ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
இந்த உலகையெல்லாம் படைத்து பரிபாலிக்கும் இறைவன் ஒருவன்தான். இந்த உலக மக்கள் யாவரும் ஒரே தாய் தந்தையிலிருந்தே பிறந்து பல்கிப் பெருகியவர்கள் என்று உலகில் உள்ள அனைத்து மதங்களுமே ஒத்துக் கொள்கின்றன. இதை நான் முன்பே பல பதிவுகளில் விளக்கியுமிருக்கிறேன். சமீபத்தில் இந்த ஓரிறைக் கொள்கையை மேலும் வலுவாக்கும் விதமாக இந்து மத வேதங்கள் கூறக் கூடிய கருத்துக்கள் சிலவற்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இவ்வளவு தெளிவாக வேதங்கள் கூறியிருக்க நம் நாட்டில் ஊருக்கு ஒரு இறைவனை ஏன் நம் முன்னோர்கள் உண்டாக்கினார்கள். இது எப்பொழுது ஆரம்பமானது என்று எனக்குள் எழும் கேள்விகளுக்கு விடைதான் இல்லை. இனி வேதங்கள் கூறக் கூடிய ஓரிறைக் கொள்கையை பார்ப்போமா?
'ஒரே இறைவனையே வணங்குங்கள். தீய சக்திகளை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.' என்று அறிவுறுத்த ஒவ்வொரு சமுதாயத்திற்கும ஒரு தூதரை அனுப்பினோம்.' -குர்ஆன் 16 : 36
நம் எல்லோரையும் படைத்த இறைவன் பாரத நாட்டுக்கும் ஏன் நம் தமிழ் மொழிக்கும் தூதரை அனுப்பியதாக கூறுகிறான்.
இனி பகவத் கீதை கூறுவதைக் கேட்போமா!
ஈசுவரா சர்வ புதானாம்
ஹிறுத்தே செர்ஜ்ஜீன் திஷ்டதி
ப்ராமயன் சர்வ புதானி
யந்திரு ரூடானி மாய யா
தமேவ சரணம் : கச்ச
ஸர்வ பாவேன பாரதா
தத் பிலஸாதால் பராம்
சாந்திம் ஸ்தானம்
பிறாய்யஸீ சாசுவதம்
(18 : 61 : 62)
எல்லாப் படைப்பினங்களையும் தனது சுய சக்தியால் இயங்க வைக்கும் இறைவன் சகல மக்களின் இதயங்களிலும் குடி கொண்டிருக்கிறான். நீ உனது உடலால், மனதால், அறிவால் அந்த ஏக இறைவனிடம் மட்டுமே சரணடைய வேண்டும். அவனுடைய அன்பு இருந்தாலே நிரந்தரமான சாந்தியும் சமாதானமும் கிடைக்கும்.
யாந்தி தேவன் விருதா தேவன்
பித்ர யாந்தி பித்ர விருதா
புதானி யாந்தி புதேஜியா
யாந்தி மதியாஜி நெயிமாம்
(9 : 25)
தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்திலும் முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடத்திலும் சாத்தான்களை வணங்குபவர்கள் சாத்தான்களிடத்திலும் போவார்கள். ஏக இறைவனை வணங்குபவர்களோ இறைவனாகிய என்னிடம் வருவார்கள்
நபியே! இறைவனாகிய என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்' என்று கூறுவீராக.
-குர்ஆன் 2 : 186
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யோவான் 1 : 18
மேலே வானிலும் கீழே புமியிலும் மற்றும் நீரிலும் உண்டாகி இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு வடிவத்தையேனும் எந்த ஒரு சிலைகளையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
-பைபிள் (யாத்திராகமம் 20 : 1-5)
ஒரே ஒரு மெய்யான கடவுள்தான் இருக்கிறார். அவரே சர்வ வல்லமை உடையவர்: உன்னதமானவர்: வானத்தையும் புமியையும் சமுத்திரத்தையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவருமான சிருஷ்டகர்.
-பைபிள் (அப்போஸ்தலர் 4 : 18-24)
மேற்கண்ட இந்து இஸ்லாமிய கிறித்தவ வேதங்கள் ஒரே இறைவனையே வணங்கச் சொல்ல உலகம் முழுவதும் இன்று நாட்டுக்கு நாடு இறைவனின் உருவங்கள் வேறுபடுவதைப் பார்க்கிறோம். வழிபாட்டு முறைகளிலும் பெருத்த வித்தியாசங்கள். இவை எல்லாம் எதனால் ஏற்ப்பட்டது என்று என்றாவது சிந்தித்திருக்கிறோமா? மதங்களின் பெயரால் வயிறு வளர்த்த மத குருமார்கள் செய்த புரட்டுகளாலேயே இத்தகைய மாற்றங்களைப் பார்க்கிறோம்.
இன்று இந்தியாவில் உள்ள தர்காக்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கும் இஸ்லாத்தின் சட்டங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்றால் இல்லை என்றே சொல்வேன். சமீபத்தில் என் தாத்தா ஹஜ்ஜீக்கு சென்றபோது மதீனாவும் சென்றுள்ளார். அங்கு முகமது நபியின் அடக்கத்தலத்திற்கு முன்பு கைகளை ஏந்தி பிரார்த்தித்திருக்கிறார். உடனே அங்கு நின்ற காவலர்கள் அவருடைய கைகளை பின்புறம் இருக்கும் பள்ளிவாசலின் பக்கம் திருப்பி 'இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறியுள்ளனர். இறைவன் நிலைக்கு முகமது நபியை உயர்த்திவிடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்று என்னிடம் சொல்லி ஆச்சரியப்பட்டார். முகமது நபியை விடவா இங்குள்ள நாகூர் தர்காவும், ஏர்வாடியும், அஜ்மீரும் பெருமை பெற்று விட்டன?
இது மனிதனின் இயல்பு. நாம் மதிப்பு வைத்திருக்கும் ஒருவரை அவர்களின் தகுதிக்கு மீறி புகழ்ந்து கடவுள் நிலைக்கு உயர்த்துவதே நமது வழக்கமாகி விட்டது. அரசாங்க காண்ட்ராக்டுகள் தமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகளை 'வாழும் தெய்வமே' என்று நாடு முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுகிறோம். இவை எல்லாம் நம்மை எங்கு கொண்டு சென்று விடும் என்று அறியாமல் செய்து வருகிறோம். பார்க்கப் போனால் போஸடரில் இருப்பவரை விட போஸ்டர் அடிப்பவர் நியாயவானாக வாழ்வதைப் பார்க்கிறோம்.
இறைவன் பெயரால் செய்யப்படும் மோசடிகளை கண்டித்து நாடு முழுக்க மிகப் பெரும் புரட்சியை உண்டாக்கிய பெரியாருக்கே இன்று சிலைகள் மாலைகள் என்று அமர்க்களப்படுத்துகிறோம். பெரியாரின் சிலையின் முன்னால் சென்று கும்பிடுவதாலோ, அச்சிலைக்கு மாலை இடுவதாலோ அந்த சிலை எதை உணர்ந்ததாக இவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்? அந்த பெரியார் சொன்ன கொள்கைகளை வாழ்வில் கடைபிடிப்பது தானே அந்த மனிதருக்கு செய்யும் மரியாதை? இனியாவது இதைப்படிக்கும் பகுத்தறிவாதிகள் சற்று சிந்திக்க வேண்டும்.
இந்து கிறித்தவ இஸ்லாமிய மார்க்கங்கள் ஒரே இறைவனையே வணங்கச் சொல்லியிருக்க அதை விடுத்து நம் கற்பனைகளையெல்லாம இறைவனாக்காமல் வாழ்வோமாக!
வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன்தான்.
-ரிக் வேதம் 6:45:16
இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுவதில்லை
-அதர்வண வேதம் 32 : 3
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யொவான் (1 : 18)
புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
-ரிக் வேதம் 8 : 1
கண்ணால் காண முடியாதது யாரோ அவனே படைத்த இறைவன் அவனே கண்களுக்கு பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை.
-கேனோ உபநிஷத் (1 : 6)
தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
-எசையா (40:18-25)
யாதொரு மனிதக் கடவுளையும் வணங்குவதற்கு கட்டளை இட்டதில்லை.
-ரிக் வேதம் (10:82,3)
மனிதன் இறைவனுக்கு உதாரணம் கூறுகிறான். அந்த மனிதனை நாம்(இறைவன்) படைத்திருப்பதை ஏனோ மறந்து விட்டான்.
-குர்ஆன் 36:78
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.
-குர்அன் 6:103
வானங்களையும் புமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், இறைவன் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், புமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும்,புமிக்கும் இடையே வசப்படுத்தப் பட்டுள்ளமேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
-குர்ஆன் 2 : 164
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, February 12, 2007
Saturday, February 10, 2007
பிச்சை எடுத்து சாப்பிடலாமா? ஓர்அலசல்.
இன்று உலகில் வயிறு வளர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. சிலர் உடல் உழைப்பில் சம்பாத்தியத்தை தேடுவார்கள். ஒரு சிலர் வட்டி பணத்தின் மூலம் ஏழைகளை சுரண்டி வயிறு வளர்ப்பார்கள். அரசாங்க உத்தியோகம், டேபிள் சேர் வேலை என்று அதிகம் பேர் இன்றைய காலகட்டத்தில் பணம் பண்ணுகிறோம். இவற்றை எல்லாம் தாண்டி பிச்சை எடுத்தே வாழ்வை ஓட்டுபவர்களை உலகெங்கும் பரவலாக பார்க்கிறோம். இப்படி பிச்சை எடுத்து தங்கள் வாழ்வை ஓட்டலாமா என்பதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சிறிது அலசுவோம்.
முகமது நபி கூற நான் கேட்டேன்...
'உங்களில் யார் மக்களிடம் யாசகம் கேட்டு தன் வாழ்நாளை ஓட்டுகிறாரோ அவர் மறுமை நாளில் முகத்தில் சதையின்றி எழுப்பப்படுவார்.'
அறிவிப்பவர் : அபுஹீரைரா நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ
'யார் யாசிப்பதில்லையோ அவருக்கு சொர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'
அறிவிப்பவர்: அபுஹீரைரா நூல்: அபுதாவுத், நஸயீ
'யாரிடமும் யாசகம் கேட்க வேண்டாம். உன் குதிரையின் சாட்டை கீழே விழுந்தாலும் அதை நீயே எடுப்பாயாக! அதை எடுப்பதற்காக மற்றவரை ஏவாதே' என்றார்கள். அதன்படியே என் வாழ்நாளை அமைத்துக் கொண்டேன்.'
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் அவ்ப் நூல்கள் : புகாரி, முஸ்லிம்
ஹக்கீம் இப்னு ஹிஸாம் என்ற நபித் தோழர் சில தேவைகள் பொருட்டு யாசிப்பதற்காக முகமது நபியிடம் சென்றார். ஒரு முறை இருமுறை அல்ல. மூன்று முறை சென்றார். நான்காவது முறையும் யாசிப்பதற்காக முகமது நபியிடம் சென்றார். அப்போது முகமது நபி ஹக்கீமைப் பார்த்து
'ஹக்கீமே! செல்வம் பசுமையும் இனிமையும் நிறைந்தது. யார் அதை நிறைந்த மனத்தோடு பெறுகிறாரோ அவருக்கு அதிலே அபிவிருத்தி செய்யப்படும். எவர் பொருளை யாசகமாகப் பெற்று ஊதாரித்தனமாக செலவழிக்கிறாரோ அவருக்கு அப்பொருளால் அபிவிருத்தி செய்யப்பட மாட்டாது. யாசிக்கும் கரத்தை விட யாசகம் கொடுக்கும் கரமே சிறந்தது. எனவே யாசிப்பதை விட்டுவிடுவீராக' என்று அறிவுரை பகர்ந்தனர்.
ஹக்கீம் இப்னு ஹிஸாம் கூறுகிறார் 'இறைவன் மீது ஆணையாக! உலகை விட்டு பிரியும் வரை இனி நான் யாரிடமும் யாசகம் கேட்க மாட்டேன் என்று அன்று உறுதி எடுத்துக் கொண்டேன்'
முகமது நபிக் காலத்துக்குப் பிறகு மேற்கண்ட நபர் மிகவும் வறுமையில் இருப்பதைக் கேள்விப்பட்ட கலீபாக்கள் அபுபக்கரும் உமரும் அவருக்காக பொருளுதவி செய்ய முன் வருகிறார்கள். 'முகமது நபிக்கு முன்னால் நான் வாக்கு கொடுத்துள்ளேன். எனவே நான் யாரிடமும் எதையும் யாசகமாகப் பெறமாட்டேன்' என்று கடைசி வரை யாரிடமும் கை நீட்டாமலேயே வாழ்ந்து சென்றதைப் பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம்.
இதன்மூலம் யாசகத்தையே தொழிலாக வைப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது. இன்று கை கால்கள் நல்ல நிலையில் உள்ள எத்தனையோ இனைஞர்கள் கூச்சமின்றி யாசகம் கேட்பதைப் பார்க்கிறோம்.
ஒரு வருடம் முன்பு நான் அலுவலகத்தில் பணியில் இருந்தேன். ஒரு பாகிஸ்தானியர் நாற்பது வயது மதிக்கத் தக்கவர் வயிற்றைச் சுற்றி துணியால் கட்டிக் கொண்டு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் ஆபரேஷன் செய்ய பணம் இல்லை என்றும் பணம் தந்துவவுமாறும் கேட்டுக் கொண்டார். என்னோடு வேலை செய்து வரும் எகிப்தியர் அவருக்கு 20 ரியால் கொடுத்தார். எனக்கு அந்த பாகிஸ்தானி மேல் நம்பிக்கை வரவில்லை. நான் எதுவும் தரவில்லை. அதே பாகிஸ்தானியை இரண்டு நாள் கழித்து கடைத்தெருவில் சந்தித்தேன். அங்கு சிலரிடம் 'என் அரபி முதலாளி மோசம் செய்து என்னை எமாற்றி விட்டார். நான் பாகிஸ்தான் செல்ல உதவி செய்ய வேண்டும்' என்று சொல்லி ரியாலை திரட்டிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் 'ஆபரேஷன் முடிந்து விட்டதா?' என்று கேட்டேன். என்னை அடையானம் கண்டு கொண்ட அந்த நபர் எனக்கு பதில் தராமல் அந்த இடத்தை விட்டு உடன் நகர்ந்து விட்டார். இது போல் அன்றாடம் பல மோசடிப் பேர்வழிகளை நாம் வாழ்நானில் சந்தித்து வருகிறோம். இதனால் உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களையும் சந்தேகத்தோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறோம்.
இதேபோல் பள்ளிவாசல்களிலும், கோயில்களிலும், சர்ச்களிலும் பிச்சை எடுப்பதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதும் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். இவர்களில் சிலர் பரம்பரையாக பிச்சை எடுக்கும் தொழிலைச் செய்பவர்கள். பிரார்த்தனையை முடித்து விட்டு வரும் பக்தர்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று சில்லரையாக போட்டு வருவதையும் நாம் பார்க்கிறோம். இது போன்ற பழக்கத்தினால் பிச்சைக்காரர்களை நாமே ஊக்கப்படுத்துகிறோம். இப்படி சில்லரையாகப் போடுவதைவிட வாழ்நானில் நம் வசதிக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவனுக்கு தையல் இயந்திரம், சிறிய தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதற்கான மூலதனம் போன்றவற்றைக் கொடுத்து உதவலாம். 'இனி நீ பிச்சை எடுத்தால் நான் கொடுத்த பணத்தை திருப்பித் தந்து விட வேண்டும்' என்ற உத்தரவாதத்தையும் உதவி பெறுபவரிடம் நாம் பெற வேண்டும். இது போன்ற செயல்கள் பிச்சை எடுப்பவர்களை ஓரளவு மட்டுப்படுத்தும்.
இது போன்ற நேரங்களில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுவதை இனிப் பார்ப்போம்.
'தொழுகையை நிலை நாட்டுங்கள். ஏழை வரியைக் கொடுங்கள்' - குர்ஆன் 2 :110
தொழுது கொள்ள எங்கெல்லாம் இறைவன் கட்டளை இடுகிறானோ அதற்க்கடுத்து ஏழைகளுக்கு உதவவும் வேண்டும் என்று கட்டளை இடுவதன் மூலம் இந்த ஏழை வரியின் முக்கியத்துவம் விளக்கப் படுகிறது.
'இறைவன் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நள்றி கெட்ட எந்த பாவியையும் இறைவன் விரும்ப மாட்டான்.' -குர்ஆன் 2 : 276
இதன் மூலம் தர்மம் செய்வது செல்வத்தை பெருகச் செய்யும் என்று இறைவன் வாக்களிக்கிறான்.
'உங்களின் விளை நிலங்கள் பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள். அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய கடமையை (ஏழை வரியை) வழங்கி விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.' -குர்ஆன் 6 : 141
இதன் மூலம் விளை நிலங்களுக்கும் கணக்கிட்டு ஏழை வரியைச் செலுத்த வேண்டும் என்று விளங்குகிறோம்.
'நம்பிக்கைக் கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். இறைவனின் வழியை விட்டும் மக்களைத் தடுக்கின்றனர். 'இறைவனின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு' என்று எச்சரிப்பீராக' -குர்ஆன் 9 : 34
நம்மில் பலர் இத்தகைய உதவிகளை மத குருமார்களுக்கு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அத்தகைய உதவிகள் ஏழைகளைச் சென்றடைய வேண்டியது என்று இறைவன் அறிவுறுத்துகிறான்.
'யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை சேகரிப்பவர்களுக்கும், இஸ்லாத்தின்பால் உள்ளம் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன்பட்டோருக்கும், இறைவனின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது இறைவனின் கடமை. இறைவன் அறிந்தவன். ஞானமிக்கவன்.'
-குர்ஆன் 9 ; 60
மேற்சொன்ன வகையில் அடங்குபவர்களே தர்மத்தின் செல்வத்தினை அனுபவிக்கத் தகுதியானவர்கள். யாசிப்போர்,ஏழைகள், நாடோடிகள் போன்றோர் யார் என்பதற்கும் விரிவான விளக்கங்கள் இருக்கிறது.
'தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். 'நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காவும், உறவினர்க்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் செலவிட வேண்டும்.' நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் இறைவன் அதை அறிந்தவன்' எனக் கூறுவீராக.
-குர்ஆன் 2 : 215
இந்த வசனத்தின் மூலம் உறவினர்களையும் கவனிக்கச் சொல்லி இறைவன் கட்டளை இடுகிறான். தன் சித்தப்பனும், உடன்பிறந்தவர்களும் வயதான காலத்தில் ஒரு வேளை சோற்றுக்கு அல்லாடிக் கொண்டிருக்க 'கொடை வள்ளல்' என்று பெயரெடுப்பதற்காக ஊருக்கும்,பள்ளிவாசல்களுக்கும், கோவில்களுக்கும் பிறர் மெச்ச வேண்டி செலவிடுபவர்களையே நாம் அதிகம் பார்க்கிறோம்.
'யார் கஞ்சத்தனம் செய்து தேவையற்றவராகத் தன்னைக் கருதி நல்லதை நம்ப மறுக்கிறாரோ சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்ப்படுத்துவோம்.' -குர்ஆன் 92 : 8,9,10
கஞ்சத்தனம் செய்வோரையும் இவ்வசனத்தில் இறைவன் கண்டிக்கிறான்.
'தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே! அதைப்பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச்சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு இதைப் பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.' - குர்ஆன் 2 : 271
நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு பாவங்களெல்லாம் தர்மத்தின் மூலம் அழிக்கப்படுகிறது என்று குர்ஆன் நமக்கு விளக்குகிறது.
'தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்.' -குர்ஆன் 2 : 188
லஞ்சம் வாங்குபவர்களை இந்த வசனம் கடுமையாக சாடுகிறது.
இந்த சட்டங்களையும் இது போன்ற மேலும் பல சட்டங்களையும் படிக்கும் போது இவையனைத்தும் ஏறத்தாழ கம்யுளிஸத்தை ஒத்து வருவதைப் பார்க்கிறோம். கம்யுளிஸ்டுகள் இறைவனை மறுத்து முதலானித்துவத்தை ஒழித்து சமதர்ம சமுதாயம் மலர வேண்டும் என்று கூறுவார்கள். இஸ்லாமோ இறைவனின் நம்பிக்கையை ஊட்டி ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் உலக நடைமுறைக்கு உகந்ததே என்று கூறி அந்த வித்தியாசத்திலும் சம தர்ம சமுதாயத்தை உருவாக்க முயல்கிறது. உலகம் முழுவதும் அதில் வெற்றியும் கண்டுள்ளது.
இன்று அரபு நாடுகளை எடுத்துக் கொண்டால் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம். அதே நேரம் சீனா கம்யுளிஸத்தை விடுத்து இன்று பொருளாதாரத்தில் மேன்மையுறுவதையும் காண்கிறோம். முதலாளித்துவத்தையும், கம்யுனிஷத்தையும் பின்பற்றக் கூடிய பல நாடுகள் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததாக நாம் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவின் வளர்ச்சியை ஒரு பேட்டை ரவுடியின் வளர்ச்சியாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்துடையவர்கள் தங்கள் கருத்தைப் பதிப்பார்களாக!
நான் எழுத நினைத்த தலைப்பு ஒன்று. ஆனால் அது என்னை எங்கோ கொண்டு சென்று விட்டது.
இறைவனே மிக அறிந்தவன்.
முகமது நபி கூற நான் கேட்டேன்...
'உங்களில் யார் மக்களிடம் யாசகம் கேட்டு தன் வாழ்நாளை ஓட்டுகிறாரோ அவர் மறுமை நாளில் முகத்தில் சதையின்றி எழுப்பப்படுவார்.'
அறிவிப்பவர் : அபுஹீரைரா நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ
'யார் யாசிப்பதில்லையோ அவருக்கு சொர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'
அறிவிப்பவர்: அபுஹீரைரா நூல்: அபுதாவுத், நஸயீ
'யாரிடமும் யாசகம் கேட்க வேண்டாம். உன் குதிரையின் சாட்டை கீழே விழுந்தாலும் அதை நீயே எடுப்பாயாக! அதை எடுப்பதற்காக மற்றவரை ஏவாதே' என்றார்கள். அதன்படியே என் வாழ்நாளை அமைத்துக் கொண்டேன்.'
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் அவ்ப் நூல்கள் : புகாரி, முஸ்லிம்
ஹக்கீம் இப்னு ஹிஸாம் என்ற நபித் தோழர் சில தேவைகள் பொருட்டு யாசிப்பதற்காக முகமது நபியிடம் சென்றார். ஒரு முறை இருமுறை அல்ல. மூன்று முறை சென்றார். நான்காவது முறையும் யாசிப்பதற்காக முகமது நபியிடம் சென்றார். அப்போது முகமது நபி ஹக்கீமைப் பார்த்து
'ஹக்கீமே! செல்வம் பசுமையும் இனிமையும் நிறைந்தது. யார் அதை நிறைந்த மனத்தோடு பெறுகிறாரோ அவருக்கு அதிலே அபிவிருத்தி செய்யப்படும். எவர் பொருளை யாசகமாகப் பெற்று ஊதாரித்தனமாக செலவழிக்கிறாரோ அவருக்கு அப்பொருளால் அபிவிருத்தி செய்யப்பட மாட்டாது. யாசிக்கும் கரத்தை விட யாசகம் கொடுக்கும் கரமே சிறந்தது. எனவே யாசிப்பதை விட்டுவிடுவீராக' என்று அறிவுரை பகர்ந்தனர்.
ஹக்கீம் இப்னு ஹிஸாம் கூறுகிறார் 'இறைவன் மீது ஆணையாக! உலகை விட்டு பிரியும் வரை இனி நான் யாரிடமும் யாசகம் கேட்க மாட்டேன் என்று அன்று உறுதி எடுத்துக் கொண்டேன்'
முகமது நபிக் காலத்துக்குப் பிறகு மேற்கண்ட நபர் மிகவும் வறுமையில் இருப்பதைக் கேள்விப்பட்ட கலீபாக்கள் அபுபக்கரும் உமரும் அவருக்காக பொருளுதவி செய்ய முன் வருகிறார்கள். 'முகமது நபிக்கு முன்னால் நான் வாக்கு கொடுத்துள்ளேன். எனவே நான் யாரிடமும் எதையும் யாசகமாகப் பெறமாட்டேன்' என்று கடைசி வரை யாரிடமும் கை நீட்டாமலேயே வாழ்ந்து சென்றதைப் பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம்.
இதன்மூலம் யாசகத்தையே தொழிலாக வைப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது. இன்று கை கால்கள் நல்ல நிலையில் உள்ள எத்தனையோ இனைஞர்கள் கூச்சமின்றி யாசகம் கேட்பதைப் பார்க்கிறோம்.
ஒரு வருடம் முன்பு நான் அலுவலகத்தில் பணியில் இருந்தேன். ஒரு பாகிஸ்தானியர் நாற்பது வயது மதிக்கத் தக்கவர் வயிற்றைச் சுற்றி துணியால் கட்டிக் கொண்டு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் ஆபரேஷன் செய்ய பணம் இல்லை என்றும் பணம் தந்துவவுமாறும் கேட்டுக் கொண்டார். என்னோடு வேலை செய்து வரும் எகிப்தியர் அவருக்கு 20 ரியால் கொடுத்தார். எனக்கு அந்த பாகிஸ்தானி மேல் நம்பிக்கை வரவில்லை. நான் எதுவும் தரவில்லை. அதே பாகிஸ்தானியை இரண்டு நாள் கழித்து கடைத்தெருவில் சந்தித்தேன். அங்கு சிலரிடம் 'என் அரபி முதலாளி மோசம் செய்து என்னை எமாற்றி விட்டார். நான் பாகிஸ்தான் செல்ல உதவி செய்ய வேண்டும்' என்று சொல்லி ரியாலை திரட்டிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் 'ஆபரேஷன் முடிந்து விட்டதா?' என்று கேட்டேன். என்னை அடையானம் கண்டு கொண்ட அந்த நபர் எனக்கு பதில் தராமல் அந்த இடத்தை விட்டு உடன் நகர்ந்து விட்டார். இது போல் அன்றாடம் பல மோசடிப் பேர்வழிகளை நாம் வாழ்நானில் சந்தித்து வருகிறோம். இதனால் உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களையும் சந்தேகத்தோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறோம்.
இதேபோல் பள்ளிவாசல்களிலும், கோயில்களிலும், சர்ச்களிலும் பிச்சை எடுப்பதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதும் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். இவர்களில் சிலர் பரம்பரையாக பிச்சை எடுக்கும் தொழிலைச் செய்பவர்கள். பிரார்த்தனையை முடித்து விட்டு வரும் பக்தர்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று சில்லரையாக போட்டு வருவதையும் நாம் பார்க்கிறோம். இது போன்ற பழக்கத்தினால் பிச்சைக்காரர்களை நாமே ஊக்கப்படுத்துகிறோம். இப்படி சில்லரையாகப் போடுவதைவிட வாழ்நானில் நம் வசதிக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவனுக்கு தையல் இயந்திரம், சிறிய தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதற்கான மூலதனம் போன்றவற்றைக் கொடுத்து உதவலாம். 'இனி நீ பிச்சை எடுத்தால் நான் கொடுத்த பணத்தை திருப்பித் தந்து விட வேண்டும்' என்ற உத்தரவாதத்தையும் உதவி பெறுபவரிடம் நாம் பெற வேண்டும். இது போன்ற செயல்கள் பிச்சை எடுப்பவர்களை ஓரளவு மட்டுப்படுத்தும்.
இது போன்ற நேரங்களில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுவதை இனிப் பார்ப்போம்.
'தொழுகையை நிலை நாட்டுங்கள். ஏழை வரியைக் கொடுங்கள்' - குர்ஆன் 2 :110
தொழுது கொள்ள எங்கெல்லாம் இறைவன் கட்டளை இடுகிறானோ அதற்க்கடுத்து ஏழைகளுக்கு உதவவும் வேண்டும் என்று கட்டளை இடுவதன் மூலம் இந்த ஏழை வரியின் முக்கியத்துவம் விளக்கப் படுகிறது.
'இறைவன் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நள்றி கெட்ட எந்த பாவியையும் இறைவன் விரும்ப மாட்டான்.' -குர்ஆன் 2 : 276
இதன் மூலம் தர்மம் செய்வது செல்வத்தை பெருகச் செய்யும் என்று இறைவன் வாக்களிக்கிறான்.
'உங்களின் விளை நிலங்கள் பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள். அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய கடமையை (ஏழை வரியை) வழங்கி விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.' -குர்ஆன் 6 : 141
இதன் மூலம் விளை நிலங்களுக்கும் கணக்கிட்டு ஏழை வரியைச் செலுத்த வேண்டும் என்று விளங்குகிறோம்.
'நம்பிக்கைக் கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். இறைவனின் வழியை விட்டும் மக்களைத் தடுக்கின்றனர். 'இறைவனின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு' என்று எச்சரிப்பீராக' -குர்ஆன் 9 : 34
நம்மில் பலர் இத்தகைய உதவிகளை மத குருமார்களுக்கு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அத்தகைய உதவிகள் ஏழைகளைச் சென்றடைய வேண்டியது என்று இறைவன் அறிவுறுத்துகிறான்.
'யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை சேகரிப்பவர்களுக்கும், இஸ்லாத்தின்பால் உள்ளம் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன்பட்டோருக்கும், இறைவனின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது இறைவனின் கடமை. இறைவன் அறிந்தவன். ஞானமிக்கவன்.'
-குர்ஆன் 9 ; 60
மேற்சொன்ன வகையில் அடங்குபவர்களே தர்மத்தின் செல்வத்தினை அனுபவிக்கத் தகுதியானவர்கள். யாசிப்போர்,ஏழைகள், நாடோடிகள் போன்றோர் யார் என்பதற்கும் விரிவான விளக்கங்கள் இருக்கிறது.
'தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். 'நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காவும், உறவினர்க்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் செலவிட வேண்டும்.' நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் இறைவன் அதை அறிந்தவன்' எனக் கூறுவீராக.
-குர்ஆன் 2 : 215
இந்த வசனத்தின் மூலம் உறவினர்களையும் கவனிக்கச் சொல்லி இறைவன் கட்டளை இடுகிறான். தன் சித்தப்பனும், உடன்பிறந்தவர்களும் வயதான காலத்தில் ஒரு வேளை சோற்றுக்கு அல்லாடிக் கொண்டிருக்க 'கொடை வள்ளல்' என்று பெயரெடுப்பதற்காக ஊருக்கும்,பள்ளிவாசல்களுக்கும், கோவில்களுக்கும் பிறர் மெச்ச வேண்டி செலவிடுபவர்களையே நாம் அதிகம் பார்க்கிறோம்.
'யார் கஞ்சத்தனம் செய்து தேவையற்றவராகத் தன்னைக் கருதி நல்லதை நம்ப மறுக்கிறாரோ சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்ப்படுத்துவோம்.' -குர்ஆன் 92 : 8,9,10
கஞ்சத்தனம் செய்வோரையும் இவ்வசனத்தில் இறைவன் கண்டிக்கிறான்.
'தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே! அதைப்பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச்சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு இதைப் பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.' - குர்ஆன் 2 : 271
நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு பாவங்களெல்லாம் தர்மத்தின் மூலம் அழிக்கப்படுகிறது என்று குர்ஆன் நமக்கு விளக்குகிறது.
'தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்.' -குர்ஆன் 2 : 188
லஞ்சம் வாங்குபவர்களை இந்த வசனம் கடுமையாக சாடுகிறது.
இந்த சட்டங்களையும் இது போன்ற மேலும் பல சட்டங்களையும் படிக்கும் போது இவையனைத்தும் ஏறத்தாழ கம்யுளிஸத்தை ஒத்து வருவதைப் பார்க்கிறோம். கம்யுளிஸ்டுகள் இறைவனை மறுத்து முதலானித்துவத்தை ஒழித்து சமதர்ம சமுதாயம் மலர வேண்டும் என்று கூறுவார்கள். இஸ்லாமோ இறைவனின் நம்பிக்கையை ஊட்டி ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் உலக நடைமுறைக்கு உகந்ததே என்று கூறி அந்த வித்தியாசத்திலும் சம தர்ம சமுதாயத்தை உருவாக்க முயல்கிறது. உலகம் முழுவதும் அதில் வெற்றியும் கண்டுள்ளது.
இன்று அரபு நாடுகளை எடுத்துக் கொண்டால் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம். அதே நேரம் சீனா கம்யுளிஸத்தை விடுத்து இன்று பொருளாதாரத்தில் மேன்மையுறுவதையும் காண்கிறோம். முதலாளித்துவத்தையும், கம்யுனிஷத்தையும் பின்பற்றக் கூடிய பல நாடுகள் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததாக நாம் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவின் வளர்ச்சியை ஒரு பேட்டை ரவுடியின் வளர்ச்சியாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்துடையவர்கள் தங்கள் கருத்தைப் பதிப்பார்களாக!
நான் எழுத நினைத்த தலைப்பு ஒன்று. ஆனால் அது என்னை எங்கோ கொண்டு சென்று விட்டது.
இறைவனே மிக அறிந்தவன்.
Thursday, February 08, 2007
அரேபியாவில் ஓடுமா ஆறுகள்......?
அரேபியாவில் ஓடுமா ஆறுகள்......?
Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.
"அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?" .
எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது-
"ஆம்'! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது".
.அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:
"எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா.......?"
ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
"ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!"
ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது:
"எப்படி சொல்கிறீர்கள்......?"
"புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை"
"இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி(ஸல்) அறிவித்து விட்டதை அறிவீர்களா...?ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும் - ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது.(Sahih Muslim) இப்போது சொல்லுங்கள்: 'நபி முஹம்மதுவுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?
பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: "ரோமானியர்களாக இருக்கலாம்"
"நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படி கூற முடிந்தது.?"
உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:
"அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.."மேலும் அவர் சொன்னவை:"ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.'Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்தபார்வையினால் கிடைத்த நிஜம் இது.
"நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?" (அல் குர்-ஆன்: 41:53)
(பி.கு: இக்கட்டுரையை இங்கு பதிவதன் நோக்கம்: 'கோடானுகோடி மக்களால் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் குர்ஆனை 'இஸ்லாமிய எதிரிகளின் துணைக்கொண்டு கொச்சைப்படுத்திப் பார்த்து தன் மனத்தை திருப்திப்படுத்திக்கொள்பவர்கள் இனியேனும் 'வெறுப்புணர்வை' கழற்றி வைத்துவிட்டு 'விஞ்ஞானப் பார்வையோ (அ) குறைந்தபட்சம் நேர்மறை பார்வையோ அணிந்து அதைப் பார்க்கட்டும் என்று தான்).
நண்பர் சுடடு விரலின் பதிவை மறுபதிப்பு செய்கிறேன்.
Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.
"அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?" .
எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது-
"ஆம்'! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது".
.அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:
"எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா.......?"
ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
"ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!"
ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது:
"எப்படி சொல்கிறீர்கள்......?"
"புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை"
"இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி(ஸல்) அறிவித்து விட்டதை அறிவீர்களா...?ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும் - ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது.(Sahih Muslim) இப்போது சொல்லுங்கள்: 'நபி முஹம்மதுவுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?
பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: "ரோமானியர்களாக இருக்கலாம்"
"நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படி கூற முடிந்தது.?"
உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:
"அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.."மேலும் அவர் சொன்னவை:"ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.'Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்தபார்வையினால் கிடைத்த நிஜம் இது.
"நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?" (அல் குர்-ஆன்: 41:53)
(பி.கு: இக்கட்டுரையை இங்கு பதிவதன் நோக்கம்: 'கோடானுகோடி மக்களால் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் குர்ஆனை 'இஸ்லாமிய எதிரிகளின் துணைக்கொண்டு கொச்சைப்படுத்திப் பார்த்து தன் மனத்தை திருப்திப்படுத்திக்கொள்பவர்கள் இனியேனும் 'வெறுப்புணர்வை' கழற்றி வைத்துவிட்டு 'விஞ்ஞானப் பார்வையோ (அ) குறைந்தபட்சம் நேர்மறை பார்வையோ அணிந்து அதைப் பார்க்கட்டும் என்று தான்).
நண்பர் சுடடு விரலின் பதிவை மறுபதிப்பு செய்கிறேன்.
Sunday, February 04, 2007
டோண்டு ராகவன் அவர்களுடன் ஒரு சந்திப்பு!
டோண்டு ராகவன் அவர்களுடன் ஒரு சந்திப்பு!
இரண்டு நாட்களுக்கு முன்பு புனித ஹஜ் பயணம் முடித்து வரும் என் தாத்தாவை அழைப்பதற்காக சென்னை சென்றிருந்தேன். இதுவரை முகம் தெரியாமல் இணையத்தின் மூலமே தொடர்பு கொண்டிருக்கும் ஒரு சில வலைப்பதிவர்களை சந்தித்தால் என்ன? என்ற எண்ணம் வரவே நமது டோண்டு ராகவன் சாருக்கு தொலை பேசினேன். டோண்டு சார் 15 நிமிடத்தில் பன்னாட்டு விமான நிலையத்தில் ஆஜர்.
விமானம் ஏழரைக்கு சென்னையை அடைந்தது. இமிக்ரேஷன் முடிந்து தாத்தா வெளியாக 9.30 ஆகி விட்டது. இடைப்பட்ட இந்த இரண்டு மணி நேரத்தை நம் ராகவன் சாரோடு கழித்தேன். முதல் சந்திப்பு என்றாலும் நெடுநாள் பழகியது போல் மிகவும் இயல்பாக பேசினார். மதத்தால் கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தாலும் இணையத் தமிழ் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது. இருந்த இரண்டு மணி நேரத்தில் மனிதர் சளைக்காமல் பல விபரங்களை சொல்லிக் கொண்டும் என்னிடம் சில கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்தார். சிலருக்கு வயது ஏற ஏற இளமை கூடிக் கொண்டு போகும் என்பது இதுதானோ!
தமிழ்மணத்தில் பல வலைப் பதிவர்களின் கருத்தோடு முற்றிலும் மாறுபடக் கூடியவர். தான் சொல்ல வரும் கருத்தை நேரிடையாக யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சொல்லும் தைரியத்தை நினைத்தும் சில நேரம் ஆச்சரியப்படுவதுண்டு. இதனால் பலரின் எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டவர். அவரோடு பல இடங்களில் கருத்துக்களோடு முரண்பட்டாலும் ஆரம்பம் முதலே அவரை மதித்து வந்திருக்கிறேன். அந்த மதிப்பும் மரியாதையும் என்றும் நிலைக்க வேண்டும் என்பதே என் அவா!
சமீபத்தில் லக்கிலுக் இவரை டெண்டுல்கராக மாற்றிய பதிவைப் பற்றியும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தோம்.
இஸ்லாத்தில் உள்ள முத்தலாக் பிரச்னை, இஸ்லாமியர் கல்வியில் பின் தங்கி இருப்பது போன்ற பல விபரங்களை பகிர்ந்து கொண்டோம். இவை எல்லாம் மார்க்கம் அறியாத சில மார்க்க அறிஞர்களின் தலையீட்டால் வந்தது என்று விளக்கினேன். இடையில் சோவைப் பற்றியும் பேச்சு வந்தது. காசு கொடுத்து நான் வாங்கிப் படிக்கும் பத்திரிக்கைகளில் துக்ளக்கும் ஒன்று. சோவின் கருத்துக்களில் எனக்குள் பல முரண்கள் இருந்தாலும் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக தொடர்ந்து படிப்பேன். இது போன்று பல விபரங்களையும் பகிர்ந்து கொண்டோம். களைப்பு தீர இடைஇடையே லெமன் டீயும் அருந்தி கொண்டோம்.
ஒன்பதரை மணிக்கு தாத்தா வந்தார். தாத்தாவையும் ராகவன் சார் சந்தித்து ஆசி பெற்றார். வீட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளது என்று கூறி எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார் தமிழ்மணத்தின் இளைய!, இனிய வலைப்பதிவர். என் அழைப்பை ஏற்றுவருகை புரிந்து என்னோடு இரண்டு மணி நேரம் பயனுள்ள வகையில் நேரத்தை செலவழித்த ராகவன் சாருக்கு நன்றிகள் பல.
எங்களின் சந்திப்பு சம்பந்தமாக ராகவன் அவர்கள் போட்ட பதிவு இங்கே
http://www.dondu.blogspot.com/2007/02/blog-post.html
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு புனித ஹஜ் பயணம் முடித்து வரும் என் தாத்தாவை அழைப்பதற்காக சென்னை சென்றிருந்தேன். இதுவரை முகம் தெரியாமல் இணையத்தின் மூலமே தொடர்பு கொண்டிருக்கும் ஒரு சில வலைப்பதிவர்களை சந்தித்தால் என்ன? என்ற எண்ணம் வரவே நமது டோண்டு ராகவன் சாருக்கு தொலை பேசினேன். டோண்டு சார் 15 நிமிடத்தில் பன்னாட்டு விமான நிலையத்தில் ஆஜர்.
விமானம் ஏழரைக்கு சென்னையை அடைந்தது. இமிக்ரேஷன் முடிந்து தாத்தா வெளியாக 9.30 ஆகி விட்டது. இடைப்பட்ட இந்த இரண்டு மணி நேரத்தை நம் ராகவன் சாரோடு கழித்தேன். முதல் சந்திப்பு என்றாலும் நெடுநாள் பழகியது போல் மிகவும் இயல்பாக பேசினார். மதத்தால் கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தாலும் இணையத் தமிழ் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது. இருந்த இரண்டு மணி நேரத்தில் மனிதர் சளைக்காமல் பல விபரங்களை சொல்லிக் கொண்டும் என்னிடம் சில கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்தார். சிலருக்கு வயது ஏற ஏற இளமை கூடிக் கொண்டு போகும் என்பது இதுதானோ!
தமிழ்மணத்தில் பல வலைப் பதிவர்களின் கருத்தோடு முற்றிலும் மாறுபடக் கூடியவர். தான் சொல்ல வரும் கருத்தை நேரிடையாக யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சொல்லும் தைரியத்தை நினைத்தும் சில நேரம் ஆச்சரியப்படுவதுண்டு. இதனால் பலரின் எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டவர். அவரோடு பல இடங்களில் கருத்துக்களோடு முரண்பட்டாலும் ஆரம்பம் முதலே அவரை மதித்து வந்திருக்கிறேன். அந்த மதிப்பும் மரியாதையும் என்றும் நிலைக்க வேண்டும் என்பதே என் அவா!
சமீபத்தில் லக்கிலுக் இவரை டெண்டுல்கராக மாற்றிய பதிவைப் பற்றியும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தோம்.
இஸ்லாத்தில் உள்ள முத்தலாக் பிரச்னை, இஸ்லாமியர் கல்வியில் பின் தங்கி இருப்பது போன்ற பல விபரங்களை பகிர்ந்து கொண்டோம். இவை எல்லாம் மார்க்கம் அறியாத சில மார்க்க அறிஞர்களின் தலையீட்டால் வந்தது என்று விளக்கினேன். இடையில் சோவைப் பற்றியும் பேச்சு வந்தது. காசு கொடுத்து நான் வாங்கிப் படிக்கும் பத்திரிக்கைகளில் துக்ளக்கும் ஒன்று. சோவின் கருத்துக்களில் எனக்குள் பல முரண்கள் இருந்தாலும் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக தொடர்ந்து படிப்பேன். இது போன்று பல விபரங்களையும் பகிர்ந்து கொண்டோம். களைப்பு தீர இடைஇடையே லெமன் டீயும் அருந்தி கொண்டோம்.
ஒன்பதரை மணிக்கு தாத்தா வந்தார். தாத்தாவையும் ராகவன் சார் சந்தித்து ஆசி பெற்றார். வீட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளது என்று கூறி எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார் தமிழ்மணத்தின் இளைய!, இனிய வலைப்பதிவர். என் அழைப்பை ஏற்றுவருகை புரிந்து என்னோடு இரண்டு மணி நேரம் பயனுள்ள வகையில் நேரத்தை செலவழித்த ராகவன் சாருக்கு நன்றிகள் பல.
எங்களின் சந்திப்பு சம்பந்தமாக ராகவன் அவர்கள் போட்ட பதிவு இங்கே
http://www.dondu.blogspot.com/2007/02/blog-post.html
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
நான் இந்துவாக மாறத்தான் வேண்டுமா!
நான் இந்துவாக மாறத்தான் வேண்டுமா!
//சுவனப்பிரியன் அவர்களும் ஒருநாள் உண்மை உணர்ந்து இறைவழியாம் அன்புவழியில் இந்துமதத்தில் இணைவார் என்றே விரும்புவோம்.//
www.ezhila.blogspot.com/2007/01/blog-post_26.html
நண்பர் எழில் என்னை இந்து மதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதில் தவறேதும் இல்லை. அழைப்புப் பணி என்பது யாரும் யாரையும் அழைக்கலாம். ஒரு தவறான இடத்தில் இருக்கும் ஒருவரை நேர்வழியின்பால் அழைப்பது அழைப்புப்பணி எனப்படும். நண்பர் எழிலின் விருப்பத்திற்கினங்க நான் திரும்பவும் இந்து மதத்துக்கு வந்தால் நான் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றை வரிசையாக பட்டியலிடுகிறேன்.
1.சாதி ஒரு பிரச்னை.
நான் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினால் எழில் என்னை எந்த சாதியில் சேர்த்துக் கொள்ளுவார்? என் ஊரைச்சுற்றி செட்டியார்களும் மூப்பனார்களும் அதிகமிருப்பதால் என் முன்னோர்கள் இந்த சாதிகளில் ஏதோ ஒன்றில் பிறந்திருக்கலாம். என் பழைய சாதி எது என்பதையே இஸ்லாமிய வரவால் மறக்கடிக்ப்பட்டிருக்கிறேன். உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் 'நீ ஒரு முஸ்லிமா?' என்ற ஒரு கேள்வியோடு முடிந்து விடும். ஆனால் நம் இந்தியாவிலேயே நீங்கள் ஒரு இந்து என்றால் அடுத்தாக 'நீ எந்த சாதி?' என்ற கேள்வியும் அடுத்து வருமல்லவா?
2.வழிபாட்டு முறையில் உள்ள வித்தியாசம்.
இன்று நான் சவுதியில் பல முறை தலைவராக நின்று பள்ளிவாயில்களில் தொழுகை நடத்தி இருக்கிறேன். என்னைப் பின்பற்றி சவுதி நாட்டவரும் எகிப்து ஆப்ரிக்கா பாகிஸ்தான் நாட்டவரும் தொழுதிருக்கிறார்கள். அவர்கள் என்னை ஒரு இந்தியன் என்று பார்க்கவில்லை. ஒரு முஸ்லிமாகத்தான் பார்த்தார்கள். நிற வெறி, குல வெறி போன்றவற்றை மறந்து உலக நாட்டவர் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றி அல்லவா? மெக்காவில் உள்ள கஃபா ஆலயத்துக்கு முதல் ஆளாக நீங்கள் சென்றால் மிக நெருக்கத்தில் இருந்து உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றலாம்.
அதே சமயம் நான் இந்து மார்க்கத்திற்கு மாறினால் 'ஸ்ரீரங்கம் கோவிலில் அனைத்து சாதியினரையும் கருவரை சமீபம் வழிபட அனுமதிக்க வேண்டும்' என்று எழிலோடு சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டி வரும். 'அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு' என்று நண்பர் எழிலோடு சேர்ந்து கோஷம் போட வேண்டி வரும். இவற்றை எல்லாம் நண்பர் எழில் மறந்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
3.இறைக் கோட்பாடு
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் மந்திரத்தின்படி இன்று ஏக இறைவனை வணங்கி இறைக் கோட்பாட்டில் எந்த குழப்பமும் இல்லாமல் இருக்கிறேன்.
நண்பர் எழிலின் கோரிக்கையை ஏற்று நான் இந்துவானால் எந்த தெய்வத்தை வணங்குவது? முருகனையா? பிள்ளையாரையா? ஐயப்பனையா?பிரம்மாவையா? விஷ்ணுவையா? நண்பர் எழில் விளக்க வேண்டும்.
இந்து மதத்தை விடுத்து நான் கிறித்தவனாக மாறினாலும் அங்கும் பிரச்னையே! நான் ஏசுவை வணங்குவதா? மேரியை வணங்குவதா? பரிசுத்த ஆவியை வணங்குவதா? பரலோக ராஜ்ஜியத்தில் இருக்கும் பிதாவை வணங்குவதா?
4.புரோகிதத்தை ஒழித்தது!
இந்து மத கோட்பாடுகளின் படி புரோகிதர் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது. இறைவனை வணங்குவதிலிருந்து, கல்யாணம், இறப்பு, பிறப்பு அனைத்திலும் புரோகிதர்கள் மூலமாகவே உங்களின் அனைத்து தேவைகளையும் இறைவனிடமிருந்து பெற முடியும்.
ஆனால் இஸ்லாத்தில் இத்தகைய நிலை இல்லை.
'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. யுக முடிவு நாளில் இறைவன் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களை நேர்வழிப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'
-குர்ஆன் 2 : 174
நான் இறைவனிடம் பிரார்த்திக்க எந்த இடைத்தரகரையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என் தாய் மொழியிலேயே என்னைப் படைத்த இறைவனிடம் என் தேவைகளையும் கோரிக்கைகளையும் வைக்க முடியும்.
நான் மேலே சுட்டிக்காட்டிய இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அனைத்தும் முன்பு இந்து மதத்தில் இருந்தவைகளே! கலாசார மாற்றத்தினால் ஒரு தெய்வக் கொள்கையிலிருந்து பல தெய்வக் கொள்ளைக்கு இன்று நம் நாடு சென்று விட்டது. மனிதர்களிலும் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளை இந்திய சமூகம் சுவீகரித்துக் கொண்டது. திரு மூலரும், சித்தர்களும் மேலும் நமது முன்னோர்களும் எத்தகயை கொள்கையை ஆதியில் கொண்டிருந்தார்களோ அந்த கொள்கைக்கு திரும்பி வாருங்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர் பின் பற்றிய ஓரிறைக் கொள்கையை ஏற்று இவ்வுலகிலும் மறு உலகிலும் சுவனத்தை அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திவனாக இப்பதிவை முடிக்கிறேன்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்
//சுவனப்பிரியன் அவர்களும் ஒருநாள் உண்மை உணர்ந்து இறைவழியாம் அன்புவழியில் இந்துமதத்தில் இணைவார் என்றே விரும்புவோம்.//
www.ezhila.blogspot.com/2007/01/blog-post_26.html
நண்பர் எழில் என்னை இந்து மதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதில் தவறேதும் இல்லை. அழைப்புப் பணி என்பது யாரும் யாரையும் அழைக்கலாம். ஒரு தவறான இடத்தில் இருக்கும் ஒருவரை நேர்வழியின்பால் அழைப்பது அழைப்புப்பணி எனப்படும். நண்பர் எழிலின் விருப்பத்திற்கினங்க நான் திரும்பவும் இந்து மதத்துக்கு வந்தால் நான் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றை வரிசையாக பட்டியலிடுகிறேன்.
1.சாதி ஒரு பிரச்னை.
நான் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினால் எழில் என்னை எந்த சாதியில் சேர்த்துக் கொள்ளுவார்? என் ஊரைச்சுற்றி செட்டியார்களும் மூப்பனார்களும் அதிகமிருப்பதால் என் முன்னோர்கள் இந்த சாதிகளில் ஏதோ ஒன்றில் பிறந்திருக்கலாம். என் பழைய சாதி எது என்பதையே இஸ்லாமிய வரவால் மறக்கடிக்ப்பட்டிருக்கிறேன். உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் 'நீ ஒரு முஸ்லிமா?' என்ற ஒரு கேள்வியோடு முடிந்து விடும். ஆனால் நம் இந்தியாவிலேயே நீங்கள் ஒரு இந்து என்றால் அடுத்தாக 'நீ எந்த சாதி?' என்ற கேள்வியும் அடுத்து வருமல்லவா?
2.வழிபாட்டு முறையில் உள்ள வித்தியாசம்.
இன்று நான் சவுதியில் பல முறை தலைவராக நின்று பள்ளிவாயில்களில் தொழுகை நடத்தி இருக்கிறேன். என்னைப் பின்பற்றி சவுதி நாட்டவரும் எகிப்து ஆப்ரிக்கா பாகிஸ்தான் நாட்டவரும் தொழுதிருக்கிறார்கள். அவர்கள் என்னை ஒரு இந்தியன் என்று பார்க்கவில்லை. ஒரு முஸ்லிமாகத்தான் பார்த்தார்கள். நிற வெறி, குல வெறி போன்றவற்றை மறந்து உலக நாட்டவர் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றி அல்லவா? மெக்காவில் உள்ள கஃபா ஆலயத்துக்கு முதல் ஆளாக நீங்கள் சென்றால் மிக நெருக்கத்தில் இருந்து உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றலாம்.
அதே சமயம் நான் இந்து மார்க்கத்திற்கு மாறினால் 'ஸ்ரீரங்கம் கோவிலில் அனைத்து சாதியினரையும் கருவரை சமீபம் வழிபட அனுமதிக்க வேண்டும்' என்று எழிலோடு சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டி வரும். 'அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு' என்று நண்பர் எழிலோடு சேர்ந்து கோஷம் போட வேண்டி வரும். இவற்றை எல்லாம் நண்பர் எழில் மறந்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
3.இறைக் கோட்பாடு
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் மந்திரத்தின்படி இன்று ஏக இறைவனை வணங்கி இறைக் கோட்பாட்டில் எந்த குழப்பமும் இல்லாமல் இருக்கிறேன்.
நண்பர் எழிலின் கோரிக்கையை ஏற்று நான் இந்துவானால் எந்த தெய்வத்தை வணங்குவது? முருகனையா? பிள்ளையாரையா? ஐயப்பனையா?பிரம்மாவையா? விஷ்ணுவையா? நண்பர் எழில் விளக்க வேண்டும்.
இந்து மதத்தை விடுத்து நான் கிறித்தவனாக மாறினாலும் அங்கும் பிரச்னையே! நான் ஏசுவை வணங்குவதா? மேரியை வணங்குவதா? பரிசுத்த ஆவியை வணங்குவதா? பரலோக ராஜ்ஜியத்தில் இருக்கும் பிதாவை வணங்குவதா?
4.புரோகிதத்தை ஒழித்தது!
இந்து மத கோட்பாடுகளின் படி புரோகிதர் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது. இறைவனை வணங்குவதிலிருந்து, கல்யாணம், இறப்பு, பிறப்பு அனைத்திலும் புரோகிதர்கள் மூலமாகவே உங்களின் அனைத்து தேவைகளையும் இறைவனிடமிருந்து பெற முடியும்.
ஆனால் இஸ்லாத்தில் இத்தகைய நிலை இல்லை.
'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. யுக முடிவு நாளில் இறைவன் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களை நேர்வழிப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'
-குர்ஆன் 2 : 174
நான் இறைவனிடம் பிரார்த்திக்க எந்த இடைத்தரகரையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என் தாய் மொழியிலேயே என்னைப் படைத்த இறைவனிடம் என் தேவைகளையும் கோரிக்கைகளையும் வைக்க முடியும்.
நான் மேலே சுட்டிக்காட்டிய இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அனைத்தும் முன்பு இந்து மதத்தில் இருந்தவைகளே! கலாசார மாற்றத்தினால் ஒரு தெய்வக் கொள்கையிலிருந்து பல தெய்வக் கொள்ளைக்கு இன்று நம் நாடு சென்று விட்டது. மனிதர்களிலும் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளை இந்திய சமூகம் சுவீகரித்துக் கொண்டது. திரு மூலரும், சித்தர்களும் மேலும் நமது முன்னோர்களும் எத்தகயை கொள்கையை ஆதியில் கொண்டிருந்தார்களோ அந்த கொள்கைக்கு திரும்பி வாருங்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர் பின் பற்றிய ஓரிறைக் கொள்கையை ஏற்று இவ்வுலகிலும் மறு உலகிலும் சுவனத்தை அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திவனாக இப்பதிவை முடிக்கிறேன்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்
Subscribe to:
Posts (Atom)