Followers

Wednesday, October 24, 2012

மானிலிருந்து பரிணாமம் அடைந்ததா ஒட்டக சிவிங்கி?



பெண் மான்: கீழே இவ்வளவு இலை தழைகள் இருக்க ஏன் கஷ்டப்பட்டு கிளைகளின் இலைகளுக்கு முயற்சிக்கிறே!

ஆண் மான்: நம்முடைய முன்னோர்களில் பலர் இவ்வாறு முயற்சித்து ஓட்டக சிவிங்கியாக மாறினதா டார்வின் சொல்றாரே! நீ கேள்வி படலியா! அதான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

பெண் மான்: ஆமாம். அதை அப்படியே நம்பிட்டியே. அதற்கு ஏதாவது ஆதாரங்கள் கொடுத்தாராமா?

ஆண் மான்: அத மட்டும் கேட்காதே! டார்வின் சொல்லிட்டார். நான் நம்புறேன். அவ்வளவுதான்.

பெண் மான்: ??????????????????
----------------------------------------------------------------
1) காட்டில் மான்கள் வாழ்ந்துவந்தன.
2) வறட்சி மற்றும் போட்டி காரணமாக புல்வெளிகளில் உணவு அருகிப்போனது. எனவே இந்த மான்கள் கிளைகளில் உள்ள தழைகளை சாப்பிட முயற்சித்து சிறுக சிறுக இவற்றின் கழுத்து நெடிதானது.
3) குட்டையான கழுத்தைக்கொண்ட மான்கள் இறந்து போயின.
4) சிறிது நீளமான கழுத்துள்ள மான்கள் பிழைத்தன.
5) அம்மான்களிடையே இனப்பெருக்கம் நிகழ்ந்தது
6) இம்முறை பிறந்த குட்டிகளின் கழுத்து முன்பை விட நீளமாக இருந்தது (நீளமான கழுத்துடைய மான்கள் கலப்பில் ஈடுபட்டதால்)
7) இவ்வகை இயற்கையின் தேர்வு மில்லியன் வருடங்களில் மானினத்தை ஒத்த ஒட்டைச்சிவிங்கியின் தோற்றத்துக்கு வகை செய்தது.

இதுவே டார்வின் சொன்ன ஒட்டக சிவிங்கியின் சுருக்கமான பரிணாம தியரி.

இப்படி பல படித்தரங்களை சொன்ன டார்வின் இதற்கு ஆதாரங்களை எந்த இடத்திலும் சமர்ப்பிக்கவில்லை. அறிவியல் அறிஞர்கள் எவரும் இதனை ஒத்துக் கொள்ளவும் இல்லை. மானிலிருந்து ஒட்டக சிவிங்கி வரை பரிணாமம் நடைபெற்றிருந்தால் நடுத்தர உயரத்தையுடைய ஒட்டக சிவிங்கிகளின் படிமங்கள் கிடைத்திருக்க வேண்டும். வழக்கம் போல் இது எவற்றையும் பரிணாமவியலை ஆதரிக்கும் எந்த விஞ்ஞானியும் சமர்பிக்கவில்லை.

பழங்கள் காய்கள் வேண்டுமானால் மரங்களின் உயரத்தில் இருக்கும். ஆனால் மான்கள் சாப்பிடும் இலை தழைகள் மானினுடைய உயரத்திலேயே கிடைத்து விடுவதைப் பார்க்கிறோம். இவற்றிற்கு உயரமான மரங்களில் உள்ள இலை தழைகளை தேட வேண்டிய அவசியம் எழ வாய்ப்பே இல்லை. வறட்சி பஞ்சத்தினால் புல் பூண்டுகள் அழிந்து விட்டன என்ற வாதமும் நிற்காது. ஏனெனில் அத்தகைய கடுமையான வறட்சியில் மரங்களும் கூட தங்களின் உற்பத்தியை நிறுத்தி விடும். மேலும் மான்களை ஒத்த ஆடு மாடுகள் காட்டெருமைகள் யானைகள போன்ற பல மிருகங்களின் உணவு இலை தழைகளே! பஞ்சம் வந்தால் எல்லா மிருகங்களுமே பாதிக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் எல்லா மிருகங்களின் கழுத்துக்களும் ஒட்டக சிவிங்கியைப் போல் நீண்டிருக்க வேண்டும். அப்படி எந்த மிருகத்துக்கும் கழுத்து நீண்டதாக நாம் பார்க்கவில்லை. அப்படியிருக்க மான்களுக்கு மாத்திரம் எவ்வாறு கழுத்து நீண்டது?

ஜூராஃபா என்ற வார்த்தையே அரபி மொழியிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தை. இதன் அர்த்தம் 'அழகிய ஒன்று' என்ற பொருளில் வரும். மனிதன் மிருகங்களுக்கு பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்த நாளிலிருந்தே ஒட்டக சிவிங்கிகள் தற்போதுள்ள அமைப்பிலேயே இருந்துள்ளன என்பதை அறியலாம். தற்போது இவை சுதந்திரமாக வாழ்வதற்குரிய எல்லைகள் குறுக்கப்பட்டதால் இதன் முக்கியத்துவ்தை இழந்துள்ளது.


ஒட்டக சிவிங்கி தண்ணீர் அருந்தும் அழகை பாருங்கள். இந்த நீண்ட கால்களும் நீண்ட கழுத்தும் ஓரிடத்தில் ஸ்திரமாக நிற்பதற்கு உதவுகின்றன. அது நடக்கும் போதே ஒரு நாட்டியம் போல் தோன்றும். இந்த உயரங்களில் எது ஒன்று குறைந்தாலும் ஒட்டக சிவிங்கி படுத்து விடும். கழுத்து நீண்டதற்கு காரணத்தை சொன்னவர்கள் கால்கள் உயரமானதற்கு எந்த அறிக்கையும் சமர்பிக்கவில்லை.

ஒட்டக சிவிங்கியின் இதயம் இரத்தத்தை அதன் மூளைக்கு சுமார் இரண்டு மீட்டருக்கு பம்ப் செய்து அனுப்புகிறது. இதன் கழுத்து நீளமானதால் அதன் தேவைக்கு ஏற்ப இதயத்தின் சக்தி கூட்டப்பட்டுள்ளது. இதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறை துடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம். இந்த மாற்றத்தை நிகழ்த்தியது யார்? மனிதனிலிருந்து மற்ற எந்த உயிரினத்துக்கும் இவ்வளவு அதி சக்தி வாய்ந்த இதயம் அமையவில்லை. இந்த உயிரினத்துக்கு இப்படி ஒரு இதயம் பொருத்தப்பட்டால்தான் இதனால் உயிர் வாழ முடியும் என்று திட்டமிட்ட ஒருவரால்தான் இவ்வாறான இதயத்தைப் பொருத்த முடியும்.


அகாசியா போன்ற உயரமான கருவேல மரத்தின் இலைகளையே இவை சாப்பிடும் என்ற வாதமும் அடிபட்டு போகிறது. ஒட்டக சிவிங்கி மற்ற மிருகங்களான மான்கள் ஆடுகள் சாப்பிடும் வழமையான புற்களையும் சாப்பிடுவதை ஆய்வாளர்கள் ஆய்ந்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். மேலும் காலடியில் இருக்கும் புற்களைக் கூட தனது கழுத்தை வளைத்து சாப்பிடும் திறனில் படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தரையோடு ஒட்டிய புற்களை ஒட்டக சிவிங்கி சாப்பிடுவதை இங்கு நாம் பார்க்கிறோம்.



மரபணு ஆய்வுகளும் ஒட்டக சிவிங்கியின் பரிணாம வாதத்தை ஒத்துக் கொள்ளவில்லை.

The evidence from genetic studies has not supported the Darwinian position. In a study of 27 species, including bovidae and giraffes, the results were ‘far from constant’.42

A study of chromosomes found the pronghorn family was the most similar karyotypically, and that the giraffe differed from the other artiodactyls in many significant ways, such as ‘having a preponderance of biarmed autosomes’.43

42. Georgiadis, N.J., Kat, P.W. and Oketch, H., Allozyme divergence within
the bovidae, Evolution 44(8):2135–2149, 1991.

43. Gallagher, D.S. Jr, Derr, J.N. and Womack, J.E., Chromosome conservation
among the advanced pecorans and determination of the primitive
bovid Karyotype, J. Heredity 85(3):204–210, 1994.

இவ்வாறு அறிவியல் துறையில் நிரூபிக்கப்படாத ஒட்டக சிவிங்கியின் பரிணாம செய்தியை உலகம் முழுவதும் பல ஆராய்ச்சி பிரிவு மாணவர்களுக்கு பாடமாக வைத்திருக்கிறார்கள். ஆராய்ச்சி பிரிவில் இவ்வாறு டார்வினின் அநுமானங்களை பாடமாக வைப்பதை அறிஞர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். உண்மைகளை அந்த மாணவர்களுக்கு பாடங்களாக வைக்க வேண்டும்.

இன்னும் பல கேள்விகள் ஒட்டக சிவிங்கியின் பரிணாமத்தைப் பற்றி எழுகின்றன. அவற்றை பிற்பாடு பார்ப்போம்.அறிவியல் அறிஞர குட் தனது ஆய்வில் இந்த கேள்விகள் அனைத்தையும் வைக்கிறார். பதில் சொல்லத்தான் இன்று டார்வின் நம்மிடம் இல்லை. அவரது ஆதரவாளர்களாவது பதில் சொல்கிறார்களா என்று பார்ப்போம்.

In fact, we have no scientific evidence supporting any one of his naturalistic
explanations, nor do we we have evidence to prefer any plausible naturalistic version over another. All explanations are an attempt to try to explain what exists by developing what amounts to what Gould calls ‘just so stories’.


http://creation.com/images/pdfs/tj/j16_1/j16_1_120-127.pdf

Gould, S.J., Bully for Brontosaurus, Norton, New York, 1991.

Sherr, L., Tall Blondes, a Book about Giraffes, Andrews McMeel, Kansas
City, p. 40, 1997.

Lamarck, J.B. de., Zoological Philosophy, translated by Elliot, H., Macmillan,
London, p. 122, 1914.


'என்னை விட்டுட்டு நீங்க மட்டும் எப்படி சாப்பிடலாம்?'


'யாருப்பா இது...என்னை விட உயரத்துல பறக்குறது?'


'அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்'

40 comments:

Peer Mohamed said...

Super kaakka !!
Good points to refute darwinism !!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,
மீண்டும் பரிணாம மூட நம்பிக்கைக்கு ஒரு ஆப்பு இடுகை. நன்றி.

///ஒட்டக சிவிங்கியின் இதயம் இரத்தத்தை அதன் மூளைக்கு சுமார் இரண்டு மீட்டருக்கு பம்ப் செய்து அனுப்புகிறது. இதன் கழுத்து நீளமானதால் அதன் தேவைக்கு ஏற்ப இதயத்தின் சக்தி கூட்டப்பட்டுள்ளது. இதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறை துடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம். இந்த மாற்றத்தை நிகழ்த்தியது யார்? மனிதனிலிருந்து மற்ற எந்த உயிரினத்துக்கும் இவ்வளவு அதி சக்தி வாய்ந்த இதயம் அமையவில்லை. இந்த உயிரினத்துக்கு இப்படி ஒரு இதயம் பொருத்தப்பட்டால்தான் இதனால் உயிர் வாழ முடியும் என்று திட்டமிட்ட ஒருவரால்தான் இவ்வாறான இதயத்தைப் பொருத்த முடியும்.///

----மிகச்சரியான பாயின்ட்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சுமார் ரெண்டு மீட்டர் உயரத்தில் இருக்கும் மூளைக்கு இரத்தத்தை பம்ப் பண்ணி அனுப்ப அதன் இதயமானது நிமிடத்துக்கு 170 beats per minute பல்ஸ்ரேட் வரை துடிப்பது மட்டுமல்ல... இறைவனின் படைப்பியல் அற்புதம்..!

உலகிலேயே இந்த மிருகத்தின் இரத்த அழுத்தம்தான் ஆக உச்சம்... 300/200 mm Hg வரையில்..! நமக்கெல்லாம் ஒரு அடிக்கு மேலே உள்ள மூளைக்கு பம்ப் பண்ண 120/80 mm Hg @ 60~70 bpm போதுமானது.

இன்னும்...
உலகிலேயே மிகப்பெரிய விலங்கான திமிங்கலம்- அதன் இதயத்தின் எடையே ஒரு நார்மல் ஒட்டைசிவிங்கியின் எடை இருக்கும். அதற்கு கூட இவ்ளோ பல்ஸ் ரேட்டும்.... பம்பிங் ப்ரஷ்ஷ்ரரும் கிடையாது..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஆக...........
எது எது ஒரு உயிருக்கு எவ்ளோ தேவையோ, அது அது அவ்ளோ அளவில் கச்சிதமாக வைத்து இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. இது டார்வினுக்கு புரியாது. ஏனெனில், அவர் சரியாக சிந்திக்கும் திறனில் குறைபாடு கொண்டவர். அப்போது அவரின் சூழலில் அறிவியலும் வளர்ச்சி அடைந்து இருக்கவில்லை. சரியான அவரிடம் இறைவேதமும் இல்லை.

சரி, இப்போ... எனக்கு ஒரு டவுட்...!

டார்வினுக்குத்தான் மிருகத்தின் உள்ளே உள்ளே மேட்டர் எல்லாம் தெரியாது. அது போகட்டும், வெளியே உள்ள தோலில் கட்டம் கட்டமாக கலர்ப்படம் போட்டு இருக்கே..!?

மான் தோலில் இது போல கட்டங்கள் இல்லையே..? இது எப்படி இதுக்கு வந்துச்சாம்..? இதுக்கு ஏதாவது நிச்சயமா ஒரு புனைவு புருடா இருந்தாகணுமே..?

சீக்கிரம், சொல்லுங்க சகோ... கதை கேட்கும் ஜாலி மூடில் நான் இருக்கேன் இப்போ..!

UNMAIKAL said...

தலித்துக்கள், முஸ்லிம்களுக்கு வீடுகளில்லை!

Sunday, 21 October 2012 14:52 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்

OCT 21, மனித குலத்தின் ‘சேர்ந்து வாழ்தல்’ என்ற சமூகப் பண்பாட்டிற்கு எதிராகப் ‘பிரிந்து வாழ்தல்’ என்ற மனித விரோத தனிக்குடியிருப்பு – தனி வாழ்க்கை முறையை விதியாக்கி – மதமாக்கி – சாதியாக்கி,

இன்று வரையிலும் இந்துமதவெறியர்கள் அமல்படுத்துகிறார்கள்.

ஜூலை 8, 2012 இந்து நாளிதழில் இந்தியாவின் பெருநகரங்களின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் குடியிருக்கும் உரிமை மறுக்கப்படுவது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியிருந்தது.

முஸ்லீம் தம்பதியினர் போல, வீடு வாடகைக்கு விடப்படுவதாக சொன்ன விளம்பரதாரர்களை தொடர்பு கொண்ட இந்து நாளிதழ் நிருபர்களின் அனுபவங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

"வெஜிடேரியன் மட்டும்" என்பது ஒரு "மேல் பூச்சு" மட்டும் தான்,

முஸ்லீம்களுக்கும் தலித்துகளுக்கும் குடியிருக்கும் உரிமை மறுக்கப்படுவதற்கு உண்மையான காரணம்,

"சாதி - மத அடையாளங்கள் தான்" என்பதற்கு இந்து நாளிதழின் சர்வேயில் பல உதாரணங்கள் இருக்கின்றன.

தங்கள் பகுதிகளில் முஸ்லீம்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பதையும்,

விலைக்கு விற்பதையும் வீட்டு உரிமையாளர்கள் சங்கங்கள் மூலம் கும்பலாக எதிர்க்கிறார்கள், ஆதிக்க சாதி இந்துக்கள்.

தனது வீட்டை தாழ்த்தப்பட்ட சாதி அல்லது சிறுபான்மை மதத்தை சேர்ந்த யாருக்காவது வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளரை பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கிறார்கள், என்கிறது இந்து நாளிதழின் ஆய்வறிக்கை.

இதனால், மேட்டுக்குடி குடியிருப்புகளில், படித்த-பணக்கார முஸ்லீம்களுக்குக் கூட வீடு விற்பதும் வாடகைக்கு விடுவதும் மறுக்கப்படுகின்றன.

THE HINDU NEWSPAPER

MUMBAI, July 8, 2012

In Mumbai, a ‘no rent, no sale’ policy

RAHI GAIKWAD

HOUSING APARTHEID

What’s in a name?

Ask a Muslim buying or renting property in the city that never sleeps.

Mumbai, which prides itself on its cosmopolitan character, is divided on religion, food habits and language.


“People are refusing to rent or sell houses to Muslims all over the city,” remarked another agent.

Around 95 per cent of owners flatly refuse Muslims.

Speaking of Muslims as “that community,” he said, “They dress in a certain way.

Housing societies object to Muslims staying in the homes of their non-Muslim spouses.

There is a perception that the Muslim upper crust is “less radical.”

However, unable to draw a line, these societies refuse all Muslims.

In 2009, Hindi film actor Emraan Hashmi complained to the Maharashtra State Minorities Commission.

“Many societies,” said Mr. Ved, “have a by-law that [mandates] a seller or lessor to check with the society before planning to sell or lease to a potential Muslim buyer.

Dr. Zeenat Shaukat Ali, Professor of Islamic Studies at Mumbai’s premier St. Xavier's College, wanted to buy a house in 2005-06 in Pali Hill, Bandra.

“Not one, but many agents told me Pali Hill is restricted.
I was shocked. My children are very secular.

I found that many localities are out of bounds for Muslims,” she said.

Terror attacks have compounded biases, leading to their being further demonised.

The 1992-93 communal riots, which saw large-scale movement of Muslims to ghettos, were a watershed.

The entire area of Mumbra in Thane district was formed after these riots.

Mumbra, Govandi, Bandra (East), Nagpada, Bhendi Bazaar, Zhaveri Bazaar and Mahim, to some degree, are well-known as Muslim pockets.

Although such discrimination is rampant, no Muslim wants to come forward to file an official complaint, said Naseem Siddiqui, the Commission’s former chairman.

The Hindu called an agent in the Gujarati-dominated area of Santa Cruz.

When told that a Muslim tenant was looking for a place, he said, “Then I will have to find out.

I will check if the society owner is comfortable.

Otherwise, [the tenant] would have to go to a Muslim area.” - THE HINDU NEWSPAPER

UNMAIKAL said...

கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.

நோய் நொடியினால் பாதிக்க பட்டிருப்பவர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை,

கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள்,

அகதிகள், இயற்கை இடர்பாடுகளில் துன்புறுவோர் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.

ஆகையினால் இவர்களை குறி வைத்து

எங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே.

அஸ்ஸாம் முகாம்களில் "கிருஸ்துவ மெஷினரிகள்" சதி : தடுப்பு நடவடிக்கைகளில் "ஜம்யியத்துல் உலமா ஹிந்த்"

Monday, 15 October 2012 03:42

MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்

OCT 15, கடந்த 3 மாதங்களாக வீடுகளிழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் பல இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதில், குறுக்குச்சால் ஓட்டும் வகையில், "கிருஸ்துவ மெஷினரிகள்" உள்ளே புகுந்து உதவிகள் செய்யும் சாக்கில்,

முஸ்லிம் சிறுவர்களிடம் கிருஸ்துவ பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.

முகாம்களில் வசிக்கும் சிறுவர்களை "சர்ச்"சுகளுக்கும் அழைத்து செல்கின்றனர்.

"போடோ தீவிரவாதி"களால் வீடுகளை விட்டு விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள இந்த நேரத்தில்,

அவர்களை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றும் சதி வேளைகளில் கிருஸ்துவ மெஷினரிகள் ஈடுபட்டுள்ளதால்,

இஸ்லாமிய அமைப்புக்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிருஸ்துவ மெஷினரிகளின் இந்த முயற்சிகளுக்கு "போடோ" தீவிரவாதிகளும் ஆதரவாக உள்ளனர்.

சாதாரணமாக முகாம்களுக்கு உள்ளேயே புகுந்து தாக்குதல் நடத்தும் போடோக்கள்,

கிருஸ்துவ மெஷினரியை சேர்ந்தவர்கள், முஸ்லிம் பிள்ளைகளை "சர்ச்"சுகளுக்கு அழைத்து செல்லும்போது, அவர்களை ஒன்றும் செய்வதில்லை.

UNMAIKAL said...

போலீசின் வெறிச்செயல் :

"கொலை" செய்துவிட்டு "தற்கொலை" என கதை கட்டுவதாக தந்தை புகார்!


Friday, 12 October 2012 06:59 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்


OCT 12, ஆந்திர மாநிலம் நிஜாமாபாதை சேர்ந்த,

அப்துல் ரசாக் (30) என்ற அப்பாவி இளைஞர் மீது "பொய் வழக்கு" போட்டு

சிறையிலடைத்தும் திருப்தியடையாத போலீஸ், அவரை "கொலை" செய்துவிட்டு "தற்கொலை" என, கதை கட்டுவதாக அப்துல் ரசாக்கின் "தந்தை" அப்துல் சத்தார் தெரிவித்தார்.

கடந்த 2003ம் ஆண்டு தில்சக் நகர் "சாய்பாபா" கோவிலில் குண்டு வெடித்தது.

எந்த தடையங்களும் கிடைக்காததால்,

இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் திணறிய ஆந்திர போலீஸ்,

2005ம் ஆண்டு ஈரானிலிருந்து இந்தியா திரும்பி வந்த அப்துல் ரசாக்கை அந்த வழக்கில் சேர்த்தது.

சம்பவம் நடந்தபோது இந்தியாவிலேயே இல்லாத அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்,

"பொடா" சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் (2005-2007) "சர்ல பள்ளி" ஜெயிலில் அடைத்தது.

அப்போது, கொடும் சித்திரவதைக்கு ஆளான அப்துல் ரசாக், 2007ல் தண்டனை முடிந்து வெளியே வந்தார்.

ஜெயிலை விட்டு வெளியே வந்தபின்பும்,

போலீசின் தொல்லைகள் தொடர்ந்த வண்ணமிருந்தது.

எங்கு வேலைக்கு சேர்ந்தாலும், கண்காணிக்கிறோம் என்ற பெயரால் நிழல் போல் தொடர்ந்த போலீசின் தொல்லைகளால்,

எங்கும் வேலை செய்ய முடியாத நிலையில், உறவினர்கள் உதவியுடன் சொந்தமாக "இன்டர்நெட் செண்டர்" வைத்து தொழில் செய்து வந்தார்,அப்துல் ரசாக்.

"சாய்பாபா" கோவில் வழக்கில், அப்துல் ரசாக் மீது எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாத போலீஸ், அவரை போலீசின் உளவாளியாக செயல்பட வலியுறுத்தியது.

போலீஸ் இன்பார்மராக தன்னால் செயல் படமுடியாது என உறுதிபட கூறிவிட்ட நிலையிலும், போலீஸ் அவரை பின் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.

இறுதியாக, நேற்று முன்தினம் (10/10) புதன்கிழமை மாலை அப்துல் ரசாக் தங்கியிருந்த வீட்டிலேயே "தூக்கு போட்டு தற்கொலை" செய்துக்கொண்டதாக, ஹுமாயூன் நகர காவல் நிலையத்தில் வழக்கை (வாழ்க்கையை) முடித்து விட்டனர்.

இதில் பலத்த சந்தேகம் உள்ளதாக, அப்துல் ரசாக்கின் தந்தை அப்துல் சத்தார் கூறுகிறார்.

முதலாவது, தற்கொலை குறித்து தனக்கோ, தன் குடும்ப உறுப்பினர்களுக்கோ "போஸ்ட் மார்டம்" செய்யும் முன் போலீஸ் தகவல் கொடுக்கவில்லை.

அப்துல் ரசாக் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரிடம், தனது தொலைபேசி எண், நிஜாமாபாத் கவுன்சிலராக உள்ள தனது மூத்த மகன் உள்ளிட்ட, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலரது தொலைபேசி எண்கள் உள்ள நிலையில், வீட்டு உரிமையாளரை மிரட்டி, தங்களுக்கு தகவல் வராமல் போலீஸ் பார்த்துக்கொண்டதாக குற்றம் சுமத்துகிறார்.

"இரவு 12 மணிக்கு மேல் அவசரம் அவசரமாக போஸ்ட் மார்டம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?" என்றும் கேள்வி எழுப்புகிறார்,மகனை இழந்த அப்துல் சத்தார்.

தகவலறிந்து "போஸ்ட்மார்டம்" செய்யப்படும் இடத்தை நோக்கி செல்ல முயன்ற தங்கள் குடும்பத்தினரை பயமுறுத்தும் வகையில், 150 போலீசார் குவிக்கப்பட்டிருந்ததாக கூறுகிறார்.

போலீஸ் தொடர்ந்து கடந்த 7 வருடங்களாக எனது மகனை "சித்திரவதை"க்கு உள்ளாக்கிய போதும்,

தனது மகன் ஒருபோதும் "தற்கொலை" செய்துக்கொள்ளும் மன நிலைக்கு செல்லவில்லை, என உறுதி பட கூறும் பெரியவர் அப்துல் சத்தார்,

தனக்கு போலீசின் மீது அசைக்க முடியாத "சந்தேகம்" உள்ளதாக தெரிவித்தார்

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

சகோ.சார்வாகன யாருமே நிம்மதியா வாழ விட மாட்டிங்களா...???அவருக்குன்னு எதிர்த்து கேள்வி கேட்காத,சொல்றதுக்கெல்லாம் ஆமாஞ்சாமி! போடுற ஒரு கூட்டம் இருக்கு!! ...அந்த கூட்டத்துக்கு ஆசிரியர் அவர்...ஒரு மனுசன எத்தனை வழிலதான் அடிப்பிங்க...???அவர இப்படி அசிங்கப்படுத்துறதுக்கு என்னுடைய கண்டனங்கள்!!!

நீங்க என்ன ஆதாரத்த காட்டினாலும்...ம்ம்...ஹூம் ..."என்னது!!போண்டா வெடிச்சிருச்சா???"அப்பிடின்னு தான் கேட்பாரு ...அவரு வாதம் மூணுகாலு வாதம்தான்!!!...

நன்றியுடன்
நாகூர் மீரான்

கையேடு said...

//மரபணு ஆய்வுகளும் ஒட்டக சிவிங்கியின் பரிணாம வாதத்தை ஒத்துக் கொள்ளவில்லை//

அப்படியானால் மரபணு ஆய்வுகளின் முடிவுகள் சரி எனும் புள்ளிக்கு நீங்கள் நகர்ந்திருக்கிறீர்கள்.

தொடருங்கள் உங்கள் மரபணு ஆய்வு குறித்த தேடல்களை.

அறிவியல் டார்வினுக்கு அவருக்குண்டான இடத்தைதான் கொடுத்து வைத்திருக்கிறது.. டால்டனுக்கு, நியூட்டனுக்கு, கோபர்நிகஸுக்கு, என தொடர்ந்து அவர்களைப் பயிற்றுவிக்கிறது அடுத்த அத்தியாயத்தில் அவர்களை மறுதலித்த கொள்கைகளையும் பாடமாக வைத்திருக்கும் அறிவியல். - சும்மா ஒரு செய்திக்காக சொன்னேன்.

UNMAIKAL said...

நடு ரோட்டில் பூசணிக்காய் உடைக்கலாம்; சிலைகளை கரைத்து நீர் நிலைகளை "மாசு" படுத்தலாம்; குர்பானி மட்டும் கூடாதா?

நடு ரோட்டில் பூசணிக்காயை உடைத்து போட்டு விபத்துக்கள் ஏற்படுத்தும் செயலுக்கும்,

ரசாயன பூச்சுக்களை கொண்ட விநாயகர் சிலைகளை கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைத்து மாசு ஏற்படுத்தும் செயலுக்கும்,

கட்டுப்பாடில்லாமல் பட்டாசுக்களை வெடித்து இதய நோயாளிகளுக்கும், "செவிப்புலன்"களுக்கும் பாதிப்பை உண்டாக்கலாம்,

ஆனால், மனிதர்கள் புசிக்க இயற்கையின் வரமாக அமைந்துள்ள ஆடு மாடு போன்ற பிராணிகளை அறுத்து பலியிடும் "குர்பானி"க்குத்தான் எத்தனை தடைகள்?

என்று தீரும் இந்த வேதனை?.

ஹிந்து சமூக மக்கள் "ஆயுத பூஜை" அன்று மட்டுமல்லாமல் ஒவ்வொரு "அமாவசை" தினத்தின் போதும்,

தனிப்பட்ட "திருஷ்டி" பரிகாரத்துக்கும், புதிய வாகனம், புதிய வீடு என பல நிகழ்ச்சிகளிலும் "பூசணிக்காய்" உடைப்பதும், அதுவும் ரோட்டில் வைத்து உடைப்பதும் வாடிக்கையான ஒரு விஷயம்.

அதை முறையாக அப்புறப்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளால்,

வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதும் எதார்த்தமாக எல்லோரும் அறிந்த ஒன்று.

அது போல, "விநாயகர்" சதுர்த்தியின் போது ஹிந்து சமூக மக்கள் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

பக்தி அடிப்படையில் வழிபட "களிமண்ணால் செய்யப்படும் விநாயகர்" சிலைக்கரைப்புக்களால் பாதிப்புக்கள் இல்லை.

மத ரீதியான வழிபாட்டில் அரசியலை கலக்கி,
அப்பாவி ஹிந்து மக்களை வெறியேற்றி,

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் "ஹிந்து முன்னணி" பாஜக, போன்ற விஷமிகளால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் பெரும்பாலும் "பிளாஸ்டர் ஆப் பாரீஸ் பவுடரில் கெமிக்கல் பூச்சுக்கள்" பூசப்பட்டு கடலில் உள்ள மீன் இனங்களுக்கு கடும் பாதிப்பை உண்டாக்கும் அளவிற்கு "மாசு" நிறைந்த சிலைகள் செய்யப்படுகின்றன.

"பெயரளவில் சில கட்டுப்பாடுகள்" விதிக்கப்பட்டாலும், போலீஸ் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறையும் "அவாள்"களிடம் கை கட்டி நிற்பதை நாடறியும்.

தீபாவளி என்று மட்டுமல்லாமல் பல நிகழ்ச்ச்களுக்கும் வெடிக்கப்படும் பட்டாசுகளால்,

உயிரிழந்தவர்களும் காயம் பட்டவர்களும் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 1000க்கும் அதிகம் என அரசு சொல்கிறது.

இவைகள் எல்லாம் "மத வழிபாடு சுதந்திரம்" என சொல்லப்படுகிறது.

முஸ்லிம்களை பொறுத்தவரை வருடத்தில் 2 நாட்கள் மட்டுமே பண்டிகை நாட்கள்.

அதிலும், தொழுகை... தொழுகை... தொழுகை! அமைதி... அமைதி... அமைதி!

எந்த ஆர்ப்பாட்டமமுமில்லாமல், முஸ்லிம்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் விஷேசம் "பிரியாணி" மட்டும் தான்.

பல ஏழைகள் பயன்பெரும் வகயில், (குர்பானி) அறுத்து பலியிட்டு பங்கிடப்படும் இறைச்சிக்கான பிராணிகள் விஷயத்தில், ஏன் இந்த கொடுமை?

மிருகவதை என்று சொல்லிக்கொண்டு மனிதர்களை வதைப்பது எந்த வகை நியாயம்?


SOURCE: http://www.maruppu.in/

UNMAIKAL said...

பக்ரீத் பண்டிகை :ஆர்.எஸ்.எஸ். மற்றும் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் முஸ்லிம் சமூகம்!

வருடத்தில் 2 நாட்கள் மட்டுமே முஸ்லிம் பண்டிகைகள். அதில் ஒன்று பக்ரீத்.

இதில், குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுப்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்,

ஆடு மாடுகள் விற்கப்படும் சந்தைகளுக்கு அருகே ஒன்றாக சேர்ந்து கொண்டு,

கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும் பிராணிகளின் வாகனங்களை வழி மறித்து "ரகளை" செய்து வருகின்றனர்.

"பசு"மாடு உள்ளதா? எனத்துவங்கி, இடவசதி சரியாக உள்ளதா? ஆரோக்கியம் குறித்த சான்று இருக்கிறதா? ஓவர் லோடா? போன்ற விஷயங்கள் குறித்து,

ஆர்.எஸ்.எஸ். அரக்கர்களுக்கு பதில் சொல்லவேண்டிய "அவல நிலை "உள்ளது.

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் இந்த "காவிகளுக்கு காக்கி சட்டைகளும் துணை" புரிந்து

இதில் "மாமூல்" என்பதையும் தாண்டி "பறிமுதல்" என "மிரட்டல்" விடுத்து "பகல்கொள்ளை" அடிக்கும் வளம் கொழிக்கும் தொழிலாக பார்க்கிறது,போலீஸ்.

நாடு முழுவதும் காவிகளும் காக்கிகளும் "கூட்டணி" அமைத்து,

முஸ்லிம்கள் கொண்டு செல்லும் பிராணிகள் குறித்து "கேள்வி மேல் கேள்வி" கேட்டு,

சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாக்குகிறார்கள்.

பிராணிகள் சுமந்து செல்லும் வாகனங்களை, "மணல் கடத்தல் லாரி"களை துரத்தி செல்வது போல் துரத்தி செல்கிறார்கள்.

அப்படி துரத்தி செல்லப்பட்ட ஒரு டிராக்டர் (உ. பி."ஆசம்கர்" மலிக்) ஏரியில் கவிழ்ந்து, டிரைவர் உள்ளிட்ட மூன்று முஸ்லிம்கள் படுகாயமடைந்து 30 குர்பானி ஆடுகள் இறந்துவிட்டன.

இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் எல்லா பாகங்களிலும் நடந்தேறி வருகிறது.

SOURCE: http://www.maruppu.in/

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் ....சகோ
// மரபணு ஆய்வுகளும் ஒட்டக சிவிங்கியின் பரிணாம வாதத்தை ஒத்துக் கொள்ளவில்லை.//
மரபணு ஆய்வு ..!!!!??? புடலங்கா ...!!!! கத்தரிக்கா ....!!!
நம்ம வவ்வால்ஜி கு போன் போட்டுட்டேன் ...அவரு இங்கே,அங்கே என்று மேய்ந்து ஆதாரங்களை [?!]
அள்ளிக்கொண்டு கொட்டுவார் பாருங்க ..அப்ப உங்களுக்கு "மூச்சு முட்டுது வார்த்த தட்டுது எழுத முடியல"னு புலம்புவீங்க...!!! ஆஹா ஆஹா ஆஹா --

UNMAIKAL said...

ஒரே ஒரு முறைதான் எனது உடலை விற்பேன்.

இதுவும் ஒரு வர்த்தகம் தான்.

ஜப்பான்காரரிடம் கன்னித்தன்மையை 4 கோடிக்கு விற்ற பிரேசில் மாணவி!


Published: வியாழக்கிழமை, அக்டோபர் 25, 2012, 10:29 [IST]

சான்டா கேத்தரீனா: பிரேசிலைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ஏலத்திற்கு விட்டார்.

இதையடுத்து அதை ஏலம் எடுக்க இந்திய மாணவர், 2 அமெரிக்கர்கள், ஒரு ஜப்பானியருக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் 4.19 கோடிக்கு ஏலம் கேட்டு வெற்றி பெற்று விட்டார் ஜப்பானிய மாணவர்.

விரைவில் அரங்கேற்றம் நடைபெறவுள்ளதாம் - அதுவும் ஓடும் விமானத்தில், நடுவானில் வைத்தாம்.

பிரேசிலின் சான்டா கேத்தரீனாவைச் சேர்ந்தவர் கேத்தரீனா மிக்லியோரினி. 20 வயதேயான இவர் ஒரு மாணவி.

இவர் தனது கன்னித்தன்மையை ஏலம் விட முடிவு செய்தார்.

ஆன்லைனில் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார்.

இதையடுத்து திமுதிமுவென பலரும் குவிந்து விட்டனர்.

இவர்களைப் பரிசீலித்த கடைசியாக நான்கு பேரை அவர் இறுதி செய்தார்.

இந்தியாவைச் சேர்ந்த ருத்ரா சாட்டர்ஜி, ஜப்பானைச் சேர்ந்த நட்சு, அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் மில்லர் மற்றும் ஜேக் ரைட் ஆகியோரே அவர்கள்.

இவர்கள் நால்வருமே கடுமையாக மோதினர்.

இறுதியில் நட்சுவை தேர்ந்தெடுத்தார் கேத்தரீனா.

இவருடன் விரைவில் டேட்டிங் வைக்கப் போகிறாராம்.

மொத்தம் ரூ. 4.19 கோடிக்கு கேத்தரீனாவின் கன்னித்தன்மையை ஏலத்தில் எடுத்துள்ளாராம் நட்சு.

இந்தப் பணத்தை வைத்து தனது சொந்த ஊரில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்காக இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கப் போகிறாராம் கேத்தரீனா.

இந்த நல்ல காரியத்திற்காகவே தனது கன்னித்தன்மையை ஏலம் விடும் முடிவுக்கு அவர் வந்தாராம்.

மேலும் அவர் கூறுகையில், இதை வைத்து என்னை விபச்சாரம் செய்வதாக யாரும் கருதி விடக் கூடாது.

ஒரே ஒரு முறைதான் எனது உடலை விற்பேன்.

இதுவும் ஒரு வர்த்தகம்தான்.

எனது இந்த டேட்டிங்கை ஒரு டாக்குமென்டரியாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிலர் எடுக்கவுள்ளனர்.

இருப்பினும் உடலுறவு வைத்துக் கொள்வது மட்டும் படமாக்கப்பட மாட்டாது.

மற்றபடி நானும் நட்சுவும் பழகுவது படமாக்கப்படும்.

விரைவில் நானும் நட்சுவும் டேட்டிங் போகவுள்ளோம்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா இடையிலான விமான பயணத்தின்போது இருவரும் உறவு கொள்வோம்.

அதற்கு முன்பு இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்போம், உறவுக்குப் பின்னரும் பேட்டி தருவோம்.

எங்களுடையே தனிமையின்போது செக்ஸ் பொம்மைகளுக்கு அனுமதி கிடையாது.

ஆணுறை கண்டிப்பாக அணிந்து கொள்ள வேண்டும்.

நான் கன்னித்தன்மையுடன் உள்ளேன் என்பதை நிரூபிக்க எந்த சோதனைக்கும் உட்படத் தயார்.

அதேபோல நட்சுவுக்கு எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் இருக்கிறதா என்பது பரிசோதிக்கப்படும் என்றார் கேத்தரீனா.

http://tamil.oneindia.in/news/2012/10/25/world-brazilian-student-agrees-sell-her-virginity-163626.html

இராஜகிரியார் said...

சலாம் சகோ.

பயனுள்ள தகவல்கள்.
பரிணாம கொள்கையை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

பகிர்ந்துள்ள போட்டோக்களும் மிகவும் அழகாய் உள்ளன.

UNMAIKAL said...

PART 1. ஒட்டசிவிங்கியின் கழுத்தும் காதலும்! -
Dr.RAJENDRAN S . DD CBFD

இது.பாலூட்டி வகைகளில் மிகவும் உயரமான இனம் ஒட்டகசிவிங்கி!

இதன் அறிவியல் பெயர் (Giraffa camelopardalis) ஜிராஃபிடே குடும்பத்தை சார்ந்த (Giraffidae) ஒட்டகசிவிங்கி 18 அடி வரை வளரும். 900 கிலோ வரை எடை இருக்கும்.

ஒட்டகத்தின் உடல் அமைப்பு தோலில சிறுத்தையின் டிசைன் என்று கலந்து இருக்கும்.

அதனாலேயே இது ஒட்டகமும் சிறுத்தையும் சேர்ந்ததால் ஏற்பட்ட கலப்பு இனமா? என்று கூட ஆரம்பத்தில் ஒட்டகத்தின் கற்பை பற்றி தவறாக நினைத்தார்கள்.

ஆனால் அப்படி இல்லை! ஒட்டகசிவிங்கி ஒரு தனி இனம் தாம்!!

ஆணை விட பெண் ஒட்டகசிவிங்கி உயரம் , எடை குறைவாக இருக்கும்.

ஒட்டகசிவிங்கிகளின் கழுத்து எந்த விலங்குக்கும் இல்லாதா சிறப்பாக 10 அடி இருக்கும்.

