Followers

Showing posts with label இஸ்ரேல்-மொசாத். Show all posts
Showing posts with label இஸ்ரேல்-மொசாத். Show all posts

Sunday, September 06, 2015

ஐஎஸ் அமைப்பை உருவாக்கியதே அமெரிக்காதான் - சிரிய தூதர்



சிவில் யுத்தம் காரணமாக இஸ்லாமிக் ஸ்டேட் என்ற சர்வாதிகார தீவிரவாதம் எழுச்சியுற்றது. இந்நிலையில் சிரியா அதிபர் பஷார் அல் அசாத் சார்பாக இந்தியா வந்துள்ள தூதர் ரியாத் கமெல் அப்பாஸ், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிரான போரில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

ரியாத் கமல் அப்பாஸ்: அது இந்தியாவின் முடிவைப் பொறுத்தது. ஆனால் பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கும் நாடுகளுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

கேள்வி: உங்கள் பார்வையில், ஐ.எஸ். அமைப்பு சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக சில ஆண்டுகளில் உருவெடுத்தது எப்படி?

ரியாத் கமல் அப்பாஸ்: ஆப்கானிஸ்தானில் அல் கய்தாவை உருவாக்கியவர் யார்? ஏன்? என்பதை கூறுங்கள். அமெரிக்காதான் அல்கய்தாவை உருவாக்கியது என்பது தெளிவு. அரபு நாடுகளின் உதவியுடன், ஆப்கனில் சோவியத் யூனியனை முறியடிக்க அல் கய்தாவை உருவாக்கினர். அமெரிக்கர்கள் ஆப்கானில் படையெடுத்த போது நிறைய சவப்பெட்டிகள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகள் போருக்குப் பிறகு ராணுவ வீரரை தரையில் பயன்படுத்துவதன் வியர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். எனவே பிற நாடுகளில் அழிவை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதே சிறந்தது என்று அமெரிக்கா நினைத்தது. இப்படியாகத்தான் ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது. துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

தற்போது ஐ.எஸ். மிகவும் பலமாக உள்ளது. ஏன் அவர்கள் வலுவாக உள்ளனர், புறச்சக்திகள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். என்னுடைய சொந்தக் கருத்து என்னவெனில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்கா சீரியசாக சண்டையிடவில்லை என்பதே. ஐ.எஸ். அமைப்பை அமெரிக்கா தோற்கடிக்க விரும்பவில்லை. அவர்களை கட்டுப்படுத்த விரும்புகின்றனர். இராக்கி குர்திஸ்தானில் உள்ள எர்பிலை ஐ.எஸ். தாக்கியவுடன் அமெரிக்கா உடனே சிகப்பு கோடு இட்டது. அதனை கடக்காதீர்கள் என்று ஐ.எஸ் அமைப்பை எச்சரித்தது. இதனையடுத்து சிரியாவின் மேற்குப் பகுதியிலும் ஐ.எஸ். விரிவு படுத்தியது.

கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிராக போர் என்ற துருக்கியின் சமீபத்திய அறிவிப்பு பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்: இது சும்மா ஒரு கேம் பிளான். பொதுமக்களிடத்தில் கருத்தை உருவாக்க செய்யப்படும் தந்திரம். ஐ.எஸ். விரிவாக்கத்தில் துருக்கியின் பங்கு இருப்பதற்கான சாட்சியங்கள் எங்களிடம் உள்ளன. மொசூலில் துருக்கிய தூதரகத்திலிருந்து ஐ.எஸ். அமைப்பு சிலரை பிடித்தது, ஆனால் உடனடியாக அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால்தான் கூறுகிறேன், துருக்கிக்கும் ஐ.எஸ்.க்கும் நெருங்கிய நட்புறவு உள்ளது என்று. ஐ.எஸ். க்கு எதிராக போர் என்ற பெயரில் அவர்கள் உண்மையில் குர்திஷ் மக்களை எதிர்த்தே போரிடுகிறது துருக்கி.

கேள்வி: சரி இதற்கு தீர்வுதான் என்ன?

பதில்: சிரியா மக்களுக்கு ஒரு புறம் அரசு உள்ளது, மறுபுறம் ஐ.எஸ். மற்றும் அல் நுசுரா பயங்கரவாத அமைப்பு. இந்த இரண்டுதான் மக்களின் தெரிவாக உள்ளது.

ஆனால் தீர்வு எளிதானதே. பயங்கரவாதிகளுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும். எல்லைகளை மூடுங்கள், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அகற்றுங்கள். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் துருக்கி, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்

07-09-2015

Friday, February 20, 2015

ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அதிபர்





ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அதிபர்

செசன்ய அதிபர் ரம்ஜான் கதிரோவ் பத்திரிக்கைக்கு பரபரப்பான பேட்டியைக் கொடுத்துள்ளார். ரஷ்ய செய்தி ஸ்தாபனமான டாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அதிபர் ரம்ஜான் கதிரோவ் சொன்னதாக வந்துள்ளதாவது:

'நான் உலக மக்கள் அனைவரிடத்தும் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரை இஸ்லாமியர் என்று சொல்லாதீர்கள். அவர்கள் சாத்தான்கள். அவர்களின் எண்ணம் எல்லாம் எந்த வகையிலாவது பணம் பண்ண வேண்டும் என்பதே. மேற்குலக நாடுகளின் கட்டளைக்கு கீழ்படிந்து இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்துவதே அவர்களுக்கு இடப்பட்ட பணி. தங்கள் பணியை இன்று வரை கச்சிதமாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மறைமுகமாக மேற்குலக நாடுகளால் தாராளமாக தரப்படுகின்றன. ஆயுதங்கள், உடைகள், நவீன சாதனங்கள் எல்லாம் எங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கின்றன? யாரை திருப்பதிபடுத்த இவர்களின் இந்த வெறியாட்டம்?

கல்லூரிகள், பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்திலும் இந்த கொடியவர்களின் உண்மை முகத்தைப் பற்றிய தெளிவினை விளக்கி பாடம் எடுக்க வேண்டும். இளைஞர்களின் மத்தியில் இந்த சாத்தான்களின் கொடூர குணம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.ஒவ்வொரு வீட்டிலும் இணைய தொடர்பு உள்ளது. இந்த தொடர்பின் மூலம் இந்த கொடியவர்களின் நடவடிக்கை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது. இஸ்லாம் இதனை முஸ்லிம்களுக்கு கற்றுத் தரவில்லை என்ற உண்மையை எடுத்துச் செல்ல வேண்டும். இது நம் அனைவரின் மீதும் சுமத்தப்பட்ட கடமையாக நினைத்து செயலில் இறங்க வேண்டும்' என்று காட்டமாக அறிக்கை விட்டுள்ளார்.

தரகவல் உதவி:
மொராக்கன் டைம்ஸ்
22-10-2014

Friday, September 05, 2014

'அல்காயிதா' வின் மிரட்டல் 'மொஸாத்தின்' வேலை!



'அல்காயிதா' வின் மிரட்டல் 'மொஸாத்தின்' வேலை!

இந்தியாவில் தங்களின் கிளைகளை திறக்கப் போவதாக அல்காயிதாவின் தலைவர் ஜவாஹிரி கொடுத்த அறிக்கையை நாம் பத்திரிக்கைகளில் பார்த்தோம். இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருக்கும் போது திடீரென்று இவர் அறிவிக்க காரணம் என்ன? இந்த செய்தி எங்கிருந்து கசியவிடப்பட்டது?

SITE என்ற செய்தி ஸ்தாபனத்திலிருந்து இந்த செய்தி கசிய விடப்பட்டுள்ளது. இந்த செய்தி ஸ்தாபனமானது இஸ்ரேலுடைய மொசாத்தின் அங்கத்தினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மேலும் நெருக்குதல்களைக் கொடுக்கவும் இந்துத்வாவாதிகளுக்கு இந்து மக்களின் ஆதரவை பெற்றுத் தரும் முகமாகவே இந்த செய்தியை மொசாத் கசிய விட்டுள்ளது.

அஸ்ஸாம் காஷ்மீர் குஜராத் போன்ற மாநிலங்களில் ராணுவத்தாலும் ஆட்சியாளர்களாலும் பல கொடுமைகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கலாம். அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பது இந்திய முஸ்லிம்களுக்கு தெரியும். காவல்துறையும், நீதித் துறையும் இந்தியாவில் முற்றாக சிதைந்து விடவில்லை. எனவே அல்ஜவாஹிரி போன்ற அமெரிக்க கைக் கூலிகளின் உதவி எந்த இந்திய முஸ்லிமுக்கும் தேவையில்லை என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

1. சைபல் எட்மண்ட்ஸ் என்ற எஃப்பிஐ அங்கத்தினர் விவரிக்கும் போது அல்ஜவாஹிரி நேடோவில் வேலை செய்த முன்னால் அதிகாரி என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். அல்காய்தா என்ற இந்த அமைப்பும் அமெரிக்காவின் சிஐஏ வால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார். வளைகுடாக்களில் கால் ஊன்றவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்துத்வாவாதிகளின் கைகளை பலப்படுத்தவும் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவே அல்காயிதாவை இஸ்ரேலிய மொசாத் உருவாக்கியதாக விவரித்து கூறுகிறார்.



2. SITE என்ற இந்த செய்தி ஸ்தாபனமானது ரிடா கட்ஸ் என்ற முன்னால் இஸ்ரேலிய ராணுவ வீரரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தற்போது இந்த யூதன் மொசாத்தில் வேலை செய்து வருகிறார். இந்த செய்தி ஸ்தாபனமானது அல்காய்தாவின் முக்கிய செய்திகளை வெளியிடுவதும் மேலும் அமெரிக்காவுக்கு தோதான செய்திகளை தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் இதன் முக்கிய பணியாகும்.



எனவே இந்திய முஸ்லிம்கள் மொஸாத் மற்றும் இந்துத்வாவின் வலையில் வீழ்ந்து விடாமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அல் காய்தாவுக்கு ஆள் சேர்க்கிறேன் என்று எவனாவது உங்களை அணுகினால் உடன் காவல் துறை வசம் அவனை ஒப்படைத்து விடுங்கள்.

நமது நாட்டு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள நமக்கு தெம்பும் தைரியமும் இஸ்லாம் நிறையவே கொடுத்துள்ளது. மொஸாத்தின் கூலிப் படைகளின் உதவியை எந்த முஸ்லிமும் ஏற்க மாட்டான். இந்துத்வா ஆட்சி செய்து வரும் இந்த கால கட்டத்தில் முஸ்லிம்கள் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்வார்களாக! எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து நாம் பிறந்த இந்த மண்ணான இந்திய பூமிக்கு விசுவாசமாக என்றும் போல் இருந்து வருவோமாக!

ஆதார சுட்டிகள்:

http://www.veteranstoday.com/2011/09/11/cia-funded-israeli-group-tied-to-al-qaeda-in-german-trial/


http://www.washingtonsblog.com/2013/05/report-u-s-government-worked-with-bin-laden-and-his-top-lieutenant-2-months-after-911.html


http://muslimmirror.com/eng/the-al-qaeda-statement-carried-by-site-intel-is-a-fake-says-bharat-bachao-andolan/



Monday, August 25, 2014

ஜேம்ஸ் ஃபாலி கொலையில் பல மர்மங்கள்!



'ஐசிஐஎஸ் அமைப்புக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நம்புங்க மக்களே... நம்புங்க' -ஒபாமா

-------------------------------------------------------------

நான் முன்பே எழுதியது போல் ஐசிஐஎஸ் அமைப்பானது அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பு என்பதற்கு ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன. சகோதரர் கலையரசனும் இதே கோணத்தில் எழுதியுள்ளார்.....

2012 நவம்பர் மாதம் ஜேம்ஸ் ஃபாலி கடத்தப் பட்டு காணாமல்போயுள்ளார். அப்போது, சிரிய அரச படைகளே அவரைக் கடத்திச் சென்றதாக, வட அமெரிக்க ஊடகங்கள் சில அறிவித்தன. அப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருந்தது. ஜேம்ஸ் ஃபாலி, இதே ISIS பயங்கரவாத நண்பர்கள் கொடுத்த தகவல்களைத் தான், செய்திகளாக சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஜேம்ஸ் ஃபாலி என்ற அமெரிக்க ஊடகவியலாளரின் கொலை, உண்மையிலேயே நடந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது. ஆனால், அதைக் கொண்டு உலக மக்கள் முழுவதையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்துவதற்கு, ஊடகங்கள் அயராது பாடுபட்டன. என்ன இருந்தாலும், அமெரிக்க இரத்தம் விலை மதிப்பற்றது அல்லவா?

ஒரு ISIS ஜிகாதிப் போராளி, அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி (James Foley) இன் தலையை வெட்டிக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் காட்சிகளை படமாக்கிய ISIS, வழமை போல அந்த வீடியோவையும் யூடியூப்பில் போட்டதாக கூறப் படுகின்றது. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு. Google நிறுவனத்திற்கு சொந்தமான Youtube, அந்த வீடியோவை உடனே அழித்து விட்டது.

இன்னொரு விசித்திரமான சம்பவம் நடந்தது. Twitter நிறுவனம், அந்த வீடியோவை அல்லது தலை வெட்டும் காட்சிகளை பகிர்ந்து கொள்வோரின் டிவிட்டர் கணக்கு இடைநிறுத்தப் படும் என்று அறிவித்தது. ஏற்கனவே பகிர்ந்து கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு டிவிட்டர் பக்கம் வர விடாமல் தண்டிக்கப் பட்டார்கள்.

இந்தத் தகவலை டிவிட்டரே நேரடியாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. ஏற்கனவே, ISIS சிரியாவில் பலரது தலைகளை துண்டித்து, அவற்றை பகிரங்கமாக இணையத்தில் வெளியிட்டது. அவை டிவிட்டரில் பல தடவைகள் பகிர்ந்து கொள்ளப் பட்ட போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

ஜேம்ஸ் ஃபாலி கொலைக் காட்சிகளை காட்டும், அமெரிக்க அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்ட புகைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டன. அதைத் தான் தற்போது எல்லா ஊடகங்களும், சமூக வலையமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றன. மேலும் ISIS ஏற்கனவே பல நூற்றுக் கணக்கானோரின் தலைகளை வெட்டிய பொழுது கவனிக்காத ஊடகங்கள், ஒரு அமெரிக்கரின் கொலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தன.

அமெரிக்கா தானே வளர்த்து விட்ட இசிஸ் எனும் பூதத்துடன் போரிட்டு அடக்கப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிகின்றது. இது வரை காலமும், அமெரிக்க விமானங்கள் போட்ட குண்டுகள் இசிஸ் அமைப்பை நிலைகுலைய வைக்கவில்லை. யாருமற்ற பாலைவனத்தில் குண்டு போட்டால் என்ன பிரயோசனம்? எந்த நாட்டின் ஆதரவும் இல்லாத இந்த தீவிரவாதிகளை ஒடுக்குவது அமெரிக்காவுக்கு பெரிய வேலையே அல்ல. ஆனாலும் அவர்கள் காரியம் முடியும் வரை செய்ய மாட்டார்கள். :-)

முன்பு தாலிபான்களை வளர விட்டு ரஷ்யாவுக்கு நெருக்கடியை கொடுத்தனர். பிறகு வேலை முடிந்தவுடன் தாலிபான்களை அழிக்கிறோம் என்று சொல்லி ஆப்கனை ஆக்கிரமித்தனர். அதே போல் சிரியாவுக்கும், ஈரானுக்கும், ரஷ்யாவுக்கும் நெருக்கடி கொடுக்க ஐசிஐஎஸ் என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு ஆதரவும் கொடுத்தனர். அவர்களின் வேலை முடிந்தவுடன் 'தீவிரவாதிகளை அழிக்கிறோம்' என்ற பெயரில் ஈராக்கிலும், சிரியாவிலும் தங்கள் கடையை பரப்பி ஆயுத வியாபாரத்தை ஜோராக நடத்த ஆரம்பிப்பர். இதன் கடைசி கட்டம் தான் ஐசிஐஎஸை ஒழிக்க போகிறோம் என்று அமெரிக்கா களம் இறங்கியிருக்கிறது.

நமது நாட்டிலும் நமது உளவுத்துறை 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற கற்பனை அமைப்பை உருவாக்கி அனைத்து தீவிரவாத செயல்களையும் ஊக்குவித்து பழியை அந்த அமைப்பின் மேலும் அப்பாவி இஸ்லாமியர்கள் மேலும் போட்டு வந்ததை நாமெல்லாம் அறிவோம். அரசு மட்டத்தில் இஸ்ரேலின் மொசாத் பல உதவிகளை நமது ராணுவத்துக்கு செய்து வருவதும் நாம் அறிவோம். அதே ஃபார்முலாதான் ஈராக்கிலும், சிரியாவிலும் செயல்படுத்தப்படுகிறது.

உசாமா பின் லாடனை வேலை முடிந்தவுடன் எவ்வாறு கொன்றார்களோ அதே போல் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பக்தாதிக்கும் அந்த நிலைமையே வரலாம். அமெரிக்க, யூத அரசியல் பகடைக் காயில் அடுத்த விட்டில் பூச்சி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பென்றால் மிகையாகாது.

ஐசிஐஎஸ்ஸை அமெரிக்கா வளர்த்து விட்டதால் இஸ்லாத்தின் பெயரையும் களங்கப்படுத்தி அமெரிக்காவில் இஸ்லாம் பரவுவதை இதன் மூலம் தடுக்க முடியும். ஈராக்கிலும், சிரியாவிலும் தனது ராணுவத்தை நிலை நிறுத்தி பல ஆண்டு காலம் அந்நாட்டு செல்வங்களை கொள்ளையடிக்கவும் முடியும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

Tuesday, August 05, 2014

காசா பிரச்னையால் இங்கிலாந்து அமைச்சர் ராஜினாமா!

காசா பிரச்னையால் இங்கிலாந்து அமைச்சர் ராஜினாமா!



பாலஸ்தீன் பிரச்னையில் இங்கிலாந்து நாடாளுமன்றம் எத்தகைய அமைதி முயற்சியையும் மேற்கொள்ளாதது குறித்தும், மற்றும் அப்பாவிகளை இலக்காக்கி கொன்று குவிக்கும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனத்தை கண்டிக்காததாலும் அதனை எதிர்க்கும் முகமாக வெளியுறவுத்துறையிலும், சமூகங்கள் மற்றும் மத நம்பிக்கைகளுக்கான விவாரங்களை கவனித்து வரும் அமைச்சர் சய்யீதா வார்ஸி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது டிவிட்டர் தளத்தில் அவர் கூறுவதாவது 'இன்று காலை பிரதம மந்திரிக்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டேன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தையே அளிக்கிறது. இதற்கு மேலும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் பாலஸ்தீன பிரச்னையில் அமைதி காப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற வேதனையிலேயே எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்' என்கிறார்.

இந்த பெண்மணியின் துணிச்சலை பாராட்டுகிறோம். இவருக்கு இருக்கும் இந்த உணர்வில் பாதியாவது நமது அரபுலக தலைவர்களுக்கு இருந்திருக்குமானால் முஸ்லிம்கள் இத்தனை இழப்புகளை சந்தித்திருக்க மாட்டார்கள். இந்த பெண்ணைப் பாரத்தாவது இனியாவது அரபுலகம் தனது குரலை உயர்த்தி அப்பாவிகள் கொல்லப்படுவதை தடுக்க முன் வருவார்களாக! அமெரிக்க அரசுக்கு மேலும் நெருக்குதலை கொடுப்பார்களாக!

உலக முஸ்லிம்கள் தங்களின் இரு கரம் ஏந்தி பாலஸ்தீன மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க பிரார்த்திப்பார்களாக!

தகவல் உதவி
சவுதி கெஜட்
04-08-2014

Friday, July 18, 2014

ஈராக்கில் கிறித்தவர்கள் கொடுமைபடுத்தப்படுகிறார்களா?

திரு அரிசோனன்!

//ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே!

ஈராக் நாட்டின் வட எல்லையில் இருக்கும் மோசூல் என்ற நகரை ISIS என்ற இஸ்லாமிய இயக்கம் கைப்பற்றி உள்ளது. அங்கு உள்ள கிறித்தவர்களுக்கு ISIS அமைப்பு ஒரு இறுதி எச்சரிக்கை செய்துள்ளது. அந்த எச்சரிக்கை இதுதான்:

http://www.cnn.com/2014/07/18/world/meast/iraq-isis-christians-threatened/index.html?hpt=hp_bn2

1. அங்கு இருக்கும் கிறித்தவர்கள் இஸ்லாம் சமயத்தைத் தழுவ வேண்டும். அதிகப்படியான வரியையும் ஷாரியா நீதிமன்றங்களுக்குக் கட்ட வேண்டும்.
2. இல்லாவிட்டால் மோசூல் நகரத்தைவிட்டு வெளியேறவேண்டும்.
3. மேற்கொண்ட இரண்டில் ஒன்றை, ஒரு நாளுக்குள் செய்யாவிட்டால் வாளுக்குப் பதில் சொல்லவேண்டும் (will have to answer the sword),
1. “வன்முறையே வரலாறாய்” என்ற வரலாற்றுக் கட்டுரையை — ஜனாப், நீங்கள் மருதளித்தீர்கள். இஸ்லாமியர்கள் கத்தி முனையில் மதமாற்றம் செய்யவில்லை என்றீர்கள்.
2. மேற்கண்ட செய்தி பற்றி உங்கள் கருத்து என்ன?//

இந்த செய்தி உண்மையாக இருந்தால் இது இஸ்லாமிய நடைமுறை அல்ல. ஏனெனில் இஸ்லாத்தில் கட்டாய மத மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. முகமது நபிக்கு பணிவிடை செய்த ஒரு யூத சிறுவன் 'நான் இஸ்லாத்துக்கு செல்லட்டுமா?' என்று தனது தந்தையிடம் கேட்கிறான். 'முகமது நபியின் மார்க்கத்தில் இணைந்து கொள்' என்று அந்த சிறுவனின் தந்தை அனுமதியளிக்கிறார். அதன் பிறகுதான் அந்த சிறுவன் இஸ்லாத்தை ஏற்கிறான். அந்த நேரம் நபிகள் நாயகம் அவர்கள் முழு அரபுலகத்துக்கும் சக்கரவர்த்தியாக இருந்த நேரம். அந்த சிறுவனைக் கூட நபி அவர்கள் கட்டாயப்படுத்தாமல் அவனது விருப்பத்துக்கு விடுகிறார்கள்.

ஈராக்கின் செய்தி ஸ்தாபனங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு உலக ஆதரவு பெருகி விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. எனவே உண்மை செய்தி வெளி வரும் வரை நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது. சிஎன்என் கூறும் செய்தி உண்மையானால் அந்த ஈராக்கிய போராளிகள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டனர் என்றுதான் அர்த்தம். ஈராக்கின் உண்மையான நிலவரம் என்ன என்பது இன்னும் நமக்கு அறிய வரவில்லை.

அடுத்து தற்போது இஸ்ரேல் கோழைத் தனமாக பாலஸ்தீன அப்பாவி சிவிலியன்களை இலக்காக்கி ஏவுகணைகளை வீசி வருகிறது. பெண்களும் குழந்தைகளும் இறந்த செய்தி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல கிறித்தவ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சிலி என்ற கிறித்தவ நாடு இஸ்ரேலுடனான தொடர்புகளை முற்றாக நிறுத்தி விட்டது. மும்பை ஹோட்டல்கள் அனைத்தும் இஸ்ரேலிய பொருள்களை பயன் படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளன. அரபு நாடுகளும் முற்றிலுமாக புறக்கணிக்கப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்ந்தால் இஸ்ரேலின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடையும் என்று இஸ்ரேலிய அமைச்சரே வருத்தப்பட்டு பேட்டி கொடுத்துள்ளார். எனவே கிறித்தவ நாடுகளின் கவனத்தை திசை திருப்ப ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் வீண் பழி சுமத்துவதாகவே நான் நினைக்கிறேன். பிபிசியிலோ, அல்ஜஜீராவிலோ இந்த செய்திகள் எதனையும் நான் பார்க்கவில்லை.

அதே நேரம் நமது நாட்டு செவிலியர்கள் கொடுத்த பேட்டியையும் நாம் புறம் தள்ள முடியாது. 'நாங்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதை தெரிந்து கொண்டு அந்த போராளிகள் நோன்பிருந்தாலும் எங்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்தனர். எங்களை சகோதரிகள் என்றே அழைத்தனர். எங்களை மிகவும் கண்ணியமாக நடத்தினர்' என்று கேரள செவிலியர்கள் நமது தொலைக் காட்சிக்கு கொடுத்த பேட்டியை நீங்கள் பார்க்கவில்லையா? இவ்வளவு பரந்த மனம் உடைய அந்த போராளிகள் இவ்வாறு தனது நாட்டு கிறித்தவர்களோடு நடப்பார்கள் என்று நம்மால் நம்ப முடிகிறதா? எனவே முன்பு போல் அவசரப்படாதீர்கள். சற்று பொறுமையாக இருப்போம். உண்மை இரண்டொரு நாளில் வெளி வரும். சிஎன்என் சொல்வது உண்மையாக இருந்தால் அந்த இயக்கத்தை எதிர்க்கும் முதல் ஆள் நானாகவே இருப்பேன்.

Friday, June 06, 2014

போகோ ஹராமும் நமது நாட்டு இந்துத்வாவாதிகளும்!



நைஜீரியாவில் சமீப காலமாக 'போகோ ஹராம்' என்ற ஒரு தீவிரவாத அமைப்பு பல கிறித்தவ சிறுமிகளை கடத்திக் கொண்டு சென்றுள்ளது. அவர்களை விலைக்கு விற்போம் என்று அதன் தலைவன் அறிவிக்கிறான். இடைக்கு இடையே வெறி வந்தவனாக 'அல்லாஹு அக்பர்' என்று வேறு கத்துகிறான். அட கிறுக்கனே! இதுதான் இஸ்லாமா? இஸ்லாம் இதைத்தான் உனக்கு போதித்ததா?

நபிகள் நாயகத்தின் இறக்கும் காலங்களில் அவரின் கவச உடை ஒரு யூதரிடம் அடமானமாக இருந்தது. நபித் தோழர் ஒருவர் 'பக்கத்து வீட்டு மாற்றுமத நண்பருக்கு இன்று சாப்பாடு கொடுத்து விட்டாயா?' என்று தினமும் தனது மனைவியிடம் கேட்பாராம். ஏனெனில் அவ்வாறு செய்யச் சொல்லி நபிகள் நாயகத்தின் கட்டளை இருக்கிறது. உக்கிரமமாக நடக்கும் போரில் கூட பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், மத குருமார்கள் போன்றவர்களை கொல்லக் கூடாது என்று குர்ஆன் தடை விதித்திருக்கிறது. நபிகள் நாயகத்தின் வாழ்நாள் முழுக்க மாற்று மதத்தவர்களிடம் மிக அன்பாகவே நடந்துள்ளனர். நபிகளையும் அவரது தோழர்களையும் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்தினால் கொல்ல வரும் போது தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போரை நபிகளார் தனது தோழர்களுக்கு கடமையாக்கினார். அதுவும் தற்காப்புக்காகவே!

ஆனால் இங்கு அப்பாவி சிறுமிகள் கடத்திச் செல்லப்படுகிறார்கள். அவர்களை கொல்வோம் என்றும் மத மாற்றம் செய்வோம் என்றும் சந்தையில் விற்று விடுவோம் என்றும் பகிரங்கமாக தொலைக்காட்சியில் அறிவிக்கின்றனர். கடைசியில் 'அல்லாஹூ அக்பர்' என்று தட்டுத் தடுமாறி சொல்லி முடிக்கின்றனர். அரபு வார்த்தைகள் கூட சரளமாக வரவில்லை.

சவுதி அரேபிய தலைமை முஃப்தி சொல்கிறார் 'போகோ ஹராம் என்ற அமைப்புக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை. இஸ்லாத்தை விட்டு என்றோ அவர்கள் வெளியாகி விட்டனர். அவர்களின் செயல்களை இஸ்லாத்தோடு சம்பந்தப்படுத்த வேண்டாம். முஸ்லிம்கள் இவர்களிடம் இருந்து விலகியிருங்கள்' என்று அறிக்கை விட்டுள்ளார்.

மேற்கத்திய உலகம் இன்று மிகப் பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கட்டுக் கடங்காமல் மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இது மிகப் பெரும் பிரச்னைகளை உண்டு பண்ணுகிறது. இஸ்ரேலும் இதனால் மிகவும் ஆடிப் போயுள்ளது. இது போன்ற இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்க அவர்களுக்கு உள்ள ஒரே வழி இஸ்லாத்தின் மேல் அந்த மக்களுக்கு வெறுப்பை உண்டாக்க வேண்டும். குர்ஆனை வைத்தும் நபிகளை வைத்தும் அந்த வெறுப்பை உண்டாக்க முடியாது. அதற்கு தக்க பதிலை முஸ்லிம்கள் கொடுத்து விடுவார்கள் என்று தெரியும். எனவே தான் மொஸாத்தின் துணை கொண்டு உலகம் முழுவதும் இஸ்லாமிய போர்வையில் தீவிரவாதத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

தாலிபான் - போகோ ஹராம் - இந்தியன் முஜாஹிதீன் - லஸ்கர் இ தொய்பா - அல் கைதா என்று உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய தீவிரவாத கும்பல்களையும் நன்கு ஆராய்ந்து பாருங்கள். அவர்கள் ஏதோ ஒரு வகையில் அமெரிக்காவிடமோ, இஸ்ரேலின் மொசாத்திடமோ மறைமுகமான தொடர்பு வைத்திருப்பதை அறியலாம். இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு இந்திய உளவுத் துறையால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை அமைப்பு என்று முன்னால் உச்ச மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியதை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். தாலிபான்களை ஆரம்பத்தில் உருவாக்கி உசாமா பின் லேடனை ஹீரோவாக்கியதும் அமெரிக்கா என்பதும் நம் அனைவருக்கும் தெரியும்.

இஸ்ரேலோடு ராஜீய தொடர்புகளை நமது நாடு சென்ற வாஜ்பாயி காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பிறகுதான் இந்தியாவில் இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதம் தலை தூக்கியதை நாமும் அறிவோம். அவர்கள் முதலில் வறுமையில் உழலும் இஸ்லாமிய இளைஞர்களை தேர்ந்தெடுப்பர். கள்ள முல்லாக்களைக் கொண்டு ஜிஹாதுக்கு தவறான அர்த்தங்களை கற்பித்து அந்த இளைஞர்களை மூளை சலவை செய்து தற்கொலை குண்டுதாரியாக மாற்றுவர். ஒரு பாகிஸ்தானிய நண்பன் தங்கள் நாட்டில் இது போன்று நடந்து பிறகு ராணுவத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறினான். மாலேகான் குண்டு வெடிப்பாகட்டும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பாகமட்டும், மெக்கா மசூதி குண்டு வெடிப்பாகட்டும் அனைத்தையும் கச்சிதமாக அவர்கள் நிறைவேற்றி பழியை முஸ்லிம்கள் மேல் போட்டனர். ஆனால் ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரி மூலமாக அவர்களின் சதி அனைத்தும் வெளி உலகுக்கு தெரிய வந்தது.

ஹேமந்த் கர்கரே மட்டும் அன்று இந்த உண்மைகளை கண்டு பிடிக்காமல் விட்டிருந்தால் இன்று நமது பாரத தேசம் ஒரு ஈராக்காகவோ, ஒரு லிபியாவாகவோ, அல்லது ஒரு நைஜீரியாவாகவோ என்றோ மாறி அழிவை சந்தித்துக் கொண்டிருந்திருக்கும். அதிலிருந்து இறைவன் காப்பாற்றினான். அதே போன்ற செயல்பாடுகள் தான் ஈராக், லிபியா, நைஜீரியா போன்ற நாடுகளில் மொசாத், அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளின் துணை கொண்டு நடத்தப்படுகிறது.

இந்தியாவில் மொசாத், மற்றும் இந்துத்வாவாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டது போல் போகோ ஹராமுக்கு பின்னால் யார் உள்ளனர் என்பதும் பின்னாளில் தெரிய வரும். தற்போதும் அதே பாணியை பின் பற்றி அமைதி பூங்காவாம் தமிழகத்தை ரண களமாக்க இந்துத்வாவாதிகள் தயாராகி வருகின்றனர். அதன் முதல் முயற்சியாகத்தான் ஆங்காங்கே முஸ்லிம்களை வெட்டுவதும், பள்ளிவாசலுக்குள் புகுந்து தகராறு வளர்ப்பதும் சில நாட்களாக தொடர்கதையாகி வருகிறது. நம்மைச் சுற்றியுள்ள இந்து நண்பர்களில் 80 சதவீதமான நபர்கள் மிகவும் நல்லவர்கள். இந்துத்வாவின் சூழ்ச்சிகளுக்கெல்லாம் அடி பணியாதவர்கள். 20 சதமான இந்துத்வாவாதிகளுக்காக நாம் 80 சதமான நபர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. எந்த முயற்சி நடந்தாலும் சட்டத்தை நாம் கையில் எடுக்காமல் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்துத்வாவாதிகள் செய்யும் அனைத்து காரியங்களையும் இணையம், மற்றும் பத்திரிக்கை வாயிலாகவும், தனி நபர்களை சந்தித்தும் அன்போடு விளக்க வேண்டும். இது போன்ற நமது முயற்சியால் அவர்களின் சூழ்ச்சிகளை மிக இலகுவாக நம்மால் முறியடிக்க முடியும். அதை விடுத்து 'வெட்டு, குத்து' என்று பதிவுகளை உசுப்பேற்றும் வகையில் அமைத்தால் அதனால் பாதிப்படைவது முஸ்லிம்கள் தான். ஏனெனில் அரசு உத்தியோகங்களில் இந்துத்வாவாதிகளின் ஆளுமை அதிகமாக உள்ளது. நாம் உணர்ச்சிவசப்பட்டு அவர்களை தாக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டமே! எனவே அதற்கு நாம் பலியாகிவிடக் கூடாது. ஒரு கட்டத்துக்கு மேல் எல்லை மீறி சென்றால் அப்போது யாரும் சொல்லாமலேயே இறைவன் நம்மை ஒன்று படுத்துவான்: நமது எதிரிகளை எப்படி கையாள்வது என்ற அறிவையும் நமக்கு தருவான். அது வரை நாம் அவரப்படாமல் சட்டத்தின் துணை கொண்டு அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்க முயற்சிப்போம்.

"ஏக இறைவனை மறுப்போரும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்"

குர்ஆன் 8:30

Thursday, January 23, 2014

பயங்கரவாதத்துக்கு எதிரான சவுதியின் பங்களிப்பு!



பயங்கரவாதத்துக்கு எதிரான சவுதியின் பங்களிப்பு!

சவுதி அரேபியா 'சர்வதேச பயங்கர வாத எதிர்ப்பு மையம்' என்றழைக்கப்படும் "International Center for Counterterrorism (ICCT)" அமைப்புக்கு 100 மில்லியன் டாலரை அன்பளிப்பாக அளித்துள்ளது. யுஎன்னுக்கு சொந்தமான இந்த அமைப்புக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததற்காக மன்னர் அப்துல்லாவுக்கு ஐநா வின் காரியதரசி பான் கி மூன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இதற்கு முன்பும் 10 மில்லியன் டாலரை அமெரிக்காவில் இயங்கும் இதே அமைப்புக்கு சவுதி அரேபியா அன்பளிப்பாக அளித்துள்ளது.

சென்ற செவ்வாய்க் கிழமை ஜெனீவால் நடந்த சந்திப்பில் பான் கி மூன் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசலிடம் கூறும் போது 'உலகில் அமைதியை கொண்டு வரவும் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை வேரறுக்கவும் மன்னர் அப்துல்லா ஆற்றும் பணி போற்றத் தக்கது. சிரியாவில் நடந்து வரும் மனித பேரழிவை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து அங்கு அமைதியை நிலை நாட்டுவது நம் அனைவரின் கடமை. அதற்கான முன் முயற்சியை ஐநா தொடர்ந்து எடுத்து வருகிறது' என்றார்.

தகவல் உதவி

அரப் நியூஸ்

இது போன்று ஐநாவுக்கு அனுப்பும் பணத்தை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விடும் கூத்துகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஏனெனில் ஐநாவை ஆள்வது அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் போன்ற கூட்டு களவாணிகளே! தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மூக்கை நுழைத்து இன்று வரை அங்கு ரத்தக் களரியை ஏற்படுத்திக் கொண்டிருப்பது மேற் சொன்ன நாடுகளே! அதிலும் சாமர்த்தியமாக உள்ளூர் மக்களிடம் மொசாத் மிக சாமர்த்தியமாக புகுந்து அவர்களை மூளை சலவை செய்து அந்நாட்டுக்கு எதிரான கலவரங்களை தூண்டி விடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

நம் நாட்டிலும் மும்பை குண்டு வெடிப்பிலிருந்து பல குண்டு வெடிப்புகளை தீர ஆராய்ந்தால் அதில் மொசாத்தின் கை இருப்பது தெரிய வரும். நமது நாட்டிலுள்ள இந்துத்வாவாதிகளின் செயல்பாடுகளுக்கு மூளையாக செயல்படுவதும் யூதர்களே! தங்கள் மேல் சந்தேகம் வராதவாறு மிக சாமர்த்தியமாக காய்களை நகர்த்துவதில் இஸ்ரேலியர் பலே கில்லாடிகள். எனவே தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பணம் எந்த வகையில் செலவழிக்கப்படுகிறது என்பதையும் சவுதி அரசு ஒரு சிறந்த கமிட்டியின் மூலம் கண்காணிக்க வேண்டும். பான் கி மூனின் அதிகாரமானது நமது நாட்டு ஜனாதிபதியின் அதிகாரத்தை ஒத்ததே! அமெரிக்க, இஸ்ரேல், பிரிட்டனின் உத்தரவு இல்லாமல் ஒரு காயையும் நகர்த்த முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Saturday, January 11, 2014

ஏரியல் ஷெரோன் மறைந்தார்!



ஏரியல் ஷெரோன்! தனது வாழ்நாளில் பல தவறுகளை அதிகார மமதையில் செய்தவர். பாலஸ்தீன மக்களுக்கு சொல்லொணா துயரத்தைக் கொடுத்தவர். யாசிர் அரஃபாத் இறப்பதற்கு காரணமாக்கப்படுபவர். பல வாக்குறுதிகளை மீறியவர். தான் எனற அகம்பாவத்தில் வாழ்ந்தவர். கடந்த எட்டு வருடங்களாக கோமாவில் கஷ்டப்பட்டு இன்று நிரந்தர உலகத்துக்கு சென்றுள்ளார். தான் செய்த தவறுகளை எண்ணி வருந்தும் நேரம் இனிதான் ஆரம்பம். மனிதன் என்னதான் ஆட்டம் போட்டாலும் அவனுக்கு சொந்தம் இந்த ஆறடி நிலமே!

ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா..... என்ற பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது.

2001 முதல் 2006 ஆம் ஆண்டுவரை அவர் இஸ்ரேலிய பிரதமராக பதவி வகித்தார். இஸ்ரேலிய இராணுவத்தின் ஆரம்பக்காலத்திலிருந்து அதன் தளபதிகளில் ஒருவராக இருந்த ஏரியல் ஷெரோன், மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டவர். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.



மனிதன் வாழும் காலங்களில் முடிந்த வரை நன்மையை செய்து விட்டு இறக்க வேண்டும். பல குற்றங்களை செய்து விட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனையை சுமந்து கொண்டு இன்று செல்கிறார். இவரைப் போன்ற தலைவர்கள் நமது நாட்டிலும் ஒன்றிரண்டு பேர் உள்ளனர். இவரது இறப்பையும் அவர் சென்று சேர்ந்த இடத்தையும் நினைத்தாவது நமது நாட்டு அரசியல்வாதிகள் திருந்த வேண்டும்.




Wednesday, January 08, 2014

ராஜபக்ஷேயும் நெதன்யாகுவும் தற்போது ஒன்றாக!




இலங்கையின் போர்க் குற்றவாளி மகிந்த ராஜபக்சவும், இஸ்ரேலின் போர்க் குற்றவாளி நெத்தன்யாகுவும், இன்று ஜெருசலேம் நகரில் சந்தித்து கை குலுக்கிக் கொண்டனர். இந்தப் படத்தையும், தகவலையும் தமிழ் ஊடகங்கள், இணையத் தளங்கள் இருட்டடிப்பு செய்திருந்தால் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. "ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு, இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்க வேண்டுமென்று" அறிவுரை கூறிய தமிழ் இன உணர்வாளர்கள் இப்போது எங்கே? ராஜபக்சவுடன் காஸ்ட்ரோ கைகோர்த்தார், அப்பாஸ் கை குலுக்கினார் என்று வாய் ஓயாமல் ஓலமிட்டவர்கள், இப்போது மௌனமாக இருக்கிறார்கள்.

ராஜபக்ச அரசு, புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கை என்ற பெயரில், வன்னியில் ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்தது. இஸ்ரேலில் அதே காலகட்டத்தில், நெத்தன்யாகு அரசு, ஹமாசுக்கு எதிரான போர் நடவடிக்கை என்ற பெயரில், காசா பிராந்தியத்தில் ஆயிரக் கணக்கான பாலஸ்தீன மக்களை படுகொலை செய்தது. ராஜபக்ச, நெத்தன்யாகு இருவர் பேரிலும் நிறைய போர்க்குற்றச் சாட்டுகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு, இலங்கையிலும், இஸ்ரேலிலும் சம காலத்தில் நடந்த போர்க் குற்றங்களை பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தனது நாட்டின் மீது போர்க்குற்றம் சாட்டுவது, இலங்கைக்கு எதிரான தேசத் துரோகம் என்றும், தனது படையினரில் ஒருவரைக் கூட சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். நெத்தன்யாகு அதை அப்படியே இஸ்ரேலிய நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றிக் கூறுகின்றார். இஸ்ரேலின் மீது போர்க்குற்றம் சாட்டுவது யூத எதிர்ப்பாகும் என்றும், தனது படையினரில் ஒருவரைக் கூட, சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பப் போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளார். 

--நன்றி கலையரசன்

இந்துத்வாவாதிகளும், இஸ்ரேலும், ராஜபக்ஷேயும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. வைகோவும் சுப்ரமணியம் சுவாமியும் இன்னும் கை குலுக்கிக் கொள்ளாமல் இருப்பதுதான் ஆச்சரியம். இன்னும் சில நாட்களில் அதுவும் நடக்கலாம்.

Saturday, November 03, 2012

நம்மாழவார் பாசுரங்களையும் சற்று திரும்பிப் பார்ப்போமே!

நம்மாழவார் பாசுரங்களையும் சற்று திரும்பிப் பார்ப்போமே!

அவரவர்தமதமது அறிவறிவகைவகை
அவரவரிறையவர் எனவடியடைவர்கள்
அவரவரிறையவர் குறைவிலரிறையவர்
அவரவர்விதிவழி அடையநின்றனரே

ஆஹா...என்ன அழகிய ரிதம. வார்த்தைகளை கட்டிய விதமும் அது மிக அழகிய பொருளை தரும் விதத்தையும் கண்டு ஆச்சரியப்படுகிறேன். நமது முன்னோர்கள் உயிர்களைப் பற்றியும் அவற்றின் செயல்களைப் பற்றியும் இறைவனின் ஆற்றலைப் பற்றியும் மிக தத்ரூபமாக பாடி விட்டு சென்றுள்ளனர்.

இந்த உலகில் ஒவ்வொரு உயிரியும் தங்களுக்கு இட்ட கட்டளையை மிக கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றன. ஒவ்வொரு உயிரிக்கும் அவைகளின் அறிவையும் ஆற்றலையும் வகை வகையாக வகுத்தளிக்கிறான் இறைவன். ஒவ்வொரு உயிரிக்கும் எந்த அளவு அறிவை வழங்க வேண்டுமோ அந்த அளவு குறைவின்றி அறிவையும் வழங்கி அவை உலகில் என்ன பணியை செய்ய வேண்டுமோ அனைத்தையும் வகுத்து பட்டியலிட்டு கொடுத்து விடுகிறான் இறைவன். இந்த உலகில் ஆடாத ஆட்டத்தை எல்லாம் ஆடி முடித்த அந்த உயிரி முடிவில் சேர வேண்டிய இடமான இறைவனின் திருவடிகளை அவர்களின் விதிப்படி சென்றடைவதாக இந்த பாடல் முடிகிறது.

ஒரு அற்ப கொசுவை எடுத்துக் கொள்வோம். அதற்கும் வாய், உடல், கால்கள், இறக்கைகள், ஜீரண உறுப்புகள் என்று அனைத்தையுமே அளித்து அவற்றிற்கான கட்டளைகளையும் இறைவன் அளிக்கிறான். உருவத்தில் பெரிய யானைக்கும் அதே போன்ற வாய், உடல், கால்கள், ஜீரண உறுப்புகள் என்று சகலத்தையும் தந்து அதற்குரிய அறிவையும் தந்து அதற்குரிய கட்டளைகளையும் தந்து விடுகிறான். இதில் படைப்புகளிலெல்லாம் சிறந்த படைப்பான மனிதனுக்கு இந்த உலகில் அனைத்து ஜீவன்களையும் அடக்கி ஆளும் வல்லமையைக் கொடுத்து நன்மை எது தீமை எது என்ற விளக்கத்தையும் கொடுத்து குறிப்பிட்ட காலம் வரை வாழச் செய்கிறான். ஆனால் இந்த மனிதன் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்ட உடல் பொருள் ஆவி உற்றார் உறவினர் என்ற அனைத்தையும் துச்சமாக மதித்து இறை நிராகரிப்பில் நிற்பதை பார்க்கிறோம்.

'முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?'
-குர்ஆன் 19:67


இங்கு நிராகரிப்பில் நாத்திகத்தில் இருக்கும் அந்த மனிதனைப் பார்த்துக் கேட்கிறான் இறைவன். தனது தாய் தந்தையர் ஒன்று கூடுவதற்கு முன்பு அந்த மனிதன் எங்கு இருந்திருப்பான். அவனது நிலை என்ன என்பதை அவன் சிந்திக்க வேண்டாமா? என்றும் கேட்கிறான் இறைவன்.

'மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான்.'
குர்ஆன் 36:77

'அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை நாம் படைததிருப்பதை மறந்து விட்டான். 'எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?' என்று கேட்கிறான்.
குர்ஆன் 36:78

'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் நன்கறிந்தவன்' என்று கூறுவீராக.
குர்ஆன் 36:79


ஒன்றுமில்லாத அற்ப விந்துவிலிருந்து ஒரு மனிதனை படைப்பதுதான் கஷ்டம். அதையே படைத்த இறைவனுக்கு இறந்து மக்கிப்போன எலும்புகளை திரும்பவும் உயிர் உண்டாக்குவது சிரமமில்லை என்பதை இந்த மனித குலத்துக்கு அறிவுறுத்துகிறான் இறைவன்.

கடவுள், சொர்க்கம், நரகம், கேள்வி கணக்குகள் அனைத்தும் பொய் என்று சொல்லும் பல நாத்திகர்களைப் பார்க்கிறோம். இன்று ஆத்திகனான நான் ஒரு நாத்திகனை விட அனைத்து சந்தோஷங்களையும் அனுபவித்து வருகிறேன். எனக்கு ஏதாவது துன்பங்கள் நேர்ந்தால் நேரே இறைவனிடம் சென்று அழுது பிரார்த்தித்து எனது பாரத்தை இறக்கி மனதை இலேசாக்கி விடுகிறேன். மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்று சகலமும் நிம்மதியாக வாழ்வு சென்று கொண்டிருக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே! நாததிகர்கள் சொல்வது ஒருக்கால் உணமையாகிப்போனால் அதனால் எனக்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. ஒருகால் ஆத்திகனான நான் சொல்வது உண்மையாகி விட்டால் அங்கு அந்த நாத்திகர்களின் நிலையை நாம் சற்று யோசித்து பார்க்க வேண்டும். அங்கு இறைவன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதிலை தரப் போகிறார்கள்?

எனவே உலகை நேசித்து உலக மக்களை நேசித்து உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் நேசித்து மனைவி மக்களை நேசித்து பிறந்த நாட்டையும் மொழியையும் நேசித்து உண்மையான ஆன்மீகத்தையும் நேசித்து இந்த பிறவிப் பலனை அடைய முயற்சிப்போம்.

------------------------------------------------------

உயிர் சம்பந்தமாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த கட்டுரையையும் அப்படியே தருகிறேன். படித்து பலனடையுங்கள். நேரம் கிடைக்கும் போது இதனை மொழி பெயர்த்து வெளியிடுகிறேன்.

A near-death experience occurs when quantum substances which form the soul leave the nervous system and enter the universe at large, according to a ground-breaking theory proposed by two eminent scientists.

According to this idea, consciousness is a programme for a quantum computer in the brain which can persist in the universe even after death, explaining the perceptions of those who have near-death experiences.

Dr Stuart Hameroff, Professor Emeritus at the Departments of Anesthesiology and Psychology and the Director of the Centre of Consciousness Studies at the University of Arizona, has advanced the quasi-religious theory, the Daily Mail reported.
It is based on a quantum theory of consciousness he and British physicist Sir Roger Penrose have developed which holds that the essence of our soul is contained inside structures called microtubules within brain cells.

They have argued that our experience of consciousness is the result of quantum gravity effects in these microtubules, a theory which they dubbed orchestrated objective reduction (Orch-OR).

Thus it is held that our souls are more than theinteraction of neurons in the brain. They are in fact constructed from the very fabric of the universe - and may have existed since the beginning of time.

The concept is similar to the Buddhist and Hindu belief that consciousness is an integral part of the universe – and indeed that it is really all there may be, a position similar to Western philosophical idealism, the paper said.

With these beliefs, Hameroff holds that in a near-death experience the microtubules lose their quantum state, but the information within them is not destroyed. Instead it merely leaves the body and returns to the cosmos.

"Let's say the heart stops beating, the blood stops flowing, the microtubules lose their quantum state. The quantum information within the microtubules is not destroyed, it can't be destroyed, it just distributes and dissipates to the universe at large," Hameroff told the Science Channel's Through the Wormhole documentary.
"If the patient is resuscitated, revived, this quantum information can go back into the microtubules and the patient says 'I had a near death experience'," Hameroff said.

"If they're not revived, and the patient dies, it's possible that this quantum information can exist outside the body, perhaps indefinitely, as a soul," Hameroff added.

http://www.indianexpress.com/news/neardeath-experiences-occur-when-soul-leaves-nervous-system/1024701/0







Friday, October 05, 2012

அமெரிக்கர் இஸ்ரேலியர் தகராறில் சுட்டுக் கொலை!



இஸ்ரேலில் நேற்று இலாட் ஹோட்டலில் தங்கிய அமெரிக்க இளைஞர் (23 வயது) ஹோட்டல் சிப்பந்தியோடு உலக அரசியல் சம்பந்தமான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 'உன்னால நான் கெட்டேன்: என்னால நீ கெட்டே' என்று இருவரும் பயங்கர வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முடிவில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அமெரிக்கர் சக ஹோட்டல் பணியாளரான இஸ்ரேலியரை (வயது 33) சுட்டுக் கொன்று விட்டார்.

தனது நாடான அமெரிக்காவில் இஸ்ரேலிய நாட்டு வியாபார முதலைகள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி விட்டதை தனது சண்டையில் குறிப்பிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவை நேசிக்கும் உண்மையான விசுவாசியாக இருப்பார் போலிருக்கிறது. வட்டியை தங்களின் முழு நேர தொழிலாக கொண்ட இஸ்ரேலியருக்கு அமெரிக்காவை அடிமையாக்குவது பெரிய காரியமல்லவே! உலகை அடிமையாக்க அமெரிக்கா திட்டம் தீட்டுவது ஒரு புறம் நடக்க அமெரிக்காவே மெல்ல மெல்ல இஸ்ரேலியர் வசம் சென்று கொண்டிருக்கிறது. அதன் கோபத்தின் வெளிப்பாடே இந்த கொலை.

ஹோட்டல் சிப்பந்தியை கொன்ற அமெரிக்கர் பின்னர் சமையலறைக்கு சென்று தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கையில் அங்கு வந்த இஸ்ரேலிய போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர். பல அமெரிக்கர்கள் தங்களின் இந்த நிலைக்கு இஸ்ரேலே காரணம் எனபதை நினைத்து மிவும் கோபத்தில் இருப்பதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.

நம் நாட்டில் வட்டியை மூலதனமாகக் கொண்ட பனியாக்கள் எவ்வாறு சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்களோ அதே நிலைதான் இன்று அமெரிக்காவில் இஸ்ரேலியர் வாங்கிக் குவிக்கும் சொத்துக்களும்.

பாம்புக்கு பால் வார்த்த அமெரிக்கா இன்று அதன் பலனை அனுபவிக்கிறது. நாமும் பனியாக்களுக்கும் வட நாட்டு சேட்டுகளுக்கும் பால் வார்த்து கொண்டிருக்கிறோம். எப்போது கடிக்கப் போகிறதோ?


இஸ்ரேலின் உண்மையான முகம் என்ன என்பதை ஒரு யூதரே அழகாக விளக்குவதை சகோ கலையரசனின் பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

______________________________________________________________

வருங்கால அமெரிக்கா எப்படி இருக்கும்?




--------------------------------------------------------------

http://englishthrutamil.blogspot.com/2012/10/blog-post_5.html

டிஸ்கி: எளிய வழியில் ஆங்கிலம் கற்க இந்த பதிவை சகோதர சகோதரிகள் பயன்படுத்திக் கொள்ளவும்.


Friday, July 20, 2012

இந்தியாவுக்கு இஸ்லாமிஸ்டுகளால் ஆபத்தாம்!- அமெரிக்கா

இந்தியாவுக்கு இஸ்லாமிஸ்டுகளால் ஆபத்தாம்!- அமெரிக்கா

நம்ம பெரியண்ணன் சொல்லிட்டாக! இந்தியாவில் சமீப காலமாக பெரும் மோதல்களோ இனப் பிரச்னைகளோ எழவில்லை. இதனால் உடன் அமெரிக்காவின் மூக்கில் வியர்க்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவில் இல்லாத பல அமைப்புகளின் பெயர் பட்டியலை தனது மக்களுக்கு கொடுத்துள்ளது அமெரிக்கா. தனது நாட்டு மக்கள் இந்தியாவுக்கு சென்றால் கவனமாக இருக்க வேண்டும் என்ற செய்தியை கசிய விட்டுள்ளது. இனி சிஐஏ யின் ஏஜண்டுகள் சிலர் சில வறிய முஸ்லிம்களை வாடகைக்கு அமர்த்துவார்கள். இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு இத்தனை லட்சம் சென்று விடும் என்ற ஆசையும் காட்டப்படும். அமெரிக்கா சொல்லிய அனைத்து இடங்களிலும் கச்சிதமாக பல நாச வேலைகளை சிஐஏ யின் ஏஜண்டுகள் மொசாத்தின் எஜண்டுகள் உள்ளூர் ஆட்கள் உதவியோடு செய்து முடிப்பார்கள். குண்டு வெடித்தவுடன் ஏதாவது ஒரு ப்ரௌசிங் சென்டரில் சிஐஏ யின் உளவாளி 'நான்தான் இந்தியன் முஜாஹிதீன். நான் தான் குண்டு வைத்தேன்' என்று கூறுவான். நம் ஊடகங்களும் கண் காது மூக்கு வைத்து செய்திகளை இன்னும் சுவாரஸ்யமாக மக்களுக்கு தரும். அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு 20 வருடம் சிறை வாசத்துக்கு பிறகு குற்றம் நிரூபணம் ஆகவில்லை என்ற பழைய பல்லவியை பாடி விடுதலை செய்யப்படுவார்கள். இதற்குள் பல மில்லியன் ஆயுத வியாபாரமும் அமெரிக்காவால் நடத்தப்பட்டு விடும்.

அமெரிக்கா இவ்வாறு மற்ற நாடுகளின் ரத்தத்தில் தனது நாட்டு மக்களை சுபிட்சமாக வைத்திருப்பதற்கு பதில் உலக நாடுகள் அனைத்திலும் வருடம் இவ்வளவு கொடுத்து விடுங்கள் என்று பிச்சை எடுக்கலாம். மனித உயிர்களாவது மிஞ்சும். ஒபாமா நடவடிக்கை எடுப்பாரா?

சவுதி அரேபியா இதைத்தான் செய்து வருகிறது. வருடா வருடம் இத்தனை மில்லியன்கள் ஏதோ ஒரு காரணத்தை வைத்து அமெரிக்காவுக்கு தந்து விடுவதால் வாலை ஆட்டிக் கொண்டு சவுதி உள் நாட்டு பிரச்னைகள் எதிலும் தலையிடுவதில்லை. இதை ஏன் மற்ற நாடுகள் பின்பற்றக் கூடாது? :-)

-------------------------------------------------------

U.S. Cautions Citizens Against Overseas Travel, Including India
Thursday, 19 July 2012, 02:01 Hrs

Washington: The United States has issued a fresh travel advisory on overseas travel to its citizens, including India which "continues to experience terrorist and insurgent activities."

"India continues to experience terrorist and insurgent activities which may affect US citizens directly or indirectly," the state department said in its new worldwide travel alert for its citizens.

"Anti-Western terrorist groups, some on the US government's list of designated Foreign Terrorist Organizations, are active in India, including Islamist extremist groups such as Harkat-ul-Jihad-i-Islami, Harakat ul-Mujahidin, Indian Mujahideen, Jaish-e-Mohammed, and Lashkar-e Taiba," it said.

"Terrorists have targeted public places in India frequented by Westerners, including luxury and other hotels, trains, train stations, markets, cinemas, mosques, and restaurants in large urban areas," the state department said.

US citizens are reminded to maintain a high level of vigilance and to take appropriate steps to increase their security awareness, the state department said, adding that it remains concerned about the continued threat of terrorist attacks, demonstrations, and other violent actions against US citizens and interests overseas.

