Followers

Monday, May 28, 2012

மரம் செடி கொடிகளை மனிதனால் உருவாக்க முடியுமா?

நிச்சயமாக இறைவன்தான், வித்துகளையும, கொட்டைகளையும் வெடித்து முளைக்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் இறைவன்- எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
-குர்ஆன் 6:95

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? உங்கள் செவிப்புலன் மீதும், உங்கள் பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? அகிலங்களின் அனைத்துக் காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று நபியே! நீர் கேளும். உடனே அவர்கள் “இறைவன்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
-குர்ஆன் 10:31

'நீங்கள் மூட்டுகிற நெருப்பைப் பற்றி சிந்தித்தீர்களா? அதற்குரிய மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம் உருவாக்கினோமா?'
-குர்ஆன் 56:71,72


இந்த மூன்று வசனங்களையும் ஒரு மனிதன் ஆழ்ந்து சிந்தித்தான் என்றால் இறைவனின் ஆளுமையை உணரத் தொடங்கி விடுவான். நாம் பார்க்கும் விதைகள் அனைத்தும் கிட்டத் தட்ட இறப்பு நிலைக்கே சென்று விடுகிறது. பல மாதங்கள்: பல வருடங்கள் கழித்து நீங்கள் ஒரு விதையை பூமியில் போட்டு சிறிது தண்ணீரை ஊற்றினால் நிலத்தை பிளந்து கொண்டு செடிகளாகி பின்னர் மரங்கள் வெளியாவதை நாம் பார்ப்போம். இது எவ்வாறு சாத்தியமாகிறது? இத்தனை நாளும் சூரிய ஒளி கூட படாது இருட்டறையிலே இருந்த இந்த விதைக்கு எவ்வாறு உயிர் வந்தது? யார் கொடுத்தது? என்றாவது சிந்தித்திருக்கிறோமா?




அடுத்து மரங்களின் கட்டுமான பொருட்களில் பிரதானமானது லிக்னோ செல்லுலோஸ் என்ற வேதிப் பொருளாகும். லிக்னைனும் மற்றும் மரத்துக்கு கடினத் தன்மை கொடுக்க செல்லுலோஸ் என்ற பொருளும் சேர்ந்து கலவையாக மரங்கள் பரிணாமம் அடைகின்றன. வேதியியல் பாஷையில் சொல்வதாக இருந்தால் மரம் என்பது 50 சதவீதம் செல்லுலோசாலும், 25 சதவீதம் ஹெமி செல்லுலோசாலும், 25 சதவீதம் லிக்னைனாலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கார்பனும் கலந்த கலவைகளே நாம் மேலே பார்த்த தனிமங்கள். ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கார்பனும் வளி மண்டலத்தில் மிகவும் கணக்கிலடங்காமல் பரந்து கிடப்பதை நாம் அறிவோம். இந்த மூன்றும் சேர்ந்துதான் லிக்னோ செல்லுலோஸ் என்ற பொருளை உருவாக்குகிறது. இந்த பொருள்தான் மரங்கள் விரிந்து படரக் காரணமாக அமைகிறது. ஆச்சரியமாக அறிவியல் அறிஞர்கள் லிக்னோ செல்லுலோஸை செயற்கையாக உருவாக்க பலமுறை முயன்றும் தோல்வியையே தழுவியுள்ளனர். இவ்வளவுக்கும் நமது வளி மண்டலத்தில் ஆக்சிஜனும், ஹைட்ரஜனும், கார்பனும் கணக்கிலடங்காமல் கிடைத்தும் அறிவியல் அறிஞர்களால் செயற்கையாக உருவாக்க முடியவில்லை.



நம்மைச் சுற்றியுள்ள அத்தனை மரங்களும் பல மில்லியன் வருடங்களாக ஆக்சிஜன், கார்பன், தண்ணீர், சூரிய ஒளி போன்ற கலவைகளினால் கூட்டுத் தயாரிப்பாக தயாரிக்கப்பட்டு நம் கண் முன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்சிஜன் ஒரு பங்கும் கலந்த கலவையான தண்ணீரை ஊற்றி நாம் மரத்தை வளர்க்கிறோம். நெருப்பை அணைக்கும் தண்ணீரை ஊற்றி நெருப்பால் எரிக்கப்படும் மரத்தை வளர்க்கின்றோம். இது ஒரு முரண்பாடான நிகழ்வு அல்லவா? இது எவ்வாறு சாத்தியமாகிறது? இறைவன் நாடினால் எதுவும் முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.



இந்த மரங்கள் எவ்வாறு உருவாகின்றது? இதன் செல்கள் எப்படி பரிணமிக்கின்றன? என்று ஆராய்ந்து சோர்ந்து போய் உள்ளனர் நமது விஞ்ஞானிகள். இது வரை நடந்த ஆராய்ச்சிகளில் எந்த முடிவும் இறுதியாக இதுவரை எட்டப்படவில்லை.

காடுகளைப் பற்றி ஆராய்ந்து வரும் ஒரு பிரிட்டன் நிறுவனம் 'மரம் கொடிகளைப் பற்றிய பல அரிய தகவல்கள் இன்று வரை நமக்கு அரிதாகவே கிடைத்து வருகிறது' என்கிறது.

Despite the knowledge resulting from earlier and ongoing research, there still exists a lack of information on the chemistry and structure of wood fibres. Large variations can be found within a single tree, from the pith to the bark and from the base to the top of a tree. Often the chemistry and structure of a wood cell are extremely heterogeneous and difficult to investigate with conventional techniques.2

A paper in the scientific journal Plant Physiology titled "Our Understanding of How Wood Develops is not Complete" describes the limited knowledge of the subject that scientists possess:

Considering the important role that wood is foreseen to play in the near future, it is surprising to see that our understanding of how wood develops is far from complete. With a few exceptions, very little is known about the cellular, molecular, and developmental processes that underlie wood formation. Xylogenesis represents an example of cell differentiation in an exceptionally complex form. This process is controlled by a wide variety of factors both exogenous (photoperiod and temperature) and endogenous (phytohormones) and by interaction between them. It is driven by the coordinated expression of numerous structural genes (some of known function) involved in cell origination, differentiation, programmed cell death, and heartwood (HW) formation and by virtually unknown regulatory genes orches trating this ordered developmental sequence. The presence of gene families and the extreme plasticity of the metabolism involved (as exemplified by the unusual behavior of plants with transformed cell walls; for review, see Fagard et al., 2000) add a further complexity to our understanding of the process of wood formation.3




The extraordinary creation in wood is emphasized thus in another scientific journal, Annals of Botany:
Wood formation is a highly complicated process involving an unbelievable variety of metabolic steps in the roots, stem and crown of shrubs and trees. At the centre of these processes is cambial activity which results in the release of young woody cells that undergo maturation until autolysis of the protoplast, indicating the final developmental stage. Later on, in various tree species, woody cells become further modified by an additional process called heartwood formation. The properties of wood that make it an appropriate raw material for many purposes are largely determined by the specific architecture of the cell walls. Difficulties in investigating these many developmental stages appear when routine techniques, which work well for soft plant tissues, are applied. Therefore, in most cases, these techniques need modification or the use of completely revised protocols to yield good results for woody tissues.4
In terms of absorbing the energy of low-speed blows and reducing the damage therefrom, wood is a most important material. The Second World War plane known as the “Mosquito” was made by compressing wood between strips of fiber board, making it the most damage-resistant plane of its time. The hardness and resistant nature of wood make it a very reliable material. Because wood breaks or cracks slowly enough to be visible from the outside, and that gives people enough time to take the necessary precautions .5


7.As seen in the picture to the left, wood consists of tube or straw-shaped cells. By combining one on top of the other, these cells, which make up the roots and trunks of plants, serve as channels that carry water and minerals right through the plant. This tisue, known as “xylem,” also constitutes a powerful structure that enables the plant to remain upright. To the right can be seen a slice of dry wood in cross-section. When dried out, the tube-like channels become hollow, as shown in the illustration.

The iron concentration inside plant cells is 1,000 times greater than that in the soil outside.8 Under normal condition, an exchange of matter from a high density region to a lower density one will take place. But exactly the opposite happens in plant roots, and the ions in the soil are easily able to pass into the root cells.9

Photosynthesis: The Superior Technology in a Miniature Factory
It is not only the wood and root parts of trees that cannot be obtained by artificial means, but also the leaves. Most important of the features that make leaves inimitable is their ability to make photosynthesis. Photosynthesis, one of the systems that scientists still do not fully understand, may be summarized as plants manufacturing their own nutrients. Thanks to the structure in plant cells that makes them able to make direct use of solar energy, they store solar energy, at the end of various complex processes, in the form of energy that can be used by human beings and animals. In addition, the photosynthetic energy stored in trees is also given off during burning. For example, the energy emitted by wood burned to heat a house is actually energy from the Sun stored during the formation of wood.10


1 http://www.forestpathology.org/wood.html; Wood Chemistry and Anatomy, 2005.
2 http://www.forestresearch.gov.uk/fr/INFD-6FMCUS; The Research Agency of the Forestry Commission, 2007.
3 Christophe Plomion, Gregoire Leprovost, Alexia Stokes, "Wood Formation in Trees", Plant Physiology, December 2001, Vol. 127, pp. 1513–1523.
4 Uwe Schmitt, "Chaffey, N.J. ed. Wood formation in trees—cell and molecular biology techniques", Annals of Botany, 2002, Vol. 90, no. 4, pp. 545-546.
5 Julian Vincent, "Tricks of Nature", New Scientist, 17 August 1996, Vol. 151, no. 2043, p. 39.
6 Julian Vincent, "Tricks of Nature", New Scientist, 17 August 1996, Vol. 151, no. 2043, p. 40.
7 http://www.smddrums.com/woodcell.htm
8 Malcolm Wilkins, Plantwatching, Facts on File Publications, New York, 1988, p. 119.
9 William K. Purves, Gordon H. Orions, H. Craig Heller, Life, The Science of Biology, 4th edition, W.H. Freeman and Company, p. 724.
10 http://www.montana.edu/wwwpb/pubs/mt8405.html; Michael Vogel, "Heating with Wood: Principles of Combustion", 2003.


25 comments:

UNMAIKAL said...


36:33 وَآيَةٌ لَّهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ

36:33. அன்றியம், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.

36:34 وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ

36:34. மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்சை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.


36:35 لِيَأْكُلُوا مِن ثَمَرِهِ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ ۖ أَفَلَا يَشْكُرُونَ

36:35. அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?

36:36 سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ

36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.



55:6 وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ

55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.

ஸூஜூது = வணங்குதல்

மாசிலா said...

சுத்த மடத்தனமான வாதம்.

கடவுள் என்பவன் எவனும் இருந்ததும் இல்லை, அவனால் எதுவும் படைக்கப்படவும் இல்லை.

'படைப்பு' என்கிற வார்த்தைக்கு பதிலாக 'பிறப்பு' என்பதை பாவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

ஆதியிலிருந்து அந்தம் வரை இவ்வுலகத்திலும் மற்றும் அனைத்து பிரபஞ்சத்திலும் உள்ள அனைத்துமே ஒரு தேவைக்காக பிறந்ததே.

பௌதீக - இரசாயண மூளத்தின் அடிப்படையில் தேவைக்காக பிறந்த ஒவ்வொன்றும் தனக்காக பல காரணங்களை கொண்டிருந்தன. இந்த தேவைகளுக்கும் காரணங்களுக்கும் அடிப்படைதான் 'கடமை' எனப்படுவது. இக்கடமையை 'இனவிருத்தி' என கூறலாம். இனவிருத்திக்காக தன் கடமைகளை சரிவர ஆற்ற இந்த தேவைகளும் காரணங்களும் மற்ற அனைத்து இரகங்களையும் சார்ந்தும் பின்னிப் பிணைந்தும் ECO-SYSTEM முறைப்படி சுற்றத்தையும் சூழலையும் சார்ந்து பக்குவப்பட்டு காலப்போக்கில் பற்பல மாற்றங்களையும் அடைகின்றன.

இதில் உங்கள் கற்பனைக் கடவுள் இடையில் வந்து செய்வதற்கு என்ன இருக்கிறது?

ஒன்றுமே இல்லை!

படிக்கும் மக்களை மூடர்களாக்க முயற்சிக்கும் இப்பதிவு கடும் கண்டத்துக்குறியது.


//'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முகமது நபி.//

அப்படியென்றால் முஸ்லீம் இல்லாத மற்றவர்கள் யாரேனும் இதைப்போல் செய்தால் அது பாவமா? அல்லது இதை பாலைவன குகைகளில் (ரூம் போட்டு) உக்காந்து சிந்தித்த உங்கள் நபிக்கு இந்த உலகத்தில் முஸ்லிம்கள் அற்ற மற்ற இரக மத சாதாரண மனிதர்கள் வாழ்ந்தது பற்றி தெரியாதா? தெரிந்தும் அறிய மறுத்தாரா? அறிந்தும் அவர்களை சக மனிதர்களாக ஏற்க மறுத்தாரா?

இவ்ளோ பெரிய தத்துவத்தை நம்ம ஊர் முனியாண்டியும் மங்காத்தாவும் தண்ணிப் பாடமா சொல்லுவாங்க.

மாசிலா said...

சுத்த மடத்தனமான வாதம்.

கடவுள் என்பவன் எவனும் இருந்ததும் இல்லை, அவனால் எதுவும் படைக்கப்படவும் இல்லை.

'படைப்பு' என்கிற வார்த்தைக்கு பதிலாக 'பிறப்பு' என்பதை பாவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

ஆதியிலிருந்து அந்தம் வரை இவ்வுலகத்திலும் மற்றும் அனைத்து பிரபஞ்சத்திலும் உள்ள அனைத்துமே ஒரு தேவைக்காக பிறந்ததே.

பௌதீக - இரசாயண மூளத்தின் அடிப்படையில் தேவைக்காக பிறந்த ஒவ்வொன்றும் தனக்காக பல காரணங்களை கொண்டிருந்தன. இந்த தேவைகளுக்கும் காரணங்களுக்கும் அடிப்படைதான் 'கடமை' எனப்படுவது. இக்கடமையை 'இனவிருத்தி' என கூறலாம். இனவிருத்திக்காக தன் கடமைகளை சரிவர ஆற்ற இந்த தேவைகளும் காரணங்களும் மற்ற அனைத்து இரகங்களையும் சார்ந்தும் பின்னிப் பிணைந்தும் ECO-SYSTEM முறைப்படி சுற்றத்தையும் சூழலையும் சார்ந்து பக்குவப்பட்டு காலப்போக்கில் பற்பல மாற்றங்களையும் அடைகின்றன.

