Followers

Thursday, August 09, 2012

ஏ.ஆர்.ரஹ்மானும் தேனீக்கள் விழாவும்!



சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தேனீக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் "பாலினேட்டர்-1' என்ற பொருளில் மூன்று நாள் கலை திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

அண்ணா சாலையில் உள்ள ஹயாத் ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த கலை திருவிழாவின் தொடக்க விழாவில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால் காந்தி கலந்து கொண்டார்.
இந்த கலை திருவிழா குறித்து ஓவியர் மற்றும் வடிவமைப்பாளர் ராஜீவ் சேத்தி, ஹோட்டல் உரிமையாளர் அருண் சரஃப், நமீதா சரஃப் ஆகியோர் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

நாட்டில் 60 சதவீதம் விவசாயத் தொழில் நடைபெறுகிறது. தாவரங்களில் 80 சதவீத மகரந்த சேர்க்கை தேனீக்களால் நடைபெறுகிறது. இப்போது 75 சதவீத தேனீக்கள் அழிந்து விட்டன. நாட்டில் புலி, சிங்கம், யானை போன்ற பெரிய விலங்குகள் அழிந்து வருவதை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர். அரசும், அரசு சார்புடைய நிறுவனங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அவற்றை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், தேனீக்கள் அழிந்து வருவது குறித்து எவரும் கவலை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.

ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள், காடுகளில் கான்கிரீட் கட்டுமானங்கள் போன்றவற்றால் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. தேனீக்கள் அழிந்தால் மனித இனமும் அழியும். எனவே, தேனீக்களை பாதுகாக்க வேண்டியது அவசியம்.தேனீக்களை பாதுகாக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாட்டிலேயே முதன் முதலாக சென்னையில் இந்த விழிப்புணர்வு கலை திருவிழாவை நடத்துகிறோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசும் போது 'இது எனக்கு புதிய அனுபவம். வழக்கத்திற்கு மாறான ஒரு சூழலில் இந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.' என்றார். இந்த விழாவில் அவர் தனது மனைவி சாஹிராவோடு கலந்து கொண்டார். ரஹ்மானின் கேஎம் மியூசிக்கில் பயின்று வரும் சந்தோஷ் இந்நிகழ்ச்சியில் ஒரு பாடலை கம்போஸ் செய்திருந்தார். இதற்கான பாடலை வைரமுத்து எழுதியிருந்தார்.

தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி பேசும் போது 'இது போன்ற நிகழ்ச்சிகள் நாடு முழுக்க நடைபெற வேண்டும். தேனீக்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும். இதன் மருத்துவ குணங்களை இன்னும் பலர் அறியாமல் இருக்கின்றனர்' என்றார்.

திரு விழாவின் ஒரு பகுதியாக தேன் சேகரிப்பவர்களான குரும்பா என்ற மலை சாதியினரின் நிகழ்ச்சியும் முறையே தமிழிலும் தெலுங்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் நீலகிரியிலிருந்து விழாவுக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஹயாத் ஹோட்டல் நிர்வாகி அருண்சராஃப் மேலும் கூறும் போது 'அரை நூற்றாண்டுக்கு முன்னால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒன்றை நமக்கு சொல்லி விட்டு சென்றார். தேனீக்கள் முழுதும் அழிக்கப்பட்டால் அதன் பிறகு மனித நாகரிகம் என்பது நான்கு ஆண்டுகளே என்று. எனவே நாம் தேனீக்களின் அருமையை உணர வேண்டும்' என்றார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் 'முன்னால் பிரதமர் இந்திரா காந்தியிடம் தேனீக்களின் அவசியத்தைப் பற்றி பேசியிருந்தேன். தேனீக்களின் நினைவாக ஒரு தபால் தலை வெளியிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். தேனீக்களைப் பற்றி ஆராய்வதற்கு நிறைய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்' என்று தனது செய்தியாக கூட்டத்தில் அறிவித்தார்.

ஆசிய மரபு அறக்கட்டளையின் தலைவர் ராஜீவ் சேத்தி கூறும் போது 'நாங்கள் ஏற்கெனவே அக்டோபரில் ஹைதரபாத்தில் பாலினேட்டர்-2 (மகரந்த பரப்பி-2) நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

-தகவல் உதவி : தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ்

----------------------------------------------------------------------------------

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் 16:68)




“பின், நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் காட்டித் தரும் எளிதான வழிகளில் உன் கூட்டுக்குள் ஒடுங்கிச் செல்” என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான். அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு பிணி தீர்க்க வல்ல சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)



வேலைக்காரத் தேனீயின் உடலில் தேனை செரிப்பதற்கான வயிறும் தேனை சேகரிப்பதற்கான பையும் தனித்தனியே அமைந்திருக்கின்றன. சேகரிப்பதற்கான பை ராணித்தேனீயின் உடலிலோ, ஆண் தேனீயின் உடலிலோ இல்லை. மலர்களிலிருந்தும் கனிகளிலிருந்தும் சேகரிக்கப்படும் அமுதம் (நெக்டர்) அந்தப்பையில் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது, இதையே அடைகளில் சேமிக்கிறது. இந்த திரவத்தில் அடைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது, இதன் பெருமளவு நீர்மம் குறைக்கப்பட்டு இறுகிய பின்பே தேனாகிறது.



சமீப காலம் வரை தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞசி தனது கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்றுதான் எண்ணியிருந்தோம். கனிகளிலும், மலர்களிலும் உள்ள குளுக்கோஸை தேனீக்கள் விழுங்கி பல வேதி மாற்றங்கள் நிகழ்ந்து அதன் பிறகு அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து வெளியாகும் திரவம் தான் தேன் என்று தற்காலஅறிவியல் கூறுகிறது. நுணணோக்கிகள் இல்லாத அன்றைய காலத்தில் இவ்வாறு ஒரு உண்மையை குர்ஆனால் எவ்வாறு கூற முடிந்தது என்று சிந்திக்க சொல்கிறது இறை மறை



தேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது. பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன், லேசர் கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துல்லியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம். இவற்றை எல்லாம் நாம் சிந்திக்க வேண்டும் என்றுதான் குர்ஆனில் இறைவன் இதற்கென ஒரு அத்தியாயத்தையே இறக்கியுள்ளான்.

---------------------------------------------------------------

தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

கொம்புத்தேன்

மரங்களின் பொந்துகளில் கூடு கட்டும். இந்த தேனீக்கள் சிறிய கொசுவைப் போல் காணப்படும். இந்த வகையான தேன் கிடைப்பது மிகவும் அரிது.

புற்றுத்தேன்

கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

மனைத்தேன்

இது வீடுகளில் கட்டுகின்ற தேன். பசியினைத் தூண்டும். உடலை வலுவாக்கும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

பொதுவாக தேன் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும். நெருப்பினால் உண்டான காயங்களை குணப்படுத்தவும், கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கவும் இது பயன்படுகிறது.


---------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு - 17





13 comments:

suvanappiriyan said...

அன்புள்ள மலர் மன்னன்!

// அன்புள்ள சுவனப்பிரியன்!
முகமது அவர்கள் இறைத் தூதுவர் என்று நம்புபவர்கள்தானே முஸ்லிம்கள். அப்படியிருக்க முகமதியர் எனக் குறிப்பிடுவது அவர்களைப் பெருமைப் படுத்துவதாகத்தானே இருக்கும், ஏன் புண்படுத்துவதாகக் கூறுகிறார்கள்? விளக்க இயலுமா?//

ஏசு கிறித்துவை வணங்குபவர்கள் கிறித்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அதேபோல் முகமது நபியை வணங்குபவர்கள் முகமதியர்கள் என்று காலப் போக்கில் திரிபு படுத்தப்படும். தற்போது அவ்வாறு இல்லையானாலும் ஏசுவுக்கு நிகழ்ந்ததுபோல் முகமது நபிக்கும் ஆகி விடக் கூடாது என்பதற்காகத்தான் 'முகமதியர்கள்' என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்த்துக் கொள்ளச் சொல்கிறோம்.

இறந்து போகும் சில நாட்கள் முன்பு கூட முகமது நபி 'என் அடக்கத்தலத்தை விழா நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். ஏசுவுக்கு செய்தது போனற தவறை எனது அடக்கத் தலத்தில் அரங்கேற்றி விடாதீர்கள்' என்று பலமுறை சொன்னதை வரலாறில் பார்க்கிறோம். எனவேதான் ஏசு நாதருக்கு நிகழ்ந்தது போன்ற கடவுளாக்கும் தன்மை முகமது நபிக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே முகம்மதியர் என்று அழைப்பதை தவிர்க்க சொல்கிறோம்.

//இன்னொன்று கேட்க மறந்தேன். முத்தவல்லி என்பது எந்த மொழிச் சொல்? திரிபு எனில் மூல மொழி எது?//

'வலி' என்ற அரபு மூலச் சொல்லிலிருந்து மருவி முத்தவல்லியாக உருப்பெற்றுள்ளது.

//உங்களுக்கு இங்கே சென்னையில் எனக்கு வீட்டுக்கு அரபு மொழி கற்றுத் தருபவர் எவரையும் தெரியுமா? எனது உடல்நிலை ஆசிரியர் வீடு சென்று கற்கும் நிலையில் இல்லை. நான் உங்கள் மத சம்பந்தமான எல்லாவற்றையுமே ஆங்கிலத்தில்தான் படித்துத் தெரிந்துகொண்டேன். அது மொழிபெயர்ப்பாளர் புரிந்துகொண்ட முறையில்தானே இருக்கும்?//

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இது போன்ற சேவைகளை செய்து வருகின்றனர். கீழே கொடுத்துள்ள ஏதாவது ஒரு விலாசத்தில் உங்களுக்கான பதில் கிடைக்கும்.

வட சென்னை
ஆலம் 9884114018
சுல்தான் 9884132651
ரஃபீக் 9840271828

தென் சென்னை
அப்துர் ரஹீம் 98400 70840
கமர் 9962713745
அப்துல் காதர் 9840383972
Onlinepj.com
Tntj.net

houristani said...

ஏ ஆர் ரஹ்மான் பேரைத் தலைப்பில் போட்டு எழுதியிரிக்கீங்க... சரி.

ஏர் ஆர் ரஹ்மான் எதன் மூலம் உங்களுக்கு பரீச்சயம் ஆனவர்? அவர் போடுற ம்யூசிக்கினால் தானே? இல்லையா ?

ஆனால் உங்கள் வஹ்ஹாபிசம்தான் அவரோட‌ ம்யூசிக்கிற்கு எதிரியாச்சே !

என்ன சுவனப்பிரியன் இது ? அய்யோ கொள்கை யில்லாத ஆளா இருக்கீங்களே!

உங்களை நீங்கள் வஹ்ஹாபி என்று சொல்லிகிட்டே, அன்னைக்கு என்னடான்னா, இஸ்ரேலுக்கு எதிரா பதிவு எழுதிறீங்க. வஹ்ஹாபி என்று சொல்லிக்கிட்டு, முஸ்லிம்-பிரதர்ஹுட் கட்சிக்கு ஆதரவா பதிவு எழுதுறீங்க...

திரட்டு.கொம் said...

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com

suvanappiriyan said...

புனை பெயரில்!

//ஆதமிலிருந்து ஏசுநாதர்வரை எந்த செய்தியை இறைவனிடமிருந்து கொண்டு வந்தார்களோ அதே செய்தியைத்தான் முகமது நபியும் கொண்டு வந்திருக்கிறார். –> அப்புறம் ஏன் நீங்கள் ஆதமிலிருந்து ஏசுநாதர் வரை உள்ளவர்களை வழிபடாமல், இவர் சொன்னதன்படி மட்டும் நடக்கிறீர்கள். முன்னாலேயே ஏசுநாதர் கொண்டுவந்து விட்டார் எனில் புதிதாய் ஒரு மதம் ஏன்…?//

‘இஸ்ரவேலர்கள் உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்’
-குர்ஆன் 2:75

பைபிள் ஏசுநாதருக்கு இறைவன் அருளிய வடிவில் பாதுகாக்கப்படவில்லை. ஏசுநாதர் ஒரு இறைத்தூதராகத்தான் பிரசாரம் செயதார். ஆனால் இன்று அவரே கடவுளாக்கப்பட்டு விட்டார். முக்கடவுள் கொள்கை தாராளமாக கிறித்தவ மதத்தில் பரவி விட்டது. எனவே தான் முகமது நபிக்கு ஒரு வேதத்தை அருளி அவரை நபியாக இறைவன் நியமித்து குர்ஆனையும் அருளினான். பைபிளில் ஒரு இடத்தில் கூட தன்னை வணங்கச் சொல்லி ஏசு கூறவில்லை. பவுல் அடிகள் தனக்கு ஒரு கூட்டத்தை சேர்ப்பதற்காக இறைவன் வார்த்தையையும் பவுலின் சொந்த கருத்தையும் கலந்து உருவாக்கப்பட்டதே இன்றைய பைபிள்.

suvanappiriyan said...

லண்டன் : தன்னைப் பார்த்து சிரிக்கா‌த 2வயதான தன் மகளை, சுவற்றில் வீசி கொலை செய்த நியூசிலாந்து நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் செய்தி் வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொடூரத் தந்தைக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதா‌டிய வக்கீல் தெரிவித்துள்ளதாவது, இதேபோல், கடந்த 2010ம் ஆண்டில் மகளை கொடூரமாக தாக்கி கொலை செய்த தந்தையை குற்றவாளியல்ல என்று ஆக்லாந்து கோர்ட் தீர்ப்பு வழங்கியதாக அவர் மேற்கோள் காட்டி வாதிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தின மலர்
10-08-2012

suvanappiriyan said...

திரு ஹோரிஸ்தானி!

//ஏர் ஆர் ரஹ்மான் எதன் மூலம் உங்களுக்கு பரீச்சயம் ஆனவர்? அவர் போடுற ம்யூசிக்கினால் தானே? இல்லையா ?

ஆனால் உங்கள் வஹ்ஹாபிசம்தான் அவரோட‌ ம்யூசிக்கிற்கு எதிரியாச்சே !//

முதலில் வஹாபி என்று ஒரு பிரிவு இஸ்லாத்தில் இல்லை. அனைவரும் முஸ்லிம்களே! தூய குர்ஆனையும் நபி மொழியையும் அடி பிறழாமல் பின்பற்ற முயற்ச்சிப்பவர்களை அதற்கு எதிரான கருத்துள்ளவர்கள் 'வஹாபிகள்' என்று அழைக்கின்றனர்.

அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இஸ்லாமிய கடமைகளை(தர்ஹா தவிர்த்து) ஓரளவு வாழ்வில் நிறைவேற்றும் ஆசையுள்ளவர். இந்த கூத்தாடிகள் உலகை விட்டு வெளியேறுங்கள் என்று இதற்கு முன்பும் பதிவுகளில் எழுதியுள்ளேன். இன்ஷா அல்லாஹ் வெளியேறுவார் கூடிய சீக்கிரத்திலேயே!

//உங்களை நீங்கள் வஹ்ஹாபி என்று சொல்லிகிட்டே, அன்னைக்கு என்னடான்னா, இஸ்ரேலுக்கு எதிரா பதிவு எழுதிறீங்க. வஹ்ஹாபி என்று சொல்லிக்கிட்டு, முஸ்லிம்-பிரதர்ஹுட் கட்சிக்கு ஆதரவா பதிவு எழுதுறீங்க...//

ஹி..ஹி.....இது ரொமப பழசாயிடுத்து....வேறு ஏதாவது முயற்சி பண்ணுங்கோ....நன்னா வருவேள்....

இக்பால் செல்வன் என்றும், யாசிர் என்றும் ஆயிஷா என்றும் பெயரை வைத்துக் கொண்டு இஸ்லாத்துக்கு எதிராக எழுதி முஸ்லிம்களிலும் இப்படி ஆட்கள் இருக்கிறார்கள் என்று உலகுக்கு காட்டுவதில்லையா? காந்தியை கொல்வதற்குமுன் முஸ்லிம்களை சிக்க வைக்க இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொள்வதில்லையா? முஸலிம் பெயர்களில் மாலேகானில் கச்சிதமாக குண்டு வைத்து பிறகு முஸ்லிம்களையே கைது செய்வதில்லையா? எனவே நீங்கள் சொன்ன இவ்வாறான கருத்துகள் எல்லாம் யாரால் பரப்பப்படுகிறது என்பதை அறியாதவர்களல்ல நடுநிலைவாதிகள்.