"Current information suggests that al-Qaida, its affiliated organisations, and other terrorist organisations continue to plan terrorist attacks against US interests in multiple regions, including Europe, Asia, Africa, and the Middle East," the advisory said.

http://www.siliconindia.com/news/usindians/US-Cautions-Citizens-Against-Overseas-Travel-Including-India-nid-123924-cid-49.html?utm_campaign=Newsletter&utm_medium=Email&utm_source=l1

-------------------------------------------------------

துபாய்: துபாயில், தமிழக மீனவர்களை எச்சரிக்காமல் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, ஐக்கிய அரபு எமிரேட் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். பக்ரைனில் முகாமிட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பலுக்கு, எரிபொருள் சப்ளை செய்ய, "ரபானாக்' என்ற அமெரிக்க கப்பல், துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த எண்ணெய் கப்பலை நோக்கி வந்த படகு மீது, அமெரிக்க மாலுமிகள் 16ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ராமநாதபுரம் மாவட்டம், தோப்பு வலசை களிமண்குண்டைச் சேர்ந்த சேகர் பலியானார். ராமேஸ்வரத்தில் உள்ள கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையைச் சேர்ந்த முத்து கண்ணன், முருகன் ஆகியோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து, ஐக்கிய அரபு எமிரேட் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயிலிருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள ஜபெல் அலி என்ற இடத்தில் தான் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. நாங்கள் விடுத்த எச்சரிக்கையை மீறி, படகு வந்ததால் தான் சுட்டோம்' என, அமெரிக்க மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர்களை சந்தித்துப் பேசிய ஐக்கிய அரபு எமிரேட்டின் போலீஸ் உயர் அதிகாரி தாகி கல்பான் தமீம் குறிப்பிடுகையில், "அமெரிக்க கப்பல் மாலுமிகள் எச்சரிக்கை ஏதும் விடவில்லை. அமெரிக்க கப்பலை பார்த்து, படகில் இருந்தவர்கள் தான் வேறு திசை நோக்கி சென்றுள்ளனர். இருப்பினும், அமெரிக்க கப்பல் மாலுமிகள் திடீரென சுட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் உண்மையை சொல்வதாக நம்புகிறேன்' என்றார்.
தின மலர்
20-07-2012

இங்கும் அமெரிக்க படையினர் வேண்டுமென்றே ஒரு தமிழனை சுட்டு கொலை செய்துள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில் பதட்டத்தை நிறுவி இன்னும் போர்த் தளவாடங்களை விற்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் முக்கிய குறிக்கோள்.

___________________________________________________________

வாஷிங்டன்: அமெரிக்காவில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த போது மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான் இதில் 14பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் பெரும் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் சிக்கி இறந்து போயினர் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் கொலரோடாவின் டென்வர் அரோரா பகுதியில் ஒரு திரையரங்கில் பேட்மேன் ( தி டார்க் நைட் ரைடர்ஸ் ) என்ற திரைப்படம் முதல் காட்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இந்நேரத்தில் முகத்திரை மூடி வந்த மர்ம மனிதன் கையில் துப்பாக்கியுடன் வந்தான். சினிமா பார்த்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். அனைவரும் அலறியபடி தப்பி ஓடினர். இதில் துப்பாக்கி குண்டுகளுக்கு 14 பேர் இரையாயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம மனிதருக்கு 20 வயது இருக்கும் என தெரிகிறது. இவனை போலீசார் கைது செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது. பயங்கரவாதியாக இருக்குமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர். துபபாக்கி சூடு நடத்தியதன் நோக்கம் இன்னும் போலீசாரால் அறிய முடியவில்லை. விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் 10 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காயமுற்றவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபடி இருக்கின்றன. பலரும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. தியேட்டர் வளாகம் முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


ஏன் சுட்டான் ? எப்படி சுட்டான் ? : இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில்: அதிகாலை 12. 25 மணியளவில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது அரங்கமே முழு இருட்டாக இருந்தது. இந்நேரத்தில் பலத்த சப்தம் கேட்டது. அரங்கம் முழுவதும் ஒரே புகை மண்டலமானது. இந்த அதிர்ச்சியில் உறைந்த சில நிமிடத்திலேயே துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் கிளம்பின. அலறியபடி எங்கும் யாரும் தப்ப முடியவில்லை. பலரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தனர்.
-தின மலர்

20-07-2012

Sunday, June 24, 2012

முஹம்மது முர்ஷி எகிப்தில் வெற்றி பெற்றார்!



இஸ்ரேல்: ஐயையோ! என்னய்யா இது! எகிப்துல இஹ்வான்கள் ஆட்சியைப் புடிச்சுட்டானுங்க!

யுஎஸ்: மவனே! இனி வாலை ஆட்டுனே! ஒட்ட நறுக்கிபுடுவானுங்க! அவ்வளவுதான் நான் சொல்லுவேன். இனி பார்த்து நடந்துக்க!

--------------------------------



பல நாள் இழுபறிக்குப் பிறகு இன்று 'முஸ்லிம் பிரதர்ஹூட்' ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்து காட்டிய குள்ளநரித்தனங்களையும் காலடியில் போட்டு மிதித்து இன்று மிகப் பெரிய வெற்றியை முர்ஷி பெற்றுள்ளார்.



60 ஆண்டுகளாக ராணுவ ஆட்சியாளர்களையே பார்த்து வந்த எகிப்திய மக்கள் இன்று தூய இஸ்லாமிய ஆட்சியை உளமாற வரவேற்றிருக்கிறார்கள். இனி சன்னம் சன்னமாக குர்ஆனிய ஆட்சி முறை அமுல்படுத்தப்படும். மதுக்களும் சிகப்பு விளக்கு பகுதிகளும் இனி தொடர்வது எகிப்தில் கேள்விக் குறியே! அரை குறை ஆடையோடு சன் பாத் எடுக்கும் கலாசாரத்துக்கும் இனி மூடுவிழா நடத்தப்படலாம். இதனால் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையலாம். இவர்களினால் ஏற்படும் இழப்பை அரசு வேறு மார்க்கத்தில் இனி ஈட்ட வேண்டி வரலாம்.



தஹ்ரீர் சதுக்கத்தில் 'இஹ்வான்களின்' வெற்றிச் செய்தியை கேட்டமாத்திரத்தில் இளைஞர்கள் உற்சாக கரகோசம் எழுப்பியும் நடனமாடியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மோர்சியின் செய்தி தொடர்பாளர் அப்துல் அதி கூறும்போது 'விவரிக்க வார்த்தைகள் இல்லை. அந்த அளவு சந்தோஷத்தில் இருக்கிறோம். சகோதரர்கள், தியாகிகள் செய்த உயிர் தியாகம் எங்களுக்கு இந்த வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.' என்கிறார்.




எகிப்திய தேர்தல் கமிஷன் 51.7 சதவீத வாக்குகளை 'முஸ்லிம் பிரதர் ஹூட்' கைப்பற்றியுள்ளதாகவும் முபாரக் ஆதரவு பெற்ற கட்சி 48.3 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இஸ்லாமிய கட்சி ஆட்சிக்கு வருவதை ராணுவ ஆட்சியாளர்கள் தடுக்க எவ்வளவோ முயற்சித்தனர். இதற்கு அமெரிக்காவின் ஆதரவு வேறு இருந்தது. இருந்தும் மக்கள் சக்திக்கு முன்னால் மக்களின் எண்ண ஓட்டத்துக்கு முன்னால் வல்லரசுகளெல்லாம் காணாமல் போய் விட்டன. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வெற்றியை விரும்பாத அமெரிக்கா இனி ராணுவத்தோடு சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க தன்னாலான முயற்சிகளை இஸ்ரேலின் துணையோடு செய்ய முயற்சிக்கும். ஆனால் ஆப்கானிஸ்தானத்தில் தாலிபான்களை கவிழ்த்தன் பலனை அமெரிக்கா இன்று வரை அனுபவித்து வருகிறது. மற்றொரு தவறை செய்து வம்பில் மாட்டிக் கொள்ளாது என்றே நம்புவோம்.

அதிபர் முர்ஷிக்கு வயது 60 ஆகிறது. அமெரிக்காவில் படித்த இன்ஜினீயர் இவர். முபாரக்கினால் சிறை வைக்கப் பட்டவர். 'சர்வதேச சமூகத்துக்கு என்றும் மதிப்பளிப்பேன். 1979 ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலுடனான உறவு தொடரும். ராணுவத்தோடு உள்ள முறுகல் நிலை கட்டுக்குள் கொண்டு வரப்படும். பல சவால்களை இன்று நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.' என்கிறார்.

சவுதி அரேபியாவை முன் மாதிரியாகக் கொண்டு குர்ஆனின் அடிப்படையில் எகிப்திய புதிய அரசு உண்மையான இஸ்லாத்தை கையிலெடுத்து சிறுபான்மை மக்களான கிறித்தவர்களுக்கும் உரிய பங்கினை அளித்து வெற்றி நடை போட வாழ்த்துவோம்.

Saturday, December 17, 2011

கும்பகோணததில் ஆரிய திராவிடம்....

ஒரு வேலையாக கும்பகோணம் சென்று செல்வம் தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வந்த வேலை சீக்கிரமே முடிந்தது. சரி ஊருக்கு செல்லலாம் என்று பஸ் ஏற வந்தால் 'நித்யஸ்ரீ பாடுகிறார்' என்ற ஒரு போர்டை பார்த்தேன். உள்ளே கச்சேரியும் ஆரம்பமாகி இருந்தது. 'கண்ணோடு காண்பதெல்லாம்....' 'சௌக்கியமா?...' பாடல்களை எல்லாம் கேட்டதால் நாமும் சென்று கேட்போமே என்று அரங்கத்தினுள் சென்றேன். இலவசம் என்று நினைத்தேன். ஆனால் 100 ரூபாய் டிக்கெட்டை என்னிடம் கட்டி விட்டார்கள். வேறு வழி இல்லாமல் உள்ளே சென்று உட்கார்ந்தேன்.



நித்யஸ்ரீ தெலுங்கு கீர்த்தனைகள் சிலவற்றை மிகவும் சுவாரஸ்யமாக பாடிக் கொண்டிருந்தார். அந்த அரங்கத்தில் இருந்த அனைவருமே ரொம்பவும் ரகித்து பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர். 'தலையை ஆட்டும் புரியாத கூட்டம்...' என்ற வைரமுத்துவின் வரிகள்தான் எனக்கு ஞாபகம் வந்தது. அங்கு அமர்ந்திருந்த ரசிக கூட்டததை ஒரு தரம் நோட்டம் விட்டேன். எங்கும் மடிசார் மாமிகள் குடும்ப சகிதம் வந்திருந்தனர். அரஙகு நிரம்பி இருந்தது. அந்த கூட்டத்தில் நான் ஒருவன் மட்டுமே முஸ்லிம் என்று நினைக்கிறேன். போய் விடலாமா என்று எழுந்தபோது 100 ரூபாய் ஞாபகம் வரவே இரண்டு மூன்று பாடல்களை கேட்டு விட்டு செல்வோம் என்று திரும்பவும் உட்கார்ந்து விட்டேன். பிராமண குடும்பங்களை தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்பதையும் பிறகு தெரிந்து கொண்டேன்.

அங்கு நான் அமர்ந்திருந்த சூழல் என்னை அது தமிழகம் என்றே நினைக்கச் சொல்லவில்லை. அந்த அளவு உடை நிறம் பேச்சு ஜாடை என்று அனைத்திலுமே வேறுபட்ட கோணத்தையே பார்த்தேன். அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சிலரை பார்ப்பதற்கும் ஒட்டு மொத்தமாக சில ஆயிரம் பேர்களை ஓரிடத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

ஏன் இத்தனை காலம் ஆகியும் ஆரிய திராவிட பிரச்னை ஓயவில்லை என்பதை அங்கு கண்டு கொண்டேன். ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து தமிழகம் வந்து 2000 வருடங்களுக்கு மேலாகியும் உள்ளூர் மக்களோடு திருமண உறவு வைத்துக் கொள்ளாததனால் ஒரே மதத்தைப் பின் பற்றும் இவர்களிடையே இன்று வரை பிளவு இருந்தே வருகிறது. அன்னிய மதம் என்று இவர்களால் சொல்லப்படும் இஸ்லாமியர்கள் இந்த திராவிடர்களோடு பெண் கொடுத்து பெண் எடுத்து இந்த மண்ணின் மைந்தர்களாக மாறி விட்டனர். இந்த தமிழகம் இஸ்லாத்தையும் தனது மார்க்கமாக சுவீகரித்துக் கொண்டது. இன்று வரை யாரும் இஸ்லாமியர்களைப் பார்த்து'நீ அந்நிய தேசத்துக் காரன்' என்று சொன்னதில்லை. இநதுத்வாவாதிகள் கூட 'முஸ்லிம்களை தாய் மதம் திரும்ப வைக்க வேண்டும்' என்ற கோரிக்கையைத்தான் வைக்கிறார்கள். இவர்களும் முஸ்லிம்களை அந்நியர்கள் என்று பார்ப்பதில்லை.

ஆனால் ஆரியர்களை 3000 வருடங்கள் கடந்த பின்பும் ஒரே மதத்தைப் பின்பற்றியும், ஒரே மொழியையும் பேசும் திராவிடர்கள் இன்றும் இவர்களை அந்நியப் படுத்தியே பேசுகின்றனர். இதற்கு ஆரியர்கள் தங்களை மேன்மக்களாக கருதியதும், திராவிடர்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியதும் காரணமாக இருக்கலாம்.

என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை செயயும் எகிப்தியரை சில நேரங்களில் நோட்டம் விடுவது உண்டு. தாங்களே சிறந்த அறிவாளி என்றும் மிகச் சிறந்த நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் என்றும் அவ்வப்போது சொல்லிக் கொள்வான். இவர்கள் இஸரவேலர்களின் வழிவந்தவர்கள்.

'இஸராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும் உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைபடுத்தியிருந்ததையும் எணணிப் பாருங்கள்.'
-குர்ஆன் 2:47

இஸ்ரவேலர்களுக்கு வழங்கிய ஆட்சி, அதிகாரம், பொருள் வசதி போன்ற சிறப்புகளையே இறைவன் இங்கு குறிப்பிடுகிறான். ஆனால் இவர்களோ பிறப்பிலேயே தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று பின்னாளில் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள. இந்த எண்ணம் இன்றைய நம் நாட்டு பிராமணர்களிடமும் இருந்து வருவதை இன்றும் நாம் காணலாம். எகிப்தியர்களின் நடை உடை பாவனை அனைத்தும் நம் நாட்டு பிராமணர்களை ஒத்தே இருக்கும். யூதர்களின் ஒரு பிரிவே ஆரியர்கள் என்றும் அதில் ஒரு பிரிவே நம் நாட்டு பிராமணர்கள என்றும் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இன்று வரை இந்துத்வாவாதிகள் இஸ்ரேலோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதையும் நான் இங்கு பார்க்கலாம்.

ஆரியர்களின் வருகைக்கு முன்பு நமது தமிழகத்தில் ஏக இறைவனையே வணங்கி வந்திருக்கின்றனர். சில கிராமங்களில் 'ஒப்பிலியப்பன்' என்று இறைவனை அழைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. ஒப்புவமை இல்லாதவன் இறைவன் என்ற சொல்லே ஒப்பிலியப்பனாக மருவியுள்ளது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் மந்திரமும் ஏக இறைவனை பறைசாற்றுகிறது. சிவன் என்பதும் ஓரிறையே குறிப்பதாகவும் ஆரியர் வருகைக்கு பிறகே சிவனுக்கு உருவமும் சிவலிங்கமும் உண்டானதாக படிக்கிறோம். உருவம், அருவம், அருவுருவம் என்று நம் முன்னோர்கள் இறைவனை பலவாறாக உருவகப்படுத்தியிருந்திருக்கின்றனர்.

அடுத்து நெருப்பை கடவுளாக வணங்கும் பழக்கமும் தமிழர்களாகிய நமது முன்னோர்களிடம் இல்லை. ரிக் வேதத்தில் 'அக்னி' என்ற கடவுள் பல இடங்களில் கூறப்படுகிறது. இப்படி நெருப்பை வணங்குபவர்கள் ஈரானிலும், ஆர்மீனியாவிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் இருந்ததாக அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன. ஆரியர்களின் பூர்வீகம் இந்த நாடுகளாக இருந்திருக்கலாம்.




ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கஜகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற் கத்திய நாகரிகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய கால கட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம். பி. பி. சி. தொலைக்காட்சியில் தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரிகம் கிரேக்க நாகரிகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம். இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார். இந்த நகர கண்டு பிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார். இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை ‘விசிட்டிங்’ பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



பிராமண குடும்பத்தோடு எனக்கு சின்ன வயதிலிருந்தே தொடர்பு உண்டு. எனது தாத்தாவின் நண்பர் ஓய்வு பெற்ற பிராமண ஆசிரியர். எனக்கு டியுசன் எடுக்க அந்த ஆசிரியர் ஒத்துக் கொண்டார். தினமும் 5 மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை அந்த ஆசிரியரின் வீட்டில்தான் எனக்கு பாடம். இது கிட்ட்ததட்ட நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு படிக்கும் வரை தொடர்ந்தது. அந்த ஆசிரியரின் மனைவிக்கு மூன்று பெண் குழந்தைகள். ஆண் குழந்தை கிடையாது. எனவே என்னிடம் அவர் மிகவும் பாசமாக நடந்து கொள்வார். வீட்டில் செய்யும் பலகாரங்கள் எல்லாம் எனக்கும் வந்து விடும். எனது தாத்தா கொடுக்கும் டியூஷன் பீஸை ஓசியில் பலகாரங்கள் தின்றே சரி கட்டியிருப்பேன் என்று நினைக்கிறேன்.

நவராத்திரி அன்று அவர்கள் வீட்டில் கொலு வைப்பார்கள். என் வயதையொத்த எனது ஆசிரியரின் இளைய மகளும் நானும் சேர்ந்து கொலு பொம்மைகளை எல்லாம் துடைத்து அழகாக அடுக்கி வைப்போம். கொலுவுக்கு வரும் அவரது உறவினர்கள் என்னிடம் 'அம்பி உன் பேர் என்னப்பா?' என்று கேட்பர். இஸ்லாமிய பெயரை கேட்டவுடன் முகத்தை சுளித்துக் கொண்டு போன ஒரு சில மாமிகளும் உண்டு. கொலுவில் உள்ள ஒரு பொம்மை அழகாக தோன்றவே ஒன்றை ஆசிரியரிடம் கேட்டேன். அவரும் தந்தார். எனது வீட்டிற்கு சென்று எனது தாயாரிடம் பெருமையாக அதைக் காண்பித்தேன். உடன் எனது தாயின் முகம் சிவந்தது. 'இது போன்ற பொம்மைகளை எல்லாம் நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களிடமே திரும்ப கொடுத்து விடு' என்று கண்டிப்புடன் கூறி விட்டார். அந்த வயதில் 'ஏன் இவ்வளவு கோபப்பட்டார்' என்ற விபரம் எனக்கு அப்போது விளங்கவில்லை.

சரி..இனி அரங்குக்கு வருவோம். புரியாத பாஷையில் பாடிக் கொண்டிருக்கிறாரே என்று எழும்ப எத்தணித்தபோது தமிழ் பாடல்களை பாடத் துவங்கினார் நித்யஸ்ரீ. திரும்பவும் உட்கார்ந்தேன். சில பாடல்களை கேட்டு விட்டு நேரமானதால் அரங்கை விட்டு திரும்பவும் தமிழ் நாட்டுக்குள் நுழைந்தேன். :-)




Monday, July 11, 2011

யூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்!

இஸ்ரேலின் உளவுப் பிரிவு மொசாத் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறது. அதற்கு என்னென்ன முயற்ச்சிகளை எடுக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது ஒரு பழைய நிகழ்ச்சி!

1970 வாக்கில் பாலஸ்தீனர்களின் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. இஸ்ரேலியர்கள் தாக்குபிடிக்க முடியுமா என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜெர்மனியில் நடந்த தாக்குதல் பாலஸ்தீனர்கள் தங்களது நாட்டுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவே இஸ்ரேலியர்கள் எண்ணினர். இதை இப்படியே வளர விட்டால் ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்ற நோக்கில் பாலஸ்தீனர்களின் முன்னேற்றத்துக்கு அவர்களின் போராட்டத்துக்கு ஒரு தடை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்க தொடங்கியது இஸ்ரேலிய அமைச்சரவை.




அப்போதய இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் மொஸாத்தின் தலைவர் ஸிவி ஸமீரை அமைச்சரவை கூட்டத்துக்கு அழைத்திருந்தார். ஜெர்மனியின் தாக்குதலால் அனைவரின் முகத்திலும் ஒரு இறுக்கம் தென்பட்டது. 'பதிலடியாக நாம் என்ன செய்யப் போகிறோம்?' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர். 'கடவுளின் கோபம்' என்ற ஒற்றை வரியில் பதிலளித்தார் மொசாத்தின் தலைவர் ஸிவி ஸமீர்.

அது என்ன 'கடவுளின் கோபம்?' என்று பலரும் அவரிடம் கேட்டனர். 'பல லட்சம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களை பாலஸ்தீன போராளிகள் பிடித்துச் சென்றது நமக்கு தலைக்குனிவையும், அவர்களுக்கு மேலும் தைரியத்தையும் உண்டாக்கியுள்ளது. எனவே போராளிகளின் நம்பிக்கையை தகர்க்கும் விதமாக பாலஸ்தீன இயக்க தலைவர்களையும் முக்கிய வீரர்களையும் தீர்த்துக் கட்ட போடப்பட்ட திட்டத்தின் பெயர்தான் 'கடவுளின் கோபம்' என்ற ஆபரேஷன்' என்றார் ஸிவி ஸமீர்.



படுகொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலை அனைவரின் பார்வைக்கும் வைத்தார் ஸிவி ஸமீர். ஸிவி ஸமீர் கொடுத்த புகைப் படத்தில் 11 பேர்களை மட்டும் இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அந்த 11 பேரும் ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்கள் 11 பேர் இறக்க காரணமானவர்கள். 11க்கு 11 என்ற ரீதியில் கணக்கு தீர்க்க திட்டம் தயாரானது. ஆனால் அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள்? எப்படி தீர்த்துக் கட்டப் பொகிறீர்கள்? அதற்கு எத்தனை காலம் தேவைப்படும்? என்றார் பிரதமர் கோல்டா மேயர்.

'அவர்கள் எவ்வளவு காலத்திற்குள் படுகொலை செய்யப்படுவார்கள் என்ற உத்திரவாதத்தை என்னால் தர முடியாது. ஆனால் அவர்கள் கண்டிப்பாக கொல்லப் படுவார்கள்' என்றார் ஸிவி ஸமீர். அவர் சொன்னது போல் இந்த திட்டத்தை செயல்படுத்த மொஸாத்துக்கு 20 வருடங்கள் பிடித்தது.

இவர்களின் திட்டத்தில் முதலில் பழி வாங்கப் பட இருந்தவர் கிறித்தவரான வாதி ஹத்தாத்.

யார் இந்த வாதி ஹத்தாத்?

1927 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனில் ஷஃபாத் என்னும் கிராமத்தில் பிறந்தார். மிகுந்த ஆச்சாரமிக்க கிரேக்க ஆர்த்தோடக்ஸ் கிறித்தவ குடும்பத்தில் பிறந்த வாதி ஹத்தாத் சிறு வயது முதலே மத சடங்குகளில் ஆர்வமுடையவராகவும் ஞாயிறு தோறும் தேவாலயத்துக்கு செல்பவராகவும் இருந்தார். ஷஃபாத் கிராமத்தைப் பொறுத்த வரையில் கிறித்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தனர். அமைதியான அவர்களின் வாழ்க்கையில் அரக்கர்களாக வந்தனர் இஸ்ரேலியர்கள்.

1948 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு இஸ்ரேலிய போரில் பல பாலஸ்தீன கிராமங்கள் அழிக்கப்பட்டன. அதற்கு ஷஃபாத் கிராமமும் விதிவிலக்கல்ல. ஒரே இரவில் தங்களுடைய வீடுகளை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். சொந்த வீட்டையும் சொந்த நாட்டையும் விட்டு அகதிகளாக லெபனானில் தஞ்சம் புகந்ததில் ஹத்தாதின் குடும்பமும் ஒன்று.