இதை நினைத்து அதிகமான கழுத்து எலும்புகள் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு!

இதற்கும் கழுத்து எலும்பு (Neck Vertebrae) 7 எண்ணிக்கை மட்டும்தான். (எலி முதல் மனிதன் அனைத்துக்கும் எழு எண்ணிக்கைதான்)

இந்த சிறப்பு அமைப்பிற்கு என்ன காரணம் என்று 200 ஆண்டுகளாகவே ஆராய்ச்சியாளர் ஒட்டகசிவிங்கயின் கழுத்தை அன்னாந்து பார்த்து, பார்த்து ஆராய்ந்தும் ஒரு தெளிவான விளக்கத்தை கூற முடியவில்லை.

ஏகப்பட்ட முரண்பாடுகள்!

ஆராய்ச்சியாளர்களுக்கு கழுத்து வலி வந்ததுதான் மிச்சம்!


ஒட்டகசிவிங்கியின் மூளை இதன் இதயத்திலிருந்து 10 அடி உயரம் உள்ளதால் மூளைக்கு ரத்த்த்தை செலுத்த மற்ற பாலூட்டிகளை விட இரண்டு மடங்கு அளவில் இரத்தத்தை வேகமாக இதயம் பம்ப் செய்கிறது. இதயத்தின் எடை 10 கிலோ ! நீளம் 2 அடிகள்!!

மேலும் இரத்தம் கழுத்திலிருந்து கீழ் இறங்கமால் இருக்க கழுத்து இரத்த நாளத்தில் ( Jugular Vein) 7 எண்ணிக்கை சிறப்பு வால்வுகள் இருக்கின்றன்.

எளாஸ்ட்டிக் இரத்த நாளம்! அதே சமயத்தில் கழுத்தின் மேல் பகுதியில் ஒட்டகசிவிங்கியின் தலை தரை பகுதிக்கு வரும்போது அதிகம் இரத்தம் மூளைக்கு செல்லாமல் இருக்க ரெட்டி மிர்ரபைல்( rete mirabile) என்ற அமைப்பும் உள்ளது.

இந்த ஹைடெக் வசதி எந்த ஜீவனித்திடமும் இல்லாத ஒரு அமைப்பு.

இந்த அமைப்பை ஆராய்சி செய்து நாஸா (NASSA) விஞ்ஞானிகள் விண்வெளியிலிருந்து வீரர்கள் திடீரென இறங்கும் போது இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உக்தியை கண்டுபிடித்தார்களாம்!



இதன் உடலில் வரையப்பட்டுள்ள மாடர்ன் ஆர்ட் போல உள்ள டிசைன்கள் அழகோ அழகு!

ஒரு ஒட்டகசிவிங்கிக்கு இருக்கும் மற்றொன்றுக்கு இருக்காது! ஃபிங்கர் பிரிண்டு போல யுனிக்!

வனத்தில் வாழும் ஒட்டகசிவிங்கிகள் எதிரிகளுக்கு பயந்து படுக்கவே படுக்காது.

தூங்குவதல்லாம் நின்றுகொண்டேதான்! அதுவும் குட்டி தூக்கம் தான்!

கழுத்தை வளைத்துகொண்டு 5 நிமிடங்கள் மட்டுமே இதன் தூக்கம்.

மொத்தத்தில் ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே கண் அயரும்.

வனத்தில் வாழும் ஒட்டகசிவிங்கி 25 முதல் 28 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

இலை, தழைகள் இதன் முக்கிய மெனுவாக இருக்கிறது.

(ஆப்பிள் கிடைத்தால் அன்று அதற்கு விருந்து! இதற்கு பிடிக்காத பழம் வாழைப்பழம்.)

இவைகளை வளைத்து இழுத்து சாப்பிட இதன் நீண்ட கழுத்தும், நெடிய கரிய நாக்கு பயன் படுகிறது.

பெண்கள் பொறாமைப்படும் அளவுக்கு 18 இஞ்ச் நீளம்!

கருவேலம் மரத்தில் உள்ள முட்கள் கூட இதன் நாக்கை காயப்படுத்தமுடியாத அளவில் நாவன்மை கொண்டது.

இதனுடைய மேல் உதட்டை சகல திசைகளிலும் ஒரு கருவியாக இயக்கி தன் நாக்கையையும் நாலாபக்கமும் சுழற்றி இலைகளையும், மொட்டுகளையும் நறுநறுக்கென்று ஒருகட்டு கட்டிவிடும்.
CONTINUED ……

UNMAIKAL said...

PART 2. ஒட்டசிவிங்கியின் கழுத்தும் காதலும்!

அடிக்கடி இதற்கு பசி எடுப்பதால் ஓயாமல் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்.

ஒரு நாள் 70 பவுண்டு எடை உணவு உள்ளே போய்விடும்.

இரவில் சாகவாசமாக அசைப் போடும்! இதன் திசுக்களில் தண்ணீரை சேமித்து வைக்கும் அமைப்பு உள்ளதால் நீர் இல்லாமல் நீண்டநாட்கள் கூட இருந்துவிடும். தண்ணீர் சேமிப்புத் திட்டம்?

ஒட்டகசிவிங்கி உயரம் காரணமாக இதன் எதிரிகளை தொலைவிலேயே கண்டுபிடித்துவிடுகிறது.

பொதுவாக இது வேகமாக ஓட இதன் கால் அமைப்பு அதிகம் ஒத்துழைக்காது.

ஓடும் வேகத்தை விட தட தடவென்ற சப்தம்தான் அதிகம் இருக்கும்.

இதன் பின்னங்காலைவிட முன்னங்கால் உயரம் அதிகமாக இருக்கும்.

இதனுடைய நடக்கும் முறை வித்தியாசமாக இருக்கும்.
முதலில் இடது பக்க கால்களை முதலில் ஒன்றாக முன் வைக்கும்

பிறகு வலது கால்களை ஒரே சமயத்தில் முன்னோக்கி வைத்து நடந்து செல்லும்.

ஆனால் எதிரிகளிடம் இருந்த தப்பிக்க இது 60 கிலோமீட்டர் வேகம் வரைகூட ஓடுகிறது.

ஓடும் போது முன்னங்கால்களை முதலிலும் பின்னங்கால்களை அதன் பின்னும் செலுத்தி ஒடும் அப்பொழுது பறப்பது போல் தெரியும்.

இவைகள் 19அடி உயரம் இருந்தாலும் 2 அடி உயரத்தைக் கூடத் தாண்ட முற்படாது.

மேலும் நீச்சலிலும் இவை படுவீக் என்பதால் நீரில் இறங்கவே இறங்காது.

எது எப்படியோ, வான் உயர்ந்த கழுத்தால் உயரமான மர இலைகள் ருசித்து பெருமை பட்டாலும் இது நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க படாதபாடு படும்.

முன்னங்கால்கலை அசிங்கமாக அகல விரித்து தள்ளாடியபடி குடித்துக் தொலைக்க வேண்டியிருக்கும்.

இதனால் நீர் கிடைக்கும் போது தேவைக்கு அதிகமாகவே குடித்து சேமித்து வைத்துக்கொள்ளும்.

இதன் முக்கிய எதிரியான சிங்கம் இந்த சமயத்தைதான் தன் தாக்குதலுக்கு பயன்படுத்திகொள்ளும்.

அதனால் ஜோடியாவே பல சமயங்களில் நீர்அருந்தும் ஒன்று குடிக்கும் போது மற்றொன்று எதிரிகள் யாரேனும் வருகிறார்களா என நோட்டமிடும்!

இதனுடை வழுவான கால்களால் ( High density Bone) தற்காப்புக்காக உதைக்கும் போது சிங்கத்தையே கொன்றுவிடும்!!

அந்த அளவுக்கு தாக்குதல் கடுமையாக இருக்கும்.

தன்னுடைய குட்டிகளை வேட்டையாடவரும் விலங்குகளுக்கும் இந்த கிக் பாக்ஸிங் டெக்னிக்தான்!

கழுதை போல் இல்லாமல் இவைகள் உதைப்பதற்கு முன்னங்கால், பின்னங்கால் இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தும் திறன் படைத்தது.

ஒட்டகசிவிங்கி ஊமை என்று கூறுவார்கள்! அது உண்மையில்லை. அமைதியான விலங்கு,சப்தம் அதிகம் செய்யாது.

ஆனால் ஒரு வகையான முக்கல்,முனகல், முறுகல், கீழ்தாயில் சப்தம், இருமல், புல்லாங்குலல் வாசிப்பு,பன்றி உறுமல் போன்ற சப்தம் என பல ஒலிகளை வெளிப்படுத்துகிறது.

ஆண் பெண்ணை அழைக்க இரும்மல் சப்தம், பெண் தன் குட்டியை அழைக்க விசில் போன்ற சம்தம், குட்டிகள் ஒரு வகையான மியாவ் சப்தம் செய்து மொழிகளை பரிமாறிக்கொள்கிறது.

ஒரு சூடான ஆராச்சியில் ஒட்டகசிவிங்கிகள் அல்ட்ரா சவுண்ட் மூலம் தங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொள்கிறது என கண்டுபிடித்துள்ளார்கள்.

ஆண் பெண் என பேதம் இல்லாமல் ஒட்டசிவிங்கிகளுக்கு இரண்டு எலும்பினால் ஆன குட்டை கொம்புகள் தோலால் போர்த்தப்பட்டு பக்குவமாக இருக்கின்றன்.

ஆண் ஒட்டகசிவிங்கிக்கு பெரிய கொம்பு, அதில் குஞ்சம் இருக்காது!

CONTINUED …..

UNMAIKAL said...

PART 3. ஒட்டசிவிங்கியின் கழுத்தும் காதலும்!

பெண் ஒட்டகசிவிங்கிக்கு சிறிய கொம்பு! அதில் குஞ்சம் போல் முடி அலங்காரம் இருக்கும்.

பிறக்கும் போதே கொம்புகளோடு தோன்றும் விலங்கினம்!

சிலவற்றிற்கு கொம்பிற்கு நடுவில் எக்ஸ்ட்ரா இருக்கும்! இது கிழட்டு ஒட்டகசிவிங்கி என அர்த்தம்!!

ஒட்டகசிவிங்கியின் உடலில் உள்ள முடிகளில் உள்ள சிறப்பு இராசாயனம் கிரிமி நாசினியாகவும் ஒட்டுண்ணிகள் மற்றும் பேண்களிடமிருந்து காக்கும் திறன் கொண்டவைகளாக உள்ளன.

11 வகையான வாசனை வேதியல் பொருள்கள் இதன் முடியில் இருந்தாலும் இன்டோல் மற்றும் 3- மெத்திலின்டோல் ( indole and 3-methylindole) வேதியல் பொருள்கள்தான் ஒட்டகசிவிங்கியின் மேல் உள்ள வாசனைக்கு காரணமாக அமைகிறது..

ஆண் ஒட்டகவசிவிங்கின் உடம்பில் வாசனை அதிகம்! பெண் ஒட்டகசிவிங்கியை கவரத்தான்!

இனவிருத்திக் காலம் ஜூனில் தொடங்கி செப்டம்பரில் தான் முடியும்.

பெண் வாடையால் ஈர்க்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கியார் “ கீச்..கீச்...” என்பறு லோ வாய்சில் முனகிக் கொண்டிருக்கும்,

பெண் ஒட்டகசிவிங்கி சிறுநீர் விட்டால் ஆண் ஒட்டக சிவிங்கி ஓடோடி வந்து அதை ருசி பார்த்துவிடும்.

சிறுநீர் வரா விட்டாலும் பெண் ஒட்டகசிவிங்கியின் அந்தபுர பகுதியை தூண்டி வர வைத்துவிடும்!

ஆண் ஒட்டகசிவிங்கி சிறுநீரின் “ருசி” பரிசோதனையில் எந்த பெண் ஒட்டகசிவிங்கி ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் ஆதிக்கத்தில் கலவிக்கு தயாராக உள்ளது என எளிதில் எந்த லேபுக்கும் அனுப்பாமலேயே கண்டுபிடித்துவிடும்!

பின் தன் இச்சைக்கு இணங்க வைக்கும் அடுத்த வேலையை ஆரம்பித்துவிடும்.

ஆனால் வேறுவோரு ஆண் ஒட்டகசிவிங்கியும் ருசிப்பார்த்து போட்டிக்கு வந்துவிடும்.

அப்பொழுது பெண் ஒட்டகசிவிங்கி தன்னோடு இணைய நினைக்கும் இரண்டுக்கும் கழுத்து போட்டி நடத்தும்.

ஆண் ஒட்டகசிவிங்கிகள் கழுத்தை கொண்டு மல்யுத்தம், வாள் சண்டை செய்வதை பெண் ஒட்டகசிவிங்கி ஆனந்தமாக ரசித்து அதில் வெற்றி பெறும் வீரனோடு இணை சேர தனியாக ஓரங்கட்டி,

முதலில் நேருக்குநேர் முகத்தோடு முகம் உரசிக் கொள்ளும் பின்னர் இனச்சேர்க்கை இனிதே நடந்தேரும்! என்கிறார் டாக்டர். "மன்மதன்" சந்திரசேகரன்

50% ஆண் ஒட்டகசிவிங்கிகள் கழுத்தோடு உரசி சண்டையிடும் போது முடிவில் அது ஹோமோ செக்ஸில் முடிந்துவிடுகிறது.

கழுத்துபகுதி நரம்பு மண்டலம் ஒட்டக சிவிங்களின் செக்ஸ் உணர்வை தூண்டிவிடுகிறது!

பெண் ஒட்டகங்களிடையே 1% தான் லெஸிபியன் செக்ஸ் நடைபெறுகிறதாம்.

கலவிக்கு பின் பெண் ஒட்டகசிவிங்கி 400 முதல் 460 நாட்கள் கற்பத்திற்கு பின் மெத்தென்று இருக்கும் இடத்திலில் பின்னங்கால்களை விரித்து நின்று கொள்ளும்.

சுமார் 7 அடி உயரத்திலிருந்து தொப்புகுட்டியென்று 6 அடி உயரம் உடைய ஒரு குட்டியை கீழே போட்டு பிரசவிக்கும். பெற்றெடுக்கும்.

சில சமயங்களில் இரட்டை குட்டிகளையும் போடும். 20 நிமிடத்தில் பால் குடிக்கத் தொடங்கும்.

ஆண் ஒட்டகசிவிங்கி குட்டியை வளர்ப்பதற்கும் எனக்கும் சம்மதம் இல்லை என டாட்டா காட்டி கிளம்பிவிடும்.

பெண் ஒட்டகசிவிங்கி தன்னோடு வைத்து 18 மாதங்கள் வரை வளர்க்கும்.

தாய் ஒட்டகசிவிங்கிகள் எல்லாம் வெகு தொலைவு பயணம் செய்யவேண்டியிருந்தால் ஒரு தாய் ஒட்டகசிவிங்கியை ஆயாவாக நியமனம் செய்து அனைத்து குட்டிகளையும் இதன் பொறுப்பில் விட்டுவிட்டு சென்றுவிடும்.

குட்டிகளை இரையாக்க முயலும் சிங்கம், புலி, சிறுத்தை, நரி போன்றவற்றிலிருந்து காப்பாற்ற இந்த ஆயா ஒட்டகசிவிங்கி உதை விடுவதில் வல்லுனராக இருந்து காப்பாற்றும். - Dr.RAJENDRAN S . DD CBFD


THANKS TO SOURCE: http://kaalnadaidoctor.blogspot.sg/2011/06/blog-post_12.html

suvanappiriyan said...

சலாம்!

பின்னூட்டமளித்த அனைவருக்கும் நன்றி! வேலைகள் முடிந்து இணையமும் மக்கர் பண்ணாமல் சரியானவுடன் மாலையில் இணைகிறேன்.

RAM said...

@ சு.பி அண்ட் கோ....
இப்ப என்ன சொல்ல வரீங்க...

பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அமீபா ம்ற்றும், 20 லட்சம் வருஷத்துக்கு முன்னாடி தோன்றிய மனிதன் உட்பட, பரிணாமத்தின் அடிப்படையில் உருவாகவில்லை?!!!.
கி.பி.500 க்கு பிறகு வந்த உங்கள் புனித நூலின் (உங்களைப் பொறுத்த வரையில்)அடிப்படையில் தோன்றியவை... அப்படித்தானே???...

@ UNMAIKAL
ஒரு விஞ்ஞான பதிவில், மதத்தை இப்படி பரப்பவும் , மற்ற மதத்தை கேவலமாக விமர்சிப்பது தான் உங்கள் ''மார்கத்'' தா?

RAM said...

@ சு.பி அண்ட் கோ....
இப்ப என்ன சொல்ல வரீங்க...

பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அமீபா ம்ற்றும், 20 லட்சம் வருஷத்துக்கு முன்னாடி தோன்றிய மனிதன் உட்பட, பரிணாமத்தின் அடிப்படையில் உருவாகவில்லை?!!!.
கி.பி.500 க்கு பிறகு வந்த உங்கள் புனித நூலின் (உங்களைப் பொறுத்த வரையில்)அடிப்படையில் தோன்றியவை... அப்படித்தானே???...

@
ஒரு விஞ்ஞான பதிவில், மதத்தை இப்படி பரப்பவும் , மற்ற மதத்தை கேவலமாக விமர்சிப்பது தான் உங்கள் ''மார்கத்'' தா?

Unknown said...

சலாம்.சகோ.உண்மைகள்

ஆமா.. நீங்களும், பெரியவர் வாஞ்சூர் அய்யாவும் நம்ம ராவணனோட பதிவுகளை(!!!) காப்பி பேஸ்ட் செய்யுறதா ராவணனே சொல்லியிருக்காரே.!!!...அப்புடியா????

ராவணன் said...

//என்னுடைய பதிவுகளைப் பற்றி அறிய வாஞ்சூர் பாயிடம் கேளுங்கள். எனது பதிவுகளில் அவர் ரீமேக் செய்தது எத்தனை?

உண்மைகள் என்ற பெயரில் எழுதும் நபரிடம் கேளுங்கள். அவர் எனது பதிவுகளுக்குக் கொடுத்த தொடுப்பு எத்தனை?//

நீங்களும் வாஞ்சூர் அய்யாவும் சொல்லுற பதில்லதான் இருக்கு!!!...ராவணன வெள்ளை மாளிகையில் அழைத்து விழா கொண்டாடுவதா...?? அல்லது (அவரது தாயகமான) கீழ்பாக்கத்துக்கு கொண்டுபோய் சேர்ப்பதா ??? என்று....

:-) :-) :-)

நன்றியுடன்
நாகூர் மீரான்

Unknown said...

சலாம் சகோ.முஹம்மத் ஆஷிக்,

//வெளியே உள்ள தோலில் கட்டம் கட்டமாக கலர்ப்படம் போட்டு இருக்கே..!?

மான் தோலில் இது போல கட்டங்கள் இல்லையே..? இது எப்படி இதுக்கு வந்துச்சாம்..? இதுக்கு ஏதாவது நிச்சயமா ஒரு புனைவு புருடா இருந்தாகணுமே..? //

சாருஹாசன் தம்பி கமலஹாசன் :-

இவரு என் மாமனார் ஆயிட்டதால, இவங்க என் மாமியார் ஆயிட்டதால,ஜானகி என்னோட ஒய்ப் ஆயிட்டதால, சுந்தரி வேலைக்காரி ஆயிட்டாபா..!!!!

கமலஹாசன் தம்பி சார்வாகன் :-

குரங்கு மனுஷனா ஆயிட்டதால,மான் சிவிங்கியா ஆயிட்டதால, இன்னும் எதுஎதுவோ,ஏதேதோ ஆயிட்டதால புள்ளி மானோட வட்டம், கட்டமா ஆயிருச்சிபா..!!!

நன்றியுடன்
நாகூர் மீரான்

இராஜகிரியார் said...

சலாம்.சகோ.உண்மைகள்,

ஒட்டகச்சிவிங்கி பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள உதவிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

//
மேலும் இரத்தம் கழுத்திலிருந்து கீழ் இறங்கமால் இருக்க கழுத்து இரத்த நாளத்தில் ( Jugular Vein) 7 எண்ணிக்கை சிறப்பு வால்வுகள் இருக்கின்றன்.

எளாஸ்ட்டிக் இரத்த நாளம்! அதே சமயத்தில் கழுத்தின் மேல் பகுதியில் ஒட்டகசிவிங்கியின் தலை தரை பகுதிக்கு வரும்போது அதிகம் இரத்தம் மூளைக்கு செல்லாமல் இருக்க ரெட்டி மிர்ரபைல்( rete mirabile) என்ற அமைப்பும் உள்ளது.

இந்த ஹைடெக் வசதி எந்த ஜீவனித்திடமும் இல்லாத ஒரு அமைப்பு. //

பரிணாம கொள்கை தேவைக்கேற்ற படி ஒன்று அதை ஒத்த மற்றொன்றாக மாறுகிறது என்று வாதிக்குமானால் இதைப்போற்ற புதிய அமைப்புகள் எவ்வாறு உருவாயின? பரிணாமவாதிகள் சிந்திக்கவே மாட்டார்களா?

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//உலகிலேயே இந்த மிருகத்தின் இரத்த அழுத்தம்தான் ஆக உச்சம்... 300/200 mm Hg வரையில்..! நமக்கெல்லாம் ஒரு அடிக்கு மேலே உள்ள மூளைக்கு பம்ப் பண்ண 120/80 mm Hg @ 60~70 bpm போதுமானது.

இன்னும்...
உலகிலேயே மிகப்பெரிய விலங்கான திமிங்கலம்- அதன் இதயத்தின் எடையே ஒரு நார்மல் ஒட்டைசிவிங்கியின் எடை இருக்கும். அதற்கு கூட இவ்ளோ பல்ஸ் ரேட்டும்.... பம்பிங் ப்ரஷ்ஷ்ரரும் கிடையாது..! //

சிறந்த கேள்வி. ஆனால் பதில் வராது.

இராஜகிரியார் said...

சலாம் சகோ. நாகூர் மீரான்,

ஹா..ஹா...

//குரங்கு மனுஷனா ஆயிட்டதால,மான் சிவிங்கியா ஆயிட்டதால, இன்னும் எதுஎதுவோ,ஏதேதோ ஆயிட்டதால புள்ளி மானோட வட்டம், கட்டமா ஆயிருச்சிபா..!!!//

அதானே. டார்வின் சொன்னா மட்டும் தான் சரியா இருக்குமா? சார்வாகன் சொன்னாலும் சரியாதான் இருக்கும். :-))

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//சகோ.சார்வாகன யாருமே நிம்மதியா வாழ விட மாட்டிங்களா...???அவருக்குன்னு எதிர்த்து கேள்வி கேட்காத,சொல்றதுக்கெல்லாம் ஆமாஞ்சாமி! போடுற ஒரு கூட்டம் இருக்கு!! ...அந்த கூட்டத்துக்கு ஆசிரியர் அவர்...ஒரு மனுசன எத்தனை வழிலதான் அடிப்பிங்க...???அவர இப்படி அசிங்கப்படுத்துறதுக்கு என்னுடைய கண்டனங்கள்!!!//

வழக்கம் போல் இதற்கெல்லாம் பதில் வராது. அவர் ஏற்கெனவே மனிதனுக்கும் குரங்குக்கும் உள்ள இடைப்பட்ட இனத்தைப் பற்றி பதிவிடுவதாக முன்பு சொல்லியிருந்தார். நானும் ஆஷிக்கும் மற்றும் நம் அனைவரும் அந்த பதிவுக்காக காத்திருக்கிறோம். ஆனால் பதிவுதான் வரக் காணோம். :-)

suvanappiriyan said...

திரு ராம்!

//பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அமீபா ம்ற்றும், 20 லட்சம் வருஷத்துக்கு முன்னாடி தோன்றிய மனிதன் உட்பட, பரிணாமத்தின் அடிப்படையில் உருவாகவில்லை?!!!.
கி.பி.500 க்கு பிறகு வந்த உங்கள் புனித நூலின் (உங்களைப் பொறுத்த வரையில்)அடிப்படையில் தோன்றியவை... அப்படித்தானே???...//

அமீபா எத்தனை கோடி வருடங்களுக்கு முன்பு வேண்டுமானாலும் உருவாகிக் கொள்ளட்டும். அது அல்ல இப்போது பிரச்னை. ஒட்டக சிவிங்கியின் பரிணாமத்தைப் பற்றி டார்வின் வைத்த வாதங்கள் அனைத்தும் அறிவியல் அறிஞர்களாலேயே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முதலில் பதிலைச் சொல்லுங்கள். பிறகு குர்ஆனைப் பற்றி பேசலாம்.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//இது.பாலூட்டி வகைகளில் மிகவும் உயரமான இனம் ஒட்டகசிவிங்கி!

இதன் அறிவியல் பெயர் (Giraffa camelopardalis) ஜிராஃபிடே குடும்பத்தை சார்ந்த (Giraffidae) ஒட்டகசிவிங்கி 18 அடி வரை வளரும். 900 கிலோ வரை எடை இருக்கும்.

ஒட்டகத்தின் உடல் அமைப்பு தோலில சிறுத்தையின் டிசைன் என்று கலந்து இருக்கும்.//

ஒட்டக சிவிங்கியைப் பற்றி பல அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ நாசர்!


//மரபணு ஆய்வு ..!!!!??? புடலங்கா ...!!!! கத்தரிக்கா ....!!!
நம்ம வவ்வால்ஜி கு போன் போட்டுட்டேன் ...அவரு இங்கே,அங்கே என்று மேய்ந்து ஆதாரங்களை [?!]
அள்ளிக்கொண்டு கொட்டுவார் பாருங்க ..அப்ப உங்களுக்கு "மூச்சு முட்டுது வார்த்த தட்டுது எழுத முடியல"னு புலம்புவீங்க...!!! ஆஹா ஆஹா ஆஹா -- //

டார்வினின் பரிணாமவியல் பொய் என்பது வவவாலுக்கும் தெரியும். கடவுளை மறுக்க தற்போது அவர்கள் சார்பாக இருப்பது பரிணாவியல் ஒன்றே. எனவே எப்பாடுபட்டாவது தூக்கி நிறுத்தவே முயற்சிப்பார்கள். நம்மைப் போன்றவர்கள் முடிந்த வரை அந்த முன்னேற்றததை தடுத்து நிறுத்திக் கொண்டே இருப்போம். இது ஒரு தொடர்கதை...... :-)

suvanappiriyan said...

திரு கையேடு!

//அறிவியல் டார்வினுக்கு அவருக்குண்டான இடத்தைதான் கொடுத்து வைத்திருக்கிறது.. டால்டனுக்கு, நியூட்டனுக்கு, கோபர்நிகஸுக்கு, என தொடர்ந்து அவர்களைப் பயிற்றுவிக்கிறது அடுத்த அத்தியாயத்தில் அவர்களை மறுதலித்த கொள்கைகளையும் பாடமாக வைத்திருக்கும் அறிவியல். - சும்மா ஒரு செய்திக்காக சொன்னேன்.//

ஐன்ஸ்டீன், நியூட்டன, கோபர்நிகஸ் போன்ற அறிவியல் அறிஞர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அந்த அளவு அவர்களின் கண்டு பிடிப்பு மனித குலத்க்கு நன்மை பயத்திருக்கிறது.

அந்த லிஸ்டில் கைதேர்ந்த கற்பனை கதாசிரியரான டார்வினை சேர்ப்பது அந்த அறிவியல் அறிஞர்களை கேவலப்படுத்துவதாகும்.

suvanappiriyan said...

சகோ பீர் முஹம்மத்!

//Super kaakka !!
Good points to refute darwinism !!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ராஜகிரியார்!

//பயனுள்ள தகவல்கள்.
பரிணாம கொள்கையை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

பகிர்ந்துள்ள போட்டோக்களும் மிகவும் அழகாய் உள்ளன.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

துர்கா தேவி ஊர்வலம் :

மகாராஷ்டிராவில் 4 முஸ்லிம்கள் படுகொலை;

40 வீடுகள் எரிந்து சாம்பல்!


Thursday, 25 October 2012 04:54

MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்


OCT 25, மகாராஷ்டிராவின் "ஆகோட்" என்ற இடத்தில் நேற்று முன்தினம் (23/10) இரவு "துர்கா பூஜை" ஊர்வலத்தில் வந்தவர்கள்,

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி 4 முஸ்லிம்களை போலீசின் கண்ணெதிரில் கொலை செய்தனர்.

மேலும், இரவு முழுவதும் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

இதில், நேற்று (24/10) அதிகாலை வரை 40 வீடுகள் எரிந்து சாம்பலானது.

கொலை செய்யப்பட்டவர்களில், இரு "ஷஹீத்கள்" ஹாஜி ஹகீம் யாசீன் (75) முஹம்மத் சபர்(17) ஆகியவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

150க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் அச்சத்தால் ஊரை விட்டே ஓடிவிட்டனர்.

இது பற்றிய செய்தியாவது:

மகாராஷ்டிர மாநிலம் "அகோலா" மாவட்டத்தில், அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் ஊர் "ஆகோட்".

இங்கு, 15 முஸ்லிம் "முஹல்லாக்கள்" உள்ளன, அதில், 37 பள்ளிவாசல்கள் இருக்கின்றன.

கடந்த 6 நாட்களுக்கு முன்பு, முஸ்லிம்கள் நிறைந்த இந்த பகுதியில்,

பந்தலில் வைக்கப்பட்டிருந்த "கணபதி சிலை" மீது, விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன், எச்சில் துப்பிவிட்டதாக கூறி பிரச்சினை செய்யப்பட்டது.

(போலீஸ் பாதுகாப்பை மீறி, பந்தலுக்கு அருகில் எவரும் செல்ல முடியாது).

என்றாலும், அது அப்போதே இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக சரி செய்யப்பட்டு விட்டது.

இதற்கிடையில் , 4 நாட்களுக்கு முன், அந்த ஊரில் "நகர் பாலிகா" என்னும் நகரமன்றத்தலைவர் "தேர்தல்" நடந்து, 22 ந்தேதி முடிவு வெளியானது.

அராஜகத்தின் மூலம் வெற்றிப்பெறுவார் என பெரிதும் எதிர்ப்பாக்கப்பட்ட "சிவசேனை" கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர் "ஹபீஸ்" என்பவர் வெற்றி பெற்றார்.

இதை மனதில் வைத்துக்கொண்டு, துர்கா பூஜை ஊர்வலத்தில், கல் வீசப்பட்டதாக வதந்தியை கிளப்பி கலவரத்தில் ஈடுபட்டனர்.

எனினும் போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்ற அந்த ஊர்வலம் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.

பிறகு, பயங்கர ஆயுதங்களுடன், நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த விஷமிகள், முஸ்லிம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தி, இந்த கலவரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, "பாரா"வுக்கு பணியில் இருந்த போலீசார், முஸ்லிம்களை பாதுகாக்கத்தவறினர், என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maruppu.in/

UNMAIKAL said...

மியான்மரில் மீண்டும் கலவரம் :
13 முஸ்லிம்கள் படுகொலை;
300 வீடுகள் தீக்கிரை!


Wednesday, 24 October 2012 02:46 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்

OCT 24, மியான்மரில் பயங்கரவாத "புத்த பிட்சுகள்" முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரத்தை மீண்டும் துவக்கிவிட்டனர்.

மேற்கு மியான்மர் மாநிலமான, ராகேனில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் "மாமர" மற்றும் "மரோத்" ஆகிய இரு ஊர்களில் உள்ள அனைத்து வீடுகளையும் புத்த தீவிரவாதிகள் "தீ" வைத்து கொளுத்தினர்.

இதில், முன்னூறு வீடுகள் எரிந்து சாம்பலானது.

இது தவிர கடந்த 21/10 முதல், 3 நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களில் 13 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

என்றாலும், ராகேன் மாநில தலைமை நீதிபதி "ஹலாதீன்" அறிவிப்பின்படி,

ஒரு பெண் உட்பட 3 நபர்கள் மட்டும் கொல்லப்பட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஈரான் செய்தி நிறுவனங்களின் தகவல்படி,

கடந்த 21/10 அன்று, ராகேன் மாநிலத்தின் "சதீவா" மாவட்டம் "மாமர" மற்றும் "மரோத்" ஆகிய ஊர்களில் "புத்த பிட்சுகள்" நடத்திய தாக்குதலில் மட்டும் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு மியான்மர் "ராணுவம்" மற்றும் "செக்யூரிட்டி" படைகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் துவங்கி பல நாட்களாக நடத்தப்பட்ட கலவரங்களில் பல்லாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தபோது, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறியது,மியான்மர் அரசு.

தற்போதைய கலவரத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வீடிழந்து வீதிகளில் நிற்பதாக, மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பர்மா : தொடரும் சோகம் ;
நேற்றும் 3 பேர் பலி!

Thursday, 25 October 2012 07:17 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்

OCT 25, பர்மாவின் மேற்கு மாகாணத்தில், புத்த மத தீவிரவாதிகளின் தாக்குதலில் நேற்று (24/10) மேலும் 3 முஸ்லிம்கள் பலியாயினர்.

இவர்களையும் சேர்த்து கடந்த 5 தினங்களில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த கலவரம் "கியோக் பியோ" மற்றும் "மப்பூன்" ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது.

இதுகுறித்து, ராகேன் மாநில தலைமைச்செயலாளர் "மாயூதன்ட்" குறிப்பிடும்போது,

வீடுகளின் தீயை அணைப்பது தான் தற்போதைய முக்கிய பணியாக உள்ளது.

தீ பரவாமல் தடுக்கப்பட்டால் தான், உயிர்சேதங்களை குறைக்க முடியும் என்றார்.
http://www.maruppu.in

ராவணன் said...

அண்ணாச்சி அடிச்சி ஆடுங்க....

நீங்கதான் தமிழ்மணத்தில் டாப்பு.

நீங்க இல்லாட்டா தமிழ்மணமே டூப்பு...

suvanappiriyan said...

திரு ராவணன்!

//அண்ணாச்சி அடிச்சி ஆடுங்க....

நீங்கதான் தமிழ்மணத்தில் டாப்பு.

நீங்க இல்லாட்டா தமிழ்மணமே டூப்பு... //

ஹி...ஹி...அப்படில்லாம் இல்லங்கண்ணா! என்னை விட திறமையாக எழுதக் கூடியவர்கள் தமிழ் மணத்தில் நிறையவே உண்டுங்கண்ணா! நான் ஒரு குக்கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழ் குடிமகன்ணா...

Unknown said...

//ஹி...ஹி...அப்படில்லாம் இல்லங்கண்ணா! என்னை விட திறமையாக எழுதக் கூடியவர்கள் தமிழ் மணத்தில் நிறையவே உண்டுங்கண்ணா! நான் ஒரு குக்கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழ் குடிமகன்ணா...//

என்ன சுவனப்பிரியன் !!! ஜகா வாங்குறீங்க....எங்க ராவணன விட நீங்க பெரிய ஆளோ..!!! அவர் எழுத்துக்கும் ,சிந்தனைக்கும் கிட்ட நிக்க முடியுமா நீங்க!!! அவர் போஸ்ட எத்தனை பேரு காப்பி,பேஸ்ட் செய்யுறாங்க தெரியுமா???அதுக்கு காப்புரிமை கூட வெச்சுக்காத பொன்மனச்செம்மல் அவரு!!!

அவருக்கு சரிக்கு சரியாய் நின்னு பேசக்கூடாது...அவருக்கு ரிப்ளை பண்ணும்போது கூட சேர்ல உக்காந்துகிட்டு டைப் பண்ண கூடாது..எந்திரிச்சி நின்னு முதுக 45 டிகிரி சரிச்சி தான் டைப் பண்ணனும் ....

தெரிஞ்சிக்கோங்க ,சின்னவங்க பெரியவங்க வித்தியாசத்த!!!

Nasar said...

@ நாகூர் மீரான் சொல்கிறார்
// தெரிஞ்சிக்கோங்க ,சின்னவங்க பெரியவங்க வித்தியாசத்த!!! //
மரியாதை தெரியலேன்னா நாளை ஈத் தொழுகைக்கு பிறகு சவூதி , பத்தா ,
மார்கெட்டுக்கு பின்னால் உள்ள " ஃபாமெஸ் முனியாண்டி விலாஸ் " ஹோட்டலில்
பிரியாணி சாப்பிடுங்கன்னா அப்பத்தான் உங்களுக்கு மரியாதைனா என்னன்னு தெரியுங்கன்னா .....

Unknown said...

@ Nasar,

//மரியாதை தெரியலேன்னா நாளை ஈத் தொழுகைக்கு பிறகு சவூதி , பத்தா ,
மார்கெட்டுக்கு பின்னால் உள்ள " ஃபாமெஸ் முனியாண்டி விலாஸ் " ஹோட்டலில்
பிரியாணி சாப்பிடுங்கன்னா அப்பத்தான் உங்களுக்கு மரியாதைனா என்னன்னு தெரியுங்கன்னா .....//

மூச்!!! சத்தம்..சத்தம் போடக்கூடாது..."சாதனை வீரன் ராவணன் " இவரைப்பற்றி உங்களுக்கு தெரியுமா???

நீங்க எல்லாம் கறி சாப்பிட்டா ஒரு நேரத்துக்கு எத்தனை கிலோ சாப்பிடுவீங்க...அது ஆடோ,மாடோ,கோழியோ, ஒட்டகமோ,...ராவணனோட சாதனைய உங்களால முறியடிக்க முடியுமா...???

*************************************

"சாதனை வீரன்" ராவணன் said...

என்னென்னவோ பிரியாணி சாப்பிட்டுள்ளேன். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி, பீப் பிரியாணி என்று அனைத்து வகையான பிரியாணியையும் ஒரு கை பார்த்துள்ளேன். ஆனால் இந்த பன்னி பிரியாணி எங்கேயும் சாப்பிட்டது இல்லை.

என்னடா மக்கா? பன்னி பிரியாணி சாப்பிடாமல் இந்த உயிர் போகுமா? அதுக்காகவே இன்று காலையிலே எழுந்து 2 கிலோ பன்னி வாங்கி வந்தேன். பிரியாணிக்கு ஒரு கிலோ. கறி செய்ய ஒரு கிலோ.

காலை 11 மணிக்கே பன்னி பிரியாணி மற்றும் பன்னிக் கறி ரெடி. நன்றாகக் குளித்துவிட்டு ஒரு ஆப் அடித்தேன். அதன் பின்னர் சாப்பிட்டேன். இப்போது இரவு பன்னி பிரியாணியைத் தேடினால்..........ஒன்னுமே இல்லை. ஒக்காளி மதியமே ....மதியமே........அனைத்தையும் முடித்துவிட்டேன்.

சாக்கடையில் புரளும் பன்னிகளை என்ன செய்வீர்கள்?

நீங்கள் ஒதுங்கிச் செல்வீர்கள்.

நான்...நானோ அந்தப் பன்னிகளை பிரியாணி செய்து சாப்பிடுவேன்.

பன்னிகள் ஒழிக.....!

பன்னி பிரியாணி வாழ்க....!

*************************************

இந்த சாதனை மனிதரை புறந்தள்ளலாமா ...??


RAM said...

ஒட்டகச்சிவிங்கிக்கு முன் வாழ்ந்த இடைப்பட்ட உயிரினங்களின் படிமங்கள் இன்றளவும் தேடப்பட்டு வருபவை, அதன் பரிணாம வளர்ச்சி பற்றி முனைவர் பட்டம் பெற்றவர்களே விவரிக்க முடியாமல் தங்கள் ஆராய்ச்சிகளை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்களோ , நானோ, யாராயினும் இதை பற்றி ஒரு கருதுகோளை கொண்டுவருவது அவ்வளவு சுலபமில்லை.
விஞ்ஞானப்பூர்வமான பதிவுகளை எழுதும் போது, விஞ்ஞானப்பூர்வமாக மட்டும் அணுக வேண்டும் என்பதே என் கருத்து. இதில் "இறைவனையும் - மதத்தையும்" சேர்க்காதீர்கள்.

நடுநிலையாளர்கள் உங்கள் பதிவுகளை விட , அதன் பின்னூட்டங்களில் இவ்வளவு "சாம்பிரானி" ஊதுவதை தான் விமர்சிக்கிறார்கள்.
திரு.UNMAIKAL அவர்களின் பின்னூட்டங்கள் எந்த வகையில் உங்களின் இந்த பதிவுக்கு சம்பந்தமானது...விளக்கவும்!!!

கடுமையான கண்டனங்கள் திரு.UNMAIKAL.