களா? காசி கோவில் புனிதத்தை காக்க இடிச்சாரா? இந்துக்கள் கோவிலின் புனிதம் கெட்டால் பரிகார பூஜைதான் செய்வாங்க கோவிலை இடிக்க மாட்டாங்க. சரி புனிதத்தை காக்க இடிச்சாலும் பொறவு அங்கு மசூதி எதுக்கு கட்டினாரு அந்த நல்லவரு?

suvanappiriyan said...

பெங்களூரு: நித்யானந்தா சீடரான சந்தோஷ், பெற்றோருடன் செல்வதற்கு, நீதிபதி முன்னிலையிலேயே மறுப்பு தெரிவித்து, ஆசிரமத்துக்கு திரும்பி சென்று விட்டார்.

முன்னூர் கிருஷ்ணமூர்த்தி - ஜெயந்தி தம்பதியினரின் மகன் சந்தோஷ். அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர். பணியை விடுத்து, நித்யானந்தா சீடராக இருந்து வருகிறார். ஆசிரமத்தில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டதால், கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர், சந்தோஷை வீட்டுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் சந்தோஷ், "வரமுடியாத சூழ்நிலையில் உள்ளேன்' எனக் கூறியுள்ளார். இதனால், தங்கள் மகன், ஆசிரமத்தில் ஆபத்தில் இருப்பதாகவும், அவனை மீட்டு தருமாறும் பிடதி போலீசில் புகார் செய்தனர். ஆனால், போலீஸ் நிலையம் வந்த சந்தோஷ், "ஆசிரமத்தை விட்டு நான் வர முடியாது' எனக் கூறி விட்டார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து, "என் மகனை, நித்யானந்தா, சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். மகனை மீட்டு தாருங்கள்' எனக் கோரியிருந்தார். இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆசிரமத்திலிருந்து சந்தோஷ் நீதிமன்றம் வந்திருந்தார். அப்போது நீதிபதி, "நித்யானந்தா ஆசிரமத்தில் உங்களை அடைத்து வைத்துள்ளனரா, உங்கள் பெற்றோருடன் செல்ல விரும்புகிறீர்களா?' என கேட்டார். அதற்கு சந்தோஷ், "நான் ஆசிரமத்தில் இருக்க விரும்புகிறேன். பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை. ஆசிரமத்தில் எந்தவித பிரச்னையும் இன்றி சுதந்திரமாக உள்ளேன்' என்றார். இதையடுத்து நீதிபதி, "உங்கள் விருப்பப்படி ஆசிரமத்திற்கு செல்லலாம்' எனக் கூறி, மனு மீதான தீர்பை ஒத்தி வைத்தார்.

நீதிமன்றம் வந்த சந்தோஷ், காவி உடையணிந்து, மொட்டை அடித்திருந்தார். அவரை பார்த்த பெற்றோர், கண்ணீர் விட்டு கதறி, வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். ஆனால், சந்தோஷ் அவர்களை கண்டு கொள்ளவில்லை. சந்தோஷ் தந்தை கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ""அப்பா, அம்மாவுடன் செல்ல மாட்டேன் என்று கூறும் அளவுக்கு, நித்யானந்தா, என் மகன் மனதை மாற்றி விட்டார். நித்யானந்தா தேச துரோகம் செய்து வருகிறார். குடும்ப உறவை பிரித்து வைத்துள்ளார். அவருக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்,'' என்றார்.

-dinamalar

Prakash said...

அண்ணே சுவனப் பிரியன் அண்ணே!

அல்லா 5ன்னு சொன்னதை 50ன்னு எடுத்துக்கலாமா?

suvanappiriyan said...

தங்கமணி!

//…சிவாஜி போன்றவர்கள் வெகுண்டெழுந்து இந்துக்களை ஒருங்கிணைத்து//

சிவாஜியின் ஆரம்ப காலத்தில் சூரத்தில் தனது பரிவாரங்களோடு செல்வந்தர்களிடம் கொள்ளையிடுதல் போன்ற அடாத செயல்களை செய்ததனால் பொது மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒளரங்க சீப் படைகளை அனுப்பி சிவாஜியின் கொட்டத்தை அடக்கினதாகத்தான் நான் படித்துள்ளேன். அதன்பிறகு ஒளரங்கசீப்கின் ஆணைக்கு அடிபணிவதாக எழுதிக் கொடுத்ததையும் மறந்து விட வேண்டாம். நயவஞசமாக கொரில்லா முறையில் பலரைக் கொன்ற சிவாஜியை அநியாயத்துக்கு பில்டப் கொடுத்து பெரிய வீரனாக காட்ட முயற்சிக்க வேண்டாம். இடையிலேயே சிவாஜி இறந்து அதன் பிறகும் ஒளரங்கசீப்பின் ஆட்சி சிறந்தே விளங்கியது. ஒளரங்கசீப்பின் வரிசுகள் பண்ணிய குளறுபடியும் ஆங்கிலேயர்கள் ஆட்சியை பிடிக்க இந்து முஸ்லிம் கலவரங்களை ஆங்காங்கே தோற்று வித்ததும் தான் முகலாயர் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு அரியணை ஏறிய ஆங்கியேர்கள் தாங்கள் ஆட்சி புரிந்த 400 வருடங்களிலும் எந்த அளவு வரலாற்றை திருத்த முடியுமோ அந்த அளவு திருத்தினார்கள். இதற்கு உடந்தையாக அவர்களுக்கு கீழ் பணியாற்றிய ஆரியர்களின் பங்கு இதைவிட அதிகமாகவே இருந்தது. தமிழக வரலாற்றையே மாற்றிய ஆரியர்களுக்கு ஒளரங்கசீப்பின் வரலாற்றை மாற்றுவதும் அதற்கான ஆதாரங்களை பொய்யாக தயாரிப்பதும் சிரமமா என்ன?

சேரனுக்கு ஒரு நாடு, பாண்டியனுக்கு ஒரு நாடு, சோழனுக்கு ஒரு நாடு, பல்லவனுக்கு ஒரு நாடு, என்று ஊருக்கு ஒரு ராஜா இருந்து மக்களை சுரண்டிய வேளையில் 'தம்பிகளா! ஊரெல்லாம் ஒரு நாடாகாது என்று அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அன்று ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அகன்ற பாரதத்தை நமக்காக உருவாக்கி விட்டுச் சென்றார் ஒளரங்கசீப். அவர் உருவாக்கிய பாரதத்தின் ஒரு பகுதியை வைத்துக் கொண்டுதான் இன்று வல்லரசாகத் துடித்துக் கொண்டிருக்கிறோம்.

வேதம் கோபால்!

//“farewell intercourse” law//

எந்த ஒரு சட்டமும் இஸ்லாமிய பெயரில் இயற்றினால் அதற்கு குர்ஆனோ ஆதாரமான நபிமொழியோ சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மாற்றமாக ஒரு சட்டம் இயற்றினால் அது இஸ்லாமிய சட்டம் அல்ல. அது தனி மனிதர்களின் சட்டம். நீங்கள் குறிப்பிடுவதை விட இன்னும் மோசமான இயற்கைக்கு முரணான ஆபாச கதைகளை இந்து மத புராணங்களிலிருந்தும் வேதங்களிலிருந்தும் என்னாலும் தர முடியும்.

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும்...
பாக்ஸ் நியூஸ் . காமில் வந்தThe elusive particle: 5 Implications of finding Higgs Boson
கட்டுரையை படித்து முடிப்பதற்குள், சூடாக தமிழில் தங்களிடமிருந்து அதே பதிவு ...இணைக்கவேண்டிய இடத்தில் கனகட்சிதமாக மார்கத்தின் உண்மைகளையும் இணைத்து அழகாக பதிவிட்டமைக்கு தங்களை எவவளவு பாராட்டினாலும் தகும் ...ஆமாம் தொடர்ந்து சிக்ஸர் பதிவுகளாக போடுரீங்கலே எப்படி பாய்....!!!!!
55 டிகிரி வெயில்ல தங்களுக்கு வேலையில்லனா, தொடர்ந்து பதிவுகளாக போட்டு எங்கள ஏன் கொல்றீங்க சுவண் பாய் ...!!!! ஆஹா ஆஹா ....
--