லெபனானின் தலைநகரிலிருந்த பெய்ரூத் அமெரிக்கன் யுனிவர்சிடியில் பல மருத்துவப் பிரிவில் தேர்ச்சி பெற்று மருத்துவரானார். இது குறித்து பிந்தைய நாட்களில் ஹத்தாத் குறிப்பிடும்போது 'அகதி என்ற பட்டத்துடனே மருத்துவர் என்ற பட்டமும் கிடைத்தது என்னுடைய பாக்கியம் என்றே கருதுகிறேன்' என்றார். மருத்துவ படிப்பை முடித்து விட்டு தனது கல்லூரி தோழரான டாக்டர் ஹபாஸூடன் சேர்ந்து ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஒரு கிளினிக் ஆரம்பித்தார். 1956 ஆம் ஆண்டு ஐ.நா வின் பாலஸ்தீனர்களின் புனர்வாழ்வுக்கான அமைப்புடன் இணைந்து அகதிகளுக்கான சேவையில் ஈடுபட்டார். அதே வேளையில் பாலஸ்தீன மீட்புக்காக 'அரபு தேசிய இயக்கம்' என்ற அமைப்பை தனது தோழரோடு சேர்ந்து ஆரம்பித்தார். பின்னாலில் இந்த இயக்கம் popular front for the liberation of palastine (pflp) என்ற பெயராக மாற்றப்பட்டது. 1967 லிருந்து 1977 வரை இவர் தலைமையில் பிஎஃப்எல்பி தொடுத்த தாக்குதல்களில் இஸ்ரேலே அரண்டு போனது. இந்த காலகட்டங்களில் இஸ்ரேலியர்கள் விமானத்தில் பயணிக்கவே பதறினர். ஏனெனில் 1930 க்கு பிறகு விமான கடத்தலை உலகுக்கு அறிமுகப்படுத்தியது யார் எனில் அது வாதி ஹத்தாதாகத்தான் இருக்க முடியும். இவ்வாறு அரண்டு போயிருந்த நேரத்தில்தான் ஜெர்மனியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலும் ஹத்தாத் முக்கிய காரணகர்த்தா என்ற விபரம் தெரிய வந்ததும் இவரை தீர்த்துக் கட்டுவதன் அவசியத்தை இஸ்ரேல் உணர ஆரம்பித்தது.

ஆபரேஷன் 'கடவுளின் கோபம்' திட்டத்தின் படி வாதி ஹத்தாதின் தற்போதய இருப்பிடத்தை கண்டறிய ஸிவி ஸமீர் உத்தரவிட்டார். வழமையான ரகசிய படுகொலையில் மொசாத் ஒரு நடை முறையைக் கடை பிடிக்கும். அதாவது கொலை செய்யப்பட வேண்டியவர் இஸ்ரேலுக்கு வெளியே இருந்தால் முதலில் அந்நாட்டிலுள்ள தனது கைக் கூலிகளை உஷார் படுத்தும். இதற்காகவே பல நாடுகளிலும் வாடகை உளவாளிகளை மொசாத் வைத்துள்ளது. நம் நாட்டிலும் இதுபோல் பல உளவாளிகளை (இந்துத்வவாதிகளை) மொசாத் நியமித்துள்ளது. இரண்டாவதாக கேஸ் ஆபீஸர் எனப்படும் பிரத்யேக உளவு அதிகாரி நியமிக்கப்படுவார். அவர் கொல்லப்பட வேண்டிய குறிப்பிட்ட நபரைக் குறித்து அனைத்து தகவல்களையும் திரட்டி மொசாத் தலைமைக்கு அனுப்பி விடுவார். மூன்றாவதாக கொலைத் திட்டத்தின் அசல் மாதிரியை இஸ்ரேலில் போலியாக உருவாக்கி பயிற்சி செய்வர். இதன் மூலம் திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் சாதக பாதகங்களை முன் கூட்டியே மதிப்பீடு செய்து திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

நான்காவதாக திட்டத்தை செயல்படுத்துவதற்க்கான தேதி குறிக்கப்பட்டு பிரதமருக்கு தெரிவிக்கப்படும். பிரதமர் தலையாட்டியவுடன் கேசரியா எனப்படும் ரகசிய கொலைக் குழு அனுப்பப்படும். இவர்கள் ஏற்கெனவே பயிற்சி பெற்றிருந்ததால் காரியத்தை கணக்கச்சிதமாக முடித்து விட்டு மாயமாய் மறைந்து விடுவர்.

மொசாத்தின் இந்த வழக்கமான பாணி வாதி ஹத்தாதின் விஷயத்திலும் பயன்படுத்தப்பட்டது. அதன்படி ஹத்தாதின் இருப்பிடம் குறித்து அறிவதற்க்காக பாலஸ்தீன ஆட்காட்டிகளை மொசாத் அணுகியது. இவர்கள் பணத்துக்காகவும் சுகத்துக்காகவும் மொசாத்துக்கு தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களிடமிருந்து கிடைத்த தகவல் அத்தகைய நம்பகமானதாக இல்லை. ஏனெனில் ஹத்தால் தாம் மொசாத்தால் கொல்லப்படுவோம் என்பதை தீர்மானித்து தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தார்.

பல கோணங்களில் துப்பறிந்த மொசாத்துக்கு இறுதியாக ஒரு நம்பகமான தகவல் கிடைத்தது. அது பிஎஃப்எல்பி யிலிருந்து ஹத்தாதால் நீக்கப்பட்ட இலிச் ராமிரஸ் சான்செஸ் என்பவன் கொடுத்த நம்பகமான தகவல்தான் ஹத்தாதின் கதையை முடிக்க மொசாத்துக்கு உதவியாக இருந்தது. ஹத்தாத் ஒளிந்திருந்தது ஈராக்கில். அப்போது சதாம் ஹீசைன் மிலிட்டரி கமாண்டர் ஜெனரலாக இருந்தார்.

இலிச் ராமிரஸ் சான்செஸ் கொடுத்த தகவலின்படி ஹத்தாதை கொல்ல ஒரு புது டெக்னிக்கை மொசாத் கையாண்டது. அது என்னவென்றால் ஹத்தாதுக்கு ஒரு பழக்கம் இருந்தது. சிறியவர்கள் சாப்பிடும் சாக்லெட்டுகளை எப்போதும் விரும்பி சாப்பிடுவார். இதை மோப்பம் பிடித்த மொசாத் இவரைக் கொல்வதற்கு அந்த சாக்லெட்டுகளையே பயன்படுத்தியது. 1970 களில் உயர்தர சாக்லேட்டுகள் ஈராக்கில் கிடைப்பது அரிது. இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திய மொசாத் ஹத்தாதின் சமையல்காரனை தனது வலையில் வீழ்த்தியது.

சாக்லெட்டுக்கு பிரசித்திப் பெற்ற பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகளை சமையல்காரன் ஹத்தாதுக்கு கொடுக்க ஆரம்பித்தான். அதில் மிக மிக குறைந்த அளவில் உயிர்க் கொல்லி கிருமி தடவப்பட்டு ஆறு மாத காலம் யாருக்கும் சந்தேகம் வராமல் வழங்கப்பட்டது. அக்கிருமிகள் சிறிது சிறிதாக கல்லீரலைத் தாக்கி லுக்கிமியா நோயை ஏற்படுத்தி ஹத்தாதின் உயிரைக் காவு கொண்டது.

Poison with Sweets
…..Sure, it’s strange to think of a terrorist as a chocoholic, but it was indeed death by chocolate for Wadie Haddad, a medical doctor and onetime leader of the Popular Front for the Liberation of Palestine. A double agent slipped him a batch of poisoned chocolate in 1977, and Haddad went on to suffer a slow, months-long death. Israel’s intelligence agency, Mossad, was pointed to as the source of the poisoning in Aaron J. Klein’s book Striking Back…..
http://www.newsweek.com/2011/05/05/how-to-kill-a-terrorist.html
JERUSALEM (AP) -- Israel's Mossad secret service agency killed a Palestinian wanted for airplane hijackings by feeding him poisoned Belgian chocolate over six months in the late 1970s, according to a new book, the author said Saturday.

The book, "Striking Back," is apparently the first time that details of the killing have come to light and provides a glimpse at how sophisticated Israel is at poisoning.

In his book, author Aaron Klein describes how Israel tracked down Wadia Haddad, an operative of the Popular Front for the Liberation of Palestine, in Baghdad. Haddad had gone into hiding in the Iraqi capital after Israel began killing Palestinian militants around the world, Klein told Israel Radio.

Suspected in multiple hijackings, including the 1976 takeover of an Air France airplane in Entebbe, Uganda, Haddad knew from the Israeli tactics that he could be shot or bombed as he walked the street or picked up a phone.

Haddad was cautious of his every move, avoiding travel outside of Iraq, said Klein, a Time magazine correspondent in Jerusalem. But the 140-kilogram (309-pound) food lover had a weakness: chocolate...

http://www.cnn.com/2006/WORLD/meast/05/06/chocolate.ass...


ஆனால் உலகுக்கு இவர் இயற்கையான மரணத்தை தழுவியதாகத்தான் நம்ப வைக்கப்பட்டது. ஏனெனில் ஈராக்கில் வைத்து கொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேலின் மொசாத் காரணம் என்ற செய்தி வெளியானால் அது இஸ்ரேல் ஈராக் உறவை பாதிக்கும். சுற்றிலும் பல பகைகளை பெற்றிருக்கும் இஸ்ரேல் ஈராக்கையும் அந்த நேரத்தில் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

காலங்கள் உருண்டோடின. 2007 ஆம் ஆண்டு முன்னால் மொசாத் அதிகாரியும் 'டைம்' பத்திரிக்கையின் ஜெருசலம் நிருபருமான ஆரோன் கிளீன் எழுதிய Striking Back என்ற புத்தகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வாதி ஹத்தாதை மொசாத் படுகொலை செய்ய பயன் படுத்திய டெக்னிக்கை வெளிப்படுத்தினார். தாங்கள் நினைத்த ஒரு காரியத்தை நிறைவேற்ற எத்தனை வருடங்கள் ஆனாலும் பொறுமையாக காத்திருந்து திட்டமிட்டு தங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவர் என்பதற்கு ஹத்தாதியின் மரணம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

நமது நாட்டிலும் இந்துத்வவாதிகள் மொசாத்தின் திட்டமிடல் படியே செயல்படுகின்றனர். அத்வானிக்கும் மொசாத்துக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே! மாலேகானிலிருந்து சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வரை இவர்கள் நடத்திய அனைத்துக்கும் மூலம் மொசாத்திலிருந்து பெறப்பட்டவையே!

நமது மும்பை நகரத்தை தாக்கவும் எவ்வளவு கச்சிதமாக பிளான் பண்ணினார்கள். எங்கு பார்த்தாலும் இந்துத்வவாதிகள் கைது செய்யப்பட்ட நேரம். இதே நிலை நீடித்தால் மோடியின் கைகளுக்கும் விலங்கு வரும் என்ற நேரத்தில்தான் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தானிய கசாப்புக்கும் அவனது கூட்டத்தாருக்கும் குடும்பத்தை காப்பாற்றுகிறோம் என்ற வாக்குறுதி தரப்பட்டது. போலி முல்லாக்களால் மத வெறியும் ஊட்டப்பட்டது. இந்தியாவுக்குள் நுழைய எத்தனையோ வழிகள் இருக்க மோடியின் குஜராத் கடல் மார்க்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடலில் ரோந்து வருபவர்களுக்கு பணமோ அல்லது ராம பக்தியோ மோடி குரூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம்.

இதை சாக்காக வைத்து ஹேமந்த் கர்கரேயையும் போட்டுத் தள்ளியாகி விட்டது. இந்துத்வாவாதிகள் மேலேயோ அல்லது மொசாத்தின் மேலேயோ துளியும் சந்தேகம் வராமல் காரியம் கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு மாலேகான் முதற்கொண்டு அனைத்து வழக்குகளும் மந்த கதியை அடைந்தது. குற்றவாளிகள் நினைத்த காரியம் எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவேறியது. வழக்கம்போல் பாகிஸ்தானின் ஏதாவது ஒரு தீவிரவாத குரூப்பின் பெயரில் ஈமெயிலோ, ஒரு போன் காலோ போட்டு தங்களின் தேச பக்தியை இந்துத்வாவாதிகள் திறம்பட செயல்படுத்தி விட்டார்கள்.

ஜெய் ஹிந்த்!