Anonymous said...

//இக்பால் செல்வன் என்றும், யாசிர் என்றும் ஆயிஷா என்றும் பெயரை வைத்துக் கொண்டு இஸ்லாத்துக்கு எதிராக எழுதி முஸ்லிம்களிலும் இப்படி ஆட்கள் இருக்கிறார்கள் என்று உலகுக்கு காட்டுவதில்லையா? //

சுவனப்பிரியன் ஏன் இப்படி ? இக்பால் என்றால் அது என்ன முஸ்லிம் பெயராகத் தான் இருக்க வேண்டுமா .. பலமுறை சொல்லியும் நீங்கள் தான் விட மாட்டேன் எங்கின்றீர்கள் ... இக்பால் என்ற பெயர் முஸ்லிம் அல்லாதோர் பலரும் வைத்திருக்கின்றார்கள். கென்யா முதல் இந்தியா, இந்தோனேசியா வரை இப்பெயர் முஸ்லிம் அல்லாதோருக்கும் உண்டு...

கமல் ஹாசன் என்ற பெயரும் முஸ்லிம் பெயர் தானே என நம்ப வேண்டும் நீங்கள் ! அதனை ஏன் குறை சொல்வதில்லை.. முஸ்லிம் பெயர் முஸ்லிம் அல்லாத பெயர் என்றெல்லாம் இருக்கின்றதா.. அப்படிப் பார்த்தால் எண்ணற்ற முஸ்லிம்கள் யூதப் பெயர்களை அல்லவா வைத்துள்ளார்கள் .. அவர்கள் என்ன யூதர்கள் என்ற போர்வையில் உலகை ஏமாற்றுகின்றார்களா ?!!!

எதாவது சொல்லணும் என்பதற்காக சொல்ல வேண்டியது....

ஏ.ஆர்.ரகுமான் தாம் சார்ந்த சுபி பிரிவின் படி நல்ல மனிதராகவே வாழ்கின்றார். சுபிக்கள் இசையால் இறைவனை தேடுபவர்கள் தானே.. அதே வலுவால் தான் ரகுமானும் இசையால் வெற்றிகள் பல படைத்துள்ளார்.. பாராட்டிட்டு போவோமா அதை விட்டுட்டு சுத்தி வளைச்சு ஏன் சார் இப்படி ????!!

உங்க பேரை நீங்கத் தான் கெடுத்துக்கிறீங்க ..

Anonymous said...

முஸ்லிம்கள் பெயரில் ஏமாற்றுகின்றார்கள் எனக் கூறுகின்றீர்கள் .. பிரபல கவிஞரும் நாத்திகருமான ஜாவத் அக்தரும் ஏமாற்றுக் காரரா என்ன ??? !!!

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் முஸ்லிமாகப் பிறந்தவர்களில் நாத்திகர்களே இல்லை என்பது போல் அல்லவா இருக்கு !!!

suvanappiriyan said...

//சுவனப்பிரியன் ஏன் இப்படி ? இக்பால் என்றால் அது என்ன முஸ்லிம் பெயராகத் தான் இருக்க வேண்டுமா .. பலமுறை சொல்லியும் நீங்கள் தான் விட மாட்டேன் எங்கின்றீர்கள் ... இக்பால் என்ற பெயர் முஸ்லிம் அல்லாதோர் பலரும் வைத்திருக்கின்றார்கள். கென்யா முதல் இந்தியா, இந்தோனேசியா வரை இப்பெயர் முஸ்லிம் அல்லாதோருக்கும் உண்டு...//

நீங்கள் பதிவராக இருப்பது தமிழுலகில். ஒன்றிரண்டு ஆங்கில பதிவுகள் எழுதினாலும் அதிகமாக நீங்கள் நேரத்தை செலவழிப்பது தமிழ் பிளாக்குகளில். தமிழகத்தில் யாருமே இக்பால் என்ற பெயரில் வேற்று மதத்தவர் தங்களின் பெயரை வைத்துக் கொள்வதில்லை. அதிலும் உங்களின் பதிவுகள் அதிகம் நாத்திகத்தையும் ஆபாசத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இப்படியும் முஸ்லிம்களில் உள்ளார்கள் என்று உலகுக்கு காட்டவே இந்த பெயர் மாற்றம். நானும் ஆரம்பத்தில் உங்களை முஸ்லிம் என்றே நினைத்தேன். பாகிஸ்தானில் கூட மிக சொற்ப நபர்களே இவ்வாறான பொதுப் பெயர்களை வைப்பது. எனவே கென்யாவிலும் மற்ற ஆப்ரிக்க நாட்டு மொழிகளில் நீங்கள் பதிவு எழுதும்போது இக்பால் என்ற பெயர் பொருந்தி வரும். தமிழில் இந்த பெயரை வைத்துக் கொண்டு எழுதுவது ஏமாற்று வேலையே அன்றி வேறில்லை.

suvanappiriyan said...

//முஸ்லிம்கள் பெயரில் ஏமாற்றுகின்றார்கள் எனக் கூறுகின்றீர்கள் .. பிரபல கவிஞரும் நாத்திகருமான ஜாவத் அக்தரும் ஏமாற்றுக் காரரா என்ன ??? !!!

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் முஸ்லிமாகப் பிறந்தவர்களில் நாத்திகர்களே இல்லை என்பது போல் அல்லவா இருக்கு !!!//

முஸ்லிம்களில் நாத்திகர்களே இல்லை என்று நான் சொல்லவில்லையே! வழக்கம் போல் கருத்து திரிபு.

//கமல் ஹாசன் என்ற பெயரும் முஸ்லிம் பெயர் தானே என நம்ப வேண்டும் நீங்கள் ! அதனை ஏன் குறை சொல்வதில்லை.. முஸ்லிம் பெயர் முஸ்லிம் அல்லாத பெயர் என்றெல்லாம் இருக்கின்றதா.. அப்படிப் பார்த்தால் எண்ணற்ற முஸ்லிம்கள் யூதப் பெயர்களை அல்லவா வைத்துள்ளார்கள் .. அவர்கள் என்ன யூதர்கள் என்ற போர்வையில் உலகை ஏமாற்றுகின்றார்களா ?!!! //

கமல ஹாஸன் இந்த பெயரை தானாக விரும்பி வைத்துக் கொள்ளவில்லை. அவரது அப்பா தனது நண்பர் ஹாஸனின் நினைவாக வைத்தது அந்த பெயர். ஆனால் நீங்கள் வைத்துக் கொண்டிருப்பது நீங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டது.

//ஏ.ஆர்.ரகுமான் தாம் சார்ந்த சுபி பிரிவின் படி நல்ல மனிதராகவே வாழ்கின்றார். சுபிக்கள் இசையால் இறைவனை தேடுபவர்கள் தானே.. அதே வலுவால் தான் ரகுமானும் இசையால் வெற்றிகள் பல படைத்துள்ளார்.. பாராட்டிட்டு போவோமா அதை விட்டுட்டு சுத்தி வளைச்சு ஏன் சார் இப்படி ????!!//

திலிப் குமார் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறியது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதனால். முகமது நபியை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டதால். அதையும் மற்ந்து விட வேண்டாம.

Anonymous said...

//தமிழில் இந்த பெயரை வைத்துக் கொண்டு எழுதுவது ஏமாற்று வேலையே அன்றி வேறில்லை.//

அப்படி நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பில்லை சகோ. என்னால் ஒன்றும் செய்ய முடியாது .. பார்க்கப் போனால் கொஞ்ச நாட்களில் கமல் ஹாசன் பெயரைக் கூட மாற்றச் சொல்வீர்கள் போல !!! நான் யாரையும் ஏமாற்றவில்லை சகோ. அப்படியான குழப்ப நிலை வரும் போது எல்லாம் நான் முஸ்லிம் இல்லை என்ற அனைத்து தளங்களிலும் கூறி வருகின்றேன் ... !!! நான் ஏமாற்ற நினைத்தால் நான் ஒரு முஸ்லிம் தான் எனக் கூறி ஏமாற்றலாமே !!!

பல நாத்திகர்கள் அனைத்து வித பெயர்களையும் தமிழகத்தில் வைத்துள்ளார்கள் .. என நீங்கள் சொல்லும் காரணம் எனக்குப் பொருந்தாது ... !!!

Anonymous said...

//திலிப் குமார் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறியது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதனால். முகமது நபியை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டதால். அதையும் மற்ந்து விட வேண்டாம.//

அது அவரின் விருப்பம் சகோ... !!! அதனை நான் மறுக்கவோ எதிர்க்கவோ போவதில்லை !!!

//கமல ஹாஸன் இந்த பெயரை தானாக விரும்பி வைத்துக் கொள்ளவில்லை. அவரது அப்பா தனது நண்பர் ஹாஸனின் நினைவாக வைத்தது அந்த பெயர். ஆனால் நீங்கள் வைத்துக் கொண்டிருப்பது நீங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டது.//

தவறாக எண்ணி வருகின்றீர்கள் .. நான் பிறந்த போது எனக்கு முதலில் இட்ட பெயர் இக்பால் தான் ... எனது பள்ளியில் சேர்ந்த போதும் கூட இக்பால் என்ற பெயரில் தான் இருந்தேன் .. பின்னர் எனது பாட்டியார் தான் இக்பாலை நீக்கிவிட்டு வேறு பெயரை இணைத்துவிட்டார். இன்று கூட எனது நடுப்ப் பெயராக இக்பால் என்று தான் கனடாவில் பதிந்து இருக்கின்றேன் .. !!!

ஆக ! நானாக விரும்பி இதனை வைக்கவில்லை. எனது தந்தையாருக்கு நெருங்கிய தோழர் ஒருவரின் பெயர் இக்பால் அவரின் நினைவாகவே எனக்கு இப்பெயரை இட்டார் எனது தந்தையார்.. எனதுக் குடும்பத்தாரின் வற்புறுத்தலால் தான் எனது முதல் பெயர் நடுப்பெயராக மாறிவிட்டது .. அவ்வளவே சகோ..

suvanappiriyan said...

//தவறாக எண்ணி வருகின்றீர்கள் .. நான் பிறந்த போது எனக்கு முதலில் இட்ட பெயர் இக்பால் தான் ... எனது பள்ளியில் சேர்ந்த போதும் கூட இக்பால் என்ற பெயரில் தான் இருந்தேன் .. பின்னர் எனது பாட்டியார் தான் இக்பாலை நீக்கிவிட்டு வேறு பெயரை இணைத்துவிட்டார். இன்று கூட எனது நடுப்ப் பெயராக இக்பால் என்று தான் கனடாவில் பதிந்து இருக்கின்றேன் .. !!! //

உங்கள் பாட்டிக்கு இது இஸ்லாமிய பெயர் என்று தெரிந்திருக்கிறது. ஆனால் நீங்களோ இதனை பொதுப் பெயர் என்று சாதிக்கிறீர்கள்.

உங்கள் அப்பாவும் தனது முஸ்லிம் நண்பரின் பெயரை அவரது ஞாபகார்த்தமாக வைத்துள்ளார். தனது மகனுக்கு வேறொரு மதத்தின் பெயரை ஒரு அப்பா வைக்கிறார் என்றால் அநத நண்பர் எந்த அளவு உங்கள் அப்பாவின் அன்பை பெற்றவராக இருந்திருப்பார் என்று நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை.

நீங்கள் இஸ்லாத்தின் மேல் ஆக்கபூர்வமான கேள்விகளை வைத்தால் மகிழ்ச்சியே! ஆனால் குதர்க்கமாக அபாண்டங்களை சுமத்துவதும், குர்ஆன் வசனங்களை தெரிந்து கொண்டே திரிப்பதும், முகமது நபி யின் உருவம் என்று எவனோ ஒருவன் வரைந்த உருவத்தை வெளியிடுவதும், அதை நீக்க சொன்னால் 'முடியாது' என்று மறுப்பதும் போன்ற முரண்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

அடுத்து யாரெல்லாம் தீவிரமாக இஸ்லாத்தை எதிர்க்கின்றார்களோ அவர்களின் உள்ளங்களைத்தான் இஸ்லாம் வெகு விரைவாக ஈர்த்துள்ளது. முகமது நபியை வெட்ட வாளுடன் வந்த உமர்தான் பின்னாளில் அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஜனாதிபதி என்பதையும் மறந்து விட வேண்டாம்.