Followers

Saturday, August 21, 2021

கற்பனைக் கதைகளை எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

 'அன்பிற்குரிய நண்பர்களே!


உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஆப்கானிஸ்தானைப் பற்றியும் தாலிபான்களைப் பற்றியும் கற்பனைக் கதைகளை எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.


20 வருடங்களுக்கு முன்பிருந்த சூழல் வேறு தற்போதய சூழல் வேறு. பல மாற்றங்கள் நடந்து வருகிறது.


முக நூல், யூ ட்யூப் பார்த்து அதுதான் உண்மை செய்தி என்று பரப்புவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.


உண்மையை உலகுக்கு சொல்ல வேண்டும் என்ற உண்மையான தாக்கம் இருந்தால் ஆப்கானிஸ்தான் வந்து ஐந்து நாள் தங்கி இங்குள்ள நிலவரத்தை மக்களுக்கு கொண்டு செல்லுங்கள்


தாலிபான்கள் ஆட்சியை பிடித்தால் பெரும் ரத்தக் களறி ஏற்படும் என்று கணித்தார்கள். அதை எல்லாம் தூரமாக்கி ஒன்றிரண்டு சம்பவங்களோடு பிரச்னை முடிவுக்கு வந்தது. 


அல்ஹம்துலில்லாஹ்.....


எல்லா புகழும் இறைவனுக்கே'








 

No comments: