Followers

Tuesday, May 22, 2012

'சுன்னத்'(கத்னா) பண்ணிக் கொள்ளும் ஜிம்பாப்வே எம்பிக்கள்!



'என்னய்யா....காலையிலேயே தலையில துண்டை போட்டுக்கிட்டு சோகமா திரியறே!'

'சொந்தக் கதை சோகக் கதைப்பா! இன்னைக்கு தினமலர் படிச்சியா? ஜிம்பாப்வேலே அந்த நாட்டு எம்பிக்கள் 170 பேர் சுன்னத்(கத்னா) செஞ்சுக்கப் போறாங்களாம்!'

'அதுக்கென்ன இப்போ?'

'அதுக்கென்னாவா! இத்தனை நாளும் சுன்னத் பண்றது வேஸ்ட். எய்ட்ஸை அது தடுக்காதுன்னு பிரசாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். இந்த நேரத்துல பாழாய்ப் போன இந்த சேதி வந்தா சோகமா இல்லாம சந்தோஷமாகவா இருக்க முடியும்?'

-----------------------------------

லண்டன்: எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முன்னோடியாக, ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள், 170 பேர் "சுன்னத்'(கத்னா) செய்து கொள்ள முன்வந்துள்ளனர்.

ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில், எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, கடந்த 2010ம் ஆண்டு முதல், தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுன்னத் செய்து கொள்வதால், எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்பதால், ஆப்ரிக்க தலைவர்கள் பலர், சுன்னத் செய்து கொண்டுள்ளனர். ஜிம்பாப்வே நாட்டில், முஸ்லிம் அல்லாத இளைஞர்களும், "சுன்னத்' செய்து கொள்கின்றனர். ஜிம்பாப்வே நாட்டு பார்லிமென்டில், கடந்த வாரம், எய்ட்ஸ் தடுப்பு குறித்த பிரசார கருத்தரங்கு நடந்தது. இதில் பேசிய எம்.பி., ஒருவர், பெண்கள் அழகாக இருப்பதால், அவர்கள் மீது ஆண்களுக்கு ஆசை வருகிறது. எனவே, பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும். இதன் மூலம், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கலாம்' என்றார். இதற்கு, பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


எய்ட்ஸ் நோய் தடுப்பு விஷயத்தில், எம்.பி.,க்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 170 எம்.பி.,க்கள், "சுன்னத்'(கத்னா) செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். பெண் எம்.பி.,க்கள், தங்கள் கணவருக்கு சுன்னத் செய்ய வற்புறுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். முஸ்லிம் மத பெரியவர்களை கொண்டு, இந்த சடங்கு செய்வதற்கு பதில், மருத்துவர்களை கொண்டு, "சுன்னத்' செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

-Dinamalar 22-05-2012

-------------------------------

Are there benefits from circumcision?

There are several:

1 Many older men, who have bladder or prostate gland problems, also develop difficulties with their foreskins due to their surgeon's handling, cleaning, and using instruments. Some of these patients will need circumcising. Afterwards it is often astonishing to find some who have never ever seen their glans (knob) exposed before!

2 Some older men develop cancer of the penis - about 1 in 1000 - fairly rare, but tragic if you or your son are in that small statistic. Infant circumcision gives almost 100% protection, and young adult circumcision also gives a large degree of protection.

3 Cancer of the cervix in women is due to the Human Papilloma Virus. It thrives under and on the foreskin from where it can be transmitted during intercourse. An article in the British Medical Journal in April 2002 suggested that at least 20% of cancer of the cervix would be avoided if all men were circumcised. Surely that alone makes it worth doing?

4 Protection against HIV and AIDS. Another British Medical Journal article in May 2000 suggested that circumcised men are 8 times less likely to contract the HIV virus. (It is very important here to say that the risk is still far too high and that condoms and safe sex must be used - this applies also to preventing cancer of the cervix in women who have several partners.)

A BBC television programme in November 2000 showed two Ugandan tribes across the valley from one another. One practised circumcision and had very little AIDS, whereas, it was common in the other tribe, who then also started circumcising. This programme showed how the infection thrived in the lining of the foreskin, making it much easier to pass on.

5 As with HIV, so some protection exists against other sexually transmitted infections. Accordingly, if a condom splits or comes off, there is some protection for the couple. However, the only safe sex is to stick to one partner or abstain.

6 Lots of men, and their partners, prefer the appearance of their penis after circumcision, It is odour-free, it feels cleaner, and they enjoy better sex. Awareness of a good body image is a very important factor in building self confidence.

7 Balanitis is an unpleasant, often recurring, inflammation of the glans. It is quite common and can be prevented by circumcision.

8 Urinary tract infections sometimes occur in babies and can be quite serious. Circumcision in infancy makes it 10 times less likely.
http://www.circinfo.com/benefits/bmc.html

38 comments:

அதிரை சித்திக் said...

இஸ்லாம் கூறும் அனைத்து விசயங்களும்

மனித குலத்திற்கு பாதுகாப்பானது ..நல்ல முன் மாதிரியானது அதில்

சுன்னத் செய்துகொல்லுதலும் ஒன்று ..பெண்கள் அழகாக இருக்கிறார்கள் >>>>>

அதனால்தான் பர்தா அணிய சொல்கிறது இஸ்லாம்.. விபச்சாரம்

மனித கொல்லி நோயை பரப்பும் கொடிய பழக்கம் என்பதால்தான்

விபசாரத்திற்கு இஸ்லாம் மரண தண்டனையை தீர்ப்பாக

வழங்குகிறது ..எல்லாவற்றிகும் ஏற்ற மார்க்கம் இஸ்லாம்

எல்லா சந்தற்பதிற்கும் தீர்வு உண்டு இஸ்லாத்தில் ...

நல்லா தேடி பிடித்து செய்தி தரும் சுவன பிரியன் வாழ்த்துக்கள்

உங்கள் ஊர் எது ..பெயர் என்ன ..மேலும் நட்பு கூடுதலாக

பாராட்ட எதுவாக இருக்கும் விருப்பம் இருப்பின் கூறலாம்

suvanappiriyan said...

சலாம் சகோ அதிரை சித்திக்!

/./எல்லாவற்றிகும் ஏற்ற மார்க்கம் இஸ்லாம்

எல்லா சந்தற்பதிற்கும் தீர்வு உண்டு இஸ்லாத்தில் .//..

சரியாக சொன்னீர்கள்.

//நல்லா தேடி பிடித்து செய்தி தரும் சுவன பிரியன் வாழ்த்துக்கள்

உங்கள் ஊர் எது ..பெயர் என்ன ..மேலும் நட்பு கூடுதலாக

பாராட்ட எதுவாக இருக்கும் விருப்பம் இருப்பின் கூறலாம்//

பாராட்டுக்கு நன்றி. எல்லா பகழும் இறைவனுக்கே!

மேலதிக விபரம் தெரிந்து கொள்ள nazeer65@mail.com மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோ..
இதுபோன்ற பதிவுகளைத்தான் நாங்க உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் ,
கூத்தாடி நடிகர்களைப்பற்றி அல்ல .......
// இதில் பேசிய எம்.பி., ஒருவர், பெண்கள் அழகாக இருப்பதால், அவர்கள் மீது ஆண்களுக்கு ஆசை வருகிறது. எனவே, பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும். இதன் மூலம், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கலாம்' என்றார். //
அதுக்குதானேயப்பா இஸ்லாம் பெண்களை முக்காடு இட சொல்கிறது , ஹிஜாப் பற்றி கேலியும் ,கிண்டலும் செய்வதால் நஷ்டம் இஸ்லாமியர்களுக்கு
அல்ல என்பதை தெரிஞ்சுக்குங்கோ ...!!!
ஆண்கள் தன சௌகரியத்துக்காக " கத்னா " செய்துக்கொள்ளலாம் ஆனால் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாதா ...??!!

--

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ நாசர்!

//அஸ்ஸலாம் அலைக்கும் சகோ..
இதுபோன்ற பதிவுகளைத்தான் நாங்க உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் ,
கூத்தாடி நடிகர்களைப்பற்றி அல்ல .......//

வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி!

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ
மிக அருமையான பதிவு. இஸ்லாத்தை பற்றி அறிந்திருந்தும் எப்படியும் இஸ்லாத்தை எதிர்க்கவேண்டும் என்று எதிரிகளோடு கைகோர்த்து வலம்வரும் மேதைகள்? இதற்க்கு என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

இஸ்லாம் சொன்னா நிராகரிப்பாங்க...இறை நிராகரிப்பாளர்கள் இனி எப்படி தான் அவங்க கட்டுரை எழுதபோரங்களோ .... வேணாம்னு சொன்ன வாய் இனி என்னல்லாம் பேசுமோ.....நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி சகோ....

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,
மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி, ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

Anonymous said...

தலைய சுத்தி மூக்கை தொட்த்தான் இசுலாம் கூறுகிறதா? ஒரு மனைவி மட்டும் கட்டி அவளிடம் மட்டும் படுத்தால் எப்புடி எயிட்ஸ் வரும்? இப்படி வாழும் ஒழுக்கமாக ஒரு மேரேஜ் பண்ணியவனுக்கு எதுக்கு சுன்னத் மேரேஜ்?

ஆனால் சுன்னத் மேரேஜ் செய்து கொண்ட காரணத்துக்காக ஊர் மேய்ந்தால் எயிட்ஸ் வரத்தான் செய்யும். சுன்னத் எயிட்ஸ் வரும் வாய்ப்பை குறைக்கும் ஆனால் முற்றிலும் தடுக்காது!

Anonymous said...

The United States has one of the highest rates of male circumcision and also one of the highest rates of HIV infection in the developed world, suggesting that circumcision is not helping. Conversely, Finland and Japan have some of the lowest rates of circumcision and also some of the lowest rates of HIV/AIDS. In Australia, the AFAO has now concluded that male circumcision has no role in the Australian HIV epidemic.



http://www.mgmbill.org/aids.htm

Anonymous said...

///இதுபோன்ற பதிவுகளைத்தான் நாங்க உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் ,
கூத்தாடி நடிகர்களைப்பற்றி அல்ல .......///

அஸ்ஸலாமு அழைக்கும் நசார்,

சினிமாப்பிரியனாக இருந்தவர் சுவனப்பிரியனாக மாறியதைப்பற்றி பதிவு எழுதினால் மட்டும் போதாது நசார். செய்கைமூலம் திருந்துவதே நல்லது.

- Ismath

வருண் said...

பதிவை கவனித்துப் படிக்காமல், சுன்னத்து பண்ணினால், கவனமாக இல்லாவிட்டாலும் நமக்கு எயிட்ஸ் வராதுனு நுனிப்புல் மேய்ந்து புதைகுழியில் விழுந்தால், அதற்கு நீங்கள் பொறுப்பில்லைனு ஒரு டிஸ்க்ளைமர் போட்டுருங்க, சகோ!

suvanappiriyan said...

அனானி!

//தலைய சுத்தி மூக்கை தொட்த்தான் இசுலாம் கூறுகிறதா? ஒரு மனைவி மட்டும் கட்டி அவளிடம் மட்டும் படுத்தால் எப்புடி எயிட்ஸ் வரும்? இப்படி வாழும் ஒழுக்கமாக ஒரு மேரேஜ் பண்ணியவனுக்கு எதுக்கு சுன்னத் மேரேஜ்?//

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை உடையவருக்கு எய்ட்ஸ் வருவதில்லை. ஒரு பெண் பல ஆண்களோடு சேர்வதால் இந்த நோய் பரவுகிறது. அந்த நோய் கண்ட பெண்ணோடு ஒரு ஆண் கூடும்போது அவனுக்கும் இந்த நோய் தொற்றிக் கொள்கிறது. இது போன்ற சந்தர்பங்களில் சுன்னத் செய்த ஆணுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றுவது மிக அரிது என ஆராய்ச்சி கூறுகிறது.

திருமணமாகாமல் உறவு வைத்துக் கொள்வதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. அதற்கு கடுமையான தண்டனையையும் கொடுக்கிறது.

//ஆனால் சுன்னத் மேரேஜ் செய்து கொண்ட காரணத்துக்காக ஊர் மேய்ந்தால் எயிட்ஸ் வரத்தான் செய்யும். சுன்னத் எயிட்ஸ் வரும் வாய்ப்பை குறைக்கும் ஆனால் முற்றிலும் தடுக்காது!//

உங்கள் வாதத்தையும் ஒத்துக் கொள்கிறேன். பல பெண்களிடம் முறையற்ற உறவு வைத்து அதனால் நோய் கண்ட ஒரு கணவன் அப்பாவியான தனது மனைவிக்கும் தனது குழந்தைகளுக்கும் இந்த நோயை தந்து விடுகிறான். இது போன்ற சந்தர்பங்களில் சுன்னத் சிறந்த கேடயமாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். இந்த நோய் தொற்றுவதை சுன்னத் பெரும்பாலும் தடுக்கிறது.

suvanappiriyan said...

சகோ வருண்!

//பதிவை கவனித்துப் படிக்காமல், சுன்னத்து பண்ணினால், கவனமாக இல்லாவிட்டாலும் நமக்கு எயிட்ஸ் வராதுனு நுனிப்புல் மேய்ந்து புதைகுழியில் விழுந்தால், அதற்கு நீங்கள் பொறுப்பில்லைனு ஒரு டிஸ்க்ளைமர் போட்டுருங்க, சகோ!//

உண்மைதான்! அன்பான மனைவி இருக்க வேறு பெண்களை நாடுவது கண்டிப்பாக கேவலமே! கூடா நட்பினால் அந்த பெண்ணின் வாழ்க்கையையும் அவளுக்கு பிறந்த குழந்தைகளையும் நிர்க்கதியாக பலர் விட்டு விடுகின்றனர்.

எய்ட்ஸ் வருவதை ஓரளவு சுன்னத் தடுக்கும் என்றுதான் நான் சொல்ல வந்தது.

suvanappiriyan said...

சலாம் சகோ திருவாளப்புத்தூர் முஸ்லிம்!

//இஸ்லாம் சொன்னா நிராகரிப்பாங்க...இறை நிராகரிப்பாளர்கள் இனி எப்படி தான் அவங்க கட்டுரை எழுதபோரங்களோ .... வேணாம்னு சொன்ன வாய் இனி என்னல்லாம் பேசுமோ.....நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி சகோ....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

சகோ சுவனப்பிரிய்ன்,

ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில், எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. என்கிறீர்கள். இதைத்தடுக்க சுன்னத்துச் செய்யச்சொல்றீங்க!!! நல்ல ஜோக்கு!
சகோ இஸ்லாம் தான் எல்லாவற்றுக்கும் மார்க்கம் என கதையடிப்புகளை நிப்பாட்டுங்க. எயிட்சைக் கட்டுப்படுத்த ஒழுக்கமாய் இருக்கச் சொல்ல்லுங்க! நல்ல வழி சொல்றீங்க ஒழுக்கமாய் இருகாமல் இருக்க!

suvanappiriyan said...

//ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில், எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. என்கிறீர்கள். இதைத்தடுக்க சுன்னத்துச் செய்யச்சொல்றீங்க!!! நல்ல ஜோக்கு!
சகோ இஸ்லாம் தான் எல்லாவற்றுக்கும் மார்க்கம் என கதையடிப்புகளை நிப்பாட்டுங்க. எயிட்சைக் கட்டுப்படுத்த ஒழுக்கமாய் இருக்கச் சொல்ல்லுங்க! நல்ல வழி சொல்றீங்க ஒழுக்கமாய் இருகாமல் இருக்க!//

அடடா....நான் சொல்ல வந்ததையே தவறாக விளங்கியாச்சா! ஒழுக்கமாக தனது மனைவிக்கு உத்தமமான கணவனாக வாழ வேண்டும் என்றுதான் நானும் சொல்கிறேன். நான் வாழ்ந்தும் வருகிறேன்.

சுன்னத் பண்ணுவதால் எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோயிலிருந்து தனது மனைவிக்கோ அல்லது குழந்தைக்கோ தெரியாமல் கடத்தி விடும் பலர் இன்று உள்ளனர். இவன் செய்யும் தவறுக்கு அவன் மனைவியோ அல்லது அவன் குழந்தைகளோ ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்? மேலும் இது இஸ்லாமியரின் பழக்கம் என்று ஒதுக்காமல் மத வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் செய்து கொள்வது வரவேற்கப்பட வேண்டும் என்றே நான் சொல்ல வந்தது.

Anonymous said...

//பல பெண்களிடம் முறையற்ற உறவு வைத்து அதனால் நோய் கண்ட ஒரு கணவன் அப்பாவியான தனது மனைவிக்கும் தனது குழந்தைகளுக்கும் இந்த நோயை தந்து விடுகிறான். இது போன்ற சந்தர்பங்களில் சுன்னத் சிறந்த கேடயமாக இருப்பதையும் கவனிக்க வேண்டும்.//
இதென்ன புதுக்கதை? புருசனுக்கு இருந்தால் அவன் சுன்னத் பண்ணி எந்த உபயோகமில்லை அல்லவா?

//இந்த நோய் தொற்றுவதை சுன்னத் பெரும்பாலும் தடுக்கிறது.//

பெரும்பாலும் என்பது உண்மையில்லை. சுன்னத் செய்வது எயிட்ஸை குறைக்குமா என்பது குறித்து பல கருத்து வேறுபாடுகள் விஞ்ஞானிகளிடம் உண்டு. ஆகவே இதை நம்பி எவனாவது கண்ட இடத்தில் 'காலை' விட்டால் ஆள் காலி என்பதே உண்மை!

Anonymous said...

மேலும் இது இஸ்லாமியரின் பழக்கம்//

இதுவும் தவறு! இது யூதரிகளிடமிருந்து முகம்மது காப்பியடித்த மேட்டராகும்!

suvanappiriyan said...

//இதுவும் தவறு! இது யூதரிகளிடமிருந்து முகம்மது காப்பியடித்த மேட்டராகும்!//

நீங்கள் சொல்வதும் தவறு! இஸ்லாம் என்பது முகமது நபி புதிதாக கொண்டு வந்த ஒரு மார்க்கமல்ல. ஆதம முதல் ஆபிரஹாம் ஏசுநாதர் வரை எதுவெல்லாம் இறை மார்க்கமாக போதிக்கப்பட்டதோ அதை ஜிப் பண்ணி கடைசியாக முகமது நபி மூலம் இந்த உலக மக்களுக்கு கொடுக்கப்பட்டதுதான் குர்ஆன். அதை பின் பற்றுபவர்களே முஸ்லிம்கள். இந்த சுன்னத் பண்ணும் பழக்கம் முகமது நபி காலத்துக்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளது.

suvanappiriyan said...

//பெரும்பாலும் என்பது உண்மையில்லை. சுன்னத் செய்வது எயிட்ஸை குறைக்குமா என்பது குறித்து பல கருத்து வேறுபாடுகள் விஞ்ஞானிகளிடம் உண்டு. ஆகவே இதை நம்பி எவனாவது கண்ட இடத்தில் 'காலை' விட்டால் ஆள் காலி என்பதே உண்மை!//

உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.

suvanappiriyan said...

திரு சான்றோன்!

//சுவனப்பிரியன் அவர்களே….

ராஜராஜனுக்கு ஒரே சகோதரி குந்தவை தான் ….அவரும் ராஜராஜனின் தங்கை அல்ல………….மூத்த சகோதரி…..அக்காள்……
அவரும் அவர் கணவர் வந்தியத்தேவரும் சிறந்த சிவ பக்தர்கள்……பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு அவர்கள் செய்த நிவந்தங்களுக்கு விரிவான கல்வெட்டு ஆதாரங்களை இன்றும் காணலாம்…..
for your information…. மதம் மாறியவர் ராஜராஜன் சகோதரியல்ல……அவரது மகள் சந்திரமல்லி……..அவள் சிங்கள பவுத்த பிக்குகளின் சதியால் பவுத்த பிட்ஷுனியாக மாற்றப்பட்டார்……தன் தந்தையை பழி வாங்க, தான் பலியாடாக மாற்றப்பட்டதை தாமதமாக புரிந்து கொண்ட சந்திரமல்லி ,மீன்டும் தந்தையை வந்தடைந்து, இறுதிவரை தஞ்சையில் வாழ்ந்து மறைந்தார்……குறைந்த பட்ச சரித்திர அறிவையாவது வளர்த்துக்கொண்டு பின்பு கருத்து பதிவு செய்ய வாருங்கள்……//


குந்தவை இஸ்லாம் மதம் மாறியது கி.பி.1006 -என்று அவனீஷ்வரம் கோயிலில் நடந்த அவிட்ட திருநாள் கொண்டாட்டம் அறிவிப்பது போல அவர் இறந்த ஆண்டு கி.பி.1011 -அல்லது 1012 இடையில் ஒருநாள் என்பதை ராஜராஜனும் அவனது மனைவி லோகமாதேவியும் (ஹிரணிய கர்ப்ப தானம்" என்னும் சாதிமாற்ற சடங்கினை செய்ததில் இருந்து அறியவருகிறது!

குந்தவை இஸ்லாம் மதம் மாறியதால் அவரது பரம்பரை அரசகுல பிறப்பும் சத்திரியர்கள் தான் அரசாளவேண்டும் என்ற பிராமணிய தருமமும் நிலைநாட்ட வேண்டிய அவசியம் அல்லது நிர்பந்தம் காரணமாகவே ராஜராஜனுக்கும் அவனது மனைவிக்கும் "ஹிரணிய கர்ப்ப சடங்கு" நடத்தப்பட்டுள்ளது என்பதும் அதன்பிறகே ராஜேந்திர சோழன் பிராமணர்களின் ஆதவுடன் ராஜராஜன் உயிருடன் உள்ள நிலையிலேயே அரசனாக்கப் பட்டுள்ளான் என்பதும் அறியவருகிறது!

http://generationneeds.blogspot.com/2012_04_01_archive.html

உத்தமசோழன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்
.
திருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்தவை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்!


குந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் கோயில் விமானத்திலேயே உள்ளாய் அணிந்த போர்வீரன் ஒருவன் அழகிய பெண்ணொருத்தியின் கால்களுக்கு இடையில் உற்றுபர்ப்பதாகவும் சிவகணம் அதனைபார்த்து சந்தோசத்துடன் சங்கு ஊதுவதாகவும் சுதை உருவங்களாக செய்து இருந்ததையும் குறிப்பிட்டு விளக்கம் அளித்திருந்தேன்!

suvanappiriyan said...

..... மேலும் திருவாதவூர் திருமறை நாதர் கோயிலுக்கு உள்பட்ட தீர்த்தத்தில் புருஷா மிருகம் என்ற ஒன்றை நிறுவி கோயில் வரலாறு சொன்ன கதையையும் குறிப்பிட்டு இருக்கிறேன்!


இவைகள் அனைத்துக்கும் குந்தவை நாச்சியாரின் இஸ்லாம் மதமாற்றத்துக்கும் தொடர்புகள் உள்ளது என்பது எளிதில் விளங்கும் உண்மைகளே!
தவிர குந்தவைக்கு, இந்துமதம் என்னும் வைதீக மதத்தின் மீது அளவுகடந்த வெறுப்பு இருப்பதற்கு காரணங்கள் இருப்பதையும் யாரும் மறுக்க முடியாது!


தனது உடன்பிறந்த சகோதரன் ஆதித்ய கரிகாலன் பிராமண அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டது! அதனைத் தொடர்ந்து தனது கணவனும், வாணர் குலத் தொன்றலுமான, "வல்லவரையன் வந்தியத்தேவன்" திருநெடுங்களம் என்ற ஊரில் உத்தம சோழன் படையினருக்கு இடையில் நடந்த மோதலில் கொள்ளப்பட்டது,


அரசகுலத்தில் பிறந்த குந்தவையும், தனது தம்பிராஜராஜனும் உயிருக்கு பயந்து நாடோடிகளாக பல இடங்களுக்கு சென்று வாழ்ந்த இளமைக்கால தலைமறைவு வாழ்க்கையும் அதன் வேதனைகளும்...,

தனது தந்தையும் சோழ அரசனுமான சுந்தர சோழன் காஞ்சி அரண்மனையில் சிறைகைதிபோல இருந்து, ஆதித்ய கரிகாலன் படுகொலைக்கு பிறகு சிறிது காலத்திலேயே இறந்தது...,

தந்தையுடன் தனது தாயான வானவன் மாதேவி எறியும் நெருப்பில் வீழ்ந்து சாவைத் தழுவியது. போன்ற கொடுமைகள், சாதாரண கொடுமைகள் அல்ல! எளிதில் மறந்துவிடும் நிகழ்சிகளும் இல்லை!

குந்தவை இந்துமதத்தை வெறுத்து ஒதுக்கவும், இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொள்ளவும் போதுமான காரணங்களாக இருக்கின்றன!

http://generationneeds.blogspot.com/2012_03_01_archive.html

Anonymous said...

"...சுன்னத் பண்ணுவதால் எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோயிலிருந்து தனது மனைவிக்கோ அல்லது குழந்தைக்கோ தெரியாமல் கடத்தி விடும் பலர் இன்று உள்ளனர். இவன் செய்யும் தவறுக்கு அவன் மனைவியோ அல்லது அவன் குழந்தைகளோ ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?...."

சகோ சுவனப்பிரியரே,
சுப்பரப்பு சுப்பர். தெரியாமல் நோய் அவருக்கு எப்படி வந்தது? ஒழுக்கக்கேடுதானே? அல்லது அவர் இரத்த மாற்றீடின் போது வந்ததாயின் சுன்னத்துச் செய்து ஒன்றும் ஆகாது. உடல் திரவங்கள் கலக்கும்போது (விந்து) தொற்றியே ஆகும்!
சும்மா கதையடிக்க வேண்டாம்!

“....மேலும் இது இஸ்லாமியரின் பழக்கம் என்று ஒதுக்காமல் மத வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் செய்து கொள்வது வரவேற்கப்பட வேண்டும் என்றே நான் சொல்ல வந்தது....”

இல்லையே யூதர்களும் செய்கிறார்களே?
எல்லாம் சரி சகோ ஆண்களின் ஒழுக்ககேட்டுக்கு சுன்னதுச் செய்யலாம் பாவப்பட்ட பெண்களை எதை வெட்டச்சொல்லி சொல்வீர்கள்?

UNMAIKAL said...

ஹலால் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல, இயற்கை ரீதியாக எல்லாருக்குமே ஒத்துவரக்கூடியது


டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அடுத்த சூடான விசயத்தை கிளப்பி உள்ளது.

இந்தியாவின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்கு "ஹலால்" முத்திரை (ஹலால் இந்தியா நிறுவனத்திடம் இருந்து) வாங்குகின்றன என்ற செய்தி தான் அது.

இது ஒரு வியாபார யுக்தி என்ற எண்ணம் இருந்த போதிலும், அந்த நிறுவங்களின் தலைமைகள் ஹலால் குறித்து கூறியுள்ள கருத்துக்கள் ரொம்பவே ஹாட்டாக இருக்கின்றன.

"ஹலால் என்றால் அந்த பொருள் மிகச் சிறந்த தரத்துடன் இருப்பதாக பொருள்

(Halal signifies highest standards of quality and hygiene in ingredients, processes and products)" - என்கின்றது ஒரு தலைமை.

"Islam in many ways is a way of life. To that extent, Islamic branding is all about using brands as good deeds" - இப்படி சொல்கின்றது இன்னொரு நிறுவனம்.

"இந்த விசயத்தை நாம் ஆழ்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகின்றது.

ஹலால் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல, இயற்கை ரீதியாக எல்லாருக்குமே ஒத்துவரக்கூடியது
(A more careful look reveals that a lot of these values do not just suit Islamic audiences, but are of a universally appealing nature)" -
இது இன்னொரு தலைமை...


Among these homegrown brands were CavinKare, Daawat, Bikano, Goldwinner oil, Vadilal ice cream, Amrutanjan Health Care and Gujarat Ambuja Exports.

"The certification is a reason-to-belief for customers on quality parameters," said R S Vijay Kumar, GM of international business at CavinKare, a Chennai-based personal care company.

Halal signifies highest standards of quality and hygiene in ingredients, processes and products," said Sachin Anand, head (international business), Bikanervala Foods.

Way of Life

Changing to halal brands, many Indians were admiring the Islamic values as suitable for the universally appealing nature'.
Harish Bijoor, CEO of Harish Bijoor Consults, agrees.

"Islam in many ways is a way of life Bijoor said.

To that extent, Islamic branding is all about using brands as good deeds.

What starts with halal foods, can move on to halal practice in every industry, be it the pharmaceutical or the cosmetic industry.

Islamic branding can embrace broader pastures that cover business practices too," said Harish Bijoor, CEO of Harish Bijoor Consults.

Bikano, the sweet and the namkeen brand from Bikanervala Foods, has seen a 30 percent jump in soan papdi and cookies sales in Malaysian market in the last one year, partly due to the halal certification that gave a higher visibility on retail shelves there.

"Halal signifies highest standards of quality and hygiene in ingredients, processes and products," said Sachin Anand, head (international business), Bikanervala Foods.

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//"நீங்கள் பலரை நாடுபவராக இருந்து உங்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு தேவைப்பட்டால் சுன்னத் செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னால் அதில் கொஞ்சமேனும் பொருள் இருக்கும் //

அதெப்படி...நான் எழுதிய பதிவின் நோக்கத்தை இரண்டு வரிகளில் விளக்கி விட்டீர்களே

VANJOOR said...

.
.
CLICK >>>
நம்ம நாட்டிலே என்னெவெல்லாம் நடக்குது. !! ?? வரதட்சினை கொடுமையினால் அன்றாடம் தீ க்கு இறையாகும் பெண்க‌ள். அன்றாட‌ம் இந்தியாவில் கொலை, க‌ற்ப‌ழிப்பு ம‌ற்றும் வ‌ன்கொடுமைக‌ளுக்குள்ளாகும் தாழ்த்த‌ப்ப‌ட்டோர். வியக்க!! வியர்க்க !!! படங்கள் காணொளிகள் தொடர் ....
<<<<< TO READ.

.

அதிரை சித்திக் said...

பதிவை கவனித்துப் படிக்காமல், சுன்னத்து பண்ணினால், கவனமாக இல்லாவிட்டாலும் நமக்கு எயிட்ஸ் வராதுனு நுனிப்புல் மேய்ந்து புதைகுழியில் விழுந்தால், அதற்கு நீங்கள் பொறுப்பில்லைனு ஒரு டிஸ்க்ளைமர் போட்டுருங்க, சகோ! வருண் சொன்னது >>>>>.

சுன்னத் செய்துகொண்டு அனாசாரம் செய்ய சொல்லவில்லை இஸ்லாம் சுன்னத் செய்து கொண்டால் சுத்தமாக இருக்கலாம்

சுத்தமாக இருப்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என இஸ்லாம் சொல்கிறது உடை சுத்தம் ,உடல் சுத்தம் ,உள்ளம் சுத்தம் .,இருக்கும் இருப்பிடம் சுத்தமாக இருக்க வேண்டும் என இஸ்லாம் சொல்கிறது .வழியில் நடந்து செல்லும்போது

கல்லோ முள்ளோ தென்படுமாயின் அதனை அகற்றி ஓரமாக எடுத்து போடுவது உள்ளத்தி ஒரு துளி அளவு இறை நம்பிக்கையின் வெளிப்பாடு என இறை தூதர் முகம்மது நபி (ஸல் )கூறியுள்ளார்கள்

suvanappiriyan said...

வெங்கட ஸ்ரீநிவாசன் சொன்னது…

சமீபத்தில் (ஃபெப்ரவரி மாதம் என்று நினைவு) இந்தியாவில் புற்று நோய் பற்றிய தகவல்கள் வெளியிட்டிருந்தார்கள். அதில் இந்திய பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது (உயிரிழப்பு) Cervical Cancer-ஆல். ஆனால், இதில் இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் பாதிப்பு அடைவதில்லை என்ற தகவல் [இந்த கருத்து முழுக்க முழுக்க தகவல் அடிப்படையில் தான்; ஆராய்ச்சிகளில் அடிப்படையில் அல்ல] வெளியிட்டிருந்தார்கள். இதற்கு காரண்ம் இஸ்லாமிய ஆண்களின் சுன்னத் பழக்கமாகக் கூட இருக்கலாம் என்று முன்னணி நாளிதழ்களில் கூட வெளியாகியுள்ளது.

மற்றபடி, இந்த சுன்னத், 100 சதவிகிதம் Cervical Cancer-ஐத் தடுக்கும் என்றும் கூற விழையவில்லை.

Anonymous said...

சுவனப் பிரியன் said...

திரு கோவி கண்ணன்!

//"நீங்கள் பலரை நாடுபவராக இருந்து உங்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு தேவைப்பட்டால் சுன்னத் செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னால் அதில் கொஞ்சமேனும் பொருள் இருக்கும் //

அதெப்படி...நான் எழுதிய பதிவின் நோக்கத்தை இரண்டு வரிகளில் விளக்கி விட்டீர்களே
////


இஸ்லாம் இளைஞர்கள் பலரை நாடுவதால் தான் சுன்னத் செய்து கொள்கிறார்களா??

என் இன ஆண்களை கேவலப்படுத்தும் சுவனப்பிரியவனை அல்லா சும்மா விடமாட்டார்!

suvanappiriyan said...

திரு கந்தசாமி!

//ஹிஹி, விட்டா சுன்னத் செய்பவர்களுக்கு சுவனப்பிரியன் ரெண்டு கிலோ அரிசியும் கதர் சேட்டு,கதர் வேட்டியும் இலவசமாக கொடுப்பதாக அறிக்கை விட்டாலும் விடுவார் :)//

மக்களுக்கு சுகாதார வாழ்வு கிடைக்க அவர்களுக்கு ஆர்வம் வூட்டும் வகையில் அரசு இலவசங்களை கொடுத்தால் அதை வரவேற்போமே! :-)

நம்ம ஜெயலலிதா அம்மா கூட அரசு தொட்டிலில் போடப்படும் அனாதை குழந்தைகளுக்கு இலவச சுன்னத் செய்ய முன்பு ஆர்டர் பிறப்பித்திருந்தார். ஒரு பெண்ணுக்கு தெரிந்த மருத்துவ குணம் பல ஆண்களுக்கு இன்னும் வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

//பாவம் சுவனம், ஒருவேளை தனது வருமானத்துக்காக இவ்வாறு எழுதலாம், இதெல்லாம் ஒரு வியாபார தந்திரம் தானே:)//

ஹி...ஹி...நம்ம தொழில் கணிணி துறையையும் கணக்கியலையும் சார்ந்ததுங்கோ! இனிமேல போய் இதுக்காக டாக்டருக்கு எல்லாம் படிக்க முடியாது. ஆலோசனை வேண்டுமானால் சொல்லலாம். :-)

.

suvanappiriyan said...

அனானி!

//இஸ்லாம் இளைஞர்கள் பலரை நாடுவதால் தான் சுன்னத் செய்து கொள்கிறார்களா??

என் இன ஆண்களை கேவலப்படுத்தும் சுவனப்பிரியவனை அல்லா சும்மா விடமாட்டார்!//

இஸ்லாமிய ஆண்கள் திருமணமாகாமல் ஒரு பெண்ணோடு உடலுறவு கொண்டால் கல்லால் எறிந்து அவனை கொல்ல வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம். குர்ஆனையும் முகமது நபியையும் பின்பற்றும் ஒரு முஸ்லிம் தனது மனைவியை தவிர எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.

சுகாதாரம் மற்றும் இல்லற சுகம் என்று பல உபயோகங்கள் இதனால் கிடைப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. முஸ்லிம்கள் வழக்கம் என்று தூரமாக்காமல் அனைத்து மதத்தினரும் சுன்னத் செய்து ஆரோக்கியமாக இருக்க ஒரு ஆலோசனையே இந்த பதிவு.

suvanappiriyan said...

திரு கோவிக் கண்ணன்!

//அதற்கு உடல்நலன் காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை, அந்தக் குழந்தைகளில் முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளும் இருக்கும் என்பதால் சொல்லி இருப்பார். அவருக்கு ஒருவேளை ஆனாதை ஆக்கப்படும் குழந்தைகளில் கனிசமான அளவில் இஸ்லாமியப் பெற்றோருடையது என்று சொன்னார்களோ என்னவோ. அரசு சார்பில் அதற்கான காரணங்கள் தெரிவிக்காத போது உடல் நலன் சார்ந்தது என்று நீங்கள் கூறுவது பொய் பிரச்சாரம்//

உசிலம்பட்டியிலும் சேலத்திலும் கள்ளிப்பாலைக் கொடுத்தும் முழு நெல்லையும் கொடுத்து கொல்வது எந்த சமூகம் என்பதை முன்பு ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார்களே! இதனால்தானே அரசு தொட்டில் திட்டமே வந்தது? அதே போல் தமிழகம் முழுக்க கணக்கெடுத்தால் முதியோர் இல்லங்களில் அவஸ்தைபடும் பெற்றோர்கள் சதவீதத்தில் எந்த மதத்தினர் என்பதையும் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வைக்கும் வாதங்களை உங்கள் மனசாட்சியாவது ஒத்துக் கொள்கிறதா?.

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் ..சகோ: சு.பி
தாங்கள் முன்பு கத்னா பற்றி பதிவுபோட்டிங்க அப்போ கோவி கண்ணன் வக தோக தெரியாம அசட்டுத்தனமான கேள்விகள் கேட்டு வசமாக என்னிடம் சிக்கினார் ....இப்பவும் அதே போல ஒரு கத்னா பதிவு, அதே கோவி கண்ணனின் அதிமேதாவித்தனமான (??!!) கேள்விகள் என்கிற நினைப்பில் "அசடு" மாதிரி கேட்கிறார் ....இவர்களைபோன்றவர்களுக்கு எத்தனை முறை விளக்கமாக பதில் சொன்னாலும், மண்டல ஏறாது காரணம் அங்கே " மசாலா " இல்லை...SO இத்தகையவர்களுக்கு பதில் கொடுக்காமல் இருப்பதே அறிவுடைமை .....
இந்திய அரசாங்கம் இஸ்லாமிய வங்கியியல், ஹலால் உணவு பற்றிய சிறப்புகளை நடைமுறைப்படுத்த முனையும் இந்நேரத்தில் "அசடு" களைப்பற்றி
கவலைகொள்ள தேவையில்லை என்பதே என் வேண்டுகோள்

suvanappiriyan said...

சலாம் சகோ நாசர்!

//இந்திய அரசாங்கம் இஸ்லாமிய வங்கியியல், ஹலால் உணவு பற்றிய சிறப்புகளை நடைமுறைப்படுத்த முனையும் இந்நேரத்தில் "அசடு" களைப்பற்றி
கவலைகொள்ள தேவையில்லை என்பதே என் வேண்டுகோள் //

இந்திய அரசு எடுக்கும் இது போன்ற முடிவுகள் நமது நாட்டை மேலும் செம்மைப் படுத்தும். மாட்டுக் கறி ஏற்றுமதியில் முதலிடத்தைப் பெறப் போகிறதாம் நமது நாடு. இது போன்று அனைத்து ஏற்றுமதிகளிலும் முதலிடத்தை பெற வாழ்த்துவோம்.

Sadiq said...

அஸ்ஸ்லாமு அலைக்கும்.
உங்கள் பதிவுகளை பல நாட்களாக படித்து வருகிறேன், கமன்ட் தான் போட்டதில்லை. இந்திய அரசாங்கம் சொல்ல பயப்படும் உண்மையை போட்டு உடைத்துவிட்டீர்கள். எதிர்ப்புகள் எதிர்பார்த்ததுதான்.

Sadiq said...

கோவி கண்ணனுடைய பதிவில் நான் போட்ட கமன்ட்.

எந்தவித மருத்துவ ஆதாரமும் இல்லாமல் , வெறும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்ட கட்டுரை.

//சுன்னத் செய்து கொள்வது எய்ட்ஸ் பரவலை தடுக்கிறதா ?
இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, காரணம். எய்ட்ஸ் பரவல் பாதுகாப்பற்ற பாலியல் உறவால் பரவுகிறது என்றாலும், அவ்வாறு பாதுக்காப்பற்ற பாலியல்உறவை நாடும் சுன்னத் செய்யப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொள்ளாது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை//

//சுன்னத் செய்வது என்பது காட்டுமிராண்டி பழக்கம்//

சுன்னத் செய்வது காட்டுமிராண்டி பழக்கம் என்றால், உலகத்திலேயே பெரிய காட்டுமிராண்டி உலக சுகாதார நிறுவனம் (WHO) தான். !!!

சுன்னத் (circumcision) செய்வது, HIV கிருமி பரவுவதை 70% வரை தடுக்கிறது என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே WHO நிபுணர் குழு 2007 லில் சுன்னத் செய்வ‌து HIV பரவுவதை குறைப்பதற்கான வழியாக பரிந்துரைத்தது.


"The recommendations represent a significant step forward in HIV prevention", said Dr Kevin De Cock, Director, HIV/AIDS Department, World Health Organization. "Countries with high rates of heterosexual HIV infection and low rates of male circumcision now have an additional intervention which can reduce the risk of HIV infection in heterosexual men. Scaling up male circumcision in such countries will result in immediate benefit to individuals. However, it will be a number of years before we can expect to see an impact on the epidemic from such investment."

http://www.who.int/hiv/mediacentre/news68/en/index.html

http://www.who.int/hiv/topics/malecircumcision/en/index.html

சரி உலக சுகாதார நிறுவனமே பரிந்துரைத்த பிறகு, ஏன் இந்தியாவில் இதைப்பற்றி இந்தியாவில் யாரும் வாய் திறப்பதில்லை ?

சுன்னத் செய்வது குறிப்பிட்ட மதத்தினருடைய செயலாக பார்ப்பதுதான் காரணம்.

அந்த 20007 WHO மாநாட்டில் இருந்த இந்திய நிபுணர் குழு கூறுவதை பாருங்கள்

Indian officials, who were present at the conference, agree that circumcision is a hygienic practice but they are loath to be seen as endorsing it because of its strong association with Muslims.

Speaking to TOI, a senior official conceded as much: "Over 25% of people in Europe go for circumcision for protection against AIDS. .But in India, we cannot encourage it because of its association with Muslims. Leave alone implementing it, even agreeing with the study would mean being attacked by Hindus.. Then, we also don't want to make the bulk of the Muslim population feel that they can be safe with unprotected sex."

http://articles.timesofindia.indiatimes.com/2005-08-04/india/27843351_1_circumcised-men-hiv-rates-richard-feachem

இந்த ஆய்வு சரி என்று ஏற்றுக் கொண்டால் கூட ஹிந்துக்கள் எதிர்ப்பார்கள் என்ற ஒரு நிபுணர் கூறிகிறார்.

இந்திய மக்களிடையே சுன்னத் செய்வதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று National AIDS Research Institute ஆய்வாளர்கள் கூறுகிரார்கள்.

As male circumcision has emerged as an effective HIV prevention option there is a need to explore its acceptability in India,” the preliminary report prepared by researchers from Pune-based National AIDS Research Institute (NARI) says.

http://www.indianexpress.com/news/need-to-work-for-acceptability-of-circumcision-hiv-experts/748902/0

சுன்னத் செய்வது 100% HIV பரவுவதை தடுக்கிறது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் மருத்துவ துறையில் , ஒரு நோயை, ஏதாவது முறை100% தடுத்தால்தான் பரிந்துரைக்க வேண்டும் என்பது கிடையாது . நாம் குழநதைகளுக்கு கொடுக்கும் தடுப்பூசிகள் 100% தடுப்பது கிடையாது. உதாரணமாக ஆய்வில் உள்ள HIV தடுப்பூசி வெறும் 30% தான் நோய் பரவுவதை தடுக்கிறது. சுன்னத் செய்வது 70% வரை தடுக்கிறது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே சுன்னத் செய்து HIV பரவுவதை குறையுங்கள் என்று WHO பரிந்துரைத்த பிறகும், மக்கள் எதிர்ப்பார்கள் என்பதற்காகவே நமது அரசாங்கம் இந்த உண்மையை மூடி மறைக்கிறது. எந்த மாதிரி எதிர்ப்பு வரும் என்பதற்கான உதாரணம் தான் கோவி கண்ணனுடைய இந்த பதிவு.

இந்த‌ ஆதாரங்களை படித்த பிறகாவது கோவி கண்ணன் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவாரா ?

http://en.wikipedia.org/wiki/Circumcision_and_HIV

Sadiq said...

//சமீபத்தில் (ஃபெப்ரவரி மாதம் என்று நினைவு) இந்தியாவில் புற்று நோய் பற்றிய தகவல்கள் வெளியிட்டிருந்தார்கள். அதில் இந்திய பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது (உயிரிழப்பு) Cervical Cancer-ஆல். ஆனால், இதில் இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் பாதிப்பு அடைவதில்லை என்ற தகவல் [இந்த கருத்து முழுக்க முழுக்க தகவல் அடிப்படையில் தான்; ஆராய்ச்சிகளில் அடிப்படையில் அல்ல] வெளியிட்டிருந்தார்கள். இதற்கு காரண்ம் இஸ்லாமிய ஆண்களின் சுன்னத் பழக்கமாகக் கூட இருக்கலாம் என்று முன்னணி நாளிதழ்களில் கூட வெளியாகியுள்ளது.
மற்றபடி, இந்த சுன்னத், 100 சதவிகிதம் Cervical Cancer-ஐத் தடுக்கும் என்றும் கூற விழையவில்லை.//

இதற்கெல்லாம் அடிப்படை ஆதாரம் எதுவும் கிடையாது. 100 விழுக்காட்டு மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 15 விழுக்காடு என்றால் அதில் பாதித்துள்ளவர்களின் விழுக்காடுகளை ஒப்பிட்டால் தான் தகவல் தெரியவரும். மற்றவர்களில் 85 க்கு 10 பேர் பாதித்துள்ளனர் இஸ்லாமியர்களில் 2 பேர் மட்டுமே பாதித்துள்ளனர் என்றால் ஒப்பிடத் தக்க 15ல் 2 பேர் என்பது 13 விழுக்காடு அதை 86/10 ல் கிடைக்கும் 8.5 விழுக்காட்டில் ஒப்பிட அதிகமாகும். தவிர இது போன்ற கணக்கு வழக்குகளை இஸ்லாமிய நாடுகளிலும் நடத்தப்படும் போல் தான் முழுவிவரம் தெரியவரும்//

சதவீதக் கணக்கு கூடத் தெரியாத முட்டாள்கள் அல்ல ஆய்வாளர்கள். எல்லா முன்னனி ஊடகங்களில் வந்த Million death study என்ற ஆய்வைப் பற்றி அவர் கூறுகிறார். இந்திய பெண்களை அதிகமாக தாக்கும் புற்று நோய் கர்ப்பபை வாய் புற்று நோய் ஆகும். இந்த நோயால், நம் நாட்டில் வருடத்திற்கு 33400 பெண்கள் இறக்கிறார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால் முஸ்லிம் பெண்களை இந்நோய் தாக்குவது 40% சதவீதம் குறைவு என்றும் , இதற்கு காரணம் முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்வதால் இருக்க கூடும் என்றும் கூறுகிறது.

Cervical cancer was around 40% less common in Muslim than in Hindu women, probably due to
high circumcision rates among Muslim men having a protective effect against human
papillomavirus (HPV) infection, a causative agent in cervical cancer.

http://www.cghr.org/wordpress/wp-content/uploads/Press_Release_Lancet_Cancer_English.pdf

An interesting find is that in States where Muslim population was higher, cervical cancer risk was “much lower.”

For instance, Jammu and Kashmir and Assam, which have 75 and 40 per cent Muslim population respectively, have “less than a quarter of the national rates of cervical cancer,” the authors write.

As seen internationally, circumcision in men greatly reduces the chances of sexual transmission of HPV virus. Women also had lower incidence of oral cancer. However, breast and stomach cancers were much higher.
http://www.thehindu.com/health/medicine-and-research/article3251406.ece
http://articles.timesofindia.indiatimes.com/2012-03-29/india/31254449_1_cervical-cancer-cancer-deaths-cancer-cases


சுன்னத் செய்வது கர்ப்ப பை புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்று ஏற்கனவே ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


Male Circumcision, Penile Human Papillomavirus Infection, and Cervical Cancer in Female Partners
http://www.nejm.org/doi/full/10.1056/NEJMoa011688

சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி The Journal of American Medical Association ல் வந்த கட்டுரை.

The Medical Benefits of Male Circumcision
http://jama.jamanetwork.com/article.aspx?articleid=1104451

கோவி சார் , பூனை கண்னை மூடிவிட்டால் ..... என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ சாதிக்!

//உங்கள் பதிவுகளை பல நாட்களாக படித்து வருகிறேன், கமன்ட் தான் போட்டதில்லை. இந்திய அரசாங்கம் சொல்ல பயப்படும் உண்மையை போட்டு உடைத்துவிட்டீர்கள். எதிர்ப்புகள் எதிர்பார்த்ததுதான்.//

பதிவுகளை தொடர்ந்து படித்து வருவது அறிந்து மகிழ்ச்சி! உங்களின் முதல் பின்னூட்டமே அட்டகாசமான தெளிவான பின்னூட்டம். நம் அரசு ஏன் மெண்டு விழுங்குகிறது என்பதை ஆதாரத்தோடு போட்டு உடைத்து விட்டீர்கள்.

//கோவி சார் , பூனை கண்னை மூடிவிட்டால் ..... என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது //

ஹா...ஹா...அதற்காகத்தான் அவரது பதிவின் முகப்பில் பூனையின் படத்தை போட்டிருக்கிறாரோ!

வருகைக்கும் முதல் பின்னூட்டத்துக்கும் நன்றி சாதிக்!

Anonymous said...

///இஸ்லாமிய ஆண்கள் திருமணமாகாமல் ஒரு பெண்ணோடு உடலுறவு கொண்டால் கல்லால் எறிந்து அவனை கொல்ல வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம். குர்ஆனையும் முகமது நபியையும் பின்பற்றும் ஒரு முஸ்லிம் தனது மனைவியை தவிர எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.////

அப்புறம் எதுக்கு சும்மா கிடக்கிற இஸ்லாம் ஒழுக்க சீலர்களின் ஆணுறுப்பில் கத்தியை வைக்க சொல்லுகிறீர்... லூசாயா நீ! அடிக்கடி தொப்பி பிரட்டுறாய்! முதலில் ஒரு கருத்தில் நிலையாக இருக்க பழகு.