ஒருவருக்கு பசு தெய்வமாக தெரியலாம்.. மற்றவருக்கு அது மிருகமாக தெரியலாம்....
வேத காலத்தில் கடவுளுக்கு நேர்ந்து கொண்டு பசுக்களை இதே பார்பனர்கள் வெட்டி பலி கொடுத்துள்ளார்கள்.. அதனை ருசித்து சாப்பிட்டும் உள்ளார்கள். புத்த மத தாக்கத்தால் பிற்காலத்தில் சைவத்துக்கு மாறியவர்கள் பார்பனர்கள். அது அவர்களின் சொந்த விருப்பம். அதே நேரம் நான் மாறியதால் நீயும் மாறி விடு என்று வன்முறையை கையில் எடுப்பது மகா அயோக்கித்தனம்.
இலங்கையை சேர்ந்த இந்த இந்து இளைஞரும் தனது உடல் வலிமைக்கு மாட்டுக் கறியே சரிப்பட்டு வரும் என்கிறார். இது அவரது உரிமை... இவரது தாய் மாட்டுக் கறி சாப்பிடுவதில்லை.. அதுவும் அவரது உரிமை...
எவரையும் கட்டாயப்படுத்தும் போதுதான் பிரச்னையே உருவாகிறது.
No comments:
Post a Comment