Followers

Wednesday, August 29, 2012

நெகிழ வைத்த இளைஞர் அம்மார்!

நெகிழ வைத்த இளைஞர் அம்மார்!



அமெரிக்கா, மேட்ஸன், டிசம்பர் 1986

பிறந்தவுடன் பல நோய்த் தாக்கங்களோடு இந்த உலகுக்கு வருகிறார் அம்மார். குழந்தையின் நிலையைக் கண்டு மனம் வருந்திய பெற்றோர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்கின்றனர். இது நடந்தது 1986 ஆம் ஆண்டு. மருத்துவ மனையில் குழந்தையை சேர்த்து விட்டு பரிசோதனையின் முடிவுக்காக பெற்றோர் வெளியில் காத்திருக்கின்றனர்.

டாக்டர்: உங்கள் குழந்தையின் நிலை ரொம்பவும் பரிதாபமாக உள்ளது. எலும்புகள் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத படி ஒட்டியுள்ளன. இந்த நோய் பாதிப்பால் கிட்னி பழுதடைந்துள்ளது. உடலின் அனைத்து எலும்புகளிலும் இந்நோய் பரவியுள்ளது. கண்கள், நாக்கு இந்த இரண்டைத் தவிர மற்ற பகுதிகளை நோய் தாக்கியுள்ளது.

குழந்தையின் தாய்: மருத்துவர் என்ன சொல்கிறார்?

குழந்தையின் தந்தை: ஒன்றுமில்லை. பிறகு சொல்கிறேன். எல்லாம் நல்லபடியாக முடியும்.

டாக்டர்: இதைச் சொல்வதற்கு எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது. அதிகமாக போனால் இன்னும் இரண்டு வருடங்களில் உங்கள் குழந்தை இறந்து விடலாம். சாரி.....

குழந்தையின் தந்தை: ஓகே...டாக்டர். நான் வருகிறேன்.

குழந்தையின் தாய்: டாக்டர் என்ன சொன்னார்?

குழந்தையின் தந்தை: கொஞ்சம் வருத்தமான செய்திதான். இறைவன் செய்வது அனைத்தும் நன்மைக்காகவே இருக்கும். சரி வா போகலாம்.

-------------------------------

இனி நோயால் பாதிக்கப்பட்ட அம்மாரே பேச ஆரம்பிக்கிறார்.....

இறைவன் எனக்கு தந்த இந்த வாழ்வை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டுள்ளேன். 26 வருடங்கள் ஓடி விட்டது. ஒரு சராசரி மனிதன் எந்த அளவு சந்தோஷமாக இருப்பானோ அவ்வாறே இன்று வரை நான் இருக்கிறேன். நாம் நம்முடைய சவால்களை எதிர் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். எதையும் நம்மால் செய்ய முடியும் என்ற உறுதி மாத்திரமே நமக்கு தேவை. என்னுடைய ஆரம்ப கால படிப்பு அமெரிக்காவில் கழிந்தது. பனிக் கட்டிகளோடும் புத்தகங்களோடு எனது உறவினர்களோடும் சந்தோஷமாக எனது வாழ்க்கை ஓடியது. எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் வழக்கமாக நான் பள்ளி சென்று வந்தேன். எனது தாத்தா இதற்காக மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டார். இந்த ஏற்பாடுகளெல்லாம் என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

நான் படித்த பள்ளியில் அனைத்து பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி பெற்றேன். 96 சதவீதம் மதிப்பெண்களை எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது கனவுகளை நனவாக்கி வைத்த அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். அதன் பிறகு இரண்டு வருடத்தில் குர்ஆனையும் மனனம் செய்தேன்.

மனிதர்கள் எல்லாரும் ஒன்று போல் இருந்து விடுவதில்லை. எனக்கும் சில அவமானங்கள் நிகழ்ந்தது. அதனை பிரச்னையாக்க விரும்பவில்லை. ஏனெனில் என்னுடைய இலக்கும் இன்னும் மேலே போக வேண்டும் என்பதில் குறியாக இருந்ததால் இது போன்ற மனிதர்களை உதாசீனப்படுத்தி விட்டேன். இன்று அதைவிட சிறந்த கல்லூரிகளில் படித்து தற்போது மேலும் சிறந்த சான்றிதழ்களை பெற்றுள்ளேன்.

இன்னும் சில விசித்திரமான கனவுகள் பல எனக்குள் உண்டு. எனது பழைய கனவுகள் பல இன்று நிறைவேறியுள்ளது. இது போல் மற்ற கனவுகளையும் இறைவனின் உதவியால் நனவாக்கிக் காட்டுவேன். எனக்கு வரும் அனைத்து சவால்களையும் என்னை படைத்தவனின் உதவியால் முறியடித்து வெற்றி பெறுவேன்.

நம் வாழ்க்கையானது சில நேரங்களில் திரைப்படங்களை விட விநோதமாக மாறி விடும். டாக்டர் எனக்கு கொடுத்த நேரமோ இரண்டு வருடங்கள்தான். ஆனால் என்னைப்படைத்த இறைவன் என்னை 26 வருடங்கள் சந்தோஷமாக வாழ வைத்துள்ளான். இனியும் வாழ வைப்பான்.

-----------------------------------------

இந்த இளைஞர் பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறார். இன்று நமது தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தற்கொலை செய்திகளை தினமும் படித்து வருகிறோம். மதிப்பெண் குறைவாக எடுத்து மனமுடைந்து மாணவி தற்கொலை: காதல் தோல்வியில் பெண் தற்கொலை: வயிற்று வலி தாங்க முடியாமல் ஆண் தற்கொலை: அப்பா திட்டியதால் மனமுடைந்து மகன் தற்கொலை: சினிமா கூத்தாடிக்கான பிறந்த நாளில் கையை கீரிக் கொண்ட ரசிகர்: கூத்தாடி நலமாக இருக்க மொட்டை போட்டுக் கொண்ட ரசிகன்::-)

இவை எல்லாம் நாம் நாள் தோறும் படித்து வருகிறோம். தற்கொலை செய்து கொள்ள அனைத்து காரணங்களும் இந்த இளைஞர் அம்மாருக்கு பொருந்தும். ஏனெனில் இவர் சாப்பிடுவதிலிருந்து கழிவறை செல்வதிலிருந்து படுக்கைக்கு செல்வது வரை மற்றவரின் உதவி தேவைப்படுகிறது. ஆனால் இந்த இளைஞர் என்றுமே தனது வாழ்நாளைப் பற்றிய துன்பத்தில் வீழ்ந்தது இல்லை. இவரது பெற்றோரும் 'இறைவன் செய்வது எல்லாம் நன்மைக்கே' என்ற எண்ணத்துக்கு வந்து விடுவதால் அவர்களும் மன நிம்மதியை அடைகிறார்கள்.

அம்மார் என்ற இந்த இளைஞரும் தனது குறைகளையே நிறைவாக்கி இன்று சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார். தனது இந்த நிலைக்காக தன்னை படைத்த இறைவனை நிந்திக்கவில்லை: கோபப்படவில்லை: மாறாக போற்றுகிறார். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கிறார். இந்த மன உறுதியை கொடுத்தது எது? இவரது பெற்றோருக்கு இப்படி ஒரு மகன் கிடைத்தும் அவனை உதாசீனப்படுத்தாமல் இந்த அளவு முன்னுக்கு கொண்டு வர வழைத்தது எது?

உறுதியான இறை நம்பிக்கை. இந்த உலகம் மிக அற்பமானது. இந்த உலகில் நாம் பெற்றுக் கொள்ளும் சிரமத்திற்கு சிறந்த வெகுமதிகளை இறைவன் மறு உலகில் தருவான். பொறுமையைக் கொண்டு இறைவனிடம் நமது குறைகளை வைத்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்ததாலேயே இவர்களால் நிம்மதியாக இருக்க முடிகிறது. இறை நம்பிக்கையால் ஆன்மீக வாதிகள் பெரும் பல நன்மைகளில் இதுவும் ஒன்று.

'உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்க்கையையும் அமைத்தான்'
-குர்ஆன் 67:2

மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக நிச்சயமாக பூமியில் உள்ளவற்றை அலங்காரமாக நாம் ஆக்கினோம்'
-குர்ஆன் 18:07


ஆம். அம்மாரைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் பிறந்தது முதல் இன்னும் இறக்கும் காலம் வரை மற்ற மனிதர்கள் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும் பெற்றதில்லை. இதற்கு பரிசாக இறப்புக்குப் பிறகு நிரந்தர உலகமான மறுமை வாழ்வில் நம்மை படைத்த இறைவன் அனைத்து சுகங்களையும் அம்மாருக்கு தருவான். இது போன்ற நம்பிக்கை நம் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

-----------------------------------------------

அறிவியல் இன்னும் கடவுளை நிரூபிக்கவில்லையாதலால் என்னால் இறை நம்பிக்கையை பெற முடியவில்லை என்பவர்களுக்கு சகோதரர் ஜெயபாரதன் கொடுத்த விளக்கத்தையும் பார்ப்போம்..

மனிதன் பிறக்கும் போதே அவனது தலையில் “கணினித் தாய்மைப் பீடம் (Computer Mother Board), மூளை இயக்கி (CPU -Central Processing Unit) நினைவுத் தகுதி (Memory Capacity), இயக்க ஏற்பாடு (Operating System Like Windows XP, Vista or Window : 7) என்ன வென்று இயற்கை அல்லது ஊழ் விதி தேர்ந்தெடுத்துப் பதிவாக்கி விடுகிறது என்பது என் கருத்து. பிறந்த பிறகு மனிதன் அவற்றை ஓரளவு மேம்பாடு (Upgrade) செய்து கொள்ள அவனுக்குத் திறமை அளிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மனிதனால் தனக்குப் பிறவியிலேயே இடப்பட்டுள்ள தாய்மைப் பீடம், மூளை இயக்கி, நினைவுக் களஞ்சியத்தைப் (Mother Board, CPU, Memory Units) பின்னால் அவனாலோ அல்லது எவனாலோ மாற்ற இயலாது ! இயக்க ஏற்பாடு (Operating System) மாறலாம் ! ஆதலால் மனிதன் ஊழ் விதியின் கைப்பிள்ளைதான் ! ஊழ்விதியின் தீராத ஒரு விளையாட்டுப் பிள்ளைதான்.
கடவுளை அதன் படைப்புகளில் ஒன்றான மனிதன் தனது கண்ணால் காண முடியாது.
எப்படி அதை விளக்குவது ?

வயிற்றில் தொப்புள் கொடியுடன் பின்னி வளரும் குட்டி யானை தன் தாயைக் காண முடியாது. வயிற்றிலிருந்து வெளிவந்த பின்னே குட்டி தாய் யானையைக் காண்கிறது. ஆதலால் பிரபஞ்சத்தில் அடைபட்டுப் போன மனிதன் இயற்கையின் தொப்புள் கொடி இணைப்பில் வாழ்கிறான்; மாள்கிறான்.

அதுபோல் மனிதன் பிரபஞ்சப் படைப்பாளியைக் காண வேண்டு மென்றால் இயற்கையின் தொப்புள் கொடி அறுத்து பிரபஞ்சத்தை விட்டு வெளியேற வேண்டும்.
கடவுளைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் அதன் படைப்புகள் மூலந்தான் நாம் விளக்க முடியும்.

1. தெரிந்தவற்றை வைத்து தெரியாதவற்றை விளக்குவோம்.
2. தெரியாவற்றை யூகித்து தெரிந்தவற்றை மேம்படுத்து வோம்.

இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

இருவேறு உலகம் என்பவை ஆன்மீக உலகம், உலோகாயுத உலகம். சித்தாந்த ஞான உலகத்தின் இயற்கை விதிகள் வேறு. பௌதீக-ரசாயன உலகத்தின் இயற்கை நியதிகள் வேறு. திரு என்பது உலோகாயுதச் சொத்துக்கள். தெள்ளியர் என்பது ஆன்மீக ஞானிகள்.
உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன வென்று விஞ்ஞானம் இதுவரை விளக்க முடிய வில்லை. உயிர் என்பது எவ்வித இரசாயன மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட தில்லை என்பது என் கருத்து. ஆத்மா ஓர் இயக்க சக்தி. ஆத்மா எந்த வாகனத்தில் (Car, Rail, Ship, Plane, Rocket or Man, Woman or Animals) நுழைகிறதோ அந்த வாகனத்தின் சாதனங்கள் ஆத்மாவின் இயக்க முறைக்கு வரையறையும், எல்லையும் வகுக்கிறது.



ஊர்ந்து செல்லும் இலைப்புழு ஏன், எப்படிப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியாய் மாறிச் செல்கிறது ? வகுத்தான் வகுத்த விதி முறைப்படி நிகழும் ஒரு காட்சி இது. இப்படி செய்வது எது ? இது ஏன் நேர்கிறது ? இதுபோல் முட்டைக்குள் உருவாகும் குஞ்சுக்கு உயிர் எப்படி நுழைகிறது ? சிசு பிறக்கும் போது தாய்க் கருவில் உயிர் அதற்கு எப்படி நுழைகிறது ? மனிதன் இறந்த பிறகு போது உயிர் எங்கே போகிறது ?

300 பேர் அமர்ந்து பறக்கும் ஆயிரக் கணக்கான ஜெட் விமானங்களைப் படைத்த மனிதனால் ஒரு பட்டுப் பூச்சியை, மினிமினியை உண்டாக்க முடியுமா ?

மனிதனால் பூமியின் ஈர்ப்புச் சக்தியைக் காணமுடியுமா ?

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது மெய்யானால், ஏனிப்போது அப்படிப் பிறப்ப தில்லை ? நிகழ்வதில்லை ? மனிதக் குரங்கு எப்படி ஆறறிவு படைத்த மனிதப் பிறவியாய் மாறியது ?

நம் கண்முன் ஊர்ந்திடும் இலைப்புழு பறந்திடும் பட்டாம் பூச்சியாய் ஏன், எப்படி மாறுகிறது ?
இந்த வினாக்களுக்கு விடை எவருக்கும் தெரியாமல் இவை இன்னும் மர்மமாகவும் புதிராகவும் இருந்து வருகின்றன.

'அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்: நன்கறிந்தவன்'
-குர்ஆன் 6:103


ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

மறு உலகில் நாம் இறைவனை சந்திக்கவுள்ளோம் என்பதை இறைவன் கூறும் போது:

'இறைவனை அஞ்சுங்கள். அவனைச் சந்திக்க உள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.'
-குர்ஆன் 2:223




12 comments:

suvanappiriyan said...

ஆறுமுகநேரி:காயல்பட்டணத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலைசெய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
காயல்பட்டணம் பாஸ்நகரைச் சேர்ந்தவர் சகாயம் ஜெயராஜ்.இவரது மகன் அகஸ்டின்(28). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுப்பதில்லையாம். இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று சீதக்காதி நகர் பெருமாள் கோயில் அருகில் விஷம்குடித்து மயங்கிகிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு காயல்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

---------------------------

வல்லநாடு:வல்லநாட்டில் குறைவான மதிப்பெண் பெற்றதால் பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வல்லநாட்டைச் சேர்ந்தவர் தவசிமுத்து. இவருடைய மகன் அழகுதம்பான்(16). பாளையங்கோட்டை முன்னீர்பள்ளத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியான முறையில் படிக்காததால் குறைவான மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆசரியர்கள் ரேங்க் அட்டையில் பெற்றோரிடம் கையொப்பம் வாங்கிவருமாறு கூறியுள்ளனர். இந்நிலையில் வல்லநாடு வந்த அழகுதம்பான் பெற்றோரிடம் ரேங்க் அட்டையை காட்டினால் திட்டுவார்கள் என்று பயந்து வீட்டில் உள்ள மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

-------------------------

புளியங்குடி:புளியங்குடி அருகே கந்துவட்டி கொடுமையால் பழைய இரும்பு வியாபாரி குடும்பத்துடன் விஷம் குடித்தார். இதில் வியாபாரி பலியானார்.விருதுநகர் மாவட்டம் சங்கரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்துக்குமார். இவர் புளியங்குடியை அடுத்த சிந்தாமணி சொக்கலிங்க சுவாமி கோயில் வடக்கு தெருவில் மனைவி பார்வதி, மகன் முனீஸ்வரன், மகள் விஜயலட்சுமி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்வதாக தனியாக இடம் ஒன்றை தேர்வு செய்து வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் இல்லாத நிலையில் பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டுள்ளனர்.

அசலும் வட்டியும் செலுத்த இயலாமல் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த முத்துக்குமார் நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்து வாங்கி வந்து குடித்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் நான்கு பேரையும் சிந்தாமணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.
----------------------

திருவள்ளூர்:மனைவி, மகன் இறந்த துக்கத்தால், மனஉளைச்சலில் இருந்த தந்தை, மகள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.திருவள்ளூர் அடுத்த, தண்ணீர்குளம் ஆதிவாசி காலனியைச் சேர்ந்தவர் தவசி மகன் திருப்பதி, 40. இவரது மனைவி குமாரி,35. இவர்களுக்கு குணசுந்தரம், குணசுந்தரி என, இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இதில் குணசேகரன், கடந்த மார்ச் மாதம், அருகில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது, நீரில் முழ்கி பலியானார்.இதனால் அவரது குடும்பத்தினர் மன விரக்தியில் இருந்தனர். மகன் குணசேகரன், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்தான். இதற்காக, கடந்த, 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, பள்ளியில் அவனுக்கு பரிசு வழங்கப்பட்டது.பரிசு வாங்க மகன் உயிரோடு இல்லையே என, விரக்தியடைந்த திருப்பதி, அவரது மனைவி குமாரி, மகள் குணசுந்தரி ஆகியோர், அன்றைய தினம், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.இதில் மயக்க நிலையில் இருந்த மூவரையும், அவரது உறவினர்கள் மணிவேல், ராஜூ ஆகியோர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனைவி குமாரி இறந்தார்.