இதில் உங்கள் கற்பனைக் கடவுள் இடையில் வந்து செய்வதற்கு என்ன இருக்கிறது?

ஒன்றுமே இல்லை!

படிக்கும் மக்களை மூடர்களாக்க முயற்சிக்கும் இப்பதிவு கடும் கண்டத்துக்குறியது.


//'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முகமது நபி.//

அப்படியென்றால் முஸ்லீம் இல்லாத மற்றவர்கள் யாரேனும் இதைப்போல் செய்தால் அது பாவமா? அல்லது இதை பாலைவன குகைகளில் (ரூம் போட்டு) உக்காந்து சிந்தித்த உங்கள் நபிக்கு இந்த உலகத்தில் முஸ்லிம்கள் அற்ற மற்ற இரக மத சாதாரண மனிதர்கள் வாழ்ந்தது பற்றி தெரியாதா? தெரிந்தும் அறிய மறுத்தாரா? அறிந்தும் அவர்களை சக மனிதர்களாக ஏற்க மறுத்தாரா?

இவ்ளோ பெரிய தத்துவத்தை நம்ம ஊர் முனியாண்டியும் மங்காத்தாவும் கூட தண்ணிப் பாடமா சொல்லுவாங்க.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

பதிவு சம்பந்தமாக விட்டுப்போன மற்ற குர்ஆன் வசனங்களையும் அனுப்பித் தந்தமைக்கு நன்றி!

suvanappiriyan said...

சகோ மாசிலா!

//கடவுள் என்பவன் எவனும் இருந்ததும் இல்லை, அவனால் எதுவும் படைக்கப்படவும் இல்லை.//

இதற்கு ஆதாரத்தை கொடுங்கள்.

//'படைப்பு' என்கிற வார்த்தைக்கு பதிலாக 'பிறப்பு' என்பதை பாவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

ஆதியிலிருந்து அந்தம் வரை இவ்வுலகத்திலும் மற்றும் அனைத்து பிரபஞ்சத்திலும் உள்ள அனைத்துமே ஒரு தேவைக்காக பிறந்ததே.//

என்ன தேவைக்காக என்று விளக்கினால் நலமாக இருக்கும்.

//அப்படியென்றால் முஸ்லீம் இல்லாத மற்றவர்கள் யாரேனும் இதைப்போல் செய்தால் அது பாவமா? அல்லது இதை பாலைவன குகைகளில் (ரூம் போட்டு) உக்காந்து சிந்தித்த உங்கள் நபிக்கு இந்த உலகத்தில் முஸ்லிம்கள் அற்ற மற்ற இரக மத சாதாரண மனிதர்கள் வாழ்ந்தது பற்றி தெரியாதா? தெரிந்தும் அறிய மறுத்தாரா? அறிந்தும் அவர்களை சக மனிதர்களாக ஏற்க மறுத்தாரா?//

முஸ்லிம் அல்லாதவர்கள் செய்தால் பாவம் என்று சொன்னாரா? நீங்களாகவே கற்பனை செய்து கொள்கிறீர்களே! இஸ்லாமிய கடமைகளை மற்றவர்கள் மேல் சுமத்த முடியாது அல்லவா? தர்மம் செய்த நன்மை கிடைக்கும் என்றால் பலருக்கும் இது போன்ற காரியங்களைச் செய்ய ஆர்வம் வரும்.

அடுத்து பயன் பெறுபவர்களில் மனிதர்கள் என்ற வார்த்தை வருவதை கவனிக்கவில்லையா? அதில் நீங்களும் நானும் அடங்குகிறோம்.

தருமி said...

//இந்த விதைக்கு எவ்வாறு உயிர் வந்தது? யார் கொடுத்தது? என்றாவது சிந்தித்திருக்கிறோமா?

அதான ...

//நெருப்பை அணைக்கும் தண்ணீரை ஊற்றி நெருப்பால் எரிக்கப்படும் மரத்தை வளர்க்கின்றோம். இது ஒரு முரண்பாடான நிகழ்வு அல்லவா?//

ஆஹாஹா ....


//எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
-குர்ஆன் 6:95

எப்டிங்க ...?

//நம்மைச் சுற்றியுள்ள அத்தனை மரங்களும் பல மில்லியன் வருடங்களாக ஆக்சிஜன், கார்பன், தண்ணீர், சூரிய ஒளி போன்ற கலவைகளினால் கூட்டுத் தயாரிப்பாக தயாரிக்கப்பட்டு நம் கண் முன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.//

பல மில்லியன் ஆண்டுகளா? என்னங்க இது .. நம் அல்லா படச்சது இப்பத்தானே ..7000 வருஷம் தான் ஆகுது. நீங்க இப்படி சொன்னா என்ன பண்றது? முகமதுவிற்கே against ஆக சொல்றதா??!!

//அடுத்து பயன் பெறுபவர்களில் மனிதர்கள் என்ற வார்த்தை வருவதை கவனிக்கவில்லையா? அதில் நீங்களும் நானும் அடங்குகிறோம். //

அடடே .. அப்டி ஒண்ணு இருக்கோ!

//படிக்கும் மக்களை மூடர்களாக்க முயற்சிக்கும் இப்பதிவு கடும் கண்டனத்துக்குறியது.மாசிலா //

பாருங்க ... எனக்குப் புரிஞ்சது மாதிரி மாசிலாவிற்குப் புரியலை, பார்த்தீங்களா :-(

suvanappiriyan said...

திரு தருமி!

//அதான ...

ஆஹாஹா ....//

ஒரு வழியாக ஒத்துக்கிட்டாச்சு போல...

//பல மில்லியன் ஆண்டுகளா? என்னங்க இது .. நம் அல்லா படச்சது இப்பத்தானே ..7000 வருஷம் தான் ஆகுது. நீங்க இப்படி சொன்னா என்ன பண்றது? முகமதுவிற்கே against ஆக சொல்றதா??!!//

விளங்கல்லியே! கொஞ்சம் விபரமா சொன்னா தெரிஞ்சுக்குவேன்.

//பாருங்க ... எனக்குப் புரிஞ்சது மாதிரி மாசிலாவிற்குப் புரியலை, பார்த்தீங்களா :-(//

நீங்களே மாசிலாவுக்கும் விளக்கி நாத்திகத்திலிருந்து ஆத்திக வழியை நோக்கி அழைப்பு கொடுத்து விடுங்கள். :-)

Anonymous said...

"எம்புட்டு அறிவியலா கொடுத்திருக்கீங்க .. புரியலைன்னா எப்டி?"

தருமி ஐய்யா மரம் (செங்)கொடி பற்றி உங்க அறிவியல் என்ன சொல்லுதுன்னு sonnaa நானும் கொஞ்சம் புரிஞ்சிப்பேன்ல
குரான்ல மனிதன் படைக்கப்பட்டு 7000 வருஷம் ஆச்சுன்னு அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்றீங்களே குர்ஆனில் எந்த வசனம் அப்படி சொல்கிறது என்று எனக்கு ஆதாரம் தருவீர்களா?(இந்த இடத்தில் பகுத்தறிவு எங்கே போய்விட்டது)

நீங்கள் இந்த பதிவை படித்து மூடர்கள் ஆகிவிட்டீர்களா? இல்லையென்றால் எல்லோரும் அப்படித்தானே? ஆத்திரத்தில் அறிவை இழப்பது இதுதானோ?
kalam

Anonymous said...

////படிக்கும் மக்களை மூடர்களாக்க முயற்சிக்கும் இப்பதிவு கடும் கண்டனத்துக்குறியது.மாசிலா ////
இதுவும் உங்களுக்குப் புரியாம போச்சே!///


மூடத்தனமான கருத்துக்களை தூக்கிப் பிடிக்கும் தங்களை மூடராக நினைத்து நாமும் மூடராக விரும்பவில்லை.

அதான , ஆஹாஹா, இதோ இங்கே இருக்கே .. அதுதான் - இப்படி முனகாமல் தங்களின் எதிர்கருத்தையும் தெரிவிக்கலாமே!


- Ismath

suvanappiriyan said...

சகோ கலாம்!

//தருமி ஐய்யா மரம் (செங்)கொடி பற்றி உங்க அறிவியல் என்ன சொல்லுதுன்னு sonnaa நானும் கொஞ்சம் புரிஞ்சிப்பேன்ல
குரான்ல மனிதன் படைக்கப்பட்டு 7000 வருஷம் ஆச்சுன்னு அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்றீங்களே குர்ஆனில் எந்த வசனம் அப்படி சொல்கிறது என்று எனக்கு ஆதாரம் தருவீர்களா?(இந்த இடத்தில் பகுத்தறிவு எங்கே போய்விட்டது)//

தருமி ஐயாவிடம் கேட்டு விட்டீர்கள். நாளை காலையில் வந்து பதில் சொல்வார் என்று எதிர்பார்ப்போம்.

என்ன தருமி சார் பதில் ரெடியா?

Anonymous said...

Kavya says:
May 29, 2012 at 6:47 am

அடுத்து பிராமணீயம் என்ற சொல்லும் பேசப்படுகிறது சாமிநாதனால். கவுண்டரியம், தேவரியம், பிள்ளையியம் இல்லை. பிராமணீயம் மட்டும் ஏன்? என்கிறார்.
பிராமணீயம் என்ற சொல்லைத் திராவிட இயக்கத்தினரே கண்டுபிடித்து உலவ விட்டதாக நினைக்கிறார். பொதுவாக, இந்திய தொல் வரலாறு என்று நூலகளை வாசித்தால் இச்சொல் பரவலாகக் காணப்படும். பிராமணிசம் என்ற ஒரு அத்தியாயம் இந்திய ஆட்சிப்பணித்தேர்வில் வரலாறு பாடத்தில் காணலாம்.
அக்காலத்தில் பிராமணர்கள் தமக்கென இந்துமதக்கலாச்சார வாழ்வு வாழ்ந்தனர். அதில் சமூகத்தில் பிறர் ஏற்றுக்கொண்டு தம்மை அங்கீகரிக்கவேண்டும் அல்லது தனியே விட்டுவிட வேண்டுமென்பதே அதன் நோக்கம். அதனால் என்ன விளைவுகள் மதத்தில் சமூகத்தில் என்று விளக்குவதே அந்த அத்தியாயத்தின் நோக்கம்.

ஆக, இந்துமத்ததிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டதுதுதான் பிராமணீயம். பெரும் வைதீக முறைக்கோயிலகளில் பணிபுரிய அவர்களை பிறவிடங்களில் இருந்தெல்லாம் மன்னர்கள் கொணடுவந்தார்கள். சிரிரங்கத்திற்கு வடநாட்டிலிருந்தும் வந்தார்கள். திருவைகுண்டத்தில் நவ திருப்பதிகள் என 9 கோயில்கள் உண்டு. அவற்றை நடாத்த 250 பிராமண்க்குடும்பங்களை பாண்டியன் ராமநாதபுரத்திலிருந்து கொண்டுவந்து குடியமர்த்தினான் என்பது அவர்கள் வர்லாறு.

அப்படி அமர்த்திய மன்னர்கள் அவர்களை தங்கள் வைதீக பிராமண வாழ்வு வாழ வசதியாக கோயில்களைச்சுற்றி அக்ரகாரம் அமைத்தும் பிரமதேயங்கள் வழங்கியும் அவர்களைப்பிறம்க்களிடமிருந்து தனித்து வாழ்ப்பண்ணினான். பிறமக்களோடு கலந்தால் அபச்சாரம் என்பது தொன்றுதொட்ட பிராமணீயம். பிராமணீயம் தலித்துககளை மட்டுமன்றி, மற்றெல்லா ஜாதிமக்களையும் தீட்டு என்றுதான் சொல்லி தனித்திருந்தது.
இது பார்ப்ப்னர்களைத் தலைமுறைதலைமுறையாகப்பாதித்தது. நமது காலத்தில்தான் மாற்றம் வந்தது. வெள்ளைக்காரன் காலத்தில் அன்று.

பிறம்க்களிடம் கலக்கா தனித்த வாழ்வு விமர்சிக்கப்படும். இது இயற்கை. எனவே பிராமண்ரல்லாதோர் இயக்கம் விமர்சித்தது.

கவுணரடரோ, செட்டியார்களொ, முதலிகளோ, பிள்ளைகளோ இப்படி பிறஜாதி மக்கள் இத்தகைய தனித்த வாழ்வு வாழவில்லை. அபச்சாரம் பார்க்கவில்லை. எனவே கவுண்டரியம், தேவரியம், செட்டியாரியம், முதலியும், பிள்ளையிய்ம என்றெல்லாம் பேசப்படவில்லை.

திராவிட இயக்கம் பிராமணரல்லாதாருக்காக தோன்றிய இயக்கம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள். அவர்களின் சீற்றம் இயற்கையே. ஒரு வழக்கில் இருவர் தொடர்புடைய்வர்கள்: பாதிக்கப்பட்டவர்; பாதித்தவர். இவர்களுள் எவர் அவ்வழக்கப்பற்றிப்பேசினாலும் மற்றவர் 100/100 குற்றம்செய்தவர் என்றுதான் வாதாடுவர்.
சாமிநாதன் பாதிக்கப்பட்டவர் சார்பாக எழுதும் கட்டுரையே இது. மலர்மன்னன் திராவிட இயக்க வரலாறு எழுதப்போகிறார் என்று திண்ணையில் சொன்னவுடன் எனக்கு ஒரு நகைப்புத்தான் வந்தது. எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்காக நோகுபவரும் அவர் இனத்தவரானவரும் எப்படி இவ்வரலாற்றை நேர்மையாக எழுதமுடியும் எனப்தே.
இவ்வரலாற்றை இருசாராரும் எழுதமுடியாது. எழுதினால் அது ஒருதலைப்பட்சமான வரலாறாக்த்தான் இருக்கும்.
இருவரையும் சாரா மூன்றாமவரே எழுத முடியும்.

Anonymous said...

சு.பி,

நேற்று ஒரு கமெண்ட் போட்டேன்.ஏன் (பதில் இல்லாததாலா) இங்கே காணோம்?

நன்றி.

தருமி said...

//சுவனப் பிரியன் said...