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும்...
பாக்ஸ் நியூஸ் . காமில் வந்தThe elusive particle: 5 Implications of finding Higgs Boson
கட்டுரையை படித்து முடிப்பதற்குள், சூடாக தமிழில் தங்களிடமிருந்து அதே பதிவு ...இணைக்கவேண்டிய இடத்தில் கனகட்சிதமாக மார்கத்தின் உண்மைகளையும் இணைத்து அழகாக பதிவிட்டமைக்கு தங்களை எவவளவு பாராட்டினாலும் தகும் ...ஆமாம் தொடர்ந்து சிக்ஸர் பதிவுகளாக போடுரீங்கலே எப்படி பாய்....!!!!!
55 டிகிரி வெயில்ல தங்களுக்கு வேலையில்லனா, தொடர்ந்து பதிவுகளாக போட்டு எங்கள ஏன் கொல்றீங்க சுவண் பாய் ...!!!! ஆஹா ஆஹா ....
--

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//பசுமாடு, தென்னை மரம் கட்டுரை இன்னும் சரியாக பொருந்திவரவில்லை. முயற்சி தேவை.

வெறும் 10 மதிப்பெண்கள் மட்டுமே. //

வெறும் 10 மார்க்தானா! அடுத்த முறை கொஞ்சம் கூட்டி போட முயற்ச்சிக்கவும்.:-)

suvanappiriyan said...

சலாம் சகோ நாசர்!

//55 டிகிரி வெயில்ல தங்களுக்கு வேலையில்லனா, தொடர்ந்து பதிவுகளாக போட்டு எங்கள ஏன் கொல்றீங்க சுவண் பாய் ...!!!! ஆஹா ஆஹா ....//

'யாம் பெற்ற சுகம் பெருக இவ்வையகம்' :-)

Unknown said...

எல்லாம் சரி சுவனப்பிரியன். க்டவுளுக்கு இந்த உலகத்தை படைச்சதால என்ன நன்மை? ஏன் படைச்சார்.

சூரியன் நைட்டுல எங்க இருக்கும்னு நபி என்ன சொன்னார்?

ஆயிஷாவை கல்யானம் பண்ணும்போது அவங்க வயசு என்ன?

பூமி ஆடாம இருக்குறதுக்காக மலைகளை யாரு நட்டு வச்சாங்க?

suvanappiriyan said...

ஜெய்சங்கர் ஜகந்நாதன்!

//எல்லாம் சரி சுவனப்பிரியன். க்டவுளுக்கு இந்த உலகத்தை படைச்சதால என்ன நன்மை? ஏன் படைச்சார்.//

இந்த உலகைப் படைத்ததே மனிதன் இறைவனை வணங்க வெண்டும் என்பதற்காகத்தான்.

//சூரியன் நைட்டுல எங்க இருக்கும்னு நபி என்ன சொன்னார்?

ஆயிஷாவை கல்யானம் பண்ணும்போது அவங்க வயசு என்ன?

பூமி ஆடாம இருக்குறதுக்காக மலைகளை யாரு நட்டு வச்சாங்க?//

இதற்கெல்லாம் நான் முன்பே எனது பழைய பதிவுகளில் பதில் கொடுத்து விட்டேனே! உங்களுக்கு நிறைய ஞாபக மறதி.

தற்போது நாட்டில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பது ஆர்த்தி ராவின் பேட்டி. இன்னும் பல பேர் பேட்டி கொடுக்க வரிசையில் நிற்கிறார்களாம். அங்க கொஞசம் உங்க கவனத்த திருப்புங்க அப்பு. :-)

naren said...

நண்பர் சுவன்ப்பிரியன்,

இந்த பதிவின் மூலங்கள் எங்கியிருந்து வந்தது என்று தேடியதால் காலதாமதமாக பின்னூட்டம். சார்வாகனுக்கு இட்ட பின்னூட்டத்தை இங்கே காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

===================================
narenJuly 8, 2012 2:18 PM
தலைவரே, இப்பத்தான் தெரிந்தது உங்களுக்கு எங்கேயிருந்து அறிவியல்- அறிவு, தாகம், புரிதல், விளக்கம், தெளிவு- எல்லாம் வந்தது என்று. உண்மையாக சொல்லவும் இந்த புத்தகத்தை படித்த பின்தானே வந்தது.

http://onlinepj.com/books/thirukuranin_ariviyal_sanrukal/

நம்நாட்டு கல்விதுறையே மோசம், நோபல் பரிசு பெறத்தக்க அண்ணனின் அரிய புத்தகத்தை பள்ளிக்கூடம் கல்லூரி பாடத்திட்டங்களில் இன்னும் சேர்க்காமல் இருக்கிறார்கள்.

இவ்வளவும் எங்கள் வேதத்தில் இருக்கிறது என்பவர்கள். அந்த வேதத்தை 1400 ஆண்டுகளாக் பெரிய பெரிய அறிஞர்கள் ஆராய்ந்து, நான்கு மத்ஹபுகளை வைத்து, புதிதாக அண்ணன் பி.ஜே மத்ஹபும் வந்து, உள் அர்த்தம் மேல் அர்த்தம், உள்ளுக்குள் உள் அர்த்தம் கண்டு, ஆயிரக்கணக்கான மதராஸாக்கள் மிகப்பெரிய அறிஞர்கள் கீழ் இருந்தும், வசனங்கள் கூறும் அறிவியலை போயும் போயும் காஃபிர்கள் தான் கண்டுபிடிக்குணுமா.

இல்லை காஃபிர்கள் திருட்டுதனம்மா குரான் வசனங்களை படித்து, தாங்களே கண்டுப்பிடித்ததை போல அறிவியலை சொல்கிறார்களா??

குரான் அறிவியல் புத்தகம் கிடையாது போகிற போக்கில் அறிவியலை அடித்துவிட்டு செல்கிறது, குரான் வசனங்கள் அப்படியே தான் இருக்கும் ஆனால் அந்த அந்த கால கட்டத்திற்கு உருவாகும் அறிவியலுக்கு பொருந்தும் என்ற ரேடிமேட் பதில்தான் சரியா??

அந்த பதிவில் சு.பி. இந்த புத்தகத்தின் லிங்கை வெளிப்படையாக தராத சூட்சமம் தெரியவில்லை.
===================================

எப்படியோ நண்பரே உங்கள் புண்ணியத்தில் எனது கவனத்திலிருந்து தப்பிய அந்த புத்தகத்தை இப்போதுதாவது படிக்க முடிந்தது. நன்றி.

suvanappiriyan said...

திரு நரேன்!

//இந்த பதிவின் மூலங்கள் எங்கியிருந்து வந்தது என்று தேடியதால் காலதாமதமாக பின்னூட்டம். சார்வாகனுக்கு இட்ட பின்னூட்டத்தை இங்கே காப்பி பேஸ்ட் செய்கிறேன்.//

மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள என்று வரிசையாக கொடுத்துள்ள புத்தகத்தில் அந்த புத்தகத்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளதை பார்க்கவில்லையா நரேன்.

//அந்த பதிவில் சு.பி. இந்த புத்தகத்தின் லிங்கை வெளிப்படையாக தராத சூட்சமம் தெரியவில்லை.//

ஒரு சூட்சுமமும் இல்லை. நான் படித்தது புத்தக வடிவில். நீங்கள் பார்த்தது ஆன்லைன்பிஜே வில். நான் எந்த முறையில் பார்த்தேனோ அநத ஆதாரத்தைத்தானே கொடுக்க முடியும்? :-)

//இல்லை காஃபிர்கள் திருட்டுதனம்மா குரான் வசனங்களை படித்து, தாங்களே கண்டுப்பிடித்ததை போல அறிவியலை சொல்கிறார்களா??//

இருக்கலாம். குர்ஆன் முன்னர் ஆங்கிலத்திலும், லத்தீனிலும் இன்னும் பல மேல் நாட்டு மொழிகளிலும் அன்றே மொழி பெயர்க்கப்பட்டு விட்டது. இப்பொழுது இணைய வசதி இருப்பதால் நான் எங்கிருந்து எடுத்துள்ளேன் என்பதை நீங்கள் இலகுவாக கண்டு கொண்டு விட்டீர்கள். அந்த வசதி அன்று இல்லாததால் பல குர்ஆனின உண்மைகளை ஆராய்ந்து தங்களின் வெளியீடாக ஐரோப்பியர்கள் வெளியிட்டள்ளனர். இதை பல அறிஞர்களும் ஒத்துக் கொண்டள்ளனர்.

//நம்நாட்டு கல்விதுறையே மோசம், நோபல் பரிசு பெறத்தக்க அண்ணனின் அரிய புத்தகத்தை பள்ளிக்கூடம் கல்லூரி பாடத்திட்டங்களில் இன்னும் சேர்க்காமல் இருக்கிறார்கள்.//

இப்பொழுது அதன் அருமை தெரிவதால் இந்துத்வா நண்பர்களிடம் இதைச் சொல்லி பாடத்திட்டத்தில் சேர்த்து விடச் சொல்லவும்.

Anonymous said...

// நல்ல வேடிக்கை இது... நிச்சயம், சிந்திக்க கூடிய மக்களுக்கு இதில் அத்தாட்சி இருக்கு...//
நிச்சயமாக சிந்திக்ககூடியவர்களுக்கு தான் அத்தாட்சிகள் புலப்படும். எதையும் சிந்திக்காமல் புக்குல இருக்கு புக்குல இருக்கு என்று கூறி கொண்டு இருப்பவர்களுக்கு மூளையில் கரையான் தான் அரிக்கும். கரையான் அரிக்க வேண்டுமென்றாலும் மூளை இருக்க வேண்டும். சலவை செய்த மூளை வைத்திருப்பவர்களுக்கு கரையான் அரிக்க வாய்ப்பு இல்லை. அவர்களால் அடுத்தவர்களை பார்த்து புலம்பி கொண்டு இருக்க தான் முடியும். அவர்களுக்கு தானும் சுயமாக சிந்திக்க தெரியாது. சிந்திப்பவர்களை பாராட்டவும் தெரியாது புலம்பல் மட்டுமே அவர்களால் முடிந்தது. முடிஞ்சா நீங்களும் இதுமாதிரி சிந்திக்க முயற்சி பண்ணுங்க அண்ணாச்சிகளா. குரானையும் ஹதீஸ்களையும் படித்துவிட்டு பிரியாணியை தின்று பல்லை குத்திக்கொண்டு ஊருல எவன் காபிர். எவன் சொர்க்கத்துக்கு போவான், எவனுக்கு சுவன கன்னிகைகள் கிடைக்கும் எவனுக்கு நரகம் கிடைக்கும் என்று வெட்டி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் உருப்படியாக எதாவது செய்ய பாருங்கள். முடியவில்லை என்றால் பொத்திக்கொண்டு ஒதுங்கி இருந்து வேடிக்கை பாருங்கள்.

Anonymous said...

//குர்ஆன் முன்னர் ஆங்கிலத்திலும், லத்தீனிலும் இன்னும் பல மேல் நாட்டு மொழிகளிலும் அன்றே மொழி பெயர்க்கப்பட்டு விட்டது. இப்பொழுது இணைய வசதி இருப்பதால் நான் எங்கிருந்து எடுத்துள்ளேன் என்பதை நீங்கள் இலகுவாக கண்டு கொண்டு விட்டீர்கள். அந்த வசதி அன்று இல்லாததால் பல குர்ஆனின உண்மைகளை ஆராய்ந்து தங்களின் வெளியீடாக ஐரோப்பியர்கள் வெளியிட்டள்ளனர். இதை பல அறிஞர்களும் ஒத்துக் கொண்டள்ளனர். //

ஆட தெரியாதவள் அரங்கம் கோணல் என்றாளாம். மூளை இருப்பவன் சிந்தித்து கண்டு பிடித்தவை தான் பெரும்பாலான கண்டுபிடிப்புகள்.,
--------------------------------
தினத்தந்தி ஜூலை 2, 2011
தினம் ஒரு தகவல்
கண்டுபிடிப்புகளின் காரணங்கள்

எதாவது ஒரு குற்ற சம்பவம் நடந்தால் அங்கு வரும் விசாரணை அதிகாரிகள் ஒரு சின்ன துப்பு கிடைத்தால் போதும், குற்றவாளியை கண்டுபிடித்து விடுவோம் என்பார்கள். இந்த துப்பு குற்றத்திற்கு மட்டுமல்ல பல கண்டுபிடிப்புகளுக்கும் உதவி இருக்கிறது.