தந்தை திருப்பதி, மகள் குணசுந்தரி இருவரும் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினர்.வீட்டுக்கு வந்த பிறகும், தந்தையும், மகளும் தீவிர மனஉளைச்சலில் இருந்தனர். நேற்று காலை தந்தையும், மகளும் புட்லூர் ரயில் நிலையம் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், தண்ணீர்குளம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.


இந்த தற்கொலை செய்திகள் அனைத்தும் தினமலரில் இன்று 30-08-2012 அடுத்தடுத்து வந்தவை.

suvanappiriyan said...

ஆத்தூர் : ஆத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து ‌கொண்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவனையில் தலைமை மருத்துவராக இருப்பவர் சி கே ராஜேந்திரன். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் நர்சுகளிடம் கள்ளத்‌தொடர்பு இருந்ததாகவும், இதுகுறித்து வீட்டில் அடிக்கடி தகராறும் இருந்து வந்தது. இந்நிலையில், ஆத்தூர் திரெளபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேதத்தை கைப்பற்றியுள்ள ஆத்தூர் போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

dinamalar 30-08-2012

Anonymous said...

Kavya says:
August 30, 2012 at 4:12 am

இன்று வ உ சி கப்பலோட்டியத்தமிழன் என்றழைக்கப்பட்டு போற்றப்படுகிறார். தூத்துக்குடி துறைமுகத்துக்கு அவர் பெயரிடப்பட்டிருக்கிறது. எப்படிக் கப்பலோட்டினார்? அவர் என்ன மெகா பணக்காரரா? பணத்தைத் தேடி அலைந்தார். “வெள்ளைக்காரன் உம்மை மட்டும் உள்ளே போடுவானென்று நினைக்காதீர். எம்மையும் உள்ளே தள்ளி எங்கள் குடும்பங்களைச்சீரழித்து ஓட்டாண்டிகளாக்கி விடுவான்வே. எம்மிடம் வராதீர்1″ என்று விரட்டினார்கள் தூத்துக்குடி பணக்காரர்கள்.

பின்னர் ஆர்தான் துணிந்து வந்தது? ஆர் பணத்தை அவருக்குத்தந்து “துணிந்து செயல்படும்; வட்டியும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். நானும் பங்குதாரர் என நினைத்துக்கொள்ளும்வே!” என்று ஆர் முன் வந்து பணத்தைக் கொடுத்தது?

வ உ சியின் வரலாற்றிலே இருக்கிறது. எதையும் மறைக்க முடியாது. அன்னாரின் பத்திரம் வ உ சிக்கு எதிரான வழக்கில் சாட்சியமாக அளிக்கப்பட்டது.

வேதம் கோபாலுக்கு மனசாட்சியிருந்தால் அவ்வரலாற்றைப்படித்து அப்பணக்காரரின் பெயரை திண்ணை வாசகர்களுக்குச் சொல்லட்டும்.

நான் ஏன் செய்ய வேண்டும்? த ஓனஸ் ஸ் அபான் த் அக்கூசர் டு ப்ரூவ் ஹ்ஸ் சார்ஜ். The onus is upon the accuser to prove his accusations. இசுலாமியருக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் இவர்கள் செய்யட்டும்.

suvanappiriyan said...

திரு காவ்யா!

//இசுலாமியருக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் இவர்கள் செய்யட்டும்.//

வேதம் கோபாலுக்கு உண்மை தெரிந்தாலும் இங்கு சொல்லவா போகிறார்? அதை நான் சொல்கிறேன்.

கப்பலோட்டிய தமிழனை மக்களுக்கு தெர்யும். கப்பலோட்டிய தமிழனுக்கு உதவிய வள்ளல் பக்கிர் முஹம்மதை மக்கள் அறிவார்களா ? மகாகவி பாரதியார் தனது பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்ததில் கிடைத்த நன்கொடை சில நூறு ரூபாய்கள்தான்! ஆனால் வள்ளல் பக்கிர் முஹம்மத் அவர்கள் கப்பலோட்டியத் தமிழன் வ உ சி க்கு பத்துலட்சம் ரூபாய் கொடுத்து அவருக்கு கப்பல் வாங்க உதவினார். இந்த செய்தியை எந்த வரலாற்று புத்தத்திலாவது பதிவு செய்துள்ளர்களா ? இந்தியாவின் கவுரவத்தை தாங்கிப் பிடித்த வள்ளல் ஹாஜி பக்கீர் முஹம்மதைத் தெரிய முடியாதளவுக்கு இருட்டடிப்பு செய்து ஏமாற்றப்பட்ட துரோக வரலாற்றை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்.


கப்பலை ஓட்டிய மாலுமியின் வாரிசுகள் ஐ.ஏ.எஸ் ஆகவும், ஐ.பி.எஸ் ஆகவும் முடியுமாம் ? கப்பலை வாங்கிக் கொடுத்த வள்ளலின் வாரிசுகள் பாலர் பள்ளிக்குக் கூட செல்ல முடியாமல், ஒருவேளை உணவைப் பெறமுடியாமல், இரண்டு ஆடைகளைப் பெறமுடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் ப்ளாட்பாரத்தில் வாழ்க்கையை நடத்த வேண்டுமாம் ?

