Followers

Monday, August 17, 2026

தங்களை ஏமாற்றுபவர்களையே தலைவன் போல தூக்கிப் பிடிப்பது




மனித சமூகத்தின் மிகப்பெரிய பலவீனம் எதுவென்றால், சில நேரங்களில் கண்கூடாகத் தெரியும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதும், தங்களை ஏமாற்றுபவர்களையே தலைவன் போல தூக்கிப் பிடிப்பது தான்.

 

ஒரு நபர் போலியானவர், ஏமாற்றுக்காரர் , டுபாக்கூர் “என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட பின்னரும், அவருக்கு ஆதரவு கரம் நீட்டுவதும், ஜால்ரா தட்டுவதும் ஒருவித ஆபத்தான அடிமை மனோநிலையின் (Slave Mentality) வெளிப்பாடே தவிர வேறில்லை.

இன்றைய நவீன காலகட்டத்தில், உலகமே தொழில்நுட்பத்தின் விரல் நுனியில் இயங்குகிறது.

 

உதாரணமாக, உலகின் முன்னணி Search engine கூகுளில் (Google) சென்று, இந்தியாவின் மிகப்பெரிய பிழைப்புவாத அல்லது போலியான அரசியல்வாதி அல்லது “ டுபாக்கூர் politician யார்” என்று தேடினால், எவ்விதத் தயக்கமுமின்றி சீமானின் புகைப்படம் தான் நம் கண்முன்னே வந்து நிற்கிறது.

 

ஒரு செயற்கை நுண்ணறிவு செயலியும், தொழில்நுட்ப நெறிமுறைகளும் கூட ஒருவரின் பிழைப்புவாத அரசியலை மிகத் தெளிவாக இனம் கண்டு சுட்டிக்காட்டும் போது, சொந்தப் பொது அறிவைக் கொண்ட ஒரு சாதாரண மனிதனால் இன்றும் சீமான் போன்றவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றால், அது அவனது மூளை வளர்ச்சியின் முடக்கத்தையும், தரமற்ற கல்வியறிவையும் நினைத்து அவர்களை பெற்றவர்கள் வேதனைப் படத்தான் வேண்டும்.

 

இத்தகைய விழிப்புணர்வற்ற, பகுத்தறிவற்ற ஒரு தற்குறி கூட்டத்தை குறிவைத்து, அவர்களின் அறியாமையையே மூலதனமாக மாற்றித் தன் அரசியல் பிழைப்பை ஓட்டுவதே இதுபோன்ற டுபாக்கூர் அரசியல்வாதிகளின் முழுநேர வேலை.

 

மக்களைப் பற்றிக் கவலைப்படுவதை விட, தன் சொந்தப் புகழுக்கும், தான் பிழைப்பு நடத்துவதற்கும் உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு பட்டாளத்தை இவர்கள் எப்போதுமே தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.

 

அறிவியல்பூர்வமான விவாதங்களையோ, ஆக்கப்பூர்வமான கேள்விகளையோ எதிர்கொள்ளத் திராணியற்றவர்கள், வெறும் வாய்வீச்சாலும், உணர்ச்சிப் பிழம்பான வசனங்களாலும் , அவதூறுப் பேச்சுக்களாலும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

காலம் மாறிவிட்டது. மக்களின் வரிப்பணமும், நம்பிக்கையும் எத்தகையவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.

 

போலிகளையும் ஏமாற்றுக்காரர்களையும் அடையாளம் கண்டு விலக்கி வைப்பதுதான் சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானது.

 

சீமானின் பேச்சுக்களில் “Orgasm “ அடையும் தம்பிகள் என முகநூலில் பொங்குபவர்கள் கூட சீமானுக்கு வாக்களிப்பது கிடையாது.

தலைவன் பிழைப்புவாதி, ஏமாற்றுக்காரன் என்று சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்ட பின்னரும், அவனுக்குப் பின்னால் செம்மறி ஆடுகளைப் போலத் திரளும் அந்த ‘சீமான் தம்பிகள்’

கூட்டத்தை வேறு எப்படி அழைப்பது?

 

சிந்திக்கத் தெரிந்த மூளையை கழற்றி வைத்துவிட்டு, வெறும் வாய்வீச்சுக்கும் உணர்ச்சிப் பிழம்புப் பேச்சுகளுக்கும் அடிமையாகிவிட்ட இந்த Zombie கூட்டம், நவீன தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறி நிற்கிறது.

 

ஒரு திரைப்படத்தைக் கூட விமர்சித்துவிட்டு, அதில் இருக்கும் குறைகளைக் கேள்வி கேட்கும் மனிதர்கள், தன் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் அரசியல்வாதியை மட்டும் ஏன் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள்?

தங்களுக்கு முன்னால் பேசப்படும் பொய்களைப் பகுப்பாய்வு செய்யும் குறைந்தபட்ச பொது அறிவு கூட இல்லாமல், வாலில் தீ பற்றிக் கொண்ட குரங்குகளைப் போல சமூக வலைதளங்களில் சண்டையிடுவதே இவர்களின் முழுநேரப் பணியாகியுள்ளது.

தலைவர் எதைச் சொன்னாலும், அது முட்டாள்தனமாக இருந்தாலும் சரி, அறிவுக்குப் புறம்பானதாக இருந்தாலும் சரி, அதை அப்படியே விழுங்கிவிட்டு ஜால்ரா அடிப்பதுதான் தம்பிகளின் வேலை.

கேள்வி கேட்கும் திறனை முற்றிலுமாக இழந்துவிட்டதால் தான் இவர்களை ‘zombie கூட்டம்' என்று ஒதுக்க வேண்டியுள்ளது.

நவீன தொழில்நுட்பமும் அறிவியலும் உலகை எங்கே கொண்டு சென்றுகொண்டிருக்கிறது? ஆனால், இந்தக் கூட்டமோ இன்றும் புராணக் கதைகளையும், ஏமாற்று மேடை நாடகங்களையும் நம்பி காலத்தைக் கடத்துகிறது.

 

பகுத்தறிவு சிறிதும் இல்லாமல், ஒரு டுபாக்கூர் அரசியல்வாதியின் பொய்களுக்குத் தீப்பந்தம் பிடிக்கும் இவர்களின் மூளை வளர்ச்சி மந்தநிலையில் முடங்கிப் போய்விட்டது என்பதற்கு இவர்களின் செயல்களே சாட்சி.

 

குறித்த எந்தத் தெளிவும், திட்டமும் இல்லை; வாழ்க்கையில் தாங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் கீழே தள்ளப்பட்டுவிட்டோமே என்ற தாழ்வு மனப்பான்மையும், கடுமையான வெறுப்பும், மன உளைச்சலும் தான் இந்தச் ‘சீமான் தம்பிகள்’ கூட்டத்தின் அடிப்படை மனநிலையாக உள்ளது.

சமூகத்தில் தங்களுக்கு என்று எந்த ஒரு தனிப்பட்ட அந்தஸ்தோ, மரியாதையோ இல்லாத இந்தச் சோம்பேறிக் கூட்டம், அந்தத் தோல்வியை மறைக்கப் போடும் வசதியான முகமூடிகள்தான் இந்த ‘தேசியவாதம்’ மற்றும் ‘புலி ஆதரவு’ நாடகங்கள்.

சமுதாயத்தில் தங்களை ஒரு ‘பெரிய அறிவுஜீவியாகவோ’ அல்லது ‘தேச பக்தனாகவோ’ காட்டிக்கொள்ள இவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

 

அதனால் தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகங்களைச் சொந்த அரசியல் பிழைப்புக்காகக் கேவலமாகச் சீரழிக்கும் ஒரு ஏமாற்றுக்காரனின் பின்னால் நின்று கொண்டு, தங்களையும் ஒரு ‘புலி ஆதரவாளர்’ அல்லது ‘தேசியவாதி’ என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள்.

 

 

வாழ்க்கையில் எதுவுமே சாதிக்க முடியாத இயலாமை வக்கிரங்கள், தன் சுயலாபத்திற்காகத் தமிழர்களை ஏமாற்றும் ஒரு டுபாக்கூரின் காலடியில் சரண் அடைந்துள்ளது.

 

கண்மூடித்தனமான ஆதரவை விடுத்து, பகுத்தறிவோடு சிந்தித்துச் செயல்படும் போதுதான், இதுபோன்ற அரசியல் பிழைப்புவாதிகளின் பிடியில் இருந்து இந்தச் சமூகம் முழுமையாக விடுதலையைப் பெற முடியும்

 

-          Mukinthan thurairajasingham

 


No comments: