Followers

Wednesday, May 30, 2012

விந்து, சினை முட்டை கடன் பெறுவதிலும் சாதி பார்க்க வேண்டுமா?

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனிருத் மல்பானி தனக்கு ஒரு உயர் குல தம்பதியிடமிருந்து கோரிக்கை வந்ததாக சொல்லுகிறார். என்ன கோரிக்கை?

மன்ஷி கோக்ஷி - ஷர்மிளா கணேசன் என்ற இந்த தம்பதியினருக்கு குழந்தை பேறு இல்லை. எனவே டாக்டரை அணுகி தங்களுக்கு விந்து அல்லது கருமுட்டை தானமாக வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். அப்படி கோரிக்கை வைக்கும் போது தங்களின் சாதியை சேர்ந்தவர்களிடமிருந்து தானமாக பெற வேண்டும் என்ற கண்டிஷனையும் அந்த தம்பதிகள் மருத்துவரிடம் வைத்துள்ளனர். படித்த தம்பதியிடமிருந்து இப்படி ஒரு கோரிக்கை வந்தது தனக்கு ஆச்சரியத்தைத் தருவதாக டாக்டர் அனிருத் மீடியாவிடம் கூறியுள்ளார்.

பாட்னாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சவ்ரங் குமார் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது 'குழந்தையில்லாத தம்பதியர் தன்னிடம் விந்து கொடையோ அல்லது கரு முட்டை கொடையோ கேட்கும் போது சம்பந்தப்பட்டவர்களின் சாதியை கேட்டுத் தெரிந்து கொண்டு பிறகு வாங்கிச் செல்கின்றனர்' என்கிறார்.



திலிப் பாட்டீல் இது பற்றிக் கூறும் போது 'மும்பையில் பிராமணர்களின் விந்தையோ கருமுட்டையையோ வாங்குவதற்கே பலரும் பிரியப்படுகின்றனர்' என்கிறார். பிறக்கும் குழந்தைகள் அறிவார்ந்த முறையில் இருக்க வேண்டும் வளர வேண்டும் என்ற நம்பிக்கை இதற்கு காரணமாக இருக்கலாம்.


ஆனால் இந்திய மருத்துவ கழகம் விந்து தானம் செய்பவர்களின் மதத்தை மட்டுமே பதிந்து கொள்கிறது. சாதியை அவர்கள் குறிப்பெடுத்துக் கொள்வதில்லை. சில முஸ்லிம்கள் கூட தானம் கொடுப்பவர் ஷியா பிரிவா சுன்னி பிரிவா என்று விசாரித்து பிறகு ஏற்றுக் கொள்வதாக திலிப் பாட்டீல் கூறுகிறார்.
http://www.siliconindia.com/news/general/Indians-Shopping-for-Brahmin-Sperm-nid-116478-cid-1.html

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் –மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்
இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி

-இது ஔவையாரின் நல்வழி என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பொன்மொழி. சிறு வயதில் பள்ளியில் படித்த இந்த பழமொழி இன்றும் மனனமாக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் இன்னும் நடைமுறைக்குத்தான் வரவில்லை.


------------------------------------

மாநிறமான பெண்ணின் சினைமுட்டை ரூ. 10 ஆயிரம்... சிவப்பான இளம்பெண்ணின் சினைமுட்டை ரூ. 50 ஆயிரம்... லட்சணமான, கல்லூரி மாணவியின் சினைமுட்டை ரூ. ஒரு லட்சம்... கேரளப் பெண்ணின் சினைமுட்டை ரூ. 3 லட்சம்... இப்படி சினைமுட்டை வியாபார விபரீதம் மேலை நாடுகளில் அல்ல... நமது புதுச்சேரியில்தான் ஜரூராய் நடக்கிறது.


‘‘குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உருவாக்க வாடகைத் தாய், சினைமுட்டை தானம் போன்ற முறைகள் மருத்துவத் துறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் சிலரோ சினைமுட்டை தானத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் கரன்ஸி வேட்டைக்கு இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை இரையாக்குகிறார்கள்’

இது பற்றி புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையின் சீனியர் பெண் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம்.


‘‘வலுவில்லாத சினைமுட்டை, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு பிள்ளைப் பேறு கிடைப்பதில்லை. இப்படி குழந்தைக்காக ஏங்கும் மேல்தட்டு, நடுத்தர மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்ய தயாராக இருப்பதை சில மருத்துவ வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள்தான் சினைமுட்டை குறைபாடுள்ளவர்களுக்கு குழந்தைப் பேற்றை உருவாக்க வேறொரு பெண்ணிடமிருந்து சினைமுட்டையை பணம் கொடுத்து தானமாக பெறுகிறார்கள்.

ஆனால், இப்போது தானம் என்ற பெயரில் இது வியாபாரமாகிவிட்டதுதான் கொடுமை. சினைமுட்டையை தானமாகப் பெறுவதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சில் சில சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறது. சினைமுட்டை கொடுக்கும் பெண்ணிற்கு ஆஸ்துமா, இதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, ரத்த சோகை போன்ற நோய்கள் அல்லது பரம்பரை நோய் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகே சினைமுட்டையை எடுக்கவேண்டும். காரணம், ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து சினைமுட்டை எடுத்தால்தான், அதைப் பெறும் பெண்ணுக்குப் பிறக்கக்கூடிய குழந்தையும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

ஆனால், பணத்தாசை பிடித்த டாக்டர்கள், சினைமுட்டை தரும் பெண்களிடம் சுகர், ரத்த அழுத்தம், எச்.ஐ.வி. மாதிரியான சில பரிசோதனைகளை மட்டும் செய்துவிட்டு, சினைமுட்டைகளை எடுத்து விற்கிறார்கள்’’ என்றார் வேதனையோடு. அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் சிலரோ, “இந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டர்களில் பலர் சொந்தமாக கிளினிக்குகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களிடம் பணிபுரியும் நர்ஸ்கள், கம்பவுண்டர்களையே
சினைமுட்டை புரோக்கர்களாக பயன்படுத்துகிறார்கள்.

சினைமுட்டை கொடுக்கும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளம் விதவைகளுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையும், சிவப்பான இளம் பெண்களுக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையும், அழகான காலேஜ் பெண்களுக்கோ ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரையும், கேரளப் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் மூன்று
லட்சம் ரூபாய் வரையும் கொடுக்கப்படுகிறது.

சினைமுட்டையை விற்பதில் பெரும்-பாலோர் காலேஜ் பெண்கள்தான். இது-போன்ற சினைமுட்டை விற்பதால், உடம்பில் வெளிப்படை-யாக எந்த மாற்றமும் தெரியாது என்பதால் இடைவெளி விட்டு இந்த பெண்கள் சினைமுட்டைகளை தொடர்ந்து விற்றுவருகிறார்கள். சினைமுட்டையை, ஒரு பெண்ணிடமிருந்து எடுப்பதற்கு 10 நாட்கள் முன்பிருந்தே தொடர்ந்து ரூ. 600 மதிப்புள்ள ஹார்மோன் ஊசிகளைப் போடவேண்டும். அந்த ஊசிகளையும் இந்த அரசு ஆஸ்பத்திரியில் ஓசியில் போடுகிறார்கள். பிறகு தங் களுடைய கிளினிக்குக்கு வரச் சொல்லி, சினைமுட்டையை எடுத்துவிடுகிறார்கள். சினைமுட்டை கொடுப்பவர்களிடம் முதலில் பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்கிற டாக்டர்கள், பின்பு குறைந்த தொகையைக் கொடுத்து ஏமாற்றிவிடுகிறார்கள்.

புதுச்சேரியை அடுத்துள்ள ஒரு கிராமத்துப் பெண்ணிடம் சினைமுட்டை பெறுவதில் இந்த ஆஸ்பத்திரி டாக்டர்களான ஒரு பெண் டாக்டருக்கும் ஒரு ஆண் டாக்டருக்கும் கடந்த வாரம் பிரச்னை வெடித்து, அது வடக்கு பகுதி எஸ்.பி. வரை போய், அவர் தலையிட்டு ஒரு வகையாக அமுக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு டாக்டருக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்கள்.

இதுபற்றி புதுவையின் பிரபல பாலியல் குறைபாடு சிறப்பு மருத்துவரான பீட்டர் பால் அல்போன்-ஸிடம் பேசினோம். “சினைமுட்டை தானம் வெளிநாடுகளில் சாத்தியம். அங்கு சினைமுட்டை தானம் பண்ணுகிற பெண்களே இன்டர்நெட்டில் தன்னோட கூந்தல், தோல் நிறம், உருவ அமைப்பு போன்றவற்றையெல்லாம் சொல்லி விளம்பரம் செய்வார்கள். அதேபோல, இங்கே அந்த வேலையைச் செய்ய புரோக்கர்கள் இருப்பது வேதனையான விஷயம்.

திருமணமாகாத பெண்கள் பணத்திற்காக சினைமுட்டை கொடுக்க, அடிக்கடி ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்வதால்... பிற்காலத்தில் அப்பெண்களுக்கு உடல்ரீதியாகப் பல பிரச்னைகள் ஏற்படுவதோடு, அவர்களுக்கு பிள்ளை பிறக்கிற வாய்ப்புமில்லாமல் போகலாம்...’’ என்று எச்சரித்தார்.

இந்தச் சினைமுட்டை வியாபாரம் குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் திலிப்குமார் பாலிகாவின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். “சினைமுட்டை பிஸினஸ் பற்றி எந்த புகாரும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இருந்தாலும், இனி கவனமாக செயல்படுவோம்...” என்றார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜிடம் பேசினோம். “இது சம்பந்தமாக இயக்குனர் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி, இம்முறைகேட்டைத் தடுக்க
நடவடிக்கை மேற்கொள்கிறேன்’’ என்றார்.

இளம் பெண்களின் எதிர்-காலத்தையே ‘முட்டை’யாக்கக் கூடிய இந்த சினைமுட்டை வியாபார விபரீதத்தை உடனடியாக தடுக்காமல் இருப்பது, எதிர்கால சந்ததிகளுக்கு செய்யும் துரோகம்!
நன்றி : தமிழக அரசியல்

------------------------------------------

இது பற்றிய இஸ்லாமிய பார்வை என்ன?


கணவனின் விந்தையும் மனைவியின் கருமுட்டையையும் டெஸ்ட் ட்யூபில் வளர விட்டு குழந்தை பெற்றுக் கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் ஒரு பெண் தனது கருமுட்டையுடன் - கணவனல்லாத - அன்னிய ஆணின் உயிரணுவைச் சேர்க்க அனுமதிக்கலாமா? என்றால் அதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை!

மார்க்க சட்டதிட்டங்களை அறிந்து கொள்வதில் அன்றைய இஸ்லாமிய பெண்கள் எந்த அளவு ஆர்வமாக இருந்தனர் என்பதற்கு பின் வரும் நபி மொழிகள் சிறந்த எடுத்துக் காட்டுகளாக உள்ளது.

*உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளிப்புக் கடமையாகுமா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''ஆம்'' (விழித்தெழும்போது தன்மீது) அவள் நீரைக் கண்டால் (அவள் மீது குளிப்புக் கடமைதான்)'' என்று பதிலளித்தார்கள். உடனே நான், ''அல்லாஹ்வின் தூதரே! பெண்ணக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்படுமா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''உனது கை மண்ணைக் கவ்வட்டும்! பிறகு எப்படி அவளது சாயலில் குழந்தை பிறக்கிறது?'' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.*

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) இதேக் கருத்தில் ஆயிஷா (ரலி) உம்மு சுலைம் (ரலி) அனஸ் (ரலி) ஆகியோரின் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. (நூல்கள் - புகாரி,முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்)


*''ஆணின் நீர் (விந்து) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும்போது, ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்து விட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும். (இதற்கு மாறாக) பெண்ணின் நீர் (சினை முட்டை) ஆணின் நீரை
(விந்து உயிரணுவை) மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.*(நபிமொழியின் சுருக்கம். நூல் - முஸ்லிம்)


உண்மையில் வந்த கட்டுரை ஒன்று இந்த பதிவு சம்பந்தமாக மேலதிக விபரங்களைச் சொல்கிறது.



43 comments:

கோவி.கண்ணன் said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...

சுவனப்பிரியன் சார்,

என்ன எப்படி எங்கே வாங்கினாலும் அதை ஊதிவிட்டு கருவாக்குவது அல்லா தானே, இது போன்ற சாதி விந்துகளையும் சினை முட்டையும் ஊதிக் கருவாக்க வேண்டாம் என்று துவா செய்யுங்களே சார்.

பாவம் மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியப் பெண்ணை ஒரு காமுகன் கெடுத்தாக் கூட அவளுக்கும் கரு ஊதப்படுவது கொடுமையிலும் கொடுமை இல்லையா ?

*****

எழுத்துப் பிழைக் காரணமாக முந்தைய பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்

suvanappiriyan said...

திரு கோவிகண்ணன்!

//சுவனப்பிரியன் சார்ம்//

இது என்ன புது அடை மொழி :-(

//என்ன எப்படி எங்கே வாங்கினாலும் அதை ஊதிவிட்டு கருவாக்குவது அல்லா தானே, இது போன்ற சாதி விந்துகளையும் சினை முட்டையும் ஊதிக் கருவாக்க வேண்டாம் என்று துவா செய்யுங்களே சார்.//

'மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்' என்று முஹம்மதே கூறுவீராக!'
-குர்ஆன் 10:108

உங்கள் கேள்விக்கு நம்மை படைத்த இறைவன் என்ன அழகாக பதிலளிக்கிறான் பாருங்கள். இது தவறு இது சரி என்று விளக்கியும் விடுவதால் நேரான வழியையும் தவறான வழியையும் தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நேரான வழியில் செல்பவர் சொர்க்கம் செல்கிறார். தவறான பாதையை எடுத்துக் கொண்டவர் நரகம் செல்கிறார்.

சிராஜ் said...

ஸலாம் சகோ சுவனப்பிரியன்,

கருமுட்டையில் ஜாதி பார்ப்பது எனக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை...சுடுகாட்டிலே ஜாதி பார்ப்பவர்கள் நம் மக்கள்... இந்துவோ, கிறித்தவரோ, இஸ்லாமியரோ அல்லது வேரு யாருமோ, அனைவரும் சமம் என்று என்னாவிட்டால் அவர் உண்மையான கடவுள் நம்பிக்கையாளர் அல்ல...

சிராஜ் said...

தருமிலாம் இது போன்ற பதிவுகளுக்கு வந்து கமெண்ட் போட மாட்டார்களே....வசதியாக கண்டுக்காமலே விட்டு விடுவார்கள்... என்ன நேர்மையோ???

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம். டீக்கடையை வேற தொறக்கவே இல்லே! வாடகை கொடுத்து கட்டுப்படியாகுமா? :-)

//கருமுட்டையில் ஜாதி பார்ப்பது எனக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை...சுடுகாட்டிலே ஜாதி பார்ப்பவர்கள் நம் மக்கள்... இந்துவோ, கிறித்தவரோ, இஸ்லாமியரோ அல்லது வேரு யாருமோ, அனைவரும் சமம் என்று என்னாவிட்டால் அவர் உண்மையான கடவுள் நம்பிக்கையாளர் அல்ல...//

உண்மைதான் சகோ. எல்லோரும் ஆதமுடைய வழி தோன்றல் என்ற புரிதலுக்கு வரும்போதுதான் இது போன்ற குழப்பங்கள் தீரும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அதிரை சித்திக் said...

நவீன உலகில் மருத்துவமும் ,,பல தேடல்கள்

தொரடந்து கொண்டுதான் இருகின்றது ..சினை முட்டை

வியாபாரம் ..சுமைக்கு பெண் வேறென்றாலும் .சினை முட்டை

விற்றவள்தானே தாய் ..,ஆக கணவனின் விந்து எவளோ ஒருத்தியின்

முட்டையோடு .களவியல் கொள்கிறது ..,நவீன மாயம் ..இஸ்லாத்தை

ஏமாற்ற முடியாது ..என்ன இருந்தாலும் சினை முட்டை காரியின் இயல்பு குணம்தான்வரும்

ஈன்றவள் குணம் வராது தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் தன்மைதான்

சினை முட்டை சுமக்கும் சோகம் ..

suvanappiriyan said...

சகோ அதிரை சித்திக்!

//ஆக கணவனின் விந்து எவளோ ஒருத்தியின்

முட்டையோடு .களவியல் கொள்கிறது ..,நவீன மாயம் ..இஸ்லாத்தை

ஏமாற்ற முடியாது ..என்ன இருந்தாலும் சினை முட்டை காரியின் இயல்பு குணம்தான்வரும் //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சிந்திக்க உண்மைகள். said...

•சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க.

அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது

”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.

அதுக்கு என்ன அர்த்தம்.

”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.



.

பாகிஸ்தான்காரன் said...

பாஸு
உங்களை போலவே இன்னுமொரு மதவெறியர் இலங்கையில அமைச்சராயிருக்கிறாராம்.
அவருக்கு டோஸ் விட்டு இலங்கை தமிழ் எம்பி ஒருவர் கொடுத்த அறிக்கையை வாசியுங்கள்.
உங்களுக்கும் பொருந்தும். அதுக்காக நானோ இல்லை அந்த எம்பியோ கிறீஸ்தவரில்லை.

வெறிக்குட்டி
http://www.tamilwin.com/show-RUmqyFQVOWkqz.html

Anonymous said...

விந்து, சினை முட்டை கடன் பெறுவதிலும் சாதி பார்க்க வேண்டுமா? Intha thalaipirkkum neengal sollum kuran vasanathukkum enna sampantham,

suvanappiriyan said...

திரு ஞானி!

//பாஸு
உங்களை போலவே இன்னுமொரு மதவெறியர் இலங்கையில அமைச்சராயிருக்கிறாராம்.//

இன்று வரை மாற்று மத சகோதரர்களை நண்பர்களாகவும் உடன் பிறவா சகோதரர்களாகவும் பாவித்து பழகி வரும் நான் மத வெறியனா? தன் மதத்தை ஒருவன் முடிந்த வரை பின்பற்றுவது மதவெறியாகுமா?

மதவெறி என்பதற்கு உங்களின் அளவு கோல் என்ன? எந்த வகையில் அந்த லிஸ்டில் நான் வருகிறேன். கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன். விந்து தானம் பெறுவதில் கூட சாதி பார்க்க வேண்டுமா? இப்படி சென்றால் சாதியை ஒழிப்பது எப்படி என்று சிந்திப்பது மத வெறியாகுமா? என்னமோ போங்க.:-(

ரிஸாத் பத்ருத்தீன் பல சமய மக்களையும் சமமாக அரவணைத்து செல்வதால்தான் மீண்டும் மந்திரியாகி இருக்கிறார் என்று கேள்விப்படுகிறேன்.

suvanappiriyan said...

அமெரிக்காவின் குள்ளநரித் தனம்!

உள்ளாடைக்குள் வெடிகுண்டை மறைத்துவைத்திருந்த போது பிடிபட்டதாக அறிவிக்கப்பட்ட குண்டுதாரி உண்மையில் அமெரிக்க உளவுபிரிவினரின் ஆள்தான் என்று அமெரிக்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா நோக்கிச் செல்லும் விமானமொன்றை வெடிக்க வைப்பதற்காக யேமனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல்-கய்தா இயக்கத்தினரால் அனுப்பப்பட்ட குண்டுதாரி, அந்த இயக்கத்தக்குள் ஏற்கனவே ஊடுருவச் செய்யப்பட்டவர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டபடி, இவர் யேமனிலிருந்து வெளியேறி வெடிபொருளை சிஐஏ- உளவுப் பிரிவினரிடம் கையளித்துள்ளார்.
இதேவேளை, யேமனில் அல்-கைதாவினருக்கு எதிரான நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இராணுவ பயிற்சியாளர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
நவீன முறையில் வடிவமைக்கப்பட்டது
2009ம் ஆண்டு நத்தார் தினத்தன்றும் விமானத்தை வெடிக்க வைப்பதற்காக உள்ளாடைக்குள் வெடிபொருளை மறைத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் தற்கொலை குண்டுதாரி ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர்.


அதனை ஒத்த விதத்தில், ஆனால் அந்த வெடிகுண்டை விட இன்னும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட உள்ளாடை வெடிபொருளைக் கொண்டு விமானத் தாக்குதலை நடத்த அரேபிய தீபகற்பத்தைச் சேர்ந்த அல்-கைதா இயக்கத்தினர் திட்டமிட்டிருப்பதாக கடந்த மாதம் அமெரிக்க உளவுத்துறைக்குத் தெரியவந்தததாக கூறப்படுகிறது.
இப்போது புதிதாக பிடிபட்டிருக்கின்ற குண்டுதாரி, சவூதி அரேபியாவில் இயங்கும் உளவுப்பிரிவினரால் யேமனில் உள்ள அல்-கைதா இயக்கத்தினருடன் ஊடுருவுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா செல்லும் விமானமொன்றை தற்கொலைக் குண்டுதாக்குதல் மூலம் வெடிக்க வைப்பதற்கு தான் தயாராகவுள்ளதாக அரேபிய தீபகற்ப பிராந்தியத்தில் இயங்கும் அல்-கைதா இயக்கத்தினரை நம்பவைக்கும் வேலை இவருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தாக வாஷிங்டனிலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பின்னர், அல்-கைதாவினரால் கொடுக்கப்பட்ட வெடிபொருளை ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டபடி அவர் சிஐஏ மற்றும் சவூதி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
இப்போது, அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் (எஃப் பி ஐ) குறித்த வெடிபொருளை ஆராய்ந்துவருகின்றனர்.
குறித்த வெடிபொருள், கடுமையான சோதனைகளின்போதும் இலகுவில் கண்டுபிடிக்க முடியாதபடி உள்ளடைக்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுப்பிரிவுக்காக வேலை செய்தவர் ஏற்கனவே வழங்கியிருந்த தகவல்களின்படியே, கடந்த ஞாயிறன்று ட்ரோன் தாக்குதலை நடத்தி அல்-கைதா தலைவர் ஒருவரை சிஐஏ கொன்றதாகவும் அமெரிக்கச் செய்திகள் தெரிவித்துள்ளன.
9 மே, 2012
BBC -TAMIL

கோவி.கண்ணன் said...

//உங்கள் கேள்விக்கு நம்மை படைத்த இறைவன் என்ன அழகாக பதிலளிக்கிறான் பாருங்கள். இது தவறு இது சரி என்று விளக்கியும் விடுவதால் நேரான வழியையும் தவறான வழியையும் தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நேரான வழியில் செல்பவர் சொர்க்கம் செல்கிறார். தவறான பாதையை எடுத்துக் கொண்டவர் நரகம் செல்கிறார்.//

உஙக் இறைவன் என்னையும் படைச்சானா இல்லையான்ன கேள்வியை விடுங்க, நான் அதை உங்களிடம் கேட்கவும் இல்லை.

தவறான வழி நேரான வழி என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள், 100 ஆண்டுகளுக்கு முன்பு தவறான வழியாக இருந்தவை இன்றைக்கு சரியான வழியாகக் கூட இருக்கும். உதாரணத்திற்கு கல்லால் எறிந்து கொல்லுதல் இன்னிக்கு தேதிக்கு மன்னிப்பது மனித இயல்பு என்று கொடுமையான தண்டனைகளை (சில நாடுகளில்) நிறுத்திவிட்டார்கள், அப்போ முன்பு இருந்தது சரியான வழி தற்பொழுது இருப்பது தவறான வழியா ?

முன்பு அடங்காத மனைவியை கணவன் அறையலாம் (உங்க பாசையில் லேசாக அடிக்கலாம்) என்பது சரியான வழியாக இருந்தது, இன்னிக்கு அது காட்டுமிரண்டிதனம் பெண்ணும் மனித பிறப்பே என்று பரவலாக எண்ணப்படுகிறது, எது சரியான வழி எது தவறான வழி ?

தவிர

ஒருவர் சாலையின் ஓரத்தில் நடந்து போகும் போது பின்னால் வரும் வாகனம் ஓட்டுபவரின் வாகனத்தில் திடீர் கோளாறு, சாலையில் செல்பவர் மீது மோதி சாலையில் செல்பவரை கொன்றுவிடுகிறார். யாருக்கு தண்டனை ? மனிதன் இயந்திரத்தை கண்டிபிடித்ததால் விபத்து நடந்தது யாரும் தப்பு செய்யவில்லை என்று தீர்ப்பு எழுதச் சொல்லுவிங்களா ? ஒரு பாவமும் அறியாமல் விபத்தில் செத்துப் போனவனுக்கு உங்க கடவுள் சார்பில் என்ன இழப்பீடு கிடைக்கும் ? அவன் இஸ்லாமியனாக இல்லாத பட்சத்தில் அவனுக்கு நித்திய கன்னிகையும் கிடைக்காது என்பது தான் சோகம்.

*****

உங்க அல்லாவே குலம் கோத்திரம் நான் தான் படைத்தேன் என்று மார்தட்டும் போது நீங்க சாதி விந்துவைப் பற்றிப் பேசுவது கொள்கை மோசடியாக இருக்கிறது, தவிர ஒரு இந்திய இஸ்லாமியனின் விந்து சவுதி அரச குடும்பப் பெண்ணின் கருமுட்டையில் சேருமா ? சேராதா ? ( ஐ மீன் திருமணம் செய்து தான்) சேராமல் இருந்தால் அதுக்கு யார் செய்த தடை ?

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//உதாரணத்திற்கு கல்லால் எறிந்து கொல்லுதல் இன்னிக்கு தேதிக்கு மன்னிப்பது மனித இயல்பு என்று கொடுமையான தண்டனைகளை (சில நாடுகளில்) நிறுத்திவிட்டார்கள், அப்போ முன்பு இருந்தது சரியான வழி தற்பொழுது இருப்பது தவறான வழியா ?//

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுக்கும் அத்வானி கூட 'இந்தியாவில் குற்றங்கள் குறைய வேண்டுமானால் அரபு நாட்டு சட்டங்களை இங்கும் அமுல்படுத்த வேண்டும்' என்று உள்துறை மந்திரியாக இருந்தபோது சொன்னதை மறந்து விட்டீர்களா? நிங்கள் குற்றவாளியின் தரப்பில் இருந்து மட்டும் பேச வேண்டாம். பாதிக்கப் பட்டவனையும் நினைத்துப் பாருங்கள். ஒரு குற்றவாளி கடுமையாக தண்டிக்க படுவதால் பல மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் தரப்படுகிறது.

தமிழகத்தில் சட்டம் சரி வர செயல்படாததால் பெண்கள் இரவில் தனியாக செல்ல முடிகிறதா?பெரும தவறு செய்பவர்கள் இரண்டு பேரை பல பேர் முன்னிலையில் தலையை வெட்டுங்கள். அதன் பிறகு பாருங்கள். குற்றங்கள் தானாக குறைய ஆரம்பிக்கும்.

சவுதியில் தொழுகை நேரத்தில் வெளியில் பரப்பப் பட்டிருக்கும் விலையுயர்ந்த சாதனங்களின் மேல் சிறிய போர்வையை போர்த்தி விட்டு செல்வார்கள். யாருக்கும் திருட வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. ஒரு சில ஆப்ரிக்கர்கள் திருடினாலும் காவலர்களால் உடன் பிடிக்கப்படுவார்கள்.

//முன்பு அடங்காத மனைவியை கணவன் அறையலாம் (உங்க பாசையில் லேசாக அடிக்கலாம்) என்பது சரியான வழியாக இருந்தது, இன்னிக்கு அது காட்டுமிரண்டிதனம் பெண்ணும் மனித பிறப்பே என்று பரவலாக எண்ணப்படுகிறது, எது சரியான வழி எது தவறான வழி ?//

தவறான நடத்தை உடைய மனைவிக்குத்தான் அந்த சட்டம். உலகம் முழுவதும் சுத்தமாக மனைவியை இன்று கணவர்கள் அடிப்பதில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? இன்று பல நவீன முறைகள் வந்து விட்டதே! தினமும் பத்திரிக்கையில் படிக்கிறோமே!

//ஒருவர் சாலையின் ஓரத்தில் நடந்து போகும் போது பின்னால் வரும் வாகனம் ஓட்டுபவரின் வாகனத்தில் திடீர் கோளாறு, சாலையில் செல்பவர் மீது மோதி சாலையில் செல்பவரை கொன்றுவிடுகிறார். யாருக்கு தண்டனை ?


கவனக்குறைவாக வாகனம் ஓட்டியவருக்குத்தான் தண்டனை. மித வேகத்தில் சென்றிருந்தால் வண்டியை கண்ட்ரோல் பண்ணியிருக்க முடியுமே!

//உங்க அல்லாவே குலம் கோத்திரம் நான் தான் படைத்தேன் என்று மார்தட்டும் போது நீங்க சாதி விந்துவைப் பற்றிப் பேசுவது கொள்கை மோசடியாக இருக்கிறது//

ஒருவரை யொருவர் புரிந்து கொள்வதற்காக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக என்று அடுத்து வரும் வசனத்தைப் பார்க்கவில்லையா? சீனனையும், மலாய்காரனையும், இந்தியனையும், ஆப்ரிக்கனையும் வரிசையாக நிற்க வைத்தால் யாரும் சொல்லாமலே நாம் கண்டு பிடித்து விடுவோம். இதற்காகத்தான் குலம் கோத்திரங்கள் உருவானது. ஆனால் நீ சூத்திரன்: நீ கீழானவன்: நீ பஞ்சமன்: நான் பிராமிண்: கோவிலில் கூட எனக்குதான் முதல் மரியாதை என்று சொன்னது மனிதனின் தவறு. இதை இறைவன் சொல்லவில்லை. கோவிலுக்கு நீங்கள் போகும் பொது பிராமணர்களால் சொல்லப்படும் ஒரு மந்திரத்தை 'உண்மைகள்' பின்னூட்டமாக தந்திருப்பதையும் படித்துப் பாருங்கள். இது மனிதனாக இறைவன் பெயரால் எழுதிக் கொண்டது. எனவே இரண்டையும் வேறு படுத்திப் பார்க்க வேண்டும்.

//தவிர ஒரு இந்திய இஸ்லாமியனின் விந்து சவுதி அரச குடும்பப் பெண்ணின் கருமுட்டையில் சேருமா ? சேராதா ? ( ஐ மீன் திருமணம் செய்து தான்) சேராமல் இருந்தால் அதுக்கு யார் செய்த தடை ?//

இஸ்லாம் தடை அல்ல. எனது மும்பை நண்பன் சலீம் ஒரு சவுதி பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறான். பல பாகிஸ்தானிகள் திருமணம் முடித்து இந்நாட்டு சிடிசனாகவே மாறியுள்ளனர். மொழிதான் தடையாக இருக்கும். எனவேதான் பலர் விரும்புவதில்லை. முகமது நபி யூதப் பெண்ணையே மணந்து அழகாக வழி காட்டியிருக்கிறாரே!

suvanappiriyan said...

திரு அனானி!

//விந்து, சினை முட்டை கடன் பெறுவதிலும் சாதி பார்க்க வேண்டுமா? Intha thalaipirkkum neengal sollum kuran vasanathukkum enna sampantham,//

நான் குறிப்பிட்டிருப்பது குர்ஆன் அல்ல. அதற்கு விரிவுரையாக அமைந்த நபி மொழிகள்.

இன்றைய சினை முட்டை தானம் அல்லது விந்து தானத்தில் கணவனோ மனைவியோ யாரோ ஒருவரின் உயிரணுதான் செல்கிறது. இதன் மூலம் வேறு ஒரு ஆணிண் விந்தோ அல்லது கரு முட்டையோ கலந்து தான் குழந்தை உண்டாகிறது. ஆணுக்கு எவ்வாறு ஸ்கலிதம் உண்டாகுமோ அதுபோல் பெண்ணுக்கும் ஸ்கலிதம் உண்டாகும் என்பதைத்தான் அந்த நபி மொழி விளக்குகிறது. இதன் மூலம் விந்து தானம் அல்லது சினை முட்டை தானம் பெற்று பெறப்படும் குழந்தை சட்டபூர்வமாக தம்பதிகளின் குழந்தை ஆகாது என்பதை இந்த நபி மொழி நமக்கு விளக்குகிறது. எனவே முஸ்லிம்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதை விளக்கவே அந்த நபிமொழியை பதிந்தேன்.

Anonymous said...

காஞ்சிபுரம் கோயில்கள் – சாதி கட்டுமானத்திற்கு ஒரு உதாரணம்

காஞ்சிபுரத்தை சேர்ந்த வைணவ கோவில்களில் பிரசாதம் வழங்குவதிலும், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி வழிபடுவதிலும் கடைபிடிக்கப்படும் சாதி அடிப்படையிலான ஒதுக்குமுறை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள அந்நகரைச் சேர்ந்த திரு D மாதவன் என்பவரிடம் பேசினோம். இந்த சாதிய முறையை எதிர்த்து கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறார் வைணவ அடியாரான திரு மாதவன்.

2003-ம் ஆண்டுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் இருக்கும் சுமார் 14 வைணவ கோயில்களில் பிரசாதம் (புளியோதரை, பொங்கல், சுண்டல், இட்லி, வடை, பாதுஷா, லட்டு, அக்கார வடிசல்) வழங்கும் போது பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்களை உட்கார வைத்து பரிமாறும் அதே நேரத்தில் மற்ற சாதியினரை உட்கார விடாமல் மிரட்டி எழுப்பி நிற்க வைத்துதான் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

கோயிலில் வழிபாடு, உற்சவ நேரத்தில் பாடல்களை பாடும் பார்ப்பன சாதியைச் சேர்ந்த ஊழியர்கள் வழிபாட்டு பாடல்களை பாடுவார்கள். கடைசி 2 பாடல்களை பாடும்போது எல்லோரும் எழுந்து நிற்கும் படி மணியக்காரர் (கோவில் மேலாளர்) உரத்த குரலில் உத்தரவு போடுவார். அப்போது யாரும் உட்கார்ந்திருக்க முடியாது.

பாடல்களை பாடி முடித்து பிரசாதம் வந்தவுடன் மேனேஜர் ‘எழுந்தருளி இருங்கோ’ என்று அழைப்பார். உடனேயே பார்ப்பன சாதியினர் அனைவரும் உட்கார்ந்து விடுவார்கள். மற்றவர்கள் உட்கார அனுமதி கிடையாது. யாராவது உட்கார்ந்தால் மிரட்டி எழுந்திருக்க சொல்வார்கள்.

வரதராஜபெருமாள் கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் தேவராஜ சுவாமி திருக்கோவிலில் தீர்த்தம் வழங்கும் போது பார்ப்பனர்களுக்கு முறையாக வரிசையாக கொடுத்து விட்டு மற்ற சாதியினரை அடித்துப் பிடித்து தீர்த்தம் பெற்றுக் கொள்ள வைப்பார்கள்.

சாதி பாகுபாட்டை எதிர்த்து அடியார்கள் போராட்டம்
பஞ்ச சமஸ்காரம் என்ற முறையில் வைணவ அடியார்களாக தீட்சை பெற்றுக் கொண்ட பக்தர்கள் பலர் இராமானுஜரை பின்பற்றி பக்தி மார்க்கத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான திரு மாதவன் மற்றும் உடன் சேர்ந்த அடியார்கள் பலர் இந்த நடைமுறையை கண்டித்து அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்கள். கோயிலில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற நாட்டின் சட்டத்தையும், பொதுவான மனித உரிமையையும் அடிப்படையாகக் கொண்டு பிரசாதம் வழங்கும் முறையில் பாகுபாடு, தீர்த்தம் வழங்குவதில் அலட்சியம் போன்றவற்றை தட்டிக் கேட்டார்கள்.
தமது உரிமையை நிலைநாட்ட வலுக்கட்டாயமாக உட்கார்ந்து பிரசாதம் வாங்க காத்திருக்க முயற்சி செய்தபோது, நின்று கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்து விட்டு உட்கார்ந்திருப்பவர்களை புறக்கணித்து விட்டு போய் விட்டார்கள் கோவில் ஊழியர்கள்.

2003-ம் ஆண்டு திருக்கச்சி நம்பி திருமால் அடியார் சேவை சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி சின்ன காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். காவல் துறையின் விசாரணை முடிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் கட்டத்தில் அதிகார மையங்களில் இருக்கும் பார்ப்பனர்களின் தலையீட்டால் குற்றச்சாட்டு முதல் அறிக்கை தாக்கல் செய்யப்படாமலேயே கைவிடப்பட்டது.

http://www.vinavu.com/2012/05/30/kanchi-report

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

காசுக்காக இதை எல்லாம் எங்கோ விற்கிறார்கள் என்ற நிலை பொய்.நமது மாநிலத்திலேயே இதை விற்கிறார்கள் எனபது நிச்சயம் ஒரு அதிர்ச்சிதான். பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கூட்டம் இருக்கும் பொழுது தவறு எங்கு தான் நடக்காது....


புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார் www.tvpmuslim.blogspot.com

suvanappiriyan said...

சகோ திருவாளப்புத்தூர் முஸ்லிம்!

//காசுக்காக இதை எல்லாம் எங்கோ விற்கிறார்கள் என்ற நிலை பொய்.நமது மாநிலத்திலேயே இதை விற்கிறார்கள் எனபது நிச்சயம் ஒரு அதிர்ச்சிதான். பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கூட்டம் இருக்கும் பொழுது தவறு எங்கு தான் நடக்காது....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

தருமி வரயில்லை என குமுறுகிறார் சகோ சிராஜ் . அவரது வாட்டத்தை போக்க இந்த பின்னூட்டம்.

காபிர்கள் இப்படி சாதி பார்ப்பது ஒரு வகையில் இசுலாத்திற்கு நல்லதே இதை வைத்து யாவரத்தை டெவலப் பண்ணலாம். ஆனால் முகமின்களிடையே பிரிவினை எனும் போது ஐயகோ! நெஞ்சு கொதிக்கிறதே!சில முஸ்லிம்கள் கூட தானம் கொடுப்பவர் ஷியா பிரிவா சுன்னி பிரிவா என்று விசாரித்து பிறகு ஏற்றுக் கொள்வதாக டாகுடர் கூறுகிறாரே, ஐயோ! யா அல்லாஹ்!

Anonymous said...

//இன்று வரை மாற்று மத சகோதரர்களை நண்பர்களாகவும் உடன் பிறவா சகோதரர்களாகவும் பாவித்து பழகி வரும் நான் மத வெறியனா? தன் மதத்தை ஒருவன் முடிந்த வரை பின்பற்றுவது மதவெறியாகுமா?//
உங்க மதத்தை நீங்கள் பின்பற்றுவது எந்த தவறும் இல்லை. ஆனால் நான் மட்டும் தான் உணமையான மதத்தை பின்பற்றுகிறேன், மற்றவர்கள் எல்லாம் பொய் மார்க்கங்களை பின்பற்றுகிறார்கள் என்று பிறரை பார்த்து கூறுவதற்கு பெயர்தான் மத வெறி. நீங்கள் உட்பட எல்லா முஸ்லிம்களும் அதை தவறாமல் செய்கிறீர்கள். அடுத்தவர் மத நம்பிக்கையை குறை கூறும் உரிமை எவர்க்குமே கிடையாது. அதை மிக சிறப்பாக செய்து வரும் உங்களை போன்றவர்களை மத வெறியர்கள் என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும். அது எப்படி பச்சை குழந்தை போல 'நான் மத வெறியனா' என்று கேட்கிறீர்கள். பிற மதங்கள் தவறு, எனது மதம் மட்டுமே உண்மை என்று ஒருவனுக்கு எண்ணம் வந்தாலே அவன் மத வெறியன் தான். மேலும், அல்லாதான் காபிர்களுடன், பழக வேண்டாம் பிற மதத்தவருடன் தொடர்பு கொள்ள வேண்டாம் குர்ஆனில் கூறி இருக்கிறாரே, குரானை வரிக்கு வரி கடைபிடித்து வரும் நீங்கள், மற்று மதத்தவர்களுடன் சகோதரனாக, நண்பனாக பழகுகிறேன் என்று கூறினால் அதை எப்படி உண்மை என்று ஏற்று கொள்ள முடியும். அப்படி நிஜமாகவே மாற்று மதத்தவர்களுடன் பழகினால் நீங்கள் குரான் சொல்லும் கட்டளையை கடைபிடிக்கவில்லை என்று நினைக்கிறன். அல்லாவின் கட்டளையை இப்படி மீறலாமா சுவனம்.

George said...

//புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார் www.tvpmuslim.blogspot.com//


உங்களுக்கெல்லாம் தின்ற பிரியாணி ஜீரணம் ஆகாமல் இருக்கும்போது இதுபோல எதாவது எழுத தோன்றுமா? எங்களுடைய இரட்சிப்பை பற்றி நீங்கள் கவலை படுவதை விட்டு விட்டு, முகமது ஏன் இத்தனை கல்யாணம் கட்டிகிட்டாரு என்று ஒரு விளக்க கட்டுரை எழுதலாமே. ஏன் என்றால் அந்த சர்ச்சை தான் இன்னிக்கு வரைக்கும் ஒரு முடிவே இல்லாம போய்க்கிட்டே இருக்கு. இயேசுவை பற்றியும் அவர் இரட்சிப்பாரா இல்லையா என்பதை பற்றியும் நாங்கள் பார்த்து கொள்கிறோம். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்.

suvanappiriyan said...

திரு ஜார்ஜ்!

//உங்களுக்கெல்லாம் தின்ற பிரியாணி ஜீரணம் ஆகாமல் இருக்கும்போது இதுபோல எதாவது எழுத தோன்றுமா? எங்களுடைய இரட்சிப்பை பற்றி நீங்கள் கவலை படுவதை விட்டு விட்டு,//

நாங்கள் எப்படி விட முடியும்? சுவிஷேசக் கூட்டங்கள் 'ஏசு அழைக்கிறார்' என்று ஒவ்வொரு ஊரிலும் நீங்க்ள பிரசாரம் செய்வதில்லையா? முஸ்லிம் இந்துக்களின் வீடுகளில் திடீரென புகுந்து நோட்டீஸ் கொடுப்பதும 'ஈஸா நபியைப் பற்றி பேச வந்திருக்கிறோம்' என்று கூறி கன்னியாஸ்திரிகள் தங்கள் பிரசாரத்தை தொடங்குவதில்லையா? இப்படி நீங்கள் எதை பிரசாரம் பண்ணுகிறீர்கள்? ஏசு நாதர் சொன்னதையா? தன்னை வணங்கச் சொல்லி பைபிளில் ஏதாவது ஒரு இடத்திலாவது ஏசு உங்களை வற்புறுத்துகிறாரா? இப்படி உண்மையில்லாத விஷயத்தை பொதுவில் நீங்கள் கொண்டு வரும் அதை விளக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையல்லவா?

எனவே முதலில் உங்கள் தரப்பில் சென்று பிரியாணி செரிக்கவில்லை என்றால் ஏன் முஸ்லிம் வீடுகளுக்கும் இந்துக்களின் வீடுகளுக்கும் செல்கிறீர்கள் என்று கேட்டு விட்டு பிறகு எங்களிடம் வரவும்.

//முகமது ஏன் இத்தனை கல்யாணம் கட்டிகிட்டாரு என்று ஒரு விளக்க கட்டுரை எழுதலாமே. ஏன் என்றால் அந்த சர்ச்சை தான் இன்னிக்கு வரைக்கும் ஒரு முடிவே இல்லாம போய்க்கிட்டே இருக்கு.//

உங்கள் ஆசையை நிறைவேற்ற சனி ஞாயிறுகளில் முகமது நபி பண்ணிய திருமணத்தைப் பற்றிய ஒரு பதிவும் இடுகிறேன்.

//இயேசுவை பற்றியும் அவர் இரட்சிப்பாரா இல்லையா என்பதை பற்றியும் நாங்கள் பார்த்து கொள்கிறோம். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்.//

இவ்வளவு கோபப்படுவதற்கு பதில் அந்த பதிவில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கலாமே! அது விருப்பமில்லை என்றால் உங்கள் ஆட்கள் மாற்று மதத்தவர்களிடம் வந்து பிரசாரம் செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள்.

suvanappiriyan said...

அனானி!

//உங்க மதத்தை நீங்கள் பின்பற்றுவது எந்த தவறும் இல்லை. ஆனால் நான் மட்டும் தான் உணமையான மதத்தை பின்பற்றுகிறேன், மற்றவர்கள் எல்லாம் பொய் மார்க்கங்களை பின்பற்றுகிறார்கள் என்று பிறரை பார்த்து கூறுவதற்கு பெயர்தான் மத வெறி. நீங்கள் உட்பட எல்லா முஸ்லிம்களும் அதை தவறாமல் செய்கிறீர்கள். அடுத்தவர் மத நம்பிக்கையை குறை கூறும் உரிமை எவர்க்குமே கிடையாது. அதை மிக சிறப்பாக செய்து வரும் உங்களை போன்றவர்களை மத வெறியர்கள் என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.//

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' இது நமது முன்னோர்களின் வணக்கமுறை: பண்பாட்டு முறை: இன்று இந்து மதம் அந்த நிலையிலா இருக்கிறது. நித்தியானந்தா தினமும் விடும் அறிக்கைகளையும் நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். இன்றும் காஞ்சி கோவிலில் தீண்டாமை கடை பிடிக்கப்படுவதை வினவு பதிவில் பார்த்தீர்கள் அல்லவா? இப்படி தவறுகள் அரங்கேறும் போது தமிழன் என்ற முறையில் அதனை விமரிசிக்க எனக்கு உரிமை இருக்கிறது அல்லவா? நானும் மொழியால் தமிழன்: இனத்தால் திராவிடன்: மதத்தால் முஸ்லிம்:

//மேலும், அல்லாதான் காபிர்களுடன், பழக வேண்டாம் பிற மதத்தவருடன் தொடர்பு கொள்ள வேண்டாம் குர்ஆனில் கூறி இருக்கிறாரே, குரானை வரிக்கு வரி கடைபிடித்து வரும் நீங்கள், மற்று மதத்தவர்களுடன் சகோதரனாக, நண்பனாக பழகுகிறேன் என்று கூறினால் அதை எப்படி உண்மை என்று ஏற்று கொள்ள முடியும். அப்படி நிஜமாகவே மாற்று மதத்தவர்களுடன் பழகினால் நீங்கள் குரான் சொல்லும் கட்டளையை கடைபிடிக்கவில்லை என்று நினைக்கிறன். அல்லாவின் கட்டளையை இப்படி மீறலாமா சுவனம்.//

எந்த இடத்தில் இப்படி ஒரு வசனம் வருகிறது என்று வசன எண்களோடு அறியத் தாருங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்.

Anonymous said...

///முகமது ஏன் இத்தனை கல்யாணம் கட்டிகிட்டாரு என்று ஒரு விளக்க கட்டுரை எழுதலாமே. ஏன் என்றால் அந்த சர்ச்சை தான் இன்னிக்கு வரைக்கும் ஒரு முடிவே இல்லாம போய்க்கிட்டே இருக்கு.///

இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் திருமணங்க ளைப்பற்றி அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம்களிடமோ முஸ்லிமல்லாதவர் களிடமோ சர்ச்சை இல்லை, வீணாக அலட்டிக்கொள்ளும் உங்களைப் போன்றவர்களைத் தவிர.

விளக்கக் கட்டுரை என்ன, நூல் வடிவிலும் இன்னும் பல வடிவங்களிலும் தாராளமாக உலகெங்கும் நீங்கள் விரும்பிய பாஷையில் கிடைக்கிறது. படித்துத் தெளிவு பெறுங்கள்.

///இயேசுவை பற்றியும் அவர் இரட்சிப்பாரா இல்லையா என்பதை பற்றியும் நாங்கள் பார்த்து கொள்கிறோம். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்///

உயிருடன் இருக்கும்போதே பைபிள் கூறும் இயேசு எதிரிகளிடமிருந்து தப்புவதற்கு தடுமாறுகிறார். யூதர்கள் ஏசுவைக் கொல்லுவதற்காகத் துரத்தும்போதுகூட தலைதெறிக்க அவரால் ஓடத்தான் முடிந்தது. அவரால் தன்னையே இரட்சிக்க முடியவில்லை. பைபிள் பிரகாரம், ஏசு கொல்லப்படும்போதுகூட, தேவனே ஏன் என்னை கைவிட்டுவிட்டீர் எனக் கதறிக் கண்ணீர் வடிக்கிறார். அவராலேயே தன்னையே காத்துக் கொள்ள முடியவில்லை.

ஆனால், அவரின் இரட்சிப்புக் கிடைக்கும் என்று நம்பும் ஏமாளிகளாகவே இன்றும் தற்போதுள்ள கிறிஸ்தவர்கள் நிலை.

ஏசுவின் மீள்வருகையின்போது, அவரைப் போலியாக நம்பிய இன்றைய கிறிஸ்தவர்களை மோசமான வார்த்தைகளினால் திட்டி துரத்தி விடுவார் என்று பைபிளே சொல்லுது.

ஏசுவின் இரட்சிப்பின் இலட்சணம் இதுதான்!

- Ismath

Anonymous said...

ஜோர்ஜ்,

///உங்களுக்கெல்லாம் தின்ற பிரியாணி ஜீரணம் ஆகாமல் இருக்கும்போது இதுபோல எதாவது எழுத தோன்றுமா?///


அவரின் பேச்சைக் கேட்டு, மதுவை ஊற்றினால் தெருவில் புரளத்தான் முடியும்.

பிற்பாடு, அம்புலன்சால்தான் இரட்சிப்பை அடைய முடியும்.

பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு யாரினதும் இரட்சிப்பு அவசியப்படாது.

கோவி.கண்ணன் said...

// இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுக்கும் அத்வானி கூட 'இந்தியாவில் குற்றங்கள் குறைய வேண்டுமானால் அரபு நாட்டு சட்டங்களை இங்கும் அமுல்படுத்த வேண்டும்' என்று உள்துறை மந்திரியாக இருந்தபோது சொன்னதை மறந்து விட்டீர்களா? நிங்கள் குற்றவாளியின் தரப்பில் இருந்து மட்டும் பேச வேண்டாம். பாதிக்கப் பட்டவனையும் நினைத்துப் பாருங்கள். ஒரு குற்றவாளி கடுமையாக தண்டிக்க படுவதால் பல மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் தரப்படுகிறது. //

பார்பன பாசிஸ்டுகள் மற்றவர்களுக்கான தண்டனை என்றால் அப்படித்தான் தீர்ப்பு சொல்லுவாங்க, காஞ்சிபுரம் சங்கராச்சாரிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்டால் வாயையும் அதையும் மூடிக் கொள்ளுவார்கள், கோவை குண்டுவெடிப்பு பாசாவுக்கும் மதானிக்கு தூக்கு தண்டனை கொடுக்கலாமா என்று கேட்டால் உங்களைப் போன்றோர் மூடிக் கொள்வர்.

//தமிழகத்தில் சட்டம் சரி வர செயல்படாததால் பெண்கள் இரவில் தனியாக செல்ல முடிகிறதா?பெரும தவறு செய்பவர்கள் இரண்டு பேரை பல பேர் முன்னிலையில் தலையை வெட்டுங்கள். அதன் பிறகு பாருங்கள். குற்றங்கள் தானாக குறைய ஆரம்பிக்கும். //
சட்டம் ஒழுங்கு சரி இருக்கிற சவுதிஅரேபியாவில் பெண்களுக்கு தனியாகவே செல்ல அனுமதி இல்லாத நிலையில் நீங்கள் கண்ணீர் வடிப்பது தமிழகம் சார்ந்த நலத்திற்கு மட்டும் தான் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டேன்.

//சவுதியில் தொழுகை நேரத்தில் வெளியில் பரப்பப் பட்டிருக்கும் விலையுயர்ந்த சாதனங்களின் மேல் சிறிய போர்வையை போர்த்தி விட்டு செல்வார்கள். யாருக்கும் திருட வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. ஒரு சில ஆப்ரிக்கர்கள் திருடினாலும் காவலர்களால் உடன் பிடிக்கப்படுவார்கள். //

அடேங்கப்பா திருட்டு எண்ணம் கருப்பு ஆப்பிரிக்கனுக்கு மட்டும் தான் வரும் என்று பஞ்ச் வச்சிங்கப் பாருங்க. உங்களை நம்பியும் எல்லாத்தையும் திறந்து வைப்பாங்க என்று நீங்க நம்பி என்னிடம் சொன்னாலும் நான் கேட்டுக் கொள்கிறேன் சார். திருடினால் கைவெட்டுகிற நாட்டில் யாரும் திருடவதில்லை என்பதில் என்ன வியப்பு இருக்கிறது என்று தெரியவில்லை, உம்ராவிற்கு வழிபாட்டுக்குத்தான் வருகிறார்கள், அப்பொழுது அங்கு கூடும் கூட்டத்தில் உள்ளூர் காரர்கள் தவிர்த்து 100 விழுக்காடு இறை வழிபாட்டிற்கு வருபவர்கள் தான் இருப்பர், அவர்கள் எந்த ஒரு திருட்டு பயமும் இல்லாமல் இருப்பர், அவர்கள் தங்கும்விடுதியில் பொருள்கள் எதையும் பூட்டியே வைக்கமாட்டார்கள் என்றும் சொல்லுங்களேன் சார்.

//தவறான நடத்தை உடைய மனைவிக்குத்தான் அந்த சட்டம். உலகம் முழுவதும் சுத்தமாக மனைவியை இன்று கணவர்கள் அடிப்பதில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? இன்று பல நவீன முறைகள் வந்து விட்டதே! தினமும் பத்திரிக்கையில் படிக்கிறோமே!//

ஓஹோ மனைவியை அடிக்கிற காட்டுமிராண்டி இன்னிக்கும் தான் இருக்கிறாங்க 1400 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட அனுமதியில் என்ன தவறுன்னு நான் இதைப் புரிந்து கொள்ளனுமா ? ஒருத்தனுக்கு நாலு மனைவிவரை அனுமதில் முதல்மனைவியிடம் பெறும் அனுமதி என்ன ? ஒப்புக்கூட கேட்கமாட்டார்கள் தானே ? உங்களுக்கு தெரிந்தவர் அறிந்தவர்களின் பெண்பிள்ளைகளை இரண்டம் தாராம், மூன்றாம் தாராம் நான்காம் தாராமாக திருமணம் செய்ய பரிந்துரைப்பீர்களா ? இல்லை என்று சொன்னால் பலதார மணம் இன்றைய காலத்திற்கு ஒத்துவராத வழக்கம் என்றாவது ஒப்புக் கொள்ளும் மன நிலை உங்களுக்கு இருக்கிறதா ? ஒத்துவரும் என்று சொன்னால் பரம ஏழைகளாக இருக்கும் ஒரு முஸ்லிம் குடும்பத்தினரிடம் பணக்கார முஸ்லிம் ஆணின் மூன்றாம் மனைவியாகப் போனால் ஏழ்மையை விரட்டிவிடலாம் என்று சொல்லுவீர்களா ? அதெல்லாம் அவர்களுடைய விருப்பம் அதையெல்லாம் வலிந்து சொல்லமுடியாது என்றால் பலதார மனம் இன்றைக்கும் பரிந்துரைக்கக் கூடிய நிலையில் இல்லை என்றாவது ஒப்புக் கொள்ளும் மனம் இருக்கிறதா ? அப்படி ஒப்புக் கொள்ளும் மனம் இருந்தால் இஸ்லாமிய பரிந்துரைகள் எந்த காலத்திற்கும் பொருந்தும் என்ற பொய் பிரச்சாரங்களையாவது நிறுத்திக் கொள்ளலாம் இல்லையா ?

கோவி.கண்ணன் said...

//கவனக்குறைவாக வாகனம் ஓட்டியவருக்குத்தான் தண்டனை. மித வேகத்தில் சென்றிருந்தால் வண்டியை கண்ட்ரோல் பண்ணியிருக்க முடியுமே!//

பூகம்பம், இரயில் விபத்து, பெரு வெள்ளம் மற்றும் பல விபத்துகளில் தனிமனித தவறு என்ற வகையில் அடங்காத விபத்துக்களும் 1000க் கணக்கானவ்சர்களும் செத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதுக்கெல்லாம் உங்க சாமி பொறுப்பேற்றுக் கொண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களை இழந்தவர்களுக்கும் என்ன நிவரணம் ?

//ஒருவரை யொருவர் புரிந்து கொள்வதற்காக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக என்று அடுத்து வரும் வசனத்தைப் பார்க்கவில்லையா? சீனனையும், மலாய்காரனையும், இந்தியனையும், ஆப்ரிக்கனையும் வரிசையாக நிற்க வைத்தால் யாரும் சொல்லாமலே நாம் கண்டு பிடித்து விடுவோம். இதற்காகத்தான் குலம் கோத்திரங்கள் உருவானது. ஆனால் நீ சூத்திரன்: நீ கீழானவன்: நீ பஞ்சமன்: நான் பிராமிண்: கோவிலில் கூட எனக்குதான் முதல் மரியாதை என்று சொன்னது மனிதனின் தவறு. இதை இறைவன் சொல்லவில்லை. கோவிலுக்கு நீங்கள் போகும் பொது பிராமணர்களால் சொல்லப்படும் ஒரு மந்திரத்தை 'உண்மைகள்' பின்னூட்டமாக தந்திருப்பதையும் படித்துப் பாருங்கள். இது மனிதனாக இறைவன் பெயரால் எழுதிக் கொண்டது. எனவே இரண்டையும் வேறு படுத்திப் பார்க்க வேண்டும்.//

மறுபடியும் உளறல், குலம் கோத்திரம் நீங்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணப் படைத்தோம் என்றால் நீங்கள் உங்களில் கலப்பு ஏற்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்கமாட்டோம் என்றே பொருள், அவ்வாறான அனுமதியும் குலம் கோத்திரமாக படைத்த நோக்கத்தையே கெடுத்துவிடும். எல்லோரும் எல்லாரிடமும் கலந்துவிட்டால், பின்னர் குலமாகப் படைத்தன் நோக்கம் என்ன என்று ஒரு மடையனும் கேள்வி கேட்கவே மாட்டான் என்று உங்கள் அல்லா நினைத்தாரா ? இல்லை நீங்களாகவே வழக்கமான குரானிய அறிவியல் விளக்கம் போல் எழுதிகிறீர்களா ? குறைசி குலத்து மாது ஜைனப் அடிமையாக வளர்ந்த ஜைதை மனவிலக்கு பெற்றது அவருடைய ஞாயமான உரிமை என்று நீங்கள் தான் எழுதி இருந்தீர்கள், முகமது நபி வாழ்ந்த காலத்திலேயே சாதிகுறித்த எதிர்ப்பார்ப்புகள் தவிர்க்க முடியாது என்பதாலேயே சைனப் விவாகரத்து நேர்ந்தது என்பது உங்கள் மற்றொரு கூற்று, இங்கே இந்தப் பதிவில் எதோ பார்பனர்கள் தான் இந்திரியம், விந்து, உயர்சாதி என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று நீங்கள் எழுதுவது யாரை திருப்திப்படுத்த ?

கோவி.கண்ணன் said...

//இஸ்லாம் தடை அல்ல. எனது மும்பை நண்பன் சலீம் ஒரு சவுதி பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறான். பல பாகிஸ்தானிகள் திருமணம் முடித்து இந்நாட்டு சிடிசனாகவே மாறியுள்ளனர். மொழிதான் தடையாக இருக்கும். எனவேதான் பலர் விரும்புவதில்லை. முகமது நபி யூதப் பெண்ணையே மணந்து அழகாக வழி காட்டியிருக்கிறாரே!//

முகமது நபியின் மனைவியர் பற்றி நான் கேள்விக் கேட்கவில்லை, மணம்புரிந்து கொண்ட எண்ணிக்கைகள் தவிர்த்து கணக்கிலடங்காத அல்லது எண்ணிக் கொள்ளத் தேவை இல்லை என்பதாக வலக்கரம் கூட அனுமதிக்கப்பட்டவை தான், அதனால் தான் இன்றைக்கும் இல்லப் பணிக்கு வரும் பெண்களை அடிமைகளாக நினைத்து அவர்களை பாலியல் தேவைக்கான அடிமையாக பயன்படுத்திக் கொள்வோர் சவுதியில் உண்டு என்பது உங்களுக்கும் தெரிந்தவை தான். ஆனால்
நான் கேட்டது சவுதி அரசு குடும்பத்து பெண்களில் எத்தனை பேர் பிற நாட்டு இஸ்லாமியருக்கு மணமுடித்து வைத்தனர் என்பது குறித்து தான்,

Anonymous said...

ஸலாம் சகோதரர் கோவி கண்ணன்
இந்துக்களின் ஜாதிவெறி இன்னும் தொடர்கிறது

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

ஜார்ஜ் அவர்களுக்கு,
ஆவேசப்படும் உங்கள் பதிலை பார்த்தல் சிந்திப்பதற்கு பதில் சிரிக்கவே தோனுகிறது.உண்மை இல்லாததை எழுதி முஸ்லிம்களின் மனதை உங்கள் கிறிஸ்தவர்கள் புண்படுத்தும் பொழுது,நான் உண்மையை சொல்வது உங்களுக்கு அவ்வளவு கசப்பாக உள்ளதோ.நான் சொல்வது பொய் என்றால் அப்பதிவில் நான் குறிப்பிட்ட வசனத்திற்கு பதில் சொல்லுங்கள் அதைவிடுத்து வீண்விவாதங்கள் வேணாம்.....

முஹம்மது நபி ஏன் இதனை திருமணம் செய்துகொண்டார் என்பதை அறிய இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற கட்டுரையில் முஹம்மத் நபி(ஸல்)அவர்களுக்கு மட்டும் ஏன் இஸ்லாத்தில் சிறப்பு சலுகை என்ற தலைப்பை படிக்கவும்(www.tvpmuslim.blogspot.com).

முஹம்மது நபி அவர்களின் திருமணங்களை முடிவில்லா சர்ச்சை என்பது உங்களின் குருட்டுவாதமாகும்......

குறிப்பு:நான் மறுப்பெழுதும் முன்னமே மறுப்பெழுதிய சகோ.சுவனபிரியனுக்கும்,சகோ.இஸ்மாதிர்க்கும் நன்றி.........

Anonymous said...

Mr Kovi Kannan,


///குலம் கோத்திரம் நீங்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணப் படைத்தோம் என்றால் நீங்கள் உங்களில் கலப்பு ஏற்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்கமாட்டோம் என்றே பொருள்///

குர்ஆனின் வசனத்திற்கு நீங்கள் விரும்பிய விதம் பொருள் கொண்டால், உங்களின் புரிதலும் வித்தியாசம்தான்.

நீங்கள் தூக்கிப்பிடிக்கும் குலம், கோத்திரத்திலுள்ளவர்கள் ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்ளும்போது, அவர்களின் வாழ்வுநெறி மாறி, தாம் எந்தக் குலம், எந்தக் கோத்திரம் என்பதை மறந்தே விடுகின்றனர்.

இது நீங்கள் கொண்ட கொள்கையில், இருக்கக் கூடாத பண்பு.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

//////அடேங்கப்பா திருட்டு எண்ணம் கருப்பு ஆப்பிரிக்கனுக்கு மட்டும் தான் வரும் என்று பஞ்ச் வச்சிங்கப் பாருங்க.///////ஆப்ரிக்கர் என்றுதானே சொன்னார் கருப்பு ஆப்ரிக்கர் என்று சு.பி எங்கு குறிப்பிட்டார்?நீங்களாகவே எக்ஸ்ட்ரா பிட்டிங் போட்டு கற்பனை செய்துகறீங்களா இது எதற்கு சொல்லாததை கூட்டி சொல்கின்றீர்கள்.ஆப்ரிக்கா என்றால் கருப்பானவர்கள்தான் இருப்பார்கள் என்ற எண்ணமோ?(ஆப்ரிக்கர் என்பதை கருப்பு ஆப்ரிக்கர் என்று கோவி சித்தரித்தாரோ அதுபோல நான் கருப்பானவர்கள் என்று சொன்னதைக்கூட வேறு விதமாக சித்தரித்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை)

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

////இதுக்கெல்லாம் உங்க சாமி பொறுப்பேற்றுக் கொண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களை இழந்தவர்களுக்கும் என்ன நிவரணம் ?/////
சார் கேட்பதைப்பார்த்தால் மனிதர்களுக்கு மரணமே வரக்கூடாதென்றல்லவா இருக்கிறது.

//////குலம் கோத்திரம் நீங்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணப் படைத்தோம் என்றால் நீங்கள் உங்களில் கலப்பு ஏற்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்கமாட்டோம் என்றே பொருள்//////
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்"(அல் குர் ஆண் 49:13)

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்;" என்பதை அழகாக சொல்லியிருக்கின்ற இறைவனின் வார்த்தையை அப்பப்பா என்னே(கலப்பு ஏற்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்கமாட்டோம் என்றே) பொருள் கொள்கின்றீர்கள்.

//////எல்லோரும் எல்லாரிடமும் கலந்துவிட்டால், பின்னர் குலமாகப் படைத்தன் நோக்கம் என்ன என்று ஒரு மடையனும் கேள்வி கேட்கவே மாட்டான் என்று உங்கள் அல்லா நினைத்தாரா//////உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர் எனும் இறைவசனம் சரியாக படிக்கவில்லை என்று சொல்வதை விட உங்களுக்கு படிக்க மனமில்லை என்றே சொல்லலாம்.

/////இங்கே இந்தப் பதிவில் எதோ பார்பனர்கள் தான் இந்திரியம், விந்து, உயர்சாதி என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று நீங்கள் எழுதுவது யாரை திருப்திப்படுத்த ///////

சு.பி ஏதோ முஸ்லிம்களை மட்டும் சொல்லாமல் விட்டதுபோல் மாயதோற்றத்தை ஏற்படுத்த முயலாதீர்கள்.

////நான் கேட்டது சவுதி அரசு குடும்பத்து பெண்களில் எத்தனை பேர் பிற நாட்டு இஸ்லாமியருக்கு மணமுடித்து வைத்தனர் என்பது குறித்து தான், ///////
சவுதி நாட்டிலுள்ள‌ பெண்களையோ (அ) சவுதி அரச குடும்பத்து பெண்களையோ வேறு நாட்டு முஸ்லிமுக்கு மணமுடித்து கொடுக்கவேண்டுமென்ற கட்டாயமுமில்லை மணமுடித்து கொடுக்கக்கூடாது என்ற கட்டாயமுமில்லை.எல்லா சமுதாயத்திலும் தனிமனிதர்களுடைய செயல்களிலுள்ள தவறுகளை டன் கணக்கில் எடுக்கலாம் .(எங்க ஊரில்கூட மகனுக்கு பெண்ணை வெளியூரிலிருந்து எடுத்துவிடுவார்கள் ஆனால் தங்களுடைய பெண்களை வெளியூர் மாப்பிள்ளைக்கு கொடுப்பதென்பது அரிதிலும் அரிது).இது அவரவர்கள் விருப்பம்.

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மது ஷஃபி!

கோவிக் கண்ணனுக்கு அழகிய முறையில் பதிலளித்து எனது வேலையை மிச்சமாக்கியதற்கு நன்றி!

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

////ஏ ஆர் ரஹ்மான் சம்பாதித்து போதும் இசை அமைப்பதை நிறுத்தலாம், இஸ்லாத்திற்கு துரோகம் செய்வதை ரஹ்மான் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று வாஹாபியர்களின் (கண்டனக்) குரலாக சுவனப்பிரியனே குரல் எழுப்பியுள்ளார். இசைக்கு மனிதன் அடிமையாவதை இஸ்லாம் எதிர்க்கிறது என்கிற அடிப்படையில் அவர் ஏ ஆர் ரஹ்மானை ஏற்கனவே நிறைய சம்பாதித்திவிட்டார் இனி இஸ்லாமிய வளர்ச்சி பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துவிட்டு இசைக்க ரஹ்மான் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்கிறார் சுபி.//////கோவிக்கு கோபம் யார் மீது உங்கள் மீதா?இஸ்லாம் மீதா? இப்பொழுதெல்லாம் அவருடைய பதிவுகளில் ஒன்று உங்களை இழுக்கிறார் இல்லையென்றால் இஸ்லாமை இழுக்கின்றார்.

கோவி.கண்ணன் said...

//"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்;" என்பதை அழகாக சொல்லியிருக்கின்ற இறைவனின் வார்த்தையை அப்பப்பா என்னே(கலப்பு ஏற்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்கமாட்டோம் என்றே) பொருள் கொள்கின்றீர்கள்.//

மாடு பற்றிய கட்டுரைக்கு தென்னை மரம் பற்றி எழுதிவிட்டு இத்தகைய சிறப்பு மிக்க தென்னை மரத்தில் தான் மாடுகளைக் கட்டுகிறோம் என்று எழுதி மாடு பற்றிய கட்டுரையை முடிக்கனும்.

என்ன சார் சொல்றிங்க, குலம் கோத்திரம் என்று கலப்பு ஏற்படுத்திக் கொள்ளவதற்காகப் படைக்க வேண்டுமென்றால் குலம் கோத்திரம் படைப்பதன் நோக்கம் அடையாளம் காணுவதற்காகவா ? குலம் கோத்திரம் கலந்தால் பிறகு அடையாளம் எங்கிருந்து காணூவீர்கள் ?

சுவனப்பிரியர் ஏற்கனவே ஜனைப் குறைசி குலம் என்பதால் ஜைதை விவாகரத்து செய்யும் காரணிகளில் குலம் ஒன்றும் அமைந்தது என்று எழுதி இருக்கிறாரே.

ஆக உங்க அல்லா படைப்பிலேயே குறைசி குல சாதி விந்தும் முட்டையும் இருக்கும் போது மற்றவங்க அது பற்றி பேசுவது மட்டும் உங்களுக்கு ஒவ்வாமை ஆகிறது என்பது முரண்பாடுகளாக இல்லையா ?

குலம் படைத்துவிட்டு வேறுபாடு பார்க்காதே என்று சொல்லிவிடுவது மருந்து குடிக்கும் போது குரங்கை நினைக்காதே என்று தான் பொருள் படும். குலம் என்பது வெறும் நிறவேறுபாடு என்று எங்கும் சொல்லப்படாத நிலையில் அதை சீனன், மலாய்காரன், ஆப்ரிக்கன் என்று உதாரணமாக நீங்கள் காட்டுவதும் முரணாகவே இருக்கிறது. முகமது நபி பற்றிய குறிப்புகளில் அவர் உயர்ந்த குறைசி குலத்தில் பிறந்தார் என்று எங்குமே சொல்லப்படுவதே இல்லையா ?

கோவி.கண்ணன் said...

//குர்ஆனின் வசனத்திற்கு நீங்கள் விரும்பிய விதம் பொருள் கொண்டால், உங்களின் புரிதலும் வித்தியாசம்தான்//

விரும்பிய விதத்தில் சுவனப்பிரியர் தரும் அறிவியல் அவியல்களையும் தான் படித்துவருகிறோம்.

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//முகமது நபி பற்றிய குறிப்புகளில் அவர் உயர்ந்த குறைசி குலத்தில் பிறந்தார் என்று எங்குமே சொல்லப்படுவதே இல்லையா ?//

"மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்."

-புகாரி, முஸ்லிம்

இதுவும் முகமது நபி சொன்னதுதான். இரண்டையும் இணைத்து ஒரு முடிவுக்கு உங்களால் வர முடியாதா? முஸ்லிம்களுக்குள் பள்ளியில் யாரும் சாதி வித்தியாசம் பார்க்கிறார்களா?

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி 1706)

இப்புடி சொல்லி சமூகப் பிளவுக்கும், நிற வெறிக்கும் , சாதி பாகுபாடுகளுக்கும் அன்றே முடிவு தந்து விட்டு சென்றார்கள்.

கோவி.கண்ணன் said...

//இதுவும் முகமது நபி சொன்னதுதான். இரண்டையும் இணைத்து ஒரு முடிவுக்கு உங்களால் வர முடியாதா? முஸ்லிம்களுக்குள் பள்ளியில் யாரும் சாதி வித்தியாசம் பார்க்கிறார்களா? //

எந்த வித்யாசமும் இன்றி தான் பாகிஸ்தானிலும் ஈராக்கிலும் பள்ளிகளில் (மசூதிகளில்) குண்டுவெடிக்குது சார். இதெல்லாம் அந்த முட்டாப் பசங்க படிச்சிருக்க மாட்டானுங்களா ?

suvanappiriyan said...

//எந்த வித்யாசமும் இன்றி தான் பாகிஸ்தானிலும் ஈராக்கிலும் பள்ளிகளில் (மசூதிகளில்) குண்டுவெடிக்குது சார். இதெல்லாம் அந்த முட்டாப் பசங்க படிச்சிருக்க மாட்டானுங்களா ? //

இஸ்லாம் அமைதியை போதிக்க இது போன்று வன்முறையை கையில் எடுக்கும் இவர்கள் அடி முட்டாள்கள்.

உண்மையான இஸ்லாம் அவர்களுக்கு போதிக்கப்படாததே முக்கிய காரணம்.

Anonymous said...

//ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' இது நமது முன்னோர்களின் வணக்கமுறை: பண்பாட்டு முறை: இன்று இந்து மதம் அந்த நிலையிலா இருக்கிறது.//

இந்து மதம் அப்படி இல்லை என்பது உண்மைதான்,. அதற்கு காரணம் உங்களை போல சொந்த நாட்டை பிற நாட்டவனுக்கு அடகு வைக்க நினைக்கும் துரோகிகள் இங்கே இருந்தது தான் காரணம். ஆரியன் வந்து அவன் பங்குக்கு ஒரு கலாச்சாரத்தை புகுத்தினான். கிறிஸ்தவன் வந்து ஒரு கலாச்சாரத்தை புகுத்தினான். உங்கள் கூட்டம் அரபு கலாச்சாரத்தை கொண்டு வந்து அரபு நாட்டவனுக்கு இந்தியாவை கூட்டி கொடுக்க நினைக்கிறது. பிறகு எப்படி இந்து மதம் அந்த நிலையில் இருக்கும்.

. //நித்தியானந்தா தினமும் விடும் அறிக்கைகளையும் நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்.//

நித்தியானந்தா என்ன ஒட்டு மொத்த இந்து மதத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறார அல்லது ஒட்டு மொத்த மக்களும் அவரை கடவுளாக வணங்குகிறார்களா. அவன் ஒரு பொறம்போக்கு அவனை சுற்றி கொஞ்சம் வீணாய் போன அல்லகைகள். இதை வைத்து அவன் என்ன கிழித்து விடுவான் என்று நினைக்கிறீர்கள். அவன் போடும் ஆட்டத்தை விட அவனை வைத்து உங்கள் கூட்டம் போடும் ஆட்டம் அல்லவா அதிகமாக இருக்கிறது. நித்யானந்தா ரஞ்சிதாவை விட்டாலும் நீங்கள் விட மாட்டீர்கள் போலிருக்கிறது.
நித்யனந்தவிற்கும் உங்க முகமதுவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

//இன்றும் காஞ்சி கோவிலில் தீண்டாமை கடை பிடிக்கப்படுவதை வினவு பதிவில் பார்த்தீர்கள் அல்லவா?//

ஓ பார்த்தோமே, தீண்டாமையை தீர்க்க வேண்டுமென்றால் எல்லாரும் இஸ்லாமியர்களாக மாற்றி விடலாமா? அப்படி மாறினால் எல்லாரும் சாதி வெறியை விட்டு விட்டு மத வெறியர்களாக மாறி விடுவார்களே அதற்கு என்ன செய்வது

//எந்த இடத்தில் இப்படி ஒரு வசனம் வருகிறது என்று வசன எண்களோடு அறியத் தாருங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன். //

யூத, கிறிஸ்தவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம்! அப்படிச் செய்பவ ர்கள் அவர்களில் ஒருவராக ஆகிவிடுகிறார்’ அல்குர்ஆன் 5:51

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

Mr.Anonymous//எந்த இடத்தில் இப்படி ஒரு வசனம் வருகிறது என்று வசன எண்களோடு அறியத் தாருங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன். //

யூத, கிறிஸ்தவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம்! அப்படிச் செய்பவ ர்கள் அவர்களில் ஒருவராக ஆகிவிடுகிறார்’ அல்குர்ஆன் 5:51
Mr.அனானி நீங்கள் கொடுத்த வசனங்களின் முழுமையை பாருங்கள்.
"முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்."(அல் குர்ஆன் 5:51)
இதில் "பாதுகாவலர்" என்றுதானே குறிப்பிட்டுள்ளது எங்கே "நண்பன்" என்று குறிப்பிட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துங்கள்.