Followers

Showing posts with label அல் காய்தா. Show all posts
Showing posts with label அல் காய்தா. Show all posts

Sunday, February 22, 2015

பெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்?

பெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்?



சில மாதங்களுக்கு முன்பு பெஷாவர் பள்ளிக் கூடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுமிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிகழ்வை நாம் மறந்திருக்க மாட்டோம். அதில் பள்ளிக் கூடத்தினுள் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சிலரின் உடலை பார்த்த பாகிஸ்தானிகள் ஆச்சரியப்பட்டுப் போயினர். ஏனெனில் அந்த தீவிரவாதிகளின் உடலில் பல உருவங்கள் பச்சைக் குத்தப்பட்டிருந்தன. தமிழ் நாட்டில் உள்ள எந்த முஸ்லிமாவது தங்கள் உடலில் பச்சைக் குத்தி பார்த்திருக்கிறீர்களா? இந்துக்களும் கிருத்தவர்களும் தங்கள் பெயர்களையோ தங்கள் காதலியின் பெயர்களையோ தங்கள் கைகளில் பச்சைக் குத்திக் கொள்வதை பார்த்திருப்போம். இஸ்லாத்தில் இவ்வாறு உடலில் பச்சைக் குத்திக் கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பெஷாவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவனின் உடலில் உருவப் படங்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. அந்த நேரத்திலேயே அது வீடியோவாகவும் வந்தது. இது பற்றி எனது கம்பெனியில் வேலை செய்யும் பாகிஸ்தானி சொன்னதாவது 'பலுசிஸ்தான் போன்ற பகுதிகளில் பாகிஸ்தானின் ராணுவமே சில இடங்களில் நுழைய முடியாது. அந்த அளவு சாலை வசதிகளும் இல்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு ரஷ்யாவிலிருந்து ஆப்கான் வழியாக பாலைவனங்களூடாக பாகிஸ்தான் புகுந்து விடுவர். இவர்களில் பெரும்பாலோர் மொசாத்தால் பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள். சில நேரம் ஷியா பள்ளிகளில் குண்டு வைப்பார்கள். சில நேரம் சன்னி பள்ளிகளில் குண்டு வைப்பார்கள். மற்ற சில நேரங்களில் இந்திய பார்டர்களில் இங்கிருந்து துப்பாக்கி சூடு நடத்தி இந்தியா பாகிஸ்தானுக்கு முறுகல் நிலையை உண்டாக்குவர். இது இவர்களுக்கு இடப்பட்ட வேலை. பாகிஸ்தானிகள் சிலரும் இதற்கு உடந்தை. இதற்காக அவர்களுக்கு மாதாமாதம் பெரும் தொகை கைமாறாக கொடுக்கப்படுகிறது. ரூட் போட்டுக் கொடுப்பது. உணவு தயாரித்துக் கொடுப்பது போன்ற வேலைகளை இவர்கள் செய்து வருகின்றனர். உள் நாட்டு சிறு குழப்பங்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது இவர்களுக்கு கை வந்த கலை. தங்களின் மீது சந்தேகப் பார்வை பட்டு விடாதபடி மிக கவனமாக காய்களை நகர்த்துவார்கள்' என்று சொன்னார்.

இதனால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம்?

முறுகல் நிலை தொடர்ந்து இருந்தால் அமெரிக்க இஸ்ரேலிய ராணுவ தளவாடங்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகும். இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்டு ராணுவ தளவாடங்கள் வாங்குவதை தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கிறோம். இந்த ஆயுத வியாபாரிகளுக்கு எதிராக ஒபாமாவும் வாயை திறக்க முடியாது. ஏனெனில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஒபாமா கட்சியும் எதிர் கட்சியும் தேர்தல் செலவீனங்களுக்காக இந்த ஆயுத வியாபாரிகளையே நாட வேண்டியதாக இருக்கும். எனவே இவர்கள் எதனை சொல்கிறார்களோ அதனையே ஒபாமாவும் மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டுவார். எப்படி ஆர்எஸ்எஸ், அதானி, கும்பலுக்கு நமது மத்திய அரசு தலையாட்டுகிறதோ அது போல :-)

அல் ஷபாப், போகோ ஹராம், ஐஎஸ்ஐஎஸ், தாலிபான், இந்தியன் முஜாஹிதீன் என்று நாட்டுக்கு தக்கவாறு இந்த யூதர்களின் முகமூடி மாறிக் கொண்டே இருக்கும். தாலிபான்களை தீவிரவாதிகள் என்று சொல்லாதீர்கள் என்று அமெரிக்கா சமீபத்தில் அவர்களுக்கு சிறந்த சர்டிபிகேட் கொடுத்து கௌரவித்ததையும் நாம் மறந்து விடக் கூடாது. பாகிஸ்தானில் எவ்வாறு மொசாத்துக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்களோ அதே போல் இங்கும் இந்துத்வாக்கள் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டுள்ளனர். இந்துத்வா ஆட்சிக் கட்டில் ஏறியவுடன் இஸ்ரேலோடு நமது நாட்டின் தொடர்புகள் இன்னும் அதிகமாயுள்ளதை நாம் கவனித்திருப்போம். இனி மறைமுகமாக என்னவெல்லாம் நமது நாட்டில் அரங்கேற்றப் போகிறார்களோ பொருத்திருந்து பார்போம்.

Friday, September 05, 2014

'அல்காயிதா' வின் மிரட்டல் 'மொஸாத்தின்' வேலை!



'அல்காயிதா' வின் மிரட்டல் 'மொஸாத்தின்' வேலை!

இந்தியாவில் தங்களின் கிளைகளை திறக்கப் போவதாக அல்காயிதாவின் தலைவர் ஜவாஹிரி கொடுத்த அறிக்கையை நாம் பத்திரிக்கைகளில் பார்த்தோம். இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருக்கும் போது திடீரென்று இவர் அறிவிக்க காரணம் என்ன? இந்த செய்தி எங்கிருந்து கசியவிடப்பட்டது?

SITE என்ற செய்தி ஸ்தாபனத்திலிருந்து இந்த செய்தி கசிய விடப்பட்டுள்ளது. இந்த செய்தி ஸ்தாபனமானது இஸ்ரேலுடைய மொசாத்தின் அங்கத்தினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மேலும் நெருக்குதல்களைக் கொடுக்கவும் இந்துத்வாவாதிகளுக்கு இந்து மக்களின் ஆதரவை பெற்றுத் தரும் முகமாகவே இந்த செய்தியை மொசாத் கசிய விட்டுள்ளது.

அஸ்ஸாம் காஷ்மீர் குஜராத் போன்ற மாநிலங்களில் ராணுவத்தாலும் ஆட்சியாளர்களாலும் பல கொடுமைகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கலாம். அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பது இந்திய முஸ்லிம்களுக்கு தெரியும். காவல்துறையும், நீதித் துறையும் இந்தியாவில் முற்றாக சிதைந்து விடவில்லை. எனவே அல்ஜவாஹிரி போன்ற அமெரிக்க கைக் கூலிகளின் உதவி எந்த இந்திய முஸ்லிமுக்கும் தேவையில்லை என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

1. சைபல் எட்மண்ட்ஸ் என்ற எஃப்பிஐ அங்கத்தினர் விவரிக்கும் போது அல்ஜவாஹிரி நேடோவில் வேலை செய்த முன்னால் அதிகாரி என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். அல்காய்தா என்ற இந்த அமைப்பும் அமெரிக்காவின் சிஐஏ வால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார். வளைகுடாக்களில் கால் ஊன்றவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்துத்வாவாதிகளின் கைகளை பலப்படுத்தவும் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவே அல்காயிதாவை இஸ்ரேலிய மொசாத் உருவாக்கியதாக விவரித்து கூறுகிறார்.



2. SITE என்ற இந்த செய்தி ஸ்தாபனமானது ரிடா கட்ஸ் என்ற முன்னால் இஸ்ரேலிய ராணுவ வீரரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தற்போது இந்த யூதன் மொசாத்தில் வேலை செய்து வருகிறார். இந்த செய்தி ஸ்தாபனமானது அல்காய்தாவின் முக்கிய செய்திகளை வெளியிடுவதும் மேலும் அமெரிக்காவுக்கு தோதான செய்திகளை தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் இதன் முக்கிய பணியாகும்.



எனவே இந்திய முஸ்லிம்கள் மொஸாத் மற்றும் இந்துத்வாவின் வலையில் வீழ்ந்து விடாமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அல் காய்தாவுக்கு ஆள் சேர்க்கிறேன் என்று எவனாவது உங்களை அணுகினால் உடன் காவல் துறை வசம் அவனை ஒப்படைத்து விடுங்கள்.

நமது நாட்டு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள நமக்கு தெம்பும் தைரியமும் இஸ்லாம் நிறையவே கொடுத்துள்ளது. மொஸாத்தின் கூலிப் படைகளின் உதவியை எந்த முஸ்லிமும் ஏற்க மாட்டான். இந்துத்வா ஆட்சி செய்து வரும் இந்த கால கட்டத்தில் முஸ்லிம்கள் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்வார்களாக! எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து நாம் பிறந்த இந்த மண்ணான இந்திய பூமிக்கு விசுவாசமாக என்றும் போல் இருந்து வருவோமாக!

ஆதார சுட்டிகள்:

http://www.veteranstoday.com/2011/09/11/cia-funded-israeli-group-tied-to-al-qaeda-in-german-trial/


http://www.washingtonsblog.com/2013/05/report-u-s-government-worked-with-bin-laden-and-his-top-lieutenant-2-months-after-911.html


http://muslimmirror.com/eng/the-al-qaeda-statement-carried-by-site-intel-is-a-fake-says-bharat-bachao-andolan/