சலாம் சகோ இஸ்மத்!

//மூடத்தனமான கருத்துக்களை தூக்கிப் பிடிக்கும் தங்களை மூடராக நினைத்து நாமும் மூடராக விரும்பவில்லை.

அதான , ஆஹாஹா, இதோ இங்கே இருக்கே .. அதுதான் - இப்படி முனகாமல் தங்களின் எதிர்கருத்தையும் தெரிவிக்கலாமே!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//


’இஸ்மத் பாதையில்’ செல்லும் சு.பி.க்கு,

சொல்ல ஏதுமில்லை.

Anonymous said...

//மனிதன் படைக்கப்பட்டு 7000 வருஷம் ஆச்சுன்னு அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்றீங்களே //

அப்ப முகமது(சல்) (அவங்க,இவங்களா) யாரோவா?

suvanappiriyan said...

தருமி சார்!

//’இஸ்மத் பாதையில்’ செல்லும் சு.பி.க்கு,

சொல்ல ஏதுமில்லை. //

அது இஸ்மத்துடைய கருத்து. அவர் பாதையில் நான் செல்லவில்லை. நீங்கள் எந்த ஆதாரத்தை வைத்து 7000 வருடங்கள் என்று சொன்னீர்கள் என்றுதான் நான் கேட்டேன். நானும் தெரிந்து கொள்வதற்காக.

வயதில் மூத்தவரான உங்கள் மேல் என்றுமே எனக்கு மதிப்பு உண்டு.

suvanappiriyan said...

அனானி!

//அப்ப முகமது(சல்) (அவங்க,இவங்களா) யாரோவா?//

முகமது நபி எங்கு அவ்வாறு சொல்லியுள்ளார். எந்த ஆதாரத்தை வைத்து சொன்னீர்கள் என்பதுதான் கேள்வி.

//நேற்று ஒரு கமெண்ட் போட்டேன்.ஏன் (பதில் இல்லாததாலா) இங்கே காணோம்?//

பொய்களை பரப்பிக் கொண்டிருக்கும் ஒரு தளத்தை என் தளத்தில் விளம்பரப் படுத்த முடியாது. முடிந்தால் கேள்வியை மட்டும் தனியாக கேளுங்கள். பதில் தருகிறேன்.

suvanappiriyan said...

சகோ இஸ்மத்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//மூடத்தனமான கருத்துக்களை தூக்கிப் பிடிக்கும் தங்களை மூடராக நினைத்து நாமும் மூடராக விரும்பவில்லை.//

ஆனால் திரு தருமி சம்பந்தமாக நீங்கள் சொன்னதில் நான் உடன்பட வில்லை. அவரும் சிறந்த சிந்தனைவாதியே! அவர் நாத்திக கொள்கையில் இருப்பதால் அதை நிலை நிறுத்த அவர் தரப்பு வாதங்களை வைக்கிறார். அதற்கு கண்ணியமான முறையில் பதிலளிப்போம்.

புரிதலுக்கு நன்றி!

suvanappiriyan said...

தருமி said...


//ஒரு வழியாக ஒத்துக்கிட்டாச்சு போல...//
எம்புட்டு அறிவியலா கொடுத்திருக்கீங்க .. புரியலைன்னா எப்டி?

//
//எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
-குர்ஆன் 6:95//
இது எப்டின்னு கேட்டிருந்தேனே .உங்களுக்குப் புரியலையா?

//கொஞ்சம் விபரமா சொன்னா தெரிஞ்சுக்குவேன்.//


////படிக்கும் மக்களை மூடர்களாக்க முயற்சிக்கும் இப்பதிவு கடும் கண்டனத்துக்குறியது.மாசிலா ////

இதுவும் உங்களுக்குப் புரியாம போச்சே!

Anonymous said...

//முகமது நபி எங்கு அவ்வாறு சொல்லியுள்ளார். எந்த ஆதாரத்தை வைத்து சொன்னீர்கள் என்பதுதான் கேள்வி.//


சு.பி,

இந்த ஹதிஸ் எந்த ஆண்டு வரை நம்பகமான(உண்மையான) ஹதீஸாக இருந்தது?

http://theonlyquran.com/hadith/Sahih-Muslim/?volume=39&chapter=2

Chapter MCLV, The beginning of creation and the creation of Adam, Hadith No. 6707:

Abu Huraira reported that Allah’s Messenger (mpbuh) took hold of my hands and said: Allah the Exalted and Glorious, created the clay on Saturday and He created the mountains on Sunday and He created the trees on Monday and He created the things entailing labour on Tuesday and created light on Wednesday and He caused animals to spread on Thursday and created Adam (pbuh) after ‘Asr on Friday; the last creation at the last hour of the hours of Friday, ie. Between afternoon and night.

அல்லாஹ் களிமண்ணை சனிக்கிழமை படைத்தான்.மலைகளை ஞாயிற்றுக்கிழமை படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். உழைக்கும் உயிரினங்களை செவ்வாய்க்கிழமை படைத்தான். ஒளியை புதன்கிழமை படைத்டஹன். மிருகங்களை வியாழக்கிழமை பரப்பினான். ஆதாமை வெள்ளிக்கிழமை படைத்தான். அதுவும் மத்தியானத்திலிருந்து இரவுவரைக்கும் படைத்துகொண்டே இருந்தான்.

நன்றி.

Anonymous said...

சு.பி,

நீங்கள் கேள்வி கேட்டீர்கள்.நான் பதில் சொன்னேன்.அதையும் அனுமதிக்கலனா எப்படி?

இந்த பக்கமே வரவேண்டாங்கிறீர்களா?

நன்றி.

suvanappiriyan said...

சகோ அனானி!

//நீங்கள் கேள்வி கேட்டீர்கள்.நான் பதில் சொன்னேன்.அதையும் அனுமதிக்கலனா எப்படி?

இந்த பக்கமே வரவேண்டாங்கிறீர்களா?//

இப்னு ஷகீர் என்ற பொய்யான முஸ்லிம் பெயரில் ஒளிந்து கொண்டு அவதூறுகளை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் ஒரு பொய்யரின் தளத்தை இங்கு அனுமதிக்க முடியாது என்றுதான் சொன்னேன். மற்றபடி நீங்கள் சுட்டியதற்கும் குர்ஆன் கூறும் விளக்கத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை இன்னும் இரண்டொரு நாளில் தனி பதிவாகவே இடுகிறேன். லிங்க் தராமல் உங்களின் சொந்த கருத்தை பதியவும்.

நன்றி.

suvanappiriyan said...

சகோ அனானி!

//அல்லாஹ் களிமண்ணை சனிக்கிழமை படைத்தான்.மலைகளை ஞாயிற்றுக்கிழமை படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். உழைக்கும் உயிரினங்களை செவ்வாய்க்கிழமை படைத்தான். ஒளியை புதன்கிழமை படைத்டஹன். மிருகங்களை வியாழக்கிழமை பரப்பினான். ஆதாமை வெள்ளிக்கிழமை படைத்தான். அதுவும் மத்தியானத்திலிருந்து இரவுவரைக்கும் படைத்துகொண்டே இருந்தான்.//

உலகம் உருவாகி எத்தனை வருடங்கள் ஆகின்றன என்பதை குர்ஆன் எவ்வாறு சொல்கின்றது என்பதை இன்னும் இரண்டொரு நாளில் ஒரு தனிபதிவாக இடுகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

Anonymous said...

Mr Tharumi,

//’இஸ்மத் பாதையில்’ செல்லும் சு.பி.க்கு,
சொல்ல ஏதுமில்லை. //


எந்தவொரு விமரிசனமும் வைக்காது எடுத்த எடுப்பில், எந்தக் கருத்தையும் மூடக் கருத்து என்பது அறிவீனம் என்பது தாங்கள் அறிந்ததொன்று.

மாசிலா என்ற அன்பரின் பின்னூட்டம் இதைத் தெளிவாக்கிறது. இந்தப் பதிவின் சாராம்சத்திற்கு அவரின் காத்திரமான பதில் இல்லை.

சுவனப்பிரியனின் பார்வையில் தென்படும் சிந்தனாவாதியான தருமியாகிய தாங்கள், மாசிலாவின் கருத்தை தூக்கிப் பிடிப்பது, அறியாமையின் வெளிப்பாடு.

இருந்தாலும், ஒருவரின் அறியாமை அவரை மூடராக்காது!

இதைத்தான், தங்களின் அறியாமையை நினைத்து, தங்களை மூடராக்க நான் விரும்பவில்லை என்றோதினேன்.

அடுத்தது, எனது அல்லது சுவனப்பிரியனின் பாதையில் பயணிப்பது, ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்ட விசுவாசிகளின் கொள்கைக்கு எதிரானது. ஏற்புடையதுமல்ல. நன்றி!

Prakash said...

ஏன் சார் பட்டிகாட்டான் பஞ்சு மிட்டாய பார்த்த மாதிரியே பேசுறீங்களே? எலாம் இயற்கைதான் சார். மனுசனுக்கு எதுவும் தெரியற வரைக்கும்தான் அதிசயம். தெரிஞ்சிருச்சுன்னா புஸ்வானம்தா. நம்ம இந்திரஜித் மாதிரி.

Prakash said...

ஏன் சார் இன்னும் பட்டிகாட்டான் பஞ்சுமிட்டாய பார்த்த மாதிரியே பேசிக்கிட்டு இருக்கீங்களே. எல்லாம் இயற்கை சார். மனுசனுக்கு எந்த ஒன்னும் தெரியற வரைக்கும்தான் அதிசயம். தெரிஞ்சிருச்சுன்னா புஸ்வானம்தான். நம்ம இந்திரஜித் மாயாஜாலம் மாதிரி