' பாக்கியமிகுந்த பக்கிரி முஹம்மதை
வாக்கின் வலியால் வசப்படச் செய்தியான்
வணிகர் பலரையும் வருத்தி அவனிளம் துணிவோடு
சுதேசிய நாவாய்ச் சங்க நன்மலர் கண்டேன்''


என்று பாடிவிட்டு கப்பல் கம்பெனிக்குத் துணிவுடன் முதலில் பொருள் தந்தது பிரபல முஸ்லிம் வியாபாரி பக்கிர் முஹம்மது என்று அடிக்குறிப்பாக கூறியுள்ளார்.

(ஆதாரம் வ. உ. சி. சுயசரிதை பக் :4950)

காவ்யா போன்ற நடுநிலைவாதிகள் நம் தமிழகத்தில் பரந்து இருக்கும் வரை வேதம் கோபால் போன்றோரின் பொய் புரட்டுகள் அம்பலத்தில் ஏற வாய்ப்பில்லை.

நன்றி காவ்யா!


suvanappiriyan said...


ஸ்மிதா!

//What is your take on registration of marraiges? No answer.//

திருமணங்களைப் பதிவு செய்யும் வழக்கம் மிக நீண்ட காலமாகவே முஸ்லிம் சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மிக நம்பகமான முறையிலும் சந்தேகத்துக்கு இடம்மில்லாத வகையிலும் பதிவு செய்யப்பட்டு அவை பாதுகாத்தும் வைக்கப்படுகிறன. சிலநுறு வருடங்களுக்கு முற்பட்ட பதிவேடுகள் கூட இன்றும் உள்ளன.
தேவைப்படும் நேரங்களில் மஸ்ஜிதுகள் அல்லது காஜிகள் மூலம் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ்கள் போதுமானவையாகவும், அரசங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களாவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

பிற பதிவுகளை விட முஸ்லிம் களின் நடைமுறையில் உள்ள பதிவு முறை பாதுகாப்பானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமாகும். ஏனெனில் மணமகள் அல்லது மணமகள், தான் வசிக்கும் ஊர் ஜமாஅத்தின் திருமண அனுமதிச் சீட்டு பெறாவிட்டால் அவர்களுக்கு எங்குமே நிகாஹ் செய்து வைக்கப்படுவது இல்லை , நிகாஹ் புத்தகம் கூட தரப்படுவதில்லை என்பதே உண்மைநிலை, இதன் காரணமாக, திருமணம் நடைபெற்று பதிவு செய்யப் பட்ட பின் கணவன் உயிருடனிருக்கும் நிலையில் அவனுடைய மனைவி வேறு எங்கும் சென்று திருட்டுத்தனமாக நிகாஹ் செய்து கொள்ளமுடியாது. மாறாக ரிஜிஸ்டர் திருமணம் செய்பவர்கள் பல்வேறு இடங்களில் பல திருமணங்கள் செய்து ரிஜிஸ்டரும் செய்கிறார்கள் என்று அடிக்கடி செய்திகள் வெளிவருவதைப் பார்க்கிறோம்.

முஸ்லிம்கள் நடைமுறை படுத்தி வரும் பதிவில் எவ்வித முறைகேடும் குறைபாடும் இல்லை அதே சமயம் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தால் குறிப்பிட்ட பலன் எதுவும் இல்லை. எங்கோ நடக்கின்ற ஒருசில தகாத நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி, முஸ்லிம்கள் கட்டாயமாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஏற்கெனவே ரிஜிஸ்டர் முறை இல்லாத சமூகங்களுக்கு இந்த சட்டத்தை அமுல்படுத்திக் கொள்ளட்டும்.

ஒரு கல்விச் சான்றுக்கோ இறப்புச் சான்றுக்கோ 10 முறை அலைய விட்டு கையூட்டும் பெற்றுக் கொள்ளும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் கணவனும் மனைவியும் வந்து ரிஜிஸ்டர் செய்தால் அது நகைப்பிற்குரியதாகி விடும். இன்று வரை ஜமாத்துகள் நடத்தி வரும் திருமணத்தில் எந்த குழப்பமும் வந்ததில்லை. வருங்காலத்திலும் வராது. ஏனெனில் அதில் வரும் சிக்கலை தீர்க்க எங்களிடம் குர்ஆன் உள்ளது.

suvanappiriyan said...

தங்கமணி!

//ராமசாமி, கிருஷ்ணசாமி என்று பெயர் வைத்த மற்றசாதியினரை அவர் பார்த்ததில்லை போலிருக்கிறது.//

ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கும் அவரது பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. அதற்காக அவர் ராமரை வழிபடுவதாக என்னை நம்ப சொல்கிறீர்களா? முருகனுக்கு தழிழகம் முழுவதும் கோவில் இருக்கிறது! ராமருக்கு எங்காவது கோவிலை பார்த்திருக்கிறோமா? இலங்கை வரை வந்த ராமருக்கு தமிழகத்தில் ஏன் கோவில் இல்லை என்பதற்கு உங்களின் பதில் என்ன?

//அரபியாவில் எந்த வரலாறு எப்படி , எந்த குலம் எப்படி என்றால் தெரியும். தமிழ்நாட்டை பற்றி அவருக்கு என்ன தெரியும்? தெரிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறுதான்.//

தமிழக வரலாறு என்ன பொன்னெழுத்துக்களால் பொறிக்கக் கூடிய வகையிலா இருக்கிறது.

நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண் மாடத்தியை ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது.

• புலையர் சாதி மக்கள் நடந்த பாதையைப் பெருக்கிச் செல்ல அவர்களது கழுத்தில் துடைப்பம் கட்டிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.
• 'பார்த்தால் தீட்டு' என தீண்டாமை கொடுமையில் நம்பூதிரியும், நாயரும் தெருக்களில் நடந்து வரும் போது "எட்டிப்போ" என புலையர்களையும், ஈழவர்களையும் எட்டு அடி தூரத்திற்கு மேல் தள்ளி நடக்க வைத்தனர்.
• நாடார் சாதி ஆண்கள் வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக்கூடாது. மீறினால் அதற்கு அபராதம்.
• ஆண்கள் மீசை வளர்க்கக்கூடாது.
• ஆண்கள் தலையில் துணி கட்டக் கூடாது.
• பெண்கள் மார்பைத் துணிவைத்து மறைக்கக் கூடாது. மார்பின் அளவிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் (முலை வரி எனப்பட்டது).
• பனையேறுபவர்களது அருவா, கம்புதடி என அனைத்திற்கும் வரி.
• திண்ணை வைத்து வீடு கட்டக்கூடாது. திண்ணை வைத்து வீடு கட்டினால் ஆட்கள் வந்து அமர்ந்து பேசுவார்கள் அதனால் அறிவு பெருகிவிடுமாம்.
• குடியிருப்புகள் போல வரிசையாக வீடு கட்டக்கூடாது.
• தாலியில் தங்கம் அணியக்கூடாது. பனைஓலையை சுற்றி கட்டுவது தான் தாலி.
• செருப்பு அணியக்கூடாது.
• படிக்கக்கூடாது.
• பொது குளத்தில் குளிக்கக்கூடாது.
• இடுப்பில் தண்ணி குடம் எடுக்கக்கூடாது.

• பைத்தியக்கார விடுதி என்று விவேகானந்தரால் சொல்லப்பட்ட மனுதர்மத்தின் கோட்டையாக இருந்த திருவிதாங்கூரில் நடந்த கொடுமைகள் தான் இவை அனைத்தும். கன்னியாகுமரியில் இந்து சமயம் செய்த அடிமைத்தனத்திற்கு சாட்சியாக திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் பல ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும் இருக்கின்றன.

• இந்த கொடுமைகளை நிகழ்த்தியது யார்? ஆங்கிலேயர்களா? மிசனரிகளா? மொகலாய மன்னர்களா? யார் செய்தார்கள்? யார் செய்தது என்பதை என்னை விட நீங்களே நன்கு அறிவீர்கள்.

இந்த வரலாற்றை எல்லாம் தெரிந்து எனது வாழ்வில் என்ன முன்னேற்றம் வந்து விடப் போகிறது தங்கமணி! இதற்கு பதில் அந்த வரலாறுகள் மண்ணோடு மண்ணாகட்டும்.

suvanappiriyan said...

தங்கமணி!

//தமிழகம் முழுவதும் ராமர் கோவில்கள் இருக்கின்றன. மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலிலிருந்து, பூசலாங்குடி கிராமத்தில் ராமர் கோவிலிலிரிந்து தென்கரைக்கோட்டை கல்யாண ராமர் என்று ஊர் ஊராக இருக்கின்றன. உங்களிடம் சொன்னால் ஒத்துகொள்ளப்போகிறீர்களா?//

இப்படி தமிழகத்தில் தேட வேண்டிய நிலையில்தான் ராமர் கோவில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன், பழனி முருகன், சிதம்பரம் நடராஜர், திருத்தணி முருகன், திருப்பதி வெங்கடாஜலபதி என்று ஒரு முஸ்லிமான எனக்கு உடன் ஞாபகம் வருகிறது. ஆனால் ராமனின் கோவிலை தேட வேண்டிய நிலையில்தான் உள்ளது. ஏனெனில் இந்த ராமனே வட நாட்டுக் கடவுள். ஆரியர்கள் இந்திய உப கண்டத்தில் நுழையும் போது ஆப்கானிஸ்தானத்தையும் அதை ஒட்டிய ஈரான் அடங்கலான பகுதிகளையும் ஆட்சி செய்த மன்னனை திராவிட கடவுளாக உருமாற்றினர். ஆதி கால தமிழர்களிடம் இந்த சாதி பாகுபாடு கிடையாது. என்று ஆரியர்கள் இந்த மண்ணில் காலடி வைத்தார்களோ அன்று பிடித்தது சனியன் இந்த நாட்டுக்கு. அதற்கு முன்னால் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற உயரிய கொள்கையில்தான் எனது முன்னோர்கள் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளார்கள். ஆரியர்களின் வரவுக்குப் பிறகுதான் சாதி பாகுபாடுகளே தலை தூக்க ஆரம்பிக்கிறது.

//அல் அக்தும் என்ற தீண்டத்தகாத ஜாதி அரபிய தீபகற்பத்தில் இன்னமும் இருக்கிறது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை அடிமைகளாகவும், தெருப்பொறுக்கவும், கழிவறைகளை சுத்திகரிக்கவும் அரபியர்கள் உபயோகப்படுத்துகிறார்கள்//

பொய்களை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். இங்கு அரபு நாடுகளில் நீங்கள் சொன்ன வேலைகளை செய்வதெல்லாம் வெளி நாட்டு ஒப்பந்த பணியாளர்கள். குறிப்பாக பங்களாதேசை சேர்ந்தவர்கள். அதிலும் மனிதர்களை கொண்டு மலம் அள்ளும் பழக்கம் இந்தியாவை மனதில் வைத்து எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். :-) இங்கு அந்த வேலைகளை எல்லாம் இயந்திரங்களே செய்கின்றன. மலமும் தண்ணீரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அந்த தண்ணீரையும் வீணாக்காமல் வயல்வெளிகளுக்கு பயன் படுத்துகிறார்கள்.குழாய்கள் நிலத்தின் அடியில் செல்வதால் நாற்றமும் வருவதில்லை. மலத்தை உரமாக டின்களில் அடைக்கப்பட்டு வயல் வெளிகளுக்கு அனுப்பப்படுகிறது. அந்த தொழிற்சாலையை நானே நேரில் சென்று பார்த்துள்ளேன். நாற்றமோ ஒரு அசூசையோ அங்கு வேலை செய்யும் இடத்திலோ வேலை செய்பவர்களிடமோ தென்படாது. தொழுகை நேரம் வந்தால் பெரும் செல்வந்தர்களுக்கு மத்தியில் அந்த வேலையாட்கள் நின்று தொழும் அழகை பார்க்க கண்கோடி வேண்டும்.

இவ்வாறு தெரு கூட்டுபவர்களை இழிவாக நினைக்கக் கூடாது என்று அரசே சில டாகுமெண்டரிகளை வெளியிடுகிறது. சில தனியாரும் வெளியிடுகின்றனர். ஒரு சவுதி நாட்டவர் ஒரு நாள் முழுக்க பங்களாதேசிகளோடு வேலை செய்து உழைப்பின் உயர்வை உணர வைத்துள்ளார். அதனை காணொளியாகவும் வெளியிட்டுள்ளனர். அந்த பதிவையும் பாருங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2012/07/blog-post_23.html

//நாய் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை கழுவு. ஆனால் அக்தம் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை உடைத்துபோடு என்பதுதான் அரபுகள் இவர்களை நடத்தும் விதம்.//

அது இஸ்லாம் வருவதற்கு முன் 1400 வருடங்களுக்கு முந்தய நிலை. இஸ்லாம் வந்த பிறகு………

”அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்படியுங்கள்” என்று கூறினார்கள். (முஸ்லிம், 3750)

இதுதான் இன்றைய நிலை.



suvanappiriyan said...

தங்கமணி!
தங்கமணி!

//1400 ஆண்டுகளாக இஸ்லாமில் மூழ்கி திளைத்து இருக்கும் அரபிகளிடம் இன்னமும் தெருக்கூட்டுபவர்களை இழிவாக நினைக்கு பழக்கம் இருக்கிறதா?//

அந்த டாகுமெண்டரி இழிவுக்காக எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு சம்பளம் அரசு சிறப்பாக கொடுத்தாலும் காண்ட்ராக்டர்கள் சரியாக கொடுப்பதில்லை என்றும் உழைப்பின் அருமையை தெரிந்து கொள்ளவுமே இந்த படம். தொழும் போது ஒருவரின் தோள் மற்றவரோடு ஒட்ட வேண்டும் என்பது சட்டம். சில துப்புறவு தொழிலாளர்கள் மசூதிக்கு சீருடையோடு வரும் போது பெரும் கோடீஸ்வரர்களான சவுதிகளும் தொழ வருவர். அவர்கள் பக்கத்தில் நிற்க சங்கோஜப்பட்டுக் கொண்டு தயங்கும் பங்காளிகளை அந்த செல்வந்தர்களே புன்னகையோடு அவர்களை இழுத்து தன் பக்கத்தில் நிறுத்திக் கொள்வதை தினமும் பார்க்கலாம். ஏனெனில் இங்கு வேதத்துக்கு இவர்கள் கட்டுப்படுகிறார்கள்..

//1400 ஆண்டுகளுக்கு முன்னால் அல்ல, 2004 இல் எழுதப்பட்ட கட்டுரை. ஆங்கிலத்தில் இருக்கிறது. யாரேனும் அரபியில் மொழிபெயர்த்து சொன்னால், சுவனப்பிரியன் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.//
ஏமனின் தீண்டத்தகாத பிச்சையெடுக்கும் அல் அக்தும்//
நீங்கள் நம்பக்கூடிய அல் ஜஜீரா தொலைக்காட்சி வீடியோ//

ஒரு நாட்டில் வறுமையானவர்களும் செல்வந்தர்களும் இருப்பது இயற்கை. எல்லோருமே பணக்காரர்களாக இருக்க முடியாது. ஏமனில் அந்த மக்கள் தங்களின் வறுமையை போக்க வேண்டும் என்றுதான் குரல் கொடுக்கிறார்கள். அரசு இவர்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை தீட்டி வருகிறது. ஆனால் இந்த மக்களை பள்ளியில் தொழுகைக்கு அனுமதிக்கவோ அல்லது தீண்டாமை பராட்டப்படுகிறது என்றோ குரல் எழுப்பவில்லை. குர்ஆனும் தீண்டாமை பாராட்டவில்லை.


http://www.youtube.com/watch?v=9HCg5TSis0M&feature=related

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் புரளும் கீழ் சாதி மக்கள். போன வருடம் நடந்தது. இந்தியா ஒரு வல்லரசாகப் போகிறது என்று கனவு வேறு கண்டு வருகிறோம்.

இநத அளவு ஒரு சமூகத்து மக்களை சிந்தனை அற்று சுய மரியாதை இழக்க வைத்ததுதான் தங்கமணியின் மார்க்கம்.

திலிபனாக இருந்து பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிய நம் இசைப்புயலை எவரது காலிலாவது விழுந்து பார்த்திருக்கிறீர்களா? அந்த அளவு சுயமரியதையை புகட்டுவது இஸ்லாம்.

http://www.youtube.com/watch?v=PqkC7afcmxo

இந்த காணொளியில் ஒரு பிராமணர் எந்த அளவு மற்ற மக்களை கீழ்த்தரமாக நினைக்கிறார், அதற்கு ஆதாரமாக வேதங்களை துணைக்கழைக்கிறார் என்பதை பாருங்கள். தமிழக கிராமங்களில் செருப்பு போட்டு தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க இன்றும் தடை உள்ளது. அதையும் இந்த காணொளியில் பாருங்கள்.

நான் எழுதிய தமிழ் புரியவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த மொழியான சமஸ்கிரதத்தில் யாரையாவது மொழி பெயர்க்க சொல்லி அனைத்தையும் தெரிந்து கொள்ளவும். :-)

.

UNMAIKAL said...

இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

திருமாவளவன் அறிக்கை!


தமிழகத்தில் ஏராளமான இசுலாமியர்கள் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடிவருகின்றனர்.

தமிழக அரசு 1987 ஆம் ஆண்டு முதல் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, பத்தாண்டுகளைக் கடந்த சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்து வருகிறது.

கடந்த 2008, ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 1405 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், அவர்களில் இசுலாமியர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

அப்போது விடுதலையானவர்கள் என்னென்ன சட்டப்பிரிவுகளில் சிறைப்படுத்தப்பட்டிருந்தனரோ, அதே சட்டப்பிரிவுகளின் படியே இசுலாமியர்களும் சிறையிலுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சென்று கணக்கெடுத்துப் பார்த்தால், பொய் வழக்குகளிலும்; சந்தேக வழக்குகளிலும் அதிகம் சிறைபடுத்தப்பட்டவர்களாக வாடிக்கொண்டிருப்பவர்கள், தலித்துகளும் இசுலாமியர்களும்தான் என்கிற உண்மை வெளிப்படும்.

இசுலாமியர்களின் சமூக பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்த சச்சார் குழுவின் அறிக்கை இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

பல்வேறு வழக்குகளில் தண்டனைப் பெற்ற இசுலாமியர்களுக்கு, சட்டப்படி வழங்கப்பட வேண்டிய உரிமைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.

மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சாதாரண சலுகைகள் கூட, அவர்கள் இசுலாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மறுக்கப்படுகின்றன.


இசுலாமியர்களைப் போலவே நளினி உள்ளிட்ட அரசியல் கைதிகளும் இந்த அவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, தமிழக அரசு இந்த ஆண்டு செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளில், பத்தாண்டுகளைக் கடந்து சிறையில் வாடும் இசுலாமியர்கள் உள்ளிட்ட அரசியல் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 01-09-2012 சனி அன்று மாலை, சென்னை அரசுப் பொது மருத்துவமனை எதிரிலுள்ள மெமோரியல் ஹால் அருகே, இந்திய தேசிய லீக் நடத்தும் அறப்போராட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்.

ஒடுக்கப்பட்ட நம் சொந்தங்களின் விடுதலைக்காக குரல் எழுப்ப, ஜனநாயக சக்திகள் அனைவரும் திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

இவண்

திருமாவளவன்


http://www.thiruma.in/2012/08/release-muslims-in-jails.html

suvanappiriyan said...

//அசைவமாக இருந்து பன்றி சாப்பிடாதோர் தங்கள் சுவையை தொலைத்தவர்கள்//

சீனாவில் மருந்து மூலம் பன்றிகளை இளைக்க செய்து அவற்றின் கறியை விற்றது தொடர்பாக 100க்கும் அதிகமானோருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது
சீனர்கள் பன்றி கறியை விரும்பி உண்கின்றனர். இங்கு பல பண்ணைகளில் இறைச்சிக்காக பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. ஆனால் பன்றியில் அதிக கொழுப்பு இருப்பதால் விற்பனை குறைந்தது.
இதையடுத்து கொழுப்புகளை கறைய வைக்கும் மருந்துகளை பன்றிகளுக்கு பண்ணை உரிமையாளர்கள் கொடுத்து வந்தனர். கிளன்பூடரோல் என்ற மருந்து சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை பன்றிகளின் உடலில் செலுத்தி வளர்த்துள்ளனர். இந்த மருந்து மனிதர்களின் உடல்நலத்தை உடனடியாக பாதிக்கக் கூடியது.
இந்த மருந்து செலுத்தப்பட்ட பன்றிகள் கொழுக்காமல், இளைத்தே காணப்படும். அதன் இறைச்சியிலும் கொழுப்பு சத்து அவ்வளவாக இருக்காது. அந்த கறி அதிக விலையும் போகும்.
பன்றி கறியை விற்பனைக்கு முன் அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் தருவார்கள். ஆனால் தடை செய்யப்பட்ட மருந்து பன்றி கறியில் கலந்திருப்பது தெரிந்திருந்தும் அதிகாரிகள் பலர் சான்று கொடுத்துள்ளனர்.
இந்த மோசடியை சீனாவின் ஹெனான் மாகாண அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட பண்ணை உரிமையாளர்கள், 77 அதிகாரிகள் உள்பட 100க்கும் அதிகமானோருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான லியூ ஜியாங் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,றைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் , இது போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (Round Worm) ஊசிப்புழு (Pin Worm) கொக்கிப்புழு (Hook Worm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

நல்ல வேளைப்பா நான் தப்பிச்சேன். :-)


Nizam said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே, அருமை.
மனிதன் நம்பிக்கை இழக்கும் போது இது போன்று கனோளியை பார்க்கும் போது நம்பிக்கையை இழக்கமாட்டோம். மாறாக தன் நம்பிக்கையை மேலும் மேலும் வளரும். மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

suvanappiriyan said...

நியூயார்க் : அமெரிக்காவின், நியூஜெர்சி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், மூன்று பேர் பலியாகினர். அமெரிக்காவில், துப்பாக்கிச் சூடு என்பது, சமீப காலமாக அதிகரித்துள்ளது. கொலராடோ மாகாணத்தில், திரையரங்கில், கடந்த ஜூலை 20ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில், 12 பேர் கொல்லப்பட்டனர். விஸ்கான்சின் மாகாணத்தில், கடந்த மாதம் முதல் வாரத்தில், சீக்கியர் கோவிலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஆறு சீக்கியர்கள் பலியாகினர். கடந்த மாதம், 24ம் தேதி, நியூயார்க் நகரில் உள்ள, உலகப் புகழ் பெற்ற எம்பயர்ஸ்டேட் கட்டடம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவங்களின் அதிர்ச்சி மறையும் முன், மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம், நியூஜெர்சியில் உள்ள வணிக வளாகத்தில், நேற்று அரங்கேறியது. இந்த துப்பாக்கிச் சூட்டில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். நியூஜெர்சியின் பாத்மார்க் என்ற இடத்தில் உள்ள பல சரக்கு கடையில் நுழைந்த, குண்டு துளைக்காத உடை அணிந்து வந்த வாலிபர், கடை ஊழியர்களை நோக்கி, துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளார். நியூஜெர்சி மேயருக்கு போன் செய்து, "உன்னால் இந்த துப்பாக்கிச் சூட்டை தடுக்க முடியாது' எனக் கூறியுள்ளார். இவர் நடத்திய தாக்குதலில், மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர், இந்த கடை ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.

dinamalar 31-08-2012