நியூட்டனின் முன்பு விழுந்த ஆப்பிள் தான் அவருக்கு கிடைத்த க்ளு. அதை பூமிக்கும் விண்வெளிக்கும் பொருத்தி பார்த்து ஆராய்ந்ததின் விளைவே இன்று ரீபில் பேனா முதல் ராக்கெட் வரை சாத்தியமானது. இவை எல்லாம் நியூட்டனின் விதிகள் என்ற புது வடிவம் எடுத்தது. இதை போலவே குளிக்கும்போது கிடைத்த க்ளுவை வைத்து தண்ணீரை கொண்டு தங்கத்தின் அளவை அறியும் முறையை ஆர்க்கிமிடிஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனியை சேர்ந்த ஜெனிட்டா என்ற சிறுமி தன பெயரை மரத்தின் வேரில் கத்தியை கொண்டு செதுக்க முயன்றாள். இதை கண்ட ஜெனிட்டாவின் தந்தை அவளது பெயரை செதுக்கி தருகிறார். இரவில் தன பெயர் பணியால் மூடப்படுவதை ஜெனிட்டா விரும்பவில்லை. அதனால் எழுதுவதற்காக அவளது அப்பா எழுதி வைத்திருந்த காகிதம் ஒன்றை எடுத்து வந்து மரத்தில் பெயர் செதுக்கி வைத்திருந்த பகுதியை மூடினால். அதன் மீது பனி படர்கிறது. மறுநாள் விடிந்தது. மரத்துக்கு வந்த ஜெனியின் அப்பா மரத்தில் செதுக்கி இருந்த பெயர் பேப்பரில் பதிந்து இருப்பதை பார்த்தார். அந்த பேபரை பத்திரப்படுத்தினார். பின்னாளில் இதை வைத்து கூட்டன்பர்க் அச்சுக்கலையை கண்டுபிடித்தார்.

லியனார்டோ டாவின்சி தன நாட்டு அரசில் பல நல்ல பொறுப்புகளில் இருந்தார். ஒருமுறை அவரிடம் நாட்டின் இடப்பரப்புகளை அளவிடும் வெளிய கொடுக்கப்படுகிறது. டேப் கொண்டு அளந்தால் வேலை பல நாட்கள் பிடிக்கும் என்று கண்ட டாவின்சி, ஒரு சிறிய வண்டியில் புதுமையான கருவி ஒன்றை அமைத்தார். வண்டியின் சக்கரம் சுற்றுவதை கொண்டு அது எவ்வளவு தூரம் பயணம் செய்தது என்பதை அந்த கருவி காட்டும். இது தான் பின்னாளில் பைக், கார் போன்ற வாகனங்கள் வந்தபோது, அவை லிட்டருக்கு எவ்வளவு கி.மீ தூரம் செல்கின்றன எவ்வளவு தூரத்தை கடந்திருக்கின்றன என்பதை கண்டுபிடிக்க உதவியது. ஆக பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் சின்ன விசயத்தில் தான் தொடங்கி இருகின்றன. அதனால் சின்ன விசயங்களை கூட அலட்சியம் செய்யாதீர்கள்.
----------------

ஒரு ஆண்டுக்கு முன்னால் தினத்தந்தியில் வந்த தகவல் இது. குரானையும் ஹதீஸ்களையும் தாண்டி உங்களால் சிந்திக்க முடியவில்லை என்பதை ஒத்துக்கொண்டு போங்களேன். எதற்கு இந்த பில்ட் அப். வழக்கமாக எதற்கெடுத்தாலும் ஆதாரம் கொடு சாட்சி கொடு என்று கேட்பீர்களே. ஐரோப்பியர்கள் உங்கள் குரானை வைத்து தான் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் ஆராய்ச்சிகளையும் செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்.

ஒருவேளை அப்படியே குரானை படித்து அவர்கள் இதை எல்லாம் செய்தாலும். குரானுக்கு முழு சொந்தக்காரர்களான உங்கள் மூளைகள் என்ன அந்த நேரத்தில் மழுங்கியா இருந்தது. ஒருவேளை உங்கள் அல்லா உங்களை சித்திக்க சொல்லிவிட்டு சிந்திக்கும் திறனை காபிர்களுக்கு கொடுத்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

suvanappiriyan said...

Anany!

//ஆட தெரியாதவள் அரங்கம் கோணல் என்றாளாம். மூளை இருப்பவன் சிந்தித்து கண்டு பிடித்தவை தான் பெரும்பாலான கண்டுபிடிப்புகள்.,//

'Marguis' எனும் அறிஞர் தனது ‘speeches delivered in ' எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'It is to musalman science, to musalman art and to musalman literature that Europe has been in a great means indebted for its extrication from darkness of the middle ages.'

'ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.'

ஏனென்றால், 8-12ம் நூற்றாண்டு காலப்பகுதியானது 'ஐரோப்பா அறியாமை எனும் இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்' என இன்றும் வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் அசாத்தியமானவைகளாகும். இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு முஸ்லீம்கள் வளர்ச்சியடைந்திருந்தார்கள் என்பதற்கு இஸ்லாம் மார்க்கமும், அவர்களது வேதமும்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Sir. William Muir கூறுகிறார்:
'குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனையாகும். அதன் ஆதிக்கம் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் படர்ந்து நிற்கிறது. குர்ஆன் அனைத்திற்கும் மேலானது என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.' - The life of Mohammed, London 1903, ch. The Coran p.vii.

The Random House Dictionary of the English Language Comple by:- Lawrance Urdang – p ல் காணப்படும் Algebra (Ap’lwo), Al-Chemy (Chemistry). Alcohol, Alkali, Algorithm போன்ற விஞ்ஞானப் பெயர்கள் அரபியிலிருந்து எடுக்கப்பட்டவைகள் என்பதும் கவணத்திற் கொள்ளப்பட வேண்டியவைகளே.

வான ஆராய்ச்சியில் முஸ்லிம்கள் பெரும் ஆர்வம் காட்டியதன் விளைவாக மிக குறுகியக் காலத்தில் எண்ணற்ற முஸ்லிம் வானவியலாளர்கள் உருவாகியதோடு, 10 ம் நூற்றாண்டின் இறுதியில் பாக்தாத் பெருநகரில் முஸ்லிம் வானவியல் அறிஞர்கள் ஒன்றுக் கூடினர்.11ம்,12ம் நூற்றாண்டுகளில் ஸ்பெயினில் வானாராய்ச்சி செழித்தோங்கி வளர்ந்தது. இந்த காலக்கட்டத்தில் விண் ஆராய்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டனர் முஸ்லிம் விஞ்ஞானிகள்.மேலும் இத்துறை குறித்து அரும் பெரும் படைப்புகளையும் உருவாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

13ம், 14 ம் நூற்றாண்டுகளில் இந்த வானாராய்ச்சி சாதனையின் சிகரத்தை தொட்டது. இந்தக் காலக்கட்டங்களில் யூதர்களும் கிறித்துவர்களும் லத்தின் மற்றும் ஹிப்ரு மொழியில் இந்த படைப்புக்களை எல்லாம் மொழிப்பெயர்த்தனர். வானவியல் துறையில் கலங்கரை விளக்கமாக திகழ்ந்ததாக சொல்லப்படும் டாலமி (Ptolemy ) என்பவர் எழுதிய "Almagest " என்ற பிரபல்ய வானநூல் ஸ்பெயின் முஸ்லிம் விஞ்ஞானிகளால் நன்கு அலசி ஆராயப்பட்டு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது குறிபிடதக்கதொரு நிகழ்வாகும்.


இது மட்டுமின்றி வானசாஸ்திர அட்டவணைகளை (Astronomical Tables) தொகுத்ததன் மூலம் நட்சத்திரங்களின் நிலைகளையும் அளவுகளையும் பிரதிப்பலிக்கும் வான் கோளங்களை முஸ்லிம் வானவியலாளர்கள் தயாரித்தனர்.



இப்ராஹீம் இப்னு ஹபீப் அல்பாசாரி என்பவர்தான் முதன் முதலில் சூரியனின் உயர்வை அளக்கும் astrolabe என்ற கருவியை கண்டுப்பிடித்தார். இதனை தமிழில் சூரிய உயர்வு மானி என்றழைக்கலாம்.இந்தக் காலப்பகுதியில் தோன்றிய வானவியலாளர்களிலே மிகவும் பிரசித்திப் பெற்றவர் அப்துல்லாஹ் முஹம்மது இப்னு ஜாபிர் சீனான் அல்பத்தானி என்பவராவர். இவர்
வாழ்ந்தக் காலம் கி பி 858 - 929 ஆகும். அல்பத்தானி இளம் வயதிலிருந்தே 42 ஆண்டுகள் தொடர்ந்து வானாராய்ச்சியில் ஈடுப்பட்டு முக்கியமான பல கண்டுப்பிடிப்புகளை உலகிற்கு வழங்கினார். இவருடைய மிகவும் முக்கியமான கண்டுப்பிடிப்புகளில் ஒன்றுதான் 365 நாட்கள்,
5 மணி நேரங்கள், 46 நிமிடங்கள், 24 வினாடிகள் என்று சூரிய ஆண்டுக் கணக்கை
தீர்மானித்ததாகும்.இது இன்றைய நவீன விண்ணாராய்ச்சி மதிப்பீட்டிற்கு ஒத்ததாக விளங்குகின்றது.


அபுல் ஹுசைன் அப்துல் ரஹ்மான் அல் சூபி என்பவர் 10 ம் நூற்றாண்டில் மாபெரும் வானவியல் அறிஞராக திகழ்ந்தார். இவர் வாழ்ந்தக் காலம் கி பி 903 - 966 வரை ஆகும். இவர் பாரசீகத்தை சார்ந்தவர். இவர்தான் முதன்முதலில் நட்சத்திரங்களின் நிறம். அளவில் தென்படும் மாற்றதியும் அவற்றின் சரியான இயக்கத்தையும் பற்றிக் கண்டறிந்தார். இவர் எழுதிய
சுவார் அல் கவாகிப் (நிலையான நட்சத்திரங்களின் நூல்) மிகவும் பிரபல்யமானது.

naren said...

திரு.சு.பி.

///இப்பொழுது அதன் அருமை தெரிவதால் இந்துத்வா நண்பர்களிடம் இதைச் சொல்லி பாடத்திட்டத்தில் சேர்த்து விடச் சொல்லவும்.////

இந்துத்வாவாதிகள் எங்கே நண்பர்களாக பார்க்கிறார்கள், இரண்டு வார்த்தை பேசினால் எதிரியாகத்தான் பார்ப்பார்கள். உங்களை போல.LOL

வேண்டுமென்றால், இஸ்லாமியர்களின் நண்பர்களான காங்கிரஸ், ரம்ஜான் கஞ்சி குடிக்கும் தி.மு.க வினரிடம் சேர்த்து விட சொல்ல முயற்ச்சிக்கிறேன்.

நீங்கள் சொல்லியதை போல இஸ்லாமியர்கள் வானவியல் ஆராய்ச்சியாளர்களாக இருந்தார்கள் என்றால் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர்கள் குரான் வசனங்களை வைத்துதான் அதனை கண்டுபிடித்தார்கள் என அத்தாட்சி தந்தால், மிகவும் நன்றாக இருக்கும்.

அப்படியென்றால், கிருத்துவ, யூத, இந்து இன்னும் பிற.. அறிவியலாளர்கள் கண்டுப்பிடித்தவையெல்லாம், அவர்கள் மதத்தினாலும் வேதத்தினாலும் என்று வந்து நிற்கும்.

suvanappiriyan said...

நரேன்!

//அப்படியென்றால், கிருத்துவ, யூத, இந்து இன்னும் பிற.. அறிவியலாளர்கள் கண்டுப்பிடித்தவையெல்லாம், அவர்கள் மதத்தினாலும் வேதத்தினாலும் என்று வந்து நிற்கும்.//

உலகம் முழுவதும் நமது இந்தியா முதற்கொண்டு தூதர்களும் வேதங்களும் வந்ததாக குர்ஆன் பறை சாற்றுகிறது. அந்த வேதங்களின் வசனங்கள் குர்ஆனை ஒட்டியே வந்திருக்க வேண்டும். தற்போது எப்படி குர்ஆனின் அறிவியல் வசனங்கள் தற்கால கண்டுபிடிப்புகளுக்கு உதவுகிறதோ அதுபோல அந்த காலத்திய கண்டு பிடிப்புகளுக்கு வேத வசனங்கள் தூண்டுகோலாக இருந்துள்ளது. ஆனால் மனிதன் மற்றொரு இடத்திலிருந்து கடன் வாங்கியதை சொல்லாமல் தானே இந்த கண்டுபிடிப்புகளுக்கு முழு உரிமையாளன் என்று சொல்லிக் கொள்கிறான். எல்லோரும் மனிதர்கள்தானே! புகழுக்கு ஆசைப்படாதவர் யார்